புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
3 Posts - 5%
prajai
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
manikavi
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
1 Post - 2%
viyasan
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
10 Posts - 63%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
2 Posts - 13%
ரா.ரமேஷ்குமார்
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
2 Posts - 13%
manikavi
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
1 Post - 6%
Rutu
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_m10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 26, 2014 8:53 pm

First topic message reminder :

கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P12a
கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.

நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே... தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

அவரது அருட்கருணையை விளக்கும் ஞானநூல்கள் சில, 'இன்னின்ன இடங்களில் அருளும் பிள்ளையாரை வழிபட இன்னின்ன பலன்கள் கிடைக்கும்’ என்றும் விவரிக்கின்றன:

அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். ஆலயங்களின் கோஷ்டத்தில் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால், சகல தெய்வங்களின் திருவருளும் ஒருங்கே கிடைக் கும் என்கின்றன புராணங்கள். இந்த வரிசையில், ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், 'ருணம்’ எனும் கடன் தீரும்!

யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?!

சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!

மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

தோரண கணபதியை வழிபடும்முறை:

மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.

ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:

'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

மேலும், ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.

சென்னையில் குன்றத்தூர் முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம். இங்கே கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் ஸ்ரீதோரணகணபதி.

இங்கே அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்கள் ஸ்ரீதோரண கணபதியையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

இந்தக் கோயிலில் மாதம்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் மாலை 6 மணிக்கு, கடன் நிவாரண ஹோமம் மற்றும் விசேஷ பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெறுகின்றன. சங்கடஹர சதுர்த்தி திருநாட்களில், அன்று மாலை 6 மணியளவில்...வலம்புரிச் சங்கு மூலம் கணபதி பெருமானுக்கு பாலபிஷேகம் நடக்கும். அத்துடன் விசேஷ மூலமந்திர திரிசதி நாம வழிபாடும் நடைபெறுகிறது. சாதாரண நாட்களிலும் இங்கு வரும் பக்தர்கள் விநாயகர் திருமுன் அமர்ந்து 'பிரசன்ன ஸ்துதி’யை பாராயணம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
ப்ரசன்ன ஸ்துதி

ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், ப்ரசன்ன காண்டம் பகுதியில் உள்ள 'ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்னைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.

சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே (தோரண)

திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்
திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம்
கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
உடன் வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்!

பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக

மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்
காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்
தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்!

பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா
தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே
சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே!
எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே!

சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்!!
தோரண கணபதியே தோன்றிடுக என்முன்னே!!!



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 26, 2014 10:19 pm

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 103459460 விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Aug 27, 2014 1:51 pm

மன்னரை வியக்க வைத்த கணக்கு சொன்ன விநாயகர்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P74
சரித்திரப் புகழ் பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்தை யும் இங்கு, கண்கண்ட தெய்வமாக அருள்பாலிக்கும் பிரகதீஸ்வரர் கோயிலையும் அறிந்திருப்பீர்கள். இந்தக் கோயிலின் அருகில் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் குடிகொண்டிருக்கிறார் கணக்கு பிள்ளையார்.

விசேஷமான இந்த விநாயகருக்குப் பால் மற்றும் எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யும்போது பச்சைநிற மேனியராகக் காட்சித் தருவாராம்! 'கனக விநாயகர்' என்ற பெயரில், ராஜேந்திர சோழன் வழிபட்ட இவருக்கு, 'கணக்குப் பிள்ளையார்' என்ற திருநாமம் வந்து சேர்ந்தது எப்படி?!

கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த ராஜேந்திர சோழன், அங்கு பிரகதீஸ்வரர் கோயில் கட்டுவதற்கான திருப்பணிகளைத் துவக்கியிருந்த காலகட்டம்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P74a
அனுதினமும் வழிபட... அரண்மனைக்கு முன்னால் தான் நிர்மாணித்திருக்கும் கனக விநாயகர் கோயிலுக்கு வடகிழக்கில் பிரகதீஸ்வரர் கோயிலை அமைக்கத் திட்டமிட்டு, திருப்பணியைத் துவக்கியிருந்தான் ராஜேந்திர சோழன். ஆலயம் அமைக்கும் பணிகள் அமைச்சர் ஒருவரது மேற்பார்வையில் நடைபெற்றன.

இதற்குத் தேவையான பொன்- பொருளை, அரண்மனை யின் கணக்காளர் ஒருவர் அமைச்சரிடம் ஒப்படைப்பார். அமைச்சர் அவற்றை எடுத்துச் சென்று கனக விநாயக ரின் திருமுன் வைத்து வணங்கிய பிறகே திருப்பணியின் பொருட்டு அவற்றைச் செலவழிப்பது வழக்கம்.

சுமார் 16 ஆண்டுகள் இடைவிடாமல் திருப்பணிகள் நடைபெற்றன. ஒரு நாள், திருக்கோயில் பணிகளைப் பார்வையிட வந்தார் ராஜேந்திர சோழன். கம்பீரமாக எழும்பும் ஆலயம் அவருக்குப் பரவசம் அளித்தது. அமைச்சரை

அழைத்துப் பாராட்டினார். அத்துடன், ''திருப்பணி செலவு களுக்கு உரிய கணக்கை நாளை காலை எனக்குத் தெரிவியுங்கள்!'' என்று கட்டளையிட்டுச் சென்றார்.

அமைச்சருக்குத் தூக்கிவாரிப் போட்டது. 'திருப்பணி மும்முரத்தில்... செலவுக் கணக்கை எழுதி வைக்கத் தவறி விட்டோமே!' என்று கலங்கினார் அவர். 'இனி, நாம் செய்வதென்ன? தெய்வம்தான் நம்மைக் காக்க வேண்டும்!' என்ற முடிவுக்கு வந்தவர் கனக விநாயகர் சந்நிதிக்கு ஓடோடி வந்தார்.

'விநாயகப் பெருமானே! மன்னர் திடீரென்று கணக்கு கேட்கிறாரே... நான் என்ன செய்வேன்? தாங்கள் வழிகாட்ட வேண்டும்!' என்று கண்ணீர் மல்கப் பிரார்த்தித்து விட்டு இல்லம் சென்றார்.

அன்றிரவு அமைச்சரின் கனவில் தோன்றிய விநாயகர், ''அமைச்சரே, வருந்தாதீர்.

கோயிலுக்கு இதுவரை எத்து நூல் எட்டு லட்சம் பொன் செலவானது என்று மன்னனிடம் சொல்!' என்று அருளி மறைந்தார்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P75
கண் விழித்த அமைச்சர் ஆனந்தக் கூத்தாடினார். 'விநாயகா!' என்று கனக விநாயகர் சந்நிதி நோக்கிக் கைகூப்பி வணங்கினார். ஓலைச் சுவடி ஒன்றை எடுத்து அதில், 'எத்து நூல் எட்டு லட்சம் பொன்' என்று எழுதி வைத்துக் கொண்டார் (மரத்திலும் சுவரிலும் வளைவு வராமல் இருப்பதற்காகப் பயன்படுத்தும் நூலை 'எத்து நூல்' என்பர். இதைக் கொண்டு, கல், மணல், மரம் எவ்வளவு வாங்கப் பட்டிருக்கும் என்பதைக் கணக்கிட்டு விடலாம்).

விடிந்ததும் ஓலைச் சுவடியுடன் மன்னரை சந்தித்த அமைச்சர், ''கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயம் எழுப்ப, இதுவரை எத்து நூல் எட்டு லட்சம் பொன் செலவாகியுள்ளது மன்னா!'' என்றார். இதைக் கேட்ட ராஜேந்திரசோழன், ''ஓ! கோயில் கட்டுமானத்தை (கோணல்களை) சரிபார்க்க வாங்கிய எத்து நூலுக்கே எட்டு லட்சம் பொன் செலவாகி யிருக்கிறது என்றால், நாம் நினைத்தபடியே கோயில், மிகச் சிறந்த முறையில் உருவாகி வருகிறது!'' என்றார்.

மகிழ்ச்சியில் திளைத்த மன்னர், ''ஆமாம் அமைச்சரே! எத்து நூல், எட்டு லட்சம் பொன் என்று மிகத் துல்லியமாக எப்படிக் கணக்கிட்டீர்கள்?'' என்று கேட்டார்.

ஒரு நிமிடம் மௌனமாக நின்ற அமைச்சர், 'மன்னரி டம் உண்மையை சொல்வதே நல்லது!' என்று தீர்மானித் தார். ஆரம்பம் முதற்கொண்டு கணக்கு- வழக்கு எதையும் எழுதி வைக்காத தனது செயல்பாட்டையும், கனக விநாயகர் கனவில் தோன்றி அருளியதையும் மன்னரிடம் விவரித்தார்.

இதைக் கேட்ட மன்னருக்கு ஆச்சரியம்! பரிவாரங்கள் சூழ, கனக விநாயகரின் சந்நிதிக்குச் சென்றவர் கண்ணீர் மல்க அவரை வணங்கி நின்றார். பிறகு அமைச்சரிடம், ''விநாயகப் பெருமானே தெரிவித்த கணக்கெனில், அது சரியாகத்தான் இருக்கும். பிரகதீஸ்வரருக்கு ஆலயம் எழுப்பும் நமக்கு விநாயகரின் ஆசி கிடைத்து விட்டது. ஆம், நமது கனக பிள்ளையார் கணக்குப் பிள்ளையாராக அருள் பாலித்திருக்கிறார்!'' என்று பெருமிதம் பொங்கக் கூறியவர், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபட்டார். அன்று முதல் கனக விநாயகர், கணக்கு விநாயகர் ஆனார்!

அதுமட்டுமா? ராஜேந்திர சோழன் வேறொரு காரியமும் செய்தார்!

'பிற்காலத்தில், நான்கு அடி உயரம் மற்றும் மூன்றடி அகலம் கொண்ட இந்த விநாயகரை வேறு இடத்துக்கு எவரேனும் மாற்றி விடக் கூடாது!' என்பதற்காக மிகச் சிறிய நுழைவாயில் கொண்ட கருவறையுடன் தனிக் கோயில் கட்டினாராம்.

கால ஓட்டத்தில், அந்நியர்களின் ஆதிக்கம் வந்த போது கூட, கணக்கு விநாயகர் கோயிலுக்கும் பிரகதீஸ்வரர்

ஆலயத்துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கைகொண்ட சோழபுரம்- பிரகதீஸ்வரர் ஆலய கோபுரத்தை, உலக கலாசார சின்னமாக அறிவித்துள்ளது 'யுனெஸ்கோ' அமைப்பு. இத்தனை சிறப்புக்கும் அந்தக் கணக்கு விநாயகரே காரணமாகத் திகழ்ந்தார் என்றால் அவரது கீர்த்தியின் மகிமையை என்னவென்று சொல்வது?!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Aug 27, 2014 1:55 pm

சங்கடஹர சதுர்த்தி உருவான கதை!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P19


'ஜெய் மகாகால்; மகாகாலருக்கு ஜே!'

- உஜ்ஜயினிவாசிகள், ஒருவருக்கொருவர் முகமன் கூற உச்சரிக்கும் இந்த வாசகத்தைக் கேட்கும்போது நம் உடலும் உள்ளமும் சிலிர்க்கும்! அவர்களது உள்ளத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் மகாகாலராகிய ஜோதிர்லிங்கமே உஜ்ஜயினியின் அதிபதி!

கனகச்ருங்கா, குமுதவதி, குசஸ்தலி, பத்மாவதி, ப்ரதிகல்பா, போகவதி, அவந்திகா ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படும் உஜ்ஜயினி, தொன்மை வாய்ந்த- சரித்திரப் புகழ் பெற்ற திருத்தலம்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P18b
அங்காரகனான செவ்வாய் பகவானின் பிறப்பு, வளர்ப்பு மற்றும் அவர் நவக்கிரக பதவி பெற்றது ஆகிய புராண சம்பவங்களுடன் தொடர்புடைய தலம் ஆதலால் உஜ்ஜயினியை, 'அங்காரக க்ஷேத்திரம்' என்றும் போற்றுவர்! அங்காரகனது பிறப்பு பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெவ்வேறு புராணங்களில் காணப்படுகின்றன.

உமாதேவி, இறைவனைப் பிரிந்திருந்த காலம். கல்லால மரத்தடியில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார் ஈசன். இந்த நிலையில், அவரின் நெற்றிக் கண்ணில் இருந்து வழிந்த வியர்வைத் துளி ஒன்றை, கீழே விழாதபடி அப்படியே தாங்கிக் கொண்டாள் பூமாதேவி. அந்த வியர்வைத் துளியிலிருந்து தோன்றிய குழந்தையே மங்களன். இவனே அங்காரகன் எனப்பட்டான் என்றொரு கதை உண்டு.

சூரபதுமனால் தேவர்கள் துயருற்ற காலம்! 'அவனை அழிக்க வல்ல பலவான், சிவபெருமான் மூலம் தோன்ற வேண்டும்' என்றார் மகாவிஷ்ணு. அதன்படி தேவர்கள் அனைவரும் சிவபெருமானைக் காணச் சென்றனர். அவரோ கடுந்தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவரது தவம் கலைந்தால்தான் தங்களது எண்ணம் ஈடேறும் என்பதை உணர்ந்த இந்திரன், மன்மதனைத் தூண்டினான். மன்மதன் தனது மலர்க் கணைகளால் சிவபெருமானின் தவத்தைக் கலைத்தான். இதனால் கோபம் கொண்ட ஈசன், மன்மதனை தனது நெற்றிக் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கினார்!

இதன் பிறகு சிவ- பார்வதியர் திருமணம் நடந்தேறியது. இந்த நிலையில், 'இவர்களுக்குப் பிறக்கப் போகும் அதிபராக்கிரம சாலியான குழந்தையால் தனது பதவிக்கு ஆபத்து நேருமோ!' என்று பயந்தான் இந்திரன். எனவே, சிவ- பார்வதியர் இணைவதைத் தடுக்க அக்னியை அனுப்பினான். ஆனால், சிவ பெருமானின் வீரியத்தை தாங்க முடியாத அக்னி பகவான், அவரிடம் சரணடைந்து

மன்னிப்பு வேண்டினான்.அவனிடம், கங்கையில் வீரியத்தைச் சேர்க்கும்படி கட்டளையிட்டார் சிவபெருமான். அக்னி தேவனும் அப்படியே செய்தான். அப்போது, உருவான குழந்தையே அங்காரகன் என்பது சிலரது கருத்து. ஆனால், 'அக்னி தேவனுக்கும் விகேசி என்பவளுக்கும் பிறந்தவனே அங்காரகன்' என்கிறது லிங்க புராணம்!

மச்ச புராணம் என்ன சொல்கிறது தெரியுமா?

தட்சன், தன் மகளான தாட்சா யணியை சிவபெருமானுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால், சிவனா ருக்கும் தட்சனுக்கும் இடையே பகை ஏற்பட்டது.

ஒரு முறை, பெரும் வேள்வி ஒன்றைத் துவக்கிய தட்சன், சிவனாருக்கு அழைப்பு அனுப்பாமல் அவரை அவமதித்தான். கோபம் கொண்ட சிவனார், தனது நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரரை உருவாக்கி, தட்சனை அழித்து வர அனுப்பினார். இதையடுத்து, தட்சன் மற்றும் அவனைச் சேர்ந்தவர்களை அழித்தார் வீரபத்திரர். அப்போது, வீரபத்திரரது ஆவேசத்தைக் கண்டு அதிர்ந்த தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரை சாந்தப்படுத்தினர். அவரும் சாந்தமானார். இந்த உருவமே அங்காரகன் என்கிறது மச்ச புராணம்.

மற்றுமொரு கதை...

வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றியவர் பரத்வாஜ முனிவர். இவர், நர்மதை நதிக்கரையில் தவம் செய்து வந்தார். ஒரு நாள்... நர்மதையில் நீராடிக் கொண்டிருந்த தேவ மங்கை ஒருத்தியைக் கண்டு மோகித்த பரத்வாஜர், அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று, இல்லறம் நடத்தி

வந்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்ததும் அந்தப் பெண் தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றாள். பரத்வாஜ முனிவரும் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு, நர்மதைக் கரைக்குச் சென்று தவத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து, அந்தக் குழந்தையை பூமாதேவி

அரவணைத்து வளர்த்தாள். குழந்தை யின் மேனி, செந்நிறத்துடன் அக்னி போல் பிரகாசித்ததால், அவனுக்கு 'அங்காரகன்' என்று பெயர் சூட்டினாள்.

அங்காரகனுக்கு ஏழு வயதானது. ஒரு நாள், ''அம்மா, என் தந்தை யார்? அவரைக் காண ஆவலாக உள்ளது!'' என்று பூமாதேவியிடம் கேட்டான். உடனே, ''குழந்தாய்... உன் தந்தையின் பெயர் பரத்வாஜர்; மகரிஷிகளில் மகிமை பெற்றவர். அவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்!'' என்ற பூமாதேவி, அவனுடன் பரத்வாஜரது ஆசிரமத்தை அடைந்தாள்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P21
அங்கு முனிவரைச் சந்தித்தவள், ''முனிவரே, இவனே தங்களின் மகன். உங்களைக் காண விரும்பியதால் இவனை இங்கு அழைத்து வந்தேன். தாங்கள் இவனை ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என வேண்டினாள். மிகவும் மகிழ்ந்த பரத்வாஜர், அன்புடன் தன் மகனை அணைத்துக் கொண்டார்.

அங்காரகன் தகுந்த வயதை அடைந்ததும், முறைப்படி அவனுக்கு உபநயனம் முதலிய சடங்கு களைச் செய்து வைத்து வேத அத்யயனத்தையும் ஆரம்பித்து வைத்தார் பரத்வாஜர். சதுர்வேதங்களை மிகக் குறுகிய காலத்திலேயே கசடறக் கற்றுத் தேர்ந்த அங்காரகன், இன்னும் பல கலைகளிலும் சிறந்து விளங்கினான்.

இதன் பிறகு... தான் சர்வ வல்லமை பெற விரும்புவதாகவும், தகுந்த வழி காட்டுமாறும் தந்தையிடம் பிரார்த்தித்தான். 'தவமே சிறந்த வழி' என்ற பரத்வாஜர், விநாயகரைக் குறித்து தவம் இருக்கும்படி அங்காரகனைப் பணித்தார். உரிய மந்திரங்களையும் அவனுக்கு உபதேசித்து அனுப்பி வைத்தார்.

அவந்தி நகரை அடுத்த அடர்ந்த வனத்தில் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நன்னாளில் தனது தவத்தைத் துவக்கினான். பல நூறு ஆண்டுகள் நீடித்த அங்காரகனின் தவத்துக்கு பலன் கிடைக்கும் காலம் கனிந்தது. மாசி மாதம், கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தியன்று இரவு சந்திரோதய காலத்தில், அங்காரனுக்கு தரிசனம் தந்தார் ஆனைமுகத்தோன். அவரது பாத கமலங்களை பணிந்த அங்கார கன், விநாயகரை பலவாறு துதித்துப் போற்றினான். பிறகு, ''விக்னேஸ்வரா, தங்களிடம் சில வரங்களை யாசிக் கிறேன். அருள் புரியுங்கள்!'' என்று வேண்டினான்.

''அங்காரகனே, உனது அன்பினால் கட்டுண்டேன். விரும்பும் வரம் எதுவாயினும் தயங்காமல் கேள்!'' என்று லம்போதரன் திருவாய் மலர்ந் தருளினார்.

''விக்ன ராஜனே... நான், அமிர்தம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன். சர்வ மங்களமான திரு உருவோடு தங்களைத் தரிசித்த என்னை எல்லோரும், 'மங்களன்' என்று அழைக்க வேண்டும். அத்துடன், தங்களது திவ்விய தரிசனம் கிடைத்த இந்த சதுர்த்தி நன்னாளை அனைவரும் கொண்டாட வேண்டும். இந்நாளில் உம்மை வணங்கும் அடியவர்களது இன்னல்களை நீக்கி அருள வேண்டும். என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளிர வேண்டும்!'' என்று பல வரங்களைக் கேட்டான் அங்காரகன்.

அவனை கனிவுடன் நோக்கிய கணபதி, ''அன்பனே! நீ கேட்ட எல்லா வரங்களையும் தருகிறேன். அத்துடன், என்னிடம் நீ அனுக்கிரகம் பெற்ற இந்த நாள், 'அங்காரக சதுர்த்தி'யாகப் போற்றப்படும். இந்த நாளில் திரிகரண சுத்தியுடன் என்னை வணங்குபவர்களது விக்கினங்களை அடியோடு விலக்குவேன்!'' என்று அருளி மறைந்தார்.

விநாயகரின் தரிசனம் கிடைத்த அந்தப் புனித இடத்தில், கணேசர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து அல்லும் பகலும் அவரை வழிபட்டு வந்தான் அங்காரகன். இதனால் இந்த விநாயகருக்கு, 'மங்கள விநாயகர்' என்ற பெயர் வந்தது.

இதன் பிறகு, விநாயகப் பெருமானின் அருளால், தேவலோகம் அடைந்த அங்காரகன், அங்கு அமிர்தம் பருகியதுடன்... விரைவிலேயே, நவக்கிரகங்களில் ஒருவனாகும் பேறு பெற்றான். அவனுக்கு உகந்த தினம் செவ்வாய்.

எனவே செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது; விநாயகருக்கு மிக உகந்தது.

இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும். எனவே இந்த புனித தினம், சங்கடஹர சதுர்த்தி என்று பெயர் பெற்றது.

சங்கடஹர சதுர்த்தி விரத மகிமையை பல்வேறு நூல்கள் விளக்குகின்றன.

மாசி மாதம்- தேய் பிறையில்... செவ்வாய்க் கிழமையுடன் கூடி வரும் சதுர்த்தி திதி துவங்கி ஒரு வருட காலம் விதிப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

இந்த விரதத்தை துவங்கும் நாளன்று, சூரியன் உதிப்பதற்கு ஐந்து நாழிகைக்கு முன்பே உறக்கத்திலிருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து புண்ணிய நதியில் நீராட வேண்டும்.

பிறகு, சிவ சின்னங்களை அணிந்து கொண்டு விநாயகரை தியானிக்க வேண்டும்.

விநாயகரின் ஓரெழுத்து, ஆறெழுத்து மந்திரங்களில் ஏதாவது ஒன்றை... இவற்றை அறியாதவர்கள், விநாயகரின் புனித நாமங்களை அன்று முழுவதும் இடைவிடாமல் ஜபிக்க வேண்டும். உபவாசம் இருப்பதே மேல். அன்று இரவு உறங்குவதும் கூடாது. விநாயக புராணத்தைப் பாராயணம் செய்வது நல்லது.

இவ்வாறு இந்த அரிய விரதத்தை மன உறுதியோடு ஓராண்டு காலம் கடைப்பிடித்தால், இன்னல்கள் அகலும். செல்வம், கல்வி மற்றும் செல்வாக்கு ஓங்கும். கூன்- குருடு போன்ற குறைபாடுகள் நீங்கி நலம் பெறலாம். கடன்தொல்லை, நோய், பகை முதலானவை அகன்று நலமுடன் வாழலாம். இதுவே சங்கடஹர சதுர்த்தியின் சாரம்.

அங்காரகனால் துவக்கப்பட்ட சங்கடஹர சதுர்த்தி விரதமும், காலம் காலமாக அனுசரிக்கப் பட்டு வருவதை பல புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.

விப்ரதன் என்ற வேடன் முற்கல முனிவரிடம் கணேச மந்திர உபதேசம் பெற்று ஆயிரம் ஆண்டுகள் தியானித்தான். அதன் பலனாக 'புருசுண்டி' என்ற பெயரு டன், விநாயகரை குருவாகக் கொண்டு ஞானோபதேசம் பெற்று முக்தி அடைந்தான். அவன் அனுஷ்டித்தது சங்கடஹர சதுர்த்தி விரதம்.

அரசன் கிருதவீர்யன், அத்ரி முனிவரிடம் இந்த விரதத்தை உபதேசமாகப் பெற்று புத்திரப்பேறு எய்தி மகிழ்ந்தான். சூரசேனன் எனும் அரசன், இந்திரன் வாயிலாகக் கேட்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்று முக்தி அடைந்தான்.

பெற்ற அன்னையையே கொலை செய்த 'புதன்' எனும் அந்தணன், குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டான். இவன் மேல் இரக்கம் கொண்ட சூரசேன மகாராஜா... அந்தணனுக்கு, கணபதி மந்திரம் உபதேசித்து, சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்குமாறு பணித்தார். அதன்படியே செய்து நோய் நீங்கி பல்லாண்டு வாழ்ந்து முடிவில் முக்தி அடைந்தான் அந்தணன் புதன்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P20

கீர்த்திகள் பெற்ற செவ்வாய் கிரகத்துக்கு- அங்காரகனுக்கு, உஜ்ஜயினியின் (அவந்தி நகரம்)

வட எல்லையில் அவன் தோன்றிய இடத்திலேயே ஒரு திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கருவறைக் கடவுள் மங்கள்நாத் என்பர். மங்களகரமான உருவம் கொண்டவர் என்று பொருள்!

'அங்காரகன், சிவந்த மேனி, மார்பில் செம்மலர் மாலை துலங்க அழகிய திருமுடி தரித்து நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவன். வலது திருக்கரங்களில் ஒன்று அபயம் அருள மற்றொன்றில் சக்தி ஆயுதம். இடது திருக்கரங்களில் கதாயுதமும் சூலமும் திகழ்கின்றன. மேஷ வாகனம் கொண்ட இவன், சிம்ம வாகனத்திலும் காணப் பெற்றவன். இவனுக்கு மாலினி, சுசீலினி என்று இரு மனைவியர். எட்டுக் குதிரைகள் பூட்டிய பொன் தேரில் பவனி வரும் திருக்கோலம் கொண்டவன்' என்று அங்காரகனை வர்ணிக்கிறது ஒரு நூல்.

ஆனால் உஜ்ஜயினி மங்கள்நாத் ஆலயத்தில், 'பிண்டி' எனப்படும்... சிவலிங்கம் போன்ற அருவுருவமே உள்ளது. இதையே அங்காரகனின் திருவுருவமாகப் பாவித்து வழிபடுகின்றனர்.

அங்காரகன் கடுந்தவம் இயற்றி, கணேசர் தரிசனம் பெற்ற புனித இடத்தை, உஜ்ஜயினியின் தென் மேற்கில் இன்றும் காணலாம். 'ஜவாஸியா' எனும் கிராமத்திலுள்ள இந்த புனித இடத்தில் விநாயகருக்கு ஓர் ஆலயம் உண்டு. உஜ்ஜயினியில் உள்ள ஆறு கணபதி ஆலயங்களில் இதுவே சற்றுப் பெரியது.

விஸ்தாரமான பிராகாரத்துடன் திகழும் ஆலயத்தில் சந்நிதிக்கு எதிரில் யாக சாலை உள்ளது. இங்கு பக்தர்களால் தினமும் ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. பிராகாரத்தில், ஆழ்கிணறு ஒன்றைக் காணலாம். இதை, 'பாணகங்கா தீர்த்தம்' என்கிறார்கள். இங்கு, புளிய மரமே ஸ்தல விருட்சம்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P21a
இங்குள்ள கணபதி உருவம் அங்காரகனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கின்றனர். ஆனால் சிலையின் வடிவமைப்பை ஆராய்ந்தால், சுயம்பு மூர்த்தியே என்ற முடிவுக்கு வரலாம். இந்த மூர்த்தியின் திருநாமம்- சிந்தாமணி விநாயகர். பாற்கடலில் கிடைத்த சிந்தாமணியைப் போன்று கேட்பதைத் தருபவர் என்பதால் இந்தப் பெயர்.

சங்கடஹர சதுர்த்தி துவங்கப்பட்ட புனித இடத்தில் குடிகொண்டிருக்கும் இந்த சிந்தாமணி விநாயகர் ஓர் அரிய வரப்ரசாதி என்பதில் ஐயமில்லை!

பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் பிள்ளையார் விரதம்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P23
செவ்வாய் பகவானுடன் தொடர்புடைய விநாயகர் வழிபாடு மற்றொன்றும் உண்டு! தமிழக கிராமப்புறங்களில் பெண்கள் மட்டுமே அனுசரிக்கும்- 'செவ்வாய் பிள்ளையார் கும்பிடுதல்!' என்ற விரதமே அது.

தை மற்றும் ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் துவங்கி... 'இத்தனை செவ்வாய்' என்று நிச்சயம் செய்து, இந்த நோன்பை ஆரம்பிப்பார்கள். இந்த விரதத்தால் ஏற்படும் சப்தம்கூட ஆண்களுக்கு கேட்கக் கூடாது என்பது நியதி! தப்பித்தவறி இந்த விரத நைவேத்தியத்தை ஆண்கள் உட்கொண்டாலோ, நைவேத்திய பதார்த்தத்துக்காக மாவு இடிக்கும் சத்தத்தைக் கேட்டாலோ அவர்களது உடல்நலம் பாதிக்கப்படும் என்பது நம்பிக்கை! எனவே, ஆண்கள் யாவரும் உறங்கச் சென்ற பிறகு அல்லது அவர்கள் வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில் இந்த வழிபாட்டைக் கடைப்பிடிக்கிறார்கள்.

ஊர் பெண்கள் அனைவரும் ஆடவர் இல்லாத ஓர் இல்லத்தில் ஒன்று கூடுவர். ஒவ்வொருவரும் தங்களது பங்காகக் கொண்டுவந்த நெல்லை உரலில் இட்டு இடித்து அரிசியாக்குவர். பிறகு உமி களைந்து, அரிசியை மாவாக்கி வைத்துக் கொள்வர். இந்த மாவுடன், சிறு சிறு தேங்காய்த் துண்டுகளும் இளநீரும் கலந்து நன்றாகப் பிசைந்து 'அடை'களாகத் தட்டுவர். பிறகு வாணலியில் வைக்கோலைப் பரப்பி, அதன்மேல் அடைகளை வைத்து வேக வைப்பார்கள். மாவில் உப்பு சேர்க்க மாட்டார்கள். இதுவே நிவேதனம்!

பிறகு, கனாக்கன்றின் (பசுவின் ஆண் கன்று) சாணத்தால் பிள்ளையார் பிடித்து, புங்கை இலை, புளிய இலை மூலம் சுழல் அமைத்து, அதன் நடுவே சாணப் பிள்ளையாரை எழுந்தருளச் செய்வார்கள். தொடர்ந்து, விநாயக புராணத்தை ஒருவர் எடுத்துச் சொல்வார். கதை முடிந்ததும் தூப- தீப ஆராதனைகள் காட்டி, அடைகளை நிவேதனம் செய்து வழிபட்ட பிறகு, அந்தப் பிரசாதத்தை குழுமி இருப்போருக்கு விநியோகிப்பர். அதை அங்கேயே உண்ண வேண்டும்!

இதையடுத்து புங்கை- புளியந் தழைகள், வைக்கோல் மற்றும் பூஜை மலர்கள் ஆகியவற்றை, பொழுது விடிய நான்கு நாழிகைக்குள்ளேயே எடுத்துச் சென்று ஆற்றில் விட்டு விடுவார்கள். அத்துடன், பிள்ளையாரையும் வழியனுப்பிவிட்டு, நீராடிய பின்... வாய் பேசாமல், புனித மஞ்சள்- குங்குமம் அணிந்து, வெற்றிலை சுவைத்து அவரவர் இல்லத்துக்குச் செல்வர். அன்று முழுவதும் எவருக்கும் காசு- தானியம் தரமாட்டார்கள்.

ஆயுள் வளர்க்கும் அருகம்புல்!

'மூதணிடம்' என்றால் என்ன தெரியுமா? அருகம்புல்லின் வேறு பெயரே இது. இதன் அசல் பெயர் 'அகரம் புல்'!

ஒரு சந்தர்ப்பத்தில், மிகுந்த வெப்ப தேகம் கொண்ட அனலாசுரன் என்ற அசுரனை விழுங்கினார் விநாயகர். இதனால் அவரது திருமேனி தகித்தது! இந்த உஷ்ணத்தைப் போக்க விநாயகரை குளிர்வித்த பெருமைக்குரியது அருகம்புல். இதனால், அவருக்கே உரிய பத்ரமாக(தழை) திகழ்கிறது அருகம்புல். 'தூர்வா' என்றும் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கொண்டு கணபதியை பூஜிப்போர், நிலையான ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெறுவர்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Aug 28, 2014 6:56 am

மங்கலம் தரும் மாணிக்க விநாயகர்!


விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P6

திருச்சி என்றதும் ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டையும், அதன் உச்சியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீவிநாயகரும்தான் நினைவுக்கு வருவர். உச்சிப்பிள்ளையார் குடிகொண்டிருக்கும் ஆலயம், ஸ்ரீதாயுமானவ ஸ்வாமி திருக்கோயில் என்பதும் பலருக்குத் தெரியும்!

ஆனால்... இங்கே, உச்சியில் உள்ளது போலவே அடிவாரத்திலும் பிள்ளையார் இருக்கிறார். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த இவரின் திருநாமம் - ஸ்ரீமாணிக்க விநாயகர்!

உச்சிப் பிள்ளையாரை தரிசிக்க வேண்டும் எனில் சுமார் 417 படிகளைக் கடக்க வேண்டும். மாணிக்க விநாயகரை தரிசித்து விட்டுத்தான் முதல் படியில் அடியெடுத்து வைக்க வேண்டும். ஆம்... ஆலயத்துக்குள் நுழைந்ததும் மாணிக்க விநாயகரின் அருளாட்சிதான்!

திருச்சி நகரின் மிக முக்கிய வணிக நிறுவனங்கள் உள்ள இந்தப் பகுதியில், மாணிக்க விநாயகரை வணங்கி விட்டே, கடையைத் திறக்கின்றனர். இதேபோல் கடையை அடைத்துவிட்டு, வாசலில் நின்றபடி பிள்ளையாருக்கு சிதறுகாய் உடைத்த பிறகே வீட்டுக்குச் செல்கின்றனர். இவரை வணங்கினால், வியாபாரம் செழிக்கும்; சிறக்கும் என்பது நம்பிக்கை!

மாணவர்கள் தேர்வுக்குச் செல்வதற்கு முன்னதாக, மாணிக்க விநாயகரின் திருவடியில், பேனா, ஹால் டிக்கெட் ஆகியவற்றை வைத்து பிரார்த்திக்கின்றனர். கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வில் வெற்றி பெறவும் மாணிக்க விநாயகர் அருள்கிறார்.

சுமார் 250 வருடங்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட இந்த விநாயக விக்கிரகம், அடிவாரத்தில் வைத்து வழிபடப்பட்டதாம்! பிறகு மாணிக்கம் எனும் பக்தர், விநாயகருக்கு சந்நிதி எழுப்பித் தர... மாணிக்க விநாயகர் எனும் திருநாமம் ஏற்பட்டதாம்!

தந்தை தாயுமானவ ஸ்வாமியைப் போலவே சுகப் பிரசவத்துக்கு அருள்கிறார் மாணிக்க விநாயகர். கர்ப்பிணிப் பெண்கள் பலரும் இங்கே வந்து விநாயகரை வேண்டி, அருகில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்கின்றனர்.

யோகம், ஞானம் முதலான தேடலுடன் வரும் அன்பர்கள் பலரும் மாணிக்க விநாயகரை மனதார வேண்டிக் கொண்டு, தியானத்தில் ஈடுபடுவதைக் காணலாம்!

'மனதுள் என்ன பிரச்னையாக இருந்தாலும் மாணிக்க விநாயகரை தரிசித்து வணங்கினால் போதும்; எண்ணி ஏழே நாளில் துயரத்தைப் போக்கி, நிம்மதியைத் தந்தருள்வார்!' என்று சிலிர்ப்பு மாறாமல் சொல்கின்றனர் பக்தர்கள்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Aug 28, 2014 7:10 am

ஸ்ரீநிருதி கணபதி - எடப்பாடி
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P121
'வேழமுகத்து விநாயகனை தொழ ஞானம் மிகுத்து வரும்' என்பது சான்றோர் வாக்கு. அதிலும் நிருதி நாயகராக தென்மேற்கு திசையில் அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயகரை வழிபடுவது விசேஷம்.

'நிருதி விநாயகரை வழிபடுவதால் காரியத் தடைகள் அகலும்; வேண்டும் வரங்கள் விரைவில் ஸித்திக்கும்; கல்வியறிவு பெருகும்' என்பது ஆன்றோர் வாக்கு.

சேலத்தில் இருந்து மேற்கே சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள எடப்பாடியில் அமைந்திருக்கிறது ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில். தேவ- அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உருவான ஆலகால விஷத்தைப் பருகி, அனைவரையும் காப்பாற்றிய ஈசனின் திருவருளை நினைவுபடுத்தும் விதம் ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் எனும் திருநாமத்துடன் திகழ்கிறார் இந்தத் திருக்கோயிலின் இறைவன். அம்பாள்- ஸ்ரீதேவகிரி அம்மை.

கோயிலின் மற்றொரு சிறப்பம்சம்... நிருதி மூலையில் அதாவது தென்மேற்கு திசையில் தரிசனம் தரும் பிள்ளையார். இவர் வலம்புரி விநாயகராக திகழ்வது கூடுதல் சிறப்பு. சதுர்த்தி திருநாட்களில் இவருக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக சங்கடஹர சதுர்த்தி அன்று, இவரை தரிசித்து வழிபட நம் சங்கடங்கள் யாவும் சிதறுண்டு போகுமாம்!

உத்தியோக உயர்வு, வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் ஆகிய பிரார்த்தனைகளுடன் வரும் பக்தர்கள், இவருக்கு அருகம்புல் சார்த்தி மனமுருக வழிபட்டுச் செல்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக எடப்பாடி பகுதி மாணவர்களின் கண்கண்ட தெய்வமாக திகழ்கிறார் இந்தப் பிள்ளையார்.

தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற விரும்பும் மாணவ- மாணவியர் கோயிலுக்கு வந்து, பய பக்தியுடன் இவரை வழிபடுகின்றனர். மேலும், விநாயகரின் திருவடிக்கு அருகில் (தரையில்) தங்கள் தேர்வு எண்களை எழுதி வைத்து, 'பிள்ளையாரப்பா... பாஸ் மார்க் போதாது; ஃபர்ஸ்ட் மார்க் எடுக்க நீதான் அருள் புரியணும்' என நம்பிக்கையுடன் வழிபட்டுச் செல்கிறார்கள்.

இந்த வேண்டுதல்களை நிறைவேற்றி, மாணவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றி அருள்புரிகிறார் இந்தத் தும்பிக்கையான்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Aug 28, 2014 7:11 am

நீலகண்ட பிள்ளையார் - பேராவூரணி
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P103
பிரணவ வடிவான பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, எந்தவொரு காரியத்தையும் துவங்க, வெற்றி நிச்சயம் என்பது புராணங்களின் அறிவுரை. தொழில், உத்தியோகம் என்றில்லை... கல்வியிலும் சிறக்க, கணபதியை வழிபட வேண்டுமாம். 'யானையைப் போல் ஞாபக சக்தி மிகுந்த ஜீவன் வேறில்லை. எனவே ஆனைமுகனை வணங்கினால், ஞாபக சக்தி அதிகரிக் கும்; பரீட்சையில் வெற்றி மட்டுமின்றி, அதிக மதிப்பெண்களும் கிடைக்கும்' என்பது பெரியோர்கள் வாக்கு. இதை மெய்ப்பிக்கிறார் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார்.

தஞ்சாவூர் மாவட்டம்- பட்டுக்கோட்டையை அடுத்துள்ள ஊர் பேராவூரணி. இங்கு குடிகொண்டிருக்கும் நீலகண்ட பிள்ளையார், இந்தப் பகுதி மாணவர் களின் கண்கண்ட தெய்வம்! பொதுத் தேர்வு காலத்தில், 'ஹால் டிக்கெட்'டை இவரின் திருவடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்வதால், இவரை 'ஹால் டிக்கெட் பிள்ளையார்' என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.

இவர், துவக்கத்தில் சிறிய கொட்டகையில் குடியிருந்தாராம். துளசேந்திரன் என்ற மன்னனின் அமைச்சர் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி. அவர் ஒருமுறை இந்த வழியே வந்தபோது, நீலகண்ட பிள்ளையாரை வழிபட்டு, விபூதி வாங்கிப் பூசிக்கொள்ள... மறுநாளே நோய் குணமானதாம். இதையறிந்து சிலிர்ப்படைந்த மன்னர், இந்தப் பிள்ளையாருக்கு கோயில் எழுப்பினாராம். 'உருவத்தால் ஸ்ரீவிநாயகர்; நீலகண்டன் எனும் திருநாமத் தால் ஈசன்; சக்திபீடத்தில் அமைந்த தலம் என்பதால் உமையவளின் அம்சம்... ஆகவே, சக்தி வாய்ந்தவர் இவர்' என்கின்றனர் பக்தர்கள்.

இவருக்கு அருகம்புல் சார்த்தி, 'பாலும் தெளிதேனும்' பாடலைப் பாடி, தேர்வு எண் (ஹால் டிக்கெட்), பேனா ஆகியவற்றை திருப்பாதத்தில் வைத்து ஒன்பது முறை வலம் வந்து வழிபட, தேர்வில் வெற்றி உறுதி என்பது நம்பிக்கை!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Aug 28, 2014 10:39 am

மாமன்னன் ராஜராஜன் கட்டிய விநாயகர் ஆலயம்!
தஞ்சை அருகேயும்... பிள்ளையார்பட்டி!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P48

காரைக்குடி என்றாலே பிள்ளையார்பட்டி நினைவுக்கு வரும்; அங்கே குடிகொண்டிருக்கும் ஸ்ரீகற்பகவிநாயகர் திருக்கோயில் நம் கண்முன்னே வந்து நிற்கும். அதே போல் தஞ்சாவூர் என்றதும் நம் நினைவுக்கு வருவது, பெருவுடையார் கோயில் எனப்படும் பெரியகோயில்தான்! இங்கே, தஞ்சாவூருக்கு அருகில் பிள்ளையார்பட்டி எனும் ஊர் உள்ளது என்பதும், இங்கே ஸ்ரீவிநாயகருக்கு அழகிய ஆலயம் அமைந்துள்ளதும் எத்தனைபேருக்குத் தெரியும்?!

தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயத்துக்கு இது ஆயிரமாவது வருடம். தமிழக அரசு சார்பில் பிரமாண்ட விழா எடுக்கும் இந்த வேளையில், சுமார் 1,017 வருடங்களுக்கு முன்பு, சோழச் சக்கரவர்த்தி ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிள்ளையார் கோயிலையும் அறிவோமா?!

தஞ்சை பெரியகோயிலில் இருந்து மருத்துவக்கல்லூரி வழியாக வல்லம் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பிள்ளையார்பட்டி. இந்த ஊரின் மையத்தில், கோயில்கொண்டிருக்கிறார் விநாயகப் பெருமான். இந்த ஆலயத்தில், பிள்ளையாரின் திருநாமம் - ஸ்ரீஹரித்ரா விநாயகர்.

சுமார் 8 அடி 4 அங்குல உயரமும், 4 அடி 2 அங்குல அகலமும் கொண்டு, கிட்டத்தட்ட மூன்றரை டன் எடையுடன் கொழுகொழுவெனக் காட்சி தருகிறார் ஸ்ரீஹரித்ரா விநாயகர். தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டும் எண்ணத்தில் இருந்த ராஜராஜசோழன், தற்போதைய கர்நாடக மாநிலத்தில் இருந்து இந்த விநாயகரின் கல் விக்கிரகத்தை எடுத்து வந்தாராம். வல்ல தேசத்தை அடுத்து வரும் வழியில், வீரர்கள் சற்றே இளைப்பாறுவதற்காக, பிள்ளையாரைக் கீழே இறக்கி வைத்தனராம். பிறகு, வண்டியில் ஏற்ற முனைந்தபோது, விக்கிரகத்தை அசைக்கக்கூட முடியவில்லையாம்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P48a
இதையறிந்த ராஜராஜசோழன், உடனே அங்கே விரைந்து வந்தார். ''இதுவும் நல்லதுக்குத்தான்! பெரியகோயிலின் கன்னிமூலையில் கணபதிக்கு ஆலயம் அமைத்துவிடுவோம்'' என்று சொல்லி, அதன்படி கோயிலும் கட்டி, அந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி எனப் பெயரும் சூட்டினாராம் (ராஜராஜ சோழனின் கனவில் விநாயகப் பெருமானே வந்து, இங்கே கோயில் கட்டச் சொன்னதாகத் தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு).

தந்தைக்குப் பெருவுடையார் கோயில் கட்டிய அதே ராஜராஜசோழன், மகன் விநாயகருக்கும் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்தார். பிறகு, மகனைக் காண ஸ்ரீபிரகதீஸ்வரரே இந்த ஆலயத்துக்கு வந்து சென்றார் என்பது நம்பிக்கை! இதற்காகவே, விநாயகர் சந்நிதிக்கு அருகிலேயே சிவலிங்க மூர்த்தத்துக்கும் சந்நிதி அமைந்துள்ளது.

சங்கடஹர சதுர்த்தி நாளில், மாலை வேளையில் இங்கு வந்து, விநாயகரை வணங்கி, சிதறுகாய் அடித்துப் பிரார்த்தித்தால், மாங்கல்ய வரம் கிடைக்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்!

தஞ்சை- பிள்ளையார்பட்டி விநாயகரை வணங்குங்கள்; வினைகள் அனைத்தையும் தீர்த்தருள்வார், பாருங்கள்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Aug 28, 2014 2:19 pm

பீமனுக்கு வாள் தந்த பிள்ளையார்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P71(1)
கர்நாடக மாநிலம், உடுப்பியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது கும்பாசி கிராமம். வறட்சி மிகுந்த இந்தப் பகுதிக்கு சீடர்களுடன் வந்த அகத்தியர், இங்கே மழை பெய்து, பூமி குளிர வேண்டும் என மிகப் பெரிய யாகத்தில் ஈடுபட்டார்.

கும்பாசுரன் என்பவன் யாகத்தைத் தடுக்க முயற்சித்தான். இதையறிந்த தருமர், தம்பி பீமனை அழைத்து, அசுரனை அழிக்கும்படி ஆணையிட்டார். ஆனால், பீமனால் கும்பாசுரனை வெல்ல முடிய வில்லை. அப்போது... 'கணபதியை வணங்கு; அசுரனை அழிக்கும் பலம் பெறுவாய்!’ என்று அசரீரி கேட்டது. அதன்படி விநாயகரை தியானித்து பீமன் வழிபட, எதிரில் உள்ள குன்றின் மீது யானையின் வடிவாய் காட்சி தந்தார் பிள்ளையார்; பீமனுக்கு வாள் ஒன்றையும் தந்து ஆசீர்வதித்தார்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P71a
அதையடுத்து, அசுரனை அழித்தான் பீமன். அகத்தியரின் யாகமும் தடையின்றி நடைபெற்றது. தேசம் செழித்தது. துவாபர யுகத்தில் 'கும்பாசி’ எனும் பெயருடன் திகழ்ந்த இந்தத் தலம், தற்போது 'ஆனே குட்டே’ எனப்படுகிறது. ஸ்ரீவிநாயகர் யானையாகக் காட்சி தந்த குன்றும், அவரின் கோயிலும் பெரிய வழிபாட்டுத் தலங்களாக திகழ்கின்றன.கர்நாடக மாநிலத்தின் ஏழு முக்தி ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இங்கே திருமணம், குழந்தைக்கு பெயர் சூட்டல் ஆகிய வைபவங்கள் நடந்தால், ஆயுசு முழுவதும் விநாயகர் அவர்களைக் காத்தருள்வார் என்பது ஐதீகம்!

மலையடிவாரத்தில் ஸ்ரீஹாரிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு, ஸ்ரீபார்வதிதேவியின் மடியில் கிடக்கும் குழந்தை விநாயகர் திருமேனி, அழகு! மலையில் ஸ்ரீஸித்தி விநாயகரின் அற்புதத் தரிசனம். 'என்னைச் சரணடைந்தால், உங்களைக் காத்தருள்வேன்’ என அடியவர்களுக்குச் சொல்லும் பாவனையில், அலங்கார திருக்கோலம் காட்டுகிறார் பிள்ளையார். இந்த ஐந்துகரத்தானை வழிபட... பீமனுக்கு அருள்புரிந்தது போன்று, நற்காரியங்கள் நடந்தேற நமக்கும் துணை நிற்பார்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Aug 28, 2014 2:21 pm

ராஜயோகம் கைகூடும்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P10
ராஜகணபதியை மனதாரப் பிரார்த்தித்தால், கல்யாண மாலை விரைவில் கிடைக்கும்; சீரும் சிறப்புமாக வாழலாம்’ என்பது ஈரோடு மாவட்ட பக்தர்களின் நம்பிக்கை.

ஈரோடு மாவட்டத்தில் உள்ளது பெருந்துறை. இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ஆசிரியர் குடியிருப்புப் பகுதியில் ராஜபரிபாலனம் செய்தபடி, அனைவருக்கும் அருளும் பொருளும் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீராஜகணபதி.

துவக்கத்தில் சிறியதொரு கொட்டகையில் இருந்து, தரிசனம் தந்து கொண்டிருந்தார் ஸ்ரீராஜ கணபதி. பிறகு, இவரின் பேரருளால் வாழ்வில் சகல ஐஸ்வரியங்களையும் பெற்று, வாழ்வில் உயர்ந்த அன்பர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து திருப்பணிகள் மேற்கொள்ள... தற்போது அற்புதமாக, அழகுறத் திகழ்கிறது ஆலயம்.

இந்த வழியே செல்லும் பேருந்துகள் அனைத் தும் கோயில் வாசலுக்கு அருகிலேயே நின்று செல்வது வசதியாக உள்ளது என்கின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீராஜகணபதிக்கு தினமும் பாலபிஷேகம் செய்து பிரார்த்திக்கும் பக்தர்கள் ஏராளம். அமாவாசை மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்களில், இவருக்கு விசேஷ அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாளில், ஸ்ரீராஜகணபதிக்கு நைவேத்தியம் படைத்து வணங்கினால், வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்; உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமாம்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P10a
திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், இங்கு வந்து ஸ்ரீராஜகணபதிக்கு மாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தித்தால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும்; இல்லறம் சிறக் கும் என்பது நம்பிக்கை. இதனால் இவருக்கு கல்யாண கணபதி என்றும் திருநாமம் உண்டாம்!

இந்தக் கோயிலில் ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபால முருகன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இங்கேயுள்ள ஸ்ரீவிஷ்ணு துர்கைக்கு ராகுகால சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இவளை வணங்கித் தொழுதால், எதிரிகளின் தொல்லை ஒழியும்; வீண் பயத்தில் இருந்து விடுதலை பெறலாம். வியாழக்கிழமை களில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு விசேஷ வழிபாடு சிறப்புற நடைபெறுகிறது. இவரை வணங்கினால், கல்வி-கேள்வி களில் சிறந்து விளங்கலாம்; ஞாபக சக்தி அதிகரிக்கும்!

ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி திருநாளில், சந்தனக் காப்பு அலங்காரத்தில் ஸ்ரீராஜ கணபதியைக் காணக் கண்கோடி வேண்டும். எண்ணற்ற பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதால், கொழுக்கட்டைகளை நைவேத்தியம் செய்து, ஸ்ரீராஜகணபதியை வணங்கிச் செல்வார்கள். இந்த நாளில் மகா கணபதி ஹோமம், பிரமாண்டமாக நடைபெறும். இந்த யாகத்தில் பங்கேற்று ஸ்ரீராஜகணபதியைத் தரிசித் தால், ராஜயோகம் கூடி வரும்; நல்லன வெல்லாம் நம்மைத் தேடி வரும், என்கின்றனர் பக்தர்கள்!

அதேபோல், தைத் திருநாளுக்கு மறுநாள், ஸ்ரீகணபதிக்கு விசேஷ அலங்காரமும் ஹோமமும் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் படையலிட்டு வழிபடுவார்கள். அப்போது வைக்கும் கோரிக்கைகள் யாவற்றையும் தட்டாமல் நிறைவேற்றித் தந்தருள்வாராம் ஸ்ரீராஜகணபதி.

நீங்களும் ஸ்ரீராஜகணபதியை தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்விலும் ராஜயோகம் கைகூடும்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Aug 28, 2014 2:22 pm

அம்மையப்பனுடன் ஆனைமுகன்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன் - Page 3 P78

தென்னாடுடைய சிவனார் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார் என்பது தெரியும். அதில், நரியைப் பரியாக்கிய சம்பவமும் ஒன்று என்பதையும் அறிவோம். சிவபெருமான், நரியைப் பரியாக்கிய அந்த வனப்பகுதிதான், மதுரையில் இன்றைக்கு நரிமேடு என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள விநாயகரை, காட்டுப்பிள்ளையார் என அழைக்கின்றனர், பக்தர்கள்.

மதுரை நரிமேடு பகுதியில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். முன்பொரு காலத்தில் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியருளினாராம் ஸ்ரீகணபதி. இந்தக் கோயில் கருவறையில், அம்மை ஸ்ரீமீனாட்சியுடனும் அப்பன் ஸ்ரீசுந்தரேஸ்வரருடனும் திருக்காட்சி தருகிறார் ஸ்ரீகாட்டுப்பிள்ளையார்.

பணி நிமித்தம் காரணமாக, பிறந்த ஊரில் பெற்றோரை விட்டுவிட்டு, வெளியூரில் வேலை பார்க்கிற அன்பர்கள் இங்கு வந்து, அம்மையப்பனுடன் தரிசனம் தரும் ஸ்ரீகாட்டுப்பிள்ளையாரை வணங்கி வழிபட்டால், விரைவில் ஒன்றுசேர்ந்து வாழ்வர் என்பது ஐதீகம்!
http://www.vikatan.com/sakthi/2011/09/ywvlnj/images/p78a.ஜபக்

ஸ்ரீகாட்டுப்பிள்ளையாரை சங்கட ஹர சதுர்த்தி நாளில் வந்து வணங்கி, வஸ்திரம் சார்த்தி, அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் தேடிவரும் என்று சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர்கள்.

சிவனாருக்கும் அம்பிகைக்கும் நந்தி வாகனங்கள் இருப்பது விசேஷ அமைப்பு! ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீமாரி யம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீகாலபைரவர் ஆகியோருக் கும் சந்நிதிகள் உள்ளன.

விநாயக சதுர்த்தி நாளில், அம்மையப்பனுடன் வீற்றிருக்கும் ஸ்ரீகாட்டுப்பிள்ளையாரை வணங்கு வோம்; வாழ்வாங்கு வாழ்வோம்!

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக