புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
306 Posts - 42%
heezulia
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
6 Posts - 1%
prajai
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
இன்றைய இந்தியப் பெண்! Poll_c10இன்றைய இந்தியப் பெண்! Poll_m10இன்றைய இந்தியப் பெண்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய இந்தியப் பெண்!


   
   
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 9:49 pm

செல்லமுத்து குப்புசாமி
போரிலும், காதலிலும் வரம்புகள் இல்லை என்பார்கள். கல்யாணத்தில் கூட
அப்படித்தான் போலிருக்கிறது. பல நாத்திகர்கள் ஆத்திகர்கள் ஆவதும்,
ஆத்திகர்கள் நாத்திகர்கள் ஆவதும் அங்கே பரவலாக நடக்கிறது. இந்தக் கூற்றை
பிரத்யேகமாக நிரூபிக்க வேண்டியதில்லை. வாழும் சாட்சிகள் எண்ணற்றவை.
இன்றைய உலகம் – குறிப்பிட்டுச் சொன்னால் இந்தியச் சமூகம் -
முன்னெப்போதும் சந்தித்திராத சமூக மாறுதலை எதிர்கொள்கிறது. அந்த
மாறுதல்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளும் சில நேரங்களில் ஜீரணிக்க முடியாத
ஒன்றாகவே உணரப்படுகிறது. அதே நேரம் மாற்றமில்லாத ஒரே சங்கதியாகிய
‘மாற்றம்’ தவிர்க்க இயலாதது மட்டுமல்லாமல் காலத்தின் கட்டாயமாவும்
உருவெடுத்துள்ளதையும் இந்த உலகம் உணராமல் இல்லை.
பலவீனங்களை சரி செய்வதற்குச் செலவிடும் ஆற்றலில் பாதியை தனது பலத்தைக்
கூட்டுவதற்குச் செலவழித்தால் பல சாதனைகளைப் படைத்து விடலாம், பத்துப்
பேர் முன்னால் பேசுவதற்குக் கூச்சப்படும் ஆட்கள் பலர் இன்றைக்கு
எழுத்தாளர் ஆகியிருப்பதைப் போல.
உனக்கு எதைச் சரியாகச் செய்ய முடியுமோ அதில் வல்லுனர் ஆவதே இதன்
சாராம்சம். ஸ்பெஷலிஸ்ட்டுகள் உருவானதும், உருவாகப் போவதும் இப்படித்தான்.
Division of labour என பொருளாதார மேதை ஆடம் ஸ்மித் குறிப்பிட்டதும்
இதைத்தான்.
ஆர்வம், குறிப்பிட்ட வேலையைச் செய்ய இயலும் திறன், அதை மட்டுமே செய்து
வாழ்க்கையை ஓட்ட முடிகிற சூழல், அங்கீகாரம் என எத்தனையோ காரணிகள் அதைத்
தீர்மானிக்கின்றன. இத்தகையை division of labour சமுதாயத்தில்
மட்டுமல்லாமல் வீடுகளில் நடைமுறைப்படுத்தினார் பண்டை மனிதன்.
வெளியே சென்று வேட்டையாடி உணவு தேடி வரும் கடினமான வேலையை ஆண்
எடுத்துக்கொண்டான். இயற்கை அவனுக்கு அளித்திருந்த வலிமையான உடல் அதை
ஊக்குவித்தது. அவன் வரும் வரைக்கும் குகைக்குள் அமர்ந்து குழந்தைகளையும்,
கரிசனம் வேண்டுவோரையும் கவனிக்கும் பக்குவமான வேலையை பெண்
எடுத்துக்கொண்டாள். அவரவர் வேலையில் அவரவர் சிறந்து விளங்கினர்.
காலங்காலமாக இப்படித்தான் நடந்து வருகிறது. பொருளீட்டும் வேலை ஆணுக்கு,
குடும்பத்தை நிர்வகிக்கும் வேலை பெண்ணுக்கு. ஒருவரை ஒருவர் சார்ந்து,
தத்தமது பலத்திற்கும் பலகீனத்திற்கும் ஏற்ப பரஸ்பரம் அனுசரித்து வாழ்ந்த
இந்த வாழ்வு – சில விதிவிலக்குகளைத் தவிர்த்து - தொய்வில்லாமல் தொடர்ந்து
வந்ததாகவே கருதப்படுகிறது. தவிர ஆண், பெண் மூளையும் அந்த மூளையில்
இருந்து உருவெடுக்கும் சிந்திக்கும் திறனும் கூட இந்தப் பின்னணியிலேயே
அமைந்தது.
பெரும்பாலான நேரங்களில் ஆண் அறிவுப்பூர்வமாகவும், பெண்
உணர்வுப்பூர்வமாகவும் பிரச்சினைகளை அணுகும் தன்மை படைத்தவர்களாக
இருக்கிறார்கள். அவ்வாறே வடிவமைக்கப்பட்டு, பழக்கப்பட்ட அவர்களது புத்தி
வேறு விதமாகச் சிந்திப்பதற்கு பெரும்பாடு படுகிறது.
முற்காலத்தைப் போல வேலைக்குச் சென்று பொருளீட்டுவது உடல் வலிமையை மட்டுமே
சார்ந்ததல்ல என்ற இன்றைய நவீனச் சூழல் இன்றுவரை பேணப்பட்ட பல கற்பிதங்களை
உடைத்துப் போடுகிறது. ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்று சொல்லப்பட்டு ஆண்
மட்டுமே பொருளீட்டியதெல்லாம் கால வாகனத்தின் rear mirror இல் பார்க்க
வேண்டிய சங்கதி போலத் தோன்றுகிறது.
ஆணுக்கு இணையாக ஊதியம் ஈட்டும் திறன் இந்தியப் பெண்களுக்கு
முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு சுதந்திரத்தையும், கூடவே எதற்கும்
அடங்காத திமிர்த்தனத்தையும் ஒரு சேர அளித்துள்ளது. பல காலமாக தம் மீது
சுமத்தப்பட்டிருந்த அடக்குமுறையில் இருந்து விடுபட்டதை அவர்கள் ஒரே
நேரத்தில் கொண்டாடிக் களித்திட விரும்புகின்றனர். ஒரு ஆண் வீட்டை விட்டு
வெளியே வந்து சம்பாதிக்க ஆரம்பித்தால் அவனுக்கு பொறுப்பு வருகிறது, பெண்
சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது அவளுக்கு ஆணவம் வருகிறது என்று என்
எழுத்தாள நண்பர் சொன்னதைக் குறிப்பிட்டால் ‘ஆணாதிக்கவாதி’ என்ற பட்டம்
இலவசமாகக் கிடைக்கும். எனினும் அதில் பொதிந்துள்ள உண்மையை
மறுப்பதற்கில்லை.
இருப்பினும் பெண்களுக்கு பொருளாதார விடுதலையின் வாயிலாகக் கிடைத்துள்ள
சமூக விடுதலையும், அங்கீகாரமும் ஓரளவுக்கு ஆண் சமுதாயத்தினால்
சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகவே வெளிப்படுவதை இன்னொரு பக்கம் ஏற்றுக்
கொண்டாக வேண்டும். சிறு எண்ணிக்கையில் என்றாலும் கூட குறிப்பிட்டுச்
சொல்லும் அளவுக்கு பல குடும்பங்கள் இன்றைக்குப் பல் இளிக்கின்றன.
இந்தத் தலைமுறையில் மண முறிவு என்பதும், மறுமணம் என்பதும் பெருநகரங்களில்
மட்டும் நடப்பதில்லை. ஒரு வகையில் இது வரவேற்கத்தக்க மாற்றம். பெரியார்
பரிந்துரை செய்த மாற்றம். ஆனால் அவ்வாறெல்லாம் நடப்பதற்கான காரணங்களைச்
சரியாகவும், சரிதானா என்றும் ஆராயவும் வேண்டும். ஆணின் தேவைகளாக
பெண்ணும், பெண்ணின் தேவையாக ஆணும் உணர்ந்து வைத்துள்ள விஷயங்கள் மிகவும்
மேலோட்டமானவை. ஆழ்ந்த புரிதல் இல்லாதவை.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 9:49 pm

இன்றைய நவீனப் பெண்ணின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் ராட்சத பலூனைப் போல
விரிந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை ஈடு கட்டுவதற்குப் பல ஆண்கள்
போராடித் தவிர்க்கிறார்கள். தேவைகளும் எதிர்பார்ப்புகளும் தவாறனவை என்று
அதற்குப் பொருளல்ல. இத்தனை தலைமுறைகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்து
அவர்களின் அபிலாஷைகள் ஒரேயடியாக கட்டவிழும் போது ஆண் சமுதாயம் அதை
எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறது.
நவீன யுக ஆணிடம் சமுதாயம் ஏராளமாக நிர்ப்பந்திக்கிறது. ”புணர்ச்சியின்
போது உன் ஆண்குறி எவ்வளவு நீளும்?” என்பதை விட, “எவ்வளவு சம்பளம்?” என்ற
கேள்வியே அவனை முகம் சுளிக்க வைக்கிறது. அவனது வெற்றி-தோல்வியை,
வாழ்வதற்கான அறுகதையை இவ்வுலகம் ஒப்பீடுகளின் அடிப்படையில்
தீர்மானிக்கிறது. Benchmark செய்வதற்கு தயாராக ஒரு அமெரிக்க மாப்பிள்ளை.
கல்யாணச் சந்தையில் விலைபோக முடியாத ஆண்களின் பெருமூச்சு பூமிப் பந்தையே
உருட்டிப் போட வல்லது.
பணம் படைத்த ஆணும், எழில் மிகுந்த பெண்ணும் ஒருவரை நோக்கி ஒருவர்
ஈர்க்கப்படுவது இயல்பு. வசதி இல்லாத ஆணாக இருந்தாலும் கூட கண்ணுக்கு
இலட்சணமான துணையே அவனது பிரதான விருப்பம். வருமானமில்லா ஆண் கல்யாணச்
சந்தையில் எவ்வாறு புறக்கணிப்படுகிறானோ அதே போல அவலட்சணமான பெண்ணும்
ஒதுக்கப்படுகிறாள். அவளது ஊதியம் இரண்டாம் பட்சம். வேலைக்குச் செல்லும்
பெண் வேலைக்குச் செல்லும் ஆணையே தேடுகிறாள். வேலைக்குச் செல்லும் ஆணின்
முதல் அளவுகோல் ‘அழகு’. எதிரும் புதிருமாக நீளும் பட்டியலில் இது ஒரு
தொடக்கப் புள்ளி மாத்திரமே. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டியல்
நீளும்.
தேடும் வேட்டையில் முன்வைக்கும் நிபந்தனையும், அளவுகோலும் தளர்ந்து
அநேகக் கல்யாணங்கள் சமரசங்களின் சமாதியில் அக்கினி வளர்த்தே
நடந்தேறுகின்றன. பல நாத்திகர்கள் ஆத்திகர்கள் ஆவதும், ஆத்திகர்கள்
நாத்திகர்கள் ஆவதும் அங்கேதான். வரதட்சணை பெருங்குற்றம் என்று
பள்ளிக்கூடப் பேச்சுப் போட்டியில் பேசிய பெண்கள் 1+1+1 (ஒரு கிலோ நகை,
ஒரு இலட்சம் பணம், ஒரு பத்து இலட்ச கார்) என்று அப்பனுக்கு டாட்டா
காட்டிச் செல்வது அங்கேதான்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 9:49 pm

ஆனால் சமரசங்கள் சாகாவரம் பெற்றவையல்ல. நிபந்தனையற்ற அன்பும்,
எதிர்பார்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்படுவதும் சாஸ்வதம் இல்லை. இவ்வுண்மை
முற்காலத்திலும் உணரப்பட்டது என்றாலும் அப்போது பெரும்பாலும்
சகித்துக்கொண்டார்கள். ஊர் என்ன பேசுமோ என்று அஞ்சினார்கள். இவனை
விட்டுச் சென்றால் கஞ்சிக்கு வழியென்னவென்று யோசித்தார்கள். இன்று
அப்படியல்ல. பெண் சுயமாகச் சம்பாதிக்கிறாள். சொந்தக் காலில் அவளால் நிற்க
முடியும். ஆண் துணையின்றி வாழ முடியும். அல்லது முடியும் என்ற
குறைந்தபட்ச நம்பிக்கையாவது அவளுக்கு உள்ளது. வேண்டினால் வேறு துணையும்
தேடிக் கொள்ளலாம். கடந்த நான்கைந்து ஆண்டுகளில் இந்திய நீதிமன்றங்களில்
விசாரணைக்கு வரும் விவாகரத்து வழக்குகளே இதற்குக் கட்டியம் கூறுகின்றன.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 9:50 pm

பிரச்சினைக்கு ஆணோ, பெண்ணோ காரணமல்ல. பெண் புதிதாகச் சம்பாதிக்க
ஆரம்பித்திருப்பதும் காரணமல்ல. அப்படிப்பட்ட சமூகச் சூழலை உள்வாங்க
முடியாமல் இருபாலரையும் குழப்பி வைத்திருக்கும் நம் பண்பாட்டுப்
பின்னணியும், மரபியல் ரீதியாக வெவ்வேறு கோணங்களில் சிந்திக்கும் அவ்விரு
பாலரின் மூளை வடிவமைப்புமே காரணமாகும்.
மேற்குலகம் இந்தப் பிரச்சினையை ஓரிரு தலைமுறைக்கு முன்பே எதிர்கொண்டது.
அதனால் உருவான பக்க விளைவுகளையும் உள்வாங்கிக் கொண்டது. நமக்குக் கொஞ்ச
காலம் பிடிக்கும்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 9:50 pm

தற்போதையை பொருளாதாரச் சுணக்கத்தில் எல்லாத் துறையினருக்குமே பாதிப்பு
என்கிறார்கள். எல்லோருக்குமே வருமானம் குறைகிறதாம். ஜோசியர்களும்,
மனவியல் மருத்துவர்கள் மட்டும் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல்
திணறுகிறார்களாம்.
மேரேஜ் கவுன்சிலிங் போர்டுகள் வருங்காலத்தில் நிறைய எழுதப்படும் என்கிறது
பட்சி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக