புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
நலம் 360’ - 1
மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்
குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது!
''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை’ முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் தோசை சுடுறா. வித்துடலாம்னு சொன்ன பூமில 'ஏதாச்சும் செய்யலாமாப்பா?’னு பையன் கேட்கிறான். இப்போ 'ஆறாம்திணை’யைக் கண்டிப்பா நிறுத்தியே ஆகணுமாப்பா?'' மேலும் நெகிழ்வுடனும் ஆதங்கத்துடனும் அந்தத் திருப்பூர் பெரியவர் பேசப் பேச, நான் அழுதேவிட்டேன். எத்தனை கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், இணையத்தில், சமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்த அரவணைப்புகளில் நானும் விகடனும் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டோம். இழந்ததையும் தொலைத்ததையும் எடுத்துச் சொல்லி, தினம் நம் மீது இறுகும் இறுக்கமான வணிகப்பிடியை அடையாளம் காட்டி, நலவாழ்வை நோக்கி நகர வழிகாட்டிய வரிகள்தான் 'ஆறாம்திணை’ கட்டுரையின் வாசக்கால்கள். அழுக்குப் புடைவை அணிந்த பொக்கை வாய்ப் பாட்டியைக் கண்டதும் பட்டணத்துப் பேரக் குழந்தை ஓடிச்சென்று கட்டி அணைப்பது போலதான், 'ஆறாம்திணை’யை அதன் வாசகர்கள் உச்சிமோந்து அணைத்துக்கொண்டார்கள்.
அதே நெகிழ்வுடனும் நிறைவுடனும் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு வரலாம் என சென்னை வெப்பத்தில் இருந்து தப்பி, சொந்த கிராமத்துக்குச் சென்று, பக்கத்துத் தோட்டத்தில் புதுசாக வாங்கியிருந்த டிராக்டரை குதூகலமாக ஓட்டிப்பார்த்தபோதுதான் அந்த அழைப்பு! ''சார்... எங்க இருக்கீங்க?'' என விகடன் ஆசிரியர் தொலைபேசினார். ''சின்ன பிரேக் எடுத்துக்கலாம்னு சொன்னீங்களே... அதான் ஊரு பக்கம் வந்துட்டேன்...'' என நான் பதிலளிக்க, ''இங்க மெயிலும் போனும் கதறது. ''ஆறாம்திணை’யை ஏன் நிறுத்தினீங்க?’னு கேட்கிறாங்க. அடுத்த வெர்ஷனை உடனே ஆரம்பிச்சிடலாம்னு ஐடியா. தலைப்புகூட முடிவு பண்ணிட்டோம். நீங்க ரெடியா?'' என்று கேட்க, 'நலம் 360’ பூத்துவிட்டது.
'நலம் 360’... வெறும் மருத்துவக் கட்டுரை அல்ல. நலவாழ்வு என்பது மருந்து, மாத்திரை, கசாயம், ஈ.சி.ஜி. விஷயம் அல்ல. ஆரோக்கியம் என்பது, சிக்ஸ்பேக் உடம்பில் கட்டமைக்கப்படுவதும் கிடையாது. ஆறு லட்சம் பாலிசி மூலம் அதை வாங்கி வீட்டில் வைக்கவும் முடியாது. அஞ்சறைப்பெட்டியிலும், அடுப்பாங்கரைப் பரணில் கவிழ்த்திவைத்த வெங்கலத் தவலையிலும், ரசம் வைக்கும் ஈயச்சட்டியிலும், பட்டாசல் மாடக்குழியில் பத்திரப்படுத்திய அகல்விளக்கிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களில் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி, கீழாநெல்லியிலும், கரிசாலை கண்மையிலும், கத்தாழை எண்ணெய்க் குளியலிலும், வசம்புக் கட்டை கை வளவியிலும், மருதாணிப் பற்றிலும், புளியில்லா பொரிச்ச குழம்பிலும், சுண்டுவார் ரசத்திலும், இடுப்புச் சுருக்குப்பை தாம்பூலத்திலும்தான் நம் நலவாழ்வு நங்கூரமிட்டு இருந்தது!
வண்ணத்துப்பூச்சியின் சிறகு அசைவில் எங்கோ சூறாவளி உருவாகும் கேயாஸ் தியரி போல, மீந்துபோன சாம்பாரை ப்ளாஸ்டிக் கவரோடு ரயில் பயணத்தின்போது வீசி எறிவதில்கூட, யாருடைய வாழ்க்கைப் பயணத்திலோ ப்ளாஸ்டிக்கின் சுவடுகளான அடினோ கார்சினோமா தூக்கிச் செருகும் சாத்தியம் மிக அதிகம். பின்னிரவில் முகநூலில் ஏற்றிய தன் புகைப்படத்துக்கு எத்தனை 'லைக்ஸ்’ விழுந்திருக்கின்றன என இரவெல்லாம் பரபரப்புடன் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை செல்போனைச் சீண்டும் இளசுகளுக்கு, உறக்கம் தொலைத்த தன் உடம்புக்கு நோய்க்கூட்டம் 'லைக்’ போட்டிருக்கும் விஷயம் தெரியவில்லை. இதுவும் இன்னபிறவுமாக நல்வாழ்வு தொடர்பான விசாலமான பார்வையை விதைப்பதே நலம் '360’-ன் நோக்கம்!
'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்பது முதுமொழி. ஆனால், அந்த எண்சாண் உடம்பு, நலத்தோடு அன்றாடம் நகர்வதற்கு அடிப்படையான விஷயம் வயிறும் அதில் நடக்கும் செரிமானமும்தான். சாப்பிட கொஞ்சமே கொஞ்சம் தாமதமானாலும் லேசாக நெஞ்சாங்கூட்டுக்குக் கீழே எரிவதும், 'எண்ணெய் பலகாரம் வீணாகுதே’ என என்றைக்கோ ஒரு நாள் சாப்பிட்டதற்கு, அடுத்த இரண்டு நாள்கள் ஏப்பத்தில் வாசம் காட்டி வதைப்பதையும் நாம் பல சமயம் அலட்சியப்படுத்திவிடுவது உண்டு. அரிசியையும், கம்பையும், சோளத்தையும், மணத்தக்காளிக் கீரையையும் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பார்த்துப் பழகிய நம் ஜீரண மரபுக்கு, சிவப்பு சிக்கன் பீஸுடன் வரும் 'அலூரா சிவப்பு’, 'எரித்ரோசைன்’ ஆகியவை கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். இந்தத் திகிலில், சில துளி ஜீரணசுரப்பைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும்போதுதான் அல்சரில் இருந்து கொலைட்டிஸ் வரை குடலின் இயல்பு தாறுமாறாகச் சிதைகிறது. கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி ஜெயித்துவிடலாம் என்று பழகிவிட்ட டி-20 மனம், அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு கடைசி நிமிடத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு அரக்கப் பரக்கக் கிளம்பும் பழக்கம்... இவைதான் வியாதிக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கும்!
உமிழ்நீரில் தொடங்குகிறது ஜீரணம். உணவு மேஜையில் மூக்கின் மோப்பத்தில் தொடங்குகிறது என்றுகூட சொல்லலாம். 24 மணி நேரத்தில் சுரக்கும் சுமார் 11.25 லிட்டர் எச்சில், அதனுடன் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டை உடைத்து, குளுக்கோஸ் துகள்களாக்கி ஜீரணத்துக்கு பிள்ளையார் சுழி போடுகிறது.
ஒரு துண்டு உணவு உள்ளே போனதும் வாயில் ஊறும் எச்சிலில் உணவைச் செரிக்க உதவும் மியூசின் அமைலோஸ் சுரப்புகளும், உடலுக்கு ஒவ்வாத பொருள்களை முறித்து வெளியேற்றும் லைபேஸ் நொதியும் சுரக்கத் தொடங்கும். உணவை மெதுவாக நொறுக்கி, அந்த உமிழ்நீருடன் கலந்து உள் அனுப்ப வேண்டும். இதற்கு எல்லாம் அறுசுவையை உணரும் ஆசுவாசமான மனம் நிச்சயம் வேண்டும். இடது கையில் கம்ப்யூட்டர் மவுஸோ, ஸ்மார்ட் போனோ, தொலைக்காட்சி ரிமோட்டோ... ஏன் 'ஆறாம்திணை’ புத்தகமோ வைத்துக்கொண்டு வலது கையில் பாற்கடல் அமிர்தம் சாப்பிட்டால்கூட அது பாழ் தான். உணவு உத்தமமாக ஜீரணிக்க பரபரப்பு இல்லாத மனம் அடிப்படைத் தகுதி.
உடலை நோய்ப்பிடிக்குச் சிக்காமல் தற்காக்கும் பொடி வகைகளை நம் முன்னோர்கள் காலம் காலமாக உணவில் சேர்த்து வந்திருக்கின்றனர். சாதாரண சளி, இருமலில் இருந்து சர்க்கரை வியாதி வரை காக்கும் அப்படியான ஒரு பொடி அன்னப் பொடி. சமீபமாக எக்குத்தப்பு இரவு விருந்து உண்டாக்கும் எதுக்களிப்பு, வயிறு முதல் தொண்டை வரை எரியவைத்து நாள்பட்ட வயிற்று வியாதியை (Gastroesophageal Reflux Disease) வரவைக்கிறது. இதற்கு அன்னப்பொடி மிகச் சிறந்த மருந்து. ஜீரணத்தை வரைமுறைப்படுத்தும் அன்னப்பொடியின் செய்முறை பெட்டிச் செய்தியில்.
தாய்ப்பாலுக்குப் பின் அரிசி/கஞ்சியில் தொடங்கி, ஐந்து வயதுக்குள்ளாகவே ஹைதராபாத் தம் பிரியாணி வரை ஜீரணிக்கப் பழகும் நம் ஜீரண மண்டலம், உடலுக்கான மிகப் பெரிய பாதுகாப்பான அரண். அதில் ஓட்டை உடைசல் ஏற்படுவதற்குக் காரணம்... வாயைக் கட்டாமல் வளைத்து அடிக்கும் மனோபாவமும், எதைத் தின்கிறோம் என்ற அக்கறையில்லாத வாழ்வியலும், 'ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுப் போயேன்’ என்ற கரிசனக் குரலை அலட்சியப்படுத்தி நகர்வதும்தான். சின்னச் சின்ன அக்கறைகளை சிறுவயது முதல் உண்டாக்குவது மட்டுமே நாளைய நலவாழ்வுக்கான நம்பிக்கைகள்.
நம்பிக்கையோடு நலம் காப்போம்!
- நலம் பரவும்...
அன்னப்பொடி
தேவையான பொருள்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், நிழலில் உலர்த்திய கறிவேப்பிலை, கல் உப்பு அனைத்தும் தலா 50 கிராம். பெருங்காயம் 25 கிராம்.
செய்முறை: சுக்கின் புறத்தோலைச் சீவி உலர்த்தி, மற்றவற்றை எல்லாம் நன்கு குப்பை நீக்கி உலர்த்தி, அனைத்தையும் பொன்வறுவலாக வாணலியில் வறுத்து, பொடித்துவைத்துக்கொண்டு வாரம் மூன்று நாள் முதல் உருண்டைச் சோற்றில் பிசைந்து சாப்பிடுவது அஜீரணத்தைப் போக்கும் எளிய மருந்து.
உணவுக்கு முன் வெந்தயப்பொடி, உணவோடு அன்னப்பொடி அல்லது ஐங்காயப்பொடி, உணவில் தூதுவளை ரசம், உணவுக்குப் பின் கடுக்காய்ப்பொடி என்று உணவை மருந்தாக்கிச் சாப்பிட்டவர்கள் நாம். நவீனத்தில் மாடுலர் கிச்சனாக மாறிப்போன அடுப்பங்கரையில், ஆலிவ் ஆயிலும் மயோனைஸும் குடியேறி, ஓமத்தையும் திப்பிலியையும் ஓரங்கட்டி ஒழித்துவிட்டன. கொஞ்சம் அவற்றை மீட்டெடுத்து சாம்பார் பொடி, ரசப்பொடி செய்வது போல அன்னப்பொடி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். ஆரோக்கியம் உங்கள் வீட்டில் ஆயுளுக்கும் குடியிருக்கும்!
சுகர், பி.பி., போன்றவற்றை தவிர்க்க, தமிழர்கள் 'கை’க்கொள்ளும் ஒரே உத்தி... நடைப்பயிற்சி! ஆனால், நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி முறையானதா? இதுகுறித்த சில சரி, தப்பு விவரங்கள் இங்கே...
நடைப்பயிற்சிக்கு மாற்றாக மருந்து கிடையாது. இந்தப் பயிற்சி இல்லாமல் எடை குறைக்கவோ, சர்க்கரை நோயை வெல்வதோ சாத்தியமே இல்லை.
எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். காலையில்தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. இரவில் நடக்கையில் 5-10 சதவிகிதம் பயன் குறையலாமே தவிர, தப்பு கிடையாது.
ஓடுவதற்கும் நடப்பதற்கும் கலோரி எரிப்பில் அதிக வித்தியாசங்கள் இல்லை. 30 நிமிடங்களில் 3 கி.மீ கடக்கும் வேகத்தில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் நடக்கலாம். ஆனால், 'விண்டோ ஷாப்பிங்’ போல பராக்குப் பார்த்துக்கொண்டே நடப்பது அதிகம் பயன் தராது.
நடைக்கு முன்னர் தேநீர் அருந்தலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சிக்கு முன்னர் பச்சைத் தேநீரும், கொஞ்சம் முளைகட்டிய பயறு அடங்கிய சுண்டலும் சாப்பிடலாம்.
நடக்கும் 45 மணித்துளிகளும் பாட்டு கேட்டுக்கொண்டே நடப்பேன்’ எனப் பிடிவாதம் பிடித்தால், கூடிய விரைவில் ஆரோக்கியமான காதுகேளாதவராக மாறக்கூடும்.
குடும்ப உறவுச் சிக்கல்கள், ஷேர் வேல்யூ, பட விமர்சனம், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் எனப் பேசிக்கொண்டு நடப்பது உடற்சோர்வையும் மன உளைச்சலையுமே தரும்.
'அதான் கிச்சன்ல, மொட்டைமாடில நடக்கிறேனே... அதுவே ரெண்டு கி.மீ வரும்!’ போன்ற சமாதானங்கள் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது.
சர்க்கரை நோயாளிகள், கண்டிப்பாக வெறும் காலில் நடக்கக் கூடாது. தரமான, எடை குறைவான, மெத்தென்ற கேன்வாஸ் ஷூ அல்லது செருப்பு நல்லது.
நலம் 360’ - 1
மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்
குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது!
''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை’ முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் தோசை சுடுறா. வித்துடலாம்னு சொன்ன பூமில 'ஏதாச்சும் செய்யலாமாப்பா?’னு பையன் கேட்கிறான். இப்போ 'ஆறாம்திணை’யைக் கண்டிப்பா நிறுத்தியே ஆகணுமாப்பா?'' மேலும் நெகிழ்வுடனும் ஆதங்கத்துடனும் அந்தத் திருப்பூர் பெரியவர் பேசப் பேச, நான் அழுதேவிட்டேன். எத்தனை கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், இணையத்தில், சமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்த அரவணைப்புகளில் நானும் விகடனும் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டோம். இழந்ததையும் தொலைத்ததையும் எடுத்துச் சொல்லி, தினம் நம் மீது இறுகும் இறுக்கமான வணிகப்பிடியை அடையாளம் காட்டி, நலவாழ்வை நோக்கி நகர வழிகாட்டிய வரிகள்தான் 'ஆறாம்திணை’ கட்டுரையின் வாசக்கால்கள். அழுக்குப் புடைவை அணிந்த பொக்கை வாய்ப் பாட்டியைக் கண்டதும் பட்டணத்துப் பேரக் குழந்தை ஓடிச்சென்று கட்டி அணைப்பது போலதான், 'ஆறாம்திணை’யை அதன் வாசகர்கள் உச்சிமோந்து அணைத்துக்கொண்டார்கள்.
அதே நெகிழ்வுடனும் நிறைவுடனும் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு வரலாம் என சென்னை வெப்பத்தில் இருந்து தப்பி, சொந்த கிராமத்துக்குச் சென்று, பக்கத்துத் தோட்டத்தில் புதுசாக வாங்கியிருந்த டிராக்டரை குதூகலமாக ஓட்டிப்பார்த்தபோதுதான் அந்த அழைப்பு! ''சார்... எங்க இருக்கீங்க?'' என விகடன் ஆசிரியர் தொலைபேசினார். ''சின்ன பிரேக் எடுத்துக்கலாம்னு சொன்னீங்களே... அதான் ஊரு பக்கம் வந்துட்டேன்...'' என நான் பதிலளிக்க, ''இங்க மெயிலும் போனும் கதறது. ''ஆறாம்திணை’யை ஏன் நிறுத்தினீங்க?’னு கேட்கிறாங்க. அடுத்த வெர்ஷனை உடனே ஆரம்பிச்சிடலாம்னு ஐடியா. தலைப்புகூட முடிவு பண்ணிட்டோம். நீங்க ரெடியா?'' என்று கேட்க, 'நலம் 360’ பூத்துவிட்டது.
'நலம் 360’... வெறும் மருத்துவக் கட்டுரை அல்ல. நலவாழ்வு என்பது மருந்து, மாத்திரை, கசாயம், ஈ.சி.ஜி. விஷயம் அல்ல. ஆரோக்கியம் என்பது, சிக்ஸ்பேக் உடம்பில் கட்டமைக்கப்படுவதும் கிடையாது. ஆறு லட்சம் பாலிசி மூலம் அதை வாங்கி வீட்டில் வைக்கவும் முடியாது. அஞ்சறைப்பெட்டியிலும், அடுப்பாங்கரைப் பரணில் கவிழ்த்திவைத்த வெங்கலத் தவலையிலும், ரசம் வைக்கும் ஈயச்சட்டியிலும், பட்டாசல் மாடக்குழியில் பத்திரப்படுத்திய அகல்விளக்கிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களில் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி, கீழாநெல்லியிலும், கரிசாலை கண்மையிலும், கத்தாழை எண்ணெய்க் குளியலிலும், வசம்புக் கட்டை கை வளவியிலும், மருதாணிப் பற்றிலும், புளியில்லா பொரிச்ச குழம்பிலும், சுண்டுவார் ரசத்திலும், இடுப்புச் சுருக்குப்பை தாம்பூலத்திலும்தான் நம் நலவாழ்வு நங்கூரமிட்டு இருந்தது!
வண்ணத்துப்பூச்சியின் சிறகு அசைவில் எங்கோ சூறாவளி உருவாகும் கேயாஸ் தியரி போல, மீந்துபோன சாம்பாரை ப்ளாஸ்டிக் கவரோடு ரயில் பயணத்தின்போது வீசி எறிவதில்கூட, யாருடைய வாழ்க்கைப் பயணத்திலோ ப்ளாஸ்டிக்கின் சுவடுகளான அடினோ கார்சினோமா தூக்கிச் செருகும் சாத்தியம் மிக அதிகம். பின்னிரவில் முகநூலில் ஏற்றிய தன் புகைப்படத்துக்கு எத்தனை 'லைக்ஸ்’ விழுந்திருக்கின்றன என இரவெல்லாம் பரபரப்புடன் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை செல்போனைச் சீண்டும் இளசுகளுக்கு, உறக்கம் தொலைத்த தன் உடம்புக்கு நோய்க்கூட்டம் 'லைக்’ போட்டிருக்கும் விஷயம் தெரியவில்லை. இதுவும் இன்னபிறவுமாக நல்வாழ்வு தொடர்பான விசாலமான பார்வையை விதைப்பதே நலம் '360’-ன் நோக்கம்!
'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்பது முதுமொழி. ஆனால், அந்த எண்சாண் உடம்பு, நலத்தோடு அன்றாடம் நகர்வதற்கு அடிப்படையான விஷயம் வயிறும் அதில் நடக்கும் செரிமானமும்தான். சாப்பிட கொஞ்சமே கொஞ்சம் தாமதமானாலும் லேசாக நெஞ்சாங்கூட்டுக்குக் கீழே எரிவதும், 'எண்ணெய் பலகாரம் வீணாகுதே’ என என்றைக்கோ ஒரு நாள் சாப்பிட்டதற்கு, அடுத்த இரண்டு நாள்கள் ஏப்பத்தில் வாசம் காட்டி வதைப்பதையும் நாம் பல சமயம் அலட்சியப்படுத்திவிடுவது உண்டு. அரிசியையும், கம்பையும், சோளத்தையும், மணத்தக்காளிக் கீரையையும் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பார்த்துப் பழகிய நம் ஜீரண மரபுக்கு, சிவப்பு சிக்கன் பீஸுடன் வரும் 'அலூரா சிவப்பு’, 'எரித்ரோசைன்’ ஆகியவை கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். இந்தத் திகிலில், சில துளி ஜீரணசுரப்பைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும்போதுதான் அல்சரில் இருந்து கொலைட்டிஸ் வரை குடலின் இயல்பு தாறுமாறாகச் சிதைகிறது. கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி ஜெயித்துவிடலாம் என்று பழகிவிட்ட டி-20 மனம், அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு கடைசி நிமிடத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு அரக்கப் பரக்கக் கிளம்பும் பழக்கம்... இவைதான் வியாதிக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கும்!
உமிழ்நீரில் தொடங்குகிறது ஜீரணம். உணவு மேஜையில் மூக்கின் மோப்பத்தில் தொடங்குகிறது என்றுகூட சொல்லலாம். 24 மணி நேரத்தில் சுரக்கும் சுமார் 11.25 லிட்டர் எச்சில், அதனுடன் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டை உடைத்து, குளுக்கோஸ் துகள்களாக்கி ஜீரணத்துக்கு பிள்ளையார் சுழி போடுகிறது.
ஒரு துண்டு உணவு உள்ளே போனதும் வாயில் ஊறும் எச்சிலில் உணவைச் செரிக்க உதவும் மியூசின் அமைலோஸ் சுரப்புகளும், உடலுக்கு ஒவ்வாத பொருள்களை முறித்து வெளியேற்றும் லைபேஸ் நொதியும் சுரக்கத் தொடங்கும். உணவை மெதுவாக நொறுக்கி, அந்த உமிழ்நீருடன் கலந்து உள் அனுப்ப வேண்டும். இதற்கு எல்லாம் அறுசுவையை உணரும் ஆசுவாசமான மனம் நிச்சயம் வேண்டும். இடது கையில் கம்ப்யூட்டர் மவுஸோ, ஸ்மார்ட் போனோ, தொலைக்காட்சி ரிமோட்டோ... ஏன் 'ஆறாம்திணை’ புத்தகமோ வைத்துக்கொண்டு வலது கையில் பாற்கடல் அமிர்தம் சாப்பிட்டால்கூட அது பாழ் தான். உணவு உத்தமமாக ஜீரணிக்க பரபரப்பு இல்லாத மனம் அடிப்படைத் தகுதி.
உடலை நோய்ப்பிடிக்குச் சிக்காமல் தற்காக்கும் பொடி வகைகளை நம் முன்னோர்கள் காலம் காலமாக உணவில் சேர்த்து வந்திருக்கின்றனர். சாதாரண சளி, இருமலில் இருந்து சர்க்கரை வியாதி வரை காக்கும் அப்படியான ஒரு பொடி அன்னப் பொடி. சமீபமாக எக்குத்தப்பு இரவு விருந்து உண்டாக்கும் எதுக்களிப்பு, வயிறு முதல் தொண்டை வரை எரியவைத்து நாள்பட்ட வயிற்று வியாதியை (Gastroesophageal Reflux Disease) வரவைக்கிறது. இதற்கு அன்னப்பொடி மிகச் சிறந்த மருந்து. ஜீரணத்தை வரைமுறைப்படுத்தும் அன்னப்பொடியின் செய்முறை பெட்டிச் செய்தியில்.
தாய்ப்பாலுக்குப் பின் அரிசி/கஞ்சியில் தொடங்கி, ஐந்து வயதுக்குள்ளாகவே ஹைதராபாத் தம் பிரியாணி வரை ஜீரணிக்கப் பழகும் நம் ஜீரண மண்டலம், உடலுக்கான மிகப் பெரிய பாதுகாப்பான அரண். அதில் ஓட்டை உடைசல் ஏற்படுவதற்குக் காரணம்... வாயைக் கட்டாமல் வளைத்து அடிக்கும் மனோபாவமும், எதைத் தின்கிறோம் என்ற அக்கறையில்லாத வாழ்வியலும், 'ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுப் போயேன்’ என்ற கரிசனக் குரலை அலட்சியப்படுத்தி நகர்வதும்தான். சின்னச் சின்ன அக்கறைகளை சிறுவயது முதல் உண்டாக்குவது மட்டுமே நாளைய நலவாழ்வுக்கான நம்பிக்கைகள்.
நம்பிக்கையோடு நலம் காப்போம்!
- நலம் பரவும்...
அன்னப்பொடி
தேவையான பொருள்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், நிழலில் உலர்த்திய கறிவேப்பிலை, கல் உப்பு அனைத்தும் தலா 50 கிராம். பெருங்காயம் 25 கிராம்.
செய்முறை: சுக்கின் புறத்தோலைச் சீவி உலர்த்தி, மற்றவற்றை எல்லாம் நன்கு குப்பை நீக்கி உலர்த்தி, அனைத்தையும் பொன்வறுவலாக வாணலியில் வறுத்து, பொடித்துவைத்துக்கொண்டு வாரம் மூன்று நாள் முதல் உருண்டைச் சோற்றில் பிசைந்து சாப்பிடுவது அஜீரணத்தைப் போக்கும் எளிய மருந்து.
உணவுக்கு முன் வெந்தயப்பொடி, உணவோடு அன்னப்பொடி அல்லது ஐங்காயப்பொடி, உணவில் தூதுவளை ரசம், உணவுக்குப் பின் கடுக்காய்ப்பொடி என்று உணவை மருந்தாக்கிச் சாப்பிட்டவர்கள் நாம். நவீனத்தில் மாடுலர் கிச்சனாக மாறிப்போன அடுப்பங்கரையில், ஆலிவ் ஆயிலும் மயோனைஸும் குடியேறி, ஓமத்தையும் திப்பிலியையும் ஓரங்கட்டி ஒழித்துவிட்டன. கொஞ்சம் அவற்றை மீட்டெடுத்து சாம்பார் பொடி, ரசப்பொடி செய்வது போல அன்னப்பொடி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். ஆரோக்கியம் உங்கள் வீட்டில் ஆயுளுக்கும் குடியிருக்கும்!
சுகர், பி.பி., போன்றவற்றை தவிர்க்க, தமிழர்கள் 'கை’க்கொள்ளும் ஒரே உத்தி... நடைப்பயிற்சி! ஆனால், நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி முறையானதா? இதுகுறித்த சில சரி, தப்பு விவரங்கள் இங்கே...
நடைப்பயிற்சிக்கு மாற்றாக மருந்து கிடையாது. இந்தப் பயிற்சி இல்லாமல் எடை குறைக்கவோ, சர்க்கரை நோயை வெல்வதோ சாத்தியமே இல்லை.
எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். காலையில்தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. இரவில் நடக்கையில் 5-10 சதவிகிதம் பயன் குறையலாமே தவிர, தப்பு கிடையாது.
ஓடுவதற்கும் நடப்பதற்கும் கலோரி எரிப்பில் அதிக வித்தியாசங்கள் இல்லை. 30 நிமிடங்களில் 3 கி.மீ கடக்கும் வேகத்தில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் நடக்கலாம். ஆனால், 'விண்டோ ஷாப்பிங்’ போல பராக்குப் பார்த்துக்கொண்டே நடப்பது அதிகம் பயன் தராது.
நடைக்கு முன்னர் தேநீர் அருந்தலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சிக்கு முன்னர் பச்சைத் தேநீரும், கொஞ்சம் முளைகட்டிய பயறு அடங்கிய சுண்டலும் சாப்பிடலாம்.
நடக்கும் 45 மணித்துளிகளும் பாட்டு கேட்டுக்கொண்டே நடப்பேன்’ எனப் பிடிவாதம் பிடித்தால், கூடிய விரைவில் ஆரோக்கியமான காதுகேளாதவராக மாறக்கூடும்.
குடும்ப உறவுச் சிக்கல்கள், ஷேர் வேல்யூ, பட விமர்சனம், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் எனப் பேசிக்கொண்டு நடப்பது உடற்சோர்வையும் மன உளைச்சலையுமே தரும்.
'அதான் கிச்சன்ல, மொட்டைமாடில நடக்கிறேனே... அதுவே ரெண்டு கி.மீ வரும்!’ போன்ற சமாதானங்கள் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது.
சர்க்கரை நோயாளிகள், கண்டிப்பாக வெறும் காலில் நடக்கக் கூடாது. தரமான, எடை குறைவான, மெத்தென்ற கேன்வாஸ் ஷூ அல்லது செருப்பு நல்லது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093347விமந்தனி wrote:தமிழ்நேசன்1981 wrote:இந்த தொடர் தற்போது விகடனில் தொடராக வந்து கொண்டிருக்கிறது அம்மா...அதை வாராவாரம் இங்கே பகிர்ந்து கொண்டு வருகிறேன் தொடர் முடிந்தவுடன் மின்நூலாக மின்நூல்பகுதியில் தருகிறேன்..பின்னூட்டங்களுக்கு
மிக முக்கியமான பதிவாயிற்றே என்று word -ல் குறித்துக்கொண்டு வருகிறேன் தமிழ். மறவாமல் மின்னூலாக தந்து விடுங்கள்.
ம்....நான் இன்னைக்குத்தான் பார்த்தேன் விமந்தினி, ' மாய்ந்து மாய்ந்து ' படித்து குறிப்பெடுக்கிறேன் ..............நேசன் மின்னூலாக போடுவதாக சொன்னதால்..............வெறுமன படிக்கிறேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:தமிழ்நேசன்1981 wrote:இந்த தொடர் தற்போது விகடனில் தொடராக வந்து கொண்டிருக்கிறது அம்மா...அதை வாராவாரம் இங்கே பகிர்ந்து கொண்டு வருகிறேன் தொடர் முடிந்தவுடன் மின்நூலாக மின்நூல்பகுதியில் தருகிறேன்..பின்னூட்டங்களுக்கு
மிக முக்கியமான பதிவாயிற்றே என்று word -ல் குறித்துக்கொண்டு வருகிறேன் தமிழ். மறவாமல் மின்னூலாக தந்து விடுங்கள்.
ம்....நான் இன்னைக்குத்தான் பார்த்தேன் விமந்தினி, ' ' மாய்ந்து மாய்ந்து ' படித்து குறிப்பெடுக்கிறேன் ..............நேசன் மின்னூலாக போடுவதாக சொன்னதால்..............வெறுமன படிக்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் திரி நேசன்..........எல்லாவற்றையும் படித்து முடித்து விட்டேன் நன்றி !
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093885krishnaamma wrote:சூப்பர் திரி நேசன்..........எல்லாவற்றையும் படித்து முடித்து விட்டேன் நன்றி !
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093885krishnaamma wrote:சூப்பர் திரி நேசன்..........எல்லாவற்றையும் படித்து முடித்து விட்டேன் நன்றி !
இந்த தொடரை எழுதிவரும் மருத்துவர் சிவராமன் அவர்களின் ஆறாம் திணை மின்நூலாக மின்நூல் பகுதியில் பதிவிட்டிருந்தேன்..படித்தீர்களா அம்மா..படிக்கவேண்டிய நூல் அது..இதுவரை படிக்கவில்லை என்றால் தவறாமல் படியுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093889தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093885krishnaamma wrote:சூப்பர் திரி நேசன்..........எல்லாவற்றையும் படித்து முடித்து விட்டேன் நன்றி !
இந்த தொடரை எழுதிவரும் மருத்துவர் சிவராமன் அவர்களின் ஆறாம் திணை மின்நூலாக மின்நூல் பகுதியில் பதிவிட்டிருந்தேன்..படித்தீர்களா அம்மா..படிக்கவேண்டிய நூல் அது..இதுவரை படிக்கவில்லை என்றால் தவறாமல் படியுங்கள்.
இல்லை நேசன், பார்க்கவில்லை....இதோ பார்க்கிறேன் நன்றி !
லிங்க் தரமுடியுமா நேசன் ?
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093952krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093889தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093885krishnaamma wrote:சூப்பர் திரி நேசன்..........எல்லாவற்றையும் படித்து முடித்து விட்டேன் நன்றி !
இந்த தொடரை எழுதிவரும் மருத்துவர் சிவராமன் அவர்களின் ஆறாம் திணை மின்நூலாக மின்நூல் பகுதியில் பதிவிட்டிருந்தேன்..படித்தீர்களா அம்மா..படிக்கவேண்டிய நூல் அது..இதுவரை படிக்கவில்லை என்றால் தவறாமல் படியுங்கள்.
இல்லை நேசன், பார்க்கவில்லை....இதோ பார்க்கிறேன் நன்றி !
லிங்க் தரமுடியுமா நேசன் ?
இதோ லிங்க்
ஆறாம் திணை-மருத்துவர் கு.சிவராமன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் பாஸ்ட் நேசன் நன்றி !
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
நலம் 360’ - 18
மருத்துவர் கு.சிவராமன்,
ஆப்பிள் ஒருவேளை கசப்பான ஒரு கனியாக இருந்திருந்தால், ஆதாமின் பேச்சை ஏவாள் கேட்டிருக்கக்கூடும். இப்படி நாம் ஈ.எம்.ஐ கட்டிக் கஷ்டப்பட்டு வாழ வேண்டியிருந்திருக்காது. ஆணை பெண்ணும் பெண்ணை ஆணும் வசீகரிப்பதுபோல, அந்த இருதரப்பினரையும் ஈர்த்தபடியே இருப்பது இனிப்பு!
அன்றைய அடை, அப்பம், மோதகம் போன்றவற்றில் இருந்து, இன்றைக்கு நெய்க் குளியல் போட்டு வரும் மைசூர்பாகு வரை உலகின் இனிப்பு அவதாரங்கள் ஏராளம். ஆனால், சர்க்கரை வியாதி எனும் அசுரன் தொற்றிக்கொள்ள காதலன்/காதலிபோல சிலாகிக்கவைத்த இனிப்புகள், இப்போது நடுநிசி நாய் போல எரிச்சல் மிரட்டல் கொடுக்கின்றன. அதுவும், 'எத்தனை உடற்பயிற்சிகள் செய்தாலும், எவ்வளவு யோகா செய்தாலும், இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வந்தே தீரும். மரபு அணுவிலேயே அதற்கான டிசைன் இருக்கிறது’ என ஆராய்ச்சி அணுகுண்டுகளை வீசுகிறார்கள். மரபணுரீதியாக சர்க்கரை வியாதியில் உலகில் நாம் முதல் இடம் பிடிப்பதற்கு, சோன்பப்டி, மைசூர்பாகு ஆகியவை காரணங்கள் கிடையாது. கரும்பில் இருந்து இனிப்பைக் காய்ச்சி உருட்டும் வித்தையைக் கற்றுக்கொண்ட தருணத்தில்தான், சர்க்கரை நோய்க்கான டி.என்.ஏ-க்களை நம் மூதாதையர்கள் விதைக்கத் தொடங்கினார்கள்.
மற்ற உலக நாடுகள் தேனைத் தாண்டி வேறு எந்த இனிப்பையும் பார்த்திராத சமயத்தில், கரும்பு வெல்லம், பனை வெல்லம், இலுப்பைப் பூ என நாம் பன்னெடுங்காலமாக சாப்பிட்டு வந்த சர்க்கரைதான், இப்போது தெருவுக்கு மூன்று டயாபட்டிக் கிளினிக் ஆரம்பிக்கக் காரணமாக இருக்கிறது. என்ன, அப்போது இனிப்பு சாப்பிட்டதோடு, அலுவலோ வணிகமோ குதிரை/நடை/ஓட்டம்/சைக்கிள் மூலம் சென்று செய்தோம். சாப்பிட்ட இனிப்பு எரிந்தது. இப்போது உட்கார்ந்த இடத்தில் கூகுளாண்டவர் துணையுடன் முடித்துக்கொள்வதால், இனிப்பு எரியாமல் வளர்கிறது. கொலம்பஸ் தன் கடல் பயணத்தில் கனாரி தீவுப் பக்கம் ஓய்வுக்கு ஒதுங்க, அந்தத் தீவின் கவர்னர் அம்மா, கொஞ்சம் காதலுடன் கொலம்பஸுக்கு கரும்பைக் கொடுக்கும் வரை சர்க்கரை பற்றிய அறிமுகம் ஐரோப்பியருக்கு அவ்வளவாகத் தெரியாது என்கிறது வரலாறு. புத்தபிக்குகள் மூலம் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு கரும்பு பயணித்ததில், சீனர்களும் நமக்குப் போட்டியாக சர்க்கரை வியாதி ஒலிம்பிக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் இனிப்பு பனை வெல்லமாக, நாட்டுக் கரும்பு வெல்லமாக இருந்தவரை, உடம்பு அதனைப் பிரித்து எடுத்துப் பயன்படுத்தியதில் பாதகம் இல்லாமல், கூடவே 200-க்கும் மேற்பட்ட நல்ல பல கனிமங்களும் நொதிகளும் கிடைத்து வந்தன. இப்போது வேறு எந்தச் சத்தும் இல்லாத வெள்ளைச் சர்க்கரையில் இருக்கும் வெறும் குளுக்கோஸ் மாலிக்யூல்கள், வாய்க்குப்போன மாத்திரத்தில் ரத்தத்தில் கலக்கும்படி தயார் நிலையில் இருக்கின்றன. விளைவு... 'இயல்வது கரவேல்’ பாடலுடன், வருங்காலத்தில் 'இனிப்பு தொடேல்’ என்றும் பள்ளிகளில் சொல்லித் தரப்போகிறோம்!
2,000 வருடங்களில் நம் மரபணுக்கள் படிப்படியாக இனிப்பை ஜீரணிக்கும் வலிமையை இழந்துவருகின்றன. ஆனால், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு அவசியமான இனிப்பை நேரடியாக எடுக்காமல் கூட்டுச் சர்க்கரையாக, லேசில் உடைந்திடாத கட்டுப்பட்ட சர்க்கரையாக எடுப்பதுதான் புத்திசாலித்தனம். பாரம்பரியப் புரிதலின்படி இனிப்பு, உடலையும் திசுக்களையும் வளர்க்கும் சுவை. அனைத்து வயதினருமே முடிந்தவரை அதை இயற்கையாகக் கனிகளில் இருந்து எடுப்பதுதான் இப்போதைக்குப் புத்திசாலித்தனம். அதுவும் ஒட்டு மாம்பழம் போன்ற மிக இனிப்பான பழங்களைத் தவிர்த்து, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட கொய்யா, பப்பாளி, மாதுளை போன்ற பழங்களை அனுதினம் சாப்பிட வேண்டும். நம் பாரம்பரிய இனிப்புகளான பனை வெல்லம், ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட நாட்டு வெல்லம், தேன் ஆகிய இனிப்புகளை மட்டுமே, நம் குழந்தைகளின் நாவில் படும்படி வளர்க்கலாம்.
இந்தத் தீபாவளி முதலே அப்படி ஒரு முயற்சியை ஆரம்பித்தால் என்ன? நூற்றுக்கணக்கில் ரூபாய்களைச் செலவழித்து நெய், மில்க் ஸ்வீட்களை வாங்கி கிலோகணக்கான கலோரிகளை உடம்பில் சேர்த்துக்கொள்ள வேண்டுமா? உடலுக்கும் மனதுக்கும் சுற்றுப்புறத்துக்கும் எந்தப் பாதிப்பும் அளிக்காத ஸ்பெஷல் சிறுதானிய இனிப்பு ரெசிப்பி... இங்கே உங்களுக்காக!
(ரெசிப்பி உபயம்: 'ஏன் பஸ் எல்லாம் நிறுத்துறாங்க? அப்போ நாம ஊருக்குப் போக முடியாதா?’ என விசாரித்து சிக்கிக்கொண்ட கேப்பில், கைப்பக்குவம் காட்டிய என் அம்மாவும் சித்தியும்!).
ஸ்வீட் ஸ்டால் கியூவில் நின்று அட்டைப் பெட்டியில் அவசரகதியில் அள்ளி அடுக்கப்படும் ஸ்வீட்களை, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பது சம்பிரதாய சந்தோஷம் கொடுக்கலாம். ஆனால், சில மணித் துளிகளைச் செலவழித்து சிறுதானிய இனிப்புகளைச் செய்து பிரியமானவர்களுக்குக் கொடுத்தால், உங்கள் அக்கறையும் புலப்படும்; அவர்களின் ஆயுளும் அதிகரிக்கும்.
என்ன, பிரியமானவர்கள் மீது உங்களுக்கு அக்கறை உண்டுதானே!
பின் குறிப்பு: 'அட... சிறுதானிய இனிப்பு... ஒரு கட்டு கட்டலாம்!’ என, சர்க்கரை நண்பர்கள் களத்தில் குதித்துவிடாதீர்கள். அனைத்து இனிப்புகளுமே அளவோடுதான் உடம்பில் சேர வேண்டும். 'ஆர்கானிக் வெல்லம்தானே... அளவு இல்லாமல் சாப்பிடலாம்’ என்ற எண்ணம் தப்பு. உடலில் கிளைசிமிக் இண்டெக்ஸ் (சர்க்கரை சேரும் வேகம்) எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கிளைசிமிக் லோடும் (சர்க்கரை அளவு) முக்கியம். 'நான் டயாபட்டிக்... இன்சுலின் போடுறேன். வெல்லத்தில் செய்த தினை அதிரசமும் தேன் நெல்லியும் சாப்பிடலாமா?’ எனக் கேட்டால், 'ரொம்ப ஸாரி... இனிப்பு உண்டு மகிழும் உங்கள் குழந்தையைப் பார்த்து இன்முகம் காட்டுங்கள். பழசோ புதுசோ, உங்களுக்கு இனிப்பு வேண்டாம்’ என்பதே என் பதில்.
இனிப்பில் சுரக்கும் எண்டார்ஃபின்கள்தாம் காதலில் சுரக்கின்றது; கனிவில், கரிசனத்தில் நெகிழ்கையில் சுரக்கிறது; கரம்பற்றி அழுத்துகையில் சுரக்கிறது. உங்கள் குழந்தைக்குத் தரும் உச்சி முத்தத்தில் சுரக்கிறது; 'அ முதல் ஃ’ வரை எனக்குத் தெரியும், என் ஜன்னல் வெளியே நிற்கும் குருவிக்கோ வானம் தெரியும்!’ என்ற வண்ணதாசனின் கவிவரிகளை வாசிக்கையிலும் சுரக்கிறது.
இனிப்பை நாம் இப்படியும் பெறலாமே!
- நலம் பரவும்...
நேந்திரங்காய் உப்பேரி: நாகர்கோவில் நண்பர்கள் வார விடுமுறைக்கு ஊருக்குச் சென்று திரும்பும்போது, வாங்கிவரும் உப்பேரிக்கு நாக்கைப் தொங்கப்போட்டுக் காத்திருப்போம். உடலை வளர்க்கும் அந்த உப்பேரிக்கு ஊட்டம் தருவது நேந்திரம்பழம். அதிகம் பழுத்துக் கனியாமல், சிறிது பழுத்த நேந்திரங்காய்களை தோல் நீக்கி, நீளவாக்கில் இரண்டாகக் கீறி, அவற்றைக் கொஞ்சம் பருமனான துண்டுகளாக்கி, எண்ணெயில் பொரித்துக்கொள்ளுங்கள். அதில் கெட்டியான வெல்லப்பாகு, சுக்குப்பொடி சேர்த்துக் கிளறினால், உப்பேரி ரெடி. உப்பேரி மனதில் மப்பு ஏற்றும் ஊட்ட உணவு. எடை குறைவான குழந்தைகள் தினம் மாலையில் கொறிக்க மிகச் சிறந்த சிற்றுண்டி!
மனோகரம்: குற்றாலத்தில் குளித்து முடித்து அடித்துப்பிடித்து பேருந்தில் ஏறி வரும்போது, தென்காசி பேருந்து நிலையத்தில் ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டி வாங்கி, சப்புக்கொட்டிச் சாப்பிட்ட மனோகரத்தின் சுவை இப்போதும் நினைவில் இனிக்கிறது. தினை மாவு ஒரு கப் எடுத்துக்கொண்டு, சிறிது உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கரண்டியில் தேய்த்துப் பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். பொடித்த ஆர்கானிக் வெல்லம் அரை கப் எடுத்து, அதைக் கெட்டியான பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும். அந்தப் பாகில் ஏலக்காய்த் தூள், சுக்குப்பொடி கலந்து அதில் பொரித்த மாவைச் சேர்த்து நன்கு கிளறினால், மனோகரம் தயார். ஆறியதும் சுவைக்கலாம்!
கேழ்வரகு கிரிஸ்பி லட்டு: கரகர மொறுமொறு கிரிஸ்பி மிட்டாய்கள் கடையில்தான் கிடைக்குமா என்ன? வீட்டிலேயே அப்படியொரு கிரிஸ்பியான பண்டம் செய்ய முடியும். அதுவும் கேழ்வரகில்! கேழ்வரகு மாவை பூரிக்குப் பிசைவதுபோல் துளி உப்புநீர் விட்டு பதமாகப் பிசைந்து, எண்ணெயில் பூரிகளாகச் பொரித்து எடுத்துக்கொள்ளவும். அந்தப் பூரியை மிக்ஸியில் பொடித்து, அதோடு ஏலப்பொடி, வறுத்த முந்திரி கலந்து கெட்டியான வெல்லப் பாகு, நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்தால், கேழ்வரகு கிரிஸ்பி லட்டு ரெடி. எக்கச்சக்க விலையில் கிடைக்கும் இம்போர்டட் சாக்லேட்டின் சுவையையும் மிஞ்சும் இந்த கிரிஸ்பி லட்டு.
உலர் பழ உருண்டை: இது அடுப்புக்குப் போகாத ஓர் இனிப்பு. விதையை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிய பேரீச்சைப் பழம், கறுப்புத் திராட்சை, பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி இவற்றை மிக்ஸியில் சிறிது பொடித்துக்கொண்டு, அவற்றோடு சிறிது தேன் கலந்து உருண்டைகளாகப் பிடியுங்கள். ஒவ்வோர் உருண்டையும் உடம்புக்கு அத்தனை உறுதி. பழம் பிடிக்காமல் அடம்பிடிக்கும் அல்ட்ரா மாடர்ன் குழந்தைகளுக்கு, இந்த லட்டை உணவுக்கு முன் ஒன்று என மருந்துபோல கொடுங்கள். குழந்தைகள் உயரமாக, திடமாக வளர்வது உறுதி!
கருப்பட்டி மிட்டாய்: விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் பிரபலம் இந்தக் கருப்பட்டி மிட்டாய். உளுந்தை ஊறவைத்து இட்லி மாவுக்கு அரைப்பதுபோல் நைஸாக அரைத்து மாவாக்கி, அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். அந்த மாவை ஜாங்கிரிக்குப் பிழிவதுபோல பிழிந்துவைக்கவும். கருப்பட்டியைப் பொடித்து இளம்பாகாகக் காய்ச்சி, அதில் பிழிந்த மாவை ஊறவிட்டு எடுத்தால், கருப்பட்டி மிட்டாய் மினுங்கும்!
கருப்பட்டி கடலை பர்ஃபி: Palm nut burfi என ஓர் அழகான பேக்கிங்கில், உங்கள் குழந்தைக்கு நீங்கள் இந்தத் தீபாவளியில் புது பண்டத்தை அறிமுகப்படுத்துங்கள். நமக்குப் பழக்கமான கடலைமிட்டாய்தான் 'கருப்பட்டி பர்ஃபி’ என ரீமேக் அவதாரம் எடுத்திருக்கிறது. இனிப்புகளில் கடலைமிட்டாய்க்கு எப்போதும் நம்பர் ஒன் மரியாதை உண்டு. அவ்வளவு ஊட்டம் தரும் உணவு அது. வறுத்த நிலக்கடலையை நன்கு உடைத்து, கருப்பட்டிப் பாகில் கலந்து, ஒரு தட்டில்விட்டு பர்ஃபியாக வெட்டி வைத்துக்கொண்டால், கருப்பட்டி கடலை பர்ஃபி தயார். ஒவ்வொரு துணுக்கும் அம்புட்டு ஆரோக்கியம்... அம்புட்டு ருசி!
புட்டமுது: திருச்செந்தூர் முருகன் கோயிலின் பிரசாதம் இதுதான். குறிஞ்சி நிலக் கடவுள் முருகனின் உணவை இப்போது தினை அரிசியில் செய்கிறார்களா அல்லது வீரிய ஒட்டுரக அரிசியில் செய்கிறார்களா எனத் தெரியவில்லை. நாம் தினை அரிசியிலேயே செய்யலாம்.
ஒரு கப் தினை மாவை வாணலியில் மணம் வரும் வரை வறுக்க வேண்டும். தொட்டால் கை சுடும் பக்குவம் வந்தவுடன், அரை கப் பொடித்த வெல்லத்தை அதோடு சேர்த்து வறுக்க வேண்டும். வெல்லமும் மாவும் நன்கு கலந்ததும் ஒரு ஸ்பூன் பொடித்த ஏலக்காய், கொஞ்சம் நெய், வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கினால், சுவையான புட்டமுது தயார். இது பல நாள் கெடாது. புட்டமுது இனிப்புச் சுவையால் குழந்தைகளை ஈர்ப்பதோடு, அவர்களைப் புஷ்டியாக்கும் வாய்ப்பும் அதிகம்!
மருத்துவர் கு.சிவராமன்,
ஆப்பிள் ஒருவேளை கசப்பான ஒரு கனியாக இருந்திருந்தால், ஆதாமின் பேச்சை ஏவாள் கேட்டிருக்கக்கூடும். இப்படி நாம் ஈ.எம்.ஐ கட்டிக் கஷ்டப்பட்டு வாழ வேண்டியிருந்திருக்காது. ஆணை பெண்ணும் பெண்ணை ஆணும் வசீகரிப்பதுபோல, அந்த இருதரப்பினரையும் ஈர்த்தபடியே இருப்பது இனிப்பு!
அன்றைய அடை, அப்பம், மோதகம் போன்றவற்றில் இருந்து, இன்றைக்கு நெய்க் குளியல் போட்டு வரும் மைசூர்பாகு வரை உலகின் இனிப்பு அவதாரங்கள் ஏராளம். ஆனால், சர்க்கரை வியாதி எனும் அசுரன் தொற்றிக்கொள்ள காதலன்/காதலிபோல சிலாகிக்கவைத்த இனிப்புகள், இப்போது நடுநிசி நாய் போல எரிச்சல் மிரட்டல் கொடுக்கின்றன. அதுவும், 'எத்தனை உடற்பயிற்சிகள் செய்தாலும், எவ்வளவு யோகா செய்தாலும், இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வந்தே தீரும். மரபு அணுவிலேயே அதற்கான டிசைன் இருக்கிறது’ என ஆராய்ச்சி அணுகுண்டுகளை வீசுகிறார்கள். மரபணுரீதியாக சர்க்கரை வியாதியில் உலகில் நாம் முதல் இடம் பிடிப்பதற்கு, சோன்பப்டி, மைசூர்பாகு ஆகியவை காரணங்கள் கிடையாது. கரும்பில் இருந்து இனிப்பைக் காய்ச்சி உருட்டும் வித்தையைக் கற்றுக்கொண்ட தருணத்தில்தான், சர்க்கரை நோய்க்கான டி.என்.ஏ-க்களை நம் மூதாதையர்கள் விதைக்கத் தொடங்கினார்கள்.
மற்ற உலக நாடுகள் தேனைத் தாண்டி வேறு எந்த இனிப்பையும் பார்த்திராத சமயத்தில், கரும்பு வெல்லம், பனை வெல்லம், இலுப்பைப் பூ என நாம் பன்னெடுங்காலமாக சாப்பிட்டு வந்த சர்க்கரைதான், இப்போது தெருவுக்கு மூன்று டயாபட்டிக் கிளினிக் ஆரம்பிக்கக் காரணமாக இருக்கிறது. என்ன, அப்போது இனிப்பு சாப்பிட்டதோடு, அலுவலோ வணிகமோ குதிரை/நடை/ஓட்டம்/சைக்கிள் மூலம் சென்று செய்தோம். சாப்பிட்ட இனிப்பு எரிந்தது. இப்போது உட்கார்ந்த இடத்தில் கூகுளாண்டவர் துணையுடன் முடித்துக்கொள்வதால், இனிப்பு எரியாமல் வளர்கிறது. கொலம்பஸ் தன் கடல் பயணத்தில் கனாரி தீவுப் பக்கம் ஓய்வுக்கு ஒதுங்க, அந்தத் தீவின் கவர்னர் அம்மா, கொஞ்சம் காதலுடன் கொலம்பஸுக்கு கரும்பைக் கொடுக்கும் வரை சர்க்கரை பற்றிய அறிமுகம் ஐரோப்பியருக்கு அவ்வளவாகத் தெரியாது என்கிறது வரலாறு. புத்தபிக்குகள் மூலம் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு கரும்பு பயணித்ததில், சீனர்களும் நமக்குப் போட்டியாக சர்க்கரை வியாதி ஒலிம்பிக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் இனிப்பு பனை வெல்லமாக, நாட்டுக் கரும்பு வெல்லமாக இருந்தவரை, உடம்பு அதனைப் பிரித்து எடுத்துப் பயன்படுத்தியதில் பாதகம் இல்லாமல், கூடவே 200-க்கும் மேற்பட்ட நல்ல பல கனிமங்களும் நொதிகளும் கிடைத்து வந்தன. இப்போது வேறு எந்தச் சத்தும் இல்லாத வெள்ளைச் சர்க்கரையில் இருக்கும் வெறும் குளுக்கோஸ் மாலிக்யூல்கள், வாய்க்குப்போன மாத்திரத்தில் ரத்தத்தில் கலக்கும்படி தயார் நிலையில் இருக்கின்றன. விளைவு... 'இயல்வது கரவேல்’ பாடலுடன், வருங்காலத்தில் 'இனிப்பு தொடேல்’ என்றும் பள்ளிகளில் சொல்லித் தரப்போகிறோம்!
2,000 வருடங்களில் நம் மரபணுக்கள் படிப்படியாக இனிப்பை ஜீரணிக்கும் வலிமையை இழந்துவருகின்றன. ஆனால், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு அவசியமான இனிப்பை நேரடியாக எடுக்காமல் கூட்டுச் சர்க்கரையாக, லேசில் உடைந்திடாத கட்டுப்பட்ட சர்க்கரையாக எடுப்பதுதான் புத்திசாலித்தனம். பாரம்பரியப் புரிதலின்படி இனிப்பு, உடலையும் திசுக்களையும் வளர்க்கும் சுவை. அனைத்து வயதினருமே முடிந்தவரை அதை இயற்கையாகக் கனிகளில் இருந்து எடுப்பதுதான் இப்போதைக்குப் புத்திசாலித்தனம். அதுவும் ஒட்டு மாம்பழம் போன்ற மிக இனிப்பான பழங்களைத் தவிர்த்து, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட கொய்யா, பப்பாளி, மாதுளை போன்ற பழங்களை அனுதினம் சாப்பிட வேண்டும். நம் பாரம்பரிய இனிப்புகளான பனை வெல்லம், ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட நாட்டு வெல்லம், தேன் ஆகிய இனிப்புகளை மட்டுமே, நம் குழந்தைகளின் நாவில் படும்படி வளர்க்கலாம்.
இந்தத் தீபாவளி முதலே அப்படி ஒரு முயற்சியை ஆரம்பித்தால் என்ன? நூற்றுக்கணக்கில் ரூபாய்களைச் செலவழித்து நெய், மில்க் ஸ்வீட்களை வாங்கி கிலோகணக்கான கலோரிகளை உடம்பில் சேர்த்துக்கொள்ள வேண்டுமா? உடலுக்கும் மனதுக்கும் சுற்றுப்புறத்துக்கும் எந்தப் பாதிப்பும் அளிக்காத ஸ்பெஷல் சிறுதானிய இனிப்பு ரெசிப்பி... இங்கே உங்களுக்காக!
(ரெசிப்பி உபயம்: 'ஏன் பஸ் எல்லாம் நிறுத்துறாங்க? அப்போ நாம ஊருக்குப் போக முடியாதா?’ என விசாரித்து சிக்கிக்கொண்ட கேப்பில், கைப்பக்குவம் காட்டிய என் அம்மாவும் சித்தியும்!).
ஸ்வீட் ஸ்டால் கியூவில் நின்று அட்டைப் பெட்டியில் அவசரகதியில் அள்ளி அடுக்கப்படும் ஸ்வீட்களை, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பது சம்பிரதாய சந்தோஷம் கொடுக்கலாம். ஆனால், சில மணித் துளிகளைச் செலவழித்து சிறுதானிய இனிப்புகளைச் செய்து பிரியமானவர்களுக்குக் கொடுத்தால், உங்கள் அக்கறையும் புலப்படும்; அவர்களின் ஆயுளும் அதிகரிக்கும்.
என்ன, பிரியமானவர்கள் மீது உங்களுக்கு அக்கறை உண்டுதானே!
பின் குறிப்பு: 'அட... சிறுதானிய இனிப்பு... ஒரு கட்டு கட்டலாம்!’ என, சர்க்கரை நண்பர்கள் களத்தில் குதித்துவிடாதீர்கள். அனைத்து இனிப்புகளுமே அளவோடுதான் உடம்பில் சேர வேண்டும். 'ஆர்கானிக் வெல்லம்தானே... அளவு இல்லாமல் சாப்பிடலாம்’ என்ற எண்ணம் தப்பு. உடலில் கிளைசிமிக் இண்டெக்ஸ் (சர்க்கரை சேரும் வேகம்) எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கிளைசிமிக் லோடும் (சர்க்கரை அளவு) முக்கியம். 'நான் டயாபட்டிக்... இன்சுலின் போடுறேன். வெல்லத்தில் செய்த தினை அதிரசமும் தேன் நெல்லியும் சாப்பிடலாமா?’ எனக் கேட்டால், 'ரொம்ப ஸாரி... இனிப்பு உண்டு மகிழும் உங்கள் குழந்தையைப் பார்த்து இன்முகம் காட்டுங்கள். பழசோ புதுசோ, உங்களுக்கு இனிப்பு வேண்டாம்’ என்பதே என் பதில்.
இனிப்பில் சுரக்கும் எண்டார்ஃபின்கள்தாம் காதலில் சுரக்கின்றது; கனிவில், கரிசனத்தில் நெகிழ்கையில் சுரக்கிறது; கரம்பற்றி அழுத்துகையில் சுரக்கிறது. உங்கள் குழந்தைக்குத் தரும் உச்சி முத்தத்தில் சுரக்கிறது; 'அ முதல் ஃ’ வரை எனக்குத் தெரியும், என் ஜன்னல் வெளியே நிற்கும் குருவிக்கோ வானம் தெரியும்!’ என்ற வண்ணதாசனின் கவிவரிகளை வாசிக்கையிலும் சுரக்கிறது.
இனிப்பை நாம் இப்படியும் பெறலாமே!
- நலம் பரவும்...
நேந்திரங்காய் உப்பேரி: நாகர்கோவில் நண்பர்கள் வார விடுமுறைக்கு ஊருக்குச் சென்று திரும்பும்போது, வாங்கிவரும் உப்பேரிக்கு நாக்கைப் தொங்கப்போட்டுக் காத்திருப்போம். உடலை வளர்க்கும் அந்த உப்பேரிக்கு ஊட்டம் தருவது நேந்திரம்பழம். அதிகம் பழுத்துக் கனியாமல், சிறிது பழுத்த நேந்திரங்காய்களை தோல் நீக்கி, நீளவாக்கில் இரண்டாகக் கீறி, அவற்றைக் கொஞ்சம் பருமனான துண்டுகளாக்கி, எண்ணெயில் பொரித்துக்கொள்ளுங்கள். அதில் கெட்டியான வெல்லப்பாகு, சுக்குப்பொடி சேர்த்துக் கிளறினால், உப்பேரி ரெடி. உப்பேரி மனதில் மப்பு ஏற்றும் ஊட்ட உணவு. எடை குறைவான குழந்தைகள் தினம் மாலையில் கொறிக்க மிகச் சிறந்த சிற்றுண்டி!
மனோகரம்: குற்றாலத்தில் குளித்து முடித்து அடித்துப்பிடித்து பேருந்தில் ஏறி வரும்போது, தென்காசி பேருந்து நிலையத்தில் ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டி வாங்கி, சப்புக்கொட்டிச் சாப்பிட்ட மனோகரத்தின் சுவை இப்போதும் நினைவில் இனிக்கிறது. தினை மாவு ஒரு கப் எடுத்துக்கொண்டு, சிறிது உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கரண்டியில் தேய்த்துப் பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். பொடித்த ஆர்கானிக் வெல்லம் அரை கப் எடுத்து, அதைக் கெட்டியான பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும். அந்தப் பாகில் ஏலக்காய்த் தூள், சுக்குப்பொடி கலந்து அதில் பொரித்த மாவைச் சேர்த்து நன்கு கிளறினால், மனோகரம் தயார். ஆறியதும் சுவைக்கலாம்!
கேழ்வரகு கிரிஸ்பி லட்டு: கரகர மொறுமொறு கிரிஸ்பி மிட்டாய்கள் கடையில்தான் கிடைக்குமா என்ன? வீட்டிலேயே அப்படியொரு கிரிஸ்பியான பண்டம் செய்ய முடியும். அதுவும் கேழ்வரகில்! கேழ்வரகு மாவை பூரிக்குப் பிசைவதுபோல் துளி உப்புநீர் விட்டு பதமாகப் பிசைந்து, எண்ணெயில் பூரிகளாகச் பொரித்து எடுத்துக்கொள்ளவும். அந்தப் பூரியை மிக்ஸியில் பொடித்து, அதோடு ஏலப்பொடி, வறுத்த முந்திரி கலந்து கெட்டியான வெல்லப் பாகு, நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்தால், கேழ்வரகு கிரிஸ்பி லட்டு ரெடி. எக்கச்சக்க விலையில் கிடைக்கும் இம்போர்டட் சாக்லேட்டின் சுவையையும் மிஞ்சும் இந்த கிரிஸ்பி லட்டு.
உலர் பழ உருண்டை: இது அடுப்புக்குப் போகாத ஓர் இனிப்பு. விதையை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிய பேரீச்சைப் பழம், கறுப்புத் திராட்சை, பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி இவற்றை மிக்ஸியில் சிறிது பொடித்துக்கொண்டு, அவற்றோடு சிறிது தேன் கலந்து உருண்டைகளாகப் பிடியுங்கள். ஒவ்வோர் உருண்டையும் உடம்புக்கு அத்தனை உறுதி. பழம் பிடிக்காமல் அடம்பிடிக்கும் அல்ட்ரா மாடர்ன் குழந்தைகளுக்கு, இந்த லட்டை உணவுக்கு முன் ஒன்று என மருந்துபோல கொடுங்கள். குழந்தைகள் உயரமாக, திடமாக வளர்வது உறுதி!
கருப்பட்டி மிட்டாய்: விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் பிரபலம் இந்தக் கருப்பட்டி மிட்டாய். உளுந்தை ஊறவைத்து இட்லி மாவுக்கு அரைப்பதுபோல் நைஸாக அரைத்து மாவாக்கி, அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். அந்த மாவை ஜாங்கிரிக்குப் பிழிவதுபோல பிழிந்துவைக்கவும். கருப்பட்டியைப் பொடித்து இளம்பாகாகக் காய்ச்சி, அதில் பிழிந்த மாவை ஊறவிட்டு எடுத்தால், கருப்பட்டி மிட்டாய் மினுங்கும்!
கருப்பட்டி கடலை பர்ஃபி: Palm nut burfi என ஓர் அழகான பேக்கிங்கில், உங்கள் குழந்தைக்கு நீங்கள் இந்தத் தீபாவளியில் புது பண்டத்தை அறிமுகப்படுத்துங்கள். நமக்குப் பழக்கமான கடலைமிட்டாய்தான் 'கருப்பட்டி பர்ஃபி’ என ரீமேக் அவதாரம் எடுத்திருக்கிறது. இனிப்புகளில் கடலைமிட்டாய்க்கு எப்போதும் நம்பர் ஒன் மரியாதை உண்டு. அவ்வளவு ஊட்டம் தரும் உணவு அது. வறுத்த நிலக்கடலையை நன்கு உடைத்து, கருப்பட்டிப் பாகில் கலந்து, ஒரு தட்டில்விட்டு பர்ஃபியாக வெட்டி வைத்துக்கொண்டால், கருப்பட்டி கடலை பர்ஃபி தயார். ஒவ்வொரு துணுக்கும் அம்புட்டு ஆரோக்கியம்... அம்புட்டு ருசி!
புட்டமுது: திருச்செந்தூர் முருகன் கோயிலின் பிரசாதம் இதுதான். குறிஞ்சி நிலக் கடவுள் முருகனின் உணவை இப்போது தினை அரிசியில் செய்கிறார்களா அல்லது வீரிய ஒட்டுரக அரிசியில் செய்கிறார்களா எனத் தெரியவில்லை. நாம் தினை அரிசியிலேயே செய்யலாம்.
ஒரு கப் தினை மாவை வாணலியில் மணம் வரும் வரை வறுக்க வேண்டும். தொட்டால் கை சுடும் பக்குவம் வந்தவுடன், அரை கப் பொடித்த வெல்லத்தை அதோடு சேர்த்து வறுக்க வேண்டும். வெல்லமும் மாவும் நன்கு கலந்ததும் ஒரு ஸ்பூன் பொடித்த ஏலக்காய், கொஞ்சம் நெய், வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கினால், சுவையான புட்டமுது தயார். இது பல நாள் கெடாது. புட்டமுது இனிப்புச் சுவையால் குழந்தைகளை ஈர்ப்பதோடு, அவர்களைப் புஷ்டியாக்கும் வாய்ப்பும் அதிகம்!
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நன்றி !!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|