புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
306 Posts - 42%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
6 Posts - 1%
prajai
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
5 Posts - 1%
manikavi
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 63 of 81 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 72 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 63 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 12:20 am

சிவா wrote:இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட விமானம் திடீர் மாயம்

இந்தோனேஷியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா அருகே தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளது. இதனால் விமானத்தின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் இது தொடர்பாக விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். விமானத்தின் நிலை என்ன ஆனது என்று குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி சென்று விட்டார்களா? அல்லது விமானம் மாயமாகி விட்டதா? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

ஐயோ..........இதுபோல நடப்பது இது எத்தனையாவது முறை? ...........எங்கு தான் போகின்றன ???????????????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 12:21 am

சிவா wrote:கள்ள ஓட்டு போட்டால் தலையில் சுடப்படும் – இலங்கை தேர்தல் ஆணையம் அதிரடி!

“இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் யாரேனும் கள்ள ஓட்டு போட முயன்றால் தலையில் சுடுங்கள்” என இலங்கை தேர்தல் ஆணையம் காவல் துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை சாதகமாகப் பயன்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விட சமூக விரோத கும்பல் முயற்சித்திருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன.

தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, இருந்தும் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இந்நிலையில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று காவலர்களுக்கு அளித்துள்ள உத்தரவில், கள்ள ஓட்டு போட முயல்பவர்களை தலையில் சுடுங்கள் என்று தெரிவித்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1157638

ம்ம்.... பிடிச்சால் போதாதோ...........சுடணுமா? ................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 10:08 am

வெடித்து சிதறிய விமானம் : மீட்புப் பணிகள் தீவிரம்!

உலகச் செய்திகள்!  - Page 63 LchtEg8FSqumVOAtESAw+Tamil_News_large_1320406

ஜகார்தா: இந்தோனேஷியாவில், 54 பேருடன் சென்ற விமானம், மலையில் மோதி வெடித்து சிதறியது. விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் துவங்கி உள்ளன.

இந்தோனேஷியாவின் கிழக்கே உள்ளது, பப்புவா மாகாணம். இதன் தலைநகர், ஜெயபுரா. நேற்று (ஆகஸ்ட் 16) இங்குள்ள, சென்தானி விமான நிலையத்தில் இருந்து, 'டிரகானா ஏர்' நிறுவனத்தின், 'ஏ.டி.ஆர்., 42' என்ற விமானம், ஓக்சிபில் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில், ஐந்து விமான பணியாளர்கள், ஐந்து குழந்தைகள் மற்றும் 44 பயணிகள் என, மொத்தம், 54 பேர் இருந்தனர்.

புறப்பட்ட 45 நிமிடங்களில், விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.அதே சமயம், ஓக்சிபில் விமான நிலையத்திற்கும் விமானம் வராததால், பயணிகளின் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், விமானம் ஓக்சிபில் அருகே உள்ள மலையில் மோதி சிதறியதாகவும், அதன் உடைந்த பாகங்களை உள்ளூர்வாசிகள் பார்த்ததாகவும், போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து இந்தோனேஷியர் அரசு வெளியிட்டுள்ள தகவலில், ஓக்பிசி மாவட்ட மக்கள் விமானம் மலையில் மோதியதை பார்த்ததாகவும், அதன் உடைந்த பாகங்களை பார்த்ததாகவும் கூறி உள்ளனர். ஆனால் விமானத்தில் பயணித்த யாராவது உயிர் தப்பி உள்ளனரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

அதை உறுதி செய்வதற்காகவும், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர், போலீசார் மற்றும் ராணுவம் சம்பவத்திற்கு புறப்பட்டுள்ளனர். விரைவில் சம்பவத்திற்கு சென்று மீட்பு பணிகளை துவங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து டிரகானா ஏர் நிறுவனம் கூறுகையில், விபத்து நடைபெற்றதாக கூறப்படும் இடம் அடந்த மலைகள் நிறைந்த பகுதி. அப்பகுதியில் வானிலை எதிர்பாராத வகையில் மாறும். வானிலை மோசமான பகுதி என்பதால் அங்கு போதிய வெளிச்சம் இல்லாமல், மேகம் மூடியதாகவே காணப்படும்.

திடீரென பனிமூட்டமும், வேகமான காற்று வீசாமலேயே திடீரென இருள் சூழும் தன்மை கொண்ட பகுதி அது. அதனால் மோசமான வானிலை காரணமாகவே எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

இந்தோனேஷிய விமானங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருவதால், விமான போக்குவரத்தை விரைந்து சீராக்கும் பணியில் அந்நாட்டு விமான போக்குவரத்து துறை இறங்கி உள்ளது.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 10:11 am

ரொம்ப பாவம் சோகம்................... அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 18, 2015 1:38 am

வர வர பிளேன் இல் பயணிக்கவே பயம்மா இருக்கு ..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2015 12:02 pm

shobana sahas wrote:வர வர பிளேன் இல் பயணிக்கவே பயம்மா இருக்கு ..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1157938

ஆமாம் ஷோபனா................சோகம் .................... பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 26, 2015 1:00 am

எங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா மறந்துவிட்டது பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் மிரட்டல் பேச்சு

உலகச் செய்திகள்!  - Page 63 201508250057148453_Pakistan-Security-AdvisorThreat-Speech_SECVPF

எங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா மறந்துவிட்டது என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

பேச்சுவார்த்தை ரத்து

இந்தியா–பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான 2 நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. பாகிஸ்தானின் அடாவடி நடவடிக்கையால் பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்து ஆனது. எனினும், இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்ததால்தான் பேச்சுவார்த்தையை ரத்து செய்தோம் என்று பாகிஸ்தான் சாக்கு போக்கு கூறி வருகிறது.

இதுபற்றி நேற்று இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறியதாவது:–

அணு ஆயுதங்கள்

பேச்சுவார்த்தை ரத்து ஆனதற்கு பாகிஸ்தான் காரணம் இல்லை. கடந்த ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பிரதமர் மோடி, இந்த பிராந்தியத்தின் சக்தி வாய்ந்த நாடாக இந்தியாவை நினைத்துக் கொள்கிறார். ஆனால் பாகிஸ்தானிடம் அணுசக்தி இருக்கிறது என்பதை அவர் மறந்துவிட்டார்.

மோடியின் இந்தியா இந்த பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நாடுபோல் நடந்து கொள்ளுமேயானால்... நாங்களும் அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுதான். எங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும்.

இந்தியா தனது விருப்பப்படி இயல்பான சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று விரும்புகிறது. அப்படி என்றால் வர்த்தகம், போக்குவரத்து குறித்துதான் பேச முடியும்.

ஓடிவிடவில்லை

காஷ்மீர் ஒரு பிரச்சினை இல்லை என்றால் எல்லையில் 7 லட்சம் படை வீரர்களை இந்தியா குவித்து வைத்திருப்பது ஏன்?... இருநாடுகளுக்கும் இடையே காஷ்மீர் ஒரு பிரச்சினையாக உள்ளது என்பதையும் அதற்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதையும் சர்வதேச நாடுகள் விரும்புகின்றன.

தற்போதைய தந்திரம்(பேச்சுவார்த்தை ரத்து) வேலைக்கு ஆகாது என்பதை இந்தியா உணர வேண்டும். காஷ்மீர் மக்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயித்துக்கொள்ள பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா முன்வரவேண்டும்.

தீவிரவாதம் தொடர்பான பேச்சைக் கண்டு பாகிஸ்தான் ஓடிவிடவில்லை. பாகிஸ்தானில் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தீவிரவாதத்தை தூண்டிவிடுவதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.



உலகச் செய்திகள்!  - Page 63 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 26, 2015 1:58 am

நேபாளத்தில் பயங்கரம் ஈட்டி, கோடரியால் தாக்கி 8 போலீசார் படுகொலை ஆர்ப்பாட்டக்காரர்கள் 3 பேர் பலி

நேபாள நாட்டை மறு சீரமைக்கும் விதமாக 7 மாகாணங்களை உருவாக்கும் சட்ட வரைவு நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என மேற்கு நேபாளத்தின் திகாபூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர். இதற்கு போலீசார் தடை விதித்தனர்.

போலீசாரின் தடையை மீறி நேற்று 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திகாபூர் நகரில் திரண்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், அங்கே இருந்த போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது.

அப்போது போலீசாரை கோடரி, ஈட்டியால் தாக்கியும் கற்களால் வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 8 பேர் பலியாயினர்.

போலீசாரின் தாக்குதலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள இவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கலவரம் வெடித்துள்ள திகாபூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கூடுதல் போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக நேபாள உள்துறை மந்திரி பம்தேவ் கவுதம் தெரிவித்தார்.



உலகச் செய்திகள்!  - Page 63 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2015 9:30 pm

மலாக்கா கடற்பகுதியில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி; பலரைக் காணவில்லை!

உலகச் செய்திகள்!  - Page 63 11949406_929839140422517_4833996937702269859_n

மலாக்கா – மலேசியாவில் இருந்து இந்தோனேசியாவிற்கு 70க்கும் மேற்பட்ட ஆட்களைச் ஏற்றிச் சென்ற படகு ஒன்று, மலேசியாவின் செலங்கோர் மாகாணத்தில் சபாக் பெர்னாம் நகருக்கு அருகே மலாக்கா ஜலசந்தியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதை அறிந்த மீனவர்கள் விரைந்து வந்து 15 பேரை மீட்டனர். 13 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். பலரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் 12 கப்பல்கள்களும் ஒரு விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

படகில் வந்தவர்கள் அகதிகளா அல்லது சட்டவிரோதமாக மலேசியாவில் குடியேறிப் பின் இந்தோனேஷியாவிற்குக் கள்ளப் படகேறிச் சென்றவர்களா எனக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்



உலகச் செய்திகள்!  - Page 63 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2015 9:36 pm

பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்தி உலகை வியப்பில் ஆழ்த்திய சீன ராணுவம்

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வெற்றி கொண்டதின் 70-வது ஆண்டையொட்டி பீஜிங்கில் சீனா ராணுவம் மிகப்பெரிய அணிவகுப்பு நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானை வீழ்த்தி, வெற்றி கொண்டதின் 70–வது ஆண்டு விழாவையொட்டி மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பினை நடத்தப்போவதாக சீனா அறிவித்திருந்தது.

தலைநகர் பீஜிங்கில் தியனன்மென் சதுக்கத்தில், சீனா அந்த பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை இன்று நடத்தி காட்டியது. இந்த அணிவகுப்பில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ராணுவ அணிவகுப்பில் சுமார் 12 ஆயிரம் ராணுவ வீரர்கள் பங்கேற்றுது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மேலும் 200 விமானங்கள்,டாங்கிகள், ஏவுகணைகள் அணிவகுத்து வந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.



உலகச் செய்திகள்!  - Page 63 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 63 of 81 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 72 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக