புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10 
62 Posts - 57%
heezulia
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10 
104 Posts - 59%
heezulia
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_m10சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோதிடம் 100% உண்மை. சவால்!


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jan 05, 2012 3:17 pm

First topic message reminder :


சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர். ஆனால் இன்றுவரை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்பது தான் உண்மை! அவர்கள் சோதிடர்களைக் குறை கூறுகிறார்களா? அல்லது சோதிடத்தையே குறை கூறுகிறார்களா என்பது அவர்களின் விமர்சன முழக்கத்தில் இருந்து தெளிவாக எனக்குப் புரியவில்லை!!

சிறுவயதில் எனக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது, நான் மிகவும் தொந்தரவாக உணர்ந்தேன். அதனால் எனது பெற்றோர்களின் முயற்சியால் நான் மருத்துவ மனைக்கு சென்றேன். அவர்கள் எண்ணன்னோவோ சோதித்துவிட்டு, ஒரு பக்க அளவில் புரியாத கதை வசனத்தை எழுதிக் கொடுத்தார்கள். அதைக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஒரு மருந்துக் கடையில் கொடுத்தேன். (எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று என்னவென்றால். எழுதிக் கொடுக்கும் மருந்துகளை ஏன் அந்த மருத்துவரே கொடுக்கக் கூடாது என்பது தான்? யாராவது மருத்துவம் படித்தவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்!...) பிறகு அவரும் அதை திருப்பித் திருப்பி பார்த்து விட்டு மருந்து மாத்திரைகளைக் கொடுத்தார்... நானும் அதையெல்லாம் சாப்பிட்டுப் பார்த்தேன் ஒருவாரத்திற்குப் பிறகு ஜலதோஷம் சரியாகிவிட்டது.

மீண்டும் ஒருநாள் அதே ஜலதோஷம்! நான் மருத்துவமனைக்கு போகவில்லை. ஆனால் அதே ஒருவாரத்தில் அது சரியாகி விட்டது! என்ன ஆச்சரியம்?.... எனக்கு அப்போது தான் மருத்துவத்தின் மகத்துவம் புரிந்தது. அதாவது நாம் ஒரு நோய்க்காக மருத்துவ மனைக்கு சென்று மருந்து சாப்பிட்டு விட்டால், அந்த நோய் எப்போது வந்தாலும் அந்த மருந்து உள்ளே இருந்து கொண்டு அதே கால கட்டத்திற்குள் வந்த நோயை அடித்து விரட்டிவிடும்" என்று. அதனால் நான் இப்போதெல்லாம் மருத்துவமனைக்கே செல்வதில்லை. ஆனால் அதன் பிறகு காய்ச்சல், தலைவலி, பல் வலி, என்று எத்தனையோ நோய்கள் வந்திருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலங்களில் அந்த நோய்களெல்லாம் சரியாகிவிட்டன...

மனித உடல் கூறு என்பது ஒரு அற்புதமான ரகசியம்! அதில் இல்லாத மருந்துகளும் கிடையாது! வராத நோய்களும் கிடையாது. எந்த நோய்க்கான மருந்து நமது உடம்பிற்குள் இருக்கிறதோ, அந்த நோய் மட்டும் தான் நமக்கு வருகிறதாம். இதை நான் சொல்லவில்லை. மருத்துவம் தான் சொல்கிறது!! (யாரும் ஆதாரம் கேட்டுவிடாதீர்கள் இது கிண்டல் ஜாலி ) சாதாரண நோய்களெல்லாம் சிறிது நேரம் படுத்துத் தூங்கினால் சரியாகிவிடுமாம். மிகப்பெரிய நோய்களுக்குத் தான் மருந்தே கிடையாதே பிறகு ஏன் நாம் கவலைப் படவேண்டும். "தூங்கினால்" அல்லது "தாங்கினால்" எல்லாம் சரியாகிவிடும்!!

சரி இப்போது தலைப்பிற்கு செல்வோம்...

"சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர்.... ஆனாலும் கடவுளைப் போல இந்த சோதிடத்தையும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் ஒப்பிடுவதெல்லாம் அறிவியல்! அறிவியல்! அறிவியல்!! (ஒருவேளை அவர்களெல்லாம் அறிவியல் மேதைகளாக இருப்பார்களோ என்னவோ...)

அறிவியல் என்பது ஒன்றும் வானத்தில் இருந்து திடீரென்று குதித்ததில்லை. மனிதன் சொல்லிக் கொடுத்ததைத் தான் அது திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!!


அப்படியென்றால் கிளி ஜோசியம் போல, இது கிளி அறிவியலாக இருக்குமோ...

சரி, நான் இப்போது மருத்துவமனைக்கு செல்கிறேன்....

என்னை ஒரு நாள் முழுதும் பரிசோதித்துக் கொள்ளட்டும்.....
(அறிவியல் மிகச்சிறந்த சக்தி வாய்ந்தது அல்லவா? அதனால் இந்த ஒருநாள் போதும் என்று நினைக்கிறேன்)
எந்த (அறிவியல்)மருத்துவராவது எனக்கு என்ன நோய் இருக்கிறது? அது எதனால் வந்தது? அது எப்போது தீரும்? அதன் பிறகு எனக்கு அந்த நோய் வராமல் செய்ய முடியுமா? போன்ற விவரங்களை எழுத்து மூலம் அளிப்பார்களா?

குற்றவாளி என்று தெரிந்தே அவருக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களைப் பார்த்து யாராவது இது போன்ற ஒரு குற்றச்சாட்டை வைக்க முடியுமா?

2000 ரூபாய் கொடுத்தால் பெயிலில் விடும் சட்டம் ஏமாற்று வேலை என்பதை இவர்களால் பகிரங்கமாக சொல்ல முடியுமா?

அப்படி சொன்னால் மறுநாளே போராட்டம், வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்று புரட்சி வெடிக்கும்.

வக்கீல்களைப் அழைத்து வந்து ஏன் இப்படி பொய்யாக வாதிடுகிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?

அரசியல் வாதிகளை அழைத்து வந்து ஏன் மக்களுக்கு சேவை செய்ய லஞ்சம் கேட்கிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?

சோதிடர்களை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்? அவர்களால் எதிர்த்துப் போராட்டம் செய்ய முடியாது... அவர்கள் எல்லாம் ஏழைகள் என்பதற்காகவா? சோதிடம் பொய்யேன்று எதைவைத்து முடிவு செய்தீர்கள்? சோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்?

சோதிடர்கள் பணம் வாங்குகிறார்கள் என்பது தான் உங்களின் தவிப்புக்குக் காரணமா? எங்கே எந்தத் தொலைக்காட்சியாவது பணம் வாங்காமல் நிகழ்ச்சி நடத்துவார்களா? எந்த மருத்துவராவது பணம் வாங்காமல் மருத்துவம் பார்ப்பார்களா? எந்த வழக்கறிஞராவது பணம் வாங்காமல் வழக்கு நடத்துவார்களா?

தான் படித்தக் கல்வியை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் சம்பளம் கேட்கும் போது... எனக்கு ஒட்டத் தெறிந்த வாகனத்தை லைசென்ஸ் எடுத்துத் தான் ஒட்டவேண்டும் என்று ஓட்டுனர் உரிமம் வாங்கச் சொல்லும் போது.... அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு ரோடு டாக்ஸ் கட்டச்சொல்லும் போது... இந்த நாட்டில் வாழ்வதற்கு வீட்டுவரி, காட்டுவரி, வருமான விரி என்று இப்படிப் பல வழிகளில் பணத்தைப் பிடுக்கிக் கொண்டிருக்கும் போது....
நேர்மையான வழியில்... தனது உழைப்பிற்குத் தகுந்த கூலியை சோதிடர்கள் கேட்பது மட்டும் எப்படி ஏமாற்று வேலையாகும். அவர்களும் சொல்லித்தானே கேட்கிறார்கள்? அல்லது உங்கள் பாக்கெட்டில் இருந்து பிடுங்கிக் கொள்கிறார்களா? அல்லது என்னிடம் சோதிடம் பார்த்தே ஆகவேண்டும் என்று உங்களைக் கட்டாயப் படுத்துகிறார்களா? பேச வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக கண்டதையும் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அதற்கு வேறு பெயர் உண்டு!!

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியை நாம் இப்போது தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை சோதிடம் பல காலங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறது. சோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு "பூமிகாரகன்" என்று பெயர். அதாவது ஒருவன் ஜாதகத்தில் செவ்வாய் கிரகமானது வலுவாக இருந்தால் அவனுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கிறது என்று பொருள். சோதிடம் சொன்ன இந்தத் தகவலை வைத்துக்கொண்டு தான் இந்த அறிவியல் ஆராய்ச்சியே மேற்கொண்டிருக்கிறது!!

சோதிடம் பொய்யேன்று வாதிடும் யாருக்காவது முழுமையான சோதிடம் தெரியுமா? அப்படித் தெரிந்தால் "சக்ராதி ஜடனேக" என்பதற்கு என்ன பொருள் என்று கூறுங்கள் பார்ப்போம்!!

சோதிடர்களாக இருந்தாலும் கூட இதற்கு பதில் சொல்லலாம். (இதில் எல்லாமே புரிந்து விடும்!!)

"இதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்பது போன்ற முட்டாள் தனமான பதிலை யாரும் சொல்ல முயற்சிக்க வேண்டாம். எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அதைப் பற்றி விமர்சனம் செய்வது அறியாமையிலும் அறியாமை!!

இப்போது சவாளுக்கு வருகிறேன்...

என்னிடம் 2 கோடி ரூபாய் கொடுத்தீர்களேயானால் 85 வருடங்கள் முழுமையான ஆராய்ச்சி செய்து உங்களின் முற்பிறப்பில் இருந்து மறுபிறப்பு வரை எல்லா விவரங்களையும் மிகத் துள்ளியமாக கணித்து உங்களிடம் என்னால் சொல்ல முடியும்!! அப்படி இல்லை என்றால் மறு நிமிடமே எனது தோல்வியை ஒத்துக் கொண்டு நான் என் உயிரை விடவும் தயார்!!

சவால்!!

யாருக்கு துணிச்சலும், தைரியமும் இருக்கிறது?

குறிப்பு: தெரிந்த நோயைக் குணப்படுத்த பல கோடிவரை வசூல் செய்யும் அறிவியலை விட, தெரியாத பல தகவல்களுக்காக 2 கோடி கேட்கும் எனது சோதிடக் கலை சிறந்ததுதான்!!

"அந்தப்பார்வை"



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 3:02 pm

கோழி முட்டை அனைத்துமே குஞ்சு பொரிப்பதில்லையே? அதுபோலத்தான் மனிதர்களில் சிலருக்கு இயற்கையாகவோ, அல்லது அதிகமான மது, புகைப் பழக்கத்தாலோ ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடிவதில்லை. அதற்காக மருத்துவத்துறையை ஒன்றுக்கும் உதவாத ஜோதிடத்துடன் தாங்கள் தொடர்புபடுத்துவதை குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது.
முட்டையிலேயே கூமுட்டைகள் இருக்கும் போது, சோதிடர்களிலும் அப்படிப் பட்டவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்..? அதைத்தானே நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இன்று போலி மருத்துவர்கள் எவ்வளவோ நிறைந்திருக்கிறார்கள், அதற்காக நான் என்ன மருத்துவம் சுத்தப் பொய் என்றா கூறினேன். மருத்துவம் பார்க்காமல் இருந்தாலும் வியாதி கொஞ்ச காலத்தில் கண்டிப்பாக சரியாகி விடும் என்பதுதான் என் வாதமே... கால அவகாசம் இல்லை என்பவர்கள் மற்றும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள், உயிருக்குப் பயந்த கோழைகள் மருத்துவத்தை நாடி வியாதியின் கொடூரத்தை மறைத்துக் கொண்டு நடமாடலாம்... ஆனால் வியாதியின் தன்மையை எந்த மருத்துவத்தாலும் அடியோடு அழிக்க முடியாது!!
இதைச் சொன்னதற்காக இன்று எந்த ஜோதிடன் வரலாற்றில் இடம் பிடித்துள்ளான். விடை பூஜ்யம்.
வரலாற்றில் இடம் பிடிக்கவில்லை என்று யார் சொன்னது? கின்னஸ் புத்தகத்தில் எழுதினால் தான் அது வரலாறா? அல்லது அமெரிக்கன் ஏற்றுக் கொண்டால் தான் வரலாறா? நீங்கள் சொன்ன இந்தப் பூஜ்ஜியம் தான் எல்லாவற்றின் ஆரம்பம்!
///என்னைப் பொறுத்தவரை அமெரிக்கா எப்போதும் எனக்குக் கீழே தான் இருக்கிறது!!!///

இது மற்றவர்களின் உண்மையான திறமையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததைக் குறிக்கிறது.
உலக உருண்டையில் நமக்குக் கீழே அமெரிக்கா இருக்கிறது என்பதற்காக அவ்வாறு கூறினேன். இதையெல்லாமா இப்படி மேற்கோள் காட்டுவது? என்னா வில்லத்தனம்...

=======================================================================
குறிப்பு: எனக்கு எத்தனையோ முறை கடுமையான நோய்களெல்லாம் வந்திருக்கிறது. எழுந்து நடமாடக் கூட முடியாத நிலையும் வந்திருக்கிறது. சாப்பிடும் சாப்பாடு கூட உடனே வாந்தியாக வெளிவந்திருக்கிறது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பயந்து என்னை வீட்டை காலி செய்து கொள்ளக் கூட சொன்னார்கள். ஆனால் இந்த சிங்கம் எதற்கும் அசைந்து கொடுக்க வில்லை! 18 நாட்கள் வரை படுத்த படுக்கையிலேயே இருந்தேன். ஒரு மாத்திரை கூட விழுங்கியது கிடையாது!
காசு பணம் இல்லாமல் இல்லை... என் குடும்பத்திலும் கூட ஒருவர் மருத்துவர் என்பது இங்கே குறிப்பிடத் தகுந்தது...!!
ஏன் மருத்துவமனைக்கு செல்ல வில்லையென்றால்? என் சோதிடப்படி என் மரணம் ஆயுதத்தினால் அல்லது அதற்கு நிகராக என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் இந்த வியாதியெல்லாம் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை!
நான் என்ன இப்போது செத்தா போய் விட்டேன்?

எச்சரிக்கை: யாரேனும் இவ்வாறு முயற்சி செய்து இறந்து விட்டால் அதற்கு இவன் தான் காரணம் என்று வழக்கு சோடிக்க முயலவேண்டாம்! அதனால் இதை யாரும் பின்பற்றவேண்டிய கட்டாயமும் இல்லை!!

(ஒன்றுமே தெரியாத, விதண்டா வாதமாகவே பேசும் அறிவிழிகள் நிறைய பேர் தேவையில்லாமல் இப்படியெல்லாம் செய்வார்கள். அதற்காகவே இந்த எச்சரிக்கை! நான் எப்போதும் தரமானவர்களோடு மட்டுமே வாதம் செய்வதுண்டு!)




சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 06, 2012 3:19 pm

நீங்க சிரிப்பு போலீசா?...இல்ல...சீரியஸ் போலீசா?...
புரியவே இல்ல...



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 224747944

சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Rசோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Aசோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Emptyசோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Rசோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 3:31 pm

"எதை தீர்க்க முடியாதோ அதைத் தாங்கித்தான் ஆகவேண்டும்"
மேலே மேற்கோள் காட்டியிருப்பது ஒரு தந்தை, தனது மகனிடம் கூறிய தாரக மந்திரம்!

இதை ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? அவர் யார்? என்பதை தகுந்த ஆதாரத்தோடு பிறகு நான் இங்கே சமர்ப்பிக்கின்றேன். பத்திரிக்கையில் வரும் ராசி பலனைப் படித்து விட்டால், நாமும் ஒரு சோதிடன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கு அது நல்ல சான்றாக அமையும்!
"சோதிடத்தால் எதையும் அறிய முடியாது" என்று நினைக்கும் அறிவியல் மேதைகளுக்கும் அது சான்றாகும்!

அதுவரை சோதிடம் பற்றி கொஞ்சமாவது தெரிந்தவர்கள் தங்களது வாதத்தைத் தொடரலாம்! தரமானவர்கள் மட்டும்!

ஏனென்றால் எனக்கு அநாகரீகமான வார்த்தைகளை எப்படி தரமாக பேசுவது என்றும் தெரியும்!!! இந்த விளையாட்டை தமிழ் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது!!




சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 3:33 pm

RaRa3275 wrote:நீங்க சிரிப்பு போலீசா?...இல்ல...சீரியஸ் போலீசா?...
புரியவே இல்ல...

என் சோதிடப் படி என்னை யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதாம் நண்பா! நன்றி!




சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 06, 2012 3:39 pm

என் சோதிடப் படி என்னை யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதாம் நண்பா! நன்றி!


ஆனால் இப்பொழுது புரிந்து விட்டது........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 3:45 pm

பிஜிராமன் wrote:
என் சோதிடப் படி என்னை யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதாம் நண்பா! நன்றி!


ஆனால் இப்பொழுது புரிந்து விட்டது........

உடனே நான் என்னை மாற்றிக் கொள்வேனே... ஜாலி



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 06, 2012 3:46 pm

உடமே நான் என்னை மாற்றிக் கொள்வேனே


இதைத் தான் நண்பா புரிந்தது என்று கூறினேன்........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jan 06, 2012 3:50 pm

கபாலி wrote:நல்ல விவாதம்... இன்னும் பலர் கருத்துகளை எதிர்நோக்கி இருக்கிறேன்..

நன்றி அந்தப்பார்வை நண்பரே..

நன்றி நண்பரே!...



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 3:52 pm

[quote="ANTHAPPAARVAI"]

அதுவரை சோதிடம் பற்றி கொஞ்சமாவது தெரிந்தவர்கள் தங்களது வாதத்தைத் தொடரலாம்! தரமானவர்கள் மட்டும்!

ஏனென்றால் எனக்கு அநாகரீகமான வார்த்தைகளை எப்படி தரமாக பேசுவது என்றும் தெரியும்!!! இந்த விளையாட்டை தமிழ் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது!!

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



சோதிடம் 100% உண்மை. சவால்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 06, 2012 3:58 pm

நான் ஒரு செய்தி தாளில் படித்தேன், வருகிற நோய்க்கெல்லாம், மருந்து எடுதுக்கொள்ளாமல், நம் உடலே அதை சரி செய்யட்டும் என்று இருந்தால், விரைவில் நோய் தடுப்பாற்றல் குறைந்து நம் உடல் நோய்களின் கூடாரமாகி, விரைவில் நம்மை கொன்றுவிடும் என்று அதில் படித்தேன்.

நிச்சயமாக மருந்து எடுத்தே தான் ஆக வேண்டும், ஆங்கில மருந்தோ, அல்ல சித்த மருந்தோ, எதையாவது எடுத்து தான் ஆக வேண்டும். அதற்காக எடுததற்கெல்லாம், மருந்து உண்ணுவதும் தவறு தான், அதுவும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆக, நண்பா, மருந்தை எடுதுக் கொண்டு உடல் நலத்தை பேணிக்கொள்ளுங்கள். எந்த நோயும் மனிதனைக் கொல்லாது சரியாகி விடும் மருந்தை எடுக்காவிட்டாலும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக