புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
78 Posts - 49%
heezulia
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
2 Posts - 1%
prajai
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
120 Posts - 53%
heezulia
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
2 Posts - 1%
prajai
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு :


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 14, 2008 2:07 am

சென்னை : அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து விரிவாக விவாதித்து அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் துவங்கும் முன், அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுத்தனர். "கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கலாம்' என சபாநாயகர் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர். சில நிமிடங்களில் மீண்டும் உள்ளே வந்தனர். கேள்வி நேரம் முடிந்ததும் இப்பிரச்னை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, முதல்வர் கருணாநிதி சபையில் இல்லை.

விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:


ஜெயக்குமார் - அ.தி.மு.க.,: அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மண்வெட்டி, இரும்பு பைப், உருட்டுக் கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டுள்ளனர். நான்கு மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்துவதை போலீசார், சினிமா பார்ப்பது போல் பார்த்தது கொடூரமாக உள்ளது. வேடிக்கை பார்க்கவா போலீசார் சென்றனர்? அவர்களுக்கு எதற்கு அரசு சம்பளம்? சம்பந்தப்பட்ட போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். மொத்தத்தில் இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல; காட்டாட்சி.


ஞானசேகரன் - காங்.,: சட்டக் கல்லூரி மாணவர்கள் கூலிப்படையினர் போல் தாக்குதல் நடத்தியுள்ளனர். தங்கள் கண் முன் குற்றம் நடந்தால் அதைத் தடுக்கும் அதிகாரம் போலீசுக்கு உண்டு. 10 அடி தொலைவில் நின்று போலீஸ் வேடிக்கை பார்த்துள்ளது. இதற்காகவா மக்களின் வரிப் பணத்தில் போலீசுக்கு சம்பளம் தருகிறோம்?


வேல்முருகன் - பா.ம.க.,: கல்லூரி அருகே பூக்கடை போலீஸ் நிலையம் உள்ளது. அங்கிருந்து துப்பாக்கி எடுத்து வந்து வானத்தை நோக்கிச் சுட்டிருந்தால் கூட சம்பவத்தைத் தடுத்திருக்க முடியும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்தக் கல்லூரியிலும் சேர்ந்து படிக்க முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 50 பேர் தாக்கியுள்ளனர்; எட்டு பேர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மகேந்திரன் - மார்க்சிஸ்ட்: எதிர்காலத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் அமரக் கூடியவர்கள், இப்படி ஜாதியின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 14, 2008 2:08 am

சிவபுண்ணியம் - கம்யூனிஸ்ட்: வன்முறையை ஏன் தடுக்கவில்லை என கேட்டதற்கு, ஒரு போலீஸ் அதிகாரி, "எங்களுக்கு புகார் வரவில்லை' என்கிறார். யாரிடம் இருந்து புகாரை எதிர்பார்க்கிறார்? வன்முறை நடத்துபவர்களிடம் இருந்தா? தாக்குதலுக்கு ஆளானவர் எழுந்து வந்து புகார் கொடுத்த பின் நடவடிக்கை எடுப்பார்களா? இப்பிரச்னையில் போலீசாரின் நடவடிக்கை மிக மோசமான நடவடிக்கை. "போலீசின் ஈரல் கெட்டுவிட்டது' என்றார் முதல்வர் கருணாநிதி; ஈரல் மட்டுமல்ல இதயமே கெட்டுவிட்டது.


ராமகிருஷ்ணன் - ம.தி.மு.க.,: சட்டக் கல்லூரி வன்முறையைப் பார்த்து தமிழகமே அழுதது. இத்தகைய கொடூர சம்பவம் இனி மேலும் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


உறுப்பினர்களுக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: இச்சம்பவத்தை முதல்வர் கேள்விப் பட்டதும் எங்களை அழைத்து விசாரித் தார். அமைச்சரை அனுப்பி, பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இரவு முழுக்க டாக்டர்கள் உடனிருக்க உத்தரவிட்டார். இரவு விழித்திருந்ததால் அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் இங்கு வரவில்லை. நான் பதிலளிக்கிறேன். நடந்த நிகழ்ச்சிக்கு யாரும் வக்காலத்து வாங்க முடியாது; கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏழு மாணவர்கள் மீது, பிரிவு 307 உட்பட பல பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான்கு எஸ்.ஐ.,கள் ஒரு இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கெல்லீஸ் மாணவர் விடுதி மூடப்பட் டுள்ளது. சட்டக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க, அரசு மட்டுமின்றி, பெற்றோர், மாணவர்கள் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.


கல்லூரி வளாகத்தில் நேற்றும் பரபரப்பு: மோதலில் கலந்து கொள்ளாத, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்றும் கல்லூரி முன்பாகத் திரண்டனர். "மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசாரிடம் தெரிவித்தனர். நேற்றும் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. வடசென்னை இணை கமிஷனர் அபய்குமார் சிங், மத்திய சென்னை இணை கமிஷனர் பாலசுப்ரமணியம் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆலோசனை முடிந்ததும் மாணவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, "சட்டக் கல்லூரியில் பாதுகாப்பான சூழல் இல்லை. மாணவர்கள் படிக்கும் கல்லூரி, தற்போது ரவுடிகளின் கூடமாக மாறிவிட்டது. கல்லூரி அமைதியாக நடைபெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவழக்கு உள்ளவர்களை சட்டம் படிக்க அனுமதிக்கக் கூடாது. "அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட காரணமாக உள்ள கல்லூரி விடுதியை நிரந்தரமாக மூடவேண்டும். மாணவர்கள் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்த கல்லூரி முதல்வர், தடுக்காத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். நேற்று நடக்கவிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதாக கல்லூரிகளில் அறிவிப்பு ஒட்டப்பட்டது. அங்கு வந்த இணை கமிஷனர் பாலசுப்ரமணியம், அபய்குமார் சிங் ஆகியோரை மாணவர்கள் முற்றுகையிட்டனர். "நேற்று நடந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதியையும் மூட வேண்டும்' என சரமாரியாக கோரிக்கை எழுப்பினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக