புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 55%
heezulia
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
15 Posts - 39%
ஜாஹீதாபானு
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 3%
Manimegala
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
145 Posts - 51%
ayyasamy ram
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
104 Posts - 37%
mohamed nizamudeen
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
11 Posts - 4%
prajai
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
jairam
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for சண்டிகேஸ்வரர்

சிவா
Thu Feb 09, 2023 4:42 pm

Search in: இந்து
Topic: சண்டிகேஸ்வர நாயனார்
Replies: 1
Views: 616
Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Nayana10

Topics tagged under சண்டிகேஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் -2-9-210

“மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க‌
வெகுண்டெழுந்த தாததாள் மனுவினால் எறிந்த‌
அம்மையான் அச்சண்டி பெருமானுக்கு அடியேன்” : சுந்தர மூர்த்தி நாயனார்



சோழ நாட்டில் கும்பகோணம் அருகில் காவேரியின் கிளையான மண்ணியாற்றின் கரையில் அமைந்திருந்த ஊர் அந்த #திருசேய்நல்லூர், அது இன்றும் உண்டு

அது அன்று வளமான ஊர் என்பதால் அந்தணர் நிரம்பியிருந்தார்கள், அந்தணர் எனப்படும் பிராமணர்கள் நீர் நிலைகள் நிறைந்த வளமான பூமியில் தான் வசிப்பார்கள் அல்லது அவர்கள் வசிக்கும் பூமி வளமாய் இருக்கும்

அப்படி மண்ணியாற்றிலும் நிரம்ப அந்தணர்கள் இருந்தார்கள் அந்த திருசேய்நல்லூரின் #சத்தியகிரீஸ்வரர் ஆலயத்தில் அவர்களுக்கான பணி நிரம்ப இருந்தது இதுபோக அக்கம் பக்கம் உள்ள ஊர்களிலெல்லாம் அவர்களின் பணி தேவைபட்டது

அந்த ஊர் இதனால் எப்பொழுதும் மந்திரம் முழங்கவும் யாக வழிபாடுகள் நடக்கும் இடமாகவும் சதா சர்வ காலமும் பக்தி கமழும் இடமாகவும் இருந்தது.

திரும்பும் இடமெல்லாம் திறுநீறு அணிந்த முகங்கள் இருந்தன, எல்லா திசையிலும் சிவநாம ஒலித்தது
ஆறு இருந்தால் அதன் கரை மரங்கள் மட்டுமல்ல ஆற்றங்கரை பசுக்கள் மட்டுமல்ல மனிதர்களும் நலமாக வளமாக ஜொலிப்பார்கள், அப்படி அந்த ஊர் மக்களும் மின்னினார்கள்

அந்த ஊர் புராதன சிறப்பும் மிக்கது, அந்த பெருமையும் அவர்களுக்கு இருந்தது. அந்த தொன்ம பெருமை முருகனுடன் சம்பந்தபட்டது

முருகபெருமா சூரனை அழிக்க திருச்செந்தூருக்கு செல்லும் முன்னால் அங்குதான் அன்னையினை வேண்டி தவமிருந்ததார், அங்கு வந்த அன்னை பார்வதி அவரை வாழ்த்தி அனுப்பினார்

அந்த சத்தியகிரீஸ்வரர் ஆலயம் அப்படி உருவானதே, இதனால் ஆதியில் இருந்து அங்கு முருகனுக்கு தனி சன்னதி உண்டு

அந்த ஊர் திருசேய்நல்லூர் என பெயர் பெற்றது இவ்வாறே, அன்னை பார்வதியின் மகன் முருகன் பெயராலே அது அழைக்கபட்டது

அங்கு #எச்சதத்தன் என்றொரு பிராமணர் இருந்தார், அவர் மனைவிபெயர் பவித்திரை. எச்சதத்தன் என்பது யட்சதத்தன் என்பதன் மருவு என்பார்கள்.

யட்சன் எனும் வார்த்தை அசுரருடன் தொடர்புடையது என்றாலும் பொதுபொருள் “அதி சக்தி வாய்ந்த” எனும் வகையில் வருவதால் சிவன் புகழ்பாடும் பூத கணங்களுக்கும் அப்பெயர் பொருந்தும் , அவ்வகையில் அவர் யட்சதத்தன் அது பின் எச்சதத்தனாயிற்று

இந்த எச்சதத்தன் பவித்திரை தம்பதியருக்கு ஒரு மகன் இருந்தார் அவர் பெயர் விசாரசருமர்
விசாரசுருமர் என்பது விசார சர்மா என்பதே, ஆம் அவர்களின் குலபெயர் சர்மா. சர்மா என்பது சாஸ்திரி, சர்மா என பிராமணர்களின் பிரிவுகளில் ஒன்று, இன்றும் அந்த பிரிவு இந்தியா முழுக்க உண்டு

பெயர்களை கவனியுங்கள், இது #சேக்கிழார் காலம் பல நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம். அப்பொழுதே யட்சதத்தன் பவித்திரை விசாரசர்மர் என வடமொழி பெயர்களும் பிராமண இனமும் இங்கு தமிழ் இனங்களில் ஒன்றாய் இருந்தன, இதனாலேதான் இன்றளவும் செப்பேடுகளும் கல்வெட்டும் சமஸ்கிருதம் தாங்கி நிற்கின்றது

தமிழும் சமஸ்கிருதமும் அப்படி இரண்டற கலந்துவிட்டவை இரு கண்போன்றவை. சமஸ்கிருதம் ஒரு ஞானமொழி, எல்லா இந்திய மொழிகளின் ஞானத்தையும் இணைத்து தமிழுக்கு கொண்டுவரும் ஞானமொழியாய் இருந்தது

அந்த அந்தண குடியிருப்பில் பிறந்த விசார சர்மா 6 வயதுக்குள் தமிழ் சமஸ்கிருதம் என இரண்டிலும் கற்று தேர்ந்தார், ஒரு பிராமணனுக்கு இரண்டும் வராவிட்டால் அது பூர்வ ஜென்ம பாவமன்றி வேறு எதுவாக இருக்க முடியும்

அற்புத பிறப்பான, அவதார தளிரான விசாரதர்மருக்கு இரண்டுமே மிக எளிதாக வந்தது. புளியம்பழத்தில் இருந்து ஓடு பிரிவது போல் எளிதாக வந்தது. கற்று மிக எளிதாக தேர்ந்தார்.

பிராமணர் என்பவர்களுக்கு 6 வகை குணங்கள் உண்டு, அதை கொண்டவர்கள்தான் பிராமணர் என அழைக்கபடுவர்

ஒரே நோக்கமாக திருநீறு , இரண்டு வாழ்வு அதாவது பூனூல் அணிவதற்கு முன் ஒரு வாழ்வு பின் ஒரு வாழ்வு, மூன்றுவேளை வழிபாடு, நான்குவகை வேதம் உணர்தல், ஐந்துவகை புலன்களை அடக்கி புலன்களை மனதின் பின்னால் நிறுத்ததல்

அது போக 6ம் குணம் ஒன்று உண்டு, அது ஓதல் ஓதுதல், கற்றல் கற்பித்த, தானம் வாங்குதல் தானம் கொடுத்தல் என ஆறு இயல்பு உண்டு

அதாவது பிராமணன் வேதம் தனக்காக‌ ஓத வேண்டும் வேதத்தை மக்களுக்காக யாகங்களிலும் ஓத வேண்டும், அவன் நிறைய கற்க வேண்டும் கற்றதை சொல்லவும் வேண்டும், தானம் பெறவும் வேண்டும் தானம் கொடுக்கவும் வேண்டும்

ஆறு இயல்பான குணங்களை கொண்டதாலே ஆரியர் என்றானார்கள், அந்தணர்களின் இன்னொரு பெயராகவே அது அறியபட்டது. அவர்களுக்கு இருக்க வேண்டிய குணமாகவும் அது சொல்லபட்டது.

இக்குணங்களோ அடையாளமும் இல்லாதவர்கள் ஒரு காலமும் ஆரியர் என்றோ, அந்தணர் என்றோ அழைக்கபடமாட்டார்கள், தகுதி இழந்தோர் ஆகிவிடுவார்கள். அந்தணர் என்பது பிறப்பால் வந்தாலும் இந்த பண்புகளாலே அது உறுதிபெறும்

அந்த வழக்கபடி உபநயனம் எனும் பூனூல் பூட்டும் சடங்கினை விசாரசர்மாவுக்கு செய்ய ஏற்பாடுகள் நடந்தன‌
உபநயனம் என்பது வேறொன்றுமல்ல, நயனம் என்றால் கண், இரு கண்களுக்கு இடையே இருக்கும் ஞானக்கண் திற்க்கும் சடங்கு என பொருள்

சாஸ்திர படிப்புகளிலும் மந்திர உச்சாடனங்களிலும் படிப்புகளிலும் சேரபோகும் மாணவர்களுக்கு செய்யபடும் சடங்கு அது

இளமையிலே முதிர்ந்துவிட்ட அவருக்கு பூனூல் இட முடிவுசெய்யபட்டு அதுவும் நடந்தேறிற்று
அந்தணர் திரண்டு வந்து சடங்கு முடித்து பூனூல் அணிவித்து வாழ்த்த, ஊர் திரண்டு வந்து விருந்துண்டு வாழ்த்த எல்லாம் இனிதே நடந்தேறிற்று

வணிகன் வீட்டு குழந்தைக்கு கூட்டல் கழித்தல் கணக்கு எளிதாக வருவது போல, மந்திரங்களும் இதர பாடங்களும் விசார சர்மாவுக்கு இயல்பாய் வந்தன‌

பல ஆண்டுகாலம் படிக்க வேண்டிய பாடங்களை அவர் வெகு எளிதாக சிலவாரங்களிலே முடித்தார், அவரின் பிறவிபலன் அப்படி இருந்தது

கடலை செடியின் நுனியினை இழுத்தால் விளைந்த மொத்த கடலையும் மண்ணில் இருந்து வெளிவருவது போல மந்திரங்கள் எளிதாக அவருக்கு வந்தன, தொடக்க வரியினை சொன்னால் அவரால் முழு மந்திரத்தையும் சொல்ல முடிந்தது

7 வயதிலே எல்லா சாஸ்திரங்களிலும் தேறியிருந்தார் #விசாரசர்மர். விளைந்த வயலை அறுவடை செய்தாக வேண்டும், வளர்ந்த காளையினை ஏரில் பூட்டியாக வேண்டும்

மங்கையர் கழுத்தில் ஏறும் மங்கல நாண் என்பது அவர்களின் இரண்டாம் வாழ்வுக்கான அடையாளம் என்பது போல, பிராமணர் மார்பில் ஏறும் பூனூல் அவர்களின் இரண்டாம் வாழ்வுக்கான அடையாளம்

சாஸ்திரங்களையும் போதனைகளையும் கற்பது கடினம் அதைவிட கடினம் அதன் படி வாழ்வது, இதைத்தான் வள்ளுவன் “கசடற கற்க, நிற்க அதற்கு தக” என சொன்னான்

விசார சர்மர் 7 வயதிலே உபநயனம் பெற வந்திருந்தாலும் நல்ல முதிர்ச்சியுடன் சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தார், கொஞ்ச நாளிலே சாஸ்திர சம்பிரதாயங்களில் தேர்ந்தார்.

தந்தைக்கு யாகம் நடத்த உதவி முதல் பல உதவிகளை செய்தபடி அந்த ஊரில் வலம் வந்தார்.

இப்படியே சில காலம் சென்றபின்புதான் அந்த காட்சி நடந்தது

ஆம், அந்தணர் இருக்குமிடமெல்லாம் பசுக்கள் இருக்கும், பசு என்பது இல்லாமல் இந்து வழிபாடே இல்லை. திறுநீறு முதல் பால் தயிர் நெய் என எல்லாம் கொடுத்து கடைசியில் மேளம் இசைக்க தோலையும் கொடுத்துவிட்டு செல்லும் அந்த பசுக்கள் இந்து வழிபாட்டின் ஆதார சக்தி

இந்த மாடுகளை மேய்க்க சிலர் இருப்பார்கள், காலையில் உணவினை கட்டி அதை கோலில் தொங்கவிட்டு ஊரில் உள்ள மாடுகளையெல்லாம் காலை கறவை முடிந்தபின் மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் அவர்கள் மாலை திரும்ப அழைத்து வருவார்கள்

அவர்களுக்கு ஊரார் தானியமும் கூலியும் கொடுப்பார்கள், பசுக்களுக்கும் அவைகளின் பாலுக்கும் அவனே பொறுப்பு

அப்படி விசாரசர்மர் வீட்டு பசுக்களும் மேய்ய்சலுக்கு செல்லும், அனுதினமும் காலையில் மாடுகளை மேய்ப்பவனிடம் ஒப்படைப்பதும் மாலை அவற்றை திரும்ப கொண்டு தொழுவத்தில் கட்டுவதும் அவர் அன்றாட வேலையாய் இருந்தது

அன்றும் அப்படி ஊர்மாடுகள் வரவுக்காக அவர் காத்திருந்த பொழுதுதான் இடையன் ஒருவன் ஒரு பசுவினை கடுமையாக அடிப்பதை கண்டார்

பொதுவாக பசுக்கள் கன்றுகளை பிரியும் நேரம் வரமறுக்கும், அடம்பிடிக்கும் ஆனால் வலிய இழுத்து செல்வார்கள் , வளர்ந்த கன்றுகளை கூட விட்டால் பாலை குடித்துவிடும் என சிலர் கொஞ்ச நாளைக்கு கன்றுகளை கூட அனுப்பமாட்டார்கள்

அந்நேரம் பசு தாயுள்ளத்தால் மேய்ய்சலுக்கு செல்லாமல் அடம் பிடிக்கும் அதை வலிய இழுப்பார்கள், அப்படித்தான் அந்த பசு அடம் பிடிக்க அதை அடித்துவிட்டான் இடையன்

அந்த காட்சியினை கண்டதும் ஓடிசென்று அவன் கையில் இருந்த குச்சியினை வாங்கி தூர எறிந்துவிட்டு மிக தெளிவான போதனையினை கடுமையாக சொல்ல ஆரம்பித்தார் விசாரசர்மர்

“நீ எப்படி பசுவினை அடிக்கலாம், பசு எவ்வளவு மரியாதைகுரியது என வேதங்கள் சொல்கின்றன, நீ செய்தது பாவம்

உனக்கு புரியும்படி சொல்கின்றேன், பசுக்கள் இல்லாவிடில் பால் ஏது, வெண்ணெய் ஏது, நெய் ஏது இது இல்லாவிடில் எப்படி கோவில் இயங்கும்? அபிஷேகம் முதல் விளக்கு வரை எப்படி நடக்கும்

வீடுகள் நெய் இல்லாமல் எப்படி இயங்கும்? அவ்வளவு ஏன் திறுநீறு எங்கிருந்து கிடைக்கும்? அதை தாண்டி வயலுக்கு எங்கிருந்து உரம் கிடைக்கும்? வீட்டு முன் முற்றம் தெளிப்பது எப்படி?

பசுவின்றி பஞ்சகவ்யத்தை எப்படி உருவாக்குவாய்?

பசுவின்றி வலிமை மிக்க காளைகள் எப்படி வரும்? அதுவன்றி உழுவது முதல் வண்டி இழுப்பது வரை எப்படி நடக்கும்?

ஆம், பசுக்களே மூலம், பசுக்களே எல்லா வரமும் அளிப்பவை, பசுவின்றி இந்த ஊரும் இல்ல உலகமும் இல்லை, நீயும் இல்லை நானும் இல்லை

சாஸ்திரம் பசுக்களையும் பெண்களையும் ஒரே இடத்தில் வைத்து பூஜிக்கின்றது, என் கண் முன்னால் நீ பசுக்களை அடித்தது தவறு” என எடுத்து சொன்னார்

அந்த பசு அவரை பாசமாய் நோக்கிற்று அதன் கண்ணோரம் நீர் கசிந்தது

ஆனால் அந்த யாதவ சிறுவனோ திமிராய் சொன்னான் “ஓஹோ இவ்வளவு பேசுகின்றாய் அல்லவா? இனி நீயே மாடுகளை மேய்த்துகொள்”

விசாரசர்மர் கொஞ்சமும் தயங்கவில்லை, அந்தணனின் மிகபெரும் கடமை பசுக்களை பாதுகாப்பது என் தர்மத்தை செய்ய நான் தயார் என பொறுப்பினை ஏற்றார்.

அந்தணர் குடும்பங்களும் அதை ஒப்பு கொண்டன, அவர்களின் தர்மம் அது

மாடுகளை அவர் மேய்க்க கிளம்பிய அழகுகோலம் ஆயர்பாடியில் கண்ணன் மாடுமேய்த்த காட்சி போலவே இருந்தது

மாடுகளை மணியாற்றின் கரைக்கு அழைத்து செல்வதும் அவைகளை நன்கு பராமரிப்பதும் அவற்றின் தேவை அறிந்து புல் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்வதுமாக பசுக்களை உள்ளன்போடு மேய்த்து வந்தார் விசாரசருமர்

விலங்குகளுக்கு அறிவு இல்லாமல் இருக்கலாம் ஆனால் மனம் உண்டு, மனம் என்பது மனிதனுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒன்றே

அந்த மனம் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும், அன்பு எனும் உணர்ச்சியால் அந்த விலங்குகளின் மனதில் சில செய்திகளை சொல்லமுடியும், விலங்குகளின் மனமும் மானிட மனதோடு பேசும்

இது அன்புநிறை மாந்தருக்கு எளிதான விஷயம், இதனால்தான் யோகிகளும் ரிஷிகளும் விலங்குகளுடன் பேசமுடிந்தது

அய்யப்பனால் புலிமேல் அமர முடிந்தது,ரமணரால் குரங்குகளுடனும் சிறுத்தைகளுடனும் பேச முடிந்தது

அன்பால் நிறைந்த மனம் இறைவனில் கலந்திருக்கும், இறைசக்தி எல்லா உயிர்களிடமும் உண்டு என்பதால் இன்னொரு உயிரின் மனதை அதனால் தொட முடியும், பேசி பழக முடியும்

இதுதான் விசாரசர்மர் வாழ்விலும் நடந்தது, மாடுகளும் அவரும் கண்களாலும் மனதாலும் பேசி கொண்டார்கள்
அன்புக்கு அடிமையாகிவிட்டால் மானிடர் மட்டுமல்ல விலங்குகளும் சில அறிகுறிகளுடன் வெளிபடுத்தும்

நாய் வாலை ஆட்டியவாரு வரும், யானை துதிக்கையினை ஆட்டியபடி வந்து துதிக்கையால் தொட்டு விளையாடி உரசும். குதிரை தன் தலையால் இடித்து கொண்டே இருக்கும். பூனை தன் உடலால் மனிதன் காலை உரசியபடியே கொஞ்சும்

இப்படி ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு இயல்பு உண்டு

பசுக்கள் பாசத்தை வெளிபடுத்தும் விதம் அலாதியானது, மெல்ல அருகில் வரும் அவை நாவால் நக்கும், பின் தன் உடலால் மெல்ல உரசும் , அப்படி அன்பின் உச்சபெருக்கில் அவை நிற்கும் பொழுது ஒரு விஷயமும் நடக்கும்

ஆம் தன் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் தாய்க்கு பாச உணர்வில் மார்பில் பால் சுரப்பது போல, அன்பின் உச்சத்தில் பசுக்களுக்கும் சுரக்கும்.

இன்றும் இந்த வித்தை கறவை நடக்கும் இடங்களில் உண்டு, பசுவின் முன் கன்றினை நிறுத்தித்தான் பால் கறப்பார்கள், கன்றினை தாய்மை உணர்ச்சியில் நக்கியபடிதான் பசு பால் சுரந்து கொண்டிருக்கும், கன்று இல்லாது எந்த பசுவும் பால் கொடாது மடியினை சுருக்கி கொள்ளும்

அந்த மணியாற்றின் கரையில் தங்கள் மேல் பாசமாய் இருந்த விசாரசர்மரை பசுக்கள் முதலில் அடிக்காத ஆசிரியரை போலத்தான் மகிழ்வுடன் கண்டன, ஆனால் அவர் காட்டிய அபரிமிதமான அன்பில் அவை அவரை ஒரு கன்றாக பாவித்தன‌

மேய்ச்சல் முடிந்து அவை அசைபோட செல்லும் தருணம் மரத்தடியில் இருக்கும் விசாசர்மரை சூழந்து நின்று உரசும், அப்பொழுது தாய்மை உணர்ச்சியில் அவற்றின் பால் தானாக சொரியும்

பசுக்களின் முகத்தை கட்டி கொண்டு பதிலுக்கு முத்தமிடும் விசார சர்மரின் அன்பில் அவை இன்னும் கூடுதலாக சொரிந்தன, பின் அவை தள்ளிசென்று அசைபோட ஆரம்பிக்கும்

அப்பொழுதுதான் பசுக்களின் பால் தரையில் சிந்தியிருப்பதை கண்டார் விசார ச‌ர்மர்

அன்பான விசாரதர்மரின் அனுசரணையான மேய்ச்சலில் மகிழ்ந்த மாடுகள் நன்கு மேய்ந்ததால் பால் பெருகிற்று, இது அந்தணர் குடியிருப்பில் பெரும் மகிழ்ச்சியினை கொடுத்தது விசாரசர்மரின் பசு பாசம் பிரசித்தியாயிற்று

அது அன்பால் நிகழ்ந்த மாற்றம், ஆன் அன்பின் சக்தி அது. எங்கெல்லாம் உயிர்கள் உண்டோ அங்கெல்லாம் மனமும் உண்டு, மனதால் அவைகளை நெருங்கினால் , அவை மனம் மகிழ்ந்தால் பெரும் மாற்றம் நடக்கும் என்பது இதுதான்

இது மாயம் அல்ல, சித்து அல்ல, கடவுளின் அதிசயம் அல்ல, அடிப்படை காரணம் அன்பு. அது மானிட இன பெண்கள் போல் மிக மென்மையான மனம் கொண்ட பசுக்களிடம் எளிதில் அதிசயம் புரிகின்றது
பால் கூடிற்று என மக்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள் அதே நேரம் தன்னை பசுக்கள் கொஞ்சும் நேரம் வீணாகும் பாலை பற்றி சிந்தித்தார் விசார சர்மம்

பூ , தூபம், சந்தணமெல்லாம் இவற்றில் சிறந்ததெல்லாம் இறைவனுக்கு, எல்லா விளைச்சலிலும் எது முதலில் கிடைப்பது அது இறைவனுக்கு என்பது அவர் படித்த சாஸ்திரம்

அப்படி புதிதாக ஊறும் பாலில் முதல் படி பால் இறைவனுக்கு என அவர் மனம் எண்ணிற்று, அது வீணாக தரையில் கொட்டுவதை அவர் விரும்பவில்லை, இறைவனுக்குரியது வீணாக கூடாது என உறுதி பூண்டார்

ஆமம் பாம்பு புற்றையே லிங்கம் என கருதி பாலூற்றி வழிபட்ட சமூகம் இது, நாகம் குடியிருக்கும் அந்த லிங்க வடிவ புற்று சிவனையே குறிப்பதாக கருதி பாலூற்றிய சமூகம் இது

அதை பிடித்து கோவிலுக்கு அபிஷேகம் என கொண்டு செல்லவும் முடியாது, அது மேய்ச்சல் கானகம் தூரமும் அதிகம் மாடுகளையும் பார்க்க வேண்டும்

என்ன செய்யலாம் என சிந்தித்த அவருக்கு அழகான யோசனை உதித்தது, இந்த பாலை அப்படியே எடுத்து சென்று இறைவனுக்கு கோவிலில் கொடுத்து அபிஷேகம் செய்வதை விட இங்கேயே வரவழைத்து அபிஷேகம் செய்தால் என்ன?

என்ன செய்ய வேண்டும்? லிங்கத்துக்கு திருஞ்சனம் என இந்த பாலை ஊற்ற வேண்டும் அவ்வளவுதானே, அந்த லிங்கத்தை இங்கேயே ஸ்தாபித்து பாலை ஊற்ற்றினால் போதாதா? மந்திரங்கள் முழுக்க நம்மிடம் உண்டு, பால் உண்டு

பூக்களை இங்கே பறிக்கலாம், அழகான கொன்றை பூக்கள் உண்டு நறுமணம் பரப்பும் போதும், சுருக்கு பையில் எப்பொழுதும் இருகும் விபூதி கைவசம் இருகின்றது

தீபம்? ஆ.. சூரியனே தீபமாய் வானில் எரியும் பொழுது அதைவிட என்ன வேண்டும்? சரி தூபம்? இந்த மணியாற்றினை கடந்துவரும் இதமான தென்றலை விடவா? அந்த தென்றல் இந்த கொன்றை பூக்களை கலக்கும் பொழுது எழும் சுகந்ததினை விடவா தூபம் நறுமணம் கொடுக்கும்

சட்டென திட்டத்தில் இறங்கினார் விசாரசர்மர்

பசுக்கள் மேயும் நேரம் அவருக்கும் வேலை இருக்கும் என்பதால் பசுக்கள் அசைபோடும் மதியத்தை ஒட்டிய நேரத்தை கணக்கிட்டார், அது அவரின் பூஜை வேளை என குறித்து கொண்டார்.

ஆற்றோரம் ஓடி சென்று களிமண் எடுத்து வந்து நீரால் பிசைந்து லிங்கம் செய்தார், மிக அழகாக செய்தார் வெயிலில் அதை கொஞ்சம் காய வைத்தார்

பக்கத்தில் சிறிய மணல் மேடை செய்தார், அபிஷேக பால் வழிந்தோட மேடையில் இருந்து ஒரு சிறிய கால்வாயும் வெட்டினார்

மேடையினை சுற்றிபிள்ளைகள் மணலால் கோட்டை கட்டுவது போல் கோட்டை கட்டினார், கோவில் மதிலாம்
உட்பிரகாரமெல்லாம் அப்படியே அமைத்து கொண்டார், வாசல் என சில கற்களை வைத்தார் அதன் அருகே ஒரு குச்சியினை நட்டு வைத்து கொடிமரம் என சொல்லி கொண்டார், ஆகமம் பிசறாமல் கிழக்கு நோக்கி எல்லாம் அமைத்தார்

எல்லாம் தயாராயிற்று

கொன்றை பூக்களும், வில்வ இலைகளுமாய் சேகரித்து வந்தார், இடையர்கள் வைத்திருகும் இரும்பு வளை கொண்ட கழி அதற்கு உதவிற்று பின் வெயிலில் காய்ந்த லிங்கத்தை மண்மேடைமேல் ஏற்றி வைத்தார், பூக்களில் சிலவற்றை முன் அடுக்கினார், கொஞ்சம் பூக்களையும் லிங்க இலையினையும் தன் மேல்துண்டின் மேல் வைத்து கொண்டார்

இதை செய்து முடிக்கவும் மாடுகள் மேய்ந்து அவரை நெருங்கவும் சரியாக இருந்தது

மாடுகள் இவற்றை காலால் மிதித்திவிடாதபடி தள்ளி அழைத்து சென்று கொஞ்சினார், விளையாடினார், அப்பொழுது அவை பால் சொரியும் பொழுது சேகரித்தார், பின் கொஞ்சம் கறக்கவும் எண்ணினார், காரணம் தானாய் சொரியும் பால் சாரலின் தூரல் போலத்தான் இருந்தது

அவர் மடியில் கைவைக்கும் முன் பாலை பீச்சின பசுக்கள்

பசுக்களை ஓய்வெடுக்கவிட்டு தன் கோவில் பக்கம் பாலோடு ஓடிவந்தார் விசார சர்மர், இப்பொழுது கோவில் தயார், லிங்கம் தயார் அதன் முன்பூக்களும் தயார், திறுநீற்றினை எடுத்து லிங்கத்தில் பூசினார்

எல்லாம் சரியென்ற பொழுதும் ஏதோ ஒன்று அவருக்கு குறைந்தது, அது நந்தி

அட மாட்டுமந்தையில் இருந்து கொண்டு நந்திக்கு அலைவதா? என சொல்லி ஒரு விடபருவ காளைகன்றினை பிடித்து வந்து லிங்கம் முன் படுக்க சொன்னார், அதுவும் காலைமடக்கி படுத்து லிங்கத்தை பார்க்க அசைபோட்டு கொண்டிருந்தது

எல்லாம் சரி என நிறைவு கொண்ட விசாரசருமர் ஓடி போய் ஆற்றில் ஒரு மூழ்கு மூழ்கி ஓடிவந்து நெற்றிக்கு நீறு பூசி பின் லிங்கத்துக்கும் பூசி பூஜையில் லிங்கத்தின் இடபக்கமாக அமர்ந்து கொண்டார்

மந்திரங்கள் அவருக்கு அத்துபடி என்பதால் உரிய மந்திரங்களை சொல்லியபடி பாலினை லிங்கத்தின் மேல் ஊற்றி வலதும் இடதுமாக ஆட்டி சப்தமாய் மந்திரங்களை சொல்லியபடியே திருமஞ்சணம் செய்ய தொடங்கினார்

பின் வில்வ இலையினை பொழிந்து மந்திரம் சொன்னார், பின் பூக்களை தூவி அர்ச்சனை மந்திரம் சொன்னார்.

எல்லாம் நிறைவாக முடிந்ததும் மகிழ்ச்சியோடு தள்ளி சென்று அமர்ந்து லிங்கத்தையே பார்த்து கொண்டிருந்தார்

இதையெல்லாம் சிவனும் பார்த்து கொண்டே இருக்கிறார் என்பதை அவர் அறியவில்லை.

அனுதினமும் பூஜைகள் தொடர்ந்தன, மாடுகளும் பாலை கொடுத்து கொண்டே இருந்தன, அவரும் மணலால் லிங்கம் செய்து தன் வழிபாடுகளை தவறாமல் செய்து கொண்டே இருந்தார்

இதை செய்தபின்புதான் மதிய உணவு என்பதே அவர் வழக்கமாயிற்று

பால் அபிஷேகம் என்பது இந்துக்கள் வழிபாட்டில் மகா முக்கியமானது, முதலாவது சுத்தமான பால் என்பது தூய்மையின் அடையாளமாக கருதபட்டது, மாசற்ற அந்த பாலை இறைவனுக்கு படைப்பது பெரும் காணிக்கையாயிற்று

பால் அபிஷேகம் என்பது ஆயுளை நீட்டிக்கும் விஷயம் என்றார்கள் இந்து ஞானிகள், ஆம் பால் அபிஷேகம் செய்து அபிஷேக பால் எனும் நற்பொருளும் சிவனருளும் கலந்த பாலை குடிக்கும் பொழுது மருத்துவ ரீதியாகவும் உடல் பலமாகும்

பால் என்பது மிகசிறந்த கிருமி நாசினி என கண்டிருந்தது அக்கால சமூகம், இன்றும் சில பொருட்களை கழுவமும் சுத்தபடுத்தவும் பால் பயன்படும், கவனித்தால் புரியும்

அந்த சிறப்பான பாலை கொண்டு லிங்கத்தை அபிஷேகம் செய்து அதை அருந்தி அருளும் வளமும் பெற்ற சமூகம் இது, அதை ஒரு வழிபாடாகவே கருதிற்று

பால் அபிஷேகம் ஆயுளை விருத்தியாக்கும் என்பது பொய்யல்ல‌

சலசலத்து அலை அடித்து ஓடும் மணியாற்றின் கரையில் இளவெயில் மெல்ல காய்ச்ச, குளிர்ந்த காற்றடிக்க பசுக்களெல்லாம் புல்தரையில் படுத்திருக்க, பின்னணியில் உயர்ந்த மரங்களெல்லாம் காற்றில் அசைய, அதில் இருக்கும் பறவைகளெல்லாம் இசையெழுப்ப, அந்த ரம்மியமான சூழலில் இந்த திடீர் கோவிலும் அந்த பால் அர்ச்சனையும் அனுதினமும் நடக்க ஆரம்பித்தது

மாடுகள் தினமும் மேய்ந்தாக வேண்டும், மாடுமேய்க்கும் தொழிலும் அதனால் அனுதினமும் நடந்தாக வேண்டும், அதில் விடுமுறையே இல்லை

அதனால் அனுதினமும் சிவனுக்கு இப்படி பாலாபிஷேகம் செய்வது விசாரசருமருக்கு வழக்கமாயிற்று, அனுதினமும் ஆலயத்துக்கு சென்று வழிபட முடியாத அவருக்கு இது பெரும் ஆறுதலும் அடைக்கலமாயிற்று.

எந்நாளும் நடக்கும் இந்த வழிபாட்டினை ஒரு நாள் ஒருவன் கண்டான், பார்க்கும் கண்களை பொறுத்தே விஷயங்கள் புரியும்

அதை கண்ட அந்தணனுக்கு விசாரசருமர் பாலை வீணாக கொட்டுவது போல் தோன்றிற்று, அருகிருந்து பார்த்தபொழுது இன்னும் அதிர்ச்சி அடைந்தார்

காரணம் அந்த அந்தணர் யாகம் செய்வதே உன்னத பக்தி, யாகத்தின் அவிஸை ஏற்றுகொள்ளும் தெய்வமே பெரும் தெய்வம் எனும் வகையில் நம்பிக்கை கொண்டிருந்தார்

ஒரு சிறுவன் மணல் லிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்வது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திற்று, இதனால் கண்ட காட்சியினை அப்படியே திரித்து அவர் தகப்பனார் எச்சதத்தனிடம் சொன்னார்

“பார் எச்சதத்தா, உன் மகன் எங்களையெல்லாம் நூதனமாக பழிவாங்குகின்றான். அவனை மாடுமேய்க்க அனுப்பிய கோபத்தில் பாலை எல்லாம் கறந்து மண்ணில் இறைக்கின்றான்” என மிக கடுமையாக மூட்டிவிட்டான்

அந்த அந்தணன் சொன்னதை இன்னும் சில அந்தணர்கள் பார்த்துவிட்டு வந்து எச்சதத்தனிடம் சொன்னார்கள், இதனால் இதை நேரிலே பார்த்துவிட முடிவு செய்தான் எச்சதத்தன்

மகனுக்கு தெரியாமல் முன்பே சென்று ஒரு குருந்த மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு நடப்பதை கவனித்தான் எச்சதத்தன்

அது தைமாதம் உத்திர நட்சத்திர நாளாய் இருந்தது, அறுவடை நடந்து முடிந்த வயல்களில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன‌

வழக்கமான காட்சிகள் நடந்தன மாடுகளை மேய்த்து கொண்டே கொன்றை பூ பறித்தல், நீண்ட கழியால் வில்வ இலை பறித்தல் என பொருட்களை சேர்த்து கொண்டார் விசாரசர்மர்

அதை ஒரு ஆத்தி மரத்து அடியில் வைத்தார்.

இதில் ஆத்தி பூவும் இருந்தது, ஆத்தியும் கொன்றை பூக்களும் சிவனுக்கு மிக விருப்பமான பூக்கள். சிவன் இரண்டையுமே விரும்பி ஏற்பார்

இதனால் கொன்றை பூக்களுக்கு நிகரான மரியாதை அன்று ஆத்தி பூவுக்கும் இருந்தது
(சோழநாட்டில் அவை அதிகம் இருந்தன சோழ மன்னர்கள் சூடும் பூக்களில் ஆத்தி பூவே அவர்கள் அடையாளமாக இருந்தது

ஆத்தி மர பூக்களும், கொன்றை மர பூக்களும் இந்துக்களின் தனி அடையாளமாய் இருந்தது

அவ்வையார் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் என பாடியதெல்லாம் இவ்வகையே. அப்பூக்கள் மகா புனிதமானதாகவும் மிக உயர்ந்த அடையாளமாகவும் கருதபட்டது)

பின் அவற்றை தன் மேல் துண்டில் பத்திரமாக வைத்துவிட்டு லிங்கம் செய்து கோட்டை கட்டி தன் பூஜைக்கான தயாரிப்பில் இறங்கினார்

இடை இடையே மாடுகளை நீருக்கு அழைக்கவும் அவற்றினை ஆங்காங்கே திருப்பவும் அவர் தவறவில்லை
அப்படியே லிங்கம் முதல் எல்லாம் தயாராயிற்று, மறைவில் இருந்து இதை பார்த்ததும் பல்லை கடித்து கொண்டிருந்தார் அந்த எச்சதத்தன் காரணம் அவர் காசிப குலத்தவராய் யாகத்திலே கடவுளை காணும் நம்பிக்கையினை கொண்டிருந்தார்

லிங்க அபிஷேக வழிபாடு அவருக்கு உவப்பானது அல்ல, எனினும் இங்கு வழிபாடு சிக்கல் அல்ல பால் என்னாகின்றது என்பதுதான் விஷயம் என்பதால் கோபத்தை கட்டுபடுத்தி நடப்பதை பார்த்து கொண்டிருந்தார்
வழக்கம் போல் குறிப்பிட்ட நேரத்தில் மாடுகள் விசாரசருமரை சூழ்ந்தன, அவரை நக்கின, கொண்டாடின உரசிகொண்டு நின்று மகிழ்ந்தன, விசாரசருமரும் அவற்றை முத்தமிட்டு மகிழ்ந்தார்

குழம்பி தவித்தார் எச்சதத்தன், கோபமும் குழப்பமும் அவரை ஆழ்த்தியிருந்தன‌

அப்பொழுது மாடுகள் தானாக பால் சுரந்தன அதை கலயங்களில் ஏந்தி கொண்டார் விசாரசர்மர் ,இது எச்சதத்தன் கண்ணுக்கு விசாரசர்மரே கற‌ப்பது போல் தெரிந்தது

கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல் விடகாளையினை நந்திபோல் கட்டி போட்டுவிட்டு லிங்கத்தின் இடபுறம் இருந்து மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்

அருகில் பால் கலயங்கள் அடுக்கி வைக்கபட்டிருந்தன, மந்திரம் சொல்ல சொல்ல வில்வ அர்ச்சனையும் பூ அர்ச்சனையும் நடந்து கொண்டிருந்தது

முழு தவத்தில் ஆழ்ந்த மனத்தில் இருந்து வழிபாடு நடத்தி கொண்டிருந்த அடியார் முதல் கலய பாலை எடுத்து மந்திரம் சொன்னபடியே ஊற்றியபொழுது மறைவில் இருந்து ஓடிவந்தான் எச்சதத்தன்

“முட்டாளே, என்ன காரியம் செய்கின்றாய்? பாலை எடுத்து வீணாக ஊற்றுவாயோ?” எனும் ஆத்திரமான வார்த்தையுடன் அருகில் இருந்த பிரம்பினை எடுத்தான்

அது கொடிமரம் என விசாரசர்மா நட்டு வைத்த பிரம்பு

பால் வீணாகின்றது எனும் ஆத்திரத்தை விட ஒரு யாகவழி பிராமணன் அதற்கு தலைகீழான லிங்க அபிஷேகம் செய்வதா அதுவும் தன் மகனே செய்வதா எனும் ஆக்ரோஷமே அவனில் ஓங்கியிருந்தது

ஆனால் அவன் கத்தியதோ குச்சியினை பிடுங்கியதோ விசாரசர்மருக்கு சிறுசலனமும் ஏற்படுத்தவில்லை
காரணம் அவர் ஆழ்ந்த தியானத்தில் சிவனோடு ஒன்றி இருந்தார், கைகள் மட்டும் பாலை ஊற்றின‌

ஆத்திரத்தில் விசாரசருமரின் முதுகில் அடித்தான் எச்சதத்தன், அவரோ காற்று வீசியது போல் அவர் போக்கில் இருந்தார்

இது இன்னும் எச்சதத்தனின் கோபத்தை அதிகரித்தது, ஒருவன் கோபபடும் பொழுது உடனே பதில் கிடைக்காவிட்டால் அவன் கோபம் இன்னும் கூடுமே தவிர குறையாது

அடித்தும் அசராத விசாரதர்மரை திட்டி கொண்டே பிரம்பை போட்டுவிட்டு இன்னும் ஆக்ரோஷமாக கத்தியபடி பால் கலயங்களை காலால் தட்டிவிட்டான் எச்சத்தன், அப்பொழுது கண்திறந்தார் விசாரதருமர்

ஆம் பூஜையில் இருந்த மனம் பூஜைக்கு இடையூறு என்பதால் உடனே விழித்தது

அவருக்கு எதிரே நிற்பது தந்தை என்பதோ அவரின் குரலோ தெரியவில்லை மாறாக அவரின் கால் லிங்கத்தை நோக்கி வருவதை மட்டும் கண்கள் கண்டன‌.

#சண்டிகேஸ்வர_நாயனார் #சண்டிகேஸ்வரர் #நாயனார்

Back to top