புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
37 Posts - 51%
heezulia
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
17 Posts - 2%
prajai
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
9 Posts - 1%
jairam
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:43 am

First topic message reminder :

1.புத்திலிபாய்



போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திமசந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார்.

புத்திலிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம நாளன்று காபா காந்தி–புத்திலிபாயின் கடைசி மகனாகத் தோன்றியவர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. காபா காந்தி நாணயமும் நேர்மையும் மிகுந்த திவானாக இருந்தார். புத்திலிபாய் தவஒழுக்கத்தில் சிறந்த பெண்மணியாக விளங்கினார்.

தினசரி பிரார்த்தனை செய்தபிறகே உணவு உட்கொள்வதை புத்லிபாய் வழக்கமாகக் கொண்டிருந்தார். தனந்தோறும் விஷ்ணு கோவிலுக்குச் சென்று வருவார். ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதத்தை தவறாமல் கைக்கொள்வார். மிகக் கடுமையான விரதங்களை மேற்கொண்டு, அதை நிறைவேற்றி வருவார். உடவாசம் இருப்பார். சாதுர்மாஸத்தில் புத்லிபாய் ஒருநாளைக்கு ஒரு வருடங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் பூரண உபவாசம் இருப்பார்.

ஒரு வருடத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தின்போது, புத்திலிபாய் தினம் சூரிய தரிசனம் செய்தபிறகே சாப்பிடுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார். அவ்விதமே செய்து வந்தார். தினமும், மோகனதாஸூம் அவருடைய உடன்பிறப்புகளும் காலை வேளையில் சூரியன் எப்போது மேகக் கூட்டங்களிலிருந்து வெளிவரப் போகிறான் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். மழைக்காலமானதால், சூரியனின் தரிசனம் கிடைத்தும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் கிடைத்ததும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் தெரிவிப்பார்கள். புத்லிபாய் வெளியில் வந்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்திருப்பான். ‘அதனாலென்ன மோசம்! இன்று நான் சாப்பிடுவது பகவானுக்கு விருப்பமில்லை’ என்று கூறியபடி, மலந்த முகத்தடன் மீண்டும் வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார்.

புத்லிபாய் கல்விஞானம் பெற்றிராவிடினும், அனுபவ ஞானம் அதிகம் பெற்றிருந்தார். ராஜ்காட் சமஸ்தானத்தில் இருந்த ராஜ குடும்பத்துப் பெண்மணிகள் எல்லோரும் புத்லிபாயின் அனுபவஞானம் மிகுந்த பேச்சைக் கேட்பதில் மிகவும் விருப்பம் உடையவர்கள். புத்திலிபாய் அடிக்கடி சமஸ்தானத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களோடு உற்சாகமாகப் பேசுவார்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:52 am

21. கோச்வண்டியும் டிராம் வண்டியும்



அக்காலத்தில் இந்தியாவின் தலைநகரமாக கல்கத்த இருந்தது. அங்கு இந்திய சட்டசபை ஒன்றும் இருந்தது. அதில் திரு. கோபாலகிருஷ்ண கோகலேயும் ஒரு அங்கத்தினர் சட்டசபை நடக்கும் காலங்களில் கோகலே கல்கத்தாவில் இருப்பார்.

கல்கத்தா, காங்கிரஸ் மகாசபை நடந்து மடிந்த பிறகும் காந்திஜி கல்கத்தாவில் தங்கியிருந்தார். கோகலே, காந்திஜியைத் தம்முடன் வந்து தங்குமாறு கூறினார்.

அவர் சொன்னபிறகு, ஒரிரு நாட்களிக்குப் பிறகே, காந்திஜி, கோகலேயுடன் தங்கச் சென்றார் கோகலேயின் அருகில் இருந்து, அவருடைய வாழ்க்கை முறையை கவனிக்கும் வாய்ப்பு காந்திஜிக்குக் கிடைத்தது. யாருடன் பேசினாலும் அதில் பொதுநல நோக்கமே இருந்ததை காந்திஜி கவனித்து வியந்தார்.

எளிய வாழ்வும் உயர்ந்த லட்சியங்களும் கொண்டிருந்தவர் கோகலே. அவர் சட்டசபைக்குப், மற்ற இடங்களுக்கும் செல்வதற்காக ஒரு கோச்வண்டி வைத்திருந்தார்.

காந்திஜி ஒருநாள் இதைப்பற்றி நேரிடையாக கோகலேயிடம் கேட்டுவிட்டார்.

”நீங்கள் எதள்காக, கோச்வண்டி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எளிமையான வாழ்வு வாழ விரும்பும் பயணம் செய்யக் கூடாது? அது உங்களுடைய கெளரவத்திற்குக் குறைவு என்று எண்ணுகிறீர்களா?”

”காந்தி, நீங்கள் உங்கள் விருப்பம்போல் டிராம்வண்டியில் செல்கிறீர்கள். இதைப் பார்த்து எனக்கும் பொறாமையாகத்தான் இருக்கிறது. என்னால் அவ்விதம் போக முடியாது. என்னை இந்த நகரத்து ஜனங்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். நான் டிராம் வண்டியில் போனாலும், போகும் பணிக்கு அதுவே இடையூறாகிவிடும். பொதுமக்களால், நீங்களும் ஒருநாள் அறியப்படும் மனிதராவீர்கள். அப்போது உங்களாலும் டிராம் வண்டியில் பயணம் செய்வது என்பது இயலாத காரியமாகிவிடும்”.

இந்த பதில் காந்திஜியின் சந்தேகத்தைப் போக்கியது.

கோகலேயுடன், ஒரு சில மாதங்கள் தங்கியபின்பு, காந்திஜி ரயிலில் மூன்றாம் வகுப்பிப் பெட்டியில் சுற்றுப்பயணம் செய்யக் கிளம்பினார். அவர் ஊருக்குக் கிளம்பும்போது, கோகலே தவறாமல், ரயில் நிலையத்துக்கு வந்து, காந்திஜியை வழி அனுப்பி வைத்தார்.

கோகலேயின் பண்பாட்டை, காந்திஜி வியந்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:52 am

22. காந்திஜி செய்த ஜலசிக்ச்சை



காந்திஜி, பம்பாய் நகரத்திற்கு வந்து வக்கீல் தொழிலை மேற்கொண்டார். கஸ்தூரிபாய், குழந்தைகள் வன்று, காந்திஜி குடும்பத்தோடு வாழ்த்திருத்தார். அச்சமயத்தில், காந்திஜியின் இரண்டாவது மகன் மணிலாலுக்கு ஜூரம் வந்தது. ஜூரம் அதிகரித்துக் கொண்டே போனாலும், காந்திஜி மருத்துவரிடம் காட்டினார்.

மணிலாலுக்கு ட்பாய்டும் அத்துடன் நிமோனியவும் கண்டிருப்பதாகவும், இதற்கு மருந்து கொடுப்பதோடு, முட்டையும், சிக்கன் சூப்பும் கொடுக்க வேண்டும் என்றார் மருந்துவர்.

காந்திஜி சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதில் உறுதி கொண்டவராயிற்றே! மருத்துவர் கூறியதைக் கேட்டு, அதன்படி நடக்க அவர் முன்வரவில்லை.

”இதைத் தவிர வேறு ஏதாவது யோசனை சொல்லுங்களேன்” என்று காந்திஜி மருத்துவரைக் கேட்டார்.

”குழந்தையின் உயிர் முக்கியம். அதைக் காப்பாற்ற வேண்டுமே தவிர, வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டாம். முட்டையும் சூப்பும் கொடுப்பது தவிர வேறு வழியில்லை” என்றார்.

காந்திஜி இதற்கு ஒப்பவில்லை. ”சரியோ, தவறோ, உயிர் போவதாக இருந்தாலும், இதற்கு சம்மதிக்க மாட்டேன்” என்றார் காந்திஜி.

பிறகு தனக்குத் தெரித் ஜலசிகிச்சை முறையை கையாளப் போவதாக காந்திஜி கூறிவிட்டு, அடிக்கடி மருத்துவரை வந்து கவனிக்குமாறு வேண்டுக் கொண்டார்.

பத்து வயதான மணிலாவிடம் நடந்ததை காந்திஜி கூறினார்.

”எனக்கு, அசைவம் வேண்தாம். நீங்கள் செய்யும் மருத்துவமே போதும்” என்று அவன் கூறியதும், காந்திஜி தமது சிகிச்சையைத் தொடங்கினார்.

தொட்டியில் ஜலம் நிரப்பி அதில் மணிலாவை உட்கார வைப்பதும் எடுப்பதுமாக இருந்தார். மூன்று நாட்கள் இதைத் தொடர்ந்து செய்தும் ஜூரம் குறையவில்லை.

பிறகு ஈரத்துணியை உடம்பிலும் தலையிலும் சுற்றி, கனத்த கம்பளியால் உடம்பைப் போர்த்திவிட்டு, காந்திஜி உலாவச் சென்றுவிட்டார்.

மணிலால், ”அப்பா” என்று கூவியதைக் கேட்டு பரபரப்புடன் வந்தார்.

மணிலால் வியர்வை வெள்ளத்தில் மூழ்கியிருந்தான். ஜூரம் நன்றாகக் குறைந்திருந்தது.

பாலும் பழரசமும் அருந்தினனு. பல நாட்கள் படுக்கையில் கிடந்தாலும், நல்ல தேக ஆரோக்கியம் பெற்றான்.

மணிலால் பிழைத்தி எழுந்தது, சிகிசைச்சையினால் மட்டுமல்ல ஆண்டவனுடைய கருணையினால் தான் என்று காந்திஜி மனப்பூர்வமாக நம்பினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:53 am

23. சதாக்கிரகம்-சத்யாக்ரகம்



தென்னாப்ரிக்காவில் டிரான்ஸ்வால் என்னுமிடத்தில் இந்தியர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு அதிக உரிமை வழங்கினால், அங்கே வெள்ளையரின் கை வலுவிழந்து போய்விடக் கூடும் என்று அரசாங்கம் எண்ணியது. அதனால் இந்தயர்கள் புதிதாக அந்த மாகாணத்திற்குள் உரிமைகளைப் பறிக்கவும் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது

இச்சட்டத்தை காந்திஜி ‘கறுப்புச் சட்டம்’ என்று கூறினார். இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் என்னென்ன துன்பங்கள் ஏற்படும் என்பதை இந்தியர்களுக்கு எடுத்துரைத்தார்.

இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் டிரான்ஸ்வாலில் வாழ்ந்த இந்தியர்கள் ஒரு முனைப்பான எண்ணம் கொண்டிருந்தார்கள்.

அந்த மாகாணத்தில் வாழ்ந்த இந்தியர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

1906-ம் வருடம் செம்டம்பர் 11-ம் நாளன்று ‘எம்பயர் என்ற நாடக மன்றத்தில் சுமார் மூவாயிரம் இந்தியர்கள் கூடினார்கள். ஜனாப் அப்துல்கனி என்பவர் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார்.

”கறுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தினால் அதற்கு ஆதரவு தருவதில்லை என்றும் சட்டத்தை மீறுவதால் ஏற்படும் கஷ்டங்களை பொறுமையுடன் ஏற்கவும் வேண்டும்” என்று அவர் எல்லோரையும் கேட்டுக் கொண்டார்.

காந்திஜி இதற்குப் பிறகு பேசினார்.

”இப்போது நாம் இங்கே நிறைவேற்றிய தீர்மானம் மிகவும் முக்கியமான ஒன்று. நம்முடைய எதிர்கால வாழ்வு எப்படியிருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். நாம் எல்லோரும் கடவுள் சாட்சியாக இந்தச் சட்டத்துக்கு உட்படுவதில்லை; அதனால் ஏற்படும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வேன்” என்று எல்லோரும் சபதம் செய்ய வேண்டும். கடவுள் சாட்சியாகச் செய்யப்படுகிற இந்த சபதத்தை, உறுதிமொழியை உயிர் உள்ளவரை காக்க வேண்டும்” என்றார்.

அங்கே கூடியிருந்த மூவாயிரம் இந்தியர்களும் காந்திஜியின் பேச்சைக் கேட்ட பிறகு எழுந்து நின்றார்கள்.

ஒரே குரலில், ”கறுப்புச் சட்டத்துக்கு நாங்கள் உடன் படமாட்டோம். கடவுள் சாட்சியாக, இது எங்கள் உறுதிமொழி”–என்று கூறினார்கள்.

உலக சரித்திரத்தில் முகவும் முக்கியமான நாளாக அந்த நாள் அமைந்தது. இந்த நிகழ்ச்சியை உலகம் ‘பாஸிவ்ரெஸிஸ்டென்ஸ்’ சாத்வீக சட்டமறுப்பு” என்று அழைத்தது.

உலகம் இதுவரை காணாத புதிய எழுச்சியாக, தென்னாப்ரிக்கா வாழ் இந்தியர்கள் தங்கள் எதிர்ப்பை அகிம்ஸை முறையில் தெரிவித்தார்கள்.

இந்த இயக்கத்திற்கு இந்திய மொழியில் ஒரு பெயரைத் தரவேண்டும் என்று காந்திஜி விரும்பினார்.

‘சதாக்ரகம்’ என்று மகன்லால் காந்தி என்பவர் புதிய பெயர் கூறினார். அதில் சிறிய திருத்தம் செய்து அதையே ”சத்யாக்ரகம்” என்று காந்திஜி மாற்றினார்.

புதிய போர்முறை அகிம்சா முறையிலான போர்முறை–சத்யாக்ரகம் உதயமாயிற்று.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:53 am

24. மீர்ஆலத்துக்கு மன்னிப்பு



புதிய போர் முறை தென்னாப்ரிக்கா வாழ் இந்தியர்களுக்கு உற்சாகம் ஊட்டியது. கறுப்புச் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு அவர்கள் உட்பட மறுத்தார்கள். ஆயிரக்காணக்கான இந்தியர்கள் இவ்வாறு சட்டத்தைப் புறக்கணித்தடைக் கண்ட அரசாங்கம், மக்கள் தலைவர்கள் சிலரை கைது செய்தது.

காந்திஜியும் கைது செய்யப்பட்டு இரண்டு வாரகாலம் சிறையில் இருந்தார். அரசாங்கம் சமாதானப் பேச்சு நடத்த விரும்பியது.

காந்திஜி உட்பட பல தலைவர்களை விடுவித்தார்கள். கறுப்புச் சட்டத்தின் நிபந்தனைப்படி அரசாங்கத்தின் கட்டாயம் இல்லாமல், மக்கள் தாங்களே தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், நாளடைவில் சட்டத்தை அரசு எடுத்துவிடும்” என்று அரசாங்கம் தலைவர்களிடம் உறுதி கூறியது.

இதனை காந்திஜி ஆதரித்தார். மக்களைக் கட்டாயப்படுத்தாமல் இருக்கும்படியான சட்டம், குற்றமல்ல என்பதே அவரது வாதம்.

ஆனால், ஒரு சிலர் இதற்கு உடன்பட மறுத்தார்கள். நிபந்தனைகள் மாறாதபோது, எப்படி அதனை ஏற்பது என்பது அவர்கள் தொடுக்கும் வாதம்.

இதில் முன்னணியில் இருந்தவன் ஒரு பட்டாணியன். அவன் பெயர் மீர் ஆலம். அவன் காந்திஜியிடம், ”இப்போதுள்ள ஒப்பந்தப்படி, பத்து விரல் அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டுமா?” என்று கோபமாகக் கேட்டான்.

”கொடுக்க வேண்டும் என்படே என் எண்ணம். இதை தன்மானத்துக்கு அழுக்கு என்று எண்ணினால் கொடுக்க வேண்டாம்.

”நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?”

”கட்டாயம் பதிவு செய்யப் போகிறேன்”.

”முதலில் யார், இப்படி பதிவு செய்யப்போகிறார்களோ அவர்களை அடித்துக் கொன்று போடப் போகிறேன். அல்லாமீது ஆணை”–என்று மீர்ஆலம் உறுதியாகச் சொல்லிச் சென்றான்.

ஆனால் காந்திஜி கலங்கொஇல்லை. மறுநாள் காந்திஜி பின்தொடர, பலர் பதிவு செய்யும் அலுவல்த்திற்குச் சென்றார்கள். மீர்ஆலம் அலுவலக வாசலில் நின்றிருந்தான். காந்திஜியைக் கண்டதும் ”எங்கேபோகுறீர்கள்” என்றான்.

”என் பெயரைப் பதிவு செய்யப் போகிறேன்”.

இதைக் கேட்டதும் மீர்ஆலம், தான் சொன்னது போலவே, பதிவு செய்ய வந்த முதல் நபரான காந்திஜியைத் தடியினால் இடித்தான்.

காந்திஜி ‘ஹே ராம்’ என்று கூறிவிட்டு மயங்கிக் கீழே விழுந்தார்.

அரசாங்கம் மீர்ஆலத்தைக் கைது செய்தது. மயக்கம் தெளிந்த காந்திஜி முதலில் மீர்ஆலம் பற்றிக் கேட்டார். பின்பு அவனை விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:53 am

25. பாமர வைத்தியன்



தென்னாப்ரிக்காவில் இருந்தபோது, கஸ்தூரிபாய்க்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இரத்தப் போக்கு குறைந்தது. ஆனால் சில நாட்களுக்குப் பீறகு மறுபடி இரத்தப்போக்கு அதிகரித்தது. கஸ்தூரிபாயின் உடல் நலமும் பாதிப்படைத்து.

காந்திஜி, கஸ்தூரிபாயை, உப்பையும் மசாலாக்களையும் தவிர்த்து சாப்பிட சொன்னார். மருந்து சாப்பிட்டும் குணமாகாத நோய், பத்தியத்தால் குணமாகும் என்று நம்பினார்.

கஸ்தூரிபாய்க்கு இந்த யோசனை சிறிதும் பிடிக்கவில்லை.

”உப்பையிம் மசாலா சாமான்களையும் விட்டு விடுங்கள் என்று உங்களிடம் சொன்னால் உங்களால் விட முடியுமா?” என்று கஸ்தூரிபாய் கோபத்துடன் காந்திஜியைக் கேட்டார்.

இதைக் கேட்டு காந்திஜி வருந்தவில்லை. மன மகிழ்ச்சியே அடைந்தார். கஸ்தூரிபாயிடம் தனக்குள்ள அன்பை வெளிப்படுத்த இதுவே சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தார்.

”நீ சொல்வது தவறு. எனக்கு உடம்பு சரியில்லாமல் போய், மருத்துவர், உப்பு, மசாலா, இன்னும் வேறு எதுவானாலும் விட்டுவிட வேண்டும் என்று சொன்னால், மறுவார்த்தை பேசாமல் விட்டுவிடுவேன் கஸ்தூரிபா. உனக்கு சந்தேகமே வேண்டாம். இப்போது மருத்துவர் யாரும், என்னை எதையும் விடச் சொல்லவில்லை. ஆனாலும் உனக்காக இனி ஒரு வருட காலம் உப்பும் மசாலாவும் சேர்க்க மாட்டேன். இது உறுதி” என்றார்.

காந்திஜி இவ்வாறு கூறியதும், கஸ்தூரிபாய் திடுக்கிட்டார்.

”என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் குணம் தெரிந்தும், நான் இப்படிப் பேசிவிட்டேனே! தயவுசெய்து, உங்கள் உறுதியைக் கைவிட்டு விடுங்கள்” என்று கெஞ்சினார்.

சத்தியவாக்கை மீறும் குணம் காந்திஜிக்கு இருந்ததே இல்லை.

”இதற்காக நீ கண்ணீர் விட வேண்டிய அவசியம் இல்லை. இந்த உப்பும் மசாலாவும் உடம்பிற்கு தேவையானதல்ல; இவற்றைத் தவிர்ப்பது எனக்கும் நல்லதுதான். ஆகையால் நான் எடுத்துக்கொண்ட உறுதியிலிருந்து தவறவே மாட்டேன்” என்றார் காந்திஜி.

கணவர் உப்பு, மசாலா இல்லாமல் சாப்பிடத் துவங்கியதும், கஸ்தூரிபாயிம் அவ்விதமே சாப்பிடலானார். உணவுக் கட்டுப்பாட்டினால் கஸ்தூரிபாயின் உடல் நலம் பெற்றது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:56 am

26. கஸ்தூரிபாயின் மனத்துணிவு



தென்னாப்ரிக்காவில் காந்திஜி சத்யாகிரக இயக்கத்தைத் தொடங்கியதும் அந்த இயக்கத்தில் பங்கேற்க சில பெண்களும் முன்வந்தார்கள். காந்திஜி அவர்களைத் தமது வீட்டிற்கு அழைத்து அறப்போரைப் பற்றிக் கூறலானார்.

அவற்றையெல்லாம் வீட்டிற்குள் இருந்த கஸ்தூரிபாய் ஊன்றி கவனித்துக் கொண்டிருந்தார்.

அப்பெண்கள் எல்லோரும் போனபிறகு, கஸ்தூரிபாய், காந்திஜியிடம் வந்தார்.

”சட்டமறுப்பு செய்ய எனக்கு தகுதி இல்லையா? இந்த விஷயங்களை நீங்கள் என்னிடம் ஏன் கூறவில்லை” என்றார்.

கஸ்தூரிபாயின் படபடப்பான பேச்சைக் கேட்டு, காந்திஜி அவளை அமைதிப்படுத்தினார்.

”சொல்லக்கூடாது என்பதில்லை. ஆனால் உன்னை துன்புறுத்த எனக்கு விருப்பம் இல்லை. நீயும் சத்யாக்ரகத்திலே சேர்ந்துகொண்டு போராடி சிறைக்குச் சென்றால் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும்………நான் உன்னை இதுபற்றிக் கேட்க தயக்கமாகவே இருக்கிறது?”

”என்ன தயக்கம், சொல்லுங்கள்”.

”அந்தப் பெண்களைக் கேட்டது போல உன்னையும், நீ சிறை செல்லத் தயாராக இருக்கிறாயா என்று கேட்டிருந்தால், நீ என் சொல்லை மறுத்துப் பேசியிருக்கமாட்டாய். போராடி சிறை சென்ற பிறகு, அங்குள்ள கஷ்டங்களைக் கண்டு உனக்கு அச்சம் ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பாளி நான்தான் என்று உலகம் பழிக்கும். நீயாகக் கேட்டு வந்தாயே, இதுவே நான் வேண்டியது. இனி எனக்கு, உன் விஷயத்தில் கவலை எதுவும் இல்லை” என்று காந்திஜி, அவளுக்கு விளக்கம் கூறினார்.

”ஜெயிலில் கஷ்டங்கள் இருந்தால் அதைத் தாங்க முடியாமல் நான் மன்னிப்புக் கேட்டால், அதன்பிறகு நீங்கள் என் முகத்தில் விழிக்கவே வேண்டாம். நீங்கள், ஜெயில் கஷ்டங்களைத் தாங்கவில்லையா? அதுபோல என் பிள்ளைகளும் தாங்குவார்கள். நானும் தாங்கிக் கொள்வேன்”.

அழுத்தமாகக் கூறிய அன்னை கஸ்தூரிபாய், சத்யாக்ரக போராட்டங்களில் கலந்துகொண்டார். ஆறு ஆண்டு காலம் நடந்த போராட்டாங்களில் கஸ்தூரிபாய் பலமுறை சிறைவாசத்தை அனுபவித்தார்.

அண்ணளுக்கேற்ற அன்னை என்று அகில உலகமும் போற்ற வாழ்ந்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:56 am

27. அதிசய விருந்து



தென்னாப்ரிக்காவிலிருந்து தாயகம் வந்த பின்பு, காந்திஜி சென்னைக்கு ஒருமுறை விஜயம் செய்தார். தென்னாப்ரிக்காவில் காந்திஜியின் சத்யாக்ரக போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தவர்கள் தென்னாப்ரிக்கா வாழ் தமிழர்கள். எனவே காந்திஜி, தமிழர்களின் மீது தனி அன்பு வைத்திருந்தார்.

சென்னையில் பிரபலமான எஸ். ஸ்ரீனிவாச அய்யங்கார், காந்திஜியைப் பாராட்டி ஒரு விருந்தளித்தார். அந்த விருந்துக்கு, அவர் பல முக்கியமானவர்களையும் அழைத்திருந்தார்.

காந்திஜியும் கஸ்தூரிபாயும் வந்தார்கள். குஜராத்தி பாணியில் வெள்ளை குர்த்தாவும் வேஷ்டியும் தலைப்பாகையிம் அணிந்து ஒரு படித்த வடநாட்டு குடியானவனைப் போல தோற்றமளித்தார்.

தூய்மையன வெள்ளைப் பாவாடை, தாவணி அணிந்து, மெலிந்த உடம்பினரான கஸ்தூரிபாய் உடன் வந்தார். அன்பு கனிந்த பார்வை. உலக அனுபவத்தை உள்ளடக்கிய கனிவான களையான முகம். கைகளில் ஒரு ஜதை இரும்புக் காப்புகள் மட்டுமே அணிந்திருந்தார்.

விருந்து நடக்கும் இடத்திற்கு அனைவரும் சென்றார்கள். மேஜைகளின்மீது உண்ணவேண்டிய பொருட்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. விருந்துக்கு வந்திருந்தவர்கள், ஜிலேபி, பேடா, ஐஸ்கிரீம், பூந்தி போன்ற இனிப்பு வகைகளை எதிர்பார்த்து காந்திருந்தார்கள். ஆனால் அன்றைய விருந்தில் இருந்தவை என்ன தெரியுமா?

தேங்காயின் இளம் வழுக்கல் ஒரு அடுக்கில் வைக்கப்பட்டிருந்தது.

வேக வைத்த வேர்க்கடலையை மிதமான உப்பு போட்டு ஒரு பாத்திரத்தில் வைத்திருந்தார்கள்.

இன்னொரு தட்டில் உரித்த ஆரஞ்சுச் சுளைகள்; மற்றொன்றில் நறுக்கிய ஆப்பிள் துண்டங்கள். திராட்சைப் பழம்; அராபிய நாட்டு பேரீச்சம் பழத்தில் கொட்டை நீக்கப்பட்டு குவிக்கப்பட்டிருந்தது. இவை தவிர குளிர்ந்த நீர் மோர்; பருக இளநீர், இனிப்பான பானகம்.

காந்திஜியின் இயற்கை உணவே அன்றைக்கு எல்லோருக்கும் விருந்தில் அளிக்கப்பட்டது. 1915-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி நடந்த இந்த அதிசய விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு புதுமையான அனுபவமாக இருந்தது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:56 am

28. தீபாவளிப் பார்சல்



வார்தா காந்தி ஆச்ரமத்தில், காந்திஜியுடன் சிறிது காலம் தங்க வேண்டும் என்ற விருப்பத்துடன், அம்புஜம்மாள் வந்தாள். சிறிய வயது, சுகபோகமாக வாழ்ந்த பெண். ஆசிரம வாழ்வு அவளுக்கு ஒத்து வருமோ என்று அவளுடைய தந்தை கவலைப்பட்டார். ஆனால் காந்திஜியோ, ”கவலைப்பட வேண்டாம். அம்புஜத்தை என் பெண்போல கவனித்துக் கொள்வேன்” என்றார்.

ஆச்ரம நியமங்களைக் கடைப்பிடிப்பது, அம்புஜத்திற்கு முதலில் சற்று கடினமாக இருந்தாலும், பிறகு பழகிவிட்டது. முரட்டு ரொட்டி, உப்பு சிறிதளவே சேர்த்த வேகவைத்தா காய்கறிகள், பருப்பு, கீரை, கஞ்சி, பழங்கள் என்று ஆசரம உணவு முறை இருந்தது.

அறுசுவை உணவு உண்ட நாக்குக்கு இவை சப்பென்று இருந்தாலும் உடலுக்கு நன்மையே செய்தன என்பதால் அம்புஜம்மாள் அவற்றை விரும்பி உண்டாள்.

அவள் வார்தா ஆச்ரமத்தில் இருக்கும் சமயத்தில் தீபாவளி வந்தது. சென்னையில் இருந்து அம்புஜம்மாளுக்காக, அவளுடைய தாய், பக்ஷணங்கள் செய்து ஆச்ரமத்திற்கு அனுப்பியிருந்தார்.

அம்புஜம்மாறை காந்திஜி அழைத்தார். அவள், அவர் முன்னால் போய் நின்றாள். காந்திஜியின் அருகே ஒரு பெரிய பார்சல் இருந்தது.

”அம்புஜம் இதை உன் அம்மா அனுப்பியிருக்கிறாள். என்னதென்று பிரித்துப் பார்” என்றார் காந்திஜி.

அம்புஜம் மிகவும் ஆவலுடன் பார்சலை மளமளவென்று பிரித்துப் பார்த்தாள். பிரிக்கும்பொழுதே இனிய வாசனை மூக்கைத் துளைத்தது. பார்சலின் உள்ளே இனிப்புகளும் முறுக்கு சீடை வகைகளும் இருந்தன.

”அம்புஜம் இதையெல்லாம் பார்த்தும் உனக்கு உடனே எடுத்துத் தின்ன வேண்டும் என்று ஆசை ஏற்படுகிறது இல்லையா? உன் அம்மா ஆசையுடன் செய்து உனக்கு அனுப்பியதாயிற்றே” என்றார்.

அம்புஜம்மாள் காந்திஜியின் பேச்சில் உட்பொருளை கவனித்தாள். பிறகு, ”நான் இவற்றை தின்னவிரும்பவில்லை” என்றாள்.

”உண்மையாகவா சொல்கிறாய் அம்புஜம்”.

உண்மைதான்”.

”அப்படியானால் இவற்றை எடுத்துக்கொண்டு போய் மகிலாச்ரமக் குழந்தைகளுக்கு உன் கையாலேயே கொடு பார்க்கலாம்.”

அம்புஜம்மாள், காந்திஜி கூறியபடியே செய்துவிட்டு வந்தாள்.

”அம்புஜம் நீ ஒன்றைக்கூட தின்று பார்க்கவில்லையே! உன் நாவடக்கம் எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று அவளைப் பாராட்டினார்.

காந்திஜியிடம் பெற்ற பாராட்டு, அம்புஜம்மாளுக்கு இனிப்பு வகையெல்லாம் சாப்பிட்டதுபோல நிறைவாக இருந்து.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:57 am

29. டால்ஸ்டாய் பண்ணையில்



காந்திஜியின் கருத்தைக் கவர்ந்தவர்களிலே ருஷ்ய நாட்டின் டால்ஸ்டாய் ஒருவராவார். அவர் எழுதிய ‘ஆண்டவன் ராஜ்யம் உனக்குள்ளே என்ற புத்தகம் காந்திஜிக்கு மிகவும் விருப்பமானதாகும். தென்னாப்ரிக்காவில் காந்திஜி ஏற்படுத்திய ஆச்ரமத்திற்கு ”டால்ஸ்டாய் பண்ணை” என்று பெயர் வைத்தார்.

தால்ஸ்டாய் பண்ணையில் பல மத்த்தவர்களும் பல வயதுடையவர்களும் வசித்து வந்தார்கள். இளம் வாலிபர்களும் பெண்களும் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் காந்திஜி மிகவும் கண்டிப்பானவராக இருந்தார்.

ஆச்ரமத்தில் வசித்த இளம்பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தம்மைச் சார்ந்தது என்பதால் காந்திஜி அவர்களை மிகவும் கருத்துடன் கவனித்தார்.

சில வாலிபர்கள், ஆச்ரமத்தில் உள்ள பெண்களோடு பேசிச் சிரித்துக் கொண்டுருந்தார்கள். கேளியும் கிண்டலும் நிறைந்திருந்த வாலிபர்களை அழைத்து, அறிவுரை கூறி அனுப்பினார்.

காந்திஜியின் மனம் சிந்திக்கத் துவங்கியது. எப்போதும் இதுபோல் கவனித்துக்கொள்ள முடியாது என்பதால், இதற்கு வேறு வழி தேட வேண்டும் என்பதில் சிந்தையைச் செலுத்தினார். பெண்கள் தவ்வாழ்வு வாழ்ந்தால், ஆண்கள் அணிகமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்தார்.

மறுநாள் காந்திஜி, அந்த இளம் பெண்களை அயைத்தார்.

”குழந்தைகளே, நேற்று உங்களைக் கிண்டல் செய்த இளைஞர்களைப் பற்றியே நான் இரவு முழுவதும் யோசித்தேன். அவர்கள் இனி இவ்வாறு செய்யாமல் இருக்க்வும், வேறு எவரும் உங்களிடம் இதுபோல நடக்காமலிருக்கவும் எனக்கு ஒரு யோசனை தோன்றியது”.

”சொல்லுங்கள்” என்றார்கள் அந்தப் பெண்கள்.

”இளமையும் அழகும்தானே, இளைஞர்களைத் தவறான திசைக்குத் திருப்புகிறது. குழந்தைகளே, உங்களுக்கு அழகு தரக்கூடிய ஒன்றை நீங்கள் தியாகம் செய்ய வேண்டும். செய்வீர்களா?” என்றார்.

அந்த பெண்களுக்கு, காந்திஜி என்ன கேட்கப் போகிறார் என்பதை எண்ணி, கலக்கமாக இருந்தது.

”இதில் வருத்தப்பட எதுவுமில்லை. உங்களிடைய நன்மைக்குத்தான் சொல்கிறேன். பெண்களிக்கு அழகைத் தருவது தலைமுடிதானே, உங்களுடைய நீண்ட கூந்தலை நாங்கள் தியாகம் செய்வீர்களா?

இதை எதிர்பார்க்காத அவ்விரு பெண்களிம் திடுக்கிட்டார்கள். தான் எதள்காக் இவ்விதம் கூளுகிலேன் என்பதை காந்திஜி பலமுறை அவர்களிக்கு விளக்கினார். பிறகு, அவர்களிள் அவருடைய விளக்கத்தை ஏற்றார்கள்.

உடனே கத்தரிக்கோலைக் கொண்டுவந்து, அப்பெண்களின் நீண்ட தலைமுடியை, காந்திஜி வெட்டி எறிந்தார்.

டால்ஸ்டாய் பண்ணையில் உள்ளோர், இதற்குப் பிறகு பெண்களிடம் கிண்டலோ கேலியோ பேசியதே இல்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:57 am

30. கோடீஸ்வரர் ஜெகாங்கீர் பெடிட்



1914-ம் வருடம் ஜூலை மாதம் காந்திஜி, கஸ்தூரிபாயிடம் தாயகம் திரும்ப, கப்பலேறினார். இங்கிலாந்து சென்று கோபாலகிருஷ்ண கோகலேயை சந்தித்தபிறகே, காந்திஜி இந்தியா வந்தார்.

காந்திஜி பம்பாய் துறைமுகத்தில் வந்து இறங்கிய போது, அவரை தாயக மக்கள் வாழ்த்தி வரவேற்றார்கள். தென்னாப்ரிக்காவில் காந்திஜி நடத்திய சத்தியாக்ரகப் போராட்டம் பற்றியும் அவருக்குக் கிடைத்த வெற்றியைப் பற்றியும் செய்திகள் மக்களிடையே பரவி இருந்தன. எனவே அவரைக் காணும் ஆவலில் மக்கள் பெருங்கூட்டமாக வந்தார்கள்.

நகரங்களில் பல வரவேற்பு விழாக்களும் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அக்காலத்தில் பம்பாயில் வசித்து வந்த ஜெகாங்கீர் பெடிட் என்பவர் கோடீஸ்வரர். பார்ஸி வகுப்பைச் சேர்ந்த அந்த செல்வந்தர், தமது மாளிகையில் காந்திஜிக்கு விருந்தளித்தார். ஒளிமயமாக விளங்கிய இந்த மாளிகையின் பிரம்மான்டமாத்தையும் செல்வச் செழிப்பையும் கண்டு காந்திஜி வியந்தார்.

விருந்தில் கலந்துகொள்ள பம்பாய் நகரத்தின் பிரமுகர்கள் பலர் வந்தார்கள். ஆனால் காந்தியோ, பழைமையான கத்தியவார் பாணியில் வேட்டியணிந்து, நீண்ட அங்கியும் தலைப்பாகையும் தரித்திருந்தார். நாகரீக மனிதர்களுக்கு நடுவே பேணப் பழக மிகவும் தயக்கமாக இருந்தது காந்திஜக்கு. அந்த விருந்துக்கு வந்திருந்த ஸர் பிரோசிஷா மேதாவுடன் இருந்து. அவர் அன்பைப் பெற்றார்.

பின்பு குஜராத்திகளின் சங்கம் காந்திஜிக்கு ஒரு விருந்து அளித்து கெளரவித்தது. குஜராத் மாகாணத்தைச் சேர்ந்த பலர் இதில் கலந்துகொண்டார்கள்.

காந்திஜியைப் பேண அழைத்தார்கள்.

”இது குஜராத்தியர் சங்கம். வந்திருப்பவர்களில் பெரும்பாலோர் குஜராத்தியர். ஆகையால் நான் குஜாரத்தியில் பேணவே விரும்புகிறேன். தாய்மொழியை நாமே புறக்கணிக்கலாமா?” என்று கேட்டுவிட்டு தாய்மொழியான குஜராத்தியிலேயே பேசினார்.

ஆங்கிலத்தில் பேசுவதே கெளரவமானது என்று எண்ணியிருந்த பலருடைய எண்ணத்தை மாற்றி, தாய்மொழிப் பற்றை விதைத்தார்.

கோடீஸ்வரர் ஜெகாங்கீர் பெடிட் காந்தியின் தாய்மொழிப் பற்றைப் கண்டு மகிழ்ந்தார்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக