புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c10 
306 Posts - 42%
heezulia
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
manikavi
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_m1044-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 27, 2013 6:49 pm

First topic message reminder :

ஒவ்வொரு ஆண்டும், கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்தாண்டும் 44-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவ., 20ம் தேதி கோலாகலமாக துவங்கியது. 10நாட்கள் நடக்கும் இவ்விழா நவ., 30 ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட படங்கள் இங்கு திரையிடப்படுகிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் என 100க்கும் மேற்பட்ட நிருபர்கள், புகைப்படகாரர்கள், டி.வி., கேமரா மேன்கள் கோவாவை முற்றுகையிட்டு திரைப்பட விழா குறித்த செய்திகளை எழுதவும், ஒலி, ஒளிபரப்பவும் செய்து வருகின்றனர்.

நான் இயக்குநர்களின் கதாநாயகி... கோவா பட விழாவில் பத்மப்ரியா பேட்டி!!

கோவாவில் நடைபெற்று வரும் 44வது சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் சினிமாவில் இருந்து தங்கமீன்கள் படம் தேர்வானது. இதற்காக இப்படத்தில் நடித்த ராம், ஷெல்லி, பத்மப்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பத்மப்ரியா, தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* கொஞ்ச நாளாக தமிழ் சினிமாவில் உங்களை காணோமே...?

தவமாய் தவமிருந்து, பட்டியல், மிருகம், சத்தம் போடாதே, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பொக்கிஷம் போன்ற பல படங்கள் மூலம் மக்களிடையேயும், மீடியாவிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளேன். உலகில் ஏழாவது சிறந்த பல்கலைக்கழகம் என்று கருதப்படும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் ஒன்றரை ஆண்டு தங்கி முதுகலைப்பட்டம் படித்து பட்டம் பெற்றிருக்கிறேன். நல்ல பயனுள்ள அனுபவம். அதுதான் இந்த இடைவெளி என்கிறார்.

* தமிழ் திரை உலகினரோடு தொடர்பில் இருக்கிறீர்களா...?

நான் நடித்த எல்லா படங்களின் இயக்குனர்களோடும், சக நடிகர், நடிகைகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.

* இந்த கோவா திரைப்பட விழாவில் நல்ல படங்களை பார்த்தீங்களா...?

பொதுவாக சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சிறப்பான படங்களையே பார்ப்பது என் வழக்கம். ஆனால் இந்த வருடம் மிகவும் நல்ல சில படங்களை இந்தியன் பனோரமாவில் பார்த்தேன். நாகராஜ் மஞ்சுளே டைரக்ட் செய்திருக்கும் பாண்டரி இந்த திரைப்பட விழாவின் பாப்புலர் படம். ஜாதி வித்தியாசம் பிரச்னை பற்றிய கமலேஷ்வர் முகர்ஜி இயக்கியுள்ள மேகே தாஜா தாரா வங்காள மொழிப்படம். பிரபல வங்காள இயக்குனர் ரித்விக் கடக்கின் வாழ்க்கை பற்றிய படம். கெளசிக் கங்குலி இயக்கியுள்ள அபுர் பாஞ்சாலி வங்காள படம். அடுத்து அருமையான ஒரு கனடா நாட்டுபடம். ஆங்கிலத்தில் சாமுவேல் பெக்கெட் என்ற புகழ்பெற்ற ஆங்கில கவிஞன் பற்றி படம். இன் சர்ச் ஆப் எ புயட் சாமுவேல் பக்கெட் எழுதியுள்ள நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன். அவர் கவிதைகள் எனக்கு பிடிக்கும். இன்னும் ஒரு சில படங்களை பார்த்துவிட ஆசை தான்.

* எந்த மாதிரி பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்...?

நான், டைரக்டர்களின் நடிகை. நான் பணிபுரியும் எந்த டைரக்டருக்கும் மிகுந்த மரியாதை கொடுப்பவள். மாடர்ன் பெண், கிராமத்து பெண், இளவரசியோ, ஏழையோ என எந்த மாதிரி கதாபாத்திரம் எனக்கு கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே சிறப்பாக செய்து டைரக்டரிடமும், ஆடியன்சிடமும் நல்ல பெயர் வாங்க முடியும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

* இப்போது ஏதாவது தமிழ்ப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறீர்களா...?

உண்மையாக எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை. கைவசம் தமிழ்ப்படம் இல்லை. இந்த ரோலை நான் செய்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர்கள் நினைக்கும்போது நிச்சயம் என்னை கூப்பிடுவார்கள். எந்த மொழிப்படமாக இருந்தாலும் எனது கேரக்டர் எனக்கு பிடித்தாள் நடிக்க ஒப்புக்கொள்ளுவேன்.

* மாறுபட்ட கதை அம்சம் உள்ள பல தமிழ்படங்கள் இப்போது வெற்றி பெறுகின்றன. மக்கள் விரும்பி பார்க்கிறார்கள், அந்த மாதிரி படங்களை பார்த்திருக்கிறீர்களா...?

சீனு ராமசாமியின் நீர்ப்பறவை படம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற இன்னும் சில படங்களை ரசித்து பார்த்தேன்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 11:19 am

90 வயதானாலும் பாடுவேன் - கோவா படவிழாவில் ஆஷா போஸ்லே பேச்சு!!

முக்கிய விருந்தினராக 44வது கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவை, விழாவில் பேச அழைத்தார்கள். அவர் பேசுகையில், கோவா எங்களுக்கு சொந்த ஊர் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். என் தந்தை திரு மங்கேஷ்கர், தனது பத்து வயதில் நடிப்பதற்காக மும்பைக்கு வந்துவிட்டார். பத்து வயதில் நான் பாட ஆரம்பித்துவிட்டேன். எனக்கு வயது இப்போது எண்பது வயது. எழுபது வருடங்களாக பாடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் பத்து வருடங்கள் தொடர்ந்து, எனக்கு 90 வயது ஆனாலும் கூட பாடுவேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி என்று பேசினார்.

தனது மூத்த சகோதிரி லதா மங்கேஷ்கரை பின்பற்றி நிறைய திரைப்பட பாடல்களை பாடி சாதனை படைத்திருக்கிறார் ஆஷா போஸ்லே என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 11:20 am

விருது கிடைத்தது பெருமை - கோவா விழாவில் வஹீதா ரஹ்மான் பேட்டி!!

பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற மத்திய அரசின் மிக உயர்ந்த விருதுகளால் கெளரவிக்கப்பட்டிருக்கும் பிரபல நடிகை வஹீதா ரஹ்மான், இந்திய சினிமா நூற்றாண்டு விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியர் ஆவர். தமிழகத்தில் பிறந்த இவர் இந்தியில் திலீப்குமாருடன் ராம் ஒளர் ஷ்யாம், தேவ் ஆனந்துடன் கெய்டு, குரு தத்துடன் பியாஸா, காகஜ்கா பூல், ஹாஹிப் பீபீ ஓளர் குலாம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். சிறந்த நடிப்பு திறமை உள்ள அழகி என்று பாராட்டப்பட்டவர்.

மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் மனீஷ் திவாரி, இந்திய திரைப்பட துவக்க விழா அன்று அளித்த விருந்தில் பங்கேற்ற வஹீதா ரஹ்மான், தினமலருக்கு பிரத்யேக பேட்டியளித்தார். பேட்டின்போது தமிழில் நிறைய பேசி, கொஞ்சம் ஆங்கிலம் பேசி நம்மை வியக்க வைத்தார். அவரது பேட்டி இதோ...

* தமிழ்பேசும் குடும்பத்திலிருந்து வருபவர் என்று துவக்க விழாவில் உங்களை அறிமுகம் செய்து வைத்தார்களே... அதைப்பற்றி?

அது முழுமையாக சரி இல்லை. நாங்கள் உருது பேசும் குடும்பத்தை சேர்ந்தவர்கள். என் தந்தையின் பணி காரணமாக சென்னை, ஈரோடு, கும்பகோணம், விஜயவாடா, ஐதரபாத், பாலக்காடு போன்று பல நகரங்களில் வாழ்ந்திருக்கிறோம். தமிழ் எனக்கு நன்றாக பேச வரும், இப்போது கொஞ்சம் குறைவு (சிரிக்கிறார்). சென்னையில் ஆழ்வார்பேட்டை, தி.நகர் போன்ற ஏரியாக்களில் சில காலம் வசித்து வந்தோம்.

* தெலுங்கு திரை உலகில் அறிமுகமானது பற்றி...?

பள்ளியில் படிக்கும்போதே திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் (பரதநாட்டிய குழு) பரதநாட்டியம் பயின்றேன். எனது நடன நிகழ்ச்சியை பார்த்து ஒரு பிரமுகர், பிரபல இயக்குநர் தாபி சாணக்யாவிடம் என்னைப்பற்றி கூறியிருக்கிறார். தாபி சாணக்யா, ரோஜூலு மாராயி என்ற தெலுங்கு படத்தில் ஒரு நாட்டுப்புற பாடலுக்கு நடனமாட வைத்தார். படத்தில் ஹீரோ, ஹீரோயினாக ஏ.நாகேஸ்வரராவ், செளகார் ஜானகி நடித்தார்கள். படம் பெரிய ஹிட்டானது. காலம் மாறிப் போச்சு என்ற பெயரில் தமிழில் இப்படம் ரீ-மேக்கானது. நானும் நடிகையாகிவிட்டேன். பின்னர் ஒன்றே குலம் என்ற தமிழ்ப்படத்திலும், ஜெயசிம்ஹா என்ற தெலுங்கு படத்திலும்( என்.டி.ராமராவ், அஞ்சலி தேவியும், நானும் கதாநாயகிகள்)

ஜெயசிம்ஹா படத்தின் வெள்ளிவிழா, ஐதராபாத்தில் நடைபெற்றபோது, ஒரு பிரபல டிஸ்ட்ரிபியூட்டர், என்னைப்பற்றி பிரபல இந்தி இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் குரு தத்ஜியிடம் சொல்லியிருக்கிறார். நான் உருது பேசும் குடும்பத்திலிருந்து வருபவள் என்பது மேலும் செளகரியமாகிவிட்டது. குரு தத், அவர் தயாரிக்கும் சி.ஐ.டி. படத்தில் தேவ் ஆனந்துடன் என்னை கதாநாயாகியாக அறிமுகப்படுத்தினார். பிறகு அவருடன் பியாஸா தொடர்ந்து நான் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றதால் காகஜ் கா பூல், ஹாஹிப் பீபீ, ராம் அவுர் சாம், சாகிப் பீபீ அவுர் குலாம் போன்ற பல படங்களில் நடித்தேன்.

* தமிழ்ப்படங்கள் பார்க்கிறீர்களா...?

நிறைய தமிழ்ப்படங்களை பார்க்க ஆசை தான். மும்பையில் அவ்வளவாக பார்க்க முடிவதில்லை. கமல்-ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை படம் பார்த்து அசந்து போனேன். இருவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். கமலுக்கு அந்த படத்திற்காக இந்தியாவின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அதேப்போல் காக்க காக்க படம் பார்த்தேன். நல்ல அருமையான படம். இப்போதெல்லாம், தமிழிலும், மலையாளத்திலும் நல்ல புதிய கருத்துள்ள படங்கள் வருகின்றன. திரைப்படத்துறைக்கு இது நல்ல விஷயம்.

* விஸ்வரூபம்-2 படத்தில் நடிப்பது பற்றி...?

விஸ்வரூபம்-2 படத்தில் கமலுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் என்னை அழைத்ததற்காக கமலுக்கு நன்றி. அந்தபடத்தில் நடித்தது நல்ல மகிழ்ச்சியான அனுபவம். இந்தபடத்திற்கு தமிழில் டப்பிங் நான் தயார், ஆனால் அதை கமல் தான் முடிவு செய்ய வேண்டும்.

* தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தீர்களா...?

அவரை சந்தித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நாங்களெல்லாம் நடித்து கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர்., நாகேஷ், ஜெயலலிதா, பி.சுசீலா, சசிகபூர் நான் மற்றும் பலரும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் அழைப்பில் அங்கு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். பசுமையான நினைவுகள். ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்கள்.

* இன்று இந்த விஷேச விருது பெற்றது குறித்து...?

எனக்கும் மிகவும் பெருமையாக இருக்கிறது. அதேசமயம் அடக்கமாகவும் இருக்க செய்கிறது. எனக்கு இந்த விருது கிடைத்ததற்கு நிறைய பேர்களுடைய ஒத்துழைப்பு முக்கிய காரணம். எனது டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் உடன் நடித்தவர்கள், காஸ்ட்யூம் டிஸைனர்கள், மேக்கப் மேன்கள், இவர்கள் ஒத்துழைப்பும், உதவியும் இல்லாமல் ஒரு நடிகையாக எதையும் நான் சாதித்திருக்க முடியாது. அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இவரது நேர்மை பாராட்டுக்குரியது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 11:21 am

சஞ்சய் தத் படங்களை கூட இனி பார்க்க மாட்டேன் : நானா பட்டேகர் கோபம்!!

கோவாவில் 44வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த விழாவில் இந்திய திரையுலகில் இருந்து மட்டுமல்லாது வெளிநாட்டை சேர்ந்த திரையுலகினரும் பங்கேற்று உள்ளனர். விழாவில் பிரபல நடிகர் நானா பட்டேகரும் கலந்து கொண்டார். இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படத்தில் பிரபல திரைப்பட இயக்குநராக நடித்து, அந்த கேரக்டரில் வாழ்ந்து காட்டியவர் நானா படேகர். விழாவில் தினமலருக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்த அனுபவம் பற்றி...?

பாரதிராஜா ஒரு அமேஸிங் டைரக்டர். அந்தப்படத்தில் இயக்குனர் பாத்திரத்தை உருவாக்கியதற்கே அவரை பாராட்ட வேண்டும். டைரக்ஷ்ன் துறையில் உள்ள நெளிவு சுழிவுகளை நன்றாக கரைத்து குடித்தவர். அவர் ஷூட் பண்ணும்போதும், எடிட்டிங் செய்யும் போதும் தனித்தன்மையோடு செயல்படுகிறார். எடிட் பண்ணி முடித்ததும் சிறப்பாக வந்திருப்பதை காண முடியும். படம் முடித்த பிறகு அவருடன் நான் படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது, பிரமிப்பாகவும் இருந்தது. திரைப்படங்களில் புதுமைகள் செய்வதில் அவர் வல்லவர் என்று எனக்கு தெரியும், நேரிலும் பார்த்திருக்கிறேன். சில இடங்களில் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. ஆனாலும் பாரதிராஜா அவரது எண்ணங்களை எனக்கு விளக்கி என்னை சமாதானம் செய்தார். மொத்தத்தில் பொம்மலாட்டம் படத்தில் பணிபுரிந்தது எனக்கு பெரிய மகிழ்ச்சி என்றார்.

* மீண்டும் தமிழ்படங்களில் நடிப்பீர்களா...?

தமிழ் திரைப்படத்தில் நிறைய திறமையுள்ள புது இளைஞர்கள் மாறுபட்ட படங்களை உருவாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று அறிகிறேன். தமிழ்படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். ஆனால் இரண்டு நிபந்தனைகள். ஒன்று முதலில் கதையை எனக்கு தர வேண்டும், அதை முழுவதும் நான் புரிந்து கொள்ள வேண்டும், இண்டாவது எனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஒரு தமிழ் டீச்சரை ஏற்பாடு செய்ய வேண்டும். என வசனங்களை நன்றாக புரிந்து கொண்டு நானே டப்பிங் பேச விரும்புகிறேன். இதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால் தமிழ் படங்களில் நடிக்க தயார்.

* பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தது குறித்து...?

நடிகர் சுனில் தத் மரியாதைக்குரியவர். நல்ல மனிதர், நல்ல நடிகர். அவர் மகன் சஞ்சய் தத், தீவிரவாதிகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை விதித்திருக்கிறது. பகுதி தண்டனையை அவர் ஏற்கனவே அனுபவித்து விட்டார், இன்னும் ஒரு பாதி தண்டனை பாக்கி இருக்கிறது. அவருக்கு சலுகைகள் தர வேண்டும், தண்டனையை குறைக்க வேண்டும் என்று பலரும் திரைப்படத் துறையை சேர்ந்த சிலரும் மற்றவர்களும் கேட்கிறார்கள். சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் தானே! சட்டத்தில் வி.ஐ.பி., சாமானியர் என்று வித்தியாசம் கிடையாது. தனிப்பட்ட முறையில் சஞ்சய் தத்திற்கும், எனக்கும் விரோதம் கிடையாது. ஆனாலும் அவருக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவரோடு படங்களில் நடிக்க மாட்டேன், அவர் படங்களை பார்க்க மாட்டேன் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இவ்வாறு நானா பட்டேகர் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 11:22 am

44வது சர்வதேச திரைப்பட விழா : கோவாவில் கோலாகலமாக துவங்கியது!!

44வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கோலாகலமாக துவங்கியது. பிரத்யேமாக உருவாக்கப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட விஷேச இடத்தில் நடைபெற்று வரும் இவ்விழாவின் துவக்க நாளில் சிறப்பு அழைப்பார்களாக நடிகர் கமல்ஹாசன், இந்தி நடிகை ரேகா, பிரபல பின்னணி பாடகி ஆஷா போன்ஸ்லே ஆகியோருடன் அகடாமி விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை சூசன் சாரடனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பிரபல ஈரானிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மஜித் மஜிதியும், போலாந்து நாட்டை சேர்ந்த இயக்குநர் அக்னீஸ்காவும் கலந்து கொண்டனர்.

விழாவினை மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து கமல், வஹீதா, ஹாலிவுட் நடிகை சூசன் சாரடன், ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியும் குத்துவிளக்கு ஏற்றினர்.

326 படங்கள் திரையீடு

இந்தாண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சுமார் 76 நாடுகளில் இருந்து 326 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இவற்றில் ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்ட பதினைந்து படங்களும் அடங்கும்.

தமிழில் தங்கமீன்கள் திரையீடு

இந்தியன் பனோரமா பிரிவில் 26 திரைப்படங்களும், 16 குறும்படங்களும் திரையிடப்படுகிறது. 6 மலையாள படங்கள், 5 வங்காள படங்கள், 5 இந்தி படங்கள், 3 மராத்தி படங்கள், 3 ஆங்கில படங்கள், கன்னடம், ஒரியா, கொங்கனியில் தலா ஒரு படமும், தமிழில் ராம் இயக்கிய தங்கமீன்கள் படமும் இடம்பெறுகின்றன.

வஹீதா ரஹ்மானுக்கு கவுரவம்

44வது திரைப்பட விழாவில், தமிழகத்தில் பிறந்து, இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்த பிரபல இந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு, இந்திய அரசால் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்திய சினிமாவின் நூற்றாண்டு விருதும், ரூ.10 லட்சம் ரொக்க பரிசும் இந்த விழாவில் வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறது. ஐந்து நடிகைகள் அடங்கிய குழு, நீண்ட விவாதத்திற்கு பிறகு வஹீதா ரஹ்மானை இந்த விருதுக்கு தேர்வு செய்தது. வஹீதா இந்தியில், சி.ஐ.டி., பியாசா, கைடு, காஹஜ்கா பூல், ராம் அவுர் சாம், உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர். மேலும் இந்த விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது செக் நாட்டை சேர்ந்த பிரபல இயக்குநர் ஜிரி மென்ஸிலுக்கு வழங்கப்பட இருக்கிறது. மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் மனிஷ் திவாரி இந்த விருதை வழங்குகிறார்.

துவக்க விழாவில் பிரபல கதக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகாராஜ் குழுவினரின் கதக் நடன நிகழ்ச்சி 30 நிமிடங்கள் நடைபெற்றது. துவக்க விழாவின் முதல்படமாக ஜிரி மென்ஸில் இயக்கியுள்ள டான் ஜூவான்ஸ் படம் திரையிடப்பட்டது. விழாவினை பிரபல இந்தி நடிகர் ரஜத் கபூர் மற்றும் நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கினர்.

கோவா திரைப்பட விழா பரிசுகளின் விபரங்கள்

* 44வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கப்படும் படத்திற்கு ரூ.40 லட்சம் பரிசாக வழங்கப்படும். இயக்குனரும், தயாரிப்பாளரும் தலா ரூ.20 லட்சம் பெற்று கொள்வர். இயக்குனருக்கு தங்க மயில் விருது கொடுக்கப்படும்.

* சிறந்த நடிகருக்கு ரூ.10 லட்சம் பணம் ப்ளஸ் வெள்ளி மயில் விருது ப்ளஸ் சான்றிதழ் கொடுக்கப்படும்.

* சிறந்த நடிகைக்கு ரூ.10 லட்சம் பணம் ப்ளஸ் வெள்ளி மயில் விருது ப்ளஸ் சான்றிதழ் கொடுக்கப்படும்.

* சிறந்த இயக்குனருக்கு ரூ.15 லட்சம் பணம் ப்ளஸ் வெள்ளி மயில் விருது ப்ளஸ் சான்றிதழ் கொடுக்கப்படும்.

* நடுவர் குழுவின் சிறப்பு விருது - ரூ.15 லட்சம் பணம் ப்ளஸ் சான்றிதழ் கொடுக்கப்படும்.

* வாழ்நாள் சாதனையாளர் விருது - ரூ.10 லட்சம் பணம் ப்ளஸ் சான்றிதழ் கொடுக்கப்படும்.

* சினிமா நூற்றாண்டு விருது - ரூ.10 லட்சம் பணம் ப்ளஸ் சான்றிதழ் கொடுக்கப்படும்.

எஸ்.ரஜத் @ தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 11:28 am

திரைப்பட ரசிகர்களுக்கு பயனுள்ள பகிர்வு...44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013  - Page 3 1571444738 
-


Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக