புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
Kavithas
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
bala_t
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
prajai
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
280 Posts - 42%
heezulia
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 1%
prajai
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for Glaucoma

Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் TuNfiRD

கண் அழுத்த நோய் (குளுக்கோமா) என்பது, கண்களுக்கு நிரந்தர சேதத்தை விளைவிக்கின்ற, குணப்படுத்த இயலாத கண் நோய்களுள் ஒன்றாகும். கண்ணுக்குள்ளே உருவாக்கப்படுகிற அதிகரித்த அழுத்தத்தின் காரணமாக இச்சேதம் ஏற்படுகிறது. மூளைக்கு உருவங்களை எடுத்து அனுப்புகின்ற கண்ணின் பார்வை நரம்பை இது சேதப்படுத்துகிறது. இயல்பான கண் அழுத்தத்தைக் கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் கூட கண் அழுத்த நோய் உருவாகக்கூடும். இது, இயல்பான அழுத்த குளுக்கோமா என அழைக்கப்படுகிறது என்கிறார் கண் சிகிச்சை மருத்துவர் டாக்டர் ரதி மலர் ஆனந்த்கண் அழுத்த நோயானது, வயதான முதியவர்களை மட்டுமே பாதிக்கின்ற நோய் என்ற தவறான கண்ணோட்டத்தில் பெரும்பாலான நபர்கள் இருக்கின்றனர்.

ஆனால், அனைத்து வயதினரையும் இந்த நோய் பாதிக்கக்கூடும். பிறக்கின்ற ஒவ்வொரு 10,000 குழந்தைகளுள் 1 குழந்தை கண் அழுத்த நோய் பிரச்சனையோடு பிறக்கிறது. அவ்வாறு கண் அழுத்த நோயோடு பிறக்கும் பெரும்பாலான நபர்களுக்கு அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு, குறிப்பாக வாழ்க்கையின் பிற்பகுதியில் தான் இந்நோயின் பாதிப்பு வெளிப்படுகிறது.

குழந்தைப் பருவ கண் அழுத்த நோய்


மரபு ரீதியான பிறவிநிலை அல்லது குழந்தைப் பருவ கண் அழுத்த நோய் என்பது, குழந்தைகளை அவர்களது வாழ்க்கையின் மிக முந்தைய நிலையிலேயே பாதிக்கின்ற ஒரு வகை கண் அழுத்த நோயாகும். இந்த பாதிப்பு நிலையானது. குழந்தையின் பெற்றோர்கள், முன்னோர்களிடமிருந்து மரபு ரீதியாக பெறப்பட்டதாக இருக்கலாம். கண்ணின் வெளியேற்றல் அமைப்பு முறை தவறாக உருவாகியிருப்பதன் காரணமாக இது ஏற்பட்டிருக்கக்கூடும்.

பிற கண் நோய்களைப் போலல்லாமல், கண் அழுத்த நோயானது, கடுமையான கண் சேதத்தை விளைவிக்கும். ஏனெனில். இந்நோய் பாதிப்பின் காரணமாக, பாதிப்படைபவர்கள் அவர்களது பார்வைத்திறனை நிரந்தரமாக இழந்துவிடுவார்கள். பார்வைத்திறனை அவர்களால் மீண்டும் திரும்பப்பெற இயலாது. குழந்தை பிறக்கும் முன் கண்களின் வெளியேற்ற அமைப்பு சரியற்ற முறையில் உருவாவதே கண் அழுத்த நோயின் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

பிறவிநிலை கண் அழுத்த நோய்


இந்த நோயில் இரு வகைகள் உள்ளன.

*முதன்மை (பிரைமரி) குழந்தைப்பருவ கண் அழுத்த நோய் (PCG) பிசிஜி நிலையோடு பிறந்திருக்கிற குழந்தைகள் பொதுவாகவே விரிவடைந்த பெரிய கண்களையும் மற்றும் கருவிழியில் மங்கலான தோற்றத்தையும் கொண்டிருப்பார்கள்.

*இரண்டாம் நிலை (செகண்டரி) குழந்தைப்பருவ கண் அழுத்த நோய் பிறவி நிலை கோளாறுகள், கண்ணில் காயம் அல்லது பிற நோய்களின் காரணமாக இது ஏற்படக்கூடும்.

குழந்தைப்பருவ கண்அழுத்த நோய் என்பது, மிகத்தீவிரமான மற்றும் அரிதான கண் நோயாகும். இந்நோய் பாதிப்பின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை அறிந்திருப்பது, ஆரம்ப நிலையிலேயே இதனை கண்டறிவதற்கு உதவும்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்


பெரும்பாலான நேரங்களில் இந்நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரியாது. சிலருக்கு வெளிச்சத்தைப் பார்க்க கண் கூசுவது, விரிவடைந்த பெரிய விழிகள், மங்கலான படலத்தைக் கொண்ட கருவிழிகள் போன்ற அறிகுறிகள் இருக்கக்கூடும். கண்ணில் எரிச்சல், பசி உணர்வின்மை மற்றும் விளிம்பு நிலைகளில் பார்வைத்திறன் இழப்பு போன்றவை இரண்டாம் நிலை அறிகுறிகளாகும்.

சிகிச்சை முறைகள்


குழந்தைப் பருவ கண் அழுத்த நோய்க்கு மருந்துகள் மற்றும் அறுவைசிகிச்சை ஆகிய இருமுறைகள் வழியாகவும், சிகிச்சை அளிக்கலாம். மாத்திரைகள் மற்றும் கண் சொட்டு மருந்துகள் ஆகியவை மருத்துவ சிகிச்சை முறையில் உள்ளடங்குபவை. கண்களுக்குள் இருக்கின்ற அழுத்தத்தை குறைப்பதே இந்த சிகிச்சையின் பிரதான நோக்கமாகும். கண்களிலிருந்து திரவப்போக்கை இது அதிகரிக்கக்கூடும் அல்லது அதன் போக்கை குறைக்கக்கூடும். கண் சொட்டு மருந்துகள், கண் அழுத்தத்தைக் குறைக்கும் என்றாலும் குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டுமே இது பயன்படும்.

அறுவை சிகிச்சை வழிமுறையில் இரு முக்கிய வகைகள் இருக்கின்றன. வடிகட்டல் (ஃபில்ட்டரேஷன்) அறுவைசிகிச்சை மற்றும் லேசர் அறுவைசிகிச்சை. பில்ட்ரேஷன் அறுவை சிகிச்சையில், அளவுக்கதிகமாக சேர்கின்ற திரவத்தை வெளியேற்றுவதற்காக ஒரு வழி உருவாக்கப்படும். இந்த நோயினை முற்றிலும் குணப்படுத்த இயலாது. எனினும் அதைக் கட்டுப்படுத்த இயலும். ஆரம்ப நிலையிலேயே இந்நோய் பாதிப்பைக் கண்டறிவதால், பார்வைத்திறனை இழப்பதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும்.

பாதிப்பு அறிகுறிகள் இல்லாமல் வழக்கமான ஒரு கண் பரிசோதனையை செய்துகொள்ள அநேக மக்கள் செல்வதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும். பிற கண் நோய்கள்/ கோளாறுகளில், சிகிச்சையின் மூலம் பார்வைத்திறனை திரும்பவும் கொண்டுவர முடியும். ஆனால் குளுக்கோமா என்ற கண் அழுத்த நோயில் அவ்வாறு செய்ய இயலாது. கண்அழுத்த நோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க செய்வதற்கான அவசியம் அதிக அளவில் தற்போது இருக்கிறது. இந்த விழிப்புணர்வை பரப்புவதற்கான கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

குறிச்சொற்கள் #குளுக்கோமா #Glaucoma
Topics tagged under glaucoma on ஈகரை தமிழ் களஞ்சியம் TuNfiRD

கண் அழுத்த நோய் ஒரு மெதுவான, அதே சமயம் கடுமையாகத் தாக்கக் கூடிய நோய் என்று மருத்துவ உலகில் சொல்லப்படுகிறது.

கண்ணின் மற்ற நோய்களைப் போன்று நேரடியாக இது எந்த அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை.. பெரும்பாலான நோயாளிகளுக்கு சாதாரண பரிசோதனையின்போதே கண் அழுத்த நோய் கண்டுபிடிக்கப்படுகிறது. கண்டுபிடிக்கும்போதே பலருக்கு ஏற்கெனவே குறிப்பிடத்தகுந்த பார்வை இழப்பு ஏற்படுவதைக் காணலாம்...

ஏன்? எதனால் அதுவரை நோயாளி தன் பிரச்னையைக் கண்டுபிடிக்கவில்லை?


இதற்கான காரணம் மிகவும் எளிது. உடலில் ஏற்படும் வேறு சில அறிகுறிகளையும் இதற்கு ஒப்பாகக் கூறலாம். உதாரணமாக எடை இழப்பை எடுத்துக்கொள்வோம். ஒரே வாரத்தில் 4 அல்லது 5 கிலோ குறைந்தால் சம்பந்தப்பட்டவருக்கு உடனே தெரிந்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக எடை குறைந்தால் கண்டுபிடிப்பது கடினம் அல்லவா?

அதேபோல் ரத்தசோகையை எடுத்துக்கொண்டால் காயம் ஏற்படும்போதோ, மாதவிடாயிலோ, மூலம் போன்ற தொந்தரவுகளாலோ உதிரப்போக்கு அதிகமாக இருந்தால் நோயாளி அதை ஒரு அவசர பிரச்னையாகக் கருதி உடனடியாக சிகிச்சைக்கு வருவார். ஆனால் வயிற்றில் ஏற்படும் புண்கள், குடற்புழுக்கள் இவற்றால் தினமும் சிறிய அளவில் இரத்தம் வெளியேறி மாதங்கள் கழித்து ரத்தசோகை ஏற்பட்டால் நோயாளி அதை தாமதமாகவே கண்டு கொள்வார்.

இதேபோல்தான் கண் அழுத்த நோயிலும் பார்வை இழப்பு மிக மெதுவாக நடைபெறுவதால் நோயைக் கண்டறியத் தாமதம் ஆகிறது.
ரத்தத்தில் சராசரியாக ரத்த அழுத்தம் 120/80mmHg என்ற அளவில் இருப்பதைப்போல, இயல்பாக கண் பந்தின் நீர் அழுத்தம்(Intraocular tension) 14 முதல் 18 வரை இருக்கலாம். சில சமயம் 21 mm Hg என்ற அளவிலும் இருக்கலாம்.

இந்த சம நிலையை சரியாகக் கடைப்பிடிக்க இரண்டு சுழற்சிகள் கண்ணுக்குள் தொடர்ந்து இயங்குகின்றன. ஒன்று கண்ணில் உள்ள அக்வஸ் Aqueous திரவத்தை சுரக்கும் சிலியரி பிராசஸ்(Ciliary process) பகுதியில் உள்ள சுரப்பிகள். இரண்டாவது இந்த திரவத்தை சீரான இடைவெளியில் வெளியேற்றும் ரத்த நாளங்கள் மற்றும் சிறு துகள்களாலான பாதை அமைப்பு.

இந்த இரண்டில் எதன் சமநிலை பாதிக்கப்பட்டாலும் கண் அழுத்த நோய் ஏற்படும். முதலில் அக்வஸ் திரவத்தை எடுவ்த்துக்கொள்வோம். சில சமயம் இந்த திரவம் வழக்கத்தைவிட அதிகமாக சுரக்க நேரிடும். அதிக திரவத்தை வெளியேற்ற ரத்தநாளங்கள் மற்றும் துகள் பாதைகள் திணறும் சூழல் ஏற்படும். இந்தச் சூழலில் கண் அழுத்தம் அதிகரிக்கும். இந்த வகைதான் ஓபன் ஆங்கிள் க்ளுக்கோமா(Open angle glaucoma) என்று அழைக்கப்படுகிறது.

ஓபன் ஆங்கிள் க்ளுக்கோமா க்ளுக்கோமாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பெரும்பாலும் திரவம் சுரப்பதைக் குறைக்கின்றன. பெரும்பாலான சமயங்களில் இதற்கான மருந்துகள் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படுகின்றன. சில சமயம் மாத்திரைகளும் தேவைப்படலாம். லேசான உயர் அழுத்த நிலையை சொட்டு மருந்தின் மூலமாகவே கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம். மருந்தால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு அறுவை சிகிச்சை தேவை.

அடுத்த முக்கியமான வகை க்ளுக்கோமா கண்ணில் அக்வஸ் திரவம் வெளியேறுவதில் நிகழும் தடங்கலால் ஏற்படுவது. இந்த வகையின் பெயர் ஆங்கிள் க்ளோசர் க்ளுக்கோமா(Angle closure glaucoma).


35 முதல் 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் சிலருக்கு அக்வஸ் திரவம் வெளியேறும் பாதை இயல்பாகவே சுருங்கிவிடும். திரவத்தின் தயாரிப்பு சீராக இருந்தாலும் வெளியேறும் இடத்தில் 'டிராபிக் ஜாம்' ஆவதால் இந்த நிலையிலும் கண் அழுத்தம் கூடுகிறது. ஆரம்ப நிலை என்றால் ஆங்கிள் க்ளோசர் க்ளுக்கோமாவுக்கு லேசர் சிகிச்சை மட்டுமே போதுமானது. அதன்பின் அவ்வப்போது பரிசோதனை செய்து கொண்டாலே போதும். முற்றிய நிலையில், இந்த வகை க்ளாக்கோமாவுக்கும் அறுவை சிகிச்சை தேவை.

சீராக இருந்த அக்வஸ் திரவத்தின் போக்குவரத்து திடீரென ஒருநாள் அடைத்துக்கொள்ள நேரலாம். அப்போது சட்டென்று உயர்ந்த கண் அழுத்தத்தால் கண்ணில் வலி, நீர் வடிதல், பார்வைக் குறைபாடு இவை ஏற்படும். இதையே ‘ஆங்கிள் க்ளோஸர் அட்டாக்' என்கிறோம்.
உடனடியாக மருந்துகளின் துணை கொண்டு கண் அழுத்தத்தைக் குறைத்து விட்டு லேசர் சிகிச்சை செய்ய வேண்டும். இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதால் கண்களில் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்.

சரி, உயர் கண் அழுத்தம் எப்படி பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது?!


கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் அதிகரித்தால் விழித்திரையில் இருக்கும் காங்க்லியான் செல்கள் (Ganglion cells) எனப்படும் செல்கள் மரணிக்க ஆரம்பிக்கும். இந்த செல்கள் இணைந்து தான் விழி நரம்பை கட்டமைக்கின்றன. எனவே, பார்வை நரம்பிலும்(Optic nerve) தேய்மானம் ஏற்படும்.

முதலில் இந்த நரம்பின் ஓரமான பகுதிகள் பாதிக்கப்படுவதால் பார்வை வட்டத்தில் நேர்பார்வை மட்டுமே தெளிவாக இருக்கும்(Central vision). பக்கவாட்டுப் பார்வை குறைந்திருக்கும். இந்த மாற்றம் மிக மெதுவாக நிகழ்வதால் வெகுசிலரே தாமாக இதை உணர்வார்கள். பலருக்கு வழக்கமான பரிசோதனையின்போது மட்டுமே இதைக் கண்டறிய முடியும்.

கண் அழுத்த நோய் சிகிச்சையைப் பொறுத்தவரை ஆறுதலான விஷயம் என்னவென்றால் விரைவிலேயே கண்டுபிடித்துவிட்டால் அதற்கு மேல் பாதிப்பு அதிகரிக்காத வண்ணம் பார்வையை ஓரளவுக்குக் காப்பாற்றிவிட முடியும். மேற்கூறிய இரண்டு வகைகளும் பெரும்பாலும் மரபணு சார்ந்து வருபவை. இவை தவிர வேறு பிரச்னைகளாலும் கண் அழுத்த நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கண்ணில் ஏற்படும் கட்டிகளால் உயர் கண் அழுத்தம் ஏற்படலாம். சில வகை கிருமித் தொற்றுகள், சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் இவற்றாலும் கண் அழுத்த நோய் ஏற்படக்கூடும். பல நாட்களுக்கு முன் கண்ணில் ஏற்பட்ட காயத்தால் வருடங்கள் கழித்தும் கண் அழுத்த நோய் ஏற்படலாம்(Angle recession glaucoma).

சீரான இடைவெளியில் வழக்கமான கண் பரிசோதனை அவசியம் என்பதை இந்தத் தொடரில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறோம். வேறு எந்த பிரச்னைகளையும் விட க்ளுக்கோமாவுக்கு அத்தகைய பரிசோதனை மிகவும் அவசியம். 35 வயதுக்கு மேல் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் கண் பரிசோதனை தேவை. குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்குக் கண் அழுத்த நோய் இருந்தால் அவரது உடன் பிறந்தோர், மகன், மகள் முதலிய ரத்த சொந்தங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சிலர் கண்ணாடிக் கடைகளில் வழக்கமாகக் கண்ணாடி வாங்கும்போது ‘ஆட்டோமேட்டட் ரெப்ராக்டோமீட்டர்' பரிசோதனையை மட்டுமே செய்து கொள்வார்கள் அல்லது அழுத்தமானி (Tonometer) மூலமாகக் கண் அழுத்தத்தை மட்டும் சோதித்துவிட்டு திருப்திப்பட்டுக் கொண்டு செல்வார்கள். மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வதில்லை.

நார்மல் டென்ஷன் க்ளுக்கோமா என்று ஒரு பிரிவு உண்டு. இந்த பிரச்னையில் கண் அழுத்த நோய்க்கான அனைத்து பாதிப்புகளும் காணப்படும். ஆனால், கண் அழுத்தம் குறைவாகவோ(Normal or low tension glaucoma) சரியான அளவிலோ இருக்கும். எனவே, கண் அழுத்த நோய்க்கான மற்ற அம்சங்களையும் சோதனை செய்தால்தான் உறுதியாக கூற முடியும்.

கண் அழுத்த நோய் இருக்கிறதா, எந்த நிலையில் இருக்கிறது என்று முடிவு செய்ய செய்யப்படும் பரிசோதனைகள்…

* கண் அழுத்தம் அளத்தல்- Tonometry
* கண் ஓரத்தின் துகள் பாதையை அளவிடல் - Gonioscopy
* பார்வை பரப்பு கணக்கிடல்- Automated perimetry
* கருவிழியின் கனத்தை அளத்தல்- Pachymetry
* கண் நரம்பு பரிசோதனை - Ophthalmoscopy, Optic disc imaging
* விழித்திரை அமைப்பை பரிசோதித்தல்- Optical coherence tomography.

இந்த அனைத்து பரிசோதனை களையும் தேவைக் கேற்ப முறையாகச் செய்வதுடன் அவற்றைப் பதிவேடுகளில் சேமித்துப் பாதுகாப்பதும் மிக அவசியம்.



குறிச்சொற்கள் #க்ளுக்கோமா #Glaucoma #கண்_அழுத்த_நோய்

Back to top