புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 60 of 84 •
Page 60 of 84 • 1 ... 31 ... 59, 60, 61 ... 72 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழிலே " மூக்கு " என்பது தெலுங்கிலே " முக்கு " என்று சொல்வார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே !
ஆனால் தெலுங்கர்கள் அதை முக்காமல் சொல்லிவிடுவார்கள் ! தொல்காப்பிய உரை கூறும் முக்கு வேறு !
ஆனால் தெலுங்கர்கள் அதை முக்காமல் சொல்லிவிடுவார்கள் ! தொல்காப்பிய உரை கூறும் முக்கு வேறு !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே” (கிளவி. 1)
"என்மனார் " என்ற சொல்லின் மூலமாகத் தமிழில் , தொல்காப்பியத்திற்கு முன்பே இலக்கண நூல்கள் இருந்ததைப் புலப்படுத்துகிறது அல்லவா ? தங்கள் கருத்து என்ன ?
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே” (கிளவி. 1)
"என்மனார் " என்ற சொல்லின் மூலமாகத் தமிழில் , தொல்காப்பியத்திற்கு முன்பே இலக்கண நூல்கள் இருந்ததைப் புலப்படுத்துகிறது அல்லவா ? தங்கள் கருத்து என்ன ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே !
தாங்கள் கூறியது உண்மை! எங்கள் முதல்வர் (Principal) மறைந்த வ.சுப.மாணிக்கம் உட்படப் பலர் இக் கருத்தை எழுதியுள்ளனர் !
தாங்கள் கூறியது உண்மை! எங்கள் முதல்வர் (Principal) மறைந்த வ.சுப.மாணிக்கம் உட்படப் பலர் இக் கருத்தை எழுதியுள்ளனர் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (411)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சொல்லதிகாரத்தில் ‘திணை’ பற்றிய நூற்பாவைப் பார்த்தோம் !
அடுத்ததாக வரும் 26 நூற்பாக்கள் (நூ.2 - 27) ‘பால்’ (Gender) பற்றியன.
இப்போது சொல்லதிகாரத்தின் அந்த இரண்டாம் நூற்பா!-
“ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல்
பல்லோ ரறியும் சொல்லொடு சிவணி
அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே” (கிளவி. 2)
‘ஆடூஉ அறிசொல்’- ஆண்பாலை அறியும் சொல்,
‘மகடூஉ அறிசொல்’- பெண்பாலை அறியும் சொல்,
‘பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி’- பலர்பாலை அறியும் சொல்லோடு சேர்ந்து,
‘அம்முப் பாற்சொல்’ – அந்த மூன்று வகையான சொற்களும்,
‘உயர்திணை அவ்வே’ – உயர்திணைச் சொற்கள் என்று ஆகும் !
ஆடூஉ – ஆண்
மகடூஉ – பெண்
‘மகடூஉ’ என்ற சொல்லுக்குப் ‘பெண்டாட்டி’ என்றொரு பொருளும் தமிழில் உண்டு !
புறநானூற்றில் (பா.331) இதற்கான சான்று உள்ளது ! ஆனால் தொல்காப்பிய நூற்பாவுக்கும் இப்பொருளுக்கும் தொடர்பில்லை !
தமிழ்ப் பேரகராதிப்படி (Tamil Lexicon), ‘ஆள்’ என்ற சொல்லிலிருந்தே ‘ஆடூஉ’என்ற சொல் வந்தது !
ஆள் + து = ஆடு
‘ஆடு’, விகாரப்பட்டு ‘ஆடூஉ’ ஆனது !
‘ஆடூஉ’ வில் ‘அளபெடை’ உள்ளதைக் கவனியுங்கள் ! இந்த அளபெடை , சொல்லிசை அளபெடை !
இதைப்போலவே , ‘மகடூஉ’வில் உள்ள அளபெடையும் சொல்லிசை அளபெடையே !
ஆண்பால் – Masculine gender
பெண்பால் – Feminine gender
பலர்பால் – Common gender
அளபெடை: Vowel- prolongation
‘உயர்திணைச் சொல்’ என்று கூறினால், அந்தச் சொல்லானது , ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற இந்த மூன்று பிரிவுகளுக்குள்தான் வரும் !இதனை யாரும் சோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம் !-
ஆட்டக்காரி – பெண்பால் (உயர்திணை)
ஆட்டக்காரன் – ஆண்பால் (உயர்திணை)
ஆட்டக்காரர்கள் – பலர்பால் (உயர்திணை)
ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் எல்லாம் ‘பால்’ தோன்றாத காலத்திலேயே, மேற்கண்டவாறு மூன்று பால்களைத் தமிழில் வகுத்த தமிழர்களை நினைக்கவேண்டும் !தமிழின் தொன்மைக்கு நேரடியான சான்று இது ! மிகப் பழங்காலத்திலேயே தமிழானது செம்மையாக அமைந்துவிட்டதால்தான் தமிழைச் செம்மொழி (Classical language) என்று கூறமுடிகிறது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சொல்லதிகாரத்தில் ‘திணை’ பற்றிய நூற்பாவைப் பார்த்தோம் !
அடுத்ததாக வரும் 26 நூற்பாக்கள் (நூ.2 - 27) ‘பால்’ (Gender) பற்றியன.
இப்போது சொல்லதிகாரத்தின் அந்த இரண்டாம் நூற்பா!-
“ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல்
பல்லோ ரறியும் சொல்லொடு சிவணி
அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே” (கிளவி. 2)
‘ஆடூஉ அறிசொல்’- ஆண்பாலை அறியும் சொல்,
‘மகடூஉ அறிசொல்’- பெண்பாலை அறியும் சொல்,
‘பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி’- பலர்பாலை அறியும் சொல்லோடு சேர்ந்து,
‘அம்முப் பாற்சொல்’ – அந்த மூன்று வகையான சொற்களும்,
‘உயர்திணை அவ்வே’ – உயர்திணைச் சொற்கள் என்று ஆகும் !
ஆடூஉ – ஆண்
மகடூஉ – பெண்
‘மகடூஉ’ என்ற சொல்லுக்குப் ‘பெண்டாட்டி’ என்றொரு பொருளும் தமிழில் உண்டு !
புறநானூற்றில் (பா.331) இதற்கான சான்று உள்ளது ! ஆனால் தொல்காப்பிய நூற்பாவுக்கும் இப்பொருளுக்கும் தொடர்பில்லை !
தமிழ்ப் பேரகராதிப்படி (Tamil Lexicon), ‘ஆள்’ என்ற சொல்லிலிருந்தே ‘ஆடூஉ’என்ற சொல் வந்தது !
ஆள் + து = ஆடு
‘ஆடு’, விகாரப்பட்டு ‘ஆடூஉ’ ஆனது !
‘ஆடூஉ’ வில் ‘அளபெடை’ உள்ளதைக் கவனியுங்கள் ! இந்த அளபெடை , சொல்லிசை அளபெடை !
இதைப்போலவே , ‘மகடூஉ’வில் உள்ள அளபெடையும் சொல்லிசை அளபெடையே !
ஆண்பால் – Masculine gender
பெண்பால் – Feminine gender
பலர்பால் – Common gender
அளபெடை: Vowel- prolongation
‘உயர்திணைச் சொல்’ என்று கூறினால், அந்தச் சொல்லானது , ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற இந்த மூன்று பிரிவுகளுக்குள்தான் வரும் !இதனை யாரும் சோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம் !-
ஆட்டக்காரி – பெண்பால் (உயர்திணை)
ஆட்டக்காரன் – ஆண்பால் (உயர்திணை)
ஆட்டக்காரர்கள் – பலர்பால் (உயர்திணை)
ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் எல்லாம் ‘பால்’ தோன்றாத காலத்திலேயே, மேற்கண்டவாறு மூன்று பால்களைத் தமிழில் வகுத்த தமிழர்களை நினைக்கவேண்டும் !தமிழின் தொன்மைக்கு நேரடியான சான்று இது ! மிகப் பழங்காலத்திலேயே தமிழானது செம்மையாக அமைந்துவிட்டதால்தான் தமிழைச் செம்மொழி (Classical language) என்று கூறமுடிகிறது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே !
தாங்கள் கூறியது உண்மை! எங்கள் முதல்வர் (Principal) மறைந்த வ.சுப.மாணிக்கம் உட்படப் பலர் இக் கருத்தை எழுதியுள்ளனர் !
ஐயா !
நான் 1964-65 ஆம் ஆண்டு காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியில் PUC படித்தேன். அப்போது டாக்டர் .வ.சுப . மாணிக்கம் அவர்கள் கல்லூரியின் முதல்வராக இருந்தார்கள் . அப்போது அவரைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது . அவர் எழுதிய நூல்களில் எனக்கு மிகவும் பிடித்தது " வள்ளுவம் " என்ற நூல்தான் . அந்த மேதையிடம் படிக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நல்லது எம்.ஜெகதீசன் அவர்களே !
நாம் இருவரும் நெருங்கி வந்துள்ளோம் ! மகிழ்ச்சி !
நாம் இருவரும் நெருங்கி வந்துள்ளோம் ! மகிழ்ச்சி !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (412)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அஃறிணையில் மொத்தம் இரு பால்கள் உளவாகக் குறிக்கிறார் தொல்காப்பியர் –
“ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று
ஆயிரு பாற்சொ லஃறிணை யவ்வே” (கிளவி.3)
‘ஒன்று அறி சொல்லே’- ஒரு பொருளைக் குறிக்கும் சொல்;
‘பல அறி சொல் என்று’- பல பொருட்களைக் குறிக்கும் சொல்;
‘ஆ இரு பாற்சொல்’ – அந்த இருவகைப் பட்ட பால் குறித்த சொற்களே அஃறிணையின் பாற்படும் !
இன்று ‘ஒன்றன் பால்’ என நாம் சொல்வதையே தொல்காப்பியர் ‘ஒன்றறி சொல்’ என்கிறார் !
இன்று ‘பலவின் பால்’ என நாம் சொல்வதையே தொல்காப்பியர் ‘பலவறி சொல்’ என்கிறார் !
மாடு – ஒன்றன் பால்
மாடுகள் – பலவின் பால்
மாடு , மாடுகள் – இரண்டுமே அஃறிணைப் பொருள்கள்தாம் !
செங்கல் – ஒன்றன் பால் ; அஃறிணை (Non-rational class singular)
ஈட்டிகள் – பலவின்பால் ; அஃறிணை(Non-rational class plural)
‘மாடு’ என்ற இனத்தில் பசு , பெண்தானே? காளை,ஆண்தானே?
சரிதான்!
ஆனால் பசுவும் காளையும் தமிழ் இலக்கணப்படி அஃறிணை ஒன்றன்பாலில்தான் வரும் !
கல்லுக்கு உயிர் இல்லை ; அஃறிணை ! சரி ! ஆனால் பசுவுக்கு உயிர் இருக்கிறதே ?
உயிர் இருந்தாலும் அஃது அஃறிணைதான் !
இல்லையானால் விலங்குகளிடமிருந்து மனிதனை எப்படி வேறுபடுத்திக் காட்டுவது ?
இந்த இடத்தில்தான் புகுந்தார்கள் மொழியிலாளர்கள் (Linguists)!
புகுந்து , ‘அதனால்தான் சொல்கிறோம் ! திணை பால்கள் கொண்ட முறையை மாற்றியமைக்கவேண்டும் ; ஐந்து பால்கள் என்பதைத் திருத்தி ஆறு பால்கள் என்று பாடப்புத்தகத்தில் ஏற்றவேண்டும்’ என்கின்றனர் !
ஆனால் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது !
ஆய்வை யாரும் எப்படியும் நடத்திக்கொள்ளலாம் ! அது அவர்களின் ஆய்வு முடிவு ! ஆனால் அதற்காகப் பழந்தமிழில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சொல்லிவந்த இலக்கண முறையை மாற்ற யாருக்கும் உரிமையில்லை !
சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் என்பதுதான் தமிழ் மரபு !
வளர்ச்சிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமே தவிரப், பழையதை மாற்ற நினைக்கக் கூடாது !
விதிகளுக்குப் ‘புறனடை’அமைத்து மொழி வளர்ச்சியை எப்போதோ உள்ளடக்கிக் கூறியுள்ளது தமிழ்! அவரவர் ஆய்வைத் திணிப்பதற்குப் பழந் தமிழ் இடமல்ல !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அஃறிணையில் மொத்தம் இரு பால்கள் உளவாகக் குறிக்கிறார் தொல்காப்பியர் –
“ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று
ஆயிரு பாற்சொ லஃறிணை யவ்வே” (கிளவி.3)
‘ஒன்று அறி சொல்லே’- ஒரு பொருளைக் குறிக்கும் சொல்;
‘பல அறி சொல் என்று’- பல பொருட்களைக் குறிக்கும் சொல்;
‘ஆ இரு பாற்சொல்’ – அந்த இருவகைப் பட்ட பால் குறித்த சொற்களே அஃறிணையின் பாற்படும் !
இன்று ‘ஒன்றன் பால்’ என நாம் சொல்வதையே தொல்காப்பியர் ‘ஒன்றறி சொல்’ என்கிறார் !
இன்று ‘பலவின் பால்’ என நாம் சொல்வதையே தொல்காப்பியர் ‘பலவறி சொல்’ என்கிறார் !
மாடு – ஒன்றன் பால்
மாடுகள் – பலவின் பால்
மாடு , மாடுகள் – இரண்டுமே அஃறிணைப் பொருள்கள்தாம் !
செங்கல் – ஒன்றன் பால் ; அஃறிணை (Non-rational class singular)
ஈட்டிகள் – பலவின்பால் ; அஃறிணை(Non-rational class plural)
‘மாடு’ என்ற இனத்தில் பசு , பெண்தானே? காளை,ஆண்தானே?
சரிதான்!
ஆனால் பசுவும் காளையும் தமிழ் இலக்கணப்படி அஃறிணை ஒன்றன்பாலில்தான் வரும் !
கல்லுக்கு உயிர் இல்லை ; அஃறிணை ! சரி ! ஆனால் பசுவுக்கு உயிர் இருக்கிறதே ?
உயிர் இருந்தாலும் அஃது அஃறிணைதான் !
இல்லையானால் விலங்குகளிடமிருந்து மனிதனை எப்படி வேறுபடுத்திக் காட்டுவது ?
இந்த இடத்தில்தான் புகுந்தார்கள் மொழியிலாளர்கள் (Linguists)!
புகுந்து , ‘அதனால்தான் சொல்கிறோம் ! திணை பால்கள் கொண்ட முறையை மாற்றியமைக்கவேண்டும் ; ஐந்து பால்கள் என்பதைத் திருத்தி ஆறு பால்கள் என்று பாடப்புத்தகத்தில் ஏற்றவேண்டும்’ என்கின்றனர் !
ஆனால் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது !
ஆய்வை யாரும் எப்படியும் நடத்திக்கொள்ளலாம் ! அது அவர்களின் ஆய்வு முடிவு ! ஆனால் அதற்காகப் பழந்தமிழில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சொல்லிவந்த இலக்கண முறையை மாற்ற யாருக்கும் உரிமையில்லை !
சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் என்பதுதான் தமிழ் மரபு !
வளர்ச்சிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமே தவிரப், பழையதை மாற்ற நினைக்கக் கூடாது !
விதிகளுக்குப் ‘புறனடை’அமைத்து மொழி வளர்ச்சியை எப்போதோ உள்ளடக்கிக் கூறியுள்ளது தமிழ்! அவரவர் ஆய்வைத் திணிப்பதற்குப் பழந் தமிழ் இடமல்ல !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (412)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அஃறிணையில் மொத்தம் இரு பால்கள் உளவாகக் குறிக்கிறார் தொல்காப்பியர் –
“ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று
ஆயிரு பாற்சொ லஃறிணை யவ்வே” (கிளவி.3)
‘ஒன்று அறி சொல்லே’- ஒரு பொருளைக் குறிக்கும் சொல்;
‘பல அறி சொல் என்று’- பல பொருட்களைக் குறிக்கும் சொல்;
‘ஆ இரு பாற்சொல்’ – அந்த இருவகைப் பட்ட பால் குறித்த சொற்களே அஃறிணையின் பாற்படும் !
இன்று ‘ஒன்றன் பால்’ என நாம் சொல்வதையே தொல்காப்பியர் ‘ஒன்றறி சொல்’ என்கிறார் !
இன்று ‘பலவின் பால்’ என நாம் சொல்வதையே தொல்காப்பியர் ‘பலவறி சொல்’ என்கிறார் !
மாடு – ஒன்றன் பால்
மாடுகள் – பலவின் பால்
மாடு , மாடுகள் – இரண்டுமே அஃறிணைப் பொருள்கள்தாம் !
செங்கல் – ஒன்றன் பால் ; அஃறிணை (Non-rational class singular)
ஈட்டிகள் – பலவின்பால் ; அஃறிணை(Non-rational class plural)
‘மாடு’ என்ற இனத்தில் பசு , பெண்தானே? காளை,ஆண்தானே?
சரிதான்!
ஆனால் பசுவும் காளையும் தமிழ் இலக்கணப்படி அஃறிணை ஒன்றன்பாலில்தான் வரும் !
கல்லுக்கு உயிர் இல்லை ; அஃறிணை ! சரி ! ஆனால் பசுவுக்கு உயிர் இருக்கிறதே ?
உயிர் இருந்தாலும் அஃது அஃறிணைதான் !
இல்லையானால் விலங்குகளிடமிருந்து மனிதனை எப்படி வேறுபடுத்திக் காட்டுவது ?
இந்த இடத்தில்தான் புகுந்தார்கள் மொழியிலாளர்கள் (Linguists)!
புகுந்து , ‘அதனால்தான் சொல்கிறோம் ! திணை பால்கள் கொண்ட முறையை மாற்றியமைக்கவேண்டும் ; ஐந்து பால்கள் என்பதைத் திருத்தி ஆறு பால்கள் என்று பாடப்புத்தகத்தில் ஏற்றவேண்டும்’ என்கின்றனர் !
ஆனால் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது !
ஆய்வை யாரும் எப்படியும் நடத்திக்கொள்ளலாம் ! அது அவர்களின் ஆய்வு முடிவு ! ஆனால் அதற்காகப் பழந்தமிழில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சொல்லிவந்த இலக்கண முறையை மாற்ற யாருக்கும் உரிமையில்லை !
சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் என்பதுதான் தமிழ் மரபு !
வளர்ச்சிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமே தவிரப், பழையதை மாற்ற நினைக்கக் கூடாது !
விதிகளுக்குப் ‘புறனடை’அமைத்து மொழி வளர்ச்சியை எப்போதோ உள்ளடக்கிக் கூறியுள்ளது தமிழ்! அவரவர் ஆய்வைத் திணிப்பதற்குப் பழந் தமிழ் இடமல்ல !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அஃறிணையில் மொத்தம் இரு பால்கள் உளவாகக் குறிக்கிறார் தொல்காப்பியர் –
“ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று
ஆயிரு பாற்சொ லஃறிணை யவ்வே” (கிளவி.3)
‘ஒன்று அறி சொல்லே’- ஒரு பொருளைக் குறிக்கும் சொல்;
‘பல அறி சொல் என்று’- பல பொருட்களைக் குறிக்கும் சொல்;
‘ஆ இரு பாற்சொல்’ – அந்த இருவகைப் பட்ட பால் குறித்த சொற்களே அஃறிணையின் பாற்படும் !
இன்று ‘ஒன்றன் பால்’ என நாம் சொல்வதையே தொல்காப்பியர் ‘ஒன்றறி சொல்’ என்கிறார் !
இன்று ‘பலவின் பால்’ என நாம் சொல்வதையே தொல்காப்பியர் ‘பலவறி சொல்’ என்கிறார் !
மாடு – ஒன்றன் பால்
மாடுகள் – பலவின் பால்
மாடு , மாடுகள் – இரண்டுமே அஃறிணைப் பொருள்கள்தாம் !
செங்கல் – ஒன்றன் பால் ; அஃறிணை (Non-rational class singular)
ஈட்டிகள் – பலவின்பால் ; அஃறிணை(Non-rational class plural)
‘மாடு’ என்ற இனத்தில் பசு , பெண்தானே? காளை,ஆண்தானே?
சரிதான்!
ஆனால் பசுவும் காளையும் தமிழ் இலக்கணப்படி அஃறிணை ஒன்றன்பாலில்தான் வரும் !
கல்லுக்கு உயிர் இல்லை ; அஃறிணை ! சரி ! ஆனால் பசுவுக்கு உயிர் இருக்கிறதே ?
உயிர் இருந்தாலும் அஃது அஃறிணைதான் !
இல்லையானால் விலங்குகளிடமிருந்து மனிதனை எப்படி வேறுபடுத்திக் காட்டுவது ?
இந்த இடத்தில்தான் புகுந்தார்கள் மொழியிலாளர்கள் (Linguists)!
புகுந்து , ‘அதனால்தான் சொல்கிறோம் ! திணை பால்கள் கொண்ட முறையை மாற்றியமைக்கவேண்டும் ; ஐந்து பால்கள் என்பதைத் திருத்தி ஆறு பால்கள் என்று பாடப்புத்தகத்தில் ஏற்றவேண்டும்’ என்கின்றனர் !
ஆனால் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது !
ஆய்வை யாரும் எப்படியும் நடத்திக்கொள்ளலாம் ! அது அவர்களின் ஆய்வு முடிவு ! ஆனால் அதற்காகப் பழந்தமிழில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சொல்லிவந்த இலக்கண முறையை மாற்ற யாருக்கும் உரிமையில்லை !
சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் என்பதுதான் தமிழ் மரபு !
வளர்ச்சிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமே தவிரப், பழையதை மாற்ற நினைக்கக் கூடாது !
விதிகளுக்குப் ‘புறனடை’அமைத்து மொழி வளர்ச்சியை எப்போதோ உள்ளடக்கிக் கூறியுள்ளது தமிழ்! அவரவர் ஆய்வைத் திணிப்பதற்குப் பழந் தமிழ் இடமல்ல !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (413)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பேடி வந்தாள்
பேடி வந்தான்
- எது சரி?
இதற்குத் தொல்காப்பியத்தில் உள்ள விடை !-
“பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தந்தமக் கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்” (கிளவி.4)
‘பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்,
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்’- ஆண்மையானது மாறுபட்டுப் பெண் தன்மையைச் சுட்டும் உயர்திணைப் பெயர்ச்சொல்லும்,
‘தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்’ – தெய்வத்தைக் குறிக்கும் பெயர்ச் சொல்லும்,
‘இவ் என அறியும் அந்தந்தமக்கு இலவே’ – இந்த ஈறுதான் என்று பால் ஈறு கொள்ளமாட்டா!
‘உயர்திணை மருங்கில் பால்பிரிந்து இசைக்கும்’- உயர்திணைக்கான பால் ஈறுகளை தொடரின் வினை ஈறு பெறும் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டு –
1 . பேடி வந்தாள்
2 . பேடியர் வந்தார்
3. தேவன் வந்தான்
4 . தேவி வந்தாள்
5. தேவர் வந்தார்
அஃதாவது , ‘குருடி’ என்ற சொல்லைப் படித்த மாத்திரத்தில் , இது பெண்பால் பெயர்ச்சொல் என்று கூறிவிடுகிறோம் !
எதனால் ?
‘இ’ என்ற பெண்பால் ஈற்றினால் !
‘வேடன்’ என்று படித்த மாத்திரத்தில் , இது ஆண்பால் பெயர்ச்சொல் என்று கூறிவிடுகிறோம் !
எதனால்?
‘ன்’ என்ற ஆண்பால் ஈர்றினால் !
இந்த முறையில் ‘பேடி’ , ‘தேவன்’ போன்ற சொற்களைக் கூறிவிடமுடியாது ! அவற்றை அடுத்த வினைச்சொல்லின் ஈற்றைக் கொண்டுதான் அறிய வேண்டும் ! இதுதான் தொல்காப்பியர் கூறவந்தது !
இன்னும் விளக்கலாமா?
‘பேடி’ என்ற சொல்லின் ஈறாகிய இகர ஈறு பெண்பால் ஈறு அல்ல !
‘பேடி வந்தாள்’ என்ற தொடரின் ஈற்று வினையில் உள்ள ‘ள்’என்பதே , பேடி என்ற உயர்திணைச்சொல் பெண்பாலைக் குறிக்கிறது என்பதை நமக்கு அறிவிக்கிறது !
இதைப்போலவே , ‘தேவன்’ என்ற சொல்லின் ‘ன்’ஈறு ஆண்பால் ஈறு அல்ல! ‘தேவன் வந்தான்’ என்ற தொடரில் உள்ள வினையாகிய ‘வந்தான்’என்பதன் ஈறாகிய ‘ன்’என்பதே ஆண்பால் என்பதை நமக்கு அறிவிக்கிறது !
நச்சினார்க்கினியர் உரைப்படி –
‘அலி வந்தான்’ என்று எழுதவேண்டும் !
‘அலி’ என்ற சொல்லின் இகர ஈறு பெண்பால் ஈறு அல்ல! பெண்பால் ஈறாக இருந்தால் ‘அலி வந்தாள்’ என்றல்லவா இருக்கவேண்டும் ?
நச்சர் , ‘மகண்மா வந்தாள்’ என்று எழுதவேண்டும் என்கிறார் !
மகண்மா – அலி (Hermaphrodite)
‘அலி’ – ஒருவரைக் குறித்தாலும் , இரு வகைகளில் வினை ஈறு பெறுகின்றன !
தற்காலத்தில் திருநங்கை , அரவாணி ,அலி என்ற சொற்கள் ,ஒரே பாலினத்தவரைக் குறிக்கின்றன; இவர்கள் பிறப்பால் ஆணாகப் பிறந்து , குணத்தால் பெண்தன்மை பெற்றுப் பென்ணாகவே வாழ்பவர்கள்.இவர்களை Transwomen என்பர்.
பிறப்பால் பெண்ணாகப் பிறந்து ஆண்தன்மையை மிகுதியாகக் கொண்டு ஆண்களாக வாழ்பவர்களைத் திருநம்பிகள் (Transmen) என்பர்.
இருவரையுமே மூன்றாம் பாலினத்தவர் (Third gender) என்பர்.
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பேடி வந்தாள்
பேடி வந்தான்
- எது சரி?
இதற்குத் தொல்காப்பியத்தில் உள்ள விடை !-
“பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தந்தமக் கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்” (கிளவி.4)
‘பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்,
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்’- ஆண்மையானது மாறுபட்டுப் பெண் தன்மையைச் சுட்டும் உயர்திணைப் பெயர்ச்சொல்லும்,
‘தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்’ – தெய்வத்தைக் குறிக்கும் பெயர்ச் சொல்லும்,
‘இவ் என அறியும் அந்தந்தமக்கு இலவே’ – இந்த ஈறுதான் என்று பால் ஈறு கொள்ளமாட்டா!
‘உயர்திணை மருங்கில் பால்பிரிந்து இசைக்கும்’- உயர்திணைக்கான பால் ஈறுகளை தொடரின் வினை ஈறு பெறும் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டு –
1 . பேடி வந்தாள்
2 . பேடியர் வந்தார்
3. தேவன் வந்தான்
4 . தேவி வந்தாள்
5. தேவர் வந்தார்
அஃதாவது , ‘குருடி’ என்ற சொல்லைப் படித்த மாத்திரத்தில் , இது பெண்பால் பெயர்ச்சொல் என்று கூறிவிடுகிறோம் !
எதனால் ?
‘இ’ என்ற பெண்பால் ஈற்றினால் !
‘வேடன்’ என்று படித்த மாத்திரத்தில் , இது ஆண்பால் பெயர்ச்சொல் என்று கூறிவிடுகிறோம் !
எதனால்?
‘ன்’ என்ற ஆண்பால் ஈர்றினால் !
இந்த முறையில் ‘பேடி’ , ‘தேவன்’ போன்ற சொற்களைக் கூறிவிடமுடியாது ! அவற்றை அடுத்த வினைச்சொல்லின் ஈற்றைக் கொண்டுதான் அறிய வேண்டும் ! இதுதான் தொல்காப்பியர் கூறவந்தது !
இன்னும் விளக்கலாமா?
‘பேடி’ என்ற சொல்லின் ஈறாகிய இகர ஈறு பெண்பால் ஈறு அல்ல !
‘பேடி வந்தாள்’ என்ற தொடரின் ஈற்று வினையில் உள்ள ‘ள்’என்பதே , பேடி என்ற உயர்திணைச்சொல் பெண்பாலைக் குறிக்கிறது என்பதை நமக்கு அறிவிக்கிறது !
இதைப்போலவே , ‘தேவன்’ என்ற சொல்லின் ‘ன்’ஈறு ஆண்பால் ஈறு அல்ல! ‘தேவன் வந்தான்’ என்ற தொடரில் உள்ள வினையாகிய ‘வந்தான்’என்பதன் ஈறாகிய ‘ன்’என்பதே ஆண்பால் என்பதை நமக்கு அறிவிக்கிறது !
நச்சினார்க்கினியர் உரைப்படி –
‘அலி வந்தான்’ என்று எழுதவேண்டும் !
‘அலி’ என்ற சொல்லின் இகர ஈறு பெண்பால் ஈறு அல்ல! பெண்பால் ஈறாக இருந்தால் ‘அலி வந்தாள்’ என்றல்லவா இருக்கவேண்டும் ?
நச்சர் , ‘மகண்மா வந்தாள்’ என்று எழுதவேண்டும் என்கிறார் !
மகண்மா – அலி (Hermaphrodite)
‘அலி’ – ஒருவரைக் குறித்தாலும் , இரு வகைகளில் வினை ஈறு பெறுகின்றன !
தற்காலத்தில் திருநங்கை , அரவாணி ,அலி என்ற சொற்கள் ,ஒரே பாலினத்தவரைக் குறிக்கின்றன; இவர்கள் பிறப்பால் ஆணாகப் பிறந்து , குணத்தால் பெண்தன்மை பெற்றுப் பென்ணாகவே வாழ்பவர்கள்.இவர்களை Transwomen என்பர்.
பிறப்பால் பெண்ணாகப் பிறந்து ஆண்தன்மையை மிகுதியாகக் கொண்டு ஆண்களாக வாழ்பவர்களைத் திருநம்பிகள் (Transmen) என்பர்.
இருவரையுமே மூன்றாம் பாலினத்தவர் (Third gender) என்பர்.
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 60 of 84 • 1 ... 31 ... 59, 60, 61 ... 72 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 60 of 84
|
|