புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
83 Posts - 55%
heezulia
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் வயல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 11:09 am

கெய்ரோ நகரில் கோஹா என்பவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவனுக்குத் திடீரென தோட்ட வேலை செய்ய ஆசை ஏற்பட்டது. அதனால் தன் வீட்டுக் கொல்லைப்புறத்தைச் சமப்படுத்திப் பாத்திகள் கட்டி, செடிகளுக்கு நீர் பாய்ச்சலானான்.

இதைக்கண்ட அவனது நண்பர்கள் பலவிதமான செடிகளை நட்டு வளர்க்க யோசனை கூறினர். ஒரு சிலர் விதைகளையும், வேறு சிலர் நாற்றுகளையும் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தனர். இதனால் அவனது வீட்டுத் தோட்டத்தில், அழகிய பூச்செடிகள் வளர்ந்து வண்ண மலர்களைக் கொண்டு மிளிர்ந்தன.

ஒருநாள் ஒரு பணக்காரன் கோஹாவைக் கண்டு, ""கோஹா! என் நண்பன் ஒருவன் வெளிநாட்டிலிருந்து ஏதோ ஒரு புதுவித விதைகளை அனுப்பி இருக்கிறான். அவற்றை விதைத்தால், அபூர்வமான செடிகள் வளரும். இந்தா அந்த விதைகள்,'' எனக்கூறி ஒரு பொட்டலத்தைக் கொடுத்தான்.

கோஹாவுக்கு அந்தப் பணக்காரணை அவ்வளவாகப் பிடிக்காது. எனவே, பணக்காரன் ஏதோ உள் நோக்கத்துடன் அவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று அவன் நினைத்து, அதை வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு சென்று, அந்தப் பொட்டலத்தைப் பரீட்சித்துப் பார்த்தபோது, அவை உலர்ந்த மீன் முட்டைகள் என்பது தெரிந்தது.

அவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்தான் கோஹா.

ஒருவாரம் சென்றது-

ஒருநாள் கோஹாவை அந்தப் பணக்காரன் கடைத் தெருவில் சந்தித்தான். அப்போது அவன் கோஹாவிடம், ""நான் கொடுத்த விதைகள் எப்படி? ஏதாவது செடி முளைத்து வந்ததா?'' என்று சிரித்தவாறே கேட்டான்.

கோஹாவும், ""ஆகா! அருமையான விதைகள்! எதையும் நன்கு தெரிந்து அதற்கு இப்பாத்தி கட்டி அவற்றை விதைத்து தக்க விதத்தில் உரம் போட்டு நீர் விட்டால் விதைகள் முளைக்காமலா போய்விடும்? உங்கள் நண்பர் கொடுத்த விதைகள் அதிசயமானவை. அவை எப்படி முளை விட்டு வந்துள்ளன என்பதை நீங்களே நாளைக் காலையில் என் வீட்டுத் தோட்டத்திற்கு வந்து பாருங்கள்,'' என்றான்.

பணக்காரனும், ""ஆகா! வருகிறேன்,'' என்றான்.

அவன் தன் மனதில், "நான் மீன் முட்டையல்லவா கொடுத்தேன்! இந்த கோஹா கூறியப்படி தக்க உரம் போட்டு நீர் பாய்ச்சினால் உண்மையாகவே முளை விடுமோ? நாளை போய் எப்படிப்பட்ட முளைகள் வந்திருக்கின்றன என்று பார்க்கிறேன்,'' என்று நினைத்துக் கொண்டான்.

வீடு திரும்பிய கோஹா தன் மகனிடம், ""நீ இன்று மாலை கடைத் தெருவிலிருந்து சிறு மீன் குஞ்சுகளாக வாங்கிவா, பிறகு நம் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பாத்தி போட்டு, அதில் இந்த மீன் குஞ்சுகளின் உடல்கள் கால்பாகம் வெளியே தெரியும்படி நட்டு விட்டு, லேசாக நீரைத் தெளி,'' என்றான்.

அவனும், கோஹா கூறியபடி செய்து வைத்தான்.

மறுநாள் பணக்காரன் வந்த போது கோஹா அவனை அழைத்துப் போய் தன் மகன் தயாரித்து வைத்திருந்த பாத்தியைக் காட்டினான். அதில் மீன்கள் முளைத்து வந்திருப்பது கண்டு பணக்காரன் ஆச்சரியப்பட்டான்.

""நான்தான் சொன்னேனே, எந்த விதையையும் விதைத்துத் தக்கபடி உரம் போட்டு நீர் பாய்ச்சினால், நன்றாக முளைக்கும் என்று இதோ, பார்த்தீர்களா? உங்கள் நண்பர் கொடுத்த மீன் முட்டைகள். அவற்றை தக்க விதத்தில் வளர்த்ததால் இப்படி மீன்கள் வளர்ந்தன. நீங்கள் கூட உங்கள் வயல்களில் மீன் முட்டைகளை விதைத்து நான் கூறியபடி உரம் போட்டு, நீர் பாய்ச்சினால் ஏராளமான மீன்கள் முளைக்கும். அவற்றை விற்றால் நல்ல லாபமும் கிடைக்கும்,'' என்றான்.

பணக்காரனும், ""என் பத்து ஏக்கர் நிலத்தில் இந்தத் தடவை மீன் முட்டைகளையே விதைத்து நீங்கள் கூறியபடி உரம் போட்டு நீர் பாய்ச்சுகிறேன். இந்தத் தடவை என் வயல்களில் மீன் பயிர்தான். வேறு எதையும் நான் பயிர் செய்யப்போவதில்லை,'' எனக் கூறினான்.

பிறகு உரத்தின் அளவு, நீர் பாய்ச்சுவது போன்ற விவரங்களை பணக்காரன் கோஹாவிடம் கேட்டான்.

கோஹாவும் பொறுமையுடன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, விவரமாகக் கூறினான்.

பணக்காரன் தன் பத்து ஏக்கர் நிலத்தில் மீன் விதைத்து, கோஹா கூறியது போல உரம் போட்டு நீர் பாய்ச்சினான். ஆனால், எவ்வளவு நாட்களாகியும் மீன்கள் முளைத்து வராதது கண்டு கோஹா தன்னை ஏமாற்றிப் பழி வாங்கி விட்டான் என்பதை அவன் புரிந்துக் கொண்டான்.

ஊராருக்கு விஷயம் தெரியவே, அந்தப் பணக்காரன் தெருவில் வந்த பொதெல்லாம், "மீன் வளர்ப்பவர் போகிறார்' என்று கேலியாகக் கூறி நகைத்தனர். பணக்காரனுக்கோ அவமானமாய் போய் விட்டது.

பொறாமைக் கொண்டு பிறரை அழிக்க நினைத்தால் நாம்தான் அழிந்து போவோம்.

சிறுவர் மலர்



மீன் வயல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 1:17 pm

அண்ணா கதை அருமை சிறந்த கருத்து
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 5:08 am

நல்ல கருத்துள்ள கதை....இது சிறுவருக்கு மட்டும் அல்ல சமயத்தில் அனைத்து வயதினருக்கும் பொருந்தும்,,,, சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக