புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 32 of 84 •
Page 32 of 84 • 1 ... 17 ... 31, 32, 33 ... 58 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (249)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ பல + குதிரை = பல குதிரை ’ – என்பதற்கான இலக்கணத்தை முன்பு பார்த்தோம் !
அதன் தொடர்ச்சியாக -
“பலவற் றிறுதி நீடுமொழி யுளவே
செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான ” (உயிர்மயங் . 11)
என்கிறார் தொல்காப்பியர் !
‘பலவற்று இறுதி’ – ‘பல’ எனும் சொல்லின் ஈறு,
‘நீடு மொழி உளவே’ - ‘ல’ , ‘லா’ ஆதலும் உண்டு !
‘செய்யுள் கண்னிய தொடர்மொழி ஆன’ – பாடலில் தொடர்ச் சொல்லாக வரும்போது !
பல + சில + என்மனார் புலவர்= பலாஅம் சிலாஅம் என்மனார் புலவர் = பலாஅஞ் சிலாஅம் என்மனார் புலவர்= பலாஅஞ் சிலாஅ மென்மனார் புலவர்!
‘பல’ என்ற சொல்லுக்குத்தானே இலக்கணம் உள்ளது நூற்பாவில் ? ‘சில’ எப்படி நீண்டது ?
இளம்பூரணர் விளக்குகிறார் –
“உண்டு என்னாது ‘உள’ என்றதனான் , ‘சில’ என்னும் வருமொழி இறுதி நீடலும் கொள்க! ”
மீண்டும் ஒரு வினா!
‘பல’ என்று மட்டும்தானே நூற்பாவில் உள்ளது ? ‘சில’ எங்கிருந்து வந்தது ?
இதற்கும் இளம்பூரணர் விளக்கம் தருகிறார் !-
“ செய்யுள் கண்ணிய மொழி என்னாது , ‘தொடர் மொழி’ என்றதனான் , இப் ‘பல’ என்பது நீளும் வழி , வருமொழியாவது ‘சில’ என்பதே என்று கொள்ளப்படும் !”
‘பலாஅஞ் சிலாஅம் என்மனார் புலவர்’ என்ற எடுத்துக்காட்டைக் காட்டிய இளம்பூரணர் , “இதன் சொல்நிலை பலசில என்னும் செவ்வெண்” என்று குறிக்கிறார் !
என்ன பொருள் ?
‘பலாஅஞ் சிலாஅம் ’என்று வந்தது பாட்டுக்காக ! இதுவே உரைநடையில் வருவதானால் ‘பலசில’ என்றுதான் வரும்!
‘பலசில’ என்று எந்த இடைச்சொல்லும் இன்றி வருகிறதல்லவா? அதுதான் ‘செவ்வெண்’!
செவ்வனே அறிந்துகொண்டீர்களா?
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ பல + குதிரை = பல குதிரை ’ – என்பதற்கான இலக்கணத்தை முன்பு பார்த்தோம் !
அதன் தொடர்ச்சியாக -
“பலவற் றிறுதி நீடுமொழி யுளவே
செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான ” (உயிர்மயங் . 11)
என்கிறார் தொல்காப்பியர் !
‘பலவற்று இறுதி’ – ‘பல’ எனும் சொல்லின் ஈறு,
‘நீடு மொழி உளவே’ - ‘ல’ , ‘லா’ ஆதலும் உண்டு !
‘செய்யுள் கண்னிய தொடர்மொழி ஆன’ – பாடலில் தொடர்ச் சொல்லாக வரும்போது !
பல + சில + என்மனார் புலவர்= பலாஅம் சிலாஅம் என்மனார் புலவர் = பலாஅஞ் சிலாஅம் என்மனார் புலவர்= பலாஅஞ் சிலாஅ மென்மனார் புலவர்!
‘பல’ என்ற சொல்லுக்குத்தானே இலக்கணம் உள்ளது நூற்பாவில் ? ‘சில’ எப்படி நீண்டது ?
இளம்பூரணர் விளக்குகிறார் –
“உண்டு என்னாது ‘உள’ என்றதனான் , ‘சில’ என்னும் வருமொழி இறுதி நீடலும் கொள்க! ”
மீண்டும் ஒரு வினா!
‘பல’ என்று மட்டும்தானே நூற்பாவில் உள்ளது ? ‘சில’ எங்கிருந்து வந்தது ?
இதற்கும் இளம்பூரணர் விளக்கம் தருகிறார் !-
“ செய்யுள் கண்ணிய மொழி என்னாது , ‘தொடர் மொழி’ என்றதனான் , இப் ‘பல’ என்பது நீளும் வழி , வருமொழியாவது ‘சில’ என்பதே என்று கொள்ளப்படும் !”
‘பலாஅஞ் சிலாஅம் என்மனார் புலவர்’ என்ற எடுத்துக்காட்டைக் காட்டிய இளம்பூரணர் , “இதன் சொல்நிலை பலசில என்னும் செவ்வெண்” என்று குறிக்கிறார் !
என்ன பொருள் ?
‘பலாஅஞ் சிலாஅம் ’என்று வந்தது பாட்டுக்காக ! இதுவே உரைநடையில் வருவதானால் ‘பலசில’ என்றுதான் வரும்!
‘பலசில’ என்று எந்த இடைச்சொல்லும் இன்றி வருகிறதல்லவா? அதுதான் ‘செவ்வெண்’!
செவ்வனே அறிந்துகொண்டீர்களா?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (250)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘பற்பல’ – அடிக்கடி பயன்படுத்துகிறாம்!
இஃது எப்படி வந்தது?
‘பல+ பல’ என்பதுதான் இப்படி வந்தது!
இதற்குத் தொல்காப்பிய விதி உள்ளதா?
உள்ளது ! :-
“தொடர லிறுதி தம்முற் றாம்வரின்
லகரம் றகரவொற் றாதலு முரித்தே” (உயிர்மயங் . 12)
‘தொடர் அல் இறுதி’ – ஈரெழுத்து ஒருமொழியாகிய ‘பல’ எனும் சொல்லின் ஈறு,
‘தம்முள் தாம் வரின்’ – ‘பல’ என்பதன் முன் ‘பல’ வந்து புணர்ந்தால் ,
‘லகரம் றகர ஒற்றாதலும் உரித்தே’ - ‘ல்’ ஆனது, ‘ற்’ ஆதலும் உண்டு !
‘பல’ என்ற சொல் நூற்பாவில் எங்கே உள்ளது ?
நல்ல கேள்வி !
இதற்கு முந்தைய நூற்பாவில் உள்ளது !
தொல்காப்பியச் சூத்திரங்கள் தொடர்ச்சியாய் எழுதப்படுவன ! சூத்திரமாக உரைப்பதால் அங்கே விரிவை எதிர்பார்க்க முடியாது! மனப்பாடம் செய்வதற்கு ஏற்றது இந்த அமைப்பே (Structure of Tholkappiyam)!
பல + பல = பலாம் பல ×
பல + பல = பற்பல √ (அல்வழிப் புணர்ச்சி)
சில + சில = சிலாஞ் சில ×
சில + சில = சிற்சில √ (அல்வழிப் புணர்ச்சி)
‘பல’ என்பதன்முன் ‘சில’ சேரும் புணர்ச்சியை ஏன் கொள்ளவில்லை?
‘பல’ என்பதன்முன் ‘பல’ வைத்தான், நூற்பாப்படி, கொள்ளவேண்டுமா?
இளம்பூரணர் இதற்கு விடை தருகிறார் !:-
“தொடரலிறுதி தம்முன் வரின் என்னாது ‘தாம்’ என்றதனான், இம் முடிபின்கண் பலவென்பதன்முன் பல வருக , சிலவென்பதன் முன் சில வருக என்பது கொள்ளப்பட்டது !”
தொடரல் – மூவெழுத்துச் சொல் தவிர்த்து.
இளம்பூரணர் உரைப்படி – ‘ல்’தான் ‘ற்’ ஆகிறது ! ‘ல’விலுள்ள ஈற்று ‘அ’ கெடுகிறது !-
பல + பல = பல் + பல (அ- கெட்டது) → பல் + பல = பற்பல (ல், ற் ஆனது)
‘பல’ என்பதன்முன் , ‘பல’ வராது வேறு சொல் வந்தால்?
இதற்கும் விடை இளம்பூரணத்தில் உள்ளது !-
பல + படை = பற்படை×
பல + படை = பல்படை √
பல + யானை = பற்யானை×
பல + யானை = பல்யானை √
சில + படை = சிற்படை×
சில + படை = சில்படை √
சில + கேள்வி = சிற்கேள்வி×
சில + கேள்வி = சில்கேள்வி √
‘தொடரல்’ என்பதன்மூலம் மூவெழுத்துச் சொல்லை விலக்கிவிட்டார் ! அதனால் ‘பல’என்ற ஈரெழுத்துச் சொல்லைக் கொண்டுள்ளோம் ! சரி ! ஆனால், ‘பல’வின் ஈற்றிலே உள்ள ‘அ’ , ஓரெழுத்து மொழியாயிற்றே ?அந்த ஆனா என்ற எழுத்தைத் ‘தொடரல் ’ என்ற சொல்லால் தொல்காப்பியர் குறித்திருக்கமாட்டாரா?
இதற்கும் இளம்பூரணர் விடை கூறுகிறார் !-
”தொடலிறுதி என்பது சுட்டல்லது ஓரெழுத்தொரு மொழி அகரமின்மையின் , ஓரெழுத் தொருமொழிமேற் செல்லாதாயிற்று ” !
அஃதாவது, ‘அ’என்பது ஓரெழுத்து ஒருமொழிதான் ; ஆனால் ‘சுட்டெழுத்து’என்ற கணக்கில் மட்டும்தான்! ஆகவேதான் ‘தொடரல்’ என்பதால் ஈரெழுத்து ஒருமொழியைத்தான் குறித்தார் தொல்காப்பியர் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘பற்பல’ – அடிக்கடி பயன்படுத்துகிறாம்!
இஃது எப்படி வந்தது?
‘பல+ பல’ என்பதுதான் இப்படி வந்தது!
இதற்குத் தொல்காப்பிய விதி உள்ளதா?
உள்ளது ! :-
“தொடர லிறுதி தம்முற் றாம்வரின்
லகரம் றகரவொற் றாதலு முரித்தே” (உயிர்மயங் . 12)
‘தொடர் அல் இறுதி’ – ஈரெழுத்து ஒருமொழியாகிய ‘பல’ எனும் சொல்லின் ஈறு,
‘தம்முள் தாம் வரின்’ – ‘பல’ என்பதன் முன் ‘பல’ வந்து புணர்ந்தால் ,
‘லகரம் றகர ஒற்றாதலும் உரித்தே’ - ‘ல்’ ஆனது, ‘ற்’ ஆதலும் உண்டு !
‘பல’ என்ற சொல் நூற்பாவில் எங்கே உள்ளது ?
நல்ல கேள்வி !
இதற்கு முந்தைய நூற்பாவில் உள்ளது !
தொல்காப்பியச் சூத்திரங்கள் தொடர்ச்சியாய் எழுதப்படுவன ! சூத்திரமாக உரைப்பதால் அங்கே விரிவை எதிர்பார்க்க முடியாது! மனப்பாடம் செய்வதற்கு ஏற்றது இந்த அமைப்பே (Structure of Tholkappiyam)!
பல + பல = பலாம் பல ×
பல + பல = பற்பல √ (அல்வழிப் புணர்ச்சி)
சில + சில = சிலாஞ் சில ×
சில + சில = சிற்சில √ (அல்வழிப் புணர்ச்சி)
‘பல’ என்பதன்முன் ‘சில’ சேரும் புணர்ச்சியை ஏன் கொள்ளவில்லை?
‘பல’ என்பதன்முன் ‘பல’ வைத்தான், நூற்பாப்படி, கொள்ளவேண்டுமா?
இளம்பூரணர் இதற்கு விடை தருகிறார் !:-
“தொடரலிறுதி தம்முன் வரின் என்னாது ‘தாம்’ என்றதனான், இம் முடிபின்கண் பலவென்பதன்முன் பல வருக , சிலவென்பதன் முன் சில வருக என்பது கொள்ளப்பட்டது !”
தொடரல் – மூவெழுத்துச் சொல் தவிர்த்து.
இளம்பூரணர் உரைப்படி – ‘ல்’தான் ‘ற்’ ஆகிறது ! ‘ல’விலுள்ள ஈற்று ‘அ’ கெடுகிறது !-
பல + பல = பல் + பல (அ- கெட்டது) → பல் + பல = பற்பல (ல், ற் ஆனது)
‘பல’ என்பதன்முன் , ‘பல’ வராது வேறு சொல் வந்தால்?
இதற்கும் விடை இளம்பூரணத்தில் உள்ளது !-
பல + படை = பற்படை×
பல + படை = பல்படை √
பல + யானை = பற்யானை×
பல + யானை = பல்யானை √
சில + படை = சிற்படை×
சில + படை = சில்படை √
சில + கேள்வி = சிற்கேள்வி×
சில + கேள்வி = சில்கேள்வி √
‘தொடரல்’ என்பதன்மூலம் மூவெழுத்துச் சொல்லை விலக்கிவிட்டார் ! அதனால் ‘பல’என்ற ஈரெழுத்துச் சொல்லைக் கொண்டுள்ளோம் ! சரி ! ஆனால், ‘பல’வின் ஈற்றிலே உள்ள ‘அ’ , ஓரெழுத்து மொழியாயிற்றே ?அந்த ஆனா என்ற எழுத்தைத் ‘தொடரல் ’ என்ற சொல்லால் தொல்காப்பியர் குறித்திருக்கமாட்டாரா?
இதற்கும் இளம்பூரணர் விடை கூறுகிறார் !-
”தொடலிறுதி என்பது சுட்டல்லது ஓரெழுத்தொரு மொழி அகரமின்மையின் , ஓரெழுத் தொருமொழிமேற் செல்லாதாயிற்று ” !
அஃதாவது, ‘அ’என்பது ஓரெழுத்து ஒருமொழிதான் ; ஆனால் ‘சுட்டெழுத்து’என்ற கணக்கில் மட்டும்தான்! ஆகவேதான் ‘தொடரல்’ என்பதால் ஈரெழுத்து ஒருமொழியைத்தான் குறித்தார் தொல்காப்பியர் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Syed Sardarபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014
அருமையான சேவை. தொரட்டும் அய்யா உங்கள் நற்பணி !
Syed Sardar அவர்களுக்கு நன்றி !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (251)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
பல + பல = பலப் பல - இது சரியா?
பல + பல = பலபல – இது சரியா?
பல + பல = பல்பல – இது சரியா?
அப்படியானால் இதற்குத் தொல்காப்பிய விதி உள்ளதா?
உள்ளது ! :-
“வல்லெழுத் தியற்கை உறழத் தோன்றும்” ! (உயிர்மயங் . 13)
‘வல்லெழுத்து இயற்கை’ – முன் நூற்பாவில் (உயிர்மயங்.12) கூறிய ‘ற்’ என்பதன் தன்மை,
‘உறழத் தோன்றும்’ – தோன்றாமல் ,வேறொரு வல்லெழுத்து மிகவும் செய்யலாம் மிகாமலும் வரலாம் !
பல + பல = பலப் பல √(வல்லெழுத்து மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
பல + பல = பல பல√ (வல்லெழுத்து மிகவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)
சில + சில = சிலச் சில√ (வல்லெழுத்து மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
சில + சில = சிலச் சில√ (வல்லெழுத்து மிகவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)
இந்த எடுத்துக்காட்டுகளைக்கூறிவிட்டு இளம்பூரணர் வேறு சில புணர்ச்சிகளையும் தெரிவிக்கிறார் ! –
“முன் கூறிய பற்பல , சிற்சில என்னும் முடிபொடு பல்பல , சில்சில என்னும் முடிபு பெற்று உறழ்ச்சியாதல் கொள்க !”
இதன்படி-
பல+ பல = பல்பல √ (அ - கெட்டது) (அல்வழிப் புணர்ச்சி)
சில+ சில = சில்சில √ (அ - கெட்டது) (அல்வழிப் புணர்ச்சி)
இன்னொரு சுவையான புணர்ச்சியையும் காட்டுகிறார் இளம்பூரணர் நமக்கு !:-
“ ‘தோன்றும்’ என்றதனான் , அகரம் கெட லகரம் , ஆய்தமும் மெல்லெழுத்துமாய்த் திரிந்து முடிதல் கொள்க !”
இளம்பூரணரின் இக் கருத்துப்படி –
பல + தானை → பஃ + தானை (அ, கெட்டது; ல், ஃ ஆனது )→பஃறானை √(அல்வழிப் புணர்ச்சி)
பல + மரம் → பல் + மரம் (அ, கெட்டது )→பன்மரம் √ (ல், மெல்லின ஒற்றான ‘ன்’ஆகத் திரிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
சில + தாழிசை → சிஃ + தாழிசை (அ, கெட்டது ; ல், ஃ ஆனது)→சிஃறாழிசை √(அல்வழிப் புணர்ச்சி)
சில + நூல் → சில் + நூல் (அ, கெட்டது )→சின்னூல் √(ல், மெல்லின ஒற்றான ‘ன்’ஆகத் திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இளம்பூரணரின் இலக்கணம் தொல்காப்பியரின் இலக்கணத்தை மிஞ்சிவிடும் போல இருக்கிறதே ?
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
பல + பல = பலப் பல - இது சரியா?
பல + பல = பலபல – இது சரியா?
பல + பல = பல்பல – இது சரியா?
அப்படியானால் இதற்குத் தொல்காப்பிய விதி உள்ளதா?
உள்ளது ! :-
“வல்லெழுத் தியற்கை உறழத் தோன்றும்” ! (உயிர்மயங் . 13)
‘வல்லெழுத்து இயற்கை’ – முன் நூற்பாவில் (உயிர்மயங்.12) கூறிய ‘ற்’ என்பதன் தன்மை,
‘உறழத் தோன்றும்’ – தோன்றாமல் ,வேறொரு வல்லெழுத்து மிகவும் செய்யலாம் மிகாமலும் வரலாம் !
பல + பல = பலப் பல √(வல்லெழுத்து மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
பல + பல = பல பல√ (வல்லெழுத்து மிகவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)
சில + சில = சிலச் சில√ (வல்லெழுத்து மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
சில + சில = சிலச் சில√ (வல்லெழுத்து மிகவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)
இந்த எடுத்துக்காட்டுகளைக்கூறிவிட்டு இளம்பூரணர் வேறு சில புணர்ச்சிகளையும் தெரிவிக்கிறார் ! –
“முன் கூறிய பற்பல , சிற்சில என்னும் முடிபொடு பல்பல , சில்சில என்னும் முடிபு பெற்று உறழ்ச்சியாதல் கொள்க !”
இதன்படி-
பல+ பல = பல்பல √ (அ - கெட்டது) (அல்வழிப் புணர்ச்சி)
சில+ சில = சில்சில √ (அ - கெட்டது) (அல்வழிப் புணர்ச்சி)
இன்னொரு சுவையான புணர்ச்சியையும் காட்டுகிறார் இளம்பூரணர் நமக்கு !:-
“ ‘தோன்றும்’ என்றதனான் , அகரம் கெட லகரம் , ஆய்தமும் மெல்லெழுத்துமாய்த் திரிந்து முடிதல் கொள்க !”
இளம்பூரணரின் இக் கருத்துப்படி –
பல + தானை → பஃ + தானை (அ, கெட்டது; ல், ஃ ஆனது )→பஃறானை √(அல்வழிப் புணர்ச்சி)
பல + மரம் → பல் + மரம் (அ, கெட்டது )→பன்மரம் √ (ல், மெல்லின ஒற்றான ‘ன்’ஆகத் திரிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
சில + தாழிசை → சிஃ + தாழிசை (அ, கெட்டது ; ல், ஃ ஆனது)→சிஃறாழிசை √(அல்வழிப் புணர்ச்சி)
சில + நூல் → சில் + நூல் (அ, கெட்டது )→சின்னூல் √(ல், மெல்லின ஒற்றான ‘ன்’ஆகத் திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இளம்பூரணரின் இலக்கணம் தொல்காப்பியரின் இலக்கணத்தை மிஞ்சிவிடும் போல இருக்கிறதே ?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (252)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘இருவிள’ என்பது ஓர் ஊரின் பெயர் !
இந்த ஊரைச்சேர்ந்த ‘கொற்றன்’ என்பவனை,
‘இருவிள கொற்றன்’ என்பதா?
‘இருவிளக் கொற்றன்’ என்பதா?
இதற்குத் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா?
உள்ளது ! :-
“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” ! (உயிர்மயங் . 14)
முன்பு , இதே உயிர்மயங்கியலில் , நூற்பா ஒன்றில் , அல்வழிப் புணர்ச்சியாக இருந்தால் , அகரத்தில் முடியும் பெயர்ச்சொற்கள் , வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களுடன் புணரும்போது, ஒற்றுமிகும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார் ! (மக + குறிது= மகக் குறிது); நினைவிருக்கிறதா?
‘அல்வழிப் புணர்ச்சியாக இருந்தால்’ – என மேலே வந்துள்ளதைக் கவனியுங்கள் !
அப்படியானால் , வேற்றுமைப் புணர்ச்சியாக இருந்தால் ? – வினா எழுகிறதல்லவா?
இதற்கு விடைதான் மேல் நூற்பா! (உயிர்மயங் . 14)
இதன்படி-
இருவிள + கொற்றன் = இருவிள கொற்றன்×
இருவிள + கொற்றன் = இருவிளக் கொற்றன்√ (க் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருவிள + சாத்தன் = இருவிள சாத்தன் ×
இருவிள + சாத்தன் = இருவிளச் சாத்தன் √ (ச் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருவிள + தேவன் = இருவிள தேவன் ×
இருவிள + தேவன் = இருவிளத் தேவன் √ (த் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருவிள + பூதன் = இருவிள பூதன் ×
இருவிள + பூதன் = இருவிளப் பூதன் √ (ப் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
சாத்தன் , தேவன் – போன்ற இயற்பெயர்ச் சொற்கள்தாம் இப்படிப் புணருமா?- ஐயம் !
போக்குகிறார் இளம்பூரணர் !-
“விளக்குறுமை எனக் குணவேற்றுமைக் கண்ணும் கொள்க!”
(குணம்- பண்பு)
இதன்படி-
விள + குறுமை = விளகுறுமை ×
விள + குறுமை = விளக்குறுமை √ (க் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
(விளக்குறுமை – விளமரத்தின் குட்டைத்தன்மை )
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘இருவிள’ என்பது ஓர் ஊரின் பெயர் !
இந்த ஊரைச்சேர்ந்த ‘கொற்றன்’ என்பவனை,
‘இருவிள கொற்றன்’ என்பதா?
‘இருவிளக் கொற்றன்’ என்பதா?
இதற்குத் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா?
உள்ளது ! :-
“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” ! (உயிர்மயங் . 14)
முன்பு , இதே உயிர்மயங்கியலில் , நூற்பா ஒன்றில் , அல்வழிப் புணர்ச்சியாக இருந்தால் , அகரத்தில் முடியும் பெயர்ச்சொற்கள் , வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களுடன் புணரும்போது, ஒற்றுமிகும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார் ! (மக + குறிது= மகக் குறிது); நினைவிருக்கிறதா?
‘அல்வழிப் புணர்ச்சியாக இருந்தால்’ – என மேலே வந்துள்ளதைக் கவனியுங்கள் !
அப்படியானால் , வேற்றுமைப் புணர்ச்சியாக இருந்தால் ? – வினா எழுகிறதல்லவா?
இதற்கு விடைதான் மேல் நூற்பா! (உயிர்மயங் . 14)
இதன்படி-
இருவிள + கொற்றன் = இருவிள கொற்றன்×
இருவிள + கொற்றன் = இருவிளக் கொற்றன்√ (க் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருவிள + சாத்தன் = இருவிள சாத்தன் ×
இருவிள + சாத்தன் = இருவிளச் சாத்தன் √ (ச் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருவிள + தேவன் = இருவிள தேவன் ×
இருவிள + தேவன் = இருவிளத் தேவன் √ (த் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருவிள + பூதன் = இருவிள பூதன் ×
இருவிள + பூதன் = இருவிளப் பூதன் √ (ப் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
சாத்தன் , தேவன் – போன்ற இயற்பெயர்ச் சொற்கள்தாம் இப்படிப் புணருமா?- ஐயம் !
போக்குகிறார் இளம்பூரணர் !-
“விளக்குறுமை எனக் குணவேற்றுமைக் கண்ணும் கொள்க!”
(குணம்- பண்பு)
இதன்படி-
விள + குறுமை = விளகுறுமை ×
விள + குறுமை = விளக்குறுமை √ (க் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
(விளக்குறுமை – விளமரத்தின் குட்டைத்தன்மை )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (253)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியரிடம் மாணவன், “விள – என்பது அகர ஈற்று மரப்பெயர் ! ‘விளத்தின் பூ ’ என்பதைச் சொல்லவேண்டுமானால் , ‘விளப்பூ’ என்பதா? ‘விளம்பூ’ என்பதா?” எனக் கேட்டான் !
அதற்குத் தொல்காப்பியரின் விடை ! :-
“மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே” (உயிர்மயங் . 15)
‘மரப்பெயர்க் கிளவி’ – மரத்தின் பெயரைக் குறிக்கும் சொல்,
‘மெல்லெழுத்து மிகுமே’ – வேற்றுமைப் புணர்சியில் , மெல்லெழுத்துச் சந்தி பெறும் !
விள + கோடு = விளக்கோடு ×
விள + கோடு = விளங்கோடு √ (ங் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளங்கோடு – விள மரத்தின் கிளை)
விள + செதிள் = விளச் செதிள் ×
விள + செதிள் = விளஞ் செதிள் √ (ஞ் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளஞ் செதிள் – விள மரத்தின் வெட்டுத் துண்டு)
விள + தோல் = விளத் தோல் ×
விள + தோல் = விளந் தோல் √ (ந் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளந் தோல் – விள மரத்தின் பட்டை)
விள + பூ = விளப்பூ ×
விள + பூ = விளம்பூ √ (ம் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளம்பூ – விள மரத்தின் பூ)
எந்த ஓர் இலக்கணப் புணர்ச்சியாயினும் மரப்பெயர்களுடன் அதனைப் பொருத்திக்காட்டுவது தொல்காப்பியரின் கோட்பாடு
(Theory oy Tholkappiyar)!
ஏன்?
அஃதாவது, சிலர் நினைப்பதுபோலத் தமிழ் இலக்கணம் என்பது புலவர்களுக்கு மட்டும்தான் என்பதில்லை !
தமிழ் இலக்கணம் மக்களுக்கானது !
இந்த உண்மை இங்கே தெரிகிறதல்லவா?
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியரிடம் மாணவன், “விள – என்பது அகர ஈற்று மரப்பெயர் ! ‘விளத்தின் பூ ’ என்பதைச் சொல்லவேண்டுமானால் , ‘விளப்பூ’ என்பதா? ‘விளம்பூ’ என்பதா?” எனக் கேட்டான் !
அதற்குத் தொல்காப்பியரின் விடை ! :-
“மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே” (உயிர்மயங் . 15)
‘மரப்பெயர்க் கிளவி’ – மரத்தின் பெயரைக் குறிக்கும் சொல்,
‘மெல்லெழுத்து மிகுமே’ – வேற்றுமைப் புணர்சியில் , மெல்லெழுத்துச் சந்தி பெறும் !
விள + கோடு = விளக்கோடு ×
விள + கோடு = விளங்கோடு √ (ங் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளங்கோடு – விள மரத்தின் கிளை)
விள + செதிள் = விளச் செதிள் ×
விள + செதிள் = விளஞ் செதிள் √ (ஞ் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளஞ் செதிள் – விள மரத்தின் வெட்டுத் துண்டு)
விள + தோல் = விளத் தோல் ×
விள + தோல் = விளந் தோல் √ (ந் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளந் தோல் – விள மரத்தின் பட்டை)
விள + பூ = விளப்பூ ×
விள + பூ = விளம்பூ √ (ம் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளம்பூ – விள மரத்தின் பூ)
எந்த ஓர் இலக்கணப் புணர்ச்சியாயினும் மரப்பெயர்களுடன் அதனைப் பொருத்திக்காட்டுவது தொல்காப்பியரின் கோட்பாடு
(Theory oy Tholkappiyar)!
ஏன்?
அஃதாவது, சிலர் நினைப்பதுபோலத் தமிழ் இலக்கணம் என்பது புலவர்களுக்கு மட்டும்தான் என்பதில்லை !
தமிழ் இலக்கணம் மக்களுக்கானது !
இந்த உண்மை இங்கே தெரிகிறதல்லவா?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (254)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
ஆண் பிள்ளையைக் குறிக்க ‘மகன்’ என்றும் , பெண் பிள்ளையைக் குறிக்க ‘மகள்’ என்றும் இன்று சொல்கிறோம் !
ஆனால் தொல்காப்பியர் காலத்தில், ‘மக’ என்று சொல்லால் இருவரையுமே குறித்தனர் !
அதனால்தான் ‘மக’ என்ற இந்த அகர ஈற்றுச் சொல்லைக் கையில் எடுக்கிறார் தொல்காப்பியர் !
‘மக’வின் கை – இதனை எப்படிசொல்லலாம் ?
மகக் கை – இது சரியா?
மகங் கை – இது சரியா?
தொல்காப்பிய விதி யாது ?
இதோ !:-
“மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை” (உயிர்மயங் . 16)
மக + கை = மகக் கை ×
மக + கை = மகங் கை ×
மக + கை = மக+இன் + கை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் கை
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + செவி = மகச் செவி×
மக + செவி = மகஞ் செவி ×
மக + செவி = மக+இன் + செவி (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் செவி
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + தலை = மகத் தலை ×
மக + தலை = மகந் தலை ×
மக + தலை = மக+இன் + தலை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் தலை
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + புறம் = மகப் புறம் ×
மக + புறம் = மகம் புறம் ×
மக + புறம் = மக+இன் + புறம் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் புறம்
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மேல் எடுத்துக்காட்டுகளில் , வருசொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாகக் கொண்டவை என்பதைக் கவனியுங்கள் !
அப்படியானால் ,மெல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் புணரவந்தால் ?
இளம்பூரணர் விடை தருகிறார் ! -
“சரியைப் பேறு வரையாது கூறியவழி நான்கு கணத்துக் கண்ணும் செல்லுமென்பதாகலின் , மகவின் ஞாண் என இயல்புக் கணத்துக் கணத்தும் கொள்க !”
அஃதாவது-
மக + ஞாண் = மகஞ்ஞாண் ×
மக + ஞாண் = மகஞாண் ×
மக + ஞாண் = மக + இன் + ஞாண் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் ஞாண்
(வேற்றுமைப் புணர்ச்சி)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
ஆண் பிள்ளையைக் குறிக்க ‘மகன்’ என்றும் , பெண் பிள்ளையைக் குறிக்க ‘மகள்’ என்றும் இன்று சொல்கிறோம் !
ஆனால் தொல்காப்பியர் காலத்தில், ‘மக’ என்று சொல்லால் இருவரையுமே குறித்தனர் !
அதனால்தான் ‘மக’ என்ற இந்த அகர ஈற்றுச் சொல்லைக் கையில் எடுக்கிறார் தொல்காப்பியர் !
‘மக’வின் கை – இதனை எப்படிசொல்லலாம் ?
மகக் கை – இது சரியா?
மகங் கை – இது சரியா?
தொல்காப்பிய விதி யாது ?
இதோ !:-
“மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை” (உயிர்மயங் . 16)
மக + கை = மகக் கை ×
மக + கை = மகங் கை ×
மக + கை = மக+இன் + கை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் கை
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + செவி = மகச் செவி×
மக + செவி = மகஞ் செவி ×
மக + செவி = மக+இன் + செவி (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் செவி
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + தலை = மகத் தலை ×
மக + தலை = மகந் தலை ×
மக + தலை = மக+இன் + தலை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் தலை
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + புறம் = மகப் புறம் ×
மக + புறம் = மகம் புறம் ×
மக + புறம் = மக+இன் + புறம் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் புறம்
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மேல் எடுத்துக்காட்டுகளில் , வருசொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாகக் கொண்டவை என்பதைக் கவனியுங்கள் !
அப்படியானால் ,மெல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் புணரவந்தால் ?
இளம்பூரணர் விடை தருகிறார் ! -
“சரியைப் பேறு வரையாது கூறியவழி நான்கு கணத்துக் கண்ணும் செல்லுமென்பதாகலின் , மகவின் ஞாண் என இயல்புக் கணத்துக் கணத்தும் கொள்க !”
அஃதாவது-
மக + ஞாண் = மகஞ்ஞாண் ×
மக + ஞாண் = மகஞாண் ×
மக + ஞாண் = மக + இன் + ஞாண் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் ஞாண்
(வேற்றுமைப் புணர்ச்சி)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (255)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘மக’ என்ற சொல்லானது ‘இன்’ சாரியை பெற்று , ‘மகவின் கை’ , ‘மகவின் கால்’ என்றெல்லாம் புணரும் என்று சற்றுமுன் பார்த்தோம் !
அப்போது ஒரு மாணவனின் ஐயம் !-
“ இன் சாரியை பெற்றது சரி ! அதைப்போல அத்துச் சாரியை பெறலாமா?”.
“ஓ பெறலாமே” – தொல்காப்பியரின் விடை !:
“அத்தவண் வரினும் வரைநிலை யின்றே” (உயிர்மயங் . 17)
மக + கை = மகக் கை ×
மக + கை = மகங் கை ×
மக + கை = மக+இன் + கை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் கை √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + கை = மக+அத்து + கை (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துக் கை √
வேற்றுமைப் புணர்ச்சி)
மக + செவி = மகச் செவி×
மக + செவி = மகஞ் செவி ×
மக + செவி = மக+இன் + செவி (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் செவி √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + செவி = மக+அத்து + செவி (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துச் செவி√
வேற்றுமைப் புணர்ச்சி)
மக + தலை = மகத் தலை ×
மக + தலை = மகந் தலை ×
மக + தலை = மக+இன் + தலை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் தலை √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + தலை = மக+அத்து + தலை (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துத் தலை√
(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + புறம் = மகப் புறம் ×
மக + புறம் = மகம் புறம் ×
மக + புறம் = மக+இன் + புறம் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் புறம் √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + புறம் = மக+அத்து + புறம் (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துப் புறம் √
(வேற்றுமைப் புணர்ச்சி)
இங்கே இளம்பூரணர் ஒரு சமுதாயச் செய்தியைச் சொல்கிறார் !
மகனுக்கோ மகளுக்கோ நல்ல பால்தரும் ஆட்டைக் கொடுத்தால் அந்த ஆடு ‘மகப்பால் யாடு’ எனப்படும் என்கிறார் !
இதனை, “ அவண் என்றதனால் , மகப்பால் யடு என வல்லெழுத்துப் பேறும் , … ‘நிலை’ என்றதனால் , ‘மகம்பால் யாடு’ என வல்லெழுத்துப் பேறும் கொள்க !”
என்ற அவரது உரையால் அறிகிறோம் !
மக + பால்யாடு = மக+இன் + பால்யாடு (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின்
பால்யாடு √ (வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + பால்யாடு = மக+அத்து + பால்யாடு (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துப்
பால்யாடு √(ப்-வல்லெழுத்துப் பேறு வந்த்து)(வேற்றுமைப்
புணர்ச்சி)
மக + பால்யாடு = மக+ம் + பால்யாடு (ம்- மெல்லெழுத்துப் பேறு வந்தது) = மகம்
பால்யாடு √(வேற்றுமைப்
புணர்ச்சி)
அப்போதைய மக்கள் வழக்காறுகளுக்கு மதிப்புக்கொடுத்துத்தான் இளம்பூரணர் உரை எழுதியுள்ளார் என்ற அவரது உரைக்கோட்பாடு (Ilampuranar’s Theory of Commentary) இதன்மூலம் அறியப்படுகிறதலாவா?
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘மக’ என்ற சொல்லானது ‘இன்’ சாரியை பெற்று , ‘மகவின் கை’ , ‘மகவின் கால்’ என்றெல்லாம் புணரும் என்று சற்றுமுன் பார்த்தோம் !
அப்போது ஒரு மாணவனின் ஐயம் !-
“ இன் சாரியை பெற்றது சரி ! அதைப்போல அத்துச் சாரியை பெறலாமா?”.
“ஓ பெறலாமே” – தொல்காப்பியரின் விடை !:
“அத்தவண் வரினும் வரைநிலை யின்றே” (உயிர்மயங் . 17)
மக + கை = மகக் கை ×
மக + கை = மகங் கை ×
மக + கை = மக+இன் + கை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் கை √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + கை = மக+அத்து + கை (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துக் கை √
வேற்றுமைப் புணர்ச்சி)
மக + செவி = மகச் செவி×
மக + செவி = மகஞ் செவி ×
மக + செவி = மக+இன் + செவி (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் செவி √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + செவி = மக+அத்து + செவி (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துச் செவி√
வேற்றுமைப் புணர்ச்சி)
மக + தலை = மகத் தலை ×
மக + தலை = மகந் தலை ×
மக + தலை = மக+இன் + தலை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் தலை √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + தலை = மக+அத்து + தலை (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துத் தலை√
(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + புறம் = மகப் புறம் ×
மக + புறம் = மகம் புறம் ×
மக + புறம் = மக+இன் + புறம் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் புறம் √
(வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + புறம் = மக+அத்து + புறம் (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துப் புறம் √
(வேற்றுமைப் புணர்ச்சி)
இங்கே இளம்பூரணர் ஒரு சமுதாயச் செய்தியைச் சொல்கிறார் !
மகனுக்கோ மகளுக்கோ நல்ல பால்தரும் ஆட்டைக் கொடுத்தால் அந்த ஆடு ‘மகப்பால் யாடு’ எனப்படும் என்கிறார் !
இதனை, “ அவண் என்றதனால் , மகப்பால் யடு என வல்லெழுத்துப் பேறும் , … ‘நிலை’ என்றதனால் , ‘மகம்பால் யாடு’ என வல்லெழுத்துப் பேறும் கொள்க !”
என்ற அவரது உரையால் அறிகிறோம் !
மக + பால்யாடு = மக+இன் + பால்யாடு (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின்
பால்யாடு √ (வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + பால்யாடு = மக+அத்து + பால்யாடு (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துப்
பால்யாடு √(ப்-வல்லெழுத்துப் பேறு வந்த்து)(வேற்றுமைப்
புணர்ச்சி)
மக + பால்யாடு = மக+ம் + பால்யாடு (ம்- மெல்லெழுத்துப் பேறு வந்தது) = மகம்
பால்யாடு √(வேற்றுமைப்
புணர்ச்சி)
அப்போதைய மக்கள் வழக்காறுகளுக்கு மதிப்புக்கொடுத்துத்தான் இளம்பூரணர் உரை எழுதியுள்ளார் என்ற அவரது உரைக்கோட்பாடு (Ilampuranar’s Theory of Commentary) இதன்மூலம் அறியப்படுகிறதலாவா?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (256)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘பல’ எனும் சொல் (இது அகர ஈற்றுப் பெயர்ச் சொல்), வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களோடு புணரும்போது எப்படிப் புணரும் என்று கீழே காட்டுகிறார் !:-
“பலவற் றிறுதி யுருபிய னிலையும்” (உயிர்மயங். 18)
‘பலவற் றிறுதி’ – ‘பல’ எனும் சொல்லின் ஈறு,வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களோடு சேரும்போது,
‘உருபியல் நிலையும்’ – உருபியலில் (நூற்பா2) கூறியபடி ‘வற்று’ச் சாரியை பெறும் !
பல + கோடு = பலக் கோடு ×
பல + கோடு = பல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல + செவி = பலச் செவி ×
பல + செவி = பல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல + தலை = பலத் தலை ×
பல + தலை = பல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல + புறம் = பலப் புறம் ×
பல + புறம் = பல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
இளம்பூரணர், ‘பல’ என்ற ஒரு சொல்லுக்கு மட்டும்தான் எடுத்துக்காட்டுகள் கூறினார் !
நச்சினார்க்கினியர் , சற்றே விரித்துப் , ‘பல்ல’ , ‘உள்ள’, ‘இல்ல’ , ‘சில’ஆகிய அகர ஈற்றுப் பெயர்ச்சொற்களுக்கும் இந்தநூற்பா பொருந்தும் எனக் கருதி இவற்றுக்கும் எடுத்துக்காட்டுகள் கூறியுள்ளார் !-
1.பல்ல + கோடு = பல்லக் கோடு ×
பல்ல + கோடு = பல்ல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல்ல + செவி = பல்லச் செவி ×
பல்ல + செவி = பல்ல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல்ல + தலை = பல்லத் தலை ×
பல்ல + தலை = பல்ல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல்ல + புறம் = பல்லப் புறம் ×
பல்ல + புறம் = பல்ல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
2 .உள்ள + கோடு = உள்ளக் கோடு ×
உள்ள + கோடு = உள்ள + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
உள்ள + செவி = உள்ளச் செவி ×
உள்ள + செவி = உள்ள + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
உள்ள + தலை = உள்ளத் தலை ×
உள்ள + தலை = உள்ள + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
உள்ள + புறம் = உள்ளப் புறம் ×
உள்ள + புறம் = உள்ள + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
3 . இல்ல + கோடு = இல்லக் கோடு ×
இல்ல + கோடு = இல்ல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = இல்லவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
இல்ல + செவி = இல்லச் செவி ×
இல்ல + செவி = இல்ல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = இல்லவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
இல்ல + தலை = இல்லத் தலை ×
இல்ல + தலை = இல்ல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = இல்லவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
இல்ல + புறம் = இல்லப் புறம் ×
இல்ல + புறம் = இல்ல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) =இல்லவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
.
4. சில + கோடு = சிலக் கோடு ×
சில + கோடு = சில + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) =சிலவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
சில + செவி = சிலச் செவி ×
சில + செவி = சில + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
சில + தலை = சிலத் தலை ×
சில + தலை = சில + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
சில + புறம் = சிலப் புறம் ×
சில + புறம் = சில + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
‘பல’ , ‘சில’ ‘உள்ள’ – ஆகிய மூன்றும் வழக்கில் வருவன!
‘பல்ல’ , ‘சில்ல’ – ஆகிய இரண்டும் செய்யுளில் வருவன!
இதிலிருந்து உரையாசிரியர்கள் பாடற் சொற்களை மட்டுமின்றி வழக்குச் சொற்களையும் கருத்தில்கொண்டே உரை எழுதியுள்ளனர் என்பது புலனாகிறதல்லவா?
இதுவே தொல்காப்பிய உரைக்கோட்பாடு (Commentary Theory of Tholkappiyam)!
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘பல’ எனும் சொல் (இது அகர ஈற்றுப் பெயர்ச் சொல்), வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களோடு புணரும்போது எப்படிப் புணரும் என்று கீழே காட்டுகிறார் !:-
“பலவற் றிறுதி யுருபிய னிலையும்” (உயிர்மயங். 18)
‘பலவற் றிறுதி’ – ‘பல’ எனும் சொல்லின் ஈறு,வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களோடு சேரும்போது,
‘உருபியல் நிலையும்’ – உருபியலில் (நூற்பா2) கூறியபடி ‘வற்று’ச் சாரியை பெறும் !
பல + கோடு = பலக் கோடு ×
பல + கோடு = பல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல + செவி = பலச் செவி ×
பல + செவி = பல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல + தலை = பலத் தலை ×
பல + தலை = பல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல + புறம் = பலப் புறம் ×
பல + புறம் = பல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
இளம்பூரணர், ‘பல’ என்ற ஒரு சொல்லுக்கு மட்டும்தான் எடுத்துக்காட்டுகள் கூறினார் !
நச்சினார்க்கினியர் , சற்றே விரித்துப் , ‘பல்ல’ , ‘உள்ள’, ‘இல்ல’ , ‘சில’ஆகிய அகர ஈற்றுப் பெயர்ச்சொற்களுக்கும் இந்தநூற்பா பொருந்தும் எனக் கருதி இவற்றுக்கும் எடுத்துக்காட்டுகள் கூறியுள்ளார் !-
1.பல்ல + கோடு = பல்லக் கோடு ×
பல்ல + கோடு = பல்ல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல்ல + செவி = பல்லச் செவி ×
பல்ல + செவி = பல்ல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல்ல + தலை = பல்லத் தலை ×
பல்ல + தலை = பல்ல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
பல்ல + புறம் = பல்லப் புறம் ×
பல்ல + புறம் = பல்ல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
2 .உள்ள + கோடு = உள்ளக் கோடு ×
உள்ள + கோடு = உள்ள + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
உள்ள + செவி = உள்ளச் செவி ×
உள்ள + செவி = உள்ள + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
உள்ள + தலை = உள்ளத் தலை ×
உள்ள + தலை = உள்ள + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
உள்ள + புறம் = உள்ளப் புறம் ×
உள்ள + புறம் = உள்ள + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
3 . இல்ல + கோடு = இல்லக் கோடு ×
இல்ல + கோடு = இல்ல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = இல்லவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
இல்ல + செவி = இல்லச் செவி ×
இல்ல + செவி = இல்ல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = இல்லவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
இல்ல + தலை = இல்லத் தலை ×
இல்ல + தலை = இல்ல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = இல்லவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
இல்ல + புறம் = இல்லப் புறம் ×
இல்ல + புறம் = இல்ல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) =இல்லவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
.
4. சில + கோடு = சிலக் கோடு ×
சில + கோடு = சில + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) =சிலவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)
சில + செவி = சிலச் செவி ×
சில + செவி = சில + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)
சில + தலை = சிலத் தலை ×
சில + தலை = சில + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)
சில + புறம் = சிலப் புறம் ×
சில + புறம் = சில + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)
‘பல’ , ‘சில’ ‘உள்ள’ – ஆகிய மூன்றும் வழக்கில் வருவன!
‘பல்ல’ , ‘சில்ல’ – ஆகிய இரண்டும் செய்யுளில் வருவன!
இதிலிருந்து உரையாசிரியர்கள் பாடற் சொற்களை மட்டுமின்றி வழக்குச் சொற்களையும் கருத்தில்கொண்டே உரை எழுதியுள்ளனர் என்பது புலனாகிறதல்லவா?
இதுவே தொல்காப்பிய உரைக்கோட்பாடு (Commentary Theory of Tholkappiyam)!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 32 of 84 • 1 ... 17 ... 31, 32, 33 ... 58 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 32 of 84
|
|