புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
21 Posts - 66%
heezulia
கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
63 Posts - 64%
heezulia
கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண்.26 - இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க! (சிறுகதை சின்னத்திருவிழா)


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 13, 2012 10:51 am

இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!


சீக்கிரம் கிளம்புங்க. நேரமாயிடுச்சு வீட்டில் இருந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்தேன். அன்று என் மகளுக்கு நான்காவது பிறந்தநாள். வாசலில் கார் வந்து நின்றது.
“ஏன் இப்படி அவசரப்படுத்திறீங்க” நொந்து கொண்டாள் என் மனைவி.
“என்னடி இப்படிச் சொல்றே. நாம போனாதானே அங்க விருந்து நடக்கும்!”
“குழந்தை பிறந்த நாளுக்கு, சினிமா, பார்க், பீச்சுன்னு போகாமா வருடா வருடம் அனாதை ஆசிரமத்துக்கு கூப்பிட்டுப் போறீங்களே இது நல்லாவா இருக்கு?” என்றாள்
ஒரு முறைமுறைத்தேன். அப்படியே ஏதும் பேசாமல் வண்டியில் குழந்தையைக் கூட்டிக்கொண்டு ஏறினாள். என் கோபத்தைப் பார்த்த டிரைவர் வண்டியை வேகவேகமாகச் செலுத்தினான்.

“அப்பா நாம எங்க போறோம்? குழந்தை கேட்டது. உனக்கு பிறந்த நாள் இல்லையா அதனால நாம் அனாதை இல்லத்துக்கு போறோம்” என்றேன்.
“அனாதை இல்லம்னா என்னப்பா?”
“இப்ப உனக்கு அப்பா அம்மா இருக்காங்க இல்லையா அது மாதிரி இல்லாம இருக்குறவங்க தங்குற இடம்.”
“ஏன் அவங்களுக்கு அப்பா அம்மா இல்ல?”
குழந்தைக்கு புரிகிற அளவுக்கு என்னால் பதில் சொல்ல முடியாததால் பேச்சை மாற்றினேன்.

அதற்குள் ‘அங்கயற்கண்ணி ஆதரவற்றோர் இல்லம்’ வந்து விட்டது. இல்லத்தின் மேலாளர் வாசலில் இருந்தே வரவேற்றார். “வணக்கம் வாங்க… வாங்க.. உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருக்கோம். எல்லாம் தயாரா இருக்கு” என்றார். திரும்பி என் மனைவியை ஒரு பார்வை பார்த்தேன். உன்னாலதான் இவ்வளவு தாமதம் என்பது போல.
மணி மதியம் 1.30. மேலாளர். “இரண்டு வருடமா நீங்க இந்த சேவையை செஞ்சுகிட்டு இருக்கீங்க. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. இப்பல்லாம் ஆதரவற்றோர் இல்லங்களை யார் ஏறெடுத்துப் பார்க்கிறாங்க?” என்றார். பெருமிதத்துடன் மறுபடியும் மனைவியைப் பார்த்தேன்.
“வழக்கமா நாங்க குழந்தைகளுக்கு 1 மணிக்கே மதிய சாப்பாடு கொடுத்துடுவோம். பெரியவங்களுக்கு 1.30க்கு கொடுப்போம் என்றார். பரவாயில்ல.. ஆரம்பிச்சுடலாமா” என்றார். நான் தலையசைத்தேன். அவர் இல்லத்தின் சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்ல நாங்கள் அவரை பின்தொடர்ந்தோம்.

மொத்தம் 51 குழந்தைகள். 18 பெரியவர்கள் இருக்காங்க எனச் சொல்லிக்கொண்டே மேலாளர் கூடத்தின் உள் நுழைந்தார். உள்ளே எல்லா குழந்தைகளும் சாப்பாட்டு தட்டைக் கையில் வைத்துக் கொண்டு ஒழுங்கு வரிசையில் நின்றிருந்தனர். எங்களைப் பார்த்ததும் தட்டை கீழே வைத்து விட்டு எங்களைக் கும்பிட்டனர்.
மேலாளர் குழந்தைகளிடம் பேச ஆரப்பித்தார். குழந்தைகளா… இன்னைக்கு நம்ம ‘ஆடலரசு’ ஐயா குடும்பம் நமக்கு மதியச் சாப்பாடு போடறாங்க. அவங்களுக்கு வணக்கம் சொல்லுங்க என்றார். எல்லாக் குழந்தைகளும் ஒரே குரலில் வணக்கம் ஐயா என்றார்கள். இப்ப முதல்ல கடவுள் வாழ்த்துப் பாடிட்டு அப்புறம் சாப்பாடு சாப்பிடலாம். பாடுங்க என்றார். வாழ்த்தைப் பாடிட்டு பின்னர் எங்கள் குடும்பம் நன்கு வாழ வேண்டும் என்று வாழ்த்து அவர் சொல்ல குழந்தைகளும் அதை திருப்பிச் சொன்னார்கள்.
விருந்து சாப்பாடு பரிமாறப்பட்டது. நான் என் மனைவியைப்பார்த்து அவர்களுடன் சேர்ந்து பரிமாறச் சொன்னேன். அவளும் சேர்ந்து கொள்ள எல்லாருக்கும் எல்லா பண்டங்களும் கிடைத்து விட்டதா என சரி பார்த்தேன். இன்னொரு இனிப்பு வேண்டும் என்ற குழந்தைகளுக்கு என் கையாலேயே பரிமாறினேன்.
சாப்பாடு முடிந்தவுடன் சில குழந்தைகளிடம் சாப்பாடு எப்படி என்று விசாரித்தேன். அவர்கள் நன்றாக இருந்தது என்பது போல தலையசைத்தனர். பார்த்தாயா இதைவிட வேற என்ன மகிழ்ச்சி வேண்டும் என்பது போல என் மனைவியைப் பார்த்தேன். சில பெரியவர்களிடமும் சாப்பாடு பற்றி பேசினேன். அவர்களும் தலையசைத்தனர்.

மனைவி குழந்தைகளை இல்லத்தின் அலுவலகத்தில் விட்டு விட்டு ஆதரவற்றோர் தங்கும் இடத்திற்கு உள் சென்றேன். யாரோ என்னைக் கூப்பிட்டது போல இருந்தது. திரும்பிப் பார்த்தேன். ஒரு பெரியவர் என்னைக் கையை அசைத்துக் கூப்பிட்டார். வசதியாக வாழ்ந்தவர் போலத் தெரிந்தது. அவரை நெருங்கி என்ன ஐயா வேண்டும் என்றேன். அவர் சொல்வதற்கு தயங்கினார். சாப்பிட்டிங்களா? வேறு ஏதாவது வேணுமா என்று கேட்டேன். இல்லையென்பது போல தலையசைத்தார்.
உங்ககிட்டே கொஞ்சம் பேசலாமா என்றார். தாராளமாக சொல்லுங்க என்றேன். எதைப்பத்தி சாப்பாடு பத்தியா? ஏதாவது பண்டம் புதிதாக சேர்க்கணுமா? என்றேன். அதைப்பத்தி இல்லீங்க தம்பி. இது வேற என்றார். அங்கேயிருந்த சிறிது உயரமான கல்லின் மேல் அமர்ந்து கொண்டு எதாயிருந்தாலும் தயங்காம சொல்லுங்க பெரியவரே என்றேன்.
இந்த மாதிரி விருந்து போடறதை இனிமே பண்ணாதீங்க தம்பி என்றார். படக்கென்று கல்லில் இருந்து இறங்கி என்ன சொல்றீங்க பெரியவரே என்று பதட்டமாகக் கேட்டேன். பதட்டப்படாதீங்க தம்பி பொறுமையா கேளுங்க. இல்லத்தை நடத்துற பெரியவர் பெரியமனசு உள்ளவர். அவருகிட்ட இருக்கிற வசதிய வச்சுகிட்டு இதை நடத்திக்கிட்டு வர்றார். அதனால இங்க இருக்கிறவங்களுக்கு அவரால என்ன முடியுதோ அதை வச்சு எங்க எல்லோருக்கும் உணவளிச்சிகிட்டு இருக்கார்.
நீங்க விருந்து சாப்பாடு போடும்போது இங்க இருக்கிறவங்களுக்கு நம்மலால தினமும் இப்படி சாப்பிடமுடியலேன்னு வருத்தம் வராதா? பெரியவங்களை விடுங்க. குழந்தைகளுக்கு என்ன தெரியும்? வருத்தப்படாதா? நீங்க வந்துட்டுப்போறது வருடத்துக்கு ஒரு நாள். அதுக்கு மறுநாள் சாப்பிடும்போது அல்லது அடுத்த வேளை சாப்பிடும்போது இந்தக்குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கும்னு உங்களுக்குத் தெரியாது. பார்க்கிற எங்களுக்குதான் தெரியும். பக்கத்தில் இருந்த கல்லில் கையை சற்று ஊன்றிக் கொண்டேன்
உங்க குழந்தை நல்லா ஆடை உடுத்தி உங்ககிட்ட கொஞ்சி நீங்க அதுகிட்ட கொஞ்சறதை பார்க்கற இந்தக் குழந்தைகளுக்கு நாம மட்டும் ஏனிப்படி இருக்கிறோம்ன்னு வருத்தம் வராதா தம்பி.
அதுமட்டுமில்லாம நாங்களும் உங்களைப்போல மனுசங்க தானே தம்பி? நாங்க அனாதையா பிறக்கலே. அனாதையா ஆக்கப்பட்டவங்கதான். எங்களை ஒரு காட்சிப்பொருளா பார்க்கும்போது அவமானமா உணர மாட்டோமா? படிச்சவங்க நீங்க நான் சொல்றது உங்களுக்குப்புரியும்னு நினைக்கிறேன் என்றார்.
அதற்குள் என் குழந்தை அங்கே ஓடி வந்துவிட பெரியவரை திரும்பிக்கூட பாராமல் குழந்தையை தூக்கிக் கொண்டு திரும்பினேன்.

ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் விடைபெற்றுக்கொண்டு காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் யாரிடமும் சரியாகப் பேசவில்லை. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க மனைவி கேட்டாள். ஒன்றுமில்லை. தலைவலி எனச்சொல்லி சமாளித்தேன். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. ஆதரவற்றோர் இல்லம், பெரியவர், என் மனைவி, குழந்தை இப்படி மாறிமாறி ஒரே சிந்தனை. எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. காலை ஆறு மணி இருக்கும். பக்கத்துக் கோயிலிருந்து ‘திருவெம்பாவை’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. மனசு லேசாக இருந்தது. நேற்றைய நிகழ்ச்சிகளை சிறிது நேரம் அசை போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு முடிவுக்கு வந்தேன். இல்லை.. இல்லை… இரு முடிவுக்கு வந்தேன். ஒன்று இனிமேல் ஆதரவற்றோர் இல்லத்துக்கு பண உதவி அல்லது பொருள் உதவி மட்டும் செய்வது. இன்னொன்று எனது சொந்தக்காரர்கள் மற்றும் தெரிந்தவர்கள் யாராவது ஆதரவில்லாமல் இருக்கிறார்களா எனப்பார்த்து அவர்களுக்கு உதவி செய்வது.
குளித்து, நெற்றி நிறைய திருநீறு அணிந்து சொக்கநாதனைக் கும்பிட்டு விட்டு சாப்பிட அமர்ந்தேன். “இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க” என்றாள் என் மனைவி.

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sun Oct 14, 2012 11:03 pm

நல்ல கருத்து. நல்ல கதை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக