புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
54 Posts - 49%
heezulia
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
12 Posts - 2%
prajai
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
4 Posts - 1%
jairam
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னதாய் ஒரு மரணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 12:59 am

மெதுவாய் வெள்ளை உடையில் மிதந்து வந்தார்கள் அந்தத் தேவதைகள் இருவரும். தங்கநிற இறக்கைகள் மிதமாக அவர்களின் முதுகில் மின்னின. தென்றலெனத் தவழ்ந்து மருத்துவமனையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை நோக்கி மிதந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.

ஒன்றின் முகம் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து இருந்தது. கண்ணோரத்தில் கண்ணீர் முத்து கண்ணாடியாய் மின்னியது. அதன் பக்கத்திலிருந்த அந்தத் தேவதை குழப்பத்துடன் இருந்தது.

"என் பிரியமான தோழியே! இன்று என் இவ்வளவு சோகமாயிருக்கிறாய்? காலம் காலமாய் நாம் இந்த மருத்துவமனையில் வலம் வருகிறோம். நீ எதற்காக இவ்வளவு வருத்தப்படுகிறாய் என்று எனக்குச் சொல்ல மாட்டாயா?" என்று அன்பொழுகக் கேட்டது அந்தச் சின்ன தேவதை

"இன்று எனக்கிடப்பட்டிருக்கும் கட்டளையை நினைத்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு குழந்தையின் உயிரை எடுத்துச் செல்ல வேண்டும் அது தான் எனக்கு மிகச் சோகமாக இருக்கிறது" மெதுவாகச் சொன்னது அந்த மரண தேவதை.

"மரண தேவதையே, இதற்காக நீ ஏன் இவ்வளவு வருத்தப் படுகிறாய்? எத்தனை முறை நீ குழந்தைகளின் உயிரை எடுத்துச் சென்று இருக்கிறாய்? அதற்கெல்லாம் நீ இப்படி வருத்தப் பட்டதில்லையே!" குழப்பத்துடனே கேட்டது அடுத்த தேவதை.

"என் அன்பான சின்ன தேவதையே, உன் மனத்தை நீ திடப்படுத்திக் கொள். இன்னும் சில நிமிடங்களில் இங்கே ஒரு மரணம் நிகழப் போகிறது. அந்த மரணத்தினால் பாதிக்கப்பட்ட உயிரை ஆறுதல் படுத்தி வாழ வைக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது. இந்த முறை உனது வேலை மிகக் கடினம்"

"நான் அதைத்தானே தினம் தினம் செய்து வருகிறேன். இன்று அப்படி என்ன நடக்கப் போகிறது?"

பேசிய படியே இருவரும் மருத்துவ மனையின் அறை ஒன்றின் வாசலுக்கு வந்தார்கள்.

அறையின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தாள் எட்டு மாதக் கர்ப்பிணி. ஒருத்தி. அவளுக்கு முப்பது வயது இருக்கலாம். மருந்துகளின் காரணமாக ஆழ்ந்த மயக்கத்திலிருந்தாள் அந்தப் பெண்.

"இவள் யார் என்று எனக்குத் தெரிகிறது. இவள் கணவன் ஓட்டி வந்த வண்டி ஒரு லாரியோடு மோதி அந்த இடத்திலேயே அனைவரும் உயிரிழந்தனர். அவள் பெற்றோர், கணவன், அவனது பெற்றோர் என்று அனைவரையுமே இவள் ஒரே நிமிடத்தில் இழந்து விட்டாளே! பின்னால் படுத்துக் கொண்டு வந்ததினால் இவள் மட்டும் பிழைத்துக் கொண்டாள். இவளை ஆறுதல் படுத்த ஒரு குழந்தையிருக்கிறதே. வாழ்வில் அவளுக்கு நம்பிக்கையும் குறிக்கோளும் சீக்கிரமாய் திரும்பி விடும் என்று நான் கூடஎண்ணினேன்."
மெல்ல அந்தப் பெண்ணின் எம்பியிருந்த வயிற்றைத் தடவிக் கொடுத்தது அந்தச் சின்ன தேவதை.

மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தது மரண தேவதை.

நிமிர்ந்து பார்த்தது சின்ன தேவதை. அதற்கு ஏதோ புரிந்த மாதிரியிருந்தது. தன் தங்க இறக்கைகள் படபடக்க மரண தேவதையின் முன்னால் கை கூப்பி நின்றது. அதன் கண்களிலிருந்து மாலையாய் வழிந்தது கண்ணீர்.

"வேண்டாம், வேண்டாம்!தயவு செய்து வேண்டாம்!! இன்னும் இந்த உலகத்தில் பிறக்காத இந்த ஜீவனை நீ அழைத்துச் செல்லாதே " -கதறிக் கெஞ்சியது.

மரண தேவதை கனமான மெளனமும் கண்ணீர் தளும்பிய கண்களுமாய் அந்த பெண்ணின் தலை மாட்டில் நின்றது. ஒரு முறை சின்ன தேவதையைத் திரும்பிப் பார்த்தது. மெல்லமாய்க் குனிந்து அந்தப் பெண்ணின் நெற்றியில் மிக மென்மையாக முத்தமிட்டது. தேவதையின் இறகுகள் விசிறி அந்தப் பெண்ணின் தலை முடியை மெல்லக் கோதிவிட்டன. சுற்றி வந்து அந்தப் பெண்ணின் கால்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டது, தான் செய்யப் போகும் காரியத்திற்கு மன்னிப்புக் கேட்பது போல.

"இந்தப் பெண்ணின் குழந்தை இறக்கப் போகிறது என்பதைவிட எப்படி இறக்கிறது என்பதுதான் கொடுமை"

"மருத்துவர்கள் தான் வயிற்றிலிருக்கும் உயிரைக் காப்பாற்றி விட்டார்களே? இனி எப்படி? நாம் அந்தக் குழந்தையை அப்படியே விட்டுவிட்டாலென்ன? இந்தப் பெண்ணுக்கும் நல்லது"-
சின்ன தேவதையின் விசும்பல்கள் காற்றாய்க் கரைந்தன.

"நான் மேலிடத்தில் எவ்வளவோ வாதாடினேன் ஆனால் பயனில்லை. என்னுடைய உத்தரவு இந்தக் குழந்தையின் உயிரை எடுத்துப் போவது, அதற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்கின்றன" - கவலையுடன் சொன்ன மரண தேவதை படுத்திருந்த கர்ப்பிணியைச் சுற்றிச் சுற்றிப் பட்டாம்பூச்சி போலப் பறந்தது.

"அப்படியானால் இந்தப் பெண்ணின் உயிரையும் எடுத்துச் செல். எல்லாரையும் இழந்து இவள் வாழ்வதில் பயனில்லை"

"இவள் உயிரை எடுத்துச் செல்வதற்கு எனக்கு கட்டளையிடப்படவில்லை அதற்காகத் தான் உன்னை அழைத்து வந்தேன் நான்"
இவர்கள் இருவரின் பேச்சு அந்த அறையில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.

முனகிக் கொண்டே திரும்பிப் படுத்தாள் அந்தப் பெண். மீண்டும் புரண்டு படுத்தாள் பின் மயக்கத்திலேயே எழுந்து அவள் கழிப்பறை நோக்கி நடந்தாள். இயற்கை உபாதை எழுப்பிவிட்டிருக்கிறது போலும். மரண தேவதை. அவள் பின்னாலேயே பறந்தது. ஒரு முறை சோகமாகச் சின்ன தேவதையைத் திரும்பிப் பார்த்தது. பின் கழிவறைக்குள் அதுவும் நுழைந்தது. மயக்கத்திலேயே அந்தப் பெண் கழிப்பறையில் முனகும் சத்தம் கேட்டது. மெல்ல மெல்ல வந்த முனகல் மெதுவாய் அடங்கியது.

சில நிமிடங்களில் தன் கைகளில் சின்ன உயிரை ஏந்திய படி மரண தேவதை. மேலே மேலே பறந்தது. எதுவும் செய்ய முடியாமல், கழிப்பறையில் மயங்கிக் கிடக்கும் அந்தப் பெண்ணுக்குமாய், மரண தேவ¨தைக்குப் பின்னுமாய் பறந்தது சின்ன தேவதை.

நோயாளியைப் பரிசோதிக்க அறைக்குள் உள்ளே வந்த நர்ஸ் அலறினாள் : "அடக் கடவுளே, பாத்ரூம் போனவளுக்கு பிரசவம் ஆகி தண்ணீருக்குள் குழந்தை விழுந்து இறந்துவிட்டதே!"

சாமுண்டி



சின்னதாய் ஒரு மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக