புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
3 Posts - 4%
Baarushree
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
viyasan
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
prajai
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Rutu
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
1 Post - 1%
சிவா
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
1 Post - 1%
manikavi
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
2 Posts - 6%
viyasan
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
1 Post - 3%
Rutu
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
1 Post - 3%
manikavi
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:50 am

First topic message reminder :

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1

ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.

    1. சூரியன்
    2. சந்திரன்
    3. செவ்வாய்
    4. புதன்
    5. குரு
    6. சுக்கிரன்
    7. சனி
    8. ராகு
    9. கேது

இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.

அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.

    1. அஸ்வினி
    2. பரணி
    3. கார்த்திகை
    4. ரோகினி
    5. மிருகசீரிஷம்
    6. திருவாதரை
    7. புனர்ப்பூசம்
    8. பூசம்
    9. ஆயில்யம்
    10. மகம்
    11. பூரம்
    12. உத்திரம்
    13. ஹஸ்தம்
    14. சித்திரை
    15. ஸ்வாதி
    16. விசாகம்
    17. அனுஷம்
    18. கேட்டை
    19. மூலம்
    20. பூராடம்
    21. உத்திராடம்
    22. திருவோணம்
    23. அவிட்டம்
    24. சதயம்
    25. பூரட்டாதி
    26. உத்திரட்டாதி
    27. ரேவதி

நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.

தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.

இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள். நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.

நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:18 am

6-ம் வீட்டில் ல்க்கினாதிபதி இருந்தால் ஜாதகன் வியாதி உடையவனாக இருப்பார். அவருக்கு விரோதிகள், சத்துருக்கள், அவதூறு பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள். கடனுபாதைகள் நிறைந்தவரும், மனம் அமைதியற்றவனாகவும் இருப்பான். 6-ம் வீடு மறைவு ஸ்தானம் என்றும் துஸ்தானம் என்றும் அழைக்கப் படும். இந்த வீட்டில் இலக்கினதிபதி இருப்பது நல்லது அல்ல. 7-ம் வீட்டில் இலக்கினாதிபதி இருந்தால் ஸ்திரீ லோலனாகவும், ஆசைகள் உடையனவராகவும் இருப்பார். பொறுப்பை ஏற்காமல் வெளியில் சுற்றுபவனாகவும் இருப்பார். சிலருக்கு மனைவி மூலமாய் சொத்துக்கள் சேரும். நாம் கீழே ஜாதகம் No.3-ஐக் கொடுத்துள்ளோம்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Pic12


இவர் எந்த வேலையையும் பொறுப்புடன் செய்தது இல்லை. ஸ்திரி லோலனாக இருந்து இருக்கின்றார். எப்போதும் வெளியில் சுற்றுபவராக இருந்தார். இவருக்கு இலக்கினாதிபதி 7-ல்; நாம் மேலே கூறியவையெல்லாம் இவருக்குப் பொருந்தி இருக்கிறது. இலக்கினாதிபதி 8-ல் இருந்தால் ஆயுள் நிறைந்தவராக இருப்பார். ஆனால் சிரமத்துடன் குடுப்பத்தை நடத்துவராக இருப்பார். வறுமையுடனும் குடும்பத்தை நடத்துபவராக இருப்பார். சிலர் உடலில் தேவையான ஊட்டமைன்றி இருப்பர். 8-ம் இடம் மறைவு ஸ்தானம் என்று கூறுவார்கள். பொதுவாக 8-ல் இலக்கினாதிபதி இருப்பது விரும்பத்தக்கது அல்ல; 9-ம் இடத்தில் இலக்கினாதிபதி இருந்தால் தகப்பனாரின் அன்பையும், ஆதரவையும் ஆசிர்வாதத்தையும் பெற்றவராக இருப்பார். அதேபோல் பித்துருக்களின் அன்பைப் பெற்றவருமாய் இருப்பார். சத்தியத்துடன் நேர்வழியில் நடப்பவராகவும், தருமத்தைச் செய்பவராகவும், தெய்வவழிபாடும் நிறைந்தவராகவும் இருப்பார். இலக்கினத்திற்குப் 10-வது வீட்டில் இலக்கினாதிபதி இருந்தால் குடும்பப் பொறுப்பை அறிந்து நடப்பவராகவும், ஜீவன் பலம் உடையவராகவும் தெய்வபக்தி உள்ளவராகவும், புண்ணிய காரியத்தில் பற்றுள்ளவராகவும் நற்பெயறும் கீர்த்தியும் உள்ளவராகவும் இருப்பார். அரசாங்கத்தில் நற்பெயரும், செல்வாக்கும் அதிகாரமும் உயர்பதவிகளும் உள்ளவர். பந்துக்களிடமும் உற்றார் உறவினரிடம் பெயர் பெற்றவராகவும் இருப்பார். 10-ம் இடத்தில் இலக்கினாதிபதி இருப்பது மிக நல்லது. 11-ம் வீட்டில் இருந்தால் லாபமான தொழிலைச் செய்பவராகவும் நீண்ட ஆயுளை உடையவராகவும் இருப்பார். இவருக்கு மூத்த சகோதரர்களின் ஆதரவு நிறைந்து இருக்கும். வாழ்க்கையில் இவர் ஓர் நல்ல நிலைக்கு வருவார். 12-ம் வீட்டில் இருந்தால் எவ்வளவு வருமானம் வந்தாலும் செலவுகளும் அதிகம் இருக்கும். சிலர் அடிக்கடி இட மாற்றம் செய்வர். அலைச்சல் அதிகமாக இருக்கும். சோம்பேரி எனவும் திறமையற்றவர் எனவும் மற்றவர்களால் அழைக்கப்படுவர். சமயத்தில் அவப்பெயரும், நிந்தனைகளும் வந்து சேரும்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:18 am

இலக்கினாதிபதி 12 வீடுகளில் இருந்தால் என்ன பலன் என்பதைத் தெரிந்து கொண்டீர்கள். இலக்கினாதிபதி எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கிறது. இலக்கினாதிபதி 6, 8, 12-ம் வீட்டைத்தவிர மற்ற வீடுகளில் இருந்தால் சுபப் பலனைத் தருகிறார்.

கிரகங்கள் நமது உடலில் சிலவற்றை குறிக்கின்றனர். அவற்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.





சூரியன்ஆத்மாவிற்கு
சந்திரன்மனதிற்கு
செவ்வாய்உடல் வலிமைக்கு
புதன்பேச்சுக்கு
வியாழன்மகிழ்ச்சிக்கு
சுக்கிரன்உணர்ச்சிகளுக்கு
சனிவறுமைக்கு


ஏழு கிரகங்களும் மேற்கூறியவற்றிற்குக் காரகம் வகிக்கின்றன. இவைகள் எல்லாம் பலன் சொல்லப் பயன் படும். ஒரு கிரகம் வலுத்து இருந்தால் அந்த காரகத்துவம் நன்றாக இருக்கிறது எனப் பொருள். உதாரணமாக குரு வலுத்து இருந்தால் அவன் நல்ல குணங்களைப் பெற்றவனாகவும், பணவசதியுள்ளவனாகவும், குழந்தைப் பேரு உள்ளவனாகவும் இருப்பான் எனக் கொள்ளலாம். அதேபோல் புதன் வலுத்திருந்தால் அவன் கெட்டிக்காரனாகவும், பேச்சுவன்மை உள்ளவனாகவும் இருப்பான். ஆனால் சனி வலுத்து இருந்தால் துன்பங்கள் குறைந்து இருக்கும். சனி வலுவிழந்தால் துன்பங்கள் அதிகரிக்கும்.

நீங்கள் ஜோதிடப்புத்தகங்களை எல்லாம் படிக்க ஆரம்பிக்கலாம். படித்தால் தான் ஜோதிட அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக் கென்று பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் படியுங்கள். இனிமேல் உங்களுக்குப் புரியும்.

மறுபடி அடுத்த பாடத்தில் சந்திப்போம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:18 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 12


நீங்கள் ஜோதிட சம்மந்தமான புத்தகங்கள் படிக்க வேண்டும்என எழுதி இருந்தோம். ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கென்று பல புத்தகங்கள் இருக்கின்றன. இதைத் தவிர "ப்ருஹத் ஜாதகம்", "பல தீபிகை" "உத்தர காலாம்ருதம்" போன்ற நூல்கள் பல இருக்கின்றன. இவைகளைப் படிக்க ஆரம்பிக்கலாம். இவைகள் தான் ஜோதிடத்திற்கு அடிப்படை. படிக்கப் படிக்கத்தான் ஜோதிட அறிவு வளரும். முயற்சி செய்யுங்கள்.

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்குப் பல குணங்கள் உண்டு. அவற்றின் குணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அவை பலன் சொல்லப் பயன் படும்.

ஆண், பெண் ராசிகள் :

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள் எனப் படும். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண்ராசிகள் எனப்படும். ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் குணாதிசங்கள் அதிகம் உள்ளவர்கள் எனக் கொள்ளலாம். உதாரணமாக மேஷ இலக்கினத்தில் ஒரு பெண் பிறந்து இருப்பாரேயாகில் அவருக்கு ஆண்களின் குணாதிசியங்கள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது முன் கோபமும் முரட்டுத்தன்மை உடையவராக இருப்பார் எனக் கொள்ளலாம். அதேபோல் ஒரு பெண்ரசியில் ஒரு ஆண் பிறந்து இருப்பரேயாகில் அவருக்குப் பெண்களின் குணாதிசயங்கள் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது பயந்த சுபாவம் உள்ளவராகவும் கூச்ச சுபாவம் உள்ளவராகவும் இருப்பார் எனக் கொள்ளலாம். ஆண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசாபுக்தி காலங்களில் ஆண் சந்ததியையும், பெண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசா, புக்தி காலங்களில் பெண்சந்ததியையும் கொடுக்கும். பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணாவென்று அறிய இந்த ராசிகள் பயன் படும். ஒருவர் ஜாதகத்தில் 5-ம் வீடு ஆண்ராசியாகி, 5-க்குடையவர் ஆண்கிரகமாக இருந்து அவரும் ஆண் ராசியில் இருப்பாரேயாகில் அவருக்கு ஆண் சந்ததிகள் அதிகம் இருக்கும் என்று கூறலாம். 5-ம் வீடு பெண்ராசியாகி, 5-க்குடையவர் பெண் கிரகமாகி அவர் பெண் ராசியில் இருப்பாரேயகில் அவருக்கு பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். ராசிகளை ஆன், பெண் எனப் பிரிப்பதின் அவசியம் தெரிகிறது அல்லவா?

வடக்கு, தெற்கு ராசி

மேஷம் முதல் கன்னிவரை வடக்கு ராசி எனவும், துலாத்திலிருந்து மீனம் வரை தெற்கு ராசிகள் எனவும் அழைக்கப் படும்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:19 am

நெருப்பு ராசி (Fiery Signs)

மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு ராசி எனப் படும். இந்த மூன்று ராசிகளை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிக்க தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவும் இருப்பார்கள். இந்த நெருப்பு ராசியில் உள்ள கிரகங்களும் மேற்கூறிய தன்மைகளைப் பெற்று இருக்கும். நெருப்புராசியை ஜீவனமாகப் பெற்றவர்கள் நெருப்பு சம்மந்தப் பட்ட தொழிலில்

இருக்கவும் சாத்தியக் கூறுகள் உண்டு.

நிலராசி (Earthy Signs)

ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் இந்த ராசியைச் சேர்ந்தவை. இந்த ராசியை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல் படக் கூடியவர்கள். எதையும் யதார்த்தமாகவும், எச்சரிக்கையுடனும் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள். சிக்கனமாகச் செலவழிக்கும் மனது இவர்களுக்கு உண்டு. இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலை கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாயுத்தொந்தரவு உண்டு. ஜீவனஸ்தானமான 10-ம் இடம் நில ராசியாக வந்தால் நிலம், கட்டிடம் சம்மந்தமான வேலைகள், விவசாயம் ஆகியவை மிகுந்த பலன் தரும்.

காற்று ராசி (Airy sign)

நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர்கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். கற்பனை மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப் பட்டதால் மூளை சம்மந்தப் பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள். அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் போன்ற தொழிலுக்கு ஏற்றவர்கள். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசியும் காற்று ராசிகளாகும்.

ஜலராசிகள்(Watery Signs)

கடகம், விருச்சிகம். மீனம் ஆகிய மூன்றும் ஜல ராசிகளாகும். இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் மிகுந்தவர்கள். இதை Fruitful Signs என்றும் சொல்லுவார்கள். ஜலராசி 10-வது வீடாக வந்தால் தண்ணீர் சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள். குளிர் பானங்கள், துணிமணி சம்மந்தப் பட்ட தொழில் கப்பல் சம்மந்தப் பட்ட தொழில் ஆகிய வற்றில் இருப்பார்கள். இந்த ராசிக்கரர்கள் கற்பனை வளம்மிக்கவர்கள்.

இதைத் தவிர ராசிகளில் சரராசிகள், ஸ்திர ராசிகள், உபய ராசிகள் எனவும் பிரித்து அவற்றிற்குறிய குணாதிசியங்களைக் கூறி இருக்கிறார்கள். அவைகளையெல்லாம் நீங்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர நன்மை பயக்கும் ராசிகள், மலட்டுத் தன்மையுள்ள ராசிகள், நன்மை பயக்காத ராசிகள், ஊமை ராசிகள், முரட்டு ராசிகள், மனித ராசிகள், சப்த ராசிகள், நான்குகால் ராசிகள், இரட்டை ராசிகள், குட்டை ராசிகள் நீள ராசிகள் என பல வகைப்பட்ட ராசிகள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் பலன் சொல்லும்போது மிக உதவியாக இருக்கும். இந்த ராசிகளைப் பற்றியெல்லாம் அடுத்த பாடத்தில்
பார்ப்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:20 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 13


சென்னையில் ஒரு பெரிய பணக்காரருக்கு, ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அதே சென்னையில் ஒரு கூலித் தொழிலாளிக்கு அதே நேரத்தில் ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. நேரத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆக ஜாதகத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது. இருவர் ஜாதகமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால் இருவரின் வாழ்க்கையும் ஒரே மாதிரித்தான் இருக்குமா ? இல்லை பணக்காரக் குழந்தை நல்ல சூழ்நிலையில் வளரப் போகிறது. ஏழைக் குழந்தை ஏழ்மைச் சூழ்நிலையில் வளரப் போகிறது. இதற்கு ஜோதிடம் தரும் விளக்கம் என்ன? இதற்கு நாம் ஒரு சிறிய விளக்கம் கொடுப்போம். இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகின்றன எனக் கொள்வோம். பணக்காரக் குழந்தை ஒரு தொழிற்சாலைக்கு அதிபதி ஆகிறான். ஏழைக் குழந்தை சிறு தொழிலில் ஒரு இறும்புப் பட்டரை வைத்துள்ளான் எனவும் கொள்வோம். நல்ல திசையில் பணக்காரனுக்கு பல லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து இருக்கலாம். அதே ஏழைக்கு அந்த நல்ல திசையில் சில நூறு ரூபாய் லாபமாகக் கிடைத்து இருக்கலாம். இருவருக்கும் பணத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. ஆனால் இருவரின் சந்தாஷத்தையும் அளவிட்டால் ஒரே அளவாகத்தான் இருக்கும். பல லட்சங்கள் அடைந்த பணக்காரனின் சந்தோஷத்தை அந்த ஏழை சில நூறு ரூபாய்களில் அடைந்து விடுகிறான். அதாவது இருவர் அடையும் சந்தோஷமும் ஒன்று தான். இவ்வாறு ஒவ்வொன்றையும் கவனித்துப் பார்த்தால் மனத்தளவில் ஒரே மாதிரியான சந்தோஷமும் துக்கமும் அடைவார்கள். இவ்வாறாக அவர்கள் வழ்க்கையில் ஒற்றுமை இருக்கும். பணத்தை வைத்து அளவிட முடியாது. நாம் யாருக்கு மகனாகப்பிறக்கிறோம் என்பது நம் கையில் இல்லை; நாம் எந்த ஊரில், எந்த நாட்டில் பிறக்கிறோம் என்பது நமது கையில் இல்லை. ஆகவே நாம் பிறக்கின்றபோதுள்ள பொருளாதார நிலையை வைத்துக் கொண்டு வரப்போகின்ற உயர்வு, தாழ்வுகளைக் கூற வேண்டும். நிற்க. இனி நாம் நம் படத்திற்கு வருவோம்.

ராசிகளின் குணங்களுக்குத் தக்கவாறு அவைகள் பிரிக்கப் பட்டு இருக்கின்றன. ஏற்கனவே சென்ற பாடத்தில் சில குணாதிசயங்களைப் பார்த்தோம். இப்போது மீதமுள்ளவற்றைப் பார்ப்போம். முதலில் சர ராசிகளைப் பார்ப்போம்

சர ராசி : மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளும் சரராசிகளெனப்படும். இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி மாற்றத்தை விருப்புவார்கள். மிகவும் சுறுசுறுப்பு மிக்கவ்ர்கள். எந்தக் கஷ்டத்தையும் சமாளித்து முன்னுக்கு வருபவர்கள். சுயேச்சையாக இருக்க விரும்பிபவர்கள். மற்றவர்களுக்குக் கீழ் இருக்க விருப்பப்பட மாட்டார்கள்.

சரராசி 2-ம் வீடாக இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். ஒரே சீராகப் பணவரவு இருக்காது. ஒரு சமயம் அதிகமாக இருக்கும். ஒரு சமயம் குறைவாக இருக்கும். வியாபாரம் செய்யத் தகுந்தவர்கள் இவர்கள். வியாபாரத்தில்தானே வரவு ஒரே மாதிரியாக இருக்காது.

3-ம் வீடு சர ராசியாக இருந்தால் அவர்கள் வெளியூர்ப் பயணத்தை விருப்புவர். மூன்றாம் வீடு வெளியூர்ப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? இந்த ராசிக்காரர்கள் தான் நினைத்ததை முடிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள்.

ஸ்திர ராசி : மிகுந்த நிதானத்துடனும், தன்நம்பிக்கையுடனும் செயல்படுபவர்கள். நிரந்தரமான வரவு இவர்களுக்கு உண்டு. ஸ்திர ராசி 6-ம் வீடாக இருந்து ஒருவருக்கு வியாதி வருமேயானால் பரம்பரையான வியாதி வருவதற்கு வழியுண்டு. குணம் ஆகாத வியாதிகள் ஆஸ்த்மா, சர்க்கரை போன்றவியாதிகள் வரக்கூடும். 3-ம் இடம் ஸ்திர ராசியாக இருப்பின் வெளியூர் செல்வதை விரும்ப மாட்டார். ஸ்திர ராசியிலுள்ள தசா, புக்தி காலங்களில் ஒருவருக்கு வேலையில் நிரந்தரம் ஆகும். மிகவும் நிதானமாகச் செயல் படும் தன்மை கொண்டவர்கள் இவர்கள்.

உபய ராசி : உறுதியான எண்ணத்துடன் இருக்க முடியாதவர்கள். எண்ணத்தை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள். சண்டை, வாக்குவாதம் ஆகியவற்றை வெறுப்பவர்கள். கஷ்டமான வேலையைக் கண்டு மலைப்பவர்கள். நரம்பு சம்மந்தமான வியாதிகள் இவர்களைத் தாக்கும். இவர்கள் உறுதியான எண்ணங்கள் இல்லாததால் அடிக்கடி தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டே இருப்பர்கள். இவர்கள் ஏஜென்சித் தொழிலுக்கு ஏற்றவர்கள்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:20 am

நம்மை பயக்கும் ராசிகள்(Fruitful Signs) : எல்லா ஜல ராசிகளும் இந்த வகையைச் சேர்ந்தன. ரிஷபம், துலாம், தனுசு, மகரம் ஆகியவை பாதி நம்மை (Semi Fruitful Signs) பயக்கும் ராசிகள் என்று கூறுவார்கள். ஒருவருக்குக் குழந்தை இல்லை எனக்கொள்ளுங்கள். இவர் ஜாதகத்தில் 5-ம் வீடு Fruitful Sign ஆகி 5-க்குடையவன் மற்றொரு Fruitful Sign-ல் இருப்பாரேயாகில் அவருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு எனக் கொள்ளலாம். இந்த Fruitful Sign ஆனது அதில் உள்ள கிரகங்களையும் நன்மைபயக்கும் கிரகங்கள் ஆக்குகின்றன. அதே போன்று கணவர் மனைவியர் ஏதோ சந்தர்பத்தின் காரணமாகப் பிரிந்து இருக்கின்றனர் எனக் கொள்ளுங்கள். அவர்கள் எப்போது சேருவார்கள் என்ற கேள்வி எழும். அப்போது இந்த ராசியில் உள்ள கிரகங்கள் பலன் சொல்லப் பயன் படும். நீங்கள் ஆரூடத்திப் பற்றிக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். அதாவது ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்கள் பிரச்சனைகளைத் தீர்க்கப் பயன் படும் ஜாதகம். அதாவது அவர்கள் கேள்வி கேட்க்கும் நேரத்தை வைத்து ஜாதகம் கணித்துப் பலன் சொல்லுவார்கள். ஒருவர் நம்மிடம் வந்து "நான் தேர்வில் வெற்றி பெருவேனா?"- என்று கேட்கிறார் எனக் கொள்வோம். அவரிடம் ஜாதகம் இல்லை. நாம் அந்த நேரத்திற்கு ஜாதகம் கணித்துப் பார்க்கிறோம். தேர்வு, படிப்பு ஆகியவைகளை 4-ம் வீடு குறிக்கிறது. 4-ம் வீட்டில் சுபகிரகங்கள் இருந்து 4-ம் வீட்டிற்குடையவர் 11-ம் வீட்டில் அதுவும் 11-ம் வீடு Fruitful Sign ஆகவும் இருந்து விட்டால் நாம் எளிதாகச் சொல்லலாம். நீங்கள் தேர்வில் வெற்றி பெறுவீர்கள் என்று அடித்துச் சொல்லலாம். இவ்வாறு பலவழிகளில் இந்த Fruitful Signs - உதவி புரிகிறது.கடகம், விருச்சிகம், தனுசு ஆகியவைகல் Fruitful signs எனப்படும்.

வறண்ட ரசிகள் (Barren Signs) : Fruitful Signs - களுக்கு எதிர் மறையான ராசிகள் இந்த வறண்ட ராசிகள் அல்லது Barren Signs. மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகியவை வறண்ட ராசிகள் எனப்படும். இந்த ராசியிலுள்ள கிரகங்கள் நன்மையான பலன்களைக் கொடுக்காது.

ஊமை ராசிகள் (Mute Signs) : எல்லா ஜல ராசிகளும், அதாவது கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை Mute Signs அல்லது ஊமை ராசிகள் எனப்படும். இதை சற்று விளக்கமாக எழுதுகின்றோம். ஒருவருக்கு ஜாதகத்தில் 2-ம் வீடு பேச்சு, நாக்கு வன்மையைக் குறிக்கிறது. 2-ம் வீடு ஊமை ராசியாக வந்து அதில் புதன் இருந்து சனியால் பார்க்கப் பட்டால் அவர் திக்கித், திக்கிப் பேசுவார். செவ்வாய் பார்த்தால் மிக வேகமாகப் பேசுவார். குழந்தைகள் நன்றகப் பேசுவார்களா அல்லது பேசமாட்டார்களா என்று 2-ம் வீட்டையும், இந்த ஊமை ராசிகளயும் வைத்துக் கொண்டு சொல்லிவிடலாம். அதற்குத்தான் இந்த ராசிகள் பயன் படுகின்றன.

முரட்டு ராசிகள் : மேஷமும், விருச்சிகமும் முரட்டு ராசிகள் எனப்படும். இவற்றிற்கு அதிபதி செவ்வாய் அல்லவா? செவ்வாய் ஒரு முரட்டு கிரகம் அல்லவா ? அதனால் அந்த ராசிகளுக்கு முரட்டு ராசிகள் எனப்படும்.

நான்கு கால் ராசிகள் : மேஷம், ரிஷபம், சிம்மம், மகரம் ஆகியவை நான்குகால் ராசிகள் எனப்படும். செம்மரிக் கடா (மேஷம்), காளை (ரிஷபம்), சிங்கம் (சிம்மம்), ஆடு (மகரம்), ஆகியவை 4-காலுள்ள உயிரினங்கள் அல்லவா? அதனால் தான் இவைகள் நாலுகால் ராசிகள் என்றழைக்கப் படுகின்றன. சரி! இந்த ராசிகள் பலன் சொல்ல எப்படிப் பயன் படுகின்றன? எனக்கு மிகவும் வேண்டியவர்" நான் கார் வாங்க ஆசைப் படுகிறேன்? என்னால் வாங்க முடியுமா?" என்று கேட்டார். அவர் ஜாதகத்தை பார்த்தோம். அவருக்கு அப்போது சனிதசை, சூரிய புக்தி நடந்து கொண்டிருந்தது. நம்முடைய கணக்குப்படி அந்த தசா புக்தியில் அவருக்கு வாகன யோகம் வந்து இருந்தது. அவர் கார் வாங்குவாரா அல்லது மோட்டார் சைக்கிள் வாங்குவாரா என்று எப்படிச் சொல்வது? புக்தி நாதன் சூரியன் அவருக்கு மகரத்தில் இருந்தார். மகரம் நாலுகால் ராசியல்லவா? ஆகவே சூரியன் நாலுகால் ராசியின் பலனைக் கொடுப்பார் என்று நீங்கள் கார் வாங்குவீர்கள் என்று கூறினோம். இப்போது புரிகிறதா ? நாலுகால் ராசியின் உபயோகத்தை. அவரும் நாம் கூறியபடி அப்போது கார் வாங்கினார்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:20 am

இரட்டை ராசிகள் (Dual Signs) : மிதுனம், தனுசு, மீனம் ஆகியவை இரட்டை ராசிகள் எனப்படும். இந்த ராசிகளின் உபயோகம் என்ன? ஒருவருக்கு இரண்டு மனைவிகளா? குழந்தை இரட்டையாகப் பிறக்குமா? இரட்டை வருமானம் ஒருவருக்கு வருமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த ராசியை வைத்துக் கொண்டு பதில் சொல்லலாம். புதனுக்கு இரட்டைக் கிரகம் என்ற பெயர் உண்டு. அவர் ஒருவரின் ஜீவனஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது அதில் இருந்தாலோ அவருக்கு இரட்டை வருமானம் வரும் எனக் கூறலாம். இரட்டை வருமானம் எப்படிக் கிடைக்கும்?

ஒருவர் ஓர் அலுவலகத்தில் பணிபுரியலாம். மாலை நேரத்தில் வேறொரு இடத்தில் Part-time வேலை செய்யலாம். இது இரட்டை வருமானம் அல்லவா? சிலர் வேலை பார்த்துக் கொண்டே Insurance Agent ஆக இருப்பார்கள். இதுவும் இரட்டை வருமானம் தான். சிலர் அரசாங்கத்தில் வேலை செய்வார்கள். சம்பளம் கிடைக்கும். அதைத்தவிர மேஜைக்கு அடியிலும் வாங்குவார்கள். இதுவும் இரட்டை வருமானம்தான். இந்த மாதிரி மேஜைக்கு அடியில் வாங்குபவர்களுக்கு 10-ம் வீட்டில் புதனுடன் சனியும் சேர்ந்து இருக்கும். அல்லது சனியின் பார்வையாவது இருக்கும். சனியின் தொடர்பு இருந்தால்தான் இந்த மாதிரி மேஜைக்கு அடியில் பணம் வாங்க முடியும். சனி எதையும் ரகசியமாகச் செய்யக்கூடியவர் அல்லவா? 1983-ல் நாம் குடியிருந்த வீட்டின் பக்கத்தில் இருந்த ஒருவர் தன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்தார். அவர் தான் வீடு கட்ட முயற்சி செய்வதாயும் தன் ஜாதகப்படி வீடு கட்டமுடியுமா எனக் கேட்டார். அவர் ஜாதகத்தில் அவர் கன்னி இலக்கினம். 4-ம் வீட்டில் புதன். செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு இருந்தார். மற்ற கிரகங்கள் ஞாபகத்தில் இல்லை. நாம் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு உங்களுக்கு வீடு கட்ட யோகம் வந்துவிட்டது. "நன்றாகக் கட்டுங்கள்" என்று கூறினோம். அவர் "கடன் வாங்கித்தான் கட்ட வேண்டும். கட்ட முடியுமா?" என்று திரும்பவும் கேட்டார். நாம் "உங்கள் ஜாதகப் படி இரண்டு வீட்டிற்கு யோகம் இருக்கிறது. ஏன் தயங்குகிறீர்கள்?" எனக் கூறினோம். அவர் உடனே "ஒரு வீட்டிற்கே வழி இல்லை; இரண்டு வீடு கட்டுவேன் என்கிறீர்களே" என்று கூறிவிட்டுப் போய்விட்டார். சிலமாதங்களில் நாம் வீடு ஒன்று கட்டிக் கொண்டு அங்கிருந்து வந்து விட்டோம். பல ஆண்டுகள் உருண்டோடின. அந்தப் பழைய நண்பர் திரும்பவும் என்னைத் தேடிக் கொண்டு வந்தார். "நீங்கள் முன்பு கூறியபடி நான் இப்போது 2-வது வீட்டிற்குப் பணம் கொடுத்து விட்டேன். ஆனால் FLAT இன்னும் கைக்குவரவில்லை; எப்போது கிடைக்கும் என்று உங்களைக் கேட்க்கத்தான் வந்தேன்" என்று கூறினார். நாம் அவர்களுக்கு எப்போது கிடைக்கும் என்று கூறி அனுப்பினோம்." நாம் எப்படி அவருக்கு இரண்டு வீடு கிடைக்கும் என்று கூறினோம்?" என்று உங்களுக்குக் கூறுகிறோம். அவர் ஜாதகத்தில் 4-ம் வீடு இரட்டை ராசி. அதாவது தனுசு. அந்த வீட்டில் இரட்டைக் கிரகமான புதனும் இருக்கிறார். பூமிகாரகனான செவ்வாயும் 4-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே நாம் அவருக்கு இரண்டு வீடுகள் உண்டு என்றுகூறினோம். அது பலித்து விட்டது. ஆக இரட்டை ராசிகளின் உபயோகம் தெரிகிறதல்லவா?

இத்துடன் இந்தப் பாடத்தை முடித்துக் கொள்வோம். மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:21 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 14


ஜாதகத்தில் முதல் வீட்டிற்கு இலக்கினம் என்று பெயரென்று உங்களுக்குத் தெரியும். முதல்வீடு, நாலாம் வீடு, ஏழாம் வீடு, பத்தாம் வீடு ஆகியவை கேந்திரஸ்தானங்கள் என்றழைக்கப்படும். அதேபோல் ஒன்று, ஐந்து, ஒன்பதாம் வீடுகள் திரிகோண ஸ்தானங்கள் என்றழைக்கப்படும். இந்த கேந்திரஸ்தானங்களும், திரிகோணஸ்தானங்களும் மிக நல்ல வீடுகளாக அழைக்கப் படுகின்றன. இங்கே நல்ல கிரகங்கள் தங்கி இருப்பார்களேயானால் அவைகள் நல்லவைகளையே செய்யும். கெட்ட கிரகங்கள் தங்கி இருந்தால் அவைகள் அந்த வீட்டைக் கெடுத்து விடுகின்றன. அதாவது அந்த வீட்டின் காரகத்துவம் கெட்டு விடும். உதாரணமாக ஒருவருக்கு 5-ம் வீட்டில் சனி இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 5-ம் வீடு திரிகோணஸ்தானம் ஆகும். அந்த வீடு புத்திர பாக்கியத்தைக் குறிக்கிறது. அங்கு பாபக் கிரகமான சனி இருப்பதனால் அவருக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் போகும். குழந்தையே இல்லாமலும் போகலாம். "5-ல் சனி தத்துப் பிள்ளை யோகம்" என்று கூறுவார்கள். அங்கு சுபக்கிரகமான சுக்கிரன் இருந்தால் அவருக்குப் புத்திர பாக்கியம் இருக்கிறது எனக் கூறலாம். எந்த வீடாக இருந்தாலும் அங்கு சுபக்கிரகங்கள் அந்த வீட்டின் காரகத்துவத்தை மேம்படுத்துகின்றன. ஆனால் கெட்ட கிரகங்களோ அந்த வீட்டின்காரகத்துவத்தைக் கெடுத்து விடுகின்றன. ஒருவருக்கு ஜாதகத்தில் கேந்தரஸ்தானாதிபதியும், திரிகோணஸ்தானாதிபதியும் சேர்ந்து இருப்பார்களேயானால் அவர்கள் ராஜ யோகத்தைக் கொடுப்பர்கள். உதாரணமாக கன்னியாஇலக்கினத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சுக்கிரனானவர் 9-ம் வீட்டிற்கு அதிபதி. அதாவது திரிகோணஸ்தானாதிபதி. புதன் 10-ம் வீட்டிற்கு அதிபதி. அதாவது கேந்திராதிபதி. இருவரும் சேர்ந்து ஒருவீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 4-ம் வீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். இந்த சேர்க்கையானது இவருக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும். படிப்பு, வீடு, வாசல், யோகம் எல்லாம் இருக்கும். எந்த வீட்டில் ராஜயோக கிரகசேர்க்கை இருக்கிறதோ அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கும். 9-ம் வீடு, 10-ம் வீட்டின் அதிபதிகள் சேர்ந்தால் அது தர்ம, கர்மாதிபதியோகம் என அழைக்கப் படும். தர்மஸ்தானம் என்பது 9-ம் வீடு, கர்மஸ்தானம் என்பது 10-ம் வீடு. இருவீடுகளின்அதிபர் சேர்க்கை தர்ம, கர்மாதிபதி யோகம் என்றழைக்கப்படும்.

கடகஇலக்கினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாயானவர், 5-ம் வீட்டிற்கும், 10ம் வீட்டிற்கும் அதிபதி. அதாவது கோண, கேந்திர வீடுகளுக்கு அதிபதி. 5-ம் வீடு திரிகோணஸ்தானம், 10-ம் வீடு கேந்திரஸ்தானம் அல்லவா! ஆகவே செவ்வாயானவர் கடக இலக்கினத்திற்கு யோககாரகன் என்றழைக்கப் படுகிறார். அதேபோல் செவ்வாயானவர் சிம்மஇலக்கினத்திற்கும் 4-ம் மற்றும் 9-ம் வீடுகளுக்கு அதிபதியாகிறார். கேந்திர, கோண வீடுகளுக்கு அதிபதியாவதால் அவர் சிம்ம இலக்கினத்துக்கும் யோக காரகனாகிறார். அதே போல் மகர, கும்ப இலக்கினங்களுக்கு சுக்கிரனானவர், கேந்தரஸ்தானத்திற்கும், திரிகோணஸ்தானத்திற்கும் அதிபதியாவதால் அவர் இந்த இரண்டு இலக்கினங்களுக்கும் யோககாரகனாகிறார். ரிஷப இலக்கினத்திற்கு சனியானவர் 9-ம் வீட்டிற்கும், 10ம் வீட்டிற்கும் அதிபதியாவதால் அவர் யோககாரகனாகிறார். துலாஇலக்கினத்திற்கும் சனியானவர் 4-ம் வீட்டிற்கும், 5-ம் வீட்டிற்கும் அதிபதியாவதால் அவர் யோககாரகனாகிறார். இந்த யோக காரகர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கும். அதேபோன்று 2, 6, 8, 11-ம் வீடுகள் பணபரம் என்றும், 3, 12 வீடுகள் ஆபோக்லிபம் என்றழைக்கப்படும். இந்த வீடுகளைப் பற்றிப் பின்னால் பார்ப்போம். சரி!இப்போது நாம் விட்ட இடத்திலிருந்து முதலாம் வீட்டிற்கு வருவோம்.

இலக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகியவை ஒருவரின் ஆயுளைக் குறிக்கிறது. ஒருவரின் ஆயுளைக் கணிக்க இந்த மூன்று வீடுகளையும் ஆராய வேண்டும். ஒருவரின் ஆயுள் 30 வயதுக்குள் இருந்தால் அது அற்பாயுள் எனப்படும். 30முதல் 60 வயது முடிய நடுத்தர ஆயுள் எனப்படும். 60 வயதுக்குமேல் அது தீர்க்காயுள் எனப்படும். சரி! ஒருவரின் ஆயுளை எப்படித் தீர்மானிப்பது? இது மிகவும் கடினமான வேலை. ஜோதிடத்திலேயே மிகவும் கடினமானது இதுதான். கீழ்வரும் கிரக நிலைகள் தீர்க்க ஆயுளைக் காட்டுகின்றன.

1. இலக்கினதிபதி தன் சொந்த வீட்டிலோ, அல்லது உச்ச வீட்டிலோ இருத்தல்.
2. 8-ம் வீட்டில் சனியோ அல்லது குருவோ இருத்தல்.
3. இலக்கினமும், சந்திரனும் நல்லவர்கள் சேர்க்கை பெற்றிருத்தல்.
4. இலக்கினாதிபதியும், சந்திரனும் கேந்திரவீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருத்தல்.
5. இலக்கினாதிபதி 8-ம் வீட்டில் இருத்தல்
6. எட்டாம் வீட்டிற்கதிபதி 8-ம் வீட்டிலோ அல்லது இலக்கினத்திலோ இருத்தல் அல்லது ல்க்கினத்தையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்
7. சந்திரனும், இலக்கினாதிபதியும் சேர்ந்து இருந்தாலோ அல்லது குருவும் சேர்ந்து இருத்தல்.
8. குரு, சனியையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்.

இதைப் போல் பல கிரக சேர்க்கைகளை நமது கிரந்தங்கள் கூறிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை மட்டும் நாம் கூறியுள்ளோம். நமது வாசகர்கள் பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களைப் பார்த்தால் ஆயுளைப் பற்றி விரிவாகக் கூறி இருப்பது தெரிய வரும்.

கீழே கூறியுள்ளவைகள் அற்ப ஆயுளைக் காட்டுகின்றன.

1. 8-ம் வீட்டில் சனியைத்தவிர பாபகிரகங்கள் இருந்தாலும், 6, 12 வீடுகளில் செவ்வாயும், சனியும் இருந்தாலும் அற்ப ஆயுள்தான்.
2. இலக்கினத்தில் சந்திரனோடு பாபிகள் சேர்ந்து இருத்தல்
3. இலக்கினத்தில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லாது இருந்தாலும்,
6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும்,
4. பொதுவாக இலக்கினம், மூன்றாம் வீடு, 8-ம் வீடு ஆகியவற்றில் பாவிகள்

இருந்து சுபர் பார்வை இல்லாவிட்டாலும் அற்ப ஆயுள்தான்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:21 am

நாம் பொதுவாக ஆயுள் தீர்க்காயுளா அல்லது அற்ப ஆயுளா என்பதைப் பற்றி மேலே கூறியிருந்தோம். சரி! ஒருவருக்கு எப்போது மரணம் ஏற்படும்? யார் மரணத்தைக் கொடுப்பார்கள். மரணத்தைக் கொடுக்கும் கிரகத்திற்கு மாரகன் எனப் பெயர். பொதுவாக எந்த வீட்டிற்கும் 12-ம் வீட்டதிபர் அந்த வீட்டிற்கு நன்மையைச் செய்யாது. நான்காம் வீடு தாயாரைக் குறிக்கிறது. நான்காம் வீட்டிற்குப் 12-ம் வீடு 3வது வீடு அல்லவா! 3-ம் வீட்டிலுள்ள கிரகங்களும், 3-ம் வீட்டின் அதிபதியும் தாயாருக்கு நன்மையைச் செய்யாது. கெடுதல்தான் செய்யும். 7-ம் வீடு திருமணத் தைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 6-ம் வீடு. 6-ம் வீட்டின் அதிபதியும் அதில் உள்ள கிரகங்களும் கணவன், மனவியரிடையே கருத்து வேற்றுமையும் , சில சமயம் விவாஹரத்தையும் கொடுத்துவிடும். எந்த வீட்டிற்கும் அதற்கு முந்தைய வீடு எதிர்மறையான பலன்களைக் கொடுக்கும்.

ஆயுளைக் குறிப்பது 1, 3, 8-வது வீடுகள் அல்லவா! இவற்றிற்கு முந்தையவீடு அல்லது 12-வது 12, 2, 7 வது வீடுகள் ஆகும். இவைகள் ஒருவரைக் கொல்லும் வல்லமை படைத்தவை. ஆகவே இவர்களை மாரகர்கள் என்றழைக்கலாம். 7-வது வீடு திருமணத்தைக் கொடுக்கும் என்று முன்பு கூறியிருந்தோம். இப்போது அதே 7-ம் வீடு மாரகத்தைக் கொடுக்கும் என்று எழுதுகின்றோம். கல்யாணவயதின் போது திருமணத்தைக் கொடுத்த 7-ம் வீட்டின் அதிபர் ஒருவருக்கு ஆயுளை முடிக்கும்போது அவர் மரணத்தையும் கொடுப்பார். ஒருவரின் ஜாதகத்தில் 2, 7, 12 க்கதிபர்கள், அதில் உள்ள கிரகங்கள் மாரகத்தைக் கொடுப்பார்கள் என்றும் எழுதி இருந்தோம். இவர்களைத்தவிர வேறு யாராவது மாரகத்தைக் கொடுப்பார்களா? இருக்கிறார்கள். அவர்களைக் கீழே பார்ப்போம்.

ராசிகளில் மேஷம், கடகம், துலாம் , மகரம்- ஆகியவை சரராசிகள் எனப்படும். இந்த சரரசிகளுக்கு 11-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும். 11-ம் வீட்டு அதிபதியும், அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும். மேஷத்திற்குப் 11-ம் வீடு கும்பம்: அதன் அதிபதி சனி; ஆகவே மேஷத்திற்கு சனி பாதகாதிபதியாகிறார். இதேபோன்று கடகத்திற்கு சுக்கிரன், துலாத்திற்கு சூரியன், மகரத்திற்கு செவ்வாய் ஆகியோர் பாதகாதிபதியாகிறார்கள். பாதகாதிபதி என்றால் ஆயுள் முடியும் போது மட்டும் மரணத்தைக் கொடுப்பார்கள். மற்ற காலங்களில் அவர்கள் வேறெந்தக் கெடுதலையும் செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்குத் துலா ராசியை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் அதிபதி சூரியன். இவர் 10 வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 10-ம் வீடு ஜீவனஸ்தானம் அல்லவா! லாபாதிபதியான சூரியன் 10-ம் வீட்டில் இருந்தால் நல்ல வேலை கிட்டும். சிலருக்கு அரசங்க உத்தி யோகம் கிட்டும். சூரியன் அரசாங்கத்திற்குக் காரகம் வகிப்பவர். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் எல்லாம் பெற்று நல்ல விதமாக வாழ்க்கை நடத்துவர். சூரியன் லாபாதிபதியாகி ஜீவனத்தில் அனர்ந்து அனைத்து நன்மைகளையும் செய்வார். சரி! அவருக்கு ஆயுள் 65 முடிய எனக்கொள்ளுங்கள். அப்போது சூரியதசையோ, அல்லது சூரியபுக்தியோ வருமாகில் அவர் அப்போது மாரகத்தைக் கொடுப்பார். அப்போது அவர் லாபாதிபதியாகச் செயல் படமாட்டார். பாதகாதிபதியாகச் செயல் படுவார். உத்தியோகத்தில் அவ்வளவு நன்மைகளைச் செய்த சூரியன் மாரகம் என்று வரும் போது மரணத்தைக் கொடுக்கவும் தயங்குவதில்லை. தன் கடமையைத் தவறாமல் செய்வார்.

ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியோருக்கு 9-ம் வீட்டிற் கதிபதிகளான முறையே சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் பாதகாதிபதி ஆகின்றனர்.இவர்கள் ஆயுள் முடியும் போது தங்கள் தசா, புக்திக் காலங்களில் மரணத்தைக் கொடுப்பார்கள். ரிஷபத்திற்கு சனியோககாரகன் எனப் பெயர். அவர் தன் தசாபுக்தி காலங்களில் நன்மையைத்தான் செய்வார். இருப்பினும் ஆயுள்முடியும் போது அவர் தன் கடமையைச் செய்யாமலிருப்பதில்லை. அவர் மரணத்தைக் கொடுப்பார். ஆயுள் இருக்கும்போது நல்லவைகளையும், ஆயுள் முடியம்போது மாரகத்தையும் கொடுப்பார்.

உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றிற்கு 7-ம் வீட்டின் அதிபதி பாதகாதிபதியாகிறார். மிதுனத்திற்கு 7-ம் வீட்டின் அதிபதி குரு, கன்னிக்கு 7-ம் வீடான மீனத்திற்கதிபதி குரு பாதகாதிபதியாகிறார். தனுசுவிற்கும், மீனத்திற்கும் புதன் 7-ம் வீட்டிற்கதிபதியாகி அவர் பாதகாதிபதியாகிறார். இளமையில் திருமணத்தைக் கொடுத்த குருவும், புதனும் ஆயுள் முடியும்போது ஆயுளை முடித்துவைக்கவும் செய்வார்கள். இப்போது மாரகாதிபதிபதிகள், பாதகாதிபதிகள் யார் யார் எனத் தெரிந்து கொண்டீர்கள். கீழே சில உதாரணஜாதகத்தைக் கொடுத்து இருக்கிறோம். அவர்களுக்கு எப்போது மாரகம் சம்பவித்தது எனக் கொடுத்துள்ளோம்.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Pic13


ஜாதகம் No.1 ஐப் பாருங்கள். இவர் 53 ஆண்டுகள்தான் வாழ்ந்து இருந்தார். சனிதசை, ராகு புக்தியில் காலமானார். சனி இவருக்கு யோககாரகன். அப்படி இருந்தும் இவர் அவர் தசையில் ராகு புக்தியில் காலமானார். சனி மாரகஸ்தானமான 7-ம் வீட்டில் இருக்கிறார். புக்தினாதனான ராகு சனியால் பார்க்கப்படுகிறார். ஆக சனிதசை, ராகுபுக்தியில் இவருக்கு மாரகம் சம்பவித்தது.

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Pic14


அடுத்த ஜாதகம் No. 2-ஐப் பாருங்கள். இவர் வாழ்ந்தது 31 ஆண்டுகள்தான். குருதசை, செவ்வாய் புக்தியில் காலமானார். குரு எப்படி மரணத்தைக் கொடுத்தார்? இந்த இலக்கினத்திற்கு 11-க்குடையவன் சுக்கிரன் மாரகாதிபதி அல்லவா? அவருடைய நட்சத்திரமான பரணியில், குரு இந்த ஜாதகத்தில் அமர்ந்து இருக்கிறார். ஆக மாரகாதிபதி சுக்கிரன் கொடுக்கக்கூடிய மரணத்தை குரு கொடுத்துவிட்டார். அதுசரி! புக்திநாதன் செவ்வாய் எப்படி மரணத்தைக் கொடுத்தார்? செவ்வாயானவர் ஸ்வாதி நட்சத்திரத்தில் இருக்கிறார். ராகு 8-ல் இருந்தாலும் அவர் சனியின் வீட்டில் இருப்பதால் சனி கொடுக்கக்கூடிய பலன்களைஅவர் கொடுப்பார். ஏனெனில் அவருக்கு சொந்த வீடு எதுவும் கிடையாது. அவர் எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டுப்பலனைக் கொடுப்பார் அல்லவா? சனி 7, 8 வீடுகளுக்கு அதிபதி. ஆக ராகுவானவர் 7-ம் வீட்டுப் பலனையும் கொடுக்கின்றார். 7-ம் வீடு மாரகஸ்தானம் அல்லவா? ஆக சனி கொடுக்க வேண்டிய மாரகத்தை ராகு கொடுக்கின்றார். அவருடைய நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்ததால் செவ்வாய் இந்த ஜாதகருக்கு மாரகத்தைக் கொடுத்து விட்டார். இந்த உதாரணத்திலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது ஒரு கிரகம் எந்த நட்சத்திரச் சாரத்தில் அமர்ந்து இருக்கிறது என்பதையும் பார்த்துத்தான் பலன் சொல்ல வேண்டும். நட்சத்திரச்சாரம் மிகவும் முக்கியம். பலன் சொல்லும்போது ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தின் காலில் அல்லது சாரத்தில் அமர்ந்துள்ளது எனப் பார்த்துப் பலன் சொல்ல வேண்டும். இப்போது ஒரளவிற்கு ஆயுள் பாவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ளீர்கள். பல ஜாதகங்களைவைத்துக் கொண்டு அவர்கள் எப்போது காலமானார்கள் எனப் பார்த்து பலன் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:21 am

ஒருவருக்கு இப்போது என்ன தசா, புக்தி நடக்கிறது என எப்படிக் கண்டுபிடிப்பது? ஒரு உதாரணம் கொடுக்கின்றோம். நாம் ஜாதகம் போடும் போது ஜெனன காலத்தில் என்ன தெசை இருப்பில் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம் அல்லவா? அதை வைத்துக் கொண்டுதான் போட வேண்டும். ஒருவர் 23-01-1944-ம் தேதி பிறந்து இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். அவர் பிறந்த போது ஜெனன கால இருப்பு தெசை கேது தெசை வருஷம் 0 மாதம் 04 நாள் 04 எனக் கொள்ளுங்கள். இன்றைக்கு அதாவது 21-07-2002 அன்று என்ன தெசை, என்ன புக்தி நடக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒவ்வொரு தசைக்கும் எவ்வளவு வருஷம் என்பதை நாம் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். ஒவ்வொரு தசைக்குள்ளும் புக்திகள் எவ்வாறு பிரிக்கப்பட்டு இருக்கின்றன என்று பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு உள்ளன.

சூரிய தசை6 ஆண்டுகள்
சந்திர தசை10 ஆண்டுகள்
செவ்வாய் தசை7 ஆண்டுகள்
ராகு தசை18 ஆண்டுகள்
குருதசை16 ஆண்டுகள்
சனி தசை19 ஆண்டுகள்
புதன் தசை17 ஆண்டுகள்
கேது தசை7 ஆண்டுகள்
சுக்கிர தசை20 ஆண்டுகள்
மொத்தம்120 ஆண்டுகள்



பிறந்த வருஷம், மாதம், நாள்1944 - 01 - 23
ஜெனன கால இருப்புதசை- கேது0 - 04 - 04
 
 1944 - 05 - 27
அடுத்த தசை - சுக்கிரன்20 - 00 -00
 
 1964 - 05 - 27
அடுத்த தசை - சூரியன்6 -00 - 00
 
 1970 -05 - 27
அடுத்த தசை - சந்திரன்10 -00 - 00
 
 1980 - 05- 27
அடுத்த தசை - செவ்வாய்7 - 00 - 00
  
 1987 - 05 - 27


மேற்கண்ட தேதியில் செவ்வாய் தசை முழுவதுமாக முடிந்து விட்டது. தற்போது ராகு தசை நடந்து கொண்டு இருக்கிறது. அது முடியாததால் என்ன புக்தி நடந்து கொண்டிருக்கிறது எனப் பார்க்க வேண்டும். அதைப் பார்ப்போம்.

ராகு தசை ஆரம்பம்1987 - 05 - 27
ராகு புக்தி2 - 08 - 12
  
 1990 - 02 - 09
குருபுக்தி2 - 04 - 24
  
 1992 - 07 - 03
சனி புக்தி
2 - 10 - 06
  
 1995 - 05 - 09
புதன் புக்தி2 - 06 - 18
  
 1997 - 11 - 27
கேது புக்தி1 - 00 - 18
  
 1998 - 12 - 15
சுக்கிர புக்தி3 - 00 - 00
  
 2001 - 12 - 15
சூரிய புக்தி0 - 10 - 24
  
 2002 - 11 - 09


பெரும். அதற்குப் பின் சந்திர புக்தி நடை பெறும்.

ஒருவருக்கு ஜெனன காலத்தில் சனிதசை ஆரம்பம் எனக் கொள்ளுங்கள். சனிக்குப்பின் புதன், கேது, சுக்கிரன் என்று தசைகள் நடைபெறும். இப்போது ஒருவருக்குத் தற்கால தசா புக்திகள் கண்டுபிடிக்கத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா!மறுபடி அடுத்த பாடத்தில் சந்திப்போம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக