புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_m10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10 
5 Posts - 71%
Manimegala
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_m10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_m10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_m10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_m10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_m10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10 
11 Posts - 4%
prajai
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_m10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10 
9 Posts - 4%
Jenila
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_m10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10 
4 Posts - 2%
Rutu
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_m10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_m10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10 
2 Posts - 1%
jairam
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_m10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_m10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_m10நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 23, 2011 4:54 pm

'எல்லோருக்கும் நன்மை தரும் பொருள் என்றோ, எல்லோரையும் கெடுக்கும் பொருள் என்றோ உலகத்தில் எதுவுமே இல்லை' என்கிறது ஆயுர்வேதம்.





ஆயுர்வேத சாதனை டாக்டர் கே.ஜி.ரவீந்திரன் கூறுவது:

'எந்தப் பால் நல்ல பால்? எது உடலுக்கு ஊட்டம் தரும் பால்?' 'இப்படிப்பட்ட கேள்விகளுடன் நிறைய வாசகர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

*


இன்னும் சிலருக்கு பால் சைவமா, அசைவமா என்பதிலேயே குழப்பம்!

'பால் என்பது பசுவின் ரத்தம் மாதிரி. உயிர்க்கொலை புரிதல் பாவம் என நினைக்கும் சைவ விரும்பிகள், மாமிசம், முட்டை போன்றவற்றுடன் பாலையும் சேர்த்து ஒதுக்க வேண்டும்' என்று பிரசாரமே செய்கிறார்கள்.


*


பாலைப் பற்றிய ஏகப்பட்ட கட்டுக் கதைகளும் தவறான கற்பனைகளும் மக்கள் மத்தியில் இருக்கின்றன. எல்லாக் குழப்பங்களையும் தீர்க்கவே, இந்த வாரம் பாலைப் பற்றி எழுது கிறேன்.

*

'பூமியில் வசிக்கும் மானுடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வாய்த்திருப்பது பால்!' என்கின்றன வேதங்கள்.

*

இந்தியாவில் அரிசி பிரதான உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு.ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப்படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்குமான உணவு... பால்!

**

இதில் பிரதானமானது பசும் பால். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது!

பால், பசுவின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.

*

பால்இயல்பாகவே இனிப்பானது, குளிர்ச்சி தருவது. அதே சமயம், அது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது. ஆனால், குடித்தவுடனே புத்துணர்வு தரத்தக்கது. உடல் பலம், மூளை பலம் இரண்டையும் தருவது. சோர் வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மருந்து!

*

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.


*
எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

**

ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.

வயிற்றுப்போக்கு உள்ள வர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்!

**

கழுதைப்பால் ரொம்ப சூடு. லேசாகப் புளிப்பும் உவர்ப்பும் கலந்த சுவைகொண்டது. வாதத் தொந்தரவுகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. கக்குவான் இருமலுக்கு மிகச் சிறந்த சிகிச்சை, கழுதைப் பால் அருந்துவதுதான்!

***

சரி... பாலை எப்படிச் சாப்பிடுவது?

பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடிப்பது நல்லது. அது சுலபமாக ஜீரணமாகிவிடும். கறந்த சூடு ஆறிய பிறகு, அந்தப் பால் கடினமானதாகிவிடும்.

*

அதன்பின் அப்படியே குடித்தால் செரிக்காது. கூடவே, மார்பில் கோழை சேர்ந்து, சளித் தொந்தரவு வரும். எனவே, அதன்பின் கொதிக்க வைத்து அருந்துவதே நல்லது!

காலையில் வெறும் வயிற்றில் பால் சாப்பிடுவது நல்லது. அதன்பின், பசி நன்றாக எடுத்த பிறகுதான் டிபன் சாப்பிடவேண்டும். இருமலோ, தொண்டையில் கிச்...கிச் தொந்தரவோ உள்ளவர்கள், பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டுச் சாப்பிடலாம்.

*

பால் சாப்பிட்ட பிறகு, புளிப்பான பழங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. இரவில் இட்லி, புளிப்பான சாம்பார் என டிபன் சாப் பிட்டபிறகு, உடனே பால் சாப்பிடுவதும் ஆபத்தான பழக்கம்!

*

பாலில் ரெடிமேட் சத்து பவுடர்களைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழக்கம் இப்போது அதிகமாகி இருக்கிறது. குழந்தைகளுக்கு ஊட்டம் தர, இந்தச் சத்துபானங்கள் அவசியம்என நினைக்கிறார்கள் பலர்.

*

பாலில் இந்த பவுடர்கள் சேர்த்தபிறகு, அதன் கடினத்தன்மை மேலும் அதிகரிப்பதால் அது செரிமானம் ஆகக் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, அதற்கேற்றாற் போல, மற்ற சாப்பாடு அயிட்டங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

*

காலை டிபன் கூடவோ, இரவு டிபன்கூடவோ இந்தப் பானத்தைத் தருவதைத் தவிர்க்கவேண்டும். அதிகாலை அல்லது மாலை என உணவு வேளைக்கு இடைப்பட்ட நேரங்களில்தான் குடிக்கத்தரவேண்டும்.

*

'வெளுத்ததெல்லாம் பாலுனு நம்பிடுவேன்' என அப்பாவிகளைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். இப்போது வெளுப்பாக வரும் எதையுமே பால் என்று நம்பிவிடக்கூடாது.



முன்பெல்லாம் 'பால் சாப்பிட்டால் செரிக்காது' என்ற ஒரே பிரச்னை மட்டும் தான் இருந்தது. இப்போது 'பால் அலர்ஜி' என்ற புதுப் பிரச்னையும் சேர்ந்துகொண்டு விட்டது!

*

பசு மனசு நிறைந்து கொடுக்கும் பால்தான் அருமருந்து. இப்போது ஹார்மோன் ஊசிகளை எல்லாம் போட்டு, பசுவின் மடியிலிருந்து பாலை உறிஞ்சி எடுக்கிறார்கள். பாலைத் தரும் பசுவைப் புனிதமாக கருதுவது இந்திய கலாசாரம்.

*

பசுவைத் தெய்வமாக நாம் கருதுகிறோம். பால் என்ற அமுதத்தை அது தருவதால், அதற்கு நன்றிக் கடனாக பொங்கல், படையல் எனப் பசுவுக்கு தருகிறோம்!

*

புதிதாக வீடு கட்டினால், அதற்குள் முதலில் பசு நுழைந்தால்தான் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. வீடு குடித்தனம் போனால், முதலில் பால் காய்ச்சுவது மரபு.

இந்த மரபுகளை மட்டுமே காப்பாற்றி வரும் நாம் பசுவையோ, பாலின் நற்குணத்தையோ காப்பாற்றத் தவறிவிட்டோம் என்பதுதான் வருத்தமான விஷயம்!




சரி... தயிர், வெண்ணெய், நெய் பற்றி... பால்காரர் எடுத்து வருவதும், பாக்கெட் பாலும்தான் பெரும்பாலான நகரங்களில் கிடைக்கின்றன. அது பசும்பாலா, எருமைப் பாலா அல்லது இரண்டும் கலந்ததா... எதுவுமே தெரியாது!

*

பலர் இந்தப் பாலை வெறுமனே பொங்கும்வரை கொதிக்க வைத்தால்போதும் என நினைத்து, பொங்கி நுரை கிளம்பி வந்ததுமே அடுப்பில் இருந்து இறக்கிவிடுகிறார்கள்.

*

இது தவறு! பால் கொதித்தால் மட்டும் போதாது... ஒரு பங்கு பாலுக்கு நான்கு பங்கு தண்ணீர் ஊற்றிப் பாலைக் காய்ச்ச வேண்டும். 'அதுதான் ஏற்கெனவே பால்காரரே தண்ணீரைக் கலந்துவிடுகிறாரே' என ஆதங்கப்படுகிறவர்கள் வேண்டுமானால் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

*

தண்ணீர் சுத்தமாகச் சுண்டி, பழைய ஒரு பங்கு அளவு ஆகும்வரை கொதிக்கவிட வேண்டும். (ஆனால், இன்றைய அவசரயுகத்தில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்கிறீர்களா? இதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயம்!) கொதித்ததும் ஸ்டவ்வை நிறுத்திவிடக்கூடாது.

*

ஐந்து முதல் பத்து நிமிடங்கள் லேசான சூட்டில் அப்படியே வைத்திருந்து, அதன்பிறகே ஸ்டவ்விலிருந்து பாலை எடுக்க வேண்டும். ஆனால், அதற்காகப் பாலை எந்நேரமும் அடுப்பிலேயே கொதிக்கவைப்பதும் தவறு.

*

டீக்கடைகளில் எப்போதும் அடுப்புச் சூட்டிலேயே இருக்கும் பால் வயிற்றுக்கு ஏகப்பட்ட உபாதைகள் தரும்.


*

மேலு‌ம் ‌சில த‌னியா‌ர் பா‌ல் ‌நிறுவன‌ங்க‌ள், பா‌லி‌‌ல் ப‌ல்வேறு ரசாயன‌ங்களையு‌ம் கல‌ந்து ‌வி‌ற்பனை செ‌ய்‌கி‌ன்றன. எனவே, ந‌ல்ல தரமான பா‌ல் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் பொரு‌ட்களை ம‌ட்டு‌ம் வா‌ங்குவது உடலு‌க்கு ந‌ல்லது.





http://azhkadalkalangiyam.blogspot.com/2010/10/blog-post_02.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 23, 2011 4:56 pm

பாலைப்பற்றிய உங்கள் பகிர்வுக்கு நன்றி ,,,,,

எனக்கும் பிடிக்கும் ,,,,,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 23, 2011 5:01 pm

நன்றி அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 23, 2011 5:20 pm

அருமையான பதிவு நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  224747944
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  224747944 நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  224747944 நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  224747944 நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  224747944 நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  224747944 நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  224747944

நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  677196 நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  677196 நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  677196 நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  677196 நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  677196 நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  677196 நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  677196 நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  677196 நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....  677196



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 23, 2011 5:23 pm

புன்னகை sk நன்றி அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jun 23, 2011 5:26 pm

தன் இரத்தத்தின் ஒரு பாதி பாலாக கொடுப்பது பசுவோட வேலையப்பா
அத குடிச்சாக்கா உனக்கொரு கவலை இல்லையப்பா அருமையிருக்கு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 23, 2011 5:29 pm

அன்பு மலர் ranjithkumar.mani நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக