புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_m10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_m10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_m10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_m10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_m10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_m10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_m10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_m10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_m10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_m10கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 1:28 pm

தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது. "மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், இதனால், அதிக வேலை வாய்ப்புகளை பெற முடியும்' என, நூதனமாக ஒரு காரணத்தைக் கூறி, வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் மொழிக்கு எதிரான, அரசின் இந்த நடவடிக்கைக்கு, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் முதல், கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, தமிழில் எழுதக் கூடாது; ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். அரசின் உத்தரவை அடுத்து, இது குறித்த அறிவிப்புகள், கல்லூரி களில் வெளியிடப்பட்டு உள்ளன.

மாணவ, மாணவியரின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்தாலும், இது, மாணவர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி ஆசிரியர்சங்க நிர்வாகிகளும், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், 80சதவீதம் பேர், அவர்களது, "அசைன்மென்ட்'களையும், பல்கலை தேர்வுகளையும், தமிழ் வழியில் தான் எழுதுகின்றனர். இப்போது, திடீரென, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, உத்தரவிடுவது, நியாயமாக இருக்காது' என்றார்.

இது குறித்து, மாநில உயர் கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் கூறியதாவது:அனைத்து பல்கலை
துணைவேந்தர்களிடமும் விவாதித்து, அவர்களின் ஆலோசனைகளை பெற்றுத் தான், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால், மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவர்கள், படிப்பை முடித்ததும், வேலை வாய்ப்பு பெறவும், இது உதவும்.

ஆசிரியர்களும், ஆங்கிலத்தில், வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம். இது, மாணவர்களின், ஆங்கில தொடர்பு திறனை வளர்ப்பதற்கு, உதவியாக இருக்கும். மாணவர்கள், இப்போதும், தேர்வை எழுதுவதற்கு, தமிழ் வழியைத் தான் தேர்வு செய்கின்றனர். வணிக ஆங்கிலம் என்ற புதிய பாடத்தை அறிமுகப்படுத்தவும், மாநில உயர் கல்வி மன்றம் முடிவுசெய்துள்ளது. ஆங்கில மொழி அறிவை வளர்த்தல், இலக்கண அறிவை மேம்படுத்துதல் மூலம், மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதக்கூடிய ஆற்றலை பெறுவர்.இவ்வாறு, சிந்தியா பாண்டியன் கூறினார்.

சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் கூறியதாவது:பல ஆண்டுகளாக, மாணவர்கள், தேர்வை, தமிழ் வழியில் எழுதி வருகின்றனர். இதை, பல்கலையும் அனுமதித்துள்ளது. இப்போது, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். பெரிதுபடுத்துவதற்கு இதில் ஒன்றும் இல்லை.நமது மாணவர்கள், தமிழ் அல்லாத பிற மொழியை படிப்பதில்லை. இதனால், அவர்கள், வேலை வாய்ப்பு என்று வரும் போது, தமிழகம் என்ற எல்லைக்குள், அவர்களது நடவடிக்கை முடங்கி விடுகிறது. இதுவே, ஆங்கில அறிவு இருந்தால், தமிழகம் தாண்டி, பிற மாநிலங்களிலும், நமது மாணவர்களால், வேலை வாய்ப்புகளை பெற முடியும்.இவ்வாறு, தியாகராஜன் கூறினார்.

சென்னை, நந்தனம் அரசு கல்லூரி முதல்வர் பிரபு கூறுகையில், ""தமிழ் வழியில் படிக்கும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழகத்திற்குள், 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் தான் கிடைக்கின்றன.

ஆனால், ஆண்டுக்கு, 7 லட்சம் மாணவர்கள், படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் எனில், ஆங்கில அறிவு அவசியமாக உள்ளது,'' என்றார்.

அரசு தரப்பிலும், கல்வியாளர்கள் தரப்பிலும், புதிய முடிவுவரவேற்கப்பட்டாலும், கல்லூரி ஆசிரியர்கள் தரப்பிலும், ஆசிரியர்சங்க நிர்வாகிகள் தரப்பிலும், எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அரசின் முடிவால், தோல்வி அடையும் மாணவர் கள் எண்ணிக்கை உயர்வதுடன், படிப்பை பாதியில் விடும் மாணவர்கள் எண்ணிக்கையும் உயரும் என, ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.

சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளாமல், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் முடிவு, மாணவர்கள் மத்தியில், வேறுபாட்டை ஏற்படுத்தும்,'' என, அகில இந்திய பல்கலை, ஆசிரியர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை, மாநில கல்லூரி மாணவர்சரவணகுமார் கூறுகையில், ""ஒவ்வொரு செமஸ்டரிலும், ஐந்து தேர்வுகளை, தமிழ் வழியில் தான் எழுதுகிறேன். ஆங்கில தேர்வை எழுதுவதற்காக மட்டும், ஓரளவு தயாராக வேண்டியுள்ளது. பள்ளியில், நான் ஆங்கிலம் படிக்கவில்லை. இப்போது, திடீரென, எல்லாமே ஆங்கிலம் தான் என்று கூறுவது, மிகவும் கடினமாக உள்ளது,'' என்றார்.

நன்றி:- தினமலர்

ரசித்த கமெண்டுக்கள்


Kannan Appadurai - al buraidh,சவுதி அரேபியா

இது வரவேற்க பட வேண்டிய விஷயம்.... தாய் மொழி இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.... அவசியம் மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு பயன் படும்,,,, அரசியல் வாதிகளே,,,,, இதில் தயவு செய்து மூக்கை நுழைக்க வேண்டாம்.... ஒரு நிமிசம் சிந்தித்து விட்டு இதற்காக போராட முயலுங்கள்.... உங்கள் வாரிசுகளை அரசுபள்ளிகளிலா.... இது நாள் வரை படித்து கொண்டு இருந்தது,,,, உங்களுக்கு மட்டும் எல்லா எழுத்து அறிவும் தேவை.....

sagayanathan - muscat,ஓமன்

பள்ளியிலும் ஆங்கிலம் படிக்க விடமாட்டோம் ... கல்லூரியிலும் ஆங்கிலம் படிக்க விடமாட்டோம் ... நீங்க பாட்டுக்கு ஆங்கிலம் படிச்சிட்டு வேற மாநிலத்துக்கும் , வெளி நாட்டுக்கும் வேலைக்கு போய்ட்டா அப்புறம் யாரு எங்களுக்கு ஒட்டு போடுவாங்க .... இப்படிக்கு தமிழ் , தமிழ் என்று கூறி ஏமாற்றும் தலைவர்கள் .

[color=#003333]kumaresan.m - hochimin ,வியட்னாம்[/u][/size]

" வரவேற்க தக்க ஒன்று ஆனால் அதற்க்கான தனி பயிற்சியை கிராமப்புறத்தில் படித்த மாணவர்களுக்கு வழங்கல் வேண்டும் "[/quote]


[color=#003333]Yamadharmaraja - chennai,இந்தியா[/u][/size]

கல்வி என்பது ஒருவனை சிந்தித்தல், செயலாற்றுதல் ஆகியவற்றில் மேம்படுத்த வேண்டும். அவனுக்கு என்ன தெரியுமோ அதையே சொல்லிக்கொடுப்பதல்ல கல்வி. அவனுக்கு தெரியாததை சொல்லிக்கொடுக்க வேண்டும், அதுதான் கல்வி. தமிழ் மட்டும்தான் தெரியும், அதிலேயே நான் கற்றுக்கொள்கிறேனே என்றால் அதன் மூலம் முழுமையான கல்வியை பெற முடியாது. இன்று தமிழ் வழிக்கல்வி என்று பேசுபவர்கள் எல்லாம், அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப அதை தமிழில் விளக்க வேண்டும் அதற்கான வழி வகை செய்ய வேண்டும் என்ற எண்ண மில்லாது தமிழை உணர்ச்சி ரீதியாக அணுக மட்டுமே நமக்கு கற்றுத் தந்துள்ளனர். மேலும் தமிழும் கடவுள் பக்தியும் பிரிக்கமுடியாதவை. தமிழ் இலக்கியத்தில் 90 சதவீதம் பக்தி இலக்கியமே. ஆனால் தமிழை வளர்ப்பதாக கூறிக்கொள்பவர்கள் நாத்திகம் பேசாவிட்டாலும், கடவுள் நிந்தனை செய்பவர்கள். (நாத்திகத்தை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது, என்னை பொருத்தவரை நாத்திகமும் ஒரு மதமே). இவர்கள் திருக்குறளின் முதல் குறளை படிக்காமல் கடைசி குறளை மட்டும் படிப்பவர்கள். எனவே, தமிழை சும்மா விட்டாலே அது இவர்களின் முயற்சி இல்லாமல் தானாகவே வளர்ந்து கொள்ளும். கடந்த 60 ஆண்டுகளில் இவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு என்ன? ஒன்றுமில்லை. வெறும் சிலைகள் மட்டுமே. செம்மொழி அந்தஸ்து கூட எல்லோருக்கும் மறந்து போய்விட்டது. இந்நிலையில் கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தான் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பதில் தவறில்லை. ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களும் தமிழில் தேர்வு எழுதலாம் என்று இன்றுள்ள நிலையில், ஆங்கிலத்தில் கட்டுரைகளையும் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் களையும் எழுத வேண்டும் என்று ஆணையிட்டிருப்பது வரவேற்கக்கூடியது. ஆனால் ஆங்கில வழியில் கற்பிக்கவும், assignment, test, report என அனைத்தையும் ஆங்கிலத்தில் மாணவர்கள் எழுத அவற்றை மதிப்பீடு செய்யவும் தற்போதுள்ள ஆசிரியர்கள் பெரும்பான்மையோருக்கு ஆற்றல் போதாது என்பதே கல்லூரி பேராசிரியரான என் கருத்து.[/quote]




ஈகரை தமிழ் களஞ்சியம் கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 26, 2013 1:49 pm

தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது.
ஏற்கனவே இப்படி தானே இருக்கிறது. ஓஹோ இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு கல்லூரிகளை சொல்லுகிறார் போல. புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 1:55 pm

ராஜா wrote:
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது.
ஏற்கனவே இப்படி தானே இருக்கிறது. ஓஹோ இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு கல்லூரிகளை சொல்லுகிறார் போல. புன்னகை
அரசு கல்லூரியில் தமிழ் இருந்தா என்ன ஆங்கிலம் இருந்தா என்ன படிக்க மாணவர்கள் இருக்கணுமே நாங்கத்தான் பஸ்ட் ஹவரே கிரவுண்டுக்கும் செகெண்ட் ஹவர் தேட்டருககும் போய்டுவோம் அப்புறம் ஆசிரியர்கள் விட்டத்தை பார்த்து மல்லாக்க படுத்தா பாடம் எடுக்கமுடியும்



ஈகரை தமிழ் களஞ்சியம் கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun May 26, 2013 7:25 pm

ஆசிரியர்களும், ஆங்கிலத்தில், வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம். இது, மாணவர்களின், ஆங்கில தொடர்பு திறனை வளர்ப்பதற்கு, உதவியாக இருக்கும். மாணவர்கள், இப்போதும், தேர்வை எழுதுவதற்கு, தமிழ் வழியைத் தான் தேர்வு செய்கின்றனர். வணிக ஆங்கிலம் என்ற புதிய பாடத்தை அறிமுகப்படுத்தவும், மாநில உயர் கல்வி மன்றம் முடிவுசெய்துள்ளது. ஆங்கில மொழி அறிவை வளர்த்தல், இலக்கண அறிவை மேம்படுத்துதல் மூலம், மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதக்கூடிய ஆற்றலை பெறுவர்.இவ்வாறு, சிந்தியா பாண்டியன் கூறினார்.

கட்டாயத்தில் , கிடுக்கி பிடி எப்படி எல்லாம் போட்டாலும் , எதையும் விரும்பி படிக்கணுமே விருப்பம் இல்லாமல் திணித்தால் , தேர்வே எழுத மாட்டார்கள் ....
தமிழ் தேர்வு வழியிலே இன்னும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் முழுமை அடையவில்லை , முற்றிலும் அங்கிலம் என்றால் , தேர்வு எழுதுவோர் , தேர்ச்சி பெறுவோர் விகிதம் வெகுவாக குறையும் .... சோகம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 26, 2013 7:57 pm

balakarthik wrote:
ராஜா wrote:
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது.
ஏற்கனவே இப்படி தானே இருக்கிறது. ஓஹோ இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு கல்லூரிகளை சொல்லுகிறார் போல. புன்னகை
அரசு கல்லூரியில் தமிழ் இருந்தா என்ன ஆங்கிலம் இருந்தா என்ன படிக்க மாணவர்கள் இருக்கணுமே நாங்கத்தான் பஸ்ட் ஹவரே கிரவுண்டுக்கும் செகெண்ட் ஹவர் தேட்டருககும் போய்டுவோம் அப்புறம் ஆசிரியர்கள் விட்டத்தை பார்த்து மல்லாக்க படுத்தா பாடம் எடுக்கமுடியும்
அதானே... நீங்க என்ன மொழியில வேணாம் பாடம் நடத்துங்கப்பு... எங்களுக்கு இருக்கவே இருக்கு...தியேட்டர், மால், டாஸ்மார்க்





கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Aகல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Aகல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Tகல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Hகல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Iகல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Rகல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Aகல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 8:00 pm

Aathira wrote:
balakarthik wrote:
ராஜா wrote:
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது.
ஏற்கனவே இப்படி தானே இருக்கிறது. ஓஹோ இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு கல்லூரிகளை சொல்லுகிறார் போல. புன்னகை
அரசு கல்லூரியில் தமிழ் இருந்தா என்ன ஆங்கிலம் இருந்தா என்ன படிக்க மாணவர்கள் இருக்கணுமே நாங்கத்தான் பஸ்ட் ஹவரே கிரவுண்டுக்கும் செகெண்ட் ஹவர் தேட்டருககும் போய்டுவோம் அப்புறம் ஆசிரியர்கள் விட்டத்தை பார்த்து மல்லாக்க படுத்தா பாடம் எடுக்கமுடியும்
அதானே... நீங்க என்ன மொழியில வேணாம் பாடம் நடத்துங்கப்பு... எங்களுக்கு இருக்கவே இருக்கு...தியேட்டர், மால், டாஸ்மார்க்

ஹல்லோ டாஸ்மார்க்கில் எங்களுக்கென்று தனி மொழியே இருக்கு சீக்கிரமே அதுவும் செம்மொழி ஆகிடும்



ஈகரை தமிழ் களஞ்சியம் கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 27, 2013 9:34 am

balakarthik wrote:
ஹல்லோ டாஸ்மார்க்கில் எங்களுக்கென்று தனி மொழியே இருக்கு சீக்கிரமே அதுவும் செம்மொழி ஆகிடும்
செம்மொழி நம்மொழி



கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Aகல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Aகல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Tகல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Hகல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Iகல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Rகல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Aகல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  Empty
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 27, 2013 10:24 am

கல்வி என்பது தெளிவுறக் கற்றல்,

ஒன்றைத் தெரிந்து கொண்டாலும் அதை முழுவதும் தெளிவாகக் கற்க வேண்டும். பழங்காலத்தில் அனைத்துத் தொழிலும் தெளிவுறக் கற்ற பின்னரே சபைக்கு வந்தது. அப்படித் தேர்ந்தவர்கள் கட்டிய கட்டடங்களே இன்றும் வானுயர நிற்கிறது. ஆனால் இதுவரை தமிழில் படித்த நாம் தமிழை எந்த அளவிற்கு கற்றோம், வினைத்தொகைக்கும் பண்புத்தொகைக்கும் வித்தியாசம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

ஒரு பேராசிரியர் தமிழில் உள்ள 90 % இலக்கியம் பக்தி இலக்கியம் என்று கூறுவதிலே நாம் கல்வி கற்கவில்லை. யாரோ சொன்னதை காதால் கேட்டு, நினைவில் இருந்ததை மட்டும் வைத்து கொண்டு பிழைப்பு நடத்துகிறோம் என்று தெரிகிறது. உண்மையில் பக்தி இலக்கியங்கள் சங்கக் காலத்தில் வெகு குறைவு, 6-10 நுற்றாண்டுகளில் தான் இவ்வகை இலக்கியங்கள் பெருகியது.

இந்தியாவில் ஆங்கில வழியில் படித்தவர்களும் கூட உலக அரங்கில் மேல்படிப்புக்குச் செல்லும் பொழுது IELTS , TOFEL போன்ற தேர்வுகளை எழுதினால் தான் ஏற்கின்றனர், நாம் கற்கும் ஆங்கில அறிவும் அவ்வளவு தான். தெளிவில்லாத ஆங்கில அறிவும் வீண் தான்.

எந்த மொழியில் கல்வி அமைந்தாலும் கல்வியை கசடற கற்கும் வழியை ஏற்படுத்துங்கள், சிலபஸில் கொடுக்கப்பட்ட பாடத் திட்டமும், அதன் நோக்கமும் புரியாத ஆசியர்கள் தான் இன்று மிகுந்துள்ளனர். LKG குழந்தைக்கும் project work கொடுக்கும் பொழுது அதன் நோக்கம் என்ன என்று அறியாமல், கிளிப் பிள்ளை போல் புத்தகத்தில் உள்ளதை மட்டுமே பார்க்கும் அறிவீலிக் கூட்டமாக இன்றைய ஆசிரியர்கள் பலர் உள்ளனர். இதைவிட பள்ளிகூடங்கள் சொல்லும் செயலை எள்ளவும் யோசிக்காமல் மண்டையை ஆட்டும் பெற்றோரும் பெருகி விட்டனர். இந்நிலையில் மாணவர்களின் நிலை என்ன ?

முதலில் ஆசிரியர்கள் தெளிவுறக் கற்க வழி செய்யுங்கள்..அதன் பிறகு மாணவர்கள் நலனைப் பற்றி யோசிக்கலாம்.









சதாசிவம்
கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 27, 2013 11:22 am

கல்வியை பொருத்த மட்டில் அரசாங்கத்தின் முடிவில் தான் அனைத்தும் அடங்கியிருக்கிறது. உதாரணத்திற்கு அரேபியாவை பாருங்கள் எந்த அரசாங்க விவகாரங்களாகட்டும் விண்ணப்பமானாலும் அரபியில் தான் இருக்கவேன்டும் என்று வைத்துள்ளனர் அதனால் அரபி கற்றவர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 27, 2013 11:27 am

அசுரன் wrote:கல்வியை பொருத்த மட்டில் அரசாங்கத்தின் முடிவில் தான் அனைத்தும் அடங்கியிருக்கிறது. உதாரணத்திற்கு அரேபியாவை பாருங்கள் எந்த அரசாங்க விவகாரங்களாகட்டும் விண்ணப்பமானாலும் அரபியில் தான் இருக்கவேன்டும் என்று வைத்துள்ளனர் அதனால் அரபி கற்றவர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
அண்ணே அபுதாபியில் அரபித்தானே இருக்காங்க அவுங்க நாட்டுல அவுங்க சொல்லுரதுத்தானே சட்டம் நமூருல அப்படியா திசைக்கு ஒன்னு வேற மொழிகாரங்க இருக்காங்க நம்ம ஊரு பிச்சக்காரன் பாத்திரம் போல எல்லா சோறும் மிக்ஸ் ஆகி கிடக்குது



ஈகரை தமிழ் களஞ்சியம் கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக