புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
20 Posts - 65%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
62 Posts - 63%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 4 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 4 of 81 Previous  1, 2, 3, 4, 5 ... 42 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 4 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 5:49 pm

ஏவுகணை தாக்கி அமெரிக்க கப்பல் சேதம்


லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க கடற்படை வீரர்கள், தெற்கு கலிபோர்னியா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏவுகணைகள் மூலமான வான்வழித் தாக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தவறாக ஏவப்பட்ட ஒரு ஏவுகணை, வழிகாட்டி கப்பலை தாக்கியது. இதில், இருவர் காயம் அடைந்தனர். கப்பலின் ரடார் சரியாக செயல்படுகிறதா என்பதை சோதனை செய்ய, இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Nov 18, 2013 7:19 pm

சிவா wrote: ஏவுகணை தாக்கி அமெரிக்க கப்பல் சேதம்


லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க கடற்படை வீரர்கள், தெற்கு கலிபோர்னியா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏவுகணைகள் மூலமான வான்வழித் தாக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தவறாக ஏவப்பட்ட ஒரு ஏவுகணை, வழிகாட்டி கப்பலை தாக்கியது. இதில், இருவர் காயம் அடைந்தனர். கப்பலின் ரடார் சரியாக செயல்படுகிறதா என்பதை சோதனை செய்ய, இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது


மோதியது ஒரு PTA Pilotless Target Aircraft ஆளிலா விமானம் என்று கூட சொல்லலாம் ..விபத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது ..தாக்குதலுக்கு உள்ளான கப்பல் USS Chancellorsville எந்த வித ஆபத்தும் இல்லை

பயிற்சிக்காக PTA வில் வெடிமருந்துகள் இல்லாததால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை

தாக்கிய PTA

உலகச் செய்திகள்!  - Page 4 1280px-BQM-74E_launch



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 11:54 am

மகாதீர் மருத்துவமனையில் அனுமதி!

உலகச் செய்திகள்!  - Page 4 Tun-Dr.-Mahathir-Mohamad1-300x219

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று தலைநகர் தேசிய இருதய கழகத்தில் (National Heart Institute) பொதுப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மகாதீரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்பில் ஏற்பட்டுள்ள நோய் தோற்று காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மருத்துவக் குழுவினர் அவரை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அவரது உடலில் ஏற்படும் முன்னேற்றம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களுக்கு, மகாதீர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும், மருத்துவக் குழுவினர் தற்போது அவருக்கு உடற்பயிற்சிகள் உட்பட பயிற்சி அளித்து கண்காணித்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மகாதீரின் குடும்பத்தினரைத் தவிர மற்ற பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 12:22 pm

மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கைக்கு சீனா அறிவுரை

மனித உரிமைகளை பேணவும், பாதுகாக்கவும் இலங்கை முயற்சிகள் எடுக்க வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு குறித்து செய்தியாளர் ஒருவர், சீன வெளியுறவுத் துறை செய்தி டொடர்பாளர் கின் காங்கிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், "ஒரு நாட்டின் சமூக, பொருளாதார பின்னணியைப் பொருத்து, அந்நாட்டின் மனித உரிமைகளைப் பேணுவதில் நாடுகளுக்கு இடையே வித்தியாசம் ஏற்படலாம். ஆனால், தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு மனித உரிமைகளை பாதுகாக்க அந்தந்த நாடுகள் முயற்சிப்பது அவசியம்" என்றார்.

மேலும், இலங்கைக்கு, மற்ற நாடுகள் ஆக்கபபூர்வமான உதவிகளைச் செய்ய வேண்டும். இலங்கை,மனித உரிமைகளை பேணவும், பாதுகாக்கவும் இலங்கை முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார்.

சீனாவைப் பொருத்த வரை இதுவரை இலங்கைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்தது. முதல் முறையாக சீனா, மனித உரிமைகள் விவகாரம் குறித்து இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது கூட, இலங்கை உள்நாட்டு விவகாரத்தை அந்நாட்டு மக்களே சரி செய்து கொள்வார்கள் என்று கூறியிருந்தது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 19, 2013 12:45 pm

சிவா wrote:மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கைக்கு சீனா அறிவுரை

.
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Nov 19, 2013 7:26 pm

லெபனானில் உள்ள இரானிய தூதரகத்தில் மனித வெடி குண்டு மற்றும் கார் குண்டு வெடித்து 23 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 4 BZbBS-nCIAAPQOq

உலகச் செய்திகள்!  - Page 4 67qmB3f



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 3:20 am

கிழக்கு இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு


கிழக்கு இந்தோனேசியாவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியில் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.  நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 3:21 am

 இத்தாலியில் புயல்–மழைக்கு 14 பேர் சாவு பாலங்களை வெள்ளம் அடித்து சென்றது

இத்தாலி நாட்டில் உள்ள சர்டினியா தீவை புயல் தாக்கியது. இதனால் பலத்த மழை பெய்து கடுமையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் அங்குள்ள ஒல்பியா பகுதியிலுள்ள நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் பல இடங்களில் பாலங்கள் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து சாலைகளில் நின்ற கார்களையும் அடித்து சென்றது.

இதனால் தீவில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த புயல்–மழைக்கு இதுவரை 14 பேர் பலியாகி விட்டனர். ஒல்பியா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வீட்டிற்குள் பிணமாக கிடந்தனர். மற்றொரு இடத்தில் கார் வெள்ளத்தில் சிக்கி அதில் பயணம் செய்த தாயும், குழந்தையும் இறந்தார்கள். பாலம் இடிந்து விழுந்ததில் போலீஸ் அதிகாரி இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்ததுடன் 3 போலீசாரும் காயம் அடைந்தனர். பாலங்களை தண்ணீர் அடித்து சென்றதாலும், சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதாலும் நிவாரணப்பணிகளில் ஈடுபட முடியாமல் அதிகாரிகள் தவிக்கின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 3:21 am

 பாகிஸ்தானில் இந்திய சினிமாப்படங்களை வெளியிட திடீர் கட்டுப்பாடு லாகூர் ஐகோர்ட்டு உத்தரவு

இந்தியாவில் இந்தி சினிமாப்படங்கள் வெளியாகும் அதே நேரத்தில் பாகிஸ்தானிலும் வெளியாகி வந்தன. இஸ்லாமாபாத், லாகூரில் இந்திய சினிமாப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் சினிமா தயாரிப்பாளரும், இந்திய எதிர்ப்பு சிந்தனை உள்ளவருமான முப்ஷீர் லுக்மான் என்பவர் லாகூர் ஐகோர்ட்டில் இந்திய சினிமாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘இந்தியாவில் தயாரிக்கப்படும் சினிமாப்படங்கள் இந்தியர்கள் மூலம் பாகிஸ்தானில் திரையிட சட்டப்படி அனுமதி கிடையாது. எனவே போலி ஆவணங்கள் மூலம் இந்திய சினிமாப்படங்கள் திரையிடுகிறார்கள். அதை தடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதை நீதிபதி காலித் மகமூத் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, ‘போலி சான்றிதழ் மற்றும் பாகிஸ்தான் அல்லது வெளிநாட்டினர் சார்பில் இல்லாத இந்திய படங்களை திரையிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதிக்க கூடாது’ என உத்தரவிட்டார். அத்துடன் பாகிஸ்தான் தணிக்கைத்துறை (சென்சார் போர்டு) மற்றும் வருவாய் வாரியம் இதுபற்றி வரும் 25–ந் தேதி பதில் அளிக்க வேண்டும் என்றும் அறிவித்தார்.

இந்திய மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை கூடுதல் நேரம் ஒளிபரப்பியதாக சமீபத்தில் 10 தனியார் டி.வி.நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதித்து பாகிஸ்தான் தகவல் ஒழுங்குமுறை அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். தற்போது இந்திய சினிமாப்படங்களுக்கு கோர்ட்டு மூலம் தடை ஏற்படும் அச்சம் உருவாகியுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 3:26 am


இலங்கைக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது: ராஜபட்ச

போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனின் கருத்தை இலங்கை அதிபர் ராஜபட்ச மீண்டும் நிராகரித்தார். இலங்கைக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு, ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இதனையொட்டி கொழும்பில் செய்தியாளர்களுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச பேட்டியளித்தார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம், போர்க் குற்றங்கள் குறித்து மார்ச் மாதத்திற்குள் விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட வேண்டும்; இல்லையெனில் சர்வதேச விசாரணையை பிரிட்டன் வலியுறுத்தும் என்றும் அந்த நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளது குறித்து கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு ராஜபட்ச பதில் அளிக்கையில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனின் இந்த கோரிக்கையை ஒருபோதும் ஏற்கமுடியாது. இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவிகரமாக இருந்தால் வரவேற்போம். ஆனால், எங்களுக்கு யாரும் கட்டளையிடமுடியாது என்று உறுதிபட தெரிவித்தார்.

பிளவுபடுத்த வேண்டாம்: அவர் மேலும் கூறியதாவது; "எங்களது கருத்துகளுக்கு மதிப்பு கொடுங்கள். எங்கள் செயலுக்கு உறுதுணையாக இருங்கள். ஆனால் சமூகத்துக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். (டேவிட் கேமரூனை அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.)

என்மீது சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறித்து நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கேட்கிறீர்கள். என்னுடைய மக்களுக்கு நானே பொறுப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். போர்க் குற்றங்கள் தொடர்பாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற குழுவை அமைத்திருக்கிறோம். அந்தக் குழுவில், அனைத்து கட்சி உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். அந்த விசாரணைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

கால அவகாசம்: மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இலங்கைக்கு கால அவகாசம் வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள எங்களுக்கு, கால அளவை நிர்ணயிக்க கூடாது. எங்கள் நாட்டிற்கு என்று சட்ட அமைப்பு மற்றும் அரசியலமைப்பு உள்ளது.

ஏற்கெனவே மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிவடைய காலமாகும். மேலும், வடக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி, தெற்குப் பகுதி மக்களின் மனநிலையையும் நாங்கள் மாற்ற வேண்டியிருக்கிறது.

அந்த பகுதியில் 30 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இதில் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் கவனிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பாகும். ஆனால் இதனை ஒரு வாரம் அல்லது மூன்று அல்லது நான்கு வாரங்களில் செய்ய வேண்டும் என்று என்னை நீங்கள் நிர்பந்திக்கக்கூடாது.

காமன்வெல்த்தை மதிக்கிறேன்: காமன்வெல்த் அமைப்பு மீது நாங்கள் மரியாதை வைத்திருக்கிறோம். மனித உரிமை, பத்திரிகை சுதந்திரம் மீதும் மரியாதை வைத்திருக்கிறோம். அதன்காரணமாகத்தான், வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தினோம்.

எங்கள் நாட்டிற்கு என்று நாடாளுமன்றம் உள்ளது. அதன்மூலம் அமைக்கப்பட்ட குழுவிடம், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை அளிக்கும்படி மக்களை கேட்டு இருக்கிறோம். என்னால் தனியாக இதனை செய்ய முடியாது' என்றும் தெரிவித்தார் ராஜபட்ச.

பத்திரிகையாளர் குற்றச்சாட்டு: கொழும்புவுக்கு காமன்வெல்த் மாநாடு தொடர்பாக செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்கள், கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையன்று ராஜபட்ச பேட்டி அளித்தபோது, போர்க் குற்றம் குறித்து மட்டும் கேள்விகளை எழுப்பினர். இதனால், ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அதுகுறித்து கேள்விகளை கேட்காமல், காமன்வெல்த் மாநாடு குறித்து மட்டும் கேள்விகளை கேட்கும்படி காமன்வெல்த் அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அப்போது இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர் ஓருவர், இலங்கைக்கு எதிராக காமன்வெல்த் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். காமன்வெல்த் மாநாட்டில் கவனம் செலுத்தாமல், பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன், இலங்கையின் வடபகுதிக்கு சென்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த காமன்வெல்த் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா, காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த தலைவர்களுக்கு இலங்கையின் எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனாலேயே கேமரூன் இலங்கையின் வடபகுதிக்கு சென்றதாகவும் விளக்கம் அளித்தார்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 81 Previous  1, 2, 3, 4, 5 ... 42 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக