புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10 
10 Posts - 24%
M. Priya
உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10 
72 Posts - 73%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10 
4 Posts - 4%
Rutu
உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10 
3 Posts - 3%
Baarushree
உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10 
2 Posts - 2%
prajai
உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10 
2 Posts - 2%
Jenila
உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10 
2 Posts - 2%
viyasan
உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10 
1 Post - 1%
M. Priya
உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 67 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 67 of 81 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 74 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 67 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 03, 2018 2:34 am



வாஷிங்டன்: தென் சீன கடல் பகுதியில் ரோந்து வந்த அமெரிக்க போர் கப்பலை மோதுவது போல் சீன போர் கப்பல் அபாயகரமாக நெருங்கி வந்ததால் பரபரப்பு நிலவியது. தென் சீன கடல் பகுதி எரிசக்தி வளங்கள், மீன் வளம் நிறைந்ததாகும். முக்கிய கடல் வழிப்பாதையாக திகழும் தென் சீன கடலை சீனா ஒட்டுமொத்தமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அங்கு தனது ராணுவ நிலைகளை நிறுவக்கூடிய அளவுக்கு செயற்கைக்தீவுகளை உருவாக்கி, தனது படைகளை குவித்து வருகிறது. அதே நேரத்தில், அண்டை நாடுகளான தைவான், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, வியாட்நாம் உள்ளிட்ட நாடுகள் தென் சீன கடல் பகுதியில் தங்களுக்கும் உரிமை உள்ளதாக கூறி வருகின்றன.அவர்களுக்கு ஆதரவாக, தென் சீன கடல் என்பது சர்வதேச பகுதி எனவும் அங்கு பல நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக சென்று வர உரிமை உள்ளது எனவும் அமெரிக்கா தெரிவித்து வருகிறது. அமெரிக்க கப்பல்களும் அவ்வழியாக ரோந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளன. இதன் காரணமாக, சீனா, அமெரிக்கா இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய போர் கப்பலான ‘டிகாடர்’ நேற்று தென் சீன கடல் பகுதியில் உள்ள கேவன்-ஜான்சன் மணல் திட்டு பகுதியில் ரோந்து சென்ற போது சீன கப்பல் மிக அருகே அபாயகரமான வகையில் நெருங்கி வந்துள்ளது. இத்தகவலை அமெரிக்காவின் பசிபிக் கடற்படை செய்தித்தொடர்பாளர் கமாண்டர் கிறிஸ்டன்சன் கூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘பொதுவாக கடற்கரையிலிருந்து 12 நாட்டிகல் மைல் தொலைவுக்கு அப்பால் கடல் பகுதியில் பிற நாடுகளின் கப்பல்கள் பயணிக்க முழு சுதந்திரம் உண்டு. அதேபோல், அமெரிக்க போர் கப்பல் சென்று கொண்டிருந்த போது, திடீரென சீன போர் கப்பல் மிக அருகே நெருங்கி வந்தது. வெறும் 45 மீட்டர் இடைவெளியில் மோதுவது போல் வந்த சீன போர் கப்பல், அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை செய்தது. இரு கப்பல்களும் மோதுவதை தவிர்க்க அப்பகுதியிலிருந்து வெளியேறினோம். சீனாவின் இந்த நடவடிக்கை பாதுகாப்பற்றது, சரியானதல்ல’’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில் சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அனுமதியின்றி கடல் எல்லைக்குள் நுழைந்ததால் அமெரிக்க போர் கப்பலை எச்சரிக்கை செய்வதற்கான சீன போர் கப்பல் சென்றது. சீனாவின் மணல் திட்டுகள் பகுதியில் அமெரிக்கா தனது போர் கப்பலை அனுப்பி தொடர்ந்து அத்துமீறுகிறது. சீனாவின் இறையாண்மை, பாதுகாப்புக்கு மிரட்டல் விடும் மனப்போக்குடன் அமெரிக்கா நடந்து கொண்டால், அது இரு நாட்டின் உறவை வெகுவாக பாதிக்கும்’ என கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் முற்றியுள்ள நிலையில், தென் சீன கடல் விவகாரத்திலும் மோதல் போக்கு வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 67 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 03, 2018 2:41 am



ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு கனடாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த கண்டுபிடிப்புகள், சாதனைகளை நிகழ்த்துவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 2018ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் ஸ்வீடன் நகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி அலீசன், ஜப்பானின் தசுகோ ஹோன்ஜோ ஆகியோருக்கு 2018ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுவோர் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் அஷ்கின்), பிரான்சை சேர்ந்த ஜெராடு மவுரோ (74) மற்றும் கனடாவை சேர்ந்த டோன்னா ஸ்டிரிக்லேண்ட் ஆகிய 3 விஞ்ஞானிகளும் இயற்பியலுக்கான நோபல் பரிசை பெறுகின்றனர்.

பரிசுத்ெதாகையயான ரூ.7.3 கோடியில் 50 சதவீதத்தை ஆர்தர் அஷ்கின் பெறுகிறார். மீதமுள்ள பரிசுத்தொகையை மவுரோவும், டோன்னாவும் பகிர்ந்து கொள்வார்கள். லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்டதற்காக 3 பேருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் கண் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். 3வது பெண் விஞ்ஞானி இயற்பியல் துறையில் கடந்த 1903ம் ஆண்டு மேரி க்யூரி, 1963ம் ஆண்டு மரியா கோபெர்ட் மேயர் ஆகிய பெண் விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். அதன் பின்னர் எந்த பெண் விஞ்ஞானியும் இயற்பியல் துறையில் நோபல் பரிசை பெறவில்லை. இப்போது, 55 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவை சேர்ந்த டோன்னா ஸ்டிரிக்ட்லேண்ட் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 67 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 6:19 am

போர்பஸ் பணக்கார அமெரிக்கர்கள்: டிரம்ப் பின்னடைவு
-
வாஷிங்டன்:
பணக்கார அமெரிக்கர்களுக்கான போர்ப்ஸ்
பட்டியலில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்
138 வது இடத்திற்கு கிழறங்கியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து 2018-ம் வரையிலான
பணக்கார அமெரிக்கர்கள் பெயர் பட்டியலை
முன்னணி பத்திரிகையான போர்பஸ் வெளியி்ட்டது.

இதில் முதல் 400 இடங்களை பிடித்துள்ள பணக்கார
அமெரிக்கர்கள் பெயரில் அதிபர் டெனால்டுடிரம்ப்
121வது இடத்தில் இருந்து கீழறங்கி 138 இடத்திற்கு
தள்ளப்பட்டார்.

இதன் மூலம் அவரது சொத்து மதிப்பு குறைந்து
வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
-----------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 6:23 am

ஆப்கானிஸ்தானில், 24 மணி நேரத்தில் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
-
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள்
கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவர்களை தவிர ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட பல்வேறு
பயங்கரவாத இயக்கங்களும் அங்கு காலூன்றி தாக்குதல்
நடத்தி வருகின்றன.

ஆப்கான் ராணுவம் இவர்களின் கொட்டத்தை ஒடுக்க
போராடி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கான் தேசிய ராணுவப்படையினர்
மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும்
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக
இறங்கினர்.

அவர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை
சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தினர்.

அதே சமயம் 120 போர் விமானங்கள் பயங்கரவாதிகளின்
நிலைகளை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்தின.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் இந்த அதிரடி
நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும்
68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இவர்களில் 42 பேர் தரைவழி தாக்குதலிலும், 26 பேர்
வான்தாக்குதலிலும் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டார
தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 21 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும்,
2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும்
அந்த தகவல்கள் கூடுதலாக தெரிவிக்கின்றன.
-
-------------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 6:27 am

உலகச் செய்திகள்!  - Page 67 201810040208384849_To-remove-the-economic-ban-on-IranInternational-Court-of_SECVPF
--
ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்க அமெரிக்காவுக்கு, சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

-
திஹேக்,
அணு ஆயுத குறைப்பு தொடர்பாக அமெரிக்கா
உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் கடந்த 2015–ம்
ஆண்டு ஈரான் ஒப்பந்தம் செய்துகொண்டது.
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது
போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை, தற்போதைய
ஜனாதிபதி டிரம்ப் அப்போதே குறை கூறிவந்தார்.

பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும்
இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தன்னிச்சையாக
அறிவித்தார். அது மட்டுமின்றி ஈரான் மீது புதிய
பொருளாதார தடைகளையும் அவர் விதித்தார்.

இதில் முக்கியமாக மருந்து பொருட்கள், மருத்துவ
உபகரணங்கள் போன்ற பொருட்கள் ஏற்றுமதிக்கு
தடை விதிக்கப்பட்டு இருந்தது.


இந்த பொருளாதார தடையை எதிர்த்து சர்வதேச
நீதிமன்றத்தில் முறையிட்டது, ஈரான்.
இந்த விவகாரத்தை விசாரித்த
நீதிபதி அப்துல்ஹாவி அகமது யூசுப், நேற்று
அமெரிக்காவுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன்படி மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உணவு
மற்றும் விவசாய பொருட்கள் போன்ற அத்தியாவசிய
பொருட்கள் மீதான தடைகளை விலக்க வேண்டும் என
நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் விமான பாகங்கள் மீதான தடைகளையும்
விலக்கிக்கொள்ள வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில்
குறிப்பிட்டார்.
-
---------------------------
தினத்தந்தி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 08, 2018 5:11 am



சுமார் ரூ.7 கோடி விலைமதிப்புடைய விண்கல்லை, கடந்த 30 ஆண்டுகளாக ஒருவர் தன் வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப் பயன்படுத்திய சுவாரஸ்யமும், அவலமும் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளரான மோனா சிர்பெஸ்குவிடம் அதே பகுதியை சேர்ந்த பெயர்கூறப்படாத மனிதர் ஒருவர் தன் வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப் பயன்படுத்தி வந்த ஒரு கல்லை கொடுத்து அதன் தன்மைகள் குறித்து சோதனை செய்யக் கூறியுள்ளார்.

சுமார் 10 கிலோ எடைக்கொண்ட அந்த அதிசய கல்லை ஆய்வு செய்ததின் முடிவில் ஆராய்ச்சியாளருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 30 வருடங்களாகக் வீட்டின் கதவிற்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்தது விண்கல் எனச் சோதனையில் தெரியவந்துள்ளது.

1930 -ஆம் ஆண்டுகளில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகனில் உள்ள எட்மோட் என்ற பகுதியில் உள்ள விளைநிலத்தில் விழுந்ததும் என்றும் அதனுடைய இன்றைய அமெரிக்கா டாலர் மதிப்பு 1 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயின் ரூ.7.37 கோடி) இருக்கும் என தெரிவித்தார்.

மேலும், மோனா சிர்பெஸ்கு, அந்த அதிசய கல்லை வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற ஸ்மித் சோனியன் இன்ஸ்டிட்யூட் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தார். அதனை ஆய்வு செய்தவர்கள் விண்கல் என உறுதி செய்தனர். தற்போது அதை விலை கொடுத்து வாங்க அனைவரும் போட்டிபோட்டு முன்வந்துள்ளனர்.

பெரும்பாலான விண்கல்லிலும் 90 முதல் 95 சதவீதம் வரை இரும்பு இருக்கும். ஆனால், இந்தக் கல்லில் 88 சதவிகிதம் இரும்பும், 12 சதவிகிதம் நிக்கல் இருப்பதும், இதுவரை பூமியில் விழுந்த விண்கற்களில் இதுவே பெரியது என்பது தான் இதன் தனி சிறப்பு.

இதுகுறித்து வானவியல் ஆராய்ச்சியாளர் மோனா சிர்பெஸ்குவி கூறுகையில், என் வாழ்நாளில் இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த கல்லை நான் ஆராய்ச்சி செய்ததில்லை. மெக்சிகனில் காணப்பட்ட ஆறாவது மிகப்பெரிய விண்கல் இதுவாகும். "இது என் வாழ்க்கையில் நான் பணியாற்றிய மிக மதிப்புமிக்க மாதிரி என்றும் தொடக்க கால சூரிய மண்டலத்தின் அங்கம் தற்போது என் கைகளில் கிடைத்துள்ளதாக உணர்ந்தேன் எனக் கூறினார்

பல கோடி மதிப்புடைய விண்கல்லை தனது வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுத்து வந்தவரும், பெயர் வெளியிடப்படாத உரிமையாளர் கூறுகையில், நான், கடந்த 1988-ஆம் ஆண்டுதான் அந்த நிலத்தை வாங்கினேன். அப்போது நிலத்துடன் சேர்ந்து இந்தக் கல்லும் எனக்குக் கிடைத்தது. நீண்ட நாள்களாக இந்தக் கல்லை பற்றி ஏதோ ஒரு சந்தேகம் எனக்குள் இருந்து வந்தது. இதையடுத்து அதனை தெளிவுப்படுத்திக் கொள்வதற்காகவே கல்லை சோதனைக்கு அளித்து தெளிவுப்படுத்தக் கூறினேன். தற்போது அந்த கல் விண்கல் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனை தற்போது விற்கவும், அதில் கிடைக்கும் விற்பனை தொகையில் 10 சதவீதத்தை மெக்சிகன் மத்திய பல்கலைக்கழகத்துக்கு வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே நிலத்தின் முன்னாள் உரிமையாளர் 1930-ஆம் ஆண்டு தன் நிலத்தில் இந்தக் கல் இருந்ததாகக் கூறியுள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 67 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 08, 2018 5:17 am



இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவுநிலைக்கு தள்ளப்பட்டது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.

சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலும் பலர் மாயமாகி போயுள்ளனர். அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1944 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், சுமார் 62,359 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது வரை 2,549 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என தெரிவித்துள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 67 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 10, 2018 5:47 pm



நைரோபி: கென்யாவின் வடக்குப் பகுதியில் புதனன்று காலை பேருந்து கவிழ்ந்த விபத்தில் 50 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து அந்நாட்டின் வடபகுதியில் விக்டோரியா நதிக்கரையில் அமைந்துள்ள கிசுமு என்ற இடத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த் பேருந்தில் 67 பேர் பயணிக்கக் கூடிய வசதி உள்ளது.

அப்பேருந்தானது கெரிச்சோ மாகாணத்தின் போர்ட் டெர்னான் என்ற இடத்திற்கு அருகே வந்துகொண்டிருந்த பொழுது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலை அருகே இருந்த சிறு பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குளானது.

இந்த விபத்தில்
Code:
31 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள்
மரணமடைந்தனர். இடிபாடுகளுக்கு இடையே மேலும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குறிப்பிட்ட அந்த இடமானது அடிக்கடி இத்தகைய விபத்துகள் நடக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது

இந்தத் தகவலை பிபிசி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

விபத்தில் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 67 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 10, 2018 5:48 pm

Code:
வங்கதேச பிரதமர் பேரணியில் குண்டு வெடிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் இருவர் உட்பட 19 பேருக்கு தூக்கு

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரணியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-ஆம் ஆண்டு வங்கதேச பிரதமராக இருந்தவர் கலீதா ஜியா. அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் ஷேக் ஹசீனா.இவர் தலைநகர் டாக்காவில் உள்ள வங்கபந்து மைதானத்தில் பேரணி ஒன்றை நடத்தினார். இந்தப் பேரணியில் எதிர்பாராதவிதமாக தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 24 பேர் மரணமடைந்தனர். மேலும் 500 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பின் விளைவாக ஷேக் ஹசீனாவுக்கு கேட்கும் திறனில் சிறிது குறைபாடு ஏற்பட்டது.

இந்த வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், அப்போதைய உள்துறை அமைச்சர் லுத்போஸமான் மற்றும் கல்வித்துறை இணை அமைச்சர் அப்துஸ் ஸலாம் பின்ட்டு உள்ளிட்டோர் மீதுகுற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து வந்தது.

இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் பேரணியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

புதனன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் முன்னாள் அமைச்சர்கள் லுத்போஸமான் மற்றும் அப்துஸ் ஸலாம் பின்ட்டு உள்ளிட்ட 19 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், அவரது முன்னாள் அரசியல் செயலர் ஹாரிஸ் சவுத்ரி உள்ளிட்ட 19 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 11 பேருக்கும் இந்த வழக்கில் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்த அந்நாட்டின் சட்ட அமைச்சர் அனிசுல் ஹக், இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட தாரிக் ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் சவுத்ரி ஆகியோருக்கு தண்டனையை உயர்த்தி மரண தண்டனை வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.



உலகச் செய்திகள்!  - Page 67 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 17, 2018 6:20 pm

100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தடையை நீக்கி,
கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாகயது கனடா

-
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த
தடையை நீக்கி, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக
ஆக்கியுள்ளது கனடா.

கஞ்சா பயன்பாடு சட்டபூர்வமாக்கியது தொடர்பாக,
கஞ்சா பயன்பாட்டளர்கள் மற்றும் அந்த தொழிலில்
முதலீடு செய்பவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

அதே நேரத்தில் கஞ்சா பயன்படுத்துவது ஆரோக்கியத்தைப்
பாதிக்கும் என்று கூறி சுகாதார வல்லுநர்கள், சட்ட
நடவடிக்கையை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
---
தினகரன்

Sponsored content

PostSponsored content



Page 67 of 81 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 74 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக