புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
புகழ்ச்சியின் மயக்கறு!
புன்மையை உதறு!
இகழ்ச்சியைத் தாங்கு!
எள்ளலை எடுத்தெறி!
நிகழ்ச்சியை வரிசைசெய்!
நினைவை உறுதிசெய்!
மகிழ்ச்சியும் துயரமும்
மனத்தின் செயல்களே!
பாடல் - 1 உரைக்குறிப்புகள் : (எண் அடிகள் எண்)
1. புகழ்ச்சியின் மயக்கு-பிறர் கூறும் புகழ்ச்சியுரைகளால் ஏற்படும் உணர்வுக் கிறக்கம்; அறுத்தல்-அடியோடு நீக்குதல்.
2. புன்மை-இழிவாம் தன்மை; உதறுதல்-பற்றப் பற்றத் தவிர்த்தல்.
3. இகழ்ச்சி-செயப்பெறும் நல்வினைகளின் மேல் அறியாமையால் கூறப்பெறும் இகழ்ச்சியுரைகள்.
4. எள்ளல்-அருமை வினைகளை எளிமையாகக் கருதி உரைக்கப்பெறும் புன்சொற்கள்.
5. வரிசை-செயப்பெறும் வினைகளை அறிவானும் வினையானும் வகைப்படுத்தி இடத்தானும் காலத்தானும் பொருந்த அமைத்துக் கொள்ளுதல்.
6. நினைவை உறுதி செய்தல்-செயத் தக்கவற்றுக்கும் தகாதனவற்றிற்கும் வேராகிற நினைவுகளை அறிவான் தேறி செயலுக்குரியனவாகத் தெரிந்தெடுத்தல்.
7,8. மகிழ்ச்சி என்பதும் துயரம் என்பதும் செயப் பெறும் வினைகட்கு ஏற்ப மனம் அவ்விடத்துப் பெறும் உணர்வு முடிபுகளுக்கான பெயர்களாகும்.
புகழ்ச்சியின் மயக்கறு!
புன்மையை உதறு!
இகழ்ச்சியைத் தாங்கு!
எள்ளலை எடுத்தெறி!
நிகழ்ச்சியை வரிசைசெய்!
நினைவை உறுதிசெய்!
மகிழ்ச்சியும் துயரமும்
மனத்தின் செயல்களே!
பாடல் - 1 உரைக்குறிப்புகள் : (எண் அடிகள் எண்)
1. புகழ்ச்சியின் மயக்கு-பிறர் கூறும் புகழ்ச்சியுரைகளால் ஏற்படும் உணர்வுக் கிறக்கம்; அறுத்தல்-அடியோடு நீக்குதல்.
2. புன்மை-இழிவாம் தன்மை; உதறுதல்-பற்றப் பற்றத் தவிர்த்தல்.
3. இகழ்ச்சி-செயப்பெறும் நல்வினைகளின் மேல் அறியாமையால் கூறப்பெறும் இகழ்ச்சியுரைகள்.
4. எள்ளல்-அருமை வினைகளை எளிமையாகக் கருதி உரைக்கப்பெறும் புன்சொற்கள்.
5. வரிசை-செயப்பெறும் வினைகளை அறிவானும் வினையானும் வகைப்படுத்தி இடத்தானும் காலத்தானும் பொருந்த அமைத்துக் கொள்ளுதல்.
6. நினைவை உறுதி செய்தல்-செயத் தக்கவற்றுக்கும் தகாதனவற்றிற்கும் வேராகிற நினைவுகளை அறிவான் தேறி செயலுக்குரியனவாகத் தெரிந்தெடுத்தல்.
7,8. மகிழ்ச்சி என்பதும் துயரம் என்பதும் செயப் பெறும் வினைகட்கு ஏற்ப மனம் அவ்விடத்துப் பெறும் உணர்வு முடிபுகளுக்கான பெயர்களாகும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அறிவொளி விளக்கால்
அவர்விளக் கேற்று!
செறிவுரை பகர்ந்திடு!
செழிக்க அன்புசெய்;
முறிவுரை பகரேல்!
முகவுரை கீழ்மை!
வெறியுணர் வடக்கு!
வீம்பறி யாமை!
பாடல் - 21 உரைக் குறிப்புகள்:
1,2. செறிந்தொளிரும் அறிவு விளக்கால், அவர்பால் அமைந்திருக்கின்ற அறியாமையிருள் கப்பிய விளக்குகளை ஏற்றி ஒளி பெறச் செய்க.
3. அறிவார்ந்தவும், நுண்மையும், செறிவும் சார்ந்தவுமான பயன் விளைக்கும் உரைகளையே நிகழ்த்துக.
4. நம்மை அண்டியோர் எவர்பாலும் அவர்கள் உள்ளமும் மனமும் இன்பத் துய்ப்பான் செழிப்புறுமாறு அன்பைப் பொழிக! (எல்லா அறிவு நிலைகளையும் பிணைப்பதும், வளரச் செய்வதும் அதுவாகலான்)
5. நெருங்கிப் பேசுவோர் இணைவு முறிவுறுமாறு பிரிப்புணர்வு புலப்படும் பசையற்ற உரையை எக்காலும் எவர்பாலும் தவிர்க்க!
6. பிறர் மகழ வேண்டும் என்பதற்கெனத் (தன்னலவுணர்வால்) போலி முகமனுரை செய்தல் கீழ்மையானதெனவே அதை முற்றுந் தவிர்க்க!
7. உள்ளத்திற்கும் உடற்கும் கிளர்ச்சியூட்டித் திமிர்ந்தெழ வல்லவான வெற்று மிகையுணர்வுகள் தோன்றாவாறு அவற்றை அறிவான் கட்டுப்படுத்தி யடக்குக!
8. வீம்பு - வீண்பெருமை; செருக்குடன் கொள்ளும் அறியாமை மனவெழுச்சி; ஆரவார முனைப்பு.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உரையால் உரைபெறு!
உவகையால் ஒளிசேர்!
புரைசொல் இழக்கு!
போலிமை வினைதவிர்!
திரையிட் டிராதே!
தீமையைத் துணிந்துகொல்!
வரையறு போக்கை;
வாழ்வைக் காதல்செய்!
பாடல் - 22 உரைக் குறிப்புகள்:
1. நாம் பேசும் உரையின் நல்லுணர்வும், நல்லறிவும் அளவானே பிறர் எதிர்வுரையும் இருக்குமாகலின், நாம் பேசும் முதலுரையின் தொடுப்பைச் சிறந்ததாக்குக என்பது.
2. ஒழுக்கம், நேர்மை, உண்மை, அறிவு இவற்றின் வழி விளைந்துள்ள மனக்களிப்பால் நம்மைச் சார்ந்து வரும் அந்நிலைகளைப் பற்றி ஒளி பெறுகின்ற நிலைக்குச் சான்றினனாக இருக்க!
3. பயனில் கொடுஞ்சொற்கள் தீங்கையும், இழுக்கையுமே விளைக்கும்.
4. உண்மைக்கு மாறான வெற்றாரவார வினைப்பாடுகளை எக்காலும் தவிர்க்க!
5. அறிவாற்றல்களைப் பிறர்க்கும் வழங்கிப் பயன்படுமாறு செயாது அவற்றிற்குத் திரையிட்டு அமைந்து பயனின்றிக் கிடத்தல் கூடாதென்க. (திரைக்குள் மறைந்தபடி செய்யும் தீவினைகளைத் தவிர்க்க எனினுமாம்.)
6. தீமைகள் எங்கு எவரால் எவரிடத்து நிகழ்த்தப் பெறினும், அங்கு அதனை அக்காலே துணிவொடு எதிர்த்தழிக்க!
7. வினையையும் அதன் போக்கையும் பொருள், கருவி, காலம், இடம், பயன் இவற்றொடு தொடர்பு படுத்தித் திட்டவட்டமாக ஆய்ந்து நிரல் படுத்துக!
8. மாந்த வாழ்க்கை ஒரு பேறும், உயர்ந்ததும் உயிர் மலர்ச்சிக்காகவும் அமைந்ததாகலின் அதை நன்குத் துய்த்திட வேண்டி அதன்பால் பேரன்பும் பேரீடுபாடும் கொள்க! (வாழ்வை எந்நிலையிலும் வெறுத்தலும், துறத்தலும் கூடாது என்பதாம்.)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கலைபயில்; எண்பயில்;
கவினிலக் கியம்பயில்!
சிலைபயில்; வண்ணச்
சித்திரம் எழுது!
அலைபயில்; கலம் பயில்!
அளாவும் விண்பயில்!
உலைபயில்; உடல்பயில்;
உன்னை நீ,பயில்!
பாடல் - 23 உரைக் குறிப்புகள்:
1,2. வாழ்க்கையமைப்பிற்கும் போக்கிற்கும் பயனும் எழிலும், சுவையும் ஊட்டுகின்ற எல்லாக் கலைகளையும் பயின்று கொள்க! எல்லா நடைமுறைகளுக்கும், அகத்தியமான கணக்கியல் அறிவைப் பயின்று கொள்க! ஒழுங்கையும் செப்பத்தையும் செழுமையையும் கூட்டுவிக்கின்ற எழிலார்ந்த அறிவு இலக்கியங்களைப் பயின்று கொள்க!
3,4. சிலை வடிக்கும் அரிய கலையை (சிற்பக் கலையை)ப் பயின்று கொள்ளுக! அழகிய வண்ண ஓவியங்களை வரைந்து வரைந்து பயில்க!
5. அலையிடை நீந்திப் பயிலும் கட்டுமரம், படகு, கப்பல் போலும் நீர்க்கலங்களை இயக்கப் பயிற்சி பெறுக!
6. அண்டப் பரப்பில் அளாவிப் புடை விரியும் கோள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பற்றிய அறிவைப் பயில்க!
7,8. சமையல் என்பது பெண்டிர்க்கேயுரிய தனிக் கலையாகக் கருதி ஒதுக்கி விடாது அக்கலையிலும் தேர்ச்சியுடையவனாகுக! உடலோம்பல் என்பது உயிரோம்பல் ஆதலின் அதற்கான பயிற்சியை வாழ்வு முழுமையும் தொடர்ந்து மேற்கொள்க! அவற்றொடு, நாம் யாரென நம்மையே அறிந்து கொள்க! (இப் பயிற்சி மெய்யறிவியல் பற்றிய கல்வியாலும், உணர்வாலும் மட்டுமே கைவரப் பெறுவதாகும்.)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
விளங்கிய செல்வம்
வினைபடு கருவி!
வளங்களைப் பகிர்ந்துகொள்!
வயல்விளை வறிவு!
உளங்கொள ஈத்துண்!
உவகையே ஈகை!
களங்கல் விக்கமை!
கனவிலும் கேள்விகொள்!
பாடல் - 24 உரைக் குறிப்புகள்:
1,2. விளக்கம் பொருந்தி பெரிதாய் உலகோரால் மதிக்கப் பெறும் பொருட்செல்வம் இவ்வுலகில் அவ்வவரும் வினைப்படுவதற்கென்றுள்ள கருவியேயாகும். அதனை வெறும் வழிபாட்டுக்குரியதாக எண்ணலாகாது.
3. முயற்சியாலும் சூழலாலும் வந்து வாய்க்கும் செல்வ வளங்களை, அவை வாயாத் தகுதியினரிடையே அவற்றைக் கலந்து பகிர்ந்து கொள்ளுக!
4. அறிவு, வயல் விளைவைப் போன்றதாகும். (பயிர் விளைச்சலில் ஒரு வித்தினின்று பல்வித்துகளை விளைத்தல் போலும் ஓர் அறிவு வித்தூன்றல் பல அறிவு வித்துகளின் பெருக்கத்திற்கு மூலமாகுதலாலும் வேளாண்மை பகிரப் படுதலாலும் அறிவு வயல் விளைவு போன்றதாகும் என்க.)
5. உள்ளம் விரும்பி பிறர்க்கு ஈந்து அவரொடு உண்டு மகிழ்க!
6. உவகையென்பது பிறர்க்கீதலால் ஏற்படும் உள்ளக் களிப்பன்றிப் பிறிதில்லை; எனவே, ஈத்துவக்க!
7. எவ்வகைச் சிறப்புக் கல்வியிலும் நுழைந்து நம்மால் வெற்றி காணவியலும் என்பதை நன்கு அறிந்தாய்ந்து அவ்வத் துறைகளுக்காகும் கல்விக் களங்களை அமைத்துக் கொண்டு அவற்றில் ஈடுபடுக!
8. பிறர் கூறும் பயனுரைகளை நேரிலன்றிக் கனவிலும் உணர்வை அதில் ஊன்றிக் கொள்க என்றபடி. கேள்வியறிவை எவ்விடத்திலும் மிகுக்க என்றவாறாம்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிறக்கச் செய்திடு!
சிறப்பூண் சிறிதுண்!
உறக்கம் மிகுதவிர்!
ஓய்வுளக் கிளர்ச்சி!
மறக்க மறப்பன!
மதிப்பன மதி;மகிழ்!
துறக்க, துறப்பன!
துய்ப்புயிர் வாழ்க்கை!
பாடல் - 25 உரைக் குறிப்புகள்:
1. எவ்வினையையும், சிறப்பாகவும், முழுமையாகவும், செப்பமாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் செய்க!
2. அளவிற் குறைவெனினும் ஆற்றல் செறிந்த உணவாகத் தேர்ந்து உண்க!
3. தேவைக்கு மேலான நீளுறக்கத்தைத் தவிர்க்க! (மிகுவுறக்கம், உடல் நலத்திற் கேலாததானும், காலக் கேடாக்குதலானும் அது தவிர்க்கவென்பதாம்)
4. ஓய்வை முறையாக எடுத்துக் கொள்ளுதல் உள்ளத்தை எக்காலும் கிளர்ச்சியும், எழுச்சியும், சுறுசுறுப்பும் உடையதாக வைத்துக் கொள்ளப் பயன்படும்.
5,6. மறக்கத் தக்க எவற்றையும் உடன் மறப்பதோடு, மதிக்கத்தக்க எதற்கும் உரிய மதிப்பைத் தருக!
7,8. நேரிய வாழ்க்கைப் போக்குக்குத் தேவையற்ற, அல்லது மிகுவாக வேண்டப்படாது நீங்க வேண்டியதும், நீக்க வேண்டியதும் எவையெவையோ அவ்வவற்றைத் துறக்க!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஓம்புக நல்லுடல்;
உயிர்க்கது ஊர்தி!
சோம்பல் இறப்பு!
சுறுசுறுப் பியக்கம்!
தீம்பர் இணைதவிர்!
தேனினும் அளவுகொள்!
தேம்பல் கோழைமை!
திறலொடு துணிந்திரு!
பாடல் - 26 உரைக் குறிப்புகள்:
1,2. தூய்மையும், வலிமையும், தோற்றமும் ஆர்ந்ததாக உடம்பைக் கவனித்துக் காத்தோம்பிக் கொள்ளுக! ஏனெனில் வாழ்வு வழியைக் கடக்க நம்முயிர் இவர்ந்தேறியிருக்கின்ற ஊர்தியாக அஃது இருத்தலான்.
3,4. சோம்பல் தன்மையென்பது ஒரு வகையில் இறப்புப் போல்வதே! அயர்வின்றி நிலைக்க, ஒன்றில் முழுமையாக யீடுபடும் வினைக்குத்தான் இயக்கம் என்று அறிக!
5. எவ்வகையிலோ எவர்க்கோ எவரேனும் எப்பொழுதும் கெடும்பும் தீங்கும் விளைக்கினும் அன்னவரைத் தெரிந்து, உடன் அவரொடு கொண்ட தொடர்பைத் தவிர்த்துக் கொள்க!
6. உண்ணக் கிடைத்தது தேனேயாயினும், அதிலும் அளவொடு உண்பாயாக!
7,8. எந்நிலையிலும் எத்தகையத் தோல்வி ஏற்படினும், அதற்காகக் கலங்கிக் குமுறும் உளவெம்பலுக்குத்தான் கோழைமை என்று பெயர். (அதை விலக்குக!)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நகைநட் பன்று;
நன்னட் பறிந்துதேர்!
பகைமுன் விலகு!
பார்வையிற் கூர்மைகொள்!
மிகைதவிர் எதிலும்!
மெப்புரை தப்பு!
புகைநெருப் பாகும்!
பொய்வளை விழையேல்!
பாடல் - 27 உரைக் குறிப்புகள்:
1,2. நகையாடுதல் ஒன்று மட்டுமே நட்பாகாது. நல்ல நட்பு எது, தீ நட்பு எது என்று நன்கு ஆய்ந்தறிந்து தேர்ந்த பின்றை நட்புக் கொள்க!
3. பழகுவோரிடம் உருவாகும் மன வேறுபாடுகள் வளரத் தொடங்கி, காழ்ப்புக்கு ஊற்றம் தந்து பகையாகப் பழுக்கு முன்னரே பதமாக விலகிக் கொள்க!
4. பார்க்கப்படும் பொருள்களின் தன்மை முற்றும் ஒரே பார்வையில் விளங்குமாறு கூர்மை நிறைந்த நோக்கினனாக இருக்க.
5. எந்தவொன்றிலும் அளவு மீறல் என்பது கேட்டுக்கு அடி கோல்வதாகலின் அவ்வவற்றிலும் அளவு மிகாவாறு கட்டுப் படுத்திக் கொண்டியங்குக!
6. மெப்புக்கு உரைக்கப் பெறும் மெலுக்குப் போலியுரைகள் தவறு செய்தற்கு இடந்தருவனவாகலின் அவற்றைத் தவிர்க்க!
7. புகை மிக மிக, அப்புகையிருந்து இடம் நோக்கி நெருப்பு அண்மிக் கொண்டிருத்தலை உணர்க! (எதனினும் எச்சரிக்கை வேண்டும் என்பது பற்றியாம்.)
8. பொருட்கெனப் பொய்ந்நட்புப் பாராட்டும் போலியராம் பொது மகளிரால் உடல் நலக்கேடும், பொருளழிவும், வாழ்வழிவும், நிலையிழிவும் நேரும். ஆதலால் அன்னோரை ஒருகாலும் விரும்பற்க!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பொழுதெழு முன்னெழு!
பொழுதொடு துயில்சேர்!
பழுதுறங் கின்மை!
பனிநீர் நிதங்குளி!
தொழுது பெறாதே!
தூய்மை உடையணி!
விழுதெனத் துணையிரு!
வீறுவிந் தடக்கம்!
பாடல் - 28 உரைக் குறிப்புகள்:
1. கதிரவன் எழுதற்கு முன் வைகறைப் பொழுதிலேயே உறக்கத்தினின்றும் விழித்தெழுக!
2. நேரத்தொடும் இராக்காலத்தில் முறையாகத் துயில் கொள்ளுக!
3. காலத்தோடும் முறையோடும் இராப் பொழுதில் துயில் கொள்ளாது வினையிடை யீடுபடல், உடல் நலக்கேட்டைத் தருவதன் வழி வாணாட் குறுமையையும், வலிவிழப்பையும் ஒரு சேரப் போர்த்து விடுமாகலான், அப்பழுது நேராதவாறு இராத்துயில் கெடுதல் தவிர்க்க.
4. பனிபோலுங் குளிந்த நீரில் அன்றாடம் குளிக்கும் வழக்கத்தை மேற்கொள்க. உடல் தூய்மைக்கும், அரத்த வோட்டப் பெருக்கிற்கும் சுறுசுறுப்புக்கும், உறுதிக்கும் அதுவே ஏற்றதென்க.
5. எப்பொருளையும் எவரிடமும் எங்கும் பணிவாக வணங்கி வேண்டிப் பெறற்க! (காலையெழுச்சிக்கும் நீர்க் குளியலுக்கும் அடுத்து இது கூறப் பெறுவதால், இறைவனையும் ஒன்றைப் பெற வேண்டும் என்னும் நசையால் தொழுதல் செய்யற்க என்றும் பொருள் கொள்க.)
6. தூய உடை மதிக்கத் தகுந்த தோற்றப் பொலிவிற்கும் நலத்திற்கும் வழியமைப்பதாகலான் அத்தகைய உடைகளையே உடுத்துக!
7. எந்நல்வினைக்குத் துணையாக விரும்பினும் விழுதுபோல் ஊன்றுதலும் உறுதியும் கொண்டு நிற்க!
8. ஆண் மகனொருவற்கு வலிவும் பொலிவும் ஏற்படுவது அவனின் விந்தடக்கத்தின் பயனே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பொருந்துணா விருந்து!
புறவுணா முதுபிணி!
அருந்தலும் அளவுசெய்!
ஆசை அடக்கியாள்!
திருந்துதல் வாழ்க்கை!
தெறுநோய் முன்தவிர்!
மருந்துணல் தீது!
மணிநீர் மருந்து!
பாடல் - 29 உரைக் குறிப்புகள்:
1. ஒருவரின் உள்ளத்திற்கும் உடலுக்கும் ஏற்ற உணவு எதுவாயினும் அதுவே அவற்கு விருந்துணாவாம்.
2. உடற்கும் உளத்திற்கும் ஒவ்வா எவ்வுணவும் முடிவில் பெரும்பிணி தருமாதலால் அது தவிர்க்க!
3. குடிப்பெனினும் அளவு கொள் என்பதாம்.
4. மனவிருப்பத்தை அறிவால் கட்டுப்படுத்தி ஆண்டு முறைப்படுத்திக் கொள்க!
5. வாழ்க்கை என்பது நாம் திருந்துதற்கென்றே வந்து வாய்த்த கூறாகலின் நாளும், பொழுதும் தவறான போக்குகளைத் திருத்திக் கொண்டேயிருத்தல் வேண்டும் என்க.
6. துன்பத்தை விளைக்கின்ற நோய் வரும் முன்னரே அதன் குறிப்புகளை உன்னிப்பாய்க் கண்டறிந்து தக்க முறையால் அது வராமல் தடுத்துக் கொள்க.
7. மருந்துண்ணும் நிலைக்கு நோயை முற்ற விடுதலும் மருந்தை உணாப் போல் தொடர்ந்துண்ணலும், உடலுக்கு ஊறு விளைவிக்க வழி கோலுவதேயாகும்.
8. பளிங்குப் போலும் தூய நீரும் ஓர் அரிய மருந்து போல்வதே! எனவே நோயிடை வெறும் நீரே உண்டும் பருவுணாக் கொள்ளாதும், நோய் நீக்கிக் கொள்க!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பொதுமை உலகிது;
பொதுமை வாழ்விது;
பொதுமை உயிர்நலம்;
பொதுமையே இயக்கம்!
பொதுமைஉன் எண்ணம்;
பொதுமைஉன் வினைகள்;
பொதுமையால் ஆக்கு,உனை!
புதுநலங் காண்பாய்.
பாடல் - 30 உரைக் குறிப்புகள்:
1. இவ்வுலகம் பொதுமை நிலை உடையது.
2. எனவே இவ்வுலக மக்களின் வாழ்வும் பொதுமையதே!
3. உலக மாந்த வுயிர்களின் ஒட்டு மொத்த நலமும் பொதுமைக்கென வுள்ளதே!
4. இவ்வுலக மாந்தர்களின் இயக்கங்கள் யாவும் பொதுமைக்கென இயங்குவதற்கே உள்ளன!
5. நம்மில் நல்விளைவெடுக்கும் எல்லா உள்ளெண்ணங்களும் பொதுமை சான்றனவே!
6. நாமும் ஓர் உலக உறுப்பாதலான், நம் வினைகள் யாவும் பொதுமைக்கென விருப்பனவே!
7. எனவே நாம் நம்மைப் பொதுமையராக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டுவதாகும்!
8. அதுபோதுதான் ஒரு புதிய, தேவையான, சிறந்த நன்மையை இவ்வுலகிலும் நம்முள்ளத்திலும், அறிவிலும் காண்போம். எனவே, பொதுமையாய் எண்ணிப் பொதுமையாய் இயங்கிப் புதுநலம் பெறுவாயாக!
நன்றி:http://thamizholi.blogspot.com
பொதுமை வாழ்விது;
பொதுமை உயிர்நலம்;
பொதுமையே இயக்கம்!
பொதுமைஉன் எண்ணம்;
பொதுமைஉன் வினைகள்;
பொதுமையால் ஆக்கு,உனை!
புதுநலங் காண்பாய்.
பாடல் - 30 உரைக் குறிப்புகள்:
1. இவ்வுலகம் பொதுமை நிலை உடையது.
2. எனவே இவ்வுலக மக்களின் வாழ்வும் பொதுமையதே!
3. உலக மாந்த வுயிர்களின் ஒட்டு மொத்த நலமும் பொதுமைக்கென வுள்ளதே!
4. இவ்வுலக மாந்தர்களின் இயக்கங்கள் யாவும் பொதுமைக்கென இயங்குவதற்கே உள்ளன!
5. நம்மில் நல்விளைவெடுக்கும் எல்லா உள்ளெண்ணங்களும் பொதுமை சான்றனவே!
6. நாமும் ஓர் உலக உறுப்பாதலான், நம் வினைகள் யாவும் பொதுமைக்கென விருப்பனவே!
7. எனவே நாம் நம்மைப் பொதுமையராக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டுவதாகும்!
8. அதுபோதுதான் ஒரு புதிய, தேவையான, சிறந்த நன்மையை இவ்வுலகிலும் நம்முள்ளத்திலும், அறிவிலும் காண்போம். எனவே, பொதுமையாய் எண்ணிப் பொதுமையாய் இயங்கிப் புதுநலம் பெறுவாயாக!
(முற்றும்)
நன்றி:http://thamizholi.blogspot.com
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
» பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
» தமிழ் தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம்: ஜுன் 11, 1995
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
» முத்தான முப்பது முப்பது மருத்துவ குறிப்புகள்
» பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
» தமிழ் தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம்: ஜுன் 11, 1995
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
» முத்தான முப்பது முப்பது மருத்துவ குறிப்புகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|