புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
39 Posts - 49%
heezulia
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
3 Posts - 4%
jairam
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
1 Post - 1%
சிவா
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
1 Post - 1%
Manimegala
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
14 Posts - 4%
prajai
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
9 Posts - 3%
jairam
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
4 Posts - 1%
Rutu
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
2 Posts - 1%
Barushree
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_m10கோதை நாச்சியார் தாலாட்டு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோதை நாச்சியார் தாலாட்டு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:03 pm

கோதை நாச்சியார் தாலாட்டு : ஒரு முன்னுரை

கொண்டல் வண்ணனைக் குழவியாய்க் கண்டு குதூகலித்துப் பாடிய விட்டு சித்தரின் மகள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள். குழல் இனிது, யாழ் இனிது, மழழைச் சொல் அமுதினிது என்று இறைவனைப் பிள்ளையாய்க் கண்டு ஆனந்தித்துப் பாடிய பெரியாழ்வாழ்வருக்கு - உண்மையான தூண்டுதல் (inspiration) ஆண்டாள் என்ற இளம் சிட்டிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும். "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! ஆடிவரும் தேரே!" என்று கண்ணனைப் பாடிய பாரதியின் அழியாக் கவிதைக்கு அவர் மகள் காரணியாக இருந்தது போல்! இப்படியானதொரு சிந்தனை சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு வைணவ அன்பருக்கு ஏற்பட்டு அவர், விட்டு சித்தரின் வழியில், அவரது வரிகளை உரிமையுடன் கையாண்டு அவரது மகளான கோதை நாச்சியாருக்கு ஒரு தாலாட்டுப் பாடியுள்ளார். ஆழ்வார்திருநகரி என்னும் ஊர் தமிழ்த் தாத்தா உ.வே.சா, மகாவித்வான் இரா.இராகவையங்கார் போன்றோருக்குப் பண்டைத் தமிழ்க் கருவூலங்களைத் தந்த புண்ணிய பூமியாகும். பழந்தமிழ்நூல் வெளியீடுகளுள் பத்துப்பாட்டு, பதிற்றுப் பத்து, பரிபாடல், புறநானூறு முதலிய நூற்பதிப்புகளுக்கு ஆழ்வார்திருநகரி ஏட்டுப் பிரதிகள் மிகவும் உபயோகமாயிருந்தன என்பது உ.வே.சாவின் கூற்று. அத்தகைய ஆழ்வார்திருநகரியில் கிடைத்திருக்கும் மற்றுமொரு தமிழ்க் கருவூலம்தான், "கோதை நாச்சியார் தாலாட்டு". ஏடுகளில் கண்டபடி 1928-ல் ஆழ்வர்திருநகரி திருஞான முத்திரைக் கோவை பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

ஆக்கியோன் பெயர் ஏட்டில் அழிந்து விட்டதாலோ, இல்லை , "நாடோ டிப் பாட்டுக்கு தாய் தந்தை யாரோ?" எனும் படியாகவோ இந்நூலை ஆக்கியோன் பெயர் விட்டுப் போயிருக்கிறது. பழம் ஓலைச் சுவடிகளைச் சரியாகப் பராமரிக்கவில்லையெனில் அவை பூச்சிகளின் வாய்க்கு இரையாகி அழிந்துவிடுகின்றன. இந்நூலில் பல வரிகள் அச்சிடப் படாததற்குக் காரணம் அவை வாசிக்கத் தக்கதாய் இல்லை என்று ஊகிக்கலாம். இல்லை, வாய் மொழியாகக் கேட்ட பாடலைப் பதிவு செய்தவருக்கு ஞாபகத்தில் வராத வரிகளை எழுதாமல் விட்டு விட்டார் என்றும் கருதலாம். 1928 புத்தகம் இது பற்றி ஒரு சேதியும் தராமல் நம்மை இப்படியெல்லாம் ஊகிக்கவிடுகிறது.

தாலாட்டு ஒரு மக்கள் கலை. அடுப்படிப் பெண்களின் கவித்துவத் தூறல். தவழும் குழந்தைக்கு தூளிக் கயிற்றில் அன்பைப் பாய்ச்சும் மந்திரப் பாடல்கள். தூளியில் உறங்கும் எளிமையின் உருவைத் திருமகளாகக் காணும் தாயின் பரிவைப் பதிவு செய்யும் பாடல்கள் தாலாட்டு. திருமகளே உரு எடுத்து விட்டு சித்தருக்கு மகளாகப் பிறந்த பின், அவளுக்குத் தாலாட்டுப் பாடாமல் வேறு யாருக்குப் பாடுவது? வைணவம் என்பதின் மறு பெயர் அன்பு, பரிவு, காதல் என்பவை.

முதல் மூவருக்கிடையில் இடித்துப் பழகும் தோழனாக நாராணன் இடையில் புகுந்தான். வாள் கொண்டு போர் செய்யும் வேல் மாந்தர் கள்ளத் தொழில் செய்த போது, மறைமகன் திருடனாக வந்து வழி மறைத்தான், பறைமகன் தானொருவன் பரம்பொருளைத் தொழத் தடை சொன்னபோது மறை சொல்லும் நூலார் தலைமேல் தூக்க வைத்தான் நம் பெருமாளான, "நீதி வானவன்!", கள்ளமற்ற விட்டு சித்தர் உள்ளம் கவர்ந்து வெண்ணெய் உண்ட வாயனாக வளைய வந்தான் வீட்டு முற்றத்தில் மணிவண்ணன், ஆனால், அவர் மகள் கோதைக்கோ, "மானிடற்கு மணமென்ற பேச்சுப் படின் மரிதிடுவேன்" எனப் பேச வைத்து மணவாளனாக வந்து உய்யக் கொண்டான். இப்படி வீட்டுக் கொல்லையில் வளைய வரும் கன்று போல், கை கொண்டு நெருடும் அன்பர்க்கு கழுத்தை தரும் பசும் கன்று போல் அன்று முதல் இன்றுவரை வளைய, வளைய வருகிறான், "பண்டமெல்லாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப், பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து, நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்" வளைய, வளைய வருகிறான் மாதவன். இத்தனைச் சுகம் தரும் வைணவத்தின் மறுபெயர் அன்பு, காதல், பரிவு என்றால் மிகையோ?

எனவே பரிவுடன் வரும் தாலாட்டில் வைணவத்தின் மெல்லிசை குழல் போல் ஒலிப்பது தவறோ? தவறில்லை என்று சொல்லித் தாலாட்டுப் பாடினர் முன்னைய மாந்தர். கண்ணனுக்குத் தலாட்டு பலபாடி வைத்து விட்டார் புதுவைப் பட்டர் என்று சொல்லி, கோதைக்குத் தாலாட்டுப் பாடினர் கொங்கைப் பெண்டிர்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:07 pm


கோதை நாச்சியார் தாலாட்டு


( ஆசிரியர் யார் என தெரியவில்லை, S.வையாபுரிப் பிள்ளை, B.A., B.L., உபசரித்தது)

காப்பு

சீரார்ந்த கோதையின்மேற் சிறப்பாகத் தாலாட்டப்
பாரோர் புகழநிதம் பாடவே வேணுமென்று
"காரூர்ந்த தென்புதுவைக் கண்ணன் திருக்கோயில்
ஏரார்ந்த சேனையர்கோன்" இணையடியுங் காப்பாமே.

நூல்

தென்புதுவை விஷ்ணுசித்தன் திருவடியை நான்தொழுது
இன்பமுடன் தாலாட்டு இசையுடனே யான்கூறத் 1

தெங்கமுகு மாலானைச் சிறந்தோங்கும் "ஸ்ரீ ரங்கம்
நம் பெருமாள்" பாதம் நமக்கே துணையாமே. 2

சீரார்ந்த கோயில்களும் சிறப்பாகக் கோபுரமும்
காரார்ந்த மேடைகளும் கஞ்சமலர் வாவிகளும் 3

மின்னார் மணிமகுடம் விளங்க அலங்க்ருதமாய்ப்
பொன்னாலே தான்செய்த பொற்கோயில் தன்னழகும் 4

கோபுரத்து உன்னிதமும் கொடுங்கை நவமணியும்
தார்புரத் தரசிலையும் சந்தனத் திருத்தேரும் 5

ஆரார் தலத்தழகும் அம்மறையோர் மால்திரமும்
சீரார் தனத்தழகும் சிறப்பான உத்ஸவமும் 6

வேத மறையோரும் மேன்மைத் தலத்தோரும்
கீத முறையாலே கீர்த்தனங்கள் தான்முழங்க 7

பாவலர்கள் பாமாலை பாடி மணிவண்ணன்
ஆவலாய்ப் போற்றி அனுதினமும் தான்துதிக்கக் 8

கச்சுமுலை மாதர் கவிகள் பலபாட
அச்சுதனர் சங்கம் அழகால் தொனிவிளங்க 9

தித்தியுடன் வீணை சகமுழுதுந் தான்கேட்க
மத்தளமுங் கைமணியும் அந்தத் தவிலுடனே 10

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:07 pm

உத்தமர் வீதி உலாவியே தான் விளங்கப்
...................................................................... 11

பேரிகையும் எக்காளம் பின்பு செகண்டிமுதல்
பூரிகை நாதம் பூலோகம் தான்முழங்கத் 12

தும்புருவும் நாரதரும் துய்யகுழ லெடுத்துச்
செம்பவள வாயால் திருக்கோயில் தான்பாட 13

அண்டர்கள் புரந்திரனும் அழகு மலரெடுத்துத்
தொண்டர்களும் எண்டிசையுந் தொழுது பணிந்தேத்த 14

வண்டுகளும் பாட மயிலினங்கள் தான்பாடத்
தொண்டர்களும் பாடத் தொழுது பணிந்தேத்த 15

பண்பகரும் பாவலர்கள் பல்லாண் டிசைபாட
செண்பகப்பூ வாசனைகள் திருக்கோயில் தான்வீச 16

இந்திரனும் இமையோரும் இலங்கும் மலர்தூவச்
சந்திரனும் சூரியனுஞ் சாமரங்கள் தான்போடக் 17

குன்றுமணி மாடங்கள் கோபுரங்கள் தான்துலங்கச்
சென்றுநெடு வீதியிலே திருவாய் மொழி விளங்க 18

அன்னம் நடைபயில் அரிவையர் மடலெழுதச்
சென்னல் குலைசொரியச் செங்குவளை தான்மலரக் 19

கரும்பு கலகலெனக் கஞ்ச மலர்விரிக்கக்
கரும்பு குழலூதத் தோகை மயில்விரிக்க 20

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:07 pm

மாங்கனிகள் தூங்க மந்தி குதிகொள்ளத்
தேன்கூடு விம்மிச் செழித்து வழிந்தோடச் 21

சென்னல் விளையச் செகமுழுதும் தான்செழிக்கக்
கன்னல் விளையக் கமுகமரம் தான்பழுக்க 22

வெம்புலிகள் வாழும் மேரு சிகரத்தில்
அம்புலிகைக் கவளமென்று தும்பி வழிபறிக்கும் 23

மும்மாரி பெய்து முழுச் சம்பாத் தான்விளையக்
கம்மாய்கள் தான்பெருகிக் கவிந்து வழிந்தோட 24

வாழையிடை பழுத்து வருக்கைப் பிலாபழுத்துத்
தாழையும் பூத்துத் தலையாலே தான்சொரியப் 25

புன்னையும் பூக்கப் புறத்தே கிளிகூவ
அன்னமும் பேசும் அழகான தென்புதுவை 26

தலையருவி பாயும் தடஞ்சூழ்ந்த முக்குளமும்
மலையருவி பாயும் வயல் சூழ்ந்த தென்புதுவைப் 27

பவளமுடன் வச்சிரம் பச்சை மரகதமும்
தவளமொளி முத்துத் தான்கொழிக்கும் தென்புதுவைக் 28

காவணங்கள் மேவிக் கதிரோன் தனைமறைக்கும்
பூவணங்கள் சூழ்ந்து புதுவை மணங்கமழும் 29

தென்னை மடல்விரியச் செங்கரும்பு முத்தீனப்
புன்னை முகிள்விரியப் புதுவை வனந்தனிலே 30

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:08 pm

திரு அவதாரம்

சீராரு மெங்கள்விஷ்ணு சித்தர்நந் தாவனத்தில்
ஏராருந் துளசிமுல்லை யேகமாய்த் தானும்வச்சு 31

வச்ச பயிர்களுக்கு வளரவே நீர்பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள்செய் துகந்திருக்கும் வேளையிலே; 32

பூமிவிண்டு கேட்கப் புகழ்பெருகு விஷ்ணுசித்தன்
பூமிவிண்ட தலம்பார்த்துப் போனார்காண் அவ்வேளை 33

ஆடித் திருப்பூரத்தில் அழகான துளசியின்கீழ்
நாடி யுதித்ததிரு நாயகியைச் சொன்னாரார்! 34

அப்போது விஷ்ணுசித்தன் அலர்மகளைத் தானெடுத்துச்
செப்பமுடன் "கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்"!! 35

"அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கும்,
மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி" என்றார்!!! 36

அப்போது கேட்டு அருளப் பரவசமாய்ச்
செப்பமுடன் பெண்ணேந்தித் திருக்கோயில் தான்புகுந்து; 37

பூந்துளவ மணிவண்ணன் பொன்னடிக்கீழ்ப் பெண்ணைவிட
ஊர்ந்து விளையாடி யுலாவியே தான்திரியப் 38

பெண்கொணர்ந்த விஷ்ணுசித்தன் பெருமாளைத் தானோக்கிப்
'பெண்வந்த காரணமென் பெருமாளே சொல்லு" மென்றார் 39

அப்போது மணிவண்ணன் 'அழகான பெண்ணுனக்குச்
செப்பமுடன் வந்த திருக்கோதை நாயகியார் 40

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:08 pm

என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை
உன்றன் மனைக்கு உகந்துதான் செல்லும்' என்றார். 41

சொன்னமொழி தப்பாமல் சுந்தரியைத் தானெடுத்துக்
கன்னல் மொழி விரசைசு கையிலேதான் கொடுக்க 42

அப்போது விரசையரும் அமுதுமுலை தான்கொடுக்கச்
செப்பமுடன் தொட்டிலிலே சீராய் வளரவிட்டு 43

மாணிக்கங் கட்டிவயிர மிடைக்கட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் 44

பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையரே தலேலோ, 45

அன்னமே தேனே அழகே அரிவையரே
சொன்னமே மானே தோகையரே தாலேலோ. 46

பொன்னே புனமயிலே பூங்குயிலே மாந்துளிரே
மின்னே விளக்கொளியே வேதமே தாலேலோ, 47

பிள்ளைகளும் இல்லாத பெரியாழ்வார், தனக்குப்
பிள்ளைவிடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ, 48

மலடி விரசையென்று வையகத்தோர் சொல்லாமல்
மலடு தனைத் தீர்த்த மங்கையரே தாலேலோ, 49

பூவனங்கள் சூழும் புதுவா புரிதனிலே
காவனத்தில் வந்துதித்த கன்னியரைச் சொன்னாரார். 50

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:08 pm

கண்ணேயென் கண்மணியே கற்பகமே தெள்ளமுதே
பெண்ணே திருமகளே பேதையரே தாலேலோ, 51

மானே குயிலினமே வண்டினமே தாறாவே
தேனே மதனாபிஷேகமே தெள்ளமுதே 52

வானோர் பணியும் மரகதமே மாமகளே
ஏனோர் கலிநீங்க இங்குவந்த தெள்ளமுதே, 53

பூமலர்கள் சூழும் பூங்கா வனத்துதித்த
மாமகளே சோதி மரகதமே தாலேலோ, 54

வண்டினங்கள் பாடும் மதுவொழுகும் பூங்காவில்
பண்டுபெரி யாழ்வார் பரிந்தெடுத்த தெள்ளமுதே, 55

சென்னல்களை முத்தீன்று செழிக்கும் புதுவையிலே
அன்னமே மானே ஆழ்வார் திருமகளே 56

"வேதங்க ளோதி வென்றுவந்த ஆழ்வார்க்குச்
சீதைபோல் வந்துதித்த திருமகளைச் சொன்னாரார்"! 57

முத்தே பவளமே மோகனமே பூங்கிளியே
வித்தே விளக்கொளியே வேதமே தாலேலோ, 58

"பாமாலை பாடிப் பரமனுக்கு என்னாளும்
பூமாலை சூடிப் புகழ்தளித்த தெள்ளமுதே"!! 59

அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ, 60

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:08 pm

"எந்தை தந்தையென்று இயம்பும்பெரி யாழ்வார்க்கு
மைந்தர் விடாய்தீர்த்த மாதேநீ" தாலேலோ, 61

"பொய்கைமுத லாழ்வார்க்கும் பூமகளாய் வந்துதித்த
மைவிழிசோதி மரகதமோ" தாலேலோ! 62

"உலகளந்த மாயன் உகந்துமணம் பண்ணத்
தேவாதி தேவர் தெளிந்தெடுத்த தெள்ளமுதோ"! 63

"சொல்லை நிலையிட்ட சுந்தரராம் ஆழ்வார்க்குச்
செல்லப் பெண்ணாய்" வந்த திருமகளைச் சொன்னாரார்! 64

நாராணனை விஷ்ணுவென்று நண்ணுமெங்க ளாழ்வார்க்குக்
காரணமாய் வந்துதித்த கற்பகத்தைச் சொன்னாரார்! 65

உள்ள முருகி ஊசலிடும் பட்டருக்குப்
பிள்ளை விடாய்தீர்த்த பெண்ணமுதே தாலேலோ! 66

பாகவ தார்த்தம் பாடுமெங்க ளாழ்வார்க்குத்
தாகவிடாய் தீர்த்த தங்கமே தாலேலோ! 67

தென்புதுவை வாழும் ஸ்ரீவிஷ்ணு தீர்த்தனுக்கு
அன்புடனே வந்துதித்த அன்னமே தாலேலோ! 68

சாஸ்திரங்கள் ஓதும் சத்புருஷன் ஆழ்வார்க்குச்
சோஸ்திரஞ் செய்து துலங்கவந்த கண்மணியோ! 69

வாழைகளும் சூழ்புதுவை வாழுமெங்க ளாழ்வார்க்கு
ஏழையாய் வந்துதித்த ஏந்திழையே தாலேலோ! 70

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:08 pm

கன்னல்களுஞ் சூழ்புதுவை கார்க்குமெங்க ளாழ்வார்க்குப்
பன்னுதமிழ் என்னாளும் பாடநல்ல நாயகமோ! 71

பல்லாண்டு பாடும் பட்டர்பிரா னாழ்வார்க்கு
நல்லாண்டில் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார்! 72

எந்தாகம் தீத்து ஏழேழு தலைமுறைக்கும்
வந்தாளும் செல்வ மங்கையரே தாலேலோ! 73

என்றுநிதம் கோதையரை எடுத்து வளர்க்கையிலே;
'அன்றொருநாள் விஷ்ணுசித்தன் முதுமலர் தொடுத்துவைக்கத், 74

தொடுத்துவைத்த மலரதனைச் சூடி நிழல்பார்த்து
விடுத்துவைத்துக் கோதையரும் விளையாட்டி லேதிரிய 75

அப்போது விஷ்ணுசித்தன் அனுஷ்டான முதலசெய்
தெப்போதுங் போல்கோயிற் கேகவே வேணுமென்று 76

தொடுத்த மாலைதனைச் சுவாமிக்கே சாத்தவென்று
எடுத்தேகு மாழ்வாரும் என்கையிலே கேசங்கண்டு 77

பெண்ணரசி கோதை குழல்போலே யிருக்குதென்று
பெண்ணான கோதைக்குக் காட்டியே தானுருக்கிப் 78

பின்பு வனம்புகுந்து பிரியமாய்ப் பூக்கொய்து
அன்புடனே மாயனுக் கலங்கார மாய்ச்சாத்த". 79

அப்போது மணிவண்ணன் ஆழ்வாரைத் தான்பார்த்து
"இப்போது மணங்காணேன் ஏதுகா ணாழ்வாரே" 80

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 10:09 pm

என்று சொல்ல, ஆழ்வாரும் இருகையும் தான்கூப்பித்;
"துன்றிவளக் கோதையரும் சூடியே தானும்வைத்தாள். 81

அம்மாலை தள்ளி அழகான பூக்கொணர்ந்து
நன்மாலை கொண்டு நானுனக்குச் சாத்தவந்தேன்" 82

என்றுசொல்ல, மணிவண்ணன் இன்பமாய்த் தான்கேட்டு,
"நன்றாக ஆழ்வாரே நானுனக்குச் சொல்லுகிறேன்:- 83

ஒன்மகளும் பூச்சூட்டி ஒருக்கால் நிழல்பார்த்து
பின்பு களைந்து பெட்டியிலே பூ வைப்பாள். 84

அம்மாலை தன்னை ஆழ்வாரே நீ ரேத்துவந்து
இம்மாலை சாத்தி யிருந்தீ ரிதுவரைக்கும். 85

இன்றுமுதல் பூலோக மெல்லாந் தானறிய
அன்றுமலர் கொய்து அழகாகத் தான்தொடுத்துக் 86

கோதை குழல்சூடிக் கொணருவீர் நமக்குநிதம்
கீதமே ளத்தோடும் கீர்த்தனங்கள் தன்னோடும் 87

இன்றுமுதல் சூடிக்கொடுத்தா ளிவள்பேரும்
நன்றாகத்தான் வாழ்த்தும் நன்மையே தான்பெறுவீர்! 88

என்றுரைக்க மணிவண்ணன் யேகினர்காண் ஆழ்வாரும்
சென்றுவந்த மாளிகையில் சிறப்பா யிருந்துநிதம் 89

நீராட்டி மயிர்முடித்து நெடுவேற்கண் மையெழுதி
சீராட்டிக் கோதையரைச் சிறப்பாய் வளர்க்கையிலே 90

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக