புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
53 Posts - 46%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
44 Posts - 39%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
3 Posts - 3%
jairam
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
1 Post - 1%
சிவா
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
174 Posts - 49%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
15 Posts - 4%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
6 Posts - 2%
Jenila
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
4 Posts - 1%
jairam
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
3 Posts - 1%
Rutu
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 36 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 36 of 36 Previous  1 ... 19 ... 34, 35, 36

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 02, 2016 9:13 pm

அன்பர்களே >>> அனைத்தும் அருமை அருமை.

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Aug 15, 2016 10:16 am

கண்ணே, மணியே, கட்டிக் கரும்பே!
(முச்சீர்க் குறள் வெண்செந்துறை)

பெண்
கண்ணே என்றால் கண்ணாடிக்
கண்ணென் றுன்றன் எள்ளுரையோ?
கண்ணில் ஆடும் தோற்றமெலாம்
கண்ணா டிசெயும் மாயமன்றோ?
கண்ணுக் கின்றைய கற்பனையாய்
பெண்ணைச் சொல்லப் பொருளுண்டோ?

ஆண்
கணினிக் கேமரா கண்போல்
அணியாய்க் காண்பதால் கண்ணென்றேன்
கண்ணே நீயும் கண்ணாடி
கண்ணே நானும் கண்ணாடி
இருவிழிப் பொருத்தம் இப்படியாய்
வருவது நாலாய் வளமன்றோ?

பெண்
மணியே என்றார் மங்கையெனை
மணியே என்சம் பாத்தியமாய்
மணியில் லாமல் உழைமாடாய்
மணிநீ என்னைக் காண்பாயோ?

ஆண்
மணிபோல் வெட்டித் துண்டாக்கி
அணியாய்ப் பேசும் அருமங்கை
மணியே உன்சம் பாத்தியமேல்
மணியாய்க் காய்கறி அரிந்தேதான்
மணியில் உணவும் சமைப்பாயே
பணியில் நானும் உதவிடவே!
மணிநான் மணிமே கலைநீயே
பிணிப்பேர் பொருத்தம் பெருமையன்றோ?

பெண்
கட்டிக் கரும்பே நானென்றே
சுட்டித் தனமாய்ச் சொல்வாயோ?
கரும்பாய் என்னைப் பிழிவாயோ?
வருமுன் காப்பேன் வனமங்கை!

ஆண்
கரும்புச் சாறு இருவரும்நாம்
அரும்பும் மாலைச் சாலையிலே
விரும்பிப் பருகுவோம் பலநாட்கள்
கரும்பின் மறுபெயர் அறிவாயே
கன்னற் சாறாய் உன்னுள்ளம்
கன்னம் இழைத்துநான் கண்டேனே
கன்னல் என்றே இனிநானும்
என்றும் உன்னை அழைப்பேனே!

பெண்
கனியே தேனே என்றாரே
வனிதை எங்களைப் புலவருமே
உவமை சுட்டும் உடலாக
உவந்தே நீயும் காண்பாயோ?

ஆண்
நவநா கரிகப் பெண்மணிநீ
உவமைப் பொருளே வேறன்பேன்
கணினித் தகவற் கனியேநீ ... [கனி=சுரங்கம்]
அணிமலர்த் தேனாய் உன்பேச்சு
கனியும் உள்ளம் தேனாக
வனிதை உன்னைக் காண்பேன்நான்
காலம் காலமாய்ச் சொன்னதெலாம்
ஆலம் விழுதாய் நிற்பதன்றோ?
சொல்லின் பொருள்தான் வேறாகிக்
கல்வியில் கருத்தில் சமமாவோம்.

இருவரும்
(இருசீர்க் குறள் வெண்செந்துறை)

மணிநீமணி மேகலைநான்
கணினித்துறை கம்பெனியின்
பணியேநமைச் சேர்த்ததுவே
மணிநாம்மிகச் சேமித்தே
அணியாயிரு வாரிசுகள்
துணிவோம்நம் வாழ்வினிலே!

--ரமணி, 01/07/2016

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Aug 25, 2016 11:00 am

சென்மாட்டமித் துதி
(நேரிசை வெண்பா)

இலையோ மலரோ இவையின்றேல் புல்லோ
அலையும் மனத்தின் அகந்தை - குலையவே
தந்தால் வருவேன் தயங்காமல் என்றாயே
மொந்தை உளந்தருமே முள்! ... 1

கண்ணன் குழந்தையாய்க் காதலனாய்த் தோழனாய்
எண்ணம் சிதைத்துள்ளே இன்பமாய்ப் - பண்ணும்
குருவாய் எனதகந்தை கொள்ளும் இறையாய்
உருக்கொள உய்யும் உயிர். ... 2

குழலில் மயிற்பீலி கொண்டான்கைப் பற்றும்
குழலூதி உள்ளத்தைக் கொண்டான் - குழல்மூச்சாய்
என்னுள் இறங்கும் எரிவாயுத் தேரோட்டி
தன்னுள்ளே கொள்வானென் தான். ... 3

--ரமணி, 25/08/2016

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Mar 24, 2017 9:16 am

சொல்விளையாடல் 1. தொடும்-தொடலை
(கலிவிருத்தம்)

(பதினாறு வயதில் மாண்ட ஒரு சிறுவனின் ஈமச் சடங்கில் இரு புலவர்களுக் கிடையில் உரையாடல்)

தொடுமெனச் சொன்னார் தொடலை யென்றேன்
சுடுமெனச் சொன்னார் சுடலை யென்றேன்
அடுமெனச் சொன்னார் அடலை யென்றேன்
விடுமெனச் சொன்னார் விடலை யென்றேன்!

[தொடலை = மாலை; அடலை = சாம்பல்; சுடலை = சுடுகாடு;
விடலை = பதினாறு வயதுச் சிறுவன்]

பொருள்:
புலவரவர்
தொடும் பிணத்தை என்றார்; நான் தொடலை (மாலை) என்றேன்.
சுடும் நெருப்பு என்றார்; ஆம், சுடலை (சுடுகாடு) என்றேன்.
அடும் (அழித்துவிடும் ) என்றார்; முடிவில் அடலை (சாம்பல்) என்றேன்.
சரி விடும் என்றார்; விடலை (பதினாறு வயதுச் சிறுவன்) என்றேன்!

--ரமணி, 16/03/2017

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Apr 15, 2017 7:13 pm

சொல்விளையாடல் 2. உழல்-உழலை
(கலிவிருத்தம்)

உழல்கிறேன் நாளும் கழுத்தில் உழலை
சுழல்கொளும் மனத்தில் இல்லை சுழலை
அழல்வணன் உளத்திலை விரைவின் அழலை
கழல்கள் பணியேன் வினைகளோ கழலை!

[உழலை = செக்கு மரத்தடி; சுழலை = வஞ்சகம்;
அழல்வணன் = நெருப்புபோல் வண்ணம்கொண்ட சிவன்;
அழலை = களைப்பு;
கழலை = கழுத்து, வயிற்றில் வரும் பெருங் கட்டி நோய்]

--ரமணி, 16/03/2017

*****

சொல்விளையாடல் 3. புத்தகம்-முத்தமிழ்
(கலிவிருத்தம்)

புத்தகம் வளர்த்ததால் புத்தகம் விட்டேன்
முத்தமிழ்ச் சொல்லற முத்தமிழ் மனத்தில்
எத்தனம் போதும் எத்தனமும் வீணெனும்
வித்தகம் எழுந்து வித்தகம் விழுந்ததே.

பொருள்
புத்து-அகம் வளர்த்ததால் புத்தகம் விட்டேன்
முத்தமிழ்ச் சொல்லற முத்து-அமிழ் மனத்தில்
எத்தனம் போதும் எத்-தனமும் வீணெனும்
வித்து-அகம் எழுந்து வித்தகம் விழுந்ததே.

--ரமணி, 16/03/2017

*****


jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Sat Apr 15, 2017 11:16 pm

ரமணி wrote:சென்மாட்டமித் துதி
(நேரிசை வெண்பா)

இலையோ மலரோ இவையின்றேல் புல்லோ
அலையும் மனத்தின் அகந்தை - குலையவே
தந்தால் வருவேன் தயங்காமல் என்றாயே
மொந்தை உளந்தருமே முள்! ... 1

கண்ணன் குழந்தையாய்க் காதலனாய்த் தோழனாய்
எண்ணம் சிதைத்துள்ளே இன்பமாய்ப் - பண்ணும்
குருவாய் எனதகந்தை கொள்ளும் இறையாய்
உருக்கொள உய்யும் உயிர். ... 2

குழலில் மயிற்பீலி கொண்டான்கைப் பற்றும்
குழலூதி உள்ளத்தைக் கொண்டான் - குழல்மூச்சாய்
என்னுள் இறங்கும் எரிவாயுத் தேரோட்டி
தன்னுள்ளே கொள்வானென் தான். ... 3

--
மேற்கோள் செய்த பதிவு: 1219895

பழைய பாக்கள் படிக்க ஆர்வமாக இருப்பதால் இது எனக்கு மிகவும் பிடித்தது மற்றும் உபயோகமாக இருக்கிறது.

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 04, 2017 11:46 am

சொல்விளையாடல் 4. சிந்தனை-எந்திரி
(கலிவிருத்தம்)

சிந்தனை மனத்தில் சிந்தனை குறைத்தே
எந்திரி வாழ்வில் எந்திரி கண்டதில்
கந்துகம் மனத்தில் கந்துகந்து நிற்க
வந்தது போக வந்தது நின்றது!

பொருள்
சிந்து (கடல்) அனை (அனைய = போன்ற, கடைக்குறை விகாரம்) மனத்தில் சிந்தனையைக் குறைத்தே
எந்து-((என்ன, எப்படி என்று) இரி (ஓடும்) வாழ்வில், எந்திரி (பொம்மலாட்டப் பாவையை ஆட்டுவிப்போனைக்) கண்டதில்
கந்துகம் (மனக் குதிரை) மனத்தில் கந்து (தூண்) உகந்து நிற்க
வந்தது எல்லாம் போனது ஆகி, இப்போது வந்த-அது (இந்த ஞானம்) நின்றது!

--ரமணி, 16/03/2017

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Dec 01, 2017 10:50 am

#ரமணி_பிரதோஷம்
பிரதோஷத் துதி: ஒத்திவைத்தே ஓய்ந்தேனே!
(குறும்பா)
(சிவன்: பிரதோஷத்துதி)


ஒத்திவைத்தே ஒத்திவைத்தே ஓய்ந்தேனே
சித்தமெலாம் பித்தேறி மாய்ந்தேனே
.. கண்ணெதிரே தெரிவதெலாம்
.. எண்ணெழுத்தாய் அறிவதனால்
அத்தனையும் உண்மையெனக் காய்ந்தேனே. ... 1

கற்பனையே விற்பனமாய்க் கொண்டேனே
அற்பமெலாம் அற்புதமாய்க் கண்டேனே
.. ஆன்மவொளி பேணேனே
.. பான்மையதில் காணேனே
சிற்சபையின் சன்னிதியை அண்டேனே. ... 2

அஞ்செழுத்துக் காதொலிக்கும் நேரமெலாம்
நெஞ்செனிலே ஏதேதோ வேருறுமே
.. வேதவொலிப் பண்ணிசையில்
.. காதலிலே கண்ணசையும்
கொஞ்சமேனும் ஏற்றமிலாச் சீரழிவே. ... 3

மூவறமும் நிலைநிற்கும் வாழ்வினிலே
ஆவதெலாம் ஆனதெனும் தாழ்வினிலே
.. முத்திநிலை நாடேனே
.. அத்தனுனைத் தேடேனே
போவதுவும் வருவதுவும் ஊழ்வினையோ? ... 4

கத்துகடல் நஞ்செடுத்தே உண்டவனே
முத்தெனக்க ழுத்தினிலே கொண்டவனே
.. என்னுளத்தில் தெளிவுறவே
.. உன்னுருவின் ஒளியருளே
சத்தியத்தின் தத்துவமாய் நின்றவனே. ... 5

--ரமணி, 01/12/2017

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Dec 15, 2017 9:44 am

பிரதோஷத் துதி: எவ்வித மெனினும் காத்திருப்பேன்!
(அறுசீர் விருத்தம்: விளம் மா காய் => அரையடி)

ஆட்டுவித் தாலும் ஆடாத
. அகமென தாகில் என்செய்வேன்
கூட்டுவித் தாலும் கூடாத
. குணமென தாகில் என்செய்வேன்
தேட்டுவித் தாலும் தேடாத
. தினவென தாகில் என்செய்வேன்
ஓட்டுவித் தாலும் ஓடாத
. ஒட்டுத லாகில் என்செய்வேன்? ... 1

காட்டுவித் தாலும் காணாத
. கல்மன மாகில் என்செய்வேன்
பாட்டுவித் தாலும் பாடாத
. பண்பென தாகில் என்செய்வேன்
நாட்டுவித் தாலும் நாடாத
. நலிவென தாகில் என்செய்வேன்
பூட்டுவித் தாலும் பூட்டாத
. புத்தியைக் கொண்டேன் என்செய்வேன்? ... 2

இவ்விதம் என்னை இயக்குவதும்
. ஈசர்-உம் செயலாய் எண்ணுவதோ
செவ்விதின் என்னைச் செப்பனிடும்
. திருவுளம் இந்நாள் உமக்கிலையோ
வெவ்வினை சூழ வாழ்வதுதான்
. விதியெனக் கென்றே சொல்வீரோ
எவ்வித மெனினும் காத்திருப்பேன்
. எண்குணன் என்னை ஆட்கொளவே! ... 3

--ரமணி, 15/12/2017

*****

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 17, 2018 2:35 pm

மீண்டும் உறவுகளின் பார்வைக்கு!



ரமணியின் கவிதைகள் - Page 36 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 36 of 36 Previous  1 ... 19 ... 34, 35, 36

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக