புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
60 Posts - 48%
heezulia
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
17 Posts - 2%
prajai
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
jairam
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 26, 2012 12:07 pm

First topic message reminder :

வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்

1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.

abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||

अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥

*****

2. செல்வமும் மானமும்

செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.

adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||

अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Dec 21, 2012 10:07 am

48. மிஞ்சினால் விஞ்சுவன

அணையா நெருப்பும் அடையாக் கடனும்
தணியா விரோதமும் தீராதே எஞ்சினால்
மீண்டும் வளர்ந்தோங்கித் தீண்டும்; இவையெல்லாம்
பூண்டோ(டு) அழித்தல் நலம்.

agniH sheShaM RuNaH seShaM shatruH sheShaM tathaiva cha |
punaH punaH pravardheta tasmAt sheShaM na kArayet ||

अग्निः शेषं ऋणः सेषं शत्रुः शेषं तथैव च ।
पुनः पुनः प्रवर्धेत तस्मात् शेषं न कारयेत् ॥

*****

49. காற்றும் நெருப்பும்

காட்டில் எரியும் நெருப்புக்குக் கைகொடுத்து
மூட்டிவிடும் தோழனாய் ஆதரிக்கும் காற்றதுவே
வீட்டில் எரியும் விளக்கை அணைத்துவிடும்
வல்லமையே தோழமை காண்.

vanAni dahato vahneH sakhA bhavati mArutaH |
sa eva dIpanAshAya kRushe kasyAsti sauhRudam ||

वनानि दहतो वह्नेः सखा भवति मारुतः ।
स एव दीपनाशाय कृशे कस्यास्ति सौहृदम् ॥

*****

50. எண்ணெயும் நீரும்

ஊர்விட்டூர் சென்று உரைசால் பெருமக்கள்
ஊரில் உடன்தங்கிக் கற்போனின் ஞானமே
நீரிட்ட எண்ணெய்த் துளிபோல் பரவிடப்
பேரும் புகழும் வரும்.

yastu sa~jcharate deshAn sevate yastu paNDitAn |
tasya vistAritA buddhistailabindurivAmbhasi ||

यस्तु सञ्चरते देशान् सेवते यस्तु पण्डितान् ।
तस्य विस्तारिता बुद्धिस्तैलबिन्दुरिवाम्भसि ॥

*****


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Dec 21, 2012 11:06 am

பயனுள்ள பதிவு,

பதினென் கீழ் கணக்கு தமிழ் நூல்களில் இதே பொருளில் பாடல்கள் இருப்பினும் அதிலுள்ள சிறந்த பாடல்களின் தொகுப்பாக இருக்கிறது இப்பதிவு.

வாழ்த்துகள், தொடருங்கள் .....



சதாசிவம்
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Dec 22, 2012 7:05 am

51. விந்தையான செல்வம்

கலைமக ளேநீ கனிவோ(டு) அருளும்
விலையிலாச் செல்வமிது வேறெங்கும் கிட்டாது
அள்ளிக் கொடுத்தாலோ பல்கிப் பெருகிடுமே
உள்வைத்தால் போகும் நசித்து.

apUrvaH kO&pi kosho&yaM vidyate tava bhArati |
vyayato vRuddhimAyAti vyayamAyAti sa~jchayAt ||

अपूर्वः कॊऽपि कोशोऽयं विद्यते तव भारति ।
व्ययतो वृद्धिमायाति व्ययमायाति सञ्चयात् ॥

*****

52. விளக்கு

இரவில் ஒளிரும் விளக்காம் நிலவு
இரவி பகலின் விளக்காம் -- அறமே
உகந்த விளக்காகும் மூவுலகில் -- அன்பு
மகனே குடும்ப விளக்கு.

pradoShE dIpakashchandraH prabhAte dIpako raviH |
trailokye dIpako dharmaH suputra kuladIpakaH ||

प्रदोषॆ दीपकश्चन्द्रः प्रभाते दीपको रविः ।
त्रैलोक्ये दीपको धर्मः सुपुत्र कुलदीपकः ॥

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 23, 2012 7:30 am

53. அணிகலன்

நல்லதோர் தோற்றம் மனிதனின் பொற்பாகும்
நல்லொழுக்கம் தோற்றத்தின் பொற்பு -- ஒழுக்கத்தின் ... ... ... [பொற்பு=அழகு, அணி, பொலிவு]
பொற்பாய் விளங்கும் அறிவு -- அறிவுக்கும்
பொற்பு பிழைபொறுக்கும் பண்பு.

narasyAbharaNam rUpaM rUpasyAbharaNaM guNaH |
guNasyAbharaNam ~jAnam ~jAnasyAbharaNam kShamA ||

नरस्याभरणम् रूपं रूपस्याभरणं गुणः ।
गुणस्याभरणम् ञानम् ञानस्याभरणम् क्षमा ॥

*****

54. பெரியோர் சிறியோர்

எண்ணுவதும் ஒன்று உரைப்பதும் ஒன்றுடன்
பண்ணுவதும் ஒன்று பெரியோர் -- சிறியோரோ
எண்ணுவது ஒன்றும் உரைப்பது ஒன்றும்பின்
பண்ணுவது ஒன்றும் என.

manasyekaM vachasyekaM karmaNyekaM mahAtmanAm |
manasyekaM vachasyekaM karmaNyekaM durAtmanAm ||

मनस्येकं वचस्येकं कर्मण्येकं महात्मनाम् ।
मनस्येकं वचस्येकं कर्मण्येकं दुरात्मनाम् ॥

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Dec 24, 2012 6:50 pm

55. கற்றது நிற்பது

கற்றதும் ஞானமும் கூர்மதியும் காட்டியே
மற்றோர்க்குச் சொல்ல முயல்வ தெளிதாகும்
சொற்றதைத் தானும் அறவழி மேற்கொண்டு
உற்றது காட்டுவோர் எங்கு?

paropadeshe pANDityaM sarvEShAM sukaraM nRuNAm |
dharma svayamanuShThAnaM kasyachittu mahAtmanaH ||

परोपदेशे पाण्डित्यं सर्वॆषां सुकरं नृणाम् ।
धर्म स्वयमनुष्ठानं कस्यचित्तु महात्मनः ॥

*****

56. சிறுவனின் சொல்

ஏற்றது என்றால் சிறுவனின் சொல்லையும்
ஏற்பரே முன்மதியோர் ஏனெனில் ஞாயி(று)
இருளகற்ற ஏலா(து) இருக்கும் இடத்தில்
இருளகற்று மேயோர் விளக்கு.
---ஹிதோபதேசம், சுஶ்ருபேதம்

bAlAdapi grahItavyaM yuktamuktaM manIShibhiH |
ravEraviShayE kiM na pradIpasya prakAshanam ||
---hitopadeshaH, sushRubheda

बालादपि ग्रहीतव्यं युक्तमुक्तं मनीषिभिः ।
रवॆरविषयॆ किं न प्रदीपस्य प्रकाशनम् ॥
---हितोपदेशः, सुशृभेद

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Dec 26, 2012 6:04 pm

57. தேர்வு

துன்பத்தில் கைகொடுத்தல் தோழனின் தேர்வாகும்
வன்படும் போர்க்களமே வீரனின் தேர்வு
அடக்கம் குடும்பத்தின் தேர்வு -- கணவன்
மிடிமை மனைவியின் தேர்வு. ... ... ... ... [மிடிமை=வறுமை]

vyasane mitraparIkShA sUraparIkShA raNA~ggaNE bhavati |
vinaye vaMshaparIkShA striyaH parIkShA tu nirdhane puMsi ||

व्यसने मित्रपरीक्षा सूरपरीक्षा रणाङ्गणॆ भवति ।
विनये वंशपरीक्षा स्त्रियः परीक्षा तु निर्धने पुंसि ॥

*****

58. அன்னம் ஓர் ஆசான்!

கற்றல் பலவகை கல்விக் கிளைபல
அற்பம் மனிதனின் ஆயுளே -- பற்பல
இன்னலாம் சாரத்தை ஆராய்ந்து பெற்றிடுக
அன்னம்போல் பாலைப் பிரித்து.

anekashAstraM bahu veditavyam alpashcha kAlo bahavashcha vighnAH |
yatsArabhUtaM tadupAsitavyaM haMso yathA kShIramivAmbumishrAt ||

अनेकशास्त्रं बहु वेदितव्यम् अल्पश्च कालो बहवश्च विघ्नाः ।
यत्सारभूतं तदुपासितव्यं हंसो यथा क्षीरमिवाम्बुमिश्रात् ॥

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Dec 27, 2012 10:14 am

59. இரண்டை ஒன்றாக்கும் அம்பு!

பொருளொன்றைத் துண்டித்(து) இரண்டாக்கும் வில்லார்
அரிதல்ல காண்ப(து) அவனியில் -- ஒப்பற்ற
மன்மதன் வில்லில் இரண்டை இணைத்துவைத்தே
ஒன்றென ஆக்கிடும் அன்பு.
---சுபாஷித ரத்னபாண்டாகாரம் 7405

एकवस्तुम् द्विधा कर्तुम् बहव: सन्ति धन्विनः ।
धन्वी स मार एवैको द्वयोः ऐक्यः करोति यः ॥
---सुभाषित रत्नभाण्डागारम् 7405

ekavastum dvidhA kartum bahava: santi dhanvinaH |
dhanvI sa mAra evaiko dvayoH aikyaH karoti yaH ||
---subhAShita ratnabhANDAgAram 7405

There are many archers who can split one thing into two. But there is only one archer, Manmatha, who unites two into one.

*****

60. அகப்பை அறியுமோ?

பற்பலவே கற்றும் பகுத்தறிவு பற்றாத
கற்றாரே கற்றிலார் ஞானத்தின் அர்த்தம்
அறுசுவை உண்டி அருஞ்சுவை யேதும்
அகப்பை அறியுமோ சொல்?

यस्य नास्ति विवेकस्तु केवलं यो बहुश्रुतः ।
न स जानाति शास्त्रार्थान् दर्वी पाकरसानिव ॥

yasya nAsti vivekastu kevalaM yo bahushrutaH |
na sa jAnAti shAstrArthAn darvI pAkarasAniva ||

He who is well-read but lacks discrimination does not know the real meaning of 
knowledge. Does a ladle know the taste of the cooked food?

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 30, 2012 9:33 am

61. மட்டின்மை தவிர்க்க

கொடுத்துமிகக் கட்டுண்டான் மாவலி மன்னன்
துடுக்கால் செருக்கால் தகர்ந்தான் சுயோதனன் ... ... ... ... [சுயோதனன்=துரியோதனன்]
மட்டற்ற ஆசையால் மாண்டான் இராவணன்
மட்டின்மை எங்கும் விலக்கு.
---சுபாஷித ரத்னபாண்டாகாரம் 563

अतिदानात्बलिर्बध्दो नष्टो मानात् सुयोधनः ।
विनष्टो रावणो लौल्यादति सर्वत्र वर्जयेत् ॥
---सुभाषित रत्नभाण्डागारम् 563

atidAnAtbalirbadhdo naShTo mAnAt suyodhanaH |
vinaShTo rAvaNo laulyAdati sarvatra varjayet ||
---subhA****a ratnabhANDAgAram 563

King Bali was bound due to excessive liberality. Suyodhana lost because of excessive self-conceit.
RAvaNa was destroyed because of excessive greed. One should avoid excesses everywhere.

*****

62. அதிரிஷ்டம் ஒரு சக்கரம் மட்டுமே!

தனியொரு சக்கரத்தால் ஓடாத தேர்போல்
மனிதனின் ஓயா முயற்சிகள் இல்லாது
நல்வாய்ப்பால் ஏதும் நிகழ்ந்திடாது; இவ்வுண்மை
வல்லிதின் தேர்வது நன்று.

यथा ह्येकेन चक्रेण न रथस्य गतिर्भवेत् ।
एवं पुरुषकारेण विना दैवं न सिध्यति ॥

yathA hyekena chakreNa na rathasya gatirbhavet |
evaM puruShakAreNa vinA daivaM na sidhyati ||

Just as a chariot cannot move with one wheel,
the luck cannot shine forth without human striving.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jan 02, 2013 1:04 pm

63. அழிக்கும் வழிகள்

திண்ணிய ஊக்கத்தால் தீரும் வறுமையே
பண்ணும் ஜபத்தால் நசிக்குமே பாவம்
அழியும் கலகம் மவுனமே காக்க
விழிப்பால் அழியும் பயம்.

उद्यमे नास्ति दारिद्र्यं जपतो नास्ति पातकम् ।
मौनेन कलहो नास्ति नास्ति जागरिते भयम् ॥
---सुभाषित रत्नभाण्डागारम् 6889

udyame nAsti dAridryaM japato nAsti pAtakam |
maunena kalaho nAsti nAsti jAgarite bhayam ||
---chANakyanItIkrama 03.11

उद्योगे नास्ति दारिद्र्यं जपतो नास्ति पातकम् ।
मौनेन कलहो नास्ति नास्ति जागरिते भयम् ॥
---चाणक्यनीतीक्रम, 03.11

udyoge nAsti dAridryaM japato nAsti pAtakam |
maunena kalaho nAsti nAsti jAgarite bhayam ||
---chANakyanItIkrama, 03.11

With persistsent efforts poverty is destroyed, with litany sins;
By keeping silent a quarrel is settled and by alertness fear is destroyed.

நண்ணும் படிப்பால் நசிக்குமே பேதமை
பண்ணும் ஜபத்தால் நசிக்குமே பாவம்
அழியும் கலகம் மவுனமே காக்க
விழிப்பால் அழியும் பயம்.

पठतो नास्ति मूर्खत्वं जपतॊ नास्ति पातकम् ।
मौनिनः कलहॊ नास्ति भयं चास्ति जाग्रतः ॥

paThato nAsti mUrkhatvaM japatO nAsti pAtakam |
mauninaH kalahO nAsti bhayaM chAsti jAgrataH ||

One who keeps studying shreds stupidity. One who keepts reciting (scriptures) abhors sin.
One who keeps silence does not quarrel. One who keeps awake has no reason to fear.

*****

64. கல்வி கைகொடுக்கும் மறுமையில்

வயதான போதும் விவேகம் உடையோர்
அயராது கற்று அறிவை வளர்ப்பர்
பயனில்லை இப்பிறப்பில் என்றாலும் கற்றல்
அயலோர் பிறப்பில் எளிது.

गतेऽपि वयसि ग्राह्या विद्या सर्वात्मना बुद्धैः ।
यद्यपि स्यान्न फलदा सुलभा सान्यजन्मनि ॥

gate&pi vayasi grAhyA vidyA sarvAtmanA buddhaiH |
yadyapi syAnna phaladA sulabhA sAnyajanmani ||

The wise should wholeheartedly acquire knowledge even when they are advanced in age.
If it does not yield fruit (during this life) it will be easier to get it (the knowledge) in the next life.

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jan 03, 2013 9:49 am

65. நண்பன் கண்ணாடி போன்றவன்

கண்ணெதிர்ப் பட்டால்நம் துன்பமும் இன்பமும்
கண்ணாடி காட்டும் உருவாய்ப் எதிரொளிக்கும்
வண்மையைத் தன்னியல்பாய்த் தோற்றுவிக்கும் தோழனே
உண்மையான தோழன் என.

तदेवास्य परं मित्रं यत्र संक्रामति द्वयम् ।
दृष्टे सुखं च दुःखं च प्रतिच्छायेव दर्पणॆ ॥

tadevAsya paraM mitraM yatra saMkrAmati dvayam |
dRuShTe sukhaM cha duHkhaM cha pratichChAyeva darpaNE ||

He is the real friend in whom both happiness and misery (of one) are reflected
as soon as he is seen just like a reflection in a mirror.

*****

66. பிறர் குற்றம் தன் குற்றம்

இடும்பன் ஒருவன் அயலா னிடமே
கடுகன்ன குற்றமும் காண்பான் எனினுமவன்
வில்வக் கனிபோல் விரிந்துள்ள குற்றமும்
தன்னிடம் காணான் என.

[இடும்பன்=செருக்குள்ளவன், பிறரை அவமதிப்பவன்]

खलः सर्षपमात्राणि परच्छिद्राणि पश्यति ।
आत्मनो बिल्वमात्राणि पश्यन्नपि न पश्यति ॥

khalaH sarShapamAtrANi parachChidrANi pashyati |
Atmano bilvamAtrANi pashyannapi na pashyati ||

A wicked person sees in others faults as small as a mustard seed.
However, he does not see his own faults as big as a bilva fruit.

*****


Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக