புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
1 Post - 14%
Manimegala
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
11 Posts - 4%
prajai
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
9 Posts - 4%
Jenila
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Rutu
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Aug 03, 2011 4:09 pm

First topic message reminder :

காதல் சுரங்கம் குறுந்தொகை

காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.

காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.

குறுந்தொகையின் சிறப்பு:

தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.

காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.

புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.

தமிழின் சிறப்பு

மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.

குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

வளரும்.........

[You must be registered and logged in to see this image.]



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 04, 2012 2:58 pm

மிகவும் அருமையாக உள்ளது உங்கள் விளக்கம் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Feb 04, 2012 6:25 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமையாக உள்ளது உங்கள் விளக்கம் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா
நன்றி அன்பு மலர்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 05, 2012 9:34 am

அழகான குறுந்தொகைப்பாடல்.. எளிமையான விளக்கம். நன்றி சதாசிவம்.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Feb 05, 2012 8:50 pm

கபாலி wrote:அழகான குறுந்தொகைப்பாடல்.. எளிமையான விளக்கம். நன்றி சதாசிவம்.

நன்றி கபாலி
:நல்வரவு:



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Feb 13, 2012 7:22 pm

காதலன் அணைப்பு

காதல் காலத்தில் நடக்கும் உரசல், தோள் சாய்தல், நெருக்கமாக அமருதல், ஒன்றாக உண்ணுதல் என்று நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் சுகம் தான். ஆள் வாரா இடங்களில் உணவுவிடுதி நடுத்துபவர்களும், மதிய நேர திரையரங்குகளும் இப்படி ஒரு கூட்டத்தை நம்பி தான் வாழ்க்கை நடத்துகின்றனர். காதல் நெருக்கத்தில் பெண்களுக்கு பயம் இருந்தாலும், அதை தாண்டி வரும் அளவுக்கு சுகமும் அதில் இருக்கிறது. அவர் பார்த்து விடுவார், இவர் பார்த்து விடுவார் என்று எண்ணீருந்தாலும், காதலனைப் பார்ப்பதை யாரும் தடுக்க முடியாது. காதல் சுகம் அவ்வளவு இனிமையானது. தன்னை சுற்றி உலகம் இயங்கவேண்டும் என்று நினைப்பதும், தன்னை விரும்பும் ஒருவரின் அருகாமையும் பெண்களுக்கு இயல்பானது. பெண்களுக்கு காதல் இருக்கும், ஆசை சுரக்கும், நாணம் தடுக்கும், யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயம் இருக்கும். ஆனால் இப்படி பயந்தால் வேலைக்கு ஆகுமா ? கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று கூறும் பழமொழிப் போல் காதலனைப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். பார்த்தால் பழி வருமோ என்று அஞ்சவும் செய்யும் பெண்ணின் மனம். இப்படி ஒரு நிலையில் இருக்கும் தலைவி, தன் காதலன் அருகாமையை நினைத்துக் கூறும் அழகான பாடல்.

திணை : குறிஞ்சி
பாடல் 18 : யானை ஒடித்த கிளை (பாடல் 112)
பாடியவர் : ஆலந்தூர் கிழார்

கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள் அற விடினே உள்ளது நாணே
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படா அ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின், தோழி ! அவர் உண்ட என் நலனே


பொருள் விளக்கம்

அடுத்தவர் பேசும் வதந்திக்கு அஞ்சினால் காதல் குறைந்துவிடும். இப்படி பேசும் வதந்திப் பேச்சுக்கு அஞ்சாவிட்டால் வெட்கம் மட்டுமே மிஞ்சும். திண்பதற்கு ஆசைப்பட்டு உயரமான கிளையை யானைப் பிடித்து இழுத்து உண்ணும். இப்படி இழுக்கும் போது அந்த கிளை மரத்தில் இருந்து முறிந்து அப்படியே தொங்கிக்கொண்டு இருக்கும். யானை வேண்டியதை தின்று விட்டு சென்றுவிடும். யானை சுவைத்த கிளை யானையுடன் செல்லமுடியாமல், மீண்டும் மரத்திலும் ஒட்ட முடியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும். அவர் உடன் இருந்து கழிந்த இனிய காலங்களை அனுபவித்த என் நிலைமையும் இப்படி தான் தோழி.

தொடரும்





சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Feb 13, 2012 8:12 pm

மிக அருமையான பாடலும் அதற்கான உரையும். மிக்க நன்றி சதாசிவம் அவர்களே.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Feb 14, 2012 7:01 pm

கபாலி wrote:மிக அருமையான பாடலும் அதற்கான உரையும். மிக்க நன்றி சதாசிவம் அவர்களே.

நன்றி கபாலி
:நல்வரவு:




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Mar 24, 2012 2:30 pm

எதற்கு இந்த சேவல்

கணவன் மனைவி அன்பு மிக நெருக்கமானது, காதல் கணவன் அருகில் இருக்கும் போது பெண்களுக்கு உலகத்தில் எது நடந்தாலும் அதை பற்றிய கவலை இல்லை. அவனுடன் நீண்ட நாட்கள் கழித்தாலும், அவை ஒரு சில நிமிடங்கள் போல் கழிந்து விடுகிறது. நமக்கு விருப்பமான நிகழ்வில் மூழ்கி இருக்கும் போது காலம் செல்வது தெரிவதில்லை. இப்படி தலைவனுடன் இன்பமாக கழித்து இரவு வெகு சீக்கிரம் முடிந்து விட்டது, பொழுது புலர்ந்து விட்டது, சேவல் கூவி விட்டது.

இப்படி கூவி எழுப்பிய சேவலைப் பார்த்து, ஏ சேவலே நீ எதற்கு கூவி பொழுதை விடியச் செய்கிறாய், என் தலைவனுடன் கழித்த இரவின் சுகம் இன்னும் கலையவில்லை, என் தலைவனுடன் கழிக்கும் இரவின் தூக்கத்தை கொடுக்காதே. நீ நாசமாக போவாய், எலியை தேடும் பூனைக்கு இரையாகப் போவாய் என்று தலைவி கொடுக்கும் சாபம் தான் இந்த பாடல்.

பாடல் 19 : தூக்கம் கொடுத்த சேவல் (பாடல் 107)
திணை : மருதம்
பாடியவர் : மதுரைக் கண்ணனார்
கூற்று : தூக்கத்தை கெடுத்த சேவலைப் பார்த்து தலைவி பாடும் பாடல்.

குவி இணர்த் தோன்றி ஒன் பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகிக்
கடு நவைப் படி இயரோ, நீயே நெடு நீர்
யானார் ஊரனோடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே


பொருள் விளக்கம்

அழகாக குவிந்த இதழ்களை உடைய செம்மை நிறம் கொண்டு செங்காந்தள் பூ போல் வளைந்த சிவந்த நிறம் கொண்ட கொண்டையை சேவலே, அடர்ந்த் இருள் கொண்ட நடு இரவில் தான் குட்டிகளுக்கு இரை சேர்க்க வீட்டில் வசிக்கும் எலியைப் பிடிக்க காத்திருக்கும் பூனைக்கு இரையாகப் போய்விடு, அழகான நீர் வலம் மிக்க தலைவனுடன் இனிது கழிக்கும் தூக்கத்தை கலைத்து விட்டாய்.

இப்படி இனிதாக கழித்த இரவு கலைந்த தலைவி இப்படி கூறுகிறாள் என்றால், இது போன்ற ஒரு இன்பம் அனுபவித்த தலைவன் அந்த இனிதான இரவைப் பற்றி என்ன கூறி இருப்பான். அடுத்த பாடலில் காண்போம்.

காதல் வளரும்.........




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Apr 02, 2012 5:51 pm

ஒரு நாள் வாழ்ந்தால் போதும்

காதல் ஆணை கட்டி வைக்கும் ஆழமான பந்தம், வெட்டியாய் சுற்றுபவனையும் பொறுப்புள்ளவன் ஆக்கவும், பொறுப்புடன் இருப்பவனை வெட்டியாய் சுற்றச் செய்யும் ஆற்றல் காதலுக்கு உண்டு. மிகப் பெரிய யானை சிறு கயிறில் கட்டுண்டு கிடப்பது போல் காதல் வலையில் கட்டுப்பட்டு கிடப்பது ஒரு சுகம். இப்படி சுகிக்கும் தலைவனை என்ன தான் தோழர்கள் அறிவுறுத்தினாலும் காதில் விழுவதில்லை. இப்படி காதல் தேனில் மூழ்கி இருக்கும் தலைவன் தனக்கு அறிவுறுத்தும் தோழனைப் பார்த்து தலைவியின் அழகை வர்ணிக்கும் காட்சி தான் இந்த அழகிய பாடல்.

திணை : குறிஞ்சி
பாடல் : ஒரே ஒரு நாள் (பாடல் என் 280)
பாடியவர் : நக்கீரர்
கூற்று : தோழனுக்கு தலைவன் கூறும் பதில்

கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்
நெஞ்சுபிணிக் கொண்ட வஞ்சி லோதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே.


பொருள் விளக்கம்

நண்பா வாழ்க நீ, இதைக் கேள் நாள் முழுதும் என் நெஞ்சைக் கட்டிப் போட்ட அழகிய கூந்தல், பெரிய மேன்னையான் தோள் உடைய என் தலைவியின் லேசான உடலை ஒரு நாள் முழுவதும் தழுவினால் போதும் அதன் பின் எனக்கு அரை நாள் வாழ்க்கையும் வேண்டாம். அவளைத் தழுவிய இன்பம் போதும், அதற்கு பிறகு வாழ்க்கை எதற்கு ?

இன்றைய சினிமாப் பாடல்களில் மூலம் இது போன்ற காதல் கவிதைகள் கொஞ்சும் நம் பழந்தமிழ் இலக்கியங்கள் தான்...

காதல் வளரும்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 02, 2012 7:22 pm

அருமை அருமை. தமிழின் அழகோ அழகு தான்.....................

Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக