புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
1 Post - 1%
Kavithas
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
1 Post - 1%
bala_t
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
1 Post - 1%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
291 Posts - 42%
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
26 Posts - 4%
sugumaran
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
6 Posts - 1%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
4 Posts - 1%
manikavi
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி


   
   

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:28 am

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Uyir

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி... ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:28 am

இப்படி எத்தனையோ கேகள்விகள். ‘ஒரு பெண்ணின் அந்தரங்க பாகத்தில் மூன்று தனித்தனி துவாரங்கள் உண்டு. சிறுநீர் போக ஒரு துவாரம்... அந்தரங்க உறவுக்கு ஒரு துவாரம்... குழந்தை பெற்றுக்கொகள்ள மூன்றாவது துவாரம்... சரியாகக் கணிக்காமல் உறவின்போது துவாரம் மாறி விட்டால் போச்சு. அப்படி உறவு கொகள்ளும் ஆணுக்கு மர்மமான வியாதிகள் வரும்’ என்றெல்லாம் கற்பனைக் குதிரையை பயங்கரமாகத் தட்டிவிட்டு, கதைகள் எழுதிய அந்தக் கால டாக்டர்கள் உண்டு!

மருத்துவம் படிக்கிற எல்லோருக்கும் அடிப்படையாக இரண்டு விஷயங்கள் பற்றிய புரிதல் முக்கியம். ஒன்று ‘பிஸியாலஜி’உடலில் எந்தெந்த பாகங்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்பதை சொல்லித்தரும் பிரிவு இது! இரண்டாவது ‘பேதாலஜி’ நோய் வந்தால் உடலில் எந்தெந்த பாகங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது... செயல்பாடுகளில் என்ன குறைபாடுகள் ஏற்படுகிறது என்பது குறித்த ‘நோய் குண அறிவியல்.’ இந்த இரண்டையும் நன்றாக புரிந்துகொண்டவர்களே டாக்டர்கள்.

செக்ஸ் தொடர்பான நோய்களில், சிக்கல் இந்த அடிப்படை விஷயத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. செக்ஸ் உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், உறவு கொகள்ளும்போது அவற்றின் பங்கு... இவை பற்றி தெரிந்தால்தானே நோய் ஏற்படும்போது இதில் நிகழும் மாற்றங்களை அறிய முடியும். அடிப்படையே புரியாத பட்சத்தில்..?

பல டாக்டர்கள் இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் செக்ஸ் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவதையே தவிர்த்து வந்தார்கள். உளவியல் நிபுணர்களோ, ‘செக்ஸ் தொடர்பான எல்லா பிரச்னைகளுக்கும் மனதுதான் காரணம்’ என்று ஸ்டிராங்காக சொல்லி, ஏதோ அவர்களால் முடிந்த அளவுக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்தான் நடந்தது, அந்த ஆராய்ச்சி! மற்றவர்களுக்கு இது எப்படியோ... ஆனால், செக்ஸ் பிரச்னைகளுக்கு மருத்துவ ரீதியான தீர்வுகளைத் தரும் எங்களைப் போன்ற டாக்டர்களுக்கு இது ‘மனிதன் நிலவில் காலடி வைத்ததைவிட பெரிய அறிவியல் சாதனை.’ அந்த ஒற்றை ஆராய்ச்சிதான் இன்று ‘செக்ஸாலஜி’ என்ற பெயரில் நவீன சிகிச்சை முறை ஒன்று உருவாக அடித்தளம் போட்டுக் கொடுத்தது. இப்போது பலரும் செக்ஸில் பிரச்னை என்றால் கூசிக்கொண்டு அதை மூடி மறைக்காமல், முக்காடு போட்டுக்கொண்டு தயங்கித் தயங்கி பிளாட்பார லேகியக் கடைக்குப் போகாமல், ‘வாலிப, வயோதிக அன்பர்களை’க் கூவி அழைக்கும் போலி வைத்தியர்களிடம் போய் சொத்தை இழக்காமல், அறிவியல்ரீதியான தீர்வு தேடி தம்பதி சமேதராக ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த ஆராய்ச்சிதான்!

ஒரு காலத்தில் ‘மலட்டுத் தன்மை பெண்ணிடம் மட்டும்தான் இருக்கிறது’ என்று உலகம் முழுக்க எல்லா சமுதாயமும் உறுதியாக நம்பியது. ‘விதையில் எப்போதும் பழுது இல்லை... நிலம்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது. அதனால் விதைத்த விதை பொய்த்துப் போகிறது’ என்று இதை நாசூக்காக சொன்னார்கள்.

அரியணைக்கு வாரிசைப் பெற்றுத் தராத காரணத்துக்காக எத்தனையோ மகாராணிகள் அநியாயமாக ‘மலடி’ பட்டம் சுமந்து, மரண தண்டனையை பரிசாகப் பெற்று, வாகள்முனைக்கு தங்கள் தலையைக் கொடுத்த பரிதாப சம்பவங்கள் அநேகமாக உலகின் எல்லா நாட்டு வரலாறுகளிலும் இருக்கின்றன! பிரச்னை மகாராஜாவிடம்தான் இருக்கிறது என்பது புரியாவிட்டாலும், அந்தப்புரத்துக்கு அடுத்தடுத்து வரும் மகாராணிகளில் யாரோ ஒருத்தி, தன் உயிரைக் காப்பாற்றிக்கொகள்ள, யாருடனாவது சேர்ந்து தப்பு செய்து ‘இளவரசனை’ப் பெற்றெடுத்து விடுவாகள். அரசனும் "இப்ப புரியுதா? நான் ஆம்பளை சிங்கம்தான்!" என்று மகிழ்ந்து விடுவான்.
ஆனால், சராசரி குடும்பங்களில் எத்தனையோ பிரச்னைகள். குழந் தைப்பேறு இல்லாததால் ஏராளமான மணமுறிவுகள். மிக சாதாரணமான ஒரு சிகிச்சை அவர்களுக்குத் தீர்வு தந்திருக்கும். அது அப்போது யாருக்கும் தெரியாது.

ஐம்பதாண்டுகளுக்கு முன் நடந்த "படுக்கை அறை" ஆராய்ச்சிதான் அதுபோன்ற தீர்வுகளுக்கு திறவுகோலாக அமைந்தது. இன்றைக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான தம்பதிகள் விவாகரத்து மூலம் பிரிவதைத் தடுத்தது... பல பெண்கள் ‘மலடி’ என்ற பட்டத்தைச் சுமந்து வாழ்க்கையை இழந்து அம்மா வீட்டில் காலம் முழுக்கக் கண்ணீரோடு கிடப்பதைத் தடுத்தது... என மகத்தான புண்ணியம் இந்த ஆராய்ச்சிக்கு உண்டு.

அந்தப் படுக்கை அறை இரண்டு தடுப்புகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. ஓர் அறையில் மிருதுவான படுக்கை. அதற்குகள்தான் ஜோடிகள் நுழையும். அந்த அறையின் கண்ணாடிச் சுவர்கள் சன்கன்ட்ரோல் ஃபிலிமால் மறைக்கப்பட்டு இருக்க, அதற்கு வெளியே இருந்த குட்டி அறையில் ஆராய்ச்சிக் குழு இருக்கும். உகள்ளே இருக்கும் ஜோடிக்கு இந்தக் குழுவினர் தெளிவாகத் தெரிவார்கள்.

உள்ளே நுழையும் ஜோடி பரவசத்தை அனுபவிக்கும்போது அவர்களது உடலில் நிகழும் மாற்றங்களை அளவெடுக்க, எல்லா விதமான ஏற்பாடுகளும் இருந்தன. அவர்களது நாடித்துடிப்பை அளக்க ஒரு கருவி, ரத்த அழுத்தத்தை அளவிட ரத்த அழுத்தமானி, மூளையில் நிகழும் மாற்றங்களை அளக்க ‘எலெக்ட்ரோ என்ஸஃபைலோ கிராம்’ எனப்படும் ஈ.ஈ.ஜி. கருவி, இதய மாற்றங்களை உணர்வதற்கு ஹோல்டர் மானிட்டர் என்ற கருவி, இது தவிர வியர்வை சுரப்பு, கண்ணில் நிகழும் மாற்றங்களை அளவிடும் கருவி... இப்படி பல கருவிகளின் இணைப்பு ஒயர்கள் அவர்கள் மீது பிணைக்கப்பட்டு இருந்தன. இவற்றை ‘சுகமான சுமைகளாக’ கருதியபடி அவர்கள் இயல்பாகத் தங்களுக்குகள் கலந்தார்கள்.

மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை அளவிடுவது சுலபம். ஆனால், அந்த உறவுக்கு அத்தியாவசியமான செக்ஸ் உறுப்புகளை எப்படி கண்காணிப்பது? ஆணுக்கு எல்லாமே உடலுக்கு வெளியில் இருந்தன. அதனால் அதில் பெரிய சிரமம் இல்லை. ஆனால் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் நிகழும் மாற்றங்கள்? அதைக் கண்காணிக்கவும் ஒரு ஸ்பெஷல் கருவி தயாரானது. ஆணுறுப்பு போல நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒன்றை செயற்கையாக பிளாஸ்டிக்கில் தயாரித்தனர். ஒளி ஊடுருவும் வகை பிளாஸ்டிக்கால் ஆன அதன் உகள்பக்கத்தில் மைக்ரோ கேமரா வைக்கப்பட்டது. அந்த செயற்கை உறுப்பை வைத்து சில பெண்கள் சுய இன்பம் அனுபவிக்க, அதற்குகள் இருந்த காமிரா ஸ்டில் போட்டோக்களாகவும், வீடியோ படமாகவும் பெண் உறுப்பில் நிகழும் மாற்றங்களைப் பதிவு செய்தது.

மிகச் சாதாரணமான ஆராய்ச்சிகளுக்கே எதிர்ப்புக் குரல்கள் எழும்போது இதை விட்டு வைத்திருப்பார்களா? ‘அறிவியல் போர்வையில் நடக்கும் விபசாரம்’ என பலர் கூக்குரல் எழுப்ப, மத அமைப்புகளும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் குதித்தன. கொஞ்சம் தடம் புரண்டாலும் ஒட்டுமொத்த ஆராய்ச்சியே கேகள்விக்குறி ஆகும் நிலை உண்டானது.

ஆனாலும் ஊசிமுனையில் தவம் செய்வது போன்ற ரிஸ்க்கான இந்த ஆராய்ச்சியை வெற்றியோடு செய்து முடித்தார், வில்லியம் ஹோவெல் மாஸ்டர்ஸ்.

சரி... எப்படி இத்தனை பேர் அவரிடம் படுக்கை அறை ஆராய்ச்சிப் பொருட்களாக இருக்க ஒப்புக் கொண்டார்கள்?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:36 am

அமெரிக்காவின் புகழ் பெற்ற மருத்துவரான வில்லியம் மாஸ்டர்ஸ் பிறந்தது, ஒஹையோ மாநிலத்தில் இருக்கும் க்ளீவ்லாண்டில். பாரம்பரியமிக்க ரோசெஸ்டர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அவர் படித்தார். அந்த பல்கலைக்கழகத்தில் தான் ‘செக்ஸ் உயிரியல்’ வல்லுநர் என பெயர் பெற்ற ஜார்ஜ் வாஷிங்டன் கார்னர் பணி புரிந்தார். வாஷிங்டன் கார்னரை குருவாக ஏற்றுக் கொண்ட வில்லியம் மாஸ்டர்ஸ், எலிகளின் செக்ஸ் வாழ்க்கை பற்றிதான் முதலில் ஆராய்ந்தார். பெண்களுக்கு மாத விடாய் வருவது போல எலிகளுக்கும் ஒருவித திரவச் சுரப்பு நிகழ்கிறது என்பது அவரது ஆராய்ச்சி முடிவு.

அதை மனிதர்களின் செக்ஸ் சுழற்சி யோடு ஒப்பிட்டு பார்க்க முயன்றபோது அவருக்குத் தோல்விதான் கிடைத்தது. சரியான புத்தகங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு சில ஆராய்ச்சி நூல்களும் மனித உடலில் செக்ஸின்போது நிகழும் மாற்றங்கள் குறித்து தப்புத் தப்பாக சொல்லியிருந்தன. அப்போது அவருக்கு 24 வயசு. ‘தாங்கள் எங்கிருந்து எதனால் வந்தோம்... தலைமுறை தலைமுறையாக தாயின் கருவில் உயிர்ச்சுழற்சி எப்படி நிகழ்கிறது என்பது பற்றி யாரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லையே?’ என்ற விஷயம் அவரை உறுத்தியது. ‘என் வாழ்நாள் முழுக்க செக்ஸ் பற்றிய உருப்படியான ஆராய்ச்சிதான் செய்யப் போகிறேன்’ என அப்போதே அவர் முடிவெடுத்தார்.

ஆனால், அவரது குருவான கார்னர் கவலையோடு அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். ‘‘உனக்கு அதற்கான வயதும், பக்குவமும் வரும் வரை காத்திரு. இப்போது நீ சின்னப் பையன். நீ மனப்பூர்வமாகவே ஆராய்ச்சி செய்தாலும் அதற்கு தப்பான பெயர் சூட்டி உன்னைக் களங்கப்படுத்தி விடுவார்கள். எத்தனையோ மகத்தான ஆராய்ச்சியாளர்களுக்கு ‘செக்ஸ் வெறியர்கள்’ என பட்டம் கொடுத்து, தண்டனையும் கொடுத்த தேசம் இது. அப்படி ஒரு நிலை உனக்கும் வரக் கூடாது. முதலில் ஒரு டாக்டராக புகழ் தேடிக் கொள். அப்புறம் ஏதாவது ஒரு நிறுவனத்தின் உதவியோடு ஆராய்ச்சி நடத்து. அப்போதுதான் பிரச்னை வராது’’ என்றார் அவர்.

மாஸ்டர்ஸ் அதை ஏற்றார். வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் வந்து வேலைக்கு சேர்ந்தார். மாதவிடாய் கோளாறுகள், மகப்பேறு பிரச்னைகள் என பெண்கள் மருத்துவத்தில் புகழ்பெற்றார். குறிப்பாக முதுமை வந்து மாதவிடாய் நிற்கும் பருவத்தில் பெண்களுக்கு ஹார்மோன் ஊசிகளைப் போட்டு, மாதவிடாய் கோளாறு களை தடுக்கும் இவரது புதிய சிகிச்சை முறையைப் பெற பெண்கள் கூட்டம் ‘க்யூ’வில் நின்றது. செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி எதற்கும் பெண்களின் சப்போர்ட் தேவை. அது அவருக்கு கிடைத்து விட்டது.

அவரது ஆராய்ச்சி ஆசைக்கு தீனி போடும் விதமான விஷயங்கள் இங்கும் அவருக்கு கிடைத்தன. புகழ்பெற்ற மகப்பேறு நிபுணர் என அவர் பெயர் வாங்கியதால், ‘‘டாக்டர்! எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை’’ என்ற புலம்பலோடு அவரிடம் நிறைய பெண்கள் வந்தார்கள். அவர்களைப் பரிசோதித்துப் பார்த்த மாஸ்டர்ஸுக்கு ஆச்சர்யம்...

உடல்ரீதியாக அவர்களில் பலருக்கு எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ‘குழந்தை இல்லை’ என்ற மனக்குறையோடு வரும் பெண்களில் நூற்றில் முப்பத்தேழு பேருக்கு செக்ஸில் ஆர்வம் இல்லை. அவர்கள் குறைந்தபட்ச ஈடுபாடு காட்டி கணவருடன் சேர்ந்து படுக்கை அறைக்கு போனாலே போதும்... அவர்களது பிரச்னை தீர்ந்துவிடும். அதைச் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு செக்ஸில் நாட்டமும் இல்லை... அதுபற்றி தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் இல்லை.

தவறு எங்கே இருக்கிறது என்று அவருக்கு குழப்பம். இந்த குழப்பம் வந்தபோது அவருக்கு 38 வயது ஆகியிருந்தது. கண்ணியமான டாக்டர் என்ற பெயரும் வாங்கியிருந்தார். இப்போது நம் ஆராய்ச்சியைச் செய்ய ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு வந்தது. அமெரிக்கர்கள் தனிமனித ஒழுக்கத்தைப் பிரதான விஷயமாக மதித்த காலம் அது! செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரிப்பதே ஆபாசமான விஷயமாக கருதப்பட்டது.

ஆனாலும் செக்ஸ் ஆராய்ச்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து பலத்த சர்ச்சைகள் எழுந்து கொண்டிருந்தன. அதுவரை செக்ஸை ஆராய்ந்த எல்லோருமே வெறும் இன்டர்வியூ டைப் ஆராய்ச்சிகளைத்தான் முடித்திருந்தனர். பெரும்பாலும் அவர்கள் மனோதத்துவ நிபுணர்கள். எங்காவது ஒரு ஆபீஸ் போட்டுக் கொண்டு, தங்களிடம் சிகிச்சைக்குத் தனியாக, தம்பதிகளாக வருகிறவர்களிடம் கேள்விகள் கேட்டு, அவர்கள் சொல்லும் பதில்களை வைத்து ஆராய்ச்சி முடிவுகளை அறிவித்துக் கொண்டிருந்தனர். பலருக்கு கேள்விகள் புரியாது. சிலருக்கு தங்கள் பதிலை எப்படி சொல்வது என்று தெரியாது. ‘எந்த வயதில் முதல் தடவையாக உறவு கொண்டீர்கள்? ஒரு மாதத்துக்கு எத்தனை தடவை? மனைவியுடனான செக்ஸ் தவிர வேறு ஏதாவது உண்டா?’ என்கிற மாதிரியான கேள்விகள்தான். கூச்சப்பட்டுக் கொண்டு பலர் உண்மைகளை மறைத்துவிடுவார்கள். இவை வெறும் உணர்வுப்பூர்வமான விஷயங்களாக இருந்ததே தவிர, அறிவியல்ரீதியாக அவற்றால் உபயோகம் எதுவும் இல்லை.

ஆனால், சும்மா இன்டர்வியூ ஆராய்ச்சி செய்ததற்கே எதிர்ப்புகள் எழும்போது, ‘நான் பரிசோதனைக் கூடத்தில் ஒரு படுக்கையை வைத்து, அதில் பலரை உறவு கொள்ளச் செய்து ஆராய்ச்சி செய்யப் போகிறேன்’ என்று சொன்னால் அமெரிக்க மக்கள் தன்னைக் கொன்றே விடுவார்கள்... அதன் நல்ல பலன்கள் பற்றி எவ்வளவு சொன்னாலும் யாருடைய மண்டையிலும் ஏறாது என்பதை மாஸ்டர்ஸ் உணர்ந்தார். அதனால் முடிந்தவரை தனது ஆராய்ச்சியை ரகசியமாக வைத்துக் கொள்ள தீர்மானித்தார்.

முதல்கட்டமாக தங்கள் பல்கலைக்கழக நிர்வாகியிடம் தனது ஆராய்ச்சி பற்றி விளக்கமாகச் சொல்லி அவரிடம் சம்மதம் வாங்கினார். பிறகு ஆராய்ச்சியைத் தடை செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தது எது எது... யார் யார் என்று ஒரு பட்டியல் போட்டார்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:36 am

இதில் முதலிடம் பிடித்தது சர்ச். அப்போது வரை மதம்தான் மனிதர்களுக்கான ஒழுக்க நெறிகளை வரையறுத்துக் கொண்டிருந்தது. ‘செக்ஸை ஒரு பாவச்செயல்’ என காலம்காலமாக சொல்லி வந்த கிறிஸ்தவ பாதிரியார்கள், செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சிகளையும் பாவச் செயலாகவே கருதி னார்கள். மற்ற விஷயங்களைப் பொறுத்தவரை மனிதர் களின் மீதான மதத்தின் பிடி தளர்ந்து இருந்தாலும், ஒழுக்கத்தைப் பொறுத்தவரை அதன் பிடி இறுக்க மாகவே இருந்தது.

செயின்ட் லூயிஸ் நகரிலிருந்த அனைத்து தேவாலயங்களின் நிர்வாகிகளையும் சந்தித்த மாஸ்டர்ஸ், தன் ஆராய்ச்சி மருத்துவரீதியாக எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லி, ‘நீங்கள் சம்மதம் சொன்னால் நான் இந்த ஆராய்ச்சியைச் செய்கிறேன்’ என முடிவெடுக்கும் பொறுப்பை அவர்கள் கையில் கொடுத்தார். இந்த தந்திரம் நல்ல பலன் தந்தது. அவர்கள் மாஸ்டர்ஸின் வெளிப்படையான அμகுமுறையில் கவரப்பட்டு அனுமதி தந்தார்கள்.

தனது ஆராய்ச்சிக்கு ஆலோசனை சொல்ல ஒரு குழுவை உருவாக்கி இருந்தார் மாஸ்டர்ஸ். உண்மையில் அவர்களில் யாருடைய ஆலோசனையும் அவருக்கு தேவையில்லை. ஆனால் யார் யார் ஆராய்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என அவர் கருதினாரோ அவர்களை வளைத்து சும்மா ஒரு கௌரவ பதவி கொடுத்து, அவர்கள் வாயை மூடும் டெக்னிக் அது! நகரில் இருக்கும் பிரபலமான மத குருக்கள் அனைவரையுமே அந்தக் குழுவில் ஆலோசகர்களாக நியமித்து விட்டார் மாஸ்டர்ஸ்.

அடுத்தது போலீஸ். இந்த ஆராய்ச்சியின் எந்த ஒரு கட்டத்திலும் போலீஸ் அதிரடியாக பரிசோத னைக் கூடத்தில் நுழைந்து அங்கு படுக்கை யில் இருப்பவர்களை, ‘விபசாரத்தில் ஈடு பட்டதாக’ (பரிசோதனைக்கு வந்தவர்களில் பலர் தம்பதிகள் இல்லை என்பதை நினைவில் கொள்க!) கைது செய்யும் அபாயம் இருந்தது. அது மட்டுமில்லை... ஆராய்ச்சிக் குழுவினரை விபசாரத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யக் கூடிய வாய்ப்பும் இருந்தது. பொதுமக்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந் தால், ‘பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகச் சொல்லி’ ஆராய்ச்சிக்கே தடை போட்டு விடுவார்கள்.

தன் ஆராய்ச்சி இப்படி குறை பிரசவம் ஆவதை மாஸ்டர்ஸ் விரும்பவில்லை. செயின்ட் லூயிஸ் நகர போலீஸ் கமிஷன ரைச் சந்தித்த அவர், எல்லா
விவரங்களையும் சொல்லி, அவரையும் தனது குழுவில் ஆலோசகர் ஆக்கிவிட்டார்.

மூன்றாவதாக மீடியா. இதற்கு முன் ஆராய்ச்சி செய்த பலரைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி, உணர்ச்சிமயமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி, பொதுமக்களை அவர்களுக்கு எதிராக போராட்டக் களத்தில் இறங்கவைத்து, அவர்களது இமேஜையே காலி செய்ததில் பத்திரிகைகளின் பங்கு பிரதானமானது என்பது அவருக்கு தெரிந்திருந்தது. பத்திரிகைகளில் தன்னைப் பற்றியும், தனது ஆராய்ச்சி பற்றியும் நல்லவிதமாக வராவிட்டாலும் பரவாயில்லை... தப்பாக எதுவும் வந்துவிடக் கூடாது என நினைத்த அவர், செயின்ட் லூயிஸ் நகரில் பிரபலமான இரண்டு பத்திரி கைகளை நடத்திவந்த பதிப்பாளர் ஒருவரை சந்தித்து, ஆராய்ச்சி பற்றி சொன்னார். ‘‘நீங்களாக வந்து எங்களி டம் சொல்லாதவரை, இந்த ஆராய்ச்சி பற்றி ஒரு வரி கூட நான் எழுத மாட்டேன்’’ என்று அவர் உறுதி மொழி கொடுத்தார். அப்புறம் என்ன? அவரும் ஆலோசனைக் குழுவில் இடம்பிடித்தார்.

மாஸ்டர்ஸ் தன் ஆராய்ச்சியை முதலில் நடத்தியது செக்ஸ் தொழி லாளிகளிடம்...

இரண்டு ஆண்டுகள் நடந்தது அந்த ஆராய்ச்சி. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து செக்ஸ் தொழிலாளிகளை வரவழைத்து, தன் பரிசோதனைக் கூடத்தில் ஆராய்ச்சி செய்தார் வில்லியம் மாஸ்டர்ஸ். 118 பெண்கள். 27 ஆண் செக்ஸ் தொழி லாளிகள். முதல்கட்டமாக அவர்களது பின்னணியை விசாரித்துக் கொண்டு, அவர்களின் குடும்ப விவரங்கள், உடல்நிலை, உணர்வுகள், தொழில் அனுபவங்கள் என எல்லாவற்றையும் கேட்டு தொகுத்துக் கொண்டார் அவர்.

இந்த ஆராய்ச்சியின் போதுதான் அவருக்கு ஒரு சுவாரஸ்யமான உண்மை புரிந்தது. ‘செக்ஸ் தொழிலை பல பெண்கள் தேர்ந்தெடுத்தது சுலபமாக குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கும் வழி என்பதால் மட்டுமில்லை... இந்த தொழிலுக்கு வந்திருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு சராசரி பெண்களை விட செக்ஸில் அதிக ஆசை இருக்கிறது’ என்பதுதான் அது!

முதல்கட்ட ஆராய்ச்சிகள் முடிந்து இரண்டாவது கட்டத்துக்கு அவர்களிலிருந்து எட்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களை மட்டும் செலக்ட் செய்தார். இனி ஆராய்ச்சியில் அவர்களது உடலும், மனமும் இணைய வேண்டும். அவர்களை ஜோடிகளாக இணைத்து படுக்கை அறைக்கு அனுப்பி தனது கருவிகள் மூலம் ஆராய்ந்தார். அந்த மூன்று ஆண்களும், எட்டு பெண்களும் விதம்விதமான காம்பினேஷனில் பல மாதங்கள் அந்த அறைக்குள் போய் படுக்கையை பயன்படுத்தினார்கள். கிட்டத்தட்ட ஆராய்ச்சியின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ‘ஒரு செக்ஸ் தொழிலாளியின் உணர்வுகளும், உடல்ரீதியான மாற்றங்களும் எந்த அளவு இயல்பாக இருக்கும்?’

ஒரு பெண் தன் கணவன் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தியபடி படுக்கையில் அனுபவிக்கும் பரவச உணர்வுகளுக்கும், காசுக்காக அந்த சுகத்தைத் தரும் ஒரு செக்ஸ் தொழிலாளியின் உணர்வுகளுக்கும் நிச்சயம் வித்தியாசம் உண்டு. வெறும் செக்ஸ் தொழிலாளிகளை வைத்து நடத்தப்படும் இந்த சோதனை, எல்லா பெண்களையும் பிரதிபலிக்கும் சோதனையாக இருக்காது என்பது அவருக்குப் புரிந்தது. இந்த சோதனையை வெறும் அனுபவமாக மட்டும் எடுத்துக் கொண்ட மாஸ்டர்ஸ், அந்தப் படுக்கை அறையை தற்காலிகமாக பூட்டி வைத்துவிட்டார்.

அப்புறம் பல பெண்களே வந்து அவரது ஆராய்ச்சியைத் தொடர வைத்தது சுவாரஸ்யமான கதை!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:42 am

இந்த ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் பெண்கள், படிக்கும் மாணவிகள் என பலரும் அந்த பரிசோதனைக் கூடத்தின் வராண்டா பக்கம் வரவே பயந்தனர். எப்போதும் செக்ஸ் தொழிலாளிகள் கிண்டலும், கேலியுமாக பேசிக் கொண்டு உலா வரும் இடம் என்றால் கேட்கவா வேண்டும்?
ஆனால், நாளாக ஆக, ‘இவர் நிஜமாகவே சீரியஸாக ஏதோ செய்கிறார்’ என்பது அந்த வளாகத்தில் பலருக்கும் புரிந்தது. செக்ஸ் தொழிலாளிகள் மீதான ஆராய்ச்சியை திடீரென மாஸ்டர்ஸ் நிறுத் திய போது மாணவிகளும் நர்ஸுகளும் இயல்பாகவே அவரை அணுகினார்கள். ‘தனது ஆராய்ச்சிக்கு குடும்பப் பெண்கள்தான் தேவை’ என்பதை அவர் சொன்ன போது அவர்களில் பலர் அதற்கு முன்வந் தார்கள். தங்கள் கணவர்களோடு வந்த நர்ஸ்கள், பாய் ஃபிரண்டுகளைக் கூட்டிக் கொண்டு வந்த கல்லூரி மாணவிகள், மாஸ்டர்ஸிடம் ஏற்கெனவே சிகிச்சை பெற வந்த பெண்கள், தங்களுக்கு தெரிந்த தம்பதிகளை அனுப்பி வைத்த டாக்டர்கள் என பலரும் கைகொடுக்க வந்தனர்.

இப்போது அவருக்குத் தேவை இந்த பெண்களிடம் சரளமாக பேசி அவர்களிடமிருந்து தகவல் களைத் திரட்ட ஒரு பெண் உதவியாளர். பத்திரிகைகளில் அவர் ஒரு விளம்பரம் கொடுத்தார். ‘முதிர்ந்த அனுபவம் கொண்ட ஒரு இளம்பெண் தேவை. அவர் மனிதர்கள் மீது ஆர்வம் காட்ட வேண்டும். ஒரு குழந்தை எங்கே உருவாகி எப்படி வருகிறது என்ற உண்மையைப் புரிந்தவராக இருக்க வேண்டும்.’

இந்த வித்தியாசமான விளம்பரத்தைப் பார்த்து விட்டு அவரிடம் வந்தார் வர்ஜீனியா ஜான்சன். உளவியல் நிபுணரான வர்ஜீனியா ஜான்சன் மோண்டானாவில் பிறந்தவர். மாஸ்டர்ஸை விட பத்து வயது இளையவர்.

பாட்டுப் பாடுவது, பத்திரிகைகளில் எழுதுவது, விளம்பர ஆராய்ச்சி என பல வேலைகளை அவ்வப்போது பார்த்து வந்த வர்ஜீனியா ஜான்சனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன. மாஸ்டர்ஸின் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி அவரது உதவியாளராக உடனே வேலைக்கு சேர்ந்தார் அவர். அதன்பின் மாஸ்டர்ஸும் வர்ஜீனியா ஜான்சனும் பரிசோதனைச் சாலை படுக்கை அறைக்கு வந்தவர்களை ஆராய்ந்தனர். பரிசோதனைக்கு வந்தவர்கள் மொத்தம் 694 பேர். இதில் 312 பேர் ஆண்கள். 382 பெண்கள். இவர்களில் 552 பேர் திருமணமாகி கணவன், மனைவிகளாக வந்தவர்கள். 98 பேர் விவாகரத்து ஆனவர்கள். 44 பேர் திருமணம் ஆகாதவர்கள். ஆண்களைப் பொறுத்தவரை 21 வயது இளைஞர்கள் முதல் 89 வயதில் இருக்கும் குடுகுடு கிழவர்கள் வரை வெவ்வேறு வயதுகளில் இருந்தார்கள். பெண்கள்... பதினெட்டு வயது கல்லூரி மாணவி முதல் எழுபத்தெட்டு வயது பாட்டி வரை இருந்தார்கள். ஆறு பேர் கர்ப்பிணிகளாக பரிசோதனைக்கு வந்தார்கள். அந்த சமயத்தில் பரிசோதனைக் கூடத்தில் தங்கள் கணவரோடு உறவு கொண்ட அவர்கள், திரும்பவும் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் வந்தார்கள். உறவு கொண்டார்கள்.

ஒருவழியாக ஆராய்ச்சி முடிந்து அதை புத்தகமாக வெளியிடும் சமயம்... செக்ஸ் என்ற வார்த்தையே பரபரப்பு கிளப்பக் கூடியதாயிற்றே. அப்படி எதுவும் வெற்று பரபரப்பு கிளம்பி, இந்த ஆராய்ச்சியின் கண்ணியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மாஸ்டர்ஸ் உறுதியாக இருந்தார். ‘இது டாக்டர்களைக் குறிவைத்து நடந்த ஆராய்ச்சி. இந்த ஆராய்ச்சி முடிவுகள் அவர்களுக்கு உதவ வேண்டும். செக்ஸ் பிரச்னைகளோடு வருகிறவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை தர இது வழிகாட்டியாக இருக்கும். செக்ஸ் பிரச்னையால் குடும்பங்கள் சிதறாமல் இந்த புத்தகம் தடுக்கும்’ என அவர் நம்பினார். அந்த புத்தகமே கடினமான மருத்துவ வார்த்தைகளால் எழுதப்பட்டு இருந்தது. மருத்துவ புத்தகங்களை வெளி யிடும் பாஸ்டன் நகரைச் சேர்ந்த லிட்டில் பிரௌன் நிறு வனத்திடம் புத்தக உரிமையைக் கொடுத்த மாஸ்டர்ஸ், ‘‘பொதுமக்களை வாங்கச் சொல்லி விளம்பரம் கொடுக்கா தீர்கள்.என் புத்தகத்தை டாக்டர்கள் வாங்கினால் போதும்’’ என்று சொன்னார். கவர்ச்சியான அட்டை எதுவும் இல்லாமல் ஏதோ பாட புத்தகம் மாதிரி வெறும் எழுத்துக்களை நிரப்பிய மேலட்டையோடுதான் வெளியானது அது!

1966&ம் ஆண்டு ‘Human Sexual Response’ என்றப்பெயரைத் தாங்கி அந்த புத்தகம் வெளிவந்தது. ஆனால், அது வெளியாவதற்கு சில நாட்கள் முன்னதாக புத்தகத்தைப் பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்டு பலர் தாக்குதல் தொடுத்தனர்.

‘‘செக்ஸ் உறவில் இருக்கும் இன்பத்தைப் பற்றி மாஸ்டர்ஸ் உணரவில்லை. மெக்கானிக்குகள் பைக்கை ஓட்டி டிரையல் பார்ப்பது மாதிரி இயந்திரத்தனமாக ஒரு அறையில் தாம்பத்ய உறவைச் செய்ய வைத்து அவர் ஆராய்ச்சி செய்திருக்கிறார். இப்படி அந்தரங் கத்தை அலசி ஆராய்ந்தால் அதில் இருக்கும் சுவாரஸ்யம் போய்விடும். விலங்குகள் கூட அதை சுகமாக அனுபவிக்கும் போது மனிதன் மட்டும் இயந் திரத்தனமாக செக்ஸை அனுபவிக் கும் பரிதாப ஜீவன் ஆகிவிடுவான்’’ என்று சமூக ஆர்வலர்கள் கூக்குரல் போட்டனர். அந்த சமயத்தில்தான் இப்படி ஒரு ஆராய்ச்சி நடந்த விஷயமே வெளியில் தெரிந்தது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:43 am

இப்படி கிளம்பிய பரபரப்புகளே தீனி போட, மாஸ்டர்ஸும், வர்ஜீனியா ஜான்சனும் இணைந்து எழுதிய அந்த புத்தகம் வந்த வேகத் தில் மளமளவென விற்றுத் தீர்ந்தது. புரியாத மொழி... பத்து டாலர் விலை என இருந்தாலும் அது ஐம்பது லட்சம் பிரதிகள் விற்றது. டாக்டர்கள் வாங்குவதற்கு முன்னரே சாதாரண பொதுஜனங்கள்தான் வாங்கித் தள்ளினர். இதுவரை ‘நியூ யார்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளி யிட்ட விற்பனைப் பட்டியலில் முதலிடம் பிடித்த ஒரே மருத்துவ நூல் அதுதான்.

செக்ஸின் போது நாடித்துடிப்பு எவ்வளவு அதிகரிக்கிறது... ரத்த அழுத்தம் எவ்வளவு எகிறுகிறது... கண்ணுக்குள் இருக்கும் பாப்பா எப்படி நெகிழ்கிறது என பல விஷயங்களையும் அந்த புத்தகம் டெக்னிக்கலாக சொல்லியிருந்தாலும் அதன் வீரியம் இன்னொரு பக்கத்தில்தான் வெளிப்பட்டது. காலம் காலமாக செக்ஸ் பற்றி இருந்துவந்த பல நம்பிக்கைகளை ஒட்டுமொத்தமாக தகர்த்தது அது.

‘வயதுக்கு வந்த உடனே ஒருவர் செக்ஸில் ஈடுபட தயாராகி விடுவதாக நினைப்பது தவறு. உடல், மனசு இரண்டும் பக்குவப்பட வேண்டும். அதன் பின்னரே ஒருவரால் செக்ஸில் ஈடுபட முடியும்’ என்றார் மாஸ்டர்ஸ்.

செக்ஸ் அறிவு என்பது தானாக வருவதில்லை. முறையாக கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். ‘சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை’ என்கிற மாதிரியான பழமொழிகள் எல்லாமே தப்பு. மீன்குஞ்சு பிறந்ததும் நீந்தக் கற்றுக் கொள்வது மாதிரி அந்த வயது வந்ததும் இதை தானாக கற்றுக் கொள்வார்கள் என நினைப்பது ஆபத்து. அதை பலர் தப்பாக கற்றுக் கொள்வதால் பிரச்னைதான் வருகிறது. அப்படிப்பட்டவர்கள்தான் பிரச்னைகளில் தவிக்கிறார்கள் என்றார் மாஸ்டர்ஸ்.
அதேபோல ‘வயதானதும் செக்ஸைக் குறைத்துக் கொள்ள வேண்டும்’ என்று அதுவரை சொல்லப்பட்ட அட்வைஸையும் அவர் மறுத்தார். ‘உடல் ஒத்துழைத்து, ஆர்வமுள்ள துணை கிடைத்தால் எண்பது வயதிலும் ஒருவர் இருபது வயது இளைஞனைப் போல செயல்படலாம்’ என்றார் அவர்.

‘மலட்டுத் தன்மை’ என லேபிள் குத்தி பல பெண்கள் குழந்தை பெற லாயக்கற்றவர்களாக ஒதுக்கப்படுவதை அவர் கடுமையாக எதிர்த்தார்.

‘எப்போது, எப்படி உறவு கொள்ள வேண்டும் என்ற விஷயம் புரிந்தாலே இதில் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். மேலும் இது தொடர்பான குறைபாடுகளில் அறுபது சதவிகிதம் ஆண்களிடம்தான் இருக்கிறது. இதற்கு காரணம் பயம்தான்’ என்றார் அவர். செக்ஸ் என்பது ஏதோ குழந்தை பெறுவதற்கோ, உணர்ச்சிகளை கொட்டித் தீர்த்துக் கொள்வதற்கோ மட்டுமான விஷயம் இல்லை. அது உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு பழக்கம். அந்த நெருக்கமான உறவின் மூலம் ஆணும், பெண்ணும் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வது தான் சமூக நியதி என்பது அவரது முடிவு. செக்ஸில் ஆண்களைப் போலவே பெண்களும் பரவச நிலையை அனுபவிக்கிறார்கள். ஆண்களுக்கு விரைவாக பாலுணர்வு கிளர்ந்து எழுகிறது. ஆனால், பெண்ணுக்கு இந்த கிளர்ச்சி தாமதமாகவே வருகிறது. பல சந்தர்ப்பங்களில் பெண்கள் இப்படி கிளர்ச்சி அடைய ஆரம்பிப்பதற்குள் ஆண்கள் முடித்து விடுகின்றனர். இதனால் திருமணமான பெண்களில் நான்கில் ஒருவர் பல ஆண்டுகள் உறவுக்கு பிறகு கூட அந்த பரவசத்தை அனுபவித்ததில்லை. பெரும்பாலான ஆண்கள் இப்படி பெண்களின் உணர்வுகளை மதிக்காததால் ஏற்படும் வெறுப்புதான் அந்த உறவின் மீது பலருக்கு ஆர்வமே இல்லாமல் செய்து விடுகிறது" என்றார் அவர். முதல் புத்தகம் போலவே அடுத்தடுத்து இரண்டு புகழ்மிக்க புத்தகங்களை மாஸ்டஸும் வர்ஜீனியா ஜான்சனும் வெளியிட்டனர். செக்ஸை ஆரம்பித்து முடிக்கும் வரை உடலில் ஏற்படும் மாற்றங்களை நான்கு கட்டமாக அவர்கள் பிரித்தனர். இதில் முதல்நிலை ‘உணர்ச்சி வசப்படும் கட்டம்.’ இதற்கு அடுத்தது, இந்த உணர்ச்சியை அப்படியே நிலைநிறுத்தி வைக்கும் ‘பீடபூமி நிலை.’ உச்சகட்ட இன்பத்தை அடைவது மூன்றாவது நிலை. இதன்பின் ஓய்வெடுப்பது நான்காவது நிலை. சரி... இதில் என்ன லாபம்?

இதற்கு முன்பு வரை செக்ஸ் பிரச்னைகளுக்கு ஒரே பெயர்தான். பிரச்னையுள்ள ஆண்களை ‘ஆண்மையற்ற வர்கள்’ என்றும், பெண்களை ‘கிளர்ச்சியற்ற தன்மை உள்ளவர்கள்' எனவும் வகை பிரித்திருந்தனர். சிகிச்சையும் அவர்களுக்கு ஒரே விதமானதுதான். காரில் நான்கு டயர்கள். அதில் ஏதாவது ஒன்று பஞ்சராகி இருக்கும். பஞ்சரை ஒட்டாமல் நான்கு டயர்களுக்கும் சும்மா காற்றடித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரிதான் செய்தார்கள். அதனால் பலனும் இல்லாமல் போனது. இப்போது இந்த இரண்டு வார்த்தைகளும் செல்லாதவை ஆகிவிட்டன.

உலகம் முழுக்க இனம், நிறம், நாடு, மொழி என பலவிதங்களில் மனித இனம் வித்தியாசப்பட்டு இருந் தாலும் அவர்கள் எல்லோருக்கும் செக்ஸைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான உணர்வுகளே இருக்கும். இதில் ஒருவருக்கு பிரச்னை என்றால் ஒட்டுமொத்தமாகவே அவருக்கு எல்லாம் முடியாமல் இருக்க முடியாது. சிலருக்கு செக்ஸ் ஆசையில் தான் பிரச்னை இருக்கும். ஆசை அதிகமாக இருக் கும் அல்லது குறைவாக இருக்கும். சிலருக்கு உணர்ச்சிவசப்பட்ட தன்மையை அப்படியே நிலைநிறுத்தி பரவசநிலைக்கு போக முடியாமல் இருக்கும். சிலருக்கு பரவச நிலையில் பிரச்னை இருக்கும். துரித ஸ்கலிதம் ஆகிவிடும். அவரை விசாரித்து இந்த நான்கில் எந்த கட்டத்தில் அவருக்கு பிரச்னை என்று கேட்டு, அதற்கு தகுந்த சிகிச்சை கொடுத்தால் போதும்... பிரச்னை தீர்ந்துவிடும் என்பது இந்த ஜோடி சொன்ன விஷயம்.

ஹெலன் சிங்கர் கெப்ளான் என்ற உளவியல் நிபுணர், ‘‘எல்லாம் சரி... ஆசையை விட்டுட்டீங்களே! மனதில் ஆசை இல்லாமல் இரண்டு பேருக்கு மத்தியில் உறவு நடந்தால் அதில் பரவச நிலை வராது. அந்த ஆசையை மாஸ்டர்ஸ் முழுமையாக தன் ஆராய்ச்சியில் புறக்கணித்து விட்டார்’’ என்று வேகப்பட்டார்.

ஆனால், இந்த வகை சிகிச்சையில் செக்ஸ் தொடர்பான பிரச்னைகளில் 99 சதவிகிதத்துக்கு தீர்வு இருக்கிறது என்ற மாஸ்டர்ஸும், வர்ஜினியா ஜான்சனும் இதற்காக ஒரு மையத்தையும் தொடங்கினர். அங்கு அவர் தந்த ஒரு அதிரடி சிகிச்சை இன்னும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

அது...தாயால் வளர்க்க முடியாத குழந்தையை செவிலித் தாய் வளர்ப்பது மாதிரி, செக்ஸ் அனுபவிப்பதில் பிரச்னை உள்ள ஆண்களுக்கு செவிலித் துணையாக பெண் ஒருவரை அனுப்பி படுக்கையில் செக்ஸை கற்றுத்தரும் சிகிச்சை.

இதில்தான் வாழ்க்கையில் பெரும் எதிர்ப்பை சந்தித்தார் மாஸ்டர்ஸ்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:47 am

வரலாற்றில் முதல்முறையாக பரிசோதனைக் கூடத்தில் செக்ஸை நிகழ்த்த வைத்து, அதில் ஆராய்ச்சிகள் செய்த கையோடு சிகிச்சையிலும் இறங்கினார் மாஸ்டர்ஸ். ஆராய்ச்சி நடந்த அதே செயின்ட் லூயிஸ் நகரில் கடந்த 70-ம் ஆண்டு அவரது மருத்துவ மனை துவங்கியது. அங்கு செக்ஸ் குறைபாடுகளுக்கு அவர் தந்த இரண்டு வார சிகிச்சை, பயங்கர பாப்புலர் ஆனது.

‘‘ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ படுக்கையில் செக்ஸ் உணர்வு இயல்பாகவே கிளர்ந்தெழும். ஆனால், ஏதோ ஒரு குறுக்கீடு ஏற்படும் போதுதான், அதில் குறைபாடு ஏற்படுகிறது. அதற்கு சமூகம் காரண மாக இருக்கலாம். மதம் காரணமாக இருக்கலாம். அனுபவங் கள் காரணமாக இருக்கலாம். ஏதாவது மூட நம்பிக் கைகள்கூட காரணமாக இருக்கலாம். அதை சரிசெய்யத் தான் சிகிச்சை. எப்படி செய்வது என எதையும் டாக்டர் கற்றுத்தர முடியாது. அந்த தடைகளை அகற்றி அவர்களை இயல்பாக்கி விட்டால் போதும். அவர்களே இயற்கையாக நடந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்’’ என்று வெளிப்படையாகவே தனது சிகிச்சை அணுகுமுறை பற்றி சொன்னார் மாஸ்டர்ஸ்.

பெரும்பாலானவர்களுக்கு பிரச்னை ஏதாவது தப்பான முன்அனுபவங்களாகவே இருக்கும். திருமணத்துக்கு முன் செக்ஸ் தொழிலாளிகளிடம் போயிருப்பார்கள். பதற்றமும், பயமும், முதல் தடவை என்கிற உணர்வும் ஏராளமான வியர்வையைக் கிளப்பிவிட்டு எல்லாவற்றையும் தப்பாக்கி இருக்கும். அந்த தருணத்தில், ‘நான் இதற்கெல்லாம் லாயக்கில்லை’ என்கிற மாதிரியான உணர்வு மனதில் ஆழமாகப் பதிந்து விட்டி ருக்கும். அதை அகற்றுவது கஷ்டமான விஷயம். திருமணத்துக்கு பிறகு மனைவியைத் தொடும்போதெல்லாம் அந்த உணர்வு மேலெழும்பி வர, செக்ஸ் உணர்வு இல்லாமல் போய் விடும். இதேபோல சிறுவயதில் பார்த்த செக்ஸ் காட்சிகள், நேர்ந்த துயரமான

அனுபவங்கள், அதனால் எழுந்த பாதிப்புகள்... இப்படி பல விஷயங்கள் ஆண்களையும், பெண்களையும் பாதித்து அவர்களை நோயாளிகள் ஆக்குகின்றன. மாஸ்டர்ஸ் வெளிப்படையான சிகிச்சை முறையைத் துவக்கியதற்கு முன்பெல்லாம் உளவியல் நிபுணர்கள் தான் இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவார்கள். பிரச்னை உள்ள ஆசாமி ரகசியமாக தனியாக வருவார். அவரின் மனைவிக்குக்கூட கணவனின் பிரச்னை தெரியாது, ஆண்டுக்கணக்கில் நீளும் சிகிச்சையில் பலன் பெரும்பாலும் இருக்காது. மாஸ்டர்ஸ் புகுத்திய சிகிச்சைமுறை இதிலிருந்து வித்தியாசமானது. பிரச்னை உள்ளவர் தனியாக வரக் கூடாது. தன் மனைவி அல்லது கணவனோடு வர வேண்டும். இரண்டு வாரங்களும் தினமும் மருத்துவமனைக்கு வர வேண்டும். செக்ஸ் சிகிச்சை தருவதில் பயிற்சி பெற்ற ஒர் ஆணும், பெண்ணும் ஜோடியாக அவர்கள் முன் அமர்ந்து பேசுவார்கள். இயல்பாக இரண்டு ஜோடிகளும் பேசிக் கொண்டிருக்கும்போது பிரச்னை எங்கே என்பது புரிந்துவிடும். கொஞ்சம் உளவியல் சிகிச்சை, கொஞ்சம் மருத்துவ சிகிச்சை என இரண்டையும் கலந்து கொடுத்தார் மாஸ்டர்ஸ். கிட்டத்தட்ட எண்பது சதவிகித ஜோடிகளுக்கு இதிலேயே பிரச்னை தீர்ந்து, அவர்கள் வாழ்க்கையில் முதல்முறையாக படுக்கை அறை சந்தோஷத்தை அனுபவித்தனர். பலருக்கு குழந்தையும் பிறந்தது.

இன்று உலகெங்கிலும் பல நாடுகளிலும் செக்ஸ் பிரச்னைகளுக்கு தரப்படும் சிகிச்சைக்கு அடிப்படை இதுதான்! ஆனால், அவரைப் போல இரண்டு வாரம் வந்து தங்கச் சொல்லி யாரும் வற்புறுத்துவதில்லை. அந்த காலத்திலேயே இந்த சிகிச்சைக்கு அவர்கள் 5000 டாலர் கட்டணம் வசூலித்தார்கள்.

‘இரண்டு வாரம் வேலைக்குப் போகாமல் பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு வந்து நான் சொல்லும் இடத் தில் தங்கு... இவ்வளவு ஃபீஸ் கொடு’ என்றெல்லாம் நம்ம ஊரில் சொல்ல முடியாது. இரண்டு வாரம் சம்பாதிக்கா மல் இருந்தால் அப்புறம் அவர்கள் டாக்டருக்கு எப்படி ஃபீஸ் கொடுப்பார்கள்? அது தவிர ஒரு செயற்கையான சூழ்நிலையில் இரண்டு வாரம் தங்கும்போது அவர்களுக்குள் எப்படியாவது நெருக்கத்தை ஏற்படுத்தி உறவை சாத்தியமாக்கி விடும். ஆனால், திரும்பவும் வீட்டுக்கு போனதும் பழையபடி பிரச்னைதான்.

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு இப்போதைய சிகிச்சை முறை வேறு மாதிரியான வடிவம் எடுத்திருக்கிறது. டாக்டரிடம் ஐந்து முதல் பத்து தடவை சிகிச்சைக்கு வந்தால் போதும்... அங்கு தரப்படும் சிகிச்சையை வைத்து வீட்டில் போய் அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதில் சிகிச்சை என்பது மருந்து மற்றும் மனரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் கவுன்சிலிங் ஆகிய இரண்டும் இணைந்தது. மனதில் ஆசை இருந்து உடலும் ஒத்துழைத் தால் மட்டுமே ஒருவரால் செக்ஸில் ஈடுபட முடியும். இரண்டும் இப்படி இணைந்து உறவில் ஈடுபடும் சந்தர்ப் பத்தில் மனதில் தோன்றும் பயமோ, அல்லது வேறு ஏதோ உணர்வுகளோ அவர்களது கவனத்தை திசைதிருப்புகிறது. அதை மாற்றி நூறு சதவிகித ஈடுபாட்டுடன் அவர்களை உறவு கொள்ள வைப்பதுதான் சிகிச்சை. இதில் வெறும் மாத்திரைகள் பலன் தராது. சும்மா அட்வைஸ் கொடுத்தாலும் வேலைக்கு ஆகாது. புதைகுழியில் சிக்கி இருப்பவனுக்கு, ‘பயப்படாதே தம்பி! ஒன்றும் ஆகாது. நீ கவனமாக பார்த்து வந்திருக்கக் கூடாதா?’ என்றெல்லாம் சொல்லப்படும் அட்வைஸ்கள் தேவையில்லை. அவனை அதிலிருந்து மேலே கொண்டுவர வேண்டும். அதுதான் முக்கியம்.
செக்ஸ் சிகிச்சையும் இது மாதிரிதான்! அதை எப்படி செய்வது என்று சொல்லித் தருவது சிகிச்சை இல்லை... அந்த உறவைத் தடுக்கும் பயம் அல்லது தயக்கத்திலிருந்து மீண்டு வரும் வழியைக் கற்றுத் தருவதுதான் சிகிச்சை. உதாரணமாக ஒரு குழந்தை கீழே விழுந்து அடிபட்டு சிராய்ப்பு ஏற்படுகிறது... உடனே அது அழுகிறது. அந்த வலியை மூளை உணர்வதால் அது அழுகைக்கான கட்டளைகளை பிறப்பிக்கிறது... அதனால் அழுகை வருகிறது. அதே குழந்தைக்கு ஒரு சாக்லெட் கொடுத்தால் அதை சுவைத்ததும் அழுகை நிற்கிறது. காரணம், இந்த இனிப்பு, வலியை மறக்கடிக்கிறது.

கவனம் திசைதிரும்புவதுதான் இதற்கு காரணம். ஒவ்வொரு செயலுக்கும் என்று மூளையில் தனித்தனி பகுதிகள் உண்டு. செக்ஸ§க்கும் மூளை, தண்டுவடம் ஆகிய இரண்டு இடங்களிலும் தூண்டல் தேவை. மனதில் உணர்வு எழுந்ததும், இவை தூண்டப்பட்டு செக்ஸ் உறுப்புகளில் அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து அது உறவுக்கு தயாராகிறது. இந்த சமயத்தில் வேறு ஏதோ நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கும்போது மூளையின் தூண்டுதல் தற்காலிகமாக தடைபடுகிறது. இதன் எதிரொலியாக எல்லாமே கெட்டு விடுகிறது. இப்படி கவனம் சிதறாமல் நிலைநிறுத்துவதுதான் சிகிச்சை. இப்போது ஒவ்வொரு குறைபாட்டுக்கும் என பலவகை மருந்துகள் வந்து விட்டதால் எல்லாம் சுலபமாக முடிகிறது.

ஆனால், மாஸ்டர்ஸ் காலத்தில் இவ்வளவு மருந்துகள் கிடையாது. அதனால் ஒரு டாக்டருக்குரிய தொழில் தர்மத்தை மீறி, அவரது கௌரவத்துக்கே களங்கம் நேர்கிற ஒரு விஷயத்தை அவர் முயன்று பார்த்தார்.

தம்பதிகளாக வருகிறவர்களுக்கு இரண்டு வார சிகிச்சை ஓகே! திருமணமாகாத ஒருவரோ, மனைவியை இந்த பிரச்னையால் பிரிந்து தனியாக வாழும் நிலையிலிருக்கும் ஆணோ இந்த சிகிச்சைக்கு வந்தால் என்ன செய்வது? இதற்காகவே ‘செவிலித் துணை’ ((surrogate partner ) என்ற புதிய சிகிச்சையை அவர் ஏற்படுத்தினார்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:50 am

இதற்காக மாஸ்டர்ஸ் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து சில பெண்களையும், ஆண்களையும் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்தார். இந்த தொழிலுக்கு வரும் அவர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது விவாகரத்து பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது அவர் விதித்த நிபந்தனை.

பிரச்னையோடு ஒருவர் வந்தால் அவரிடம் டாக்டர் முதலில் விசாரிப்பார். அவருக்கு செக்ஸை ஆரம்பிப்பதில் பிரச்னையா, ஆரம்பத்தில் கிளர்ந்த உணர்வுகளை அப்படியே நிலை நிறுத்துவதில் பிரச்னையா, அல்லது உச்சகட்ட இன்பம் கிடைக்கவில்லையா, வழக்கமில்லாத வலி ஏதாவது ஏற்படுகிறதா என்று விசாரிப்பார். அதன்பிறகு செவிலித் துணையை அழைத்து அவரை அந்த கிளையன்ட்டுக்கு அறிமுகம் செய்து வைப்பார் டாக்டர். அவருக்கு என்ன பிரச்னை... செவிலித் துணை என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக சொல்லி விடுவார்.

அதன்பிறகு டாக்டர் இல்லாமல் அவர்கள் சந்தித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேர பயிற்சி. முதலில் படுக்கை அறைக்கு ரிலாக்ஸாக போக உதவும் சில எளிமையான உடற்பயிற்சிகள் சொல்லித் தரப்படும். பிறகு தன் அந்தரங்க பாகங்கள் எப்படி இருக்கிறது என்பதை தன் உடலில் காட்டி விளக்கு வார் செவிலித் துணை. அதன்பிறகு சும்மா தொட்டுக் கொள்வதிலேயே எப்படி உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவது என்று பயிற்சி. இந்த பயிற்சிக்குள் இருவருமே அந்தரங்க மாக பேசிக் கொள்ளுமளவுக்கு நெருக்கமாகி விடுவார்கள். நெருக்கம்தானே உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதில் பிரதான பங்கு வகிக்கிறது!

இந்த எல்லாம் முடிந்த பிறகு கடைசியாகத்தான் ஆடைகளற்ற உறவு. எல்லாமே ஏழெட்டு தடவை நிகழும் சந்திப்புகளுக்குள் நடந்து முடிந்து அவரது பிரச்னை தீர்ந்துவிடும். மிகச் சிலருக்கு மட்டுமே இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும். (‘என்னிடம் வந்த ஒருவருக்கு 52 தடவை பயிற்சி கொடுத்த பிறகுதான் பிரச்னை தீர்ந்தது’ என்று லிண்டா போயல்ட்ஸ் என்ற செவிலித் துணை தன் அனுபவக் கதைகளை எழுதும்போது குறிப்பிட்டு இருந்தார். அநேகமாக இவர்தான் அதிக நேரம் எடுத்துக் கொண்ட நபராக இருக்கும்!).

கொஞ்சம் மருத்துவ அறிவு, உளவியல் மற்றும் சமூகவியல் படிப்பு, சுமாரான அழகு, செக்ஸில் ஈடுபாடு, அன்பாக பழகும் குணம் இவை இருக்கும் யாரையும் இப்படி செவிலித் துணையாக பயன்படுத்தி பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று நம்பினார் மாஸ்டர்ஸ்.

ஆனால், அவருக்கும் சறுக்கியது. அவரிடம் பயிற்சி பெற்று செவிலித் துணையாக பணிபுரிந்த ஒரு பெண் தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டே இந்த வேலைக்கு வந்ததாக சொன்னார். ஆனால், அது உண்மையில்லை. இருவருக்குள் ஏதோ சண்டை. கோபித்துக் கொண்டு பிரிந்த அந்த பெண் அப்படியே இந்த வேலைக்கு வந்துவிட்டார்.
திரும்பவும் மனைவியைத் தேடிக் கொண்டு வந்த அவருடைய கணவர், தன் மனைவி செய்யும் வித்தியாச மான வேலையைப் பற்றிக் கேள்விப்பட்டு ஷாக் ஆகி கோர்ட்டில் வழக்கு போட்டு விட்டார். ‘என் மனைவிக்கு மாஸ்டர்ஸ் தப்பான அட்வைஸ் கொடுத்து, அவளைக் கட்டாயப்படுத்தி பல ஆண்களோடு பழகச் சொல்கிறார். படுக்கைக்கு அனுப்புகிறார்’ என அவர் வழக்கு போட, அமெரிக்காவே அதிர்ந்தது. ‘இப்படிக் கூடவா சிகிச்சை தருவார்கள்?’ என பலர் முகத்தை சுளித்தனர்.

மாஸ்டர்ஸின் வழக்கறிஞர்கள் அட்வைஸ் செய்தபோதுதான் இதன் விபரீதம் அவருக்கு புரிந்தது. ‘‘இது சிகிச்சை என்று நீங்கள் சொல்லலாம் ஆனால், சட்டம் இதை அனுமதிக்கவில்லை. உங்கள் பார்வையில் இது சிகிச்சை... சட்டத்தின் பார்வையில் இது கிட்டத்தட்ட விபசாரம். வழக்கு நடந்தால் நமக்கு தோல்வி கிடைக்கும். கோர்ட்டுக்கு வெளியே சமாதானம் பேசி செட்டில் செய்து கொள்ளுங்கள்’’ என்றனர் அவர்கள். அந்த தம்பதிக்கு பெரும் தொகை கொடுத்து வழக்கை வாபஸ் பெறவைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார் மாஸ்டர்ஸ்.

‘இந்த சிகிச்சையில் கொள்கைரீதியாக எனக்கு உடன்பாடு இல்லை’ என்று சொல்லி அதோடு இதை நிறுத்திக் கொண்டார் அவர்.

எந்த செக்ஸ் நிபுணரும் மாஸ்டர்ஸின் இந்த பரிசோதனை முயற்சியை ஏற்கவில்லை. ‘இதெல்லாம் அபத்தம். சமூக நியதிக்கு எதிரானது’ என கண்டித்து இந்தவகை சிகிச்சையை நிராகரித்து விட்டார்கள். சட்டப்படியும் இதற்கு தடை போடப்பட்டு விட்டது.

ஆபாச அலையை வளர்த்தவர்... சமூகம் கெட்டுப் போவதற்கு காரணமானவர்... ஒழுக்கக்கேட்டைத் தூண்டியவர்... இப்படி பல பெயர்களைச் சூட்டி மாஸ்டர்ஸை அமெரிக்காவில் ஒரு குழுவினர் திட்டினாலும் கலிலியோ, டார்வின் போன்ற அறிஞர்களுக்கு நிகராக அவரை மதிக்கும் பலர் அங்கே உண்டு. ஆனால், கின்ஸியோடு ஒப்பிடும்போது - மாஸ்டர்ஸ் சந்தித்த எதிர்ப்புகள் ரொம்ப குறைவு. மாஸ்டர்ஸ் ஆராய்ச்சியை நடத்துவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க சமூகத்தின் ஒழுக்கக்கேட்டை அம்பலப்படுத்திய கின்ஸி, தினம் தினம் நரக வேதனையை அனுபவித்தார்...



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:51 am

77 வயதில் திருமணம்!

மாஸ்டர்ஸ் ஏற்கெனவே திருமணமானவர். வர்ஜீனியா ஜான்சனும் ஏற்கெனவே திருமண பந்தத்தில் இருந்தவர். ஆனால், மாஸ்டர்ஸ§ம் வர்ஜீனியா ஜான்சனும் பல வருடங்களாக இணைந்து செக்ஸ் பற்றி செய்த ஆராய்ச்சி, அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தங்கள் முதல் துணைகளை இருவருமே விவாகரத்து செய்துவிட்டு, 1969-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அப்போது மாஸ்டர்ஸ§க்கு 53 வயது. அதன் பிறகு 23 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள், கடந்த 92-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்த னர். அதோடு அவர்களது ஆராய்ச்சி, சிகிச்சை எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது. ‘‘செக்ஸ் ஆராய்ச்சி செய்து பல குடும்பங்களில் படுக்கை அறையில் சந்தோஷம் நிலவ காரணமான ஜோடி இது. இவர் களாலேயே சேர்ந்து வாழ முடியவில்லை என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்? திருமண அமைப்பின் மீதே சந்தேகம் வரும் அல்லவா?’’ என அப்போது பல செக்ஸ் நிபுணர்கள் வெளிப்படையாகவே கவலைப்பட்டார்கள். ஆனால், அந்த 77 வயதில் மூன்றாவதாக ஜெரால்டின் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்ட மாஸ்டர்ஸ் 85 வயதில் இறக்கும் வரை அந்தப் பெண்ணோடு வாழ்ந்தார்.

நம்ப முடியாத உண்மை!

‘கர்ப்பம்’ - இந்த வார்த்தையை உச்சரிக்கவும், ஒரு கர்ப்பிணியை டி.வி-யில் காட்டவும் அமெரிக்காவில் தடை இருந்தது. லூசில்லே பால் அமெரிக்காவின் புகழ்பெற்ற டி.வி. நடிகை. கடந்த 53-ம் ஆண்டு இவர் தயாரித்து நடித்த ‘ஐ லவ் லூசி’ என்ற தொடர் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தபோது இவர் கர்ப்பமானார். தொடரை நிறுத்த விரும்பாமல், இவரது கேரக்டரே கர்ப்பமாவது மாதிரி கதையை மாற்றினார் டைரக்டர். ஆனால், ‘கர்ப்பம்’ என்ற வசனமும், கர்ப்பிணியின் திரைத் தோற்றமும் ஆபாசமானது என்று தடை செய்தார்கள் டி.வி. நிலையத்தினர். பாதிரியார்கள், யூத மதகுருக்கள் பலரை சந்தித்து, ‘கர்ப்பம் என்பது ஆபாசமான விஷயம் இல்லை. இது மத நம்பிக்கைகளுக்கு எதிரானதும் இல்லை. இதை தாராளமாக டி.வி-யில் காட்டலாம்’ என லூசில்லே பால் விளக்கம் கொடுத்தார். இதை தொடர்ந்து லூசில்லேவுக்கு ஆதரவாக கருத்து சொன்னார்கள் - பாதிரியார்களும் மத குருமார்களும். இதன்பின் லூசில்லே கர்ப்பிணியாக தோன்றுவதற்கு அனுமதித்த டி.வி. நிலையம், ‘கர்ப்பம்’ என்ற வசனத்தை மட்டும் சென்ஸார் செய்துவிட்டது. அதற்கு பதிலாக, ‘நான் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்’ என்ற வசனத்தை பயன்படுத்தச் சொன்னது. அதை திக்கித் திக்கி பேசி காமெடி ஆக்கினார் அவர். உலகிலேயே டி.வி-யில் தோன்றிய முதல் கர்ப்பிணி அவர்தான்!

கிட்டத்தட்ட பதினான்காயிரம் ஆண்களிடம் இன்டர்வியூ நடத்தி, அவர்களது பழக்கவழக்கங்களைத் தொகுத்து, ஆண்களின் செக்ஸ் பழக்கம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு புத்தகத்தை எழுதினார், டாக்டர் ஆல்ஃபிரட் சார்லஸ் கின்ஸி. ‘Sexual behaviour in Human Male’ என்ற அந்தப் புத்தகம் 1948-ல் வெளிவந்தது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:54 am

கின்ஸி அதில் சொல்லியிருந்த எல்லாமே வெடிகுண்டு சமாசாரங்கள். புத்தகம் வெளியான அடுத்த நொடி, அமெரிக்காவே பற்றி எரிந்தது.

‘நான் பேசிய அத்தனை ஆண்களில் 95 சதவிகிதம் பேர் வாழ்க்கையில் ஒரு தடவையாவது சுயஇன்பம் அனுபவித்ததாக ஒப்புக்கொண்டார்கள். மீதி ஐந்து சதவிகிதம் பேர் அவசரமாக, ‘சேச்சே! எனக்கு அப்படி எந்த பழக்கமும் இல்லை’ என்று மறுத்தார்கள். அநேகமாக, அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது’.
‘அதேபோலவே ஆண்களில் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கை எப்படிப்பட்ட உணர்வுகளைத் தரும் என ஒரு தடவையாவது முயற்சித்துப் பார்த்ததாகச் சொன்னார்கள். இதுதவிர, அமெரிக்க ஆண்களில் பத்து சதவிகிதம் பேர் பெரியவர்கள் ஆனதும், ஓரினச்சேர்க்கைப் பிரியர்களாக இருக்கிறார்கள்.’

‘ஆண்களில் எண்பத்தைந்து சதவிகிதம் பேர் கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ் உறவை அனுபவித்து இருக்கிறார்கள். தங்கள் மனைவி கற்போடு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் இவர்கள் அப்படி இல்லை.’

‘முப்பது முதல் நாற்பத்தைந்து சதவிகித ஆண்கள் திருமணத்துக்குப் பிறகு மனைவியைத் தவிர வேறு பெண்களோடு உறவு வைத்திருக்கிறார்கள்.’
& யாருக்கும் தெரியக் கூடாது என்று மனசுக்குள் பொத்திப் பொத்தி வைத்திருந்த அழுக்கான ரகசியங்கள் வெளியே தெரிந்தால் அளவிட முடியாத கோபமும், அதிர்ச்சியும் பொங்கி வழியும்! அப்படித்தான் ரியாக்ட் செய்தது அமெரிக்க சமுதாயம்.

இப்போதுபோல அமெரிக்கர்கள் அப்போது எதையும் ‘டேக் இட் ஈஸி’ என அலட்சியப்படுத்தும் மனோபாவத்தில் இல்லை. இரண்டாம் உலகப் போர் அப்போதுதான் முடிந்திருந்தது. போரில் லட்சக்கணக் கானவர்கள் இறந்து போயிருக்க, குடும்பப் பிணைப்பு, அன்பு, பாசம் என எல்லா உணர்வுகளும் உச்சத்தில் இருந்த நேரம் அது!
அதோடு காலம்காலமாக செக்ஸ் விஷயத்தில் மதம் புகுத்திய கட்டுப்பாடுகள் தளராமல் அப்படியே இருந்துவந்தது. செக்ஸைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதே பாவ காரியமாக கருதப்பட்ட நேரம் அது! ‘கணவனுக்கும், மனைவிக்கும் இடையே நிகழும் தாம்பத்ய உறவைத் தவிர, யாரும் எதையும் தப்பாக செய்வதில்லை... சமுதாயம் நேர்மையான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது’ என பொதுவான நம்பிக்கை இருந்த காலம்!

அந்த சமயத்தில் போய் அவர்களின் அசிங்கமான மறுபக்கத்தை அம்பலப்படுத்தி, ‘உங்கள் புருஷன் கல்யாணத்துக்கு முன்பும் சரி, பின்னாலும் சரி, உங்களிடம் உண்மையாக இல்லை. அது மட்டுமில்லை... அவர் சுய இன்பம் அனுபவித்தார். ஓரினச் சேர்க்கை அனுபவத்துக்கும் அவர் ஆசைப்பட்டார்’ என்று சொன்னால் எப்படி இருக்கும்?
அமெரிக்காவே ஆத்திரத்தில் பொங்கியது. ‘கின்ஸி செய்திருக்கும் வேலை அமெரிக்காவில் குடும்ப அமைப்பையே சிதைத்துவிடும். அவர் ஒழுக்கக் கேட்டை பரப்புகிறார். காலம்காலமாக இருந்துவரும் ஒழுக்க மதிப்பீடுகளை ஒரே நொடியில் தகர்த்துத் தரை மட்டமாக்கி விட்டார். இளைய சமுதாயத்தைத் தவறான பாதையில் திருப்பி விடுகிறார். கலாசார சீரழிவை தொடங்கி வைக்கிறார்’ என்றெல்லாம் அவரைத் திட்டினார்கள். அவர் இறந்து ஐம்பது வருஷங்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும்கூட அவரைத் திட்டுபவர்கள் உண்டு. குழந்தைகளைக்கூட சிதைக்கும் செக்ஸ் வக்கிரம், எய்ட்ஸ் என்ற எமன்... இப்படி அமெரிக்காவை இப்போது அச்சுறுத்தும் பல விஷயங்களுக்கும் அவரைக் குற்றம்சாட்டும் மனோபாவம் குறிப்பிட்ட சதவிகித மக்களிடம் இருக்கிறது.

கின்ஸி, அடிப்படையில் ஒரு விலங்கியல் ஆராய்ச்சி யாளர். அவர் செக்ஸைப் பற்றி ஆராய வந்ததே தனிக் கதை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே அவரை ஈர்த்த விஷயம் அது! பள்ளியில் அவர் சாரணர் படையில் சேர்ந்தார். அதில் சேரும் விடலைப் பள்ளிப் பையன்களுக்கு ஒரு ஒழுக்கக் கையேடு கொடுப்பார்கள். அதில் ஒரு பாரா அவரைக் குழப்பியது.

மீசை அரும்பும் வயதில் பையன்கள் தப்பான வழிகளில் போகக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும் கையேடு அது! அதில், ‘பையன்கள் விடலைப் பருவத்தைத் தொடும் சமயத்தில் கடவுள் அவர்களுக்கு ஓர் அற்புதமான திரவத்தைப் பரிசாகக் கொடுப்பார். அது அவர்கள் உடம்பில் சுரக்க ஆரம்பிக்கும். அவர்கள் வேகமாகவும், உயரமாகவும் வளர்ந்து திடகாத்திரமான வாலிபன் ஆவதற்கு, இந்தத் திரவம்தான் உதவுகிறது. அதை எந்த வழியிலும் வீணாக்காமல் பத்திரமாக சேமித்து வைத்தால், மட்டுமே அவர்கள் வளரமுடியும். அதை வீணாக்குபவர்களை கடவுள் தண்டித்து விடுவார்’ என்றிருந்தது.

வளர்ந்து கல்லூரிக்குப் போனபிறகு அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார் கின்ஸி. ஆனால், விலங்குகளின் செக்ஸ் உறுப்புகள், பழக்கங்கள் பற்றிய புத்தகங்கள்தான் அவருக்குக் கிடைத்தன. மனிதர்கள் பற்றிய புத்தகங்களைத் தேடிய அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

ப்ளூமிங்டன் நகரில் இருக்கும் இண்டியானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தபிறகு, அவர் தனது பாடத்துக்கு வெளியிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார். ‘திருமணம் மற்றும் குடும்ப உறவு’ என்ற தலைப்பில் செக்ஸ் உணர்வுகள் பற்றி அவர் கொடுக்கும் உரை, இண்டியானா பல்கலைக்கழகத்தில் ரொம்ப பாப்புலர். மாணவர்கள் மட்டுமின்றி, வெளிநபர்களும்கூட வந்து கேட்குமளவு அவரது உரை சுவாரஸ்யமானது. தனது உரையைக் கேட்க வருகிறவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி அவர்களது செக்ஸ் அனுபவங்களை விசாரிப் பார் கின்ஸி. அப்போதுதான் அவருக்கு அந்த உண்மை புரிந்தது. முறைகேடான செக்ஸ் உறவுகள் பற்றி மக்கள் நினைப்பதற்கும், நிஜமாக நடப் பதற்கும் இடையே ஏகப்பட்ட இடைவெளி இருந்தது.

‘ராக்ஃபெல்லர் அறக் கட்டளை’ அப்போது செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருந்தது. தனது ஆராய்ச்சி குறித்து அந்த அறக் கட்டளைக்கு எழுதி நிதியுதவி கேட்டார் கின்ஸி. உடனே அது கிடைத்தது. பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹெர்மன் வெல்ஸ் அனுமதி கொடுக்க, ஆராய்ச்சியை ஆரம்பித்து விட்டார் கின்ஸி. 1938&ம் ஆண்டு தொடங்கிய அந்த ஆராய்ச்சி அவர் இறக்கும் வரை தொடர்ந்தது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக