புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
74 Posts - 44%
heezulia
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
6 Posts - 4%
prajai
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
6 Posts - 4%
jairam
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
2 Posts - 1%
Jenila
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
10 Posts - 5%
prajai
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
8 Posts - 4%
Jenila
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாமே சுயதம்பட்டம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 13, 2013 7:30 pm

மக்கள் வரிப்பணத்தில் போடும் திட்டங்களுக்கு கூட, தங்கள் பெயரை சூட்டிக்கொள்பவர்களைத் தான், இன்றைய உலகில் காண்கிறோம். ஆனால், அக்காலத்தில், தன் செலவில்செய்த தொண்டுக்கு, ஒரு சிவனடியாரின் பெயரை இட்டார் ஒரு அன்பர். அவர் தான் அப்பூதி அடிகள். தஞ்சாவூர் அருகிலுள்ள திங்களூரில் வசித்தவர் அப்பூதி அடிகள். திருநாவுக்கரசர் மீது அன்பு கொண்டவர். அவரை பார்த்ததில்லை என்றாலும், அவரது சிவபக்தியால் ஈர்க்கப்பட்டு, தன் பிள்ளைகளுக்கு கூட மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டியவர்.
-
ஒருசமயம், கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைத்து, அதற்கு திருநாவுக்கரசர் பெயரைச் சூட்டியிருந்தார்.அவ்வழியாக, வெயிலில் களைத்து வந்த மக்கள், தண்ணீர் குடித்து, பந்தலடியில் இளைப்பாறிச் சென்றனர். அவ்வூரில் கைலாசநாதர் கோவில் உள்ளது.ஒருமுறை, திருநாவுக்கரசர்,அந்தத் தலத்தை வழிபடுவதற்காக வந்தார். தன் பெயரில் தண்ணீர் பந்தல், சத்திரங்கள் என இருந்ததைப் பார்த்தார். அப்பூதியடிகள் அவற்றை நிறுவியிருப்பதாகக் கேள்விப்பட்டு, அவரைக் காணச் சென்றார்.
-
வந்திருப்பது நாவுக்கரசர்எனத் தெரியாமலே, அப்பூதி அடிகள், அவரை வரவேற்றார். அவரிடம், "ஐயா... தொண்டு செய்யும் உங்கள் பெயரில் தண்ணீர் பந்தல், சத்திரம் அமைக்காமல், யாரோ ஒருவர் பெயரில் வைத்துள்ளீர்களே...ஏன்?' என்று கேட்டார்.
-
இதைக்கேட்டு அப்பூதி அடிகளுக்கு கோபம் வந்துவிட்டது. "பெரியவரே... நாவுக்கரசர் எவ்வளவு பெரிய அடியவர் தெரியுமா? கல்லைக் கட்டி கடலில் இறக்கியும் கூட மிதந்து வந்தவர் அவர்."நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்' என்று, எமனுக்கே சவால் விட்ட சிவப்பழம். அவரது அருமை தெரியாதவராக இருக்கிறீரே... நீங்கள் ஒரு அடியவர் என்பதால் இத்துடன் விட்டேன்...' என்றுஆவேசமாகப் பேசினார்.
-
நாவுக்கரசர் சிரித்தபடியே, "ஐயா... கோபம்வேண்டாம். தாங்கள் குறிப்பிட்ட நாவுக்கரசன் நான் தான்...' என்று பணிவோடு கூறினார். உடனே, நெடுஞ்சாண்கிடையாக காலில்விழுந்து, அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார் அப்பூதி அடிகள்.
-
பின், தன் வீட்டில் சாப்பிடுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார். நாவுக்கரசரும் சம்மதிக்கவே, அறுசுவை விருந்து தயாரானது. தன் மகன் மூத்த திருநாவுக்கரசுவை, தோட்டத்திற்கு சென்று, இலைஅறுத்து வருமாறு அனுப்பினார். அங்கே அவன் சென்றபோது, பாம்பு தீண்டி இறந்து போனான்.
-
இந்த தகவல், அப்பூதி அடிகளுக்கும், அவரது மனைவிக்கும் தெரிந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. துக்கத்தையும் மறைத்து, நாவுக்கரசருக்கு உணவு பரிமாற தயாராயினர். அப்போது நாவுக்கரசர்,"உங்கள் மூத்த மகன் எங்கே?'என்று கேட்டபோது, உண்மையைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார் அப்பூதி அடிகள்.நாவுக்கரசர் கலங்கி விட்டார். "இறந்த வீட்டில் விருந்தா? உங்கள் கருணைக்கு அளவில்லையா? கொண்டு வாருங்கள் சிறுவனின் உடலை! எல்லாரும்கைலாசநாதர் கோவிலுக்கு செல்வோம்...' என்றார்.
-
சிறுவனின் உடலுடன் எல்லாரும் அங்கு சென்றனர்.ஊரே கூடியிருந்தது."கைலாசநாதரே... தன்னலம் கருதாமல், பிறருக்காக அரும்பணிகள் செய்யும் ஒருவரை, இப்படி சோதிக்கலாமா? அதிலும், எனக்காக இலை கொண்டு வரச்சென்ற நேரத்தில், இப்படி நிகழச்செய்து விட்டாயே...' என்று கூறி, பதிகம் பாடினார். உறங்கி விழித்தது போல் எழுந்தான் மூத்த திருநாவுக்கரசு. ஊரேமகிழ்ந்தது. சில நாட்கள் அங்கு தங்கிய நாவுக்கரசர்,திருப்பழனம் எனும் தலத்துக்குச் சென்று இறைவனை பாடும்போது, அப்பூதி அடிகளின் சிறப்பையும் பாடினார்.
-
அப்பூதி அடிகளின் குருபூஜை, தை சதய நட்சத்திரத்தில் நடக்கும்.சிவாலயங்களில், நாயன்மார் சன்னிதியில் இவர் இருப்பார். சுய தம்பட்டமில்லாமல் தொண்டு செய்த அந்த அடியவருக்கு, அந்நாளில் பூஜை செய்வோம். சுயநலமற்ற தொண்டு செய்ய உறுதி எடுப்போம்.
-
***
தி. செல்லப்பா
வாரமலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 7:34 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி , :வணக்கம்:

தஞ்சாவூர் அருகில் உள்ள திங்களூர் எங்கள் மாவட்டத்தில் உள்ள நவக்ரஹ கோவில்களில் இது சந்திரனுக்கு உரிய கோவில் அமைந்துள்ள இடம்.

அத்துடன் இந்த ஊரில் எவரையும் பாம்பு தீண்டாது என்றும் கேள்விபட்டுள்ளேன். நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Feb 13, 2013 10:12 pm

அப்பூதி அடிகள் பற்றி சின்ன வயதில் தமிழ் பாடத்தில் படித்தது... மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக