புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
32 Posts - 56%
heezulia
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
17 Posts - 3%
prajai
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 17, 2012 7:36 pm

First topic message reminder :

17 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் மொகலாயப் பேரரசிற்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிகளுக்கு முக்கிய காரணங்களாக திகழ்ந்தவை யாவை? அவை பெரும்பாலும் சமயம் (ரிலீஜியஸ்) சார்ந்ததாக இருந்ததா? அல்லது பொருளியல் (எக்கனாமிக்) சார்ந்தவையாக இருந்தனவா?



மொகலாயப் பேரரசு ஏப்ரல் 21, 1526 ஆம் ஆண்டில் இருந்து துவங்குகிறது. முகலாயர்கள் டிமுரிட்ஸ் வம்ஸாவழியைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டில் மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்தது, ஆனால் 17 ஆம் நூற்றாண்டில் பிற்பாதியில் வீழ்ச்சி பெற துவங்கி 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தொடர்ந்தது. இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை, அதாவது கிழக்கே பெங்காலிலிருந்து மேற்கே பலோகிஸ்தான் வரையிலும், வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே காவேரி வரை அவர்களின் ஆட்சி பரந்து விரிந்து இருந்தது. இந்திய துணைக்கண்டம் முழுமையும் அவர்கள் ஆட்சி அதிகாரம் இருந்தது எனக் கூறலாம்.

மொகலாயப் பேரரசின் முதல் பேரரசர் ஜாகீருதின் முஹம்மத் பாபர் (1526-1530), எளிதாய் பாபர் என்று அனைவராலும் அறியப்படுபவர். இவரை தொடர்ந்து நிறைய பேரரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள்

  • ஹூமாயூன் (1530-1539) & (1555 - 1556)

  • அக்பர் (1556 - 1605)

  • ஜஹாங்கீர் (1605 -1627)

  • ஷாஜகான் (1627 - 1658)

  • ஔரங்கஷிப் (1658 - 1707)


ஔரங்கஷிப் இன் ஆட்சிக்காலத்தில் மொகலாயப் பேரரசு பெரும் வீழ்ச்சிகளுக்கு உட்பட்டது, அதற்கு முக்கிய காரணங்களாக இருந்ததவை அவருடைய ஆட்சி காலத்தில் நிகழ்ந்த சத்னமி (Rebellion of Satnami) கிளர்ச்சி , ஜேட்ஸ் (Rebellion of Jats) கிளர்ச்சி மற்றும் சீக்ஸ் (Rebellion of Sikhs) கிளர்ச்சி போன்ற கிளர்ச்சிகளே. இப்படி தொடர்ந்த் கிளர்ச்சிகளாலும், பலகீனமான அரசர்களாலும் மொகலாயப் பேரரசு வீழ்ச்சி கண்டு, இறுதியில் ஆங்கிலேயர்களால் நசுக்கப்பட்டு, மொகலாயர் ஆட்சி ஜூன் 20, 1858 இல் முழுதும் முடிவிற்கு வந்தது. பஹதூர் ஷா ஜாஃபர் மொகலாயப் பேரரசின் கடைசி அரசராக திகழ்ந்தார். இவர் ஆட்சி ஆங்கிலேயரால் கைப்பற்றப் பட்டு பர்மாவிற்கு நாடு கடத்தப் பட்டார்.

இதுவே மொகலாயப் பேரரசின் சிறு குறிப்பு, இனி மொகலாயர் ஆட்சி சம்பந்தப் பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆராய்ந்து அலசி, சிறப்பாக இருந்து வந்த மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணத்தை கொணர்வோம்.


குறிக்கோள்:

1. மொகலாயப் பேரரசின் அனைத்து சாராம்ஸங்களையும், அரசர்களின் சிறப்புகளையும் அறிந்து கொள்வது.

2. அரசர்களால் கொண்டு வரப்பட்ட ஆட்சி முறை மாற்றங்களும், கொள்கைகளும் எந்த விட மாற்றங்களை கொண்டு வந்தன என்றும், அந்த மாற்றங்களால் விளைந்த விளைவுகளையும் ஆராய்ந்து தெளிவு பெறுவது.

3. ஆட்சி காலத்தில் நடைபெற்ற கிளர்ச்சிகள் ஒவ்வொன்றையும் தீர ஆராய்ந்து அதற்கு முக்கிய காரணமாக இருந்தவற்றை அறிந்து கொள்வது. .



விதிமுறைகள்

1. அரட்டை கூடாது. அரட்டை பதிவுகள் முன்னறிவிப்புடன் நீக்கப்படும்.

2. யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

3. கேள்விகளை அடுக்காமல், ஒரு கேள்வியை கேட்டு, அதற்கான விடை பெற்ற பின் அடுத்த கேள்வியை மற்றவர்களோ, அல்லது அவரேவோ கேட்கலாம்.

4. கேள்விக்கான பதில் யாருக்காவது தெரிந்திருந்தாலோ, அல்லது, கேள்விக்கான பதிலை யாராவது கூற விரும்பினாலோ. கேள்விக்கு அடுத்த பதிவில், நான் பதில் கூறுகிறேன் என்று பதிவை தொடங்கி விட்டு, பதிலை அதே பதிவை திருத்தி இணைத்துக் கொள்ளலாம். காரணம், அதே கேள்விக்கு மற்றவரும் விடை தேட வாய்ப்புள்ளது, நேர விரையத்தை தடுப்பதற்காகவே இந்த முறை.

5. அனைவரும் தேடுவதால் தவறில்லை. தேடி பின் மற்றவர் பதில் அளித்திருந்தால், கொஞ்சம் மன சங்கடம் ஏற்படலாம். இதை தவிர்க்கவே இந்த முறை.


அடுத்த ஐந்தாவது நாளில், மொகலாயப் பேரரசைப் பற்றி எந்த கோணத்தில் கேட்டாலும். நாம் பதில் சொல்லும் வகையில் தேரி இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

மிக்க நன்றிகள் உறவுகளே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 22, 2012 9:41 am

பாபர் (1483 - 1530)

சிறப்புக்களும் செய்திகளும்


1. இயற்பெயர் ஜாஹிருதின் முஹம்மத், தன்னுடைய பதினொன்றாம் வயதிலேயே பர்கானாவின் அரசரானார்.

2. விரைவிலேயே சமர்க்கண்டை கைப்பற்றினார், இடையில் நோய்வாய்ப்படவே, அவருடைய உறவினர்களால் (பர்காணா, சமார்க்கண்ட் இரண்டையும் பிடுங்கப்பாட்டார்) , ஆட்சி பறிக்கப்பட்டு விரட்டப்பட்டார்.

3. வீரமும் ஆண்மையும் கொண்ட பாபர், 1504 இல் காபூலைக் கைப்பற்றினார். இப்படியே, அவர் தொடர்ந்து அவர்கள் மூதாதையர்களான, தைமுர் ஆதிக்கத்தில் இருந்த, பஞ்சாபையும், கைப்பற்ற நினைத்தார்.

4. இப்படியே இடங்களை கைபற்றுவதில் இறங்கிய பாபர் 1519 இல் இருந்து 1522 குள் பஜ்வார், பெஷாவர், சியால்கோட், காண்டகர் பகுதியை பிடித்தார்.

5. இப்படி இருந்த பாபரை, ஆலம் கானும் (இப்ராஹீம் லோடியின் மாமா) மற்றும் தௌலத் கானும் (பஞ்சாபின் ஆளுநர்), டெல்லியை கைப்பற்ற அழைக்கவே 1524 இல் பஞ்சாபில் நுழைந்தார் பாபர்.

6. அழைத்த தௌலத் கான் பாபருக்கு எதியாகிவிட, பாபர் மீண்டும் காபுளுகு திரும்புகிறார், ஆனால், இந்த பயணம், அவரை இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையை தூண்டியது.

7. இந்த ஆசையின் விளைவு, 1526 இல் நடைபெற்ற முதலாம் பானிபட் போர், 1525 இல் தான் படைகளுடன் புறப்பட்ட பாபர், தௌலத்த் கானை தோற்கடித்து லாகூரை கைப்பற்றினார்.

8. டெல்லியை ஆண்டு வந்த கடைசி லோடி வம்சத்தை சேர்ந்த, இப்ராஹீம் லோடியின் ஒரு லட்சம் வீரர்களை கொண்ட படையை தன்னுடைய வெறும் 12000 வீரர்களை கொண்டு தோற்கடித்து டெல்லியை கைப்பற்றினார், இதில் இப்ராஹீம் லோடி கொல்லப்பட்டு, லோடி வம்ஸத்திற்கு முற்றுப்புள்ளி இடப்படுகிறது.

9. இதைத் தொடர்ந்து கான்வா போர் 1527 ராணா சங்காவிற்கு எதிராகவும், கன்வா போரில் எஞ்சியிருந்த ராஜா புத்திரர்களை, சந்தேறிப் போரில் கொன்று, ராஜா புத்திரர்களுக்கு முடிவு காட்டினார், இறுதியாக, காக்ரா போர் 1529, இதில் மஹ்மூத் கான் (இப்ராஹிம் லோடியின் சகோதரர்) இதிலும் பாபர் வெற்றி கண்டார்.

10. இறுதியில் 1530 டிசம்பர் 26 இல் இறந்துவிடுகிறார். இவருடைய வீரம், ஆண்மை, மனிதாபிமானம் இவருக்கு புகழ் மிக்க இந்தியா அரசர் என்ற பேரை பெற்றுத் தந்தது, மட்டுமல்லாது, சிறந்த பக்தியும், இயற்கையின் மீது காதலும், இசையின் மீது ஈர்ப்பும், கவித்துவமும், துருக்கி பாராசீக மொழிகளில் புலமையும் பெற்று விளங்கினார். ஆக, பாபர், பல உயர்ந்த நற்குணங்களை கொண்ட மொகலாய அரசர் ஆவார்.


மன்னிக்கவும் உறவுகளே, கொஞ்சம் வேலை இருந்ததால், தாமதமாக பதிவிடுகிறேன்.

நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 22, 2012 1:25 pm

ரொம்ப நல்ல தகவல்கள் ராமன் புன்னகை எனக்கு முகல் அரசர்களிலேயே அக்பரை ரொம்ப பிடிக்கும், அவர் பற்றி விரிவாக சொல்லவும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 22, 2012 5:40 pm

நன்றிகள் மா.........நான் முக்கியமான மொகலாய அரசர்களை பற்றி வரிசையாக கூற உள்ளேன், இப்பொழுது ஹூமாயூன், அடுத்தது அக்பர்... புன்னகை

ஹூமாயூன் 1508 - 1556

ஹூமாயூன் (Humayun) பாபரின் விருப்பமான குழந்தை, பாபர் இறந்ததும், 1530 இல் அரியணை ஹூமாயூனிடம் வந்தது. இவர் ஆட்சி முழுக்க, துரதிஷ்டமும், துன்பங்களும், தோல்விகளும், தொடர்ந்தன, அதனால் இவர் ஆட்சியில் சிறப்புகள் என்று கூறுவதை விட, இவர் ஆட்சியில் நிகழ்ந்த துரதிஷ்டங்கள் என்ன என்பதை பார்போம்.

துரதிஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகள்

1. மொகலாய அரியணைக்கு வாரிசான ஹூமாயூன், முழு பேரரசுக்கும் வாரிசாகவில்லை, தந்தையின் விருப்பத்தின் படி, தன்னுடைய சகோத்ரார்களுக்கு, பேரரசை பங்கிட்டு கொடுத்தது, ஹூமாயூன் செய்த முதல் தவறு, இப்படி பிரித்துக் கொடுத்ததில், தனக்கென்று டெல்லி மற்றும் ஜான்பூரை மட்டும் வைத்துக் கொண்டார். மற்ற பகுதிகளை சகோதரர்களுக்கு பிரித்துக் கொடுத்தார்.

2. பிரித்துக் கொடுத்ததால், படைக்கு சிறந்த படைவீரர் பெறுவதில் சிக்கல் ஏற்படவே, சிறந்த படைவீரர்கள் அற்ற படையாய் அமைந்தது, அதிக வருவாய் தரும், பஞ்சாபை இழந்ததால், வருவாயையும் இழந்து நின்றார்.

3, பானிபட், காக்ரா போன்ற போர்களில் ஈடுபட்ட, ஆப்கானியர்களை பாபர் முழுதும் ஒழிக்காமல் விட்டதால், அவர்கள் ஷெர்கானுடனும், வங்க அரசர் நஷ்ரத் ஷா வுடனும் அணிதிரண்டு ஹூமாயூனை எதிர்த்து தலைவலி தந்தனர்.

4. இவரின் போர்திறத்தில் குறைவும், ராஜா தந்திரமும், அரசியல் சூழ்ச்சியும் தெரியாத தன்மையும், பல புதிய பிரச்சினைகளை கொண்டுவந்தது. அவற்றில் முக்கிய இரண்டு,

5. சித்தூர் மகா ராணி கர்னாவதி, பகதூர் ஷா க்கு எதிரான தங்கள் போரில், ஹூமாயூனின் உதவியை நாடினார், ஆனால், கர்னாவதி முஸ்லிம் சமூகத்தை சாராததால், ஹூமாயூன் அவருக்கு உதவ முன்வரவில்லை, ஆனால், பகதூர் ஷா ஹூமாயூனின் எதிரி. இதில் உதவி இருந்தால், கர்னாவதியுடனான ராஜபுத்திர உறவும் வலுபெற்றிருக்கும், பகதூர் ஷாவை வீழ்தவும் வழி கிடைத்திருக்கும், ஆனால், ஹூமாயூன் இவ்விரண்டையும் இழந்தார்.

6. சித்தூரை பகதூர் ஷா கைபற்றியதும், ஹூமாயூன் படையெடுத்த்து மாண்டசோர் இல் பகதூர் ஷாவை தோற்கடித்தார், ஆனால், பகதூர் ஷாவை கொல்லாது அவரை தப்ப விடவே, 1536 இல் மீண்டும் தான் இழந்த பகுதிகளை பகதூர் ஷா மீட்டதால், குஜராத் மீது ஹூமாயூன் தொடுத்த போர் வீணாய்ப் போனது.

7. இடங்களை பிடிப்பதில் ஏற்படுத்திய தாமதம், வெற்றி பெற்றும் அரசர்களை முழுதும் ஒடுக்காது விட்டுச் சென்றது, வெற்றியை கொண்டாடுவதில் காலத்தை வீணடித்தது, இந்த ஒவ்வொரு செயலும், எதிரிகள் தங்களை பலப் படுத்திக் கொள்ள ஏதுவாக அமைந்தது.

8. ச்சுனார் ஐ முற்றுகை இட எடுத்துக் கொண்ட ஆறு மாதத்தில் ஷெர்கான் வங்காளத்தில் தன்னை வலுப்படுத்திக் கொண்டார், அதற்கு பின் வருடக்கணக்கில் நேரத்தை வீணடித்த ஹூமாயூன், 1538 இல் வங்காளம் கௌர் இல் நுழைந்து ஆறு மாதம் வீணடித்தார். .

9. ஷெர்கானின் செயலை மிகத் தாமதமாக தெரிந்து கொண்டு டெல்லி புறப்பாட்ட ஹூமாயூன், டெல்லி திரும்பி கொண்டிருந்த வழியில், ஷெர்கான் தன் படையுடன் குறிக்கிட, படுதோல்வி அடைந்து, உயிர்பிழைத்து ஆக்ரா சென்றார்.

10. இது போன்ற தனது திறமை இனமையாலும், எதிரிகளின் பலத்தை கணக்கிடும் அனுபவமும் அறிவும் இல்லாததாலும், பல தோல்விகளை கண்டார், அதில் கண்ணோசி போரும் 1540 ஒன்று.

11. இந்த நிலையில் 1542 இல் அக்பர் பிறக்கிறார், ஷெர் ஷாவின் வாரிசுகள் திரமியின்மை கண்ட ஹூமாயூன், 1544 இல் படையெடுத்து, சிக்காந்தர் சூர் ஐ தோற்கடித்தார், பின் ஆக்ரா டெல்லியை கைப்பற்றி மீண்டும் மொகலாய பேரர்சை நிறுவினார், ஆனால், 1556 ஜனவரி 26 இல் படிக்கட்டில் இடறி விழுந்து, பல இடர்ப்பாடுகள் நிறைந்த தன் வாழ்க்கையை இடறி விழுந்த்தால் விட்டார்.



அடுத்து, மொகலாயர்களில், சிறப்பான ஆட்சி புரிந்த அக்பரை பற்றி காண்போம்......

அம்மா தயாரா இருங்க.......
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 23, 2012 11:15 pm

அக்பர் 1542 - 1605

மொகலாய பேரரசர்களில் யாரை பிடிக்கும், யாருடைய ஆட்சி பிடிக்கும் என்று வரலாறு படித்தவர்களை கேட்டோமானால், அவர்கள் பதில் பெரும்பாலும் அக்பர் என்று தான் இருக்கும். இவருடைய இயற் பெயர் ஜலால் உத் தின் முஹமத் அக்பர்.


முக்கிய போர்கள்

1. அக்பர் அரியணை ஏறும்பொழுது, பேரரசு சிறிய பகுதியாக இருந்தது. அதே சமயம், அரியணைக்கும் நிறையப் போட்டிகள் நிழவின, ஆனால் இவற்றை சமாளிக்கும் திறம் கொண்ட அக்பர் இரண்டாம் பானிபட் போரை துவங்கினார்.

2. இரண்டாம் பானிபட் போரை துவங்கும் பொழுது அவருடைய வயது 14, இவருக்கு பாதுகாவலராக இருந்த பைரம்காண் படைக்கு தலைமை தாங்கி போரை நடத்தினார்.

3. போரானது, அப்பொழுது டெல்லியை கைப்பற்றிய முஹமத் அடில் ஷா (ஆக்ராவிலிருந்து பீகார் வரை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்) வின் தளபதியான ஹெமுவை, அக்பருக்கு எதிராக படையை திரட்டிக்கொண்டு சென்று போர் புரிய செய்ய விளைந்ததே இரண்டாம் பானிபட் போர்.

4. ஆக, இருபடைகளும், 1556 இல் பானிபட்டீல் மோதிக்கொள்ள, வெற்றி காற்று துவக்கத்தில் ஹெமு பக்கம் வீசினாலும், ஹெமு கண்ணில் அம்பு பாய்ந்து இறந்ததாக கேள்விப்பட்டு, அவர் படை வீரர்கள் சிதற, துரத்திச் சென்று வென்றார் பைராம் கான்.

5. இரண்டாம் பானிப்பட் போரில் வென்ற அக்பர் டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்ற அக்பரிடம் பின் இந்தியாவே வீழ்ந்தது. இப்போரின் முடிவு, ஆப்கானியர்களையும் முடிவிற்கு கொண்டு வந்தது.

6. அக்பாரின் பேரரசை விரிவுபடுத்தும் கோட்பாடு, அவரை இன்னும் நிறைய படையெடுப்புகளுக்கு வழிவகுத்தது, அவை, மாளவத்தை ஆண்ட பாஸ் பகதூர் மீது படையெடுப்பு, கோண்டுவானாவை ஆண்டு வந்த ராணி துர்க்காவதி மீது படையெடுப்பு, ராஜபுத்திரர்கள் ஆண்டுவந்த ராஜபுதனத்தின் மீது படையெடுப்பு, என பல படியெடுப்புகளை எடுத்து, அனைத்திலும் வெற்றிகண்டார்.

6. ஆனால், ராஜபுதனத்தில், அவர் படையெடுப்பால் மட்டும் கைப்பற்ற முடியும் என்று நினைக்காத அக்பர், தான் ராஜபுத்திரக் கொள்கை மூலம் அவர்களுடன் நட்புறவைக் கொண்டு அங்கு ஆதிக்கம் செலுத்த எண்ணினார்.


முக்கிய நிகழ்வுகள்

1. ரால்ப் பிட்ச் (1585) என்ற ஆங்கிலேயர் தான் அக்பரின் அவைக்கு வருகை தந்த முதல் ஆங்கிலேயர் ஆவார்

2. புனிதப் பயணம் செய்ய விதிக்கப்பட்ட வரி, ஜெஸ்சியா வரி போன்றவற்றை 1564 இல் ஒழித்தார். அதேபோல் பசு இறைச்சிக்கும், உடன்கட்டை ஏறுவதையும் தடை செய்தார்.

3. அனைவருக்கும் அமைதியான வாழ்க்கை என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார்.

4. பதேபூர் சிக்ரி (Fatehpur Sikri) இல் இபாடத்கான் (Ibadatkan) என்ற வழிபாட்டு கூடத்தை நிறுவினார். அங்கு தான் அனைத்து சமயம் சார்ந்தவர்களும் ஒன்றாய் அகபருடன் கலந்தாலோசித்தினர்.

5. இவருடைய நில வருவாய் முறையான, ஜப்தி (Zabti System) முறை அல்லது டோடர் மால் பந்தோபஸ்த் (Todar Mal Bandobast System) முறை, மூன்று முக்கிய அம்சங்களை கொண்டது அவை, நில அளவை, நில பாகுபாடு, விலை நிர்ணயம் ஆகும்.

6. உயர்குடிகளையும் ராணுவத்தையும் ஒழுங்கு படுத்த மான்ஸப்தாரி (Mansabdari System) முறையாயி கொண்டுவந்தது.


சமயக் கொள்கை

1. அக்பர், இந்துக்கள் முஸ்லீம்களிடையே ஒற்றுமையை உருவாக்க எண்ணம் கொண்டார், அவருடைய சமயக் கொள்கைகளும் அது சார்ந்தே அமைந்தன.

2. இவரின் இந்த எண்ணத்திற்கு காரணம், இவர் வளர்ந்த சூழ்நிலை, நட்பு வட்டாரம், ஆசிரியர்கள் மற்றும் அரசியல் உணர்வு என பலவற்றைக் கூறலாம். மற்றும் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவில் ஆட்சி புரிவதில் தான் கொண்ட நாட்டம்.

3. பல சமயத்தவரை அழைத்து, உண்மைத் தத்துவத்தை அறிய முற்பட்டார், ஆனால், எச்சமயமும் அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், தன்னை இஸ்லாம் மாதத்தின் கொள்கைகளுக்கு விளக்கம் கூறும் நீதிபதி என்று கூறிக்கொண்டார், அதுமட்டுமின்றி "தவறுபடா ஆணை" என்ற ஒன்றையும் பிரகடனப் படுத்தினார்.

4. அக்பர் தான் சொந்த சமயத்தை துவக்கியது, அது தீன் இலாஹி (Din - i- ilahi), உலக சகோதரத் துவம் என்ற அடிப்படையில் இச்சமயம் அமைந்திருந்தது.

5. அதாவது, தீன் இலாஹி இல் அனைத்து மாதங்களின், முக்கியமான கோட்பாடுகளும் இடம்பெற்றிருக்கும், ஆனால், இச்ச்மயத்தில், அவருடைய நெருங்கியவர்களை தவிர வேறு யாரும் இணையவில்லை, இதில் இணைந்த ஒரே இந்து பீர்பால் மட்டுமே.

6. இதில் அனைத்து மாதங்களின் கோட்பாடுகளும் இருந்ததால், இந்து கோட்பாடுகள் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் கோட்பாடுகள் இந்துக்களுக்கும் பிடிக்காதால், இச்சமயம், அக்பர் இறப்புடன் இரண்டு போனது.

7. ஆனால, இச்சமயத்தை பின்பற்றி இருந்திருந்தால், மக்களிடையே ஒற்றுமை வலுப்பெற்றிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Feb 25, 2012 8:57 am

ராமன்,
சூப்பருங்க

அரிய அறிய வேண்டிய தகவல்கள் அடுக்கடுக்காக அழகு மலர் கோர்ப்பது போல் தொகுத்து கொடுப்பதற்கு மிக்க நன்றி , பாராட்டுகள். அழகான வண்ணம், ஒழுங்கான பத்தி, சீரான எழுத்தோட்டம் உங்களின் சிரத்தையும், உறவுகளுக்கு முதலீட்டை கொடுக்கும் இதில் எவ்வளவு நேரம் செலவழித்தீருப்பீர்கள் என்று வியப்படையச் செய்கிறது. உங்களின் பொறுப்புணர்ச்சிக்கும், சிரத்தைக்கும் தலை வணங்குகிறேன். நன்றி

சிலநேரங்களில் இது போன்ற நீண்ட தகவல்கள் அனைத்தும் இங்கேயே கொடுக்க வேண்டுமா என்றும் தோன்றுகிறது. தேவைக்கு தகுந்து தகவல்கள் உள்ள இணையத் தொடர்ப்பை கொடுத்தால் போதும் என்பது என் தாழ்ந்த கருத்து. உண்மையில் அவசியமும் ஆர்வமும் இருப்பவர்கள் அவற்றை தேடி எடுத்துப் படிப்பார்கள். போட்டித் தேர்வுக்கு இன்று சந்தையில் பல ரெடிமேட் புத்தகங்கள் உள்ளன. மக்களின் நலம் கருதினாலும், உங்கள் போன்ற பதிவர்களின் நேரமும் முக்கியம்.

தலைப்புகளின் மேலோட்டம், வரலாற்று நிகழ்வுகளின் கோடீடுகள், மேலோட்டமான குறிப்புகள், படிப்பவருக்கு ஆர்வத்தை தூண்டும் அடிப்படை விஷயங்கள் கொடுத்து மேலும் தகவல் அறிய இதை நாடுங்கள் என்று சில லிங்குகளை, குறிப்பு புத்தங்கள் பெயர்கள் கொடுக்கலாம்.

கொஞ்சம் யோசித்தால் வரலாறு என்பது வெறும் மொகாலியர்கள் மட்டும் இல்லை. மேலும் பல வம்ச பிரிவுகள் உள்ளன. ஒவ்வொருவரின் சரித்திரத்தில் எத்தனை தகவல்கள் உள்ளன. வந்தார்கள் வென்றாகள் என்று ஆனந்த விகடன் வெளியிட்ட ஹாய் மதன் எழுதிய புத்தகம் உள்ளது. அதில் இது போன்று இந்தியாவுக்கு வந்து ஆட்சி செய்த அனைத்து மன்னர்களின் வரலாறும், முக்கிய நிகழ்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

வரலாறு மட்டும் அல்ல, மற்ற பிரிவுகளிலும் உள்ள அடிப்படை தலைப்புகள், துணைத் தலைப்புகள், முக்கிய நிகழ்வுகள் கொடுத்து, அதற்கு மேல் தகவல் விரும்புபவர் எதை நாட வேண்டும் என்று குறிப்புகள் கொடுத்தால் போதும், உண்மையில் விருப்பம் இருப்பவர், போட்டித் தேர்வுக்கு தகவல் தேடுவோர் அதை விரும்பி படிப்பர்.

இது என் தாழ்மையான ,தாய்மையான கருத்து.

மிக்க நன்றிகள் ஐயா,

தாங்கள் கூறியபடியே இவற்றிற்கு மிகுந்த நேரம் பிடிக்கத்தான் செய்கிறது ஐயா, நான் முதலில் தாங்கள் கூறியது போல், குறிப்புக்களும், அந்த பகுதியில், நுண்ணறிவு பெற எது போன்ற கேள்விகள் எழுப்ப வேண்டும், அதற்கு எவ்வாறு விடை காணவேண்டும், என்ற குறிப்புகளை வழங்கலாம் என்று தான் எண்ணினேன், பின் தான் கேட்டுள்ள கேள்விக்கான பதிலை, இங்கு கொடுத்திட வேண்டும் என்று,

நான் இங்கு கேட்ட கேள்வி 17 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில், நடைபெற்ற கலகங்களும் அவை சமயம் சார்ந்தவையா அல்லது பொருளாதாரக் கொள்கை சார்ந்தவையா என்பது தான், அவற்றிற்கான பதில் எப்பொழுதோ நிறைவாகிவிட்டன, ஆனால், வாசகர்களின் கேள்விக்கான பத்திகள் தான் இப்பொழுது போய்க் கொண்டிருக்கிறது,

அடுத்த கேள்வியில், தங்களின் கருத்தை எடுத்துக் கொள்கிறேன் ஐயா.

மிக்க நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



சதாசிவம்
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Feb 25, 2012 10:51 am

அனைவருக்கும்
வணக்கம்
நல்ல பதிவு பாராட்டுக்கள் முழுமையாகப் பதிவிட வேண்டும் என்பது என் கருத்து. தொடர்புடைய சுட்டிகளை மட்டும் கொடுத்தால் அவை ஆங்கிலத்தில் இருந்தால் சிலருக்குப் படிக்க இயலாமல் போகும் என்று கருதுகிறேன்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

வணக்கம் நந்திதா,

நாம் தமிழில் மட்டும் படித்தால், நிச்சயம் நம் அறிவை பெருக்கிக் கொள்ளலாம், ஆனால், போட்டித் தேர்வுகளில், கேள்விகள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இடம் பெற்றிருக்கும், ஆக, நாம ஆங்கிலத்திலும் படிப்பது அவசியமாகி விடுகிறது. நான் இங்கு தமிழில் பதியும் அனைத்தும் ஆங்கிலத்தில் படித்தவையே ஒரு சிலவற்றை தவிர.

என்னால் இயன்றவரை, தகவலை தருகிறேன்,

நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Sat Feb 25, 2012 11:53 am

வர்லாற்று சம்பவங்களை நினைஉ படுதியதற்கு மகிழ்ச்சி மதம் சார்ந்த கிளர்ச்சிகள் அதிகம் நடந்திருக்கிறது . ஒரு கேள்வி முகமதுபின் துக்ளக் ஆட்சி காலம் எந்த வகை ஆட்சி காலம் என்பதை அறிய விரும்புகிறன்..............



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 12:10 pm

நேரு wrote:வர்லாற்று சம்பவங்களை நினைஉ படுதியதற்கு மகிழ்ச்சி மதம் சார்ந்த கிளர்ச்சிகள் அதிகம் நடந்திருக்கிறது . ஒரு கேள்வி முகமதுபின் துக்ளக் ஆட்சி காலம் எந்த வகை ஆட்சி காலம் என்பதை அறிய விரும்புகிறன்..............

முகமதுபின் துக்ளக், ஆட்சிக் காலம், துக்ளக் வம்சத்தில் வருகிறது. துக்ளக் வம்சத்தின் ஆட்சி காலம் 1320 - 1413 வரை இருந்துள்ளது.

இந்தியாவில் ஐந்து வம்ஸங்கள் ஆட்சி புரிந்துள்ளன, அவற்றை கீழ்க்கண்ட வாறு வரிசை படுத்தலாம்,

1. ஸ்லேவ் வம்சம் 1206 - 1290 (Slave Dynasty)
2. கல்ஜி வம்சம் 1290 - 1320 (Khalji Dyanasty)
3. துக்ளக் வம்சம் 1320 - 1413 (Thuklaq Dyanasty)
4. சய்யித் வம்சம் 1414 - 1451 (Sayyid Dyanasty)
5. லோடி வம்சம் 1451 - 1526 (Lodhis Dynasty)


இதில் முகமதுபின் துக்ளக், துக்ளக் வம்சத்தில், இரண்டாம் மன்னராக வருகிறார், துக்ளக் வம்சத்தை தோற்றுவித்தவர், கியசூதின் துக்ளக்.

மின்சாரம் தடைபட்டு விட்டது மீண்டும் தொடர்கிறேன்.




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 12:15 pm

மின்சாரம் இல்லாக் காலத்து வரலாறை பதிவதற்கு
மின்சாரம் இருந்தும் இல்லாத காலம் தடை செய்கிறதா?

தொடருங்கள் உங்கள் பதிவுகளை தடை பல வென்று ராமன் - வாழ்த்துகள்.




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 4:30 pm

நன்றிகள் கொலவெறி,

அருமையாக கூறி உள்ளீர்கள். ஆனால், இங்கு அரட்டை கூடாது நண்பா....அதனால் இனி இங்கு அரட்டை வேண்டாம்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக