புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
69 Posts - 58%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
111 Posts - 59%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 53 of 84 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 68 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 07, 2015 8:37 am

M.Jagadeesan wrote:உசு ,முசு இவற்றுடன் " பசு " என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்ளலாமா ?
[You must be registered and logged in to see this link.]

"திசு " உம் சேருமோ இதில் முனைவர் அய்யா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 07, 2015 9:19 am

" கொசுவை " ஏன் விட்டுவிட்டீர் ரமணியன் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 07, 2015 1:52 pm

M.Jagadeesan wrote:" கொசுவை " ஏன் விட்டுவிட்டீர் ரமணியன் ?
[You must be registered and logged in to see this link.]

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 17, 2015 11:28 am

எம். ஜகதீசன், ரமணீயன் ஆகியோர்க்கு நன்றி !
‘பசு’ , ‘திசு’ , ‘கொசு’ ஆகிய மூன்று பெயர்ச் சொற்களையும் சேர்த்துக்கொள்ளலாம் ! தவறில்லை !
ஆனால் பழைய இலக்கணங்களோடு இணைத்துக்கொள்ளக் கூடாது ! நம் ஆய்வாகக் கொல்ளவேண்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 1:18 pm

மிகவும் நன்றி ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 3:33 pm

Dr.S.Soundarapandian wrote:எம். ஜகதீசன், ரமணீயன் ஆகியோர்க்கு நன்றி !
‘பசு’ , ‘திசு’ , ‘கொசு’ ஆகிய மூன்று பெயர்ச் சொற்களையும் சேர்த்துக்கொள்ளலாம் ! தவறில்லை !
ஆனால் பழைய இலக்கணங்களோடு இணைத்துக்கொள்ளக் கூடாது ! நம் ஆய்வாகக் கொல்ளவேண்டும் !
[You must be registered and logged in to see this link.]

நன்றி முனைவர் அவர்களே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 27, 2015 8:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (390)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , சொற்களின் ஈறுகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !

இப்போது நாம் பார்க்கவேண்டியது –
“உப்ப காரமொடு ஞகாரையு மற்றே
அப்பொரு ளிரட்டா திவணை யான” (மொழி. 47)

‘உப்ப காரமொடு’ – முன்பு இதே மொழிமரபு நூற்பா 43இல் ’தபு’ என்ற ஒரு சொல்லில் மட்டும்தான் ‘பு’ வானது சொல்லீறாக வரும் எனப் பார்த்தோமல்லவா? அதைப் போல,
‘ஞகாரையும்  அற்றே’ – ‘ஞ்’ என்ற எழுத்தும் அப்படியே ஒரே ஒரு சொல்லில்தான் வரும் !
‘அப்பொருள் இரட்டாது  இவணை யான’ – ’தபு’ என்ற சொல்லைப் பொறுத்தவரையில் , எடுத்துச் சொன்னால்
ஒரு பொருளும் படுத்துச் சொன்னால் வேறுபொருளுமாக  இரண்டு பொருள்கள் இருப்பது போல ‘ஞ்’ ஈற்றுச் சொல்லுக்கு இருபொருள் இல்லை !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டு – ‘உரிஞ்’

அஃதாவது , ‘உரிஞ்’ என்ற இந்த ஒரு சொல்தான் தமிழில் ‘ஞ்’ஞை ஈற்றிலே கொண்டு வரும் !

மேல் தொல்காப்பிய நூற்பாவில் , ‘இவணை’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !

இவணை = இவண் + ஐ

இவண் – சுட்டுப் பெயர்

ஐ – அசை (Expletive)

இவணை - இவ்விடத்து

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 27, 2015 8:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (390)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , சொற்களின் ஈறுகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !

இப்போது நாம் பார்க்கவேண்டியது –
“உப்ப காரமொடு ஞகாரையு மற்றே
அப்பொரு ளிரட்டா திவணை யான” (மொழி. 47)

‘உப்ப காரமொடு’ – முன்பு இதே மொழிமரபு நூற்பா 43இல் ’தபு’ என்ற ஒரு சொல்லில் மட்டும்தான் ‘பு’ வானது சொல்லீறாக வரும் எனப் பார்த்தோமல்லவா? அதைப் போல,
‘ஞகாரையும்  அற்றே’ – ‘ஞ்’ என்ற எழுத்தும் அப்படியே ஒரே ஒரு சொல்லில்தான் வரும் !
‘அப்பொருள் இரட்டாது  இவணை யான’ – ’தபு’ என்ற சொல்லைப் பொறுத்தவரையில் , எடுத்துச் சொன்னால்
ஒரு பொருளும் படுத்துச் சொன்னால் வேறுபொருளுமாக  இரண்டு பொருள்கள் இருப்பது போல ‘ஞ்’ ஈற்றுச் சொல்லுக்கு இருபொருள் இல்லை !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டு – ‘உரிஞ்’

அஃதாவது , ‘உரிஞ்’ என்ற இந்த ஒரு சொல்தான் தமிழில் ‘ஞ்’ஞை ஈற்றிலே கொண்டு வரும் !

மேல் தொல்காப்பிய நூற்பாவில் , ‘இவணை’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !

இவணை = இவண் + ஐ

இவண் – சுட்டுப் பெயர்

ஐ – அசை (Expletive)

இவணை - இவ்விடத்து

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 03, 2015 2:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (391)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் அடுத்தது –
“வகரக் கிளவி நான்மொழி யீற்றது” (மொழி. 48)

‘வகரக் கிளவி’ – ‘வ்’ எனும் சொல்,
‘நான்மொழி  ஈற்றது’ – நான்கு சொற்களுக்கு மட்டும் ஈறாக வரும் !

‘வகரக் கிளவி’ -  இப்படித் தமிழ் இலக்கணங்களில் வந்தால் , இடத்தைப் பொறுத்து , ‘வ்’ அல்லது ‘வ’ எனக் கொள்ள வேண்டும் !

‘நான் மொழி’ என்பதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் –

1 . அவ்

2 . இவ்

3 . உவ்

4 . தெவ்
இவை நான்கும் பெயர்ச் சொற்களே (Nouns) !

‘வ்’ ஈறு  தொடர்பாக , முன்பே நாம் புள்ளிமயங்கியல் நூற்பாக்கள் 83 , 87 ஆகியவற்றில் விரிவாகப் பார்த்துள்ளோம்! ஆகவே அவற்றை மீண்டும் இங்கே இணைக்கவில்லை !

இறுதியாக மொழிமரபின் கடைசி நூற்பா ! –

“மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப
புகரக் கிளந்த வஃறிணை யான ”               (மொழி 49)

‘மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த , னகரத் தொடர்மொழி ஒன்பஃது  என்ப’ -  இரண்டு எழுத்துகளைக் கொண்ட சொற்களின் ஈறு ‘ன்’ ஆக இருந்தால் , அந்த ‘ன்’னுக்குப் பதிலாக ‘ம்’ வருவது ஒன்பது சொற்களில் மட்டும் நடவாது என்பார்கள்!
‘புகரக் கிளந்த அஃறிணை யான’ -  குற்றம் அற்ற அப்படிப்பட்ட ஒன்பது சொற்களும் அஃறிணைச் சொற்களாம் !

அந்த ஒன்பது சொற்கள் யாவை ?

இளம்பூரணர் எழுதுகிறார் !-
1 . எகின்
2 . செகின்
3 . விழன்
4 . பயின்
5. அழன்
6 . புழன்
7 . குயின்
8 . கடான்
9 . வயான்

இச் சொற்களின் பொருளைப் பற்றி நமக்கு முன்பு  கவலைப் பட்டவர் நச்சினார்க்கினியர்! அவர் ,
1. எகின் = புளி
2. பயின் = பிசின்
3. குயின் = மேகம்
4. அழன் = பிணம்
5. வயான் = காரிப் பறவை
- என்று பொருள்கள் எழுதிவிட்டு , “செகின் முதலிய பிறவற்றுக்குப் பொருள் புலப்பட்டில”
எனக் குறித்துளார் !

ஒன்பது சொற்களுக்கு மட்டும்தானே தடைபோட்டது தொல்காப்பியம் ?
அப்படியானால் மீதி ‘ன்’ ஈற்றுச் சொற்களின் ஈற்றில் , ‘ன்’னுக்குப் பதிலாக ‘ம்’ வரும் என்பதுதானே பொருள் ?
ஆமாம் என்ற இளம்பூரணர் , அப்படி வரக்கூடிய ‘ன்’ஈற்றுச் சொற்கள் சிலவற்றை எழுதுகிறார் !-

1 . நிலன்
இது ‘நிலம்’ என்ற பொருளையே தரும் !

2 . பிலன்
இது ‘பிலம்’ என்ற பொருளையே தரும்!

‘வயான்’ எனும் காரிப் பறவையைப் பார்க்க ஆசையா?

இதோ -
1 .
[You must be registered and logged in to see this image.] Courtesy – blog.chaukhat.com

2.
[You must be registered and logged in to see this image.] Courtesy – orientalbirdimages.org

3.
[You must be registered and logged in to see this image.] Courtesy – tulaoer.org


இதன் விலங்கியல் பெயர் - Dicrurus மச்ரோசெர்கிஸ்

இதன் வேறு பெயர் - கரிக் குருவி

இதன் தாயகம் – இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள்

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 17, 2015 3:53 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (392)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எழுத்ததிகாரத்தில் நாம் இதுவரை நூற்பாவாரியாக ஆய்ந்தவை :-

1.நூன் மரபு
2.மொழி மரபு
3.புணரியல்
4.தொகை மரபு
5.உருபியல்
6. உயிர் மயங்கியல்
7. புள்ளி மயங்கியல்
8.குற்றியலுகரப் புணரியல்

இப்போது மீதி இருப்பது ‘பிறப்பியல்’ ஒன்று மட்டுமே !

‘பிறப்பியல்’ , எழுத்ததிகாரத்தின் மூன்றாவது இயல்.

இதனை இப்போது பார்ப்போம் !

முதல் நூற்பா ! –

“உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப்
பல்லு மிதழு நாவு மூக்கும்
அண்ணமு முளப்பட வெண்முறை நிலையான
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
பிறப்பி னாக்கம் வேறுவே றியல
திறப்படத் தெரியுங் காட்சி யான”  (பிறப்.1)

தமிழ் எழுத்தொலிகள் பிறக்கும் முறைகளைத் தொகுத்துச் சுருக்கமாக ஒரு நூற்பாவில் கூறிவிட்டார் தொல்காபியர் !

‘உந்தி முதலா முந்துவளி தோன்றி’ – வயிற்றின் தொப்புள் பகுதியிலிருந்து காற்றானது கிளம்பி,
‘தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ’ – தலை , தொண்டை, நெஞ்சு ஆகிய பகுதிகளில் நிலைபெற்று ,
‘பல்லும்  இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான
உறுப்புற்று அமைய’ – பல் , இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகிய ஐந்து உறுப்புகளில் சேர,
‘எல்லா வெழுத்தும் சொல்லுங் காலைப்,பிறப்பின்  ஆக்கம் வேறுவேறு  இயல
திறப்படத் தெரியும் காட்சி ஆன’ – தமிழ் எழுத்து ஒலிப்புகள் எல்லாம் , ஆராய்ந்து பார்க்குமிடத்து ,  ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாகப் பிறக்கும் !

இவ்வாறு தொல்காப்பியர் கூறியதைத்தான் இன்றைய மொழியியலார் (Linguists)  ஆங்கிலத்தில் ஓதுகின்றனர் !  ‘பிறப்பியல்’ என்பதை Articulation of letters என்கின்றனர்; ‘மிடறு ’ என்பதை அவர்கள் Larynx என்கின்றனர் .

தலை – இது மூளையைக் குறிக்கும் என்று ச.பாலசுந்தரம் எழுதியுள்ளார்!அவரே , மொழியியலார் மூக்குத் துளையின் அடிப்பாகத்தைக் குறிக்கும் என மொழிநூலார் கருதுவர் என்ற குறிப்பையும் தருகிறார் !

தலை , நெஞ்சு ஆகியவை கூடத் தமிழ் எழுத்து உச்சரிப்பில் பங்கு வகிக்கின்றன என்று அந்தக் காலத்திலேயே தொல்காப்பியர் கூறியுள்ளது நமக்கு வியப்பை அளிக்கிறது !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 53 of 84 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 68 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக