புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
jairam
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோதை நாச்சியார் தாலாட்டு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:03 pm

First topic message reminder :

கோதை நாச்சியார் தாலாட்டு : ஒரு முன்னுரை

கொண்டல் வண்ணனைக் குழவியாய்க் கண்டு குதூகலித்துப் பாடிய விட்டு சித்தரின் மகள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள். குழல் இனிது, யாழ் இனிது, மழழைச் சொல் அமுதினிது என்று இறைவனைப் பிள்ளையாய்க் கண்டு ஆனந்தித்துப் பாடிய பெரியாழ்வாழ்வருக்கு - உண்மையான தூண்டுதல் (inspiration) ஆண்டாள் என்ற இளம் சிட்டிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும். "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! ஆடிவரும் தேரே!" என்று கண்ணனைப் பாடிய பாரதியின் அழியாக் கவிதைக்கு அவர் மகள் காரணியாக இருந்தது போல்! இப்படியானதொரு சிந்தனை சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு வைணவ அன்பருக்கு ஏற்பட்டு அவர், விட்டு சித்தரின் வழியில், அவரது வரிகளை உரிமையுடன் கையாண்டு அவரது மகளான கோதை நாச்சியாருக்கு ஒரு தாலாட்டுப் பாடியுள்ளார். ஆழ்வார்திருநகரி என்னும் ஊர் தமிழ்த் தாத்தா உ.வே.சா, மகாவித்வான் இரா.இராகவையங்கார் போன்றோருக்குப் பண்டைத் தமிழ்க் கருவூலங்களைத் தந்த புண்ணிய பூமியாகும். பழந்தமிழ்நூல் வெளியீடுகளுள் பத்துப்பாட்டு, பதிற்றுப் பத்து, பரிபாடல், புறநானூறு முதலிய நூற்பதிப்புகளுக்கு ஆழ்வார்திருநகரி ஏட்டுப் பிரதிகள் மிகவும் உபயோகமாயிருந்தன என்பது உ.வே.சாவின் கூற்று. அத்தகைய ஆழ்வார்திருநகரியில் கிடைத்திருக்கும் மற்றுமொரு தமிழ்க் கருவூலம்தான், "கோதை நாச்சியார் தாலாட்டு". ஏடுகளில் கண்டபடி 1928-ல் ஆழ்வர்திருநகரி திருஞான முத்திரைக் கோவை பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

ஆக்கியோன் பெயர் ஏட்டில் அழிந்து விட்டதாலோ, இல்லை , "நாடோ டிப் பாட்டுக்கு தாய் தந்தை யாரோ?" எனும் படியாகவோ இந்நூலை ஆக்கியோன் பெயர் விட்டுப் போயிருக்கிறது. பழம் ஓலைச் சுவடிகளைச் சரியாகப் பராமரிக்கவில்லையெனில் அவை பூச்சிகளின் வாய்க்கு இரையாகி அழிந்துவிடுகின்றன. இந்நூலில் பல வரிகள் அச்சிடப் படாததற்குக் காரணம் அவை வாசிக்கத் தக்கதாய் இல்லை என்று ஊகிக்கலாம். இல்லை, வாய் மொழியாகக் கேட்ட பாடலைப் பதிவு செய்தவருக்கு ஞாபகத்தில் வராத வரிகளை எழுதாமல் விட்டு விட்டார் என்றும் கருதலாம். 1928 புத்தகம் இது பற்றி ஒரு சேதியும் தராமல் நம்மை இப்படியெல்லாம் ஊகிக்கவிடுகிறது.

தாலாட்டு ஒரு மக்கள் கலை. அடுப்படிப் பெண்களின் கவித்துவத் தூறல். தவழும் குழந்தைக்கு தூளிக் கயிற்றில் அன்பைப் பாய்ச்சும் மந்திரப் பாடல்கள். தூளியில் உறங்கும் எளிமையின் உருவைத் திருமகளாகக் காணும் தாயின் பரிவைப் பதிவு செய்யும் பாடல்கள் தாலாட்டு. திருமகளே உரு எடுத்து விட்டு சித்தருக்கு மகளாகப் பிறந்த பின், அவளுக்குத் தாலாட்டுப் பாடாமல் வேறு யாருக்குப் பாடுவது? வைணவம் என்பதின் மறு பெயர் அன்பு, பரிவு, காதல் என்பவை.

முதல் மூவருக்கிடையில் இடித்துப் பழகும் தோழனாக நாராணன் இடையில் புகுந்தான். வாள் கொண்டு போர் செய்யும் வேல் மாந்தர் கள்ளத் தொழில் செய்த போது, மறைமகன் திருடனாக வந்து வழி மறைத்தான், பறைமகன் தானொருவன் பரம்பொருளைத் தொழத் தடை சொன்னபோது மறை சொல்லும் நூலார் தலைமேல் தூக்க வைத்தான் நம் பெருமாளான, "நீதி வானவன்!", கள்ளமற்ற விட்டு சித்தர் உள்ளம் கவர்ந்து வெண்ணெய் உண்ட வாயனாக வளைய வந்தான் வீட்டு முற்றத்தில் மணிவண்ணன், ஆனால், அவர் மகள் கோதைக்கோ, "மானிடற்கு மணமென்ற பேச்சுப் படின் மரிதிடுவேன்" எனப் பேச வைத்து மணவாளனாக வந்து உய்யக் கொண்டான். இப்படி வீட்டுக் கொல்லையில் வளைய வரும் கன்று போல், கை கொண்டு நெருடும் அன்பர்க்கு கழுத்தை தரும் பசும் கன்று போல் அன்று முதல் இன்றுவரை வளைய, வளைய வருகிறான், "பண்டமெல்லாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப், பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து, நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்" வளைய, வளைய வருகிறான் மாதவன். இத்தனைச் சுகம் தரும் வைணவத்தின் மறுபெயர் அன்பு, காதல், பரிவு என்றால் மிகையோ?

எனவே பரிவுடன் வரும் தாலாட்டில் வைணவத்தின் மெல்லிசை குழல் போல் ஒலிப்பது தவறோ? தவறில்லை என்று சொல்லித் தாலாட்டுப் பாடினர் முன்னைய மாந்தர். கண்ணனுக்குத் தலாட்டு பலபாடி வைத்து விட்டார் புதுவைப் பட்டர் என்று சொல்லி, கோதைக்குத் தாலாட்டுப் பாடினர் கொங்கைப் பெண்டிர்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:09 pm

ஊரார் உறமுறையார் உற்றார்கள் பெற்றோர்கள்
சீரான ஆழ்வாரைச் சிறப்பாகப் பெண்கேழ்க்க; 91

அப்போது விஷ்ணுசித்தன் அழகான கோதையரை
செப்பமுடன் மடியில் வைத்துத் திருமாலைதான் கொடுத்து 92

'உனக்கேதம் பிள்ளைகட் குகந்தே மலர்சூடி
மனைக் காவலனென்றும் மகிழ்ந்தேத்தி வாழும் என்றார். 93

அவ்வார்த்தை கேட்டு அழகான கோதையரும்
செவ்வான வார்த்தையென்று திரும்பியே தானுரைப்பாள் 94

வையம் புகழய்யா மானிடவர் பதியன்று!
"உய்யும் பெருமாள் உயர்சோலை மலையழகர் 95

இவர்கள் தாம்பதி இரண்டாம் பதியரில்லை!!
அவர்கள் தம்பாட்டில் அனுப்பியே வையும்!!! என்றார் 96

இவ்வார்த்தை கேட்டு இனத்தோரெல்லோரும்
செவ்வான வடிதேடித் தேசத்தே போனார்கள் 97

போனபின்பு விஷ்ணுசித்தன் பொன்னே புனமயிலே
ஞானமுடன் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார். 98

இப்படிக் கோதையரும் இருந்து வளருகையில்,
ஒப்பிலாள்நோம்பு உகந்துதான் நோர்க்கவென்று 99

மணிவண்ணர் தனைத்தேடி மனக்கருத்தை யவர்க்குரைத்துப்
பணிசெய்த விருதுகளைப் பாரிப்பாய்த் தான்கேழ்க்க! 100

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:09 pm

மகிழ்ந்து மணி வண்ணன் மனமுவந்து மறையோர்க்குப்
புகழ்ந்துதான் உத்தரவு பொருமுதலுந் தான்கொடுக்க!! 101

உத்தரவு வாங்கி உலகெலாந் தான்நிறைய;
'ந்஢த்தமொரு நோன்பு நேத்தியாய்த் தான்குளித்து 102

மாயவனை நோக்கி வந்தி மலரெடுத்து
மாயவனைப் போத்தி மணம்புணர வேணுமென்று 103

மார்கழி நீராடி மகிழ்ந்து திருப்பாவை
சீர்கள் குறையாமல் சிறப்பாகத் தான்பாடிப் 104

பாடிப் பறைகொண்டு பரமனுக்குப் பூமாலை
சூடிக் கொடுத்து தொழுது நினைத்திருக்க' 105

மாயவனும் வாராமல் மாலைகளுந் தாராமல்
ஆயன்முகங் காட்டாமல் ஆரு மனுப்பாமல் 106

இப்படிக்குச் செய்தபிழை யேதென்று நானறியேன்
செப்படி தோழியரே! திங்கள்முகக் கன்னியரே, 107

தோழியரும் தானுரைப்பாள் 'துய்யவட வேங்கடவன்
ஆழியுடன் வந்து அழகாய் மணம்புணர்வார்' 108

என்றுசொலக் கோதையும் இதையுங் குழைந்து நிதம்
அன்றில் குயில்மேகம் அரங்கருக்குத் தூதுவிடத், 109

'தூதுவிட்டும் வாராமல் துய்ய வேங்கடவன்
எதிரிருந்து கொண்டார் இனிமேல் மனஞ்சகியேன் 110

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:09 pm

என்று மனம்நொந்து இருக்க நிதங் கோதையரும்
சென்றுவந்து தோழியர்கள் செப்பவே பாவையர்க்கு 111

'அச்சேதி கேட்டு ஆழ்வார் நடுநடுங்கி
அச்சுதனைப் பாடும் அழகான கோதையர்க்குச் 112

சென்றுவந்து பிள்ளைவிடாய் தீர்த்த திருமகட்கு
மன்றலுஞ் செய்யாமல் வச்சிருந்தால் மோசம்வரும், 113

என்று திருமகளை எடுத்துச் சிவிகைவைச்சு
சென்று திருவரங்கம் சேவிக்க வேணுமென்று 114

நல்லநாள் பார்த்து நடந்து திருவரங்கம்
எல்லையுங் கிட்டி இருந்துதென் காவிரியில் 115

நீராட்டஞ் செய்து நெடும்போது செபஞ்செய்து
சீராட்ட வந்து திருமகளத் தான்தேடப் 116

பல்லக்கில் காணாமல் பந்தொடியார் காணாமல்
எல்லாருங் காணாமல் என்மகளை யாரெடுத்தார் 117

நின்று மனம்நொந்து நாற்றிசையும் தான்தேடி
சென்று திருவரங்கத் திருக்கோயில் தான்புகுந்து 118

ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்! 119

என்றாழ்வா ருஞ்சொல்ல இரங்கித் திருவரங்கர்
சென்றெங்களய்யர் திருவடியைத் தான்தொழுவார்! 120

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:10 pm

அப்போது கோதையரும் அரங்கர் அடியைவிட்டு
இப்போதும் அய்யர் இணையடியைத் தான்தொழுதாள்!! 121

வாழ்த்தியே அய்யர் மகிழ்ந்து மகள்தனக்கும்
வாழ்த்தியே முற்று மகிழ்ந்து ரெங்கருக்கும். 122

வாழிமுதல் பாடி மங்களமும் தான்பாடி
'ஆழிநீர் வண்ணனுக்கு அழகாய் மணம்புணர்வாய்! 123

என்று சொல்லி யாழ்வாரும் இன்பமாய் ரெங்கர்தனை
மன்றல்செய்ய வாருமய்யா மணவாளா என்றழைத்தார்! 124

பங்குனி மாசப் பவர்ணமையில் உத்திரத்தில்
அங்கூரஞ் செய்து அழகாய் மணம்புணர 125

வாருமைய்யா வென்று மகிழ்ந்தேத்தி ரெங்கரையும்
சீரணிந்த கோதைதனைச் சிறப்பாகத் தானழைக்க!!! 126

அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை விடைகொடுத்துத்
தப்பாமல் நான்வருவேன் தார்குழலி தன்னோடும். 127

என்றுசொல்லி ஆழ்வாரும் ஏகியே வில்லிபுத்தூர்
சென்றுதிரு மாளிகையில் சிறப்பாகத் தானிருந்து 128

கோதையருக்கு மன்றல் கோஷமாய்ச் செய்யவென்று
..................................................................................... 129

சீதையர்க்கு மன்றல் சிறப்பாய்ச் செய்யவென்று,
ஓலை யெழுதி உலகெலாம் நாளனுப்பிக் 130

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:10 pm

..............................................................
கரும்பினால் கால்நிறுத்திக் கற்பகத்தால் பந்தலிட்ட 131

கரும்பினிடை வாழை கட்டிக் கஞ்சமலர் தொங்கவிட்டுப்
................................................................ 132

பூக்கள் கொணர்ந்து பூம்பந்தல் தான்போட்டு
................................................................. 133

மாங்கனிகள் தூக்கி வருக்கைப் பிலாதூக்கித்
தேங்கனிகள் தூக்கிச் சிறப்பா யலங்கரித்து. 134

மேளமுடன் மத்தளமும் மேல்முரசுந் தானடிக்கக்
காளமுடன் நாகசுரம் கலந்து பரிமாற. 135

வானவர்கள் மலர்தூவி வந்து அடிபணியக்
கானவர்கள் பூக்கொய்து கலந்து பணிந்தேத்த. 136

இந்திரனும் எண்டிசையும் இறைஞ்சி மலர்தூவச்
சந்திரனுஞ் சூரியனும் சாமரங்கள் தான்போட. 137

ரத்னமணி யாசனமும் ரத்தினக் கம்பளியும்
சித்ரமணி மண்டபமும் செம்பொன் குறடுகளும். 138

ஆழ்வார் கிளையும் அயலோர்கள் எல்லோரும்
ஆழ்வார் திருமகளை அன்பாகப் போற்றவந்த 139

தூபம் கமழத் தொண்டர்களுந் தான்பாடத்
தீபம் துலங்க ஸ்ரீவைஷ்ண வோரிருக்க 140

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:10 pm

வேதந் துலங்க மேன்மேலும் சாஸ்திரங்கள்
கீதம் முழங்கக் கீர்த்தனங்கள் தான்முழங்க. 141

வாத்திமார் புல்லெடுத்து மறைகள் பலஓதப்.
................................................................ 142

பூரண கும்பமுதல் பொற்கலசம் தானும்வைத்து
நாரணனைப் போத்தி நான்மறைகள் தானோத. 143

இப்படிக்கு ஆழ்வாரும் எல்லாருங் காத்திருக்க
சத் புருடன் வாராமல் தாமசமாய்த் தானிருக்க. 144

கொற்றப் புள்ளியில் ரெங்கர் கொடிய வனங்கடந்து
வெற்றிச் சங்கூதி வில்லிபுத்தூர் தன்னில்வந்து. 145

மணவாள ராகிமணவறையில் தானிருந்து
மணஞ்செய்யும் வேளைகண்டு மறையோர்க்குத் தான்கொடுத்தார் 146

ஆடைமுத லாபரணம் அவனிமுதல் பால்பசுக்கள்
கோடைமுதல் தானங் கொடுத்து நிறைந்தபின்பு 147

மந்தரமார் கோடியுடுத்து மணமாலை
யந்தரி சூட்டி அழகான கோதையர்க்கு 148

மத்தளம்கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்தாலித் ததும்ப நிரைதரளப் பந்தலின்கண் 149

கைத்தலம் பத்திக் கலந்து பரிமாற.
....................................................... 150

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:10 pm

ஆழ்வார் திருமகளை அழகாகத் தான்வாங்கி. 151

மன்றலுஞ் செய்து மகிழ்ந்து மதுவர்க்கம்
கன்றலு மூன்று கழித்து அரங்கருந்தான் 152

அக்கினி வளர்த்து அழகா யலங்கரித்து
அக்கினியைப் போத்தி அக்ஷதையும் தான்தூவி 153

வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்.
..................................................................... 154

பஞ்சிலை நாணற் படுத்துப் பரிவைத்து
............................................................... 155

ஓமங்கள் செய்து ஒருக்காலும் மலர்தூவி
................................................................. 156

காசின் பணங்கள் கலந்துதா னெங் கொடுத்து
................................................................ 157

தீவலஞ் செய்து திரும்பி மனையில்வந்து
................................................................. 158

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பார்த்தவாய்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி 159

செம்மையுடைய திருக்கையால் தாழ்த்தி
அம்மி மிதித்து அருந்ததியும் தான்பார்த்து 160

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:11 pm

அரிமுதன் அச்சுதன் அங்கைமேலும் கைவைத்துப்
பொரி முகந்தபடிப் போத்தி மறையோரை 161

அக்ஷதைகள் வாங்கி அரங்கர் மணவரையில்
பக்ஷமுட னிருந்து பாக்கிலையுந் தான்போட்டுக் 162

கோதையுடன் கூடிக் குங்குமச் சப்பரத்தில்
சீதையுடன் கூடிச் சிறப்பாகத் தானிருந்தார். 163

அச்சேதி கேட்டு ஆழ்வார் மனமகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது. 164

என்று பெரியாழ்வார் இளகி மனமகிழ்ந்து
குன்று குடையெடுத்த கோனை மகிழ்ந்துநிதம். 165

வாழி முதல் பாடி மங்களமும் தான்பாட
ஆழிமுதல் பாடி ஆழ்வாரும் போற்றிநின்றார் 166

வாழும் புதுவைநகர் மாமறையோர் தான்வாழி
ஆழிநிறை வண்ணன்முதல் ஆழ்வார்கள் தான்வாழி 167

கோதையரும் வாழிகோயில்களும் தான்வாழி
சீதையரும்வாழி செகமுழுதும் தான்வாழி. 168

கோதை நாச்சியார் தாலாட்டு முற்றிற்று.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:15 pm

இத்தாலாட்டு பல வைபவங்கள் கொண்டது.

புதுவை நகர் என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரின் அழகு முதலில் சொல்லப்படுகிறது.

கரும்பு கலகலெனக் கஞ்ச மலர்விரிக்கக்
கரும்பு குழலூதத் தோகை மயில்விரிக்க 20
மாங்கனிகள் தூங்க மந்தி குதிகொள்ளத்
தேன்கூடு விம்மிச் செழித்து வழிந்தோடச் 21
.........
புன்னையும் பூக்கப் புறத்தே கிளிகூவ
அன்னமும் பேசும் அழகான தென்புதுவை 26

கன்னல் தமிழர் வாழ்வுடன் இணைந்த ஒரு பயிர். கன்னல் மொழிப்பெண்டிர் நிறைந்த தமிழ் மண்ணில் கன்னல் "கல, கலவென"ப் பேசுவதாகச் சொல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதே! கண்ணன் ஊரில் கரும்புகள் குழல் ஊதுவதும் இயல்பான ஒன்றே! கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்ற பெருமிதத்தில் தேன் கூடுகள் கூட நெஞ்சு விம்மி தேன் பாய்ச்சுவது கவிச் சுவையின் உச்சம்!!

அடுத்து, கோதை நாச்சியாரின் திரு அவதாரம்!

கிரேக்க, ரோம பழம் தொன்மங்களை விஞ்சும் தொன்மங்கள் தமிழில் உண்டு என்பதற்கு கோதையின்
கதை நல்ல உதாரணம். பூமி விண்டு கோதை பிறக்கிறாள். மண்ணின் மாது அவள்.

அப்போது விஷ்ணுசித்தன் அலர்மகளைத் தானெடுத்துச்
செப்பமுடன் "கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்"!! 35
"அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கும்,
மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி" என்றார்!!! 36

சீதை போல் பூமியின் புதல்வியான கோதை, கண்விழித்துச் சொல்லும் முதற் சொல், "மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி" என்பது! இவள் துளசியின் புதல்வி! காளிதாசன் சொல்லாத கவி நயம் ஒரு எளிய தமிழ்த் தாலாட்டில் கிடைப்பது, நாம் செய்த பாக்கியம்!

வைணவத் தொன்மங்களில் (myths), குரு பரம்பரைக் கதைகளில் மிகச் சாதாரணமாக பக்தனுக்கும், பரம்பொருளுக்கும் உரையாடல் நடக்கும். இது, இந்த நூற்றாண்டு "கோபல்ல கிராமம்" வரை கடை பிடிக்கப் படுகிறது (கோபல்ல கிராமத்தின் மூத்த குடிகள் பரம வைஷ்ணவர்கள்). அதனால்தான், திருவரங்கத்துயில் பரம்பொருள், "நம் பெருமாள்" என்றழைக்கப் படுகிறார். நம் பெருமாள், நம்மாழ்வார், நம் ஜீயர், எம்பெருமானார் என்று இவர்கள் கொண்டாடும் பந்தம் பக்தனைப் பிச்சேற்றுவது!!

பெண்கொணர்ந்த விஷ்ணுசித்தன் பெருமாளைத் தானோக்கிப்
'பெண்வந்த காரணமென் பெருமாளே சொல்லு" மென்றார் 39
அப்போது மணிவண்ணன் 'அழகான பெண்ணுனக்குச்
செப்பமுடன் வந்த திருக்கோதை நாயகியார் 40
என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை
உன்றன் மனைக்கு உகந்துதான் செல்லும்' என்றார். 41

அந்தச் சம்பிரதாயம் மாறாமல் விட்டு சித்தர் பெருமாளிடம் போய் பெண்வந்த காரணம் கேட்டு பேரும் வைத்து வருகிறார்.

விட்டு சித்தர், கண்ணனுக்குப் பாடிய வரிகளை ஒரு வைணவ உரிமையுடன் கோதைக்குப் பாடுவதாகச் சொல்வது, "தொண்டீர்! எல்லீரும் வாரீர், தொழுது, தொழுது நின்றார்த்தும்!" என்ற நம்மாழ்வாரின் எட்டாம் நூற்றாண்டு வைணவ அறைகூவல் (an address of Vaishnava congress) இன்றளவும் கேட்பதன் அறிகுறியென்றே கொள்ள வேண்டியுள்ளது. மேலும் அவரே சொல்வது போல், "தடங்கடல் பள்ளிப் பெருமான், தன்னுடைப் பூதங்களேயாய் (பூதம்=பக்தன்) கிடந்தும், இருந்தும், எழுந்தும், கீதம் பலபல பாடி, நடந்தும், பரந்தும், குனித்தும் நாடகம் செய்கின்றனவே" - கடல் வண்ணனே, பக்தர்கள் உருவில் வந்து நாடகம் ஆடுவதாகச் சொல்வதால், கண்ணனுக்குப் பாடிய சொல் கோதைக்கும் பொருந்துவது இயல்பானதே. அந்த உரிமையின் குரல் இத்தாலாட்டு முழுவதும் கேட்கிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 10:15 pm

படித்தேன் இன்னும் படிக்கணும் இதெல்லாம் அறியா தெரியா பேதை அண்ணா ...

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக