புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
29 Posts - 34%
prajai
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
3 Posts - 4%
Jenila
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
1 Post - 1%
jairam
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
7 Posts - 5%
prajai
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
6 Posts - 4%
Jenila
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
4 Posts - 3%
Rutu
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
2 Posts - 1%
viyasan
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_m10தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 12:43 pm

தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை?

கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன.
முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது. இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது.
அணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும். அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின் அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாக காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு உயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களது இப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை.
இடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது, பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல் செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள்.
புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே.
முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.
நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர்.
கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (http://player.vimeo.com/video/18283950?autoplay=1)காணக் கிடைக்கிறது.
இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.
முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.
அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம் போலிருக்கிறது.
மத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன? மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா? தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை?..



பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 12:45 pm

இதில் உள்ள லிங்க்-ஐ யாராவது நமது ஈகரையில் காணொளியாக பதிவிட்டால் பலருக்கு உதவியாக இருக்கும்... நான் முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 12:47 pm

கனிமொழி விஷயம் தான் நம்ம ஊர்ல ஓடிக்கிட்டு இருக்கு ..
பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு




தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 1:02 pm






தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 29, 2011 1:39 pm

தமிழகத்தில் evan தமிழக makkalai பற்றி நினைக்கிறான்.எண்ணிக்கு கட்சி வேறுபாடுகளை ellaam களைந்துவிட்டு intha விஷயத்தில் எல்லாரும் kai கோர்த்து ஒண்ணு சேர்க்கிறார்களோ appathaan விடிவு காலம் பிறக்கும்.
இல்லை என்றால் kaviri தண்ணீருக்கும்,பாலாறு தண்ணீருக்கும் kai ஏந்திய nilai முல்லை பெரியார் விஷயத்திலும் varum



தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Uதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Dதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Aதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Yதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Aதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Sதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Uதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Dதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Hதினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 1:50 pm

மிகச்சிறந்த கட்டுரை .

தமிழிணர்வு உள்ள அனைவரும் இந்த காணொளி அடங்கிய சுட்டியை தங்களின் நண்பர்கள் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அனைவருக்கும் தெரிய வாய்ப்பாக அமையும்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 2:05 pm

ராஜா wrote:மிகச்சிறந்த கட்டுரை .

தமிழிணர்வு உள்ள அனைவரும் இந்த காணொளி அடங்கிய சுட்டியை தங்களின் நண்பர்கள் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அனைவருக்கும் தெரிய வாய்ப்பாக அமையும்

கண்டிப்பாக செய்கிறோம்.. சிரி




தினமணி தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை? 29-11-2011 Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 2:11 pm

ராஜா wrote:மிகச்சிறந்த கட்டுரை .

தமிழிணர்வு உள்ள அனைவரும் இந்த காணொளி அடங்கிய சுட்டியை தங்களின் நண்பர்கள் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அனைவருக்கும் தெரிய வாய்ப்பாக அமையும்
ஓகே!!!! ஓகே!!!!



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக