புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்காத செல்வம் தரும் Poll_c10நீங்காத செல்வம் தரும் Poll_m10நீங்காத செல்வம் தரும் Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
நீங்காத செல்வம் தரும் Poll_c10நீங்காத செல்வம் தரும் Poll_m10நீங்காத செல்வம் தரும் Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
நீங்காத செல்வம் தரும் Poll_c10நீங்காத செல்வம் தரும் Poll_m10நீங்காத செல்வம் தரும் Poll_c10 
3 Posts - 6%
prajai
நீங்காத செல்வம் தரும் Poll_c10நீங்காத செல்வம் தரும் Poll_m10நீங்காத செல்வம் தரும் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
நீங்காத செல்வம் தரும் Poll_c10நீங்காத செல்வம் தரும் Poll_m10நீங்காத செல்வம் தரும் Poll_c10 
2 Posts - 4%
Rutu
நீங்காத செல்வம் தரும் Poll_c10நீங்காத செல்வம் தரும் Poll_m10நீங்காத செல்வம் தரும் Poll_c10 
1 Post - 2%
சிவா
நீங்காத செல்வம் தரும் Poll_c10நீங்காத செல்வம் தரும் Poll_m10நீங்காத செல்வம் தரும் Poll_c10 
1 Post - 2%
viyasan
நீங்காத செல்வம் தரும் Poll_c10நீங்காத செல்வம் தரும் Poll_m10நீங்காத செல்வம் தரும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்காத செல்வம் தரும் Poll_c10நீங்காத செல்வம் தரும் Poll_m10நீங்காத செல்வம் தரும் Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
நீங்காத செல்வம் தரும் Poll_c10நீங்காத செல்வம் தரும் Poll_m10நீங்காத செல்வம் தரும் Poll_c10 
2 Posts - 15%
Rutu
நீங்காத செல்வம் தரும் Poll_c10நீங்காத செல்வம் தரும் Poll_m10நீங்காத செல்வம் தரும் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்காத செல்வம் தரும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 12:13 am

நீங்காத செல்வம் தரும் 201503201144287505_Grave-Wealth-brings-Rajagopalaswamy_SECVPF

திருவாரூர் மாவட்டத்தில் 'கோவில்பாதி, குளம்பாதி' என்ற பழமொழியை தனக்கே உரித்தாக்கிக்கொண்ட ஊர் மன்னார்குடி.

மன்னர்கள் இவ்வூரில் குடிகொண்டு இருந்ததால் 'மன்னார்குடி' என்ற பெயர் வந்தது.

மன்னார்குடி மதில் அழகு என்பது இவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள விஷ்ணு கோவில்களில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் தனிச்சிறப்புடையதாக விளங்குகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் மகாவிஷ்ணு சங்கு, சக்கரம் இல்லாமல் உபயகரங்கள், செண்டுடன் சேவை சாதிப்பது சிறப்பம்சம்.

இக்கோவில் முதலாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. அர்த்த மண்டபம், 3-ம் கோபுரம் ஆகியவற்றையும் அவர் கட்டினார். அவர் காலத்திற்கு பின் வந்த மன்னர்களால் இக்கோவில் பராமரிக்கப்பட்டது.

கோவிலுக்கு எதிரே 54 அடி உயரமுள்ள கருட ஸ்தம்பம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. கம்பத்தின் மேல் தளத்தில் கருடனுக்கு அழகிய கோவில் உள்ளது. கோவிலில் பெருமாள் மூலவர் ஸ்ரீவாசுதேவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். ருக்மணி, சத்தியபாமாவுடன் வித்ய ராஜகோபாலனாக உற்சவமூர்த்தி காட்சியளிக்கிறார். இவருக்கு ராஜமன்னார், கோபாலன் என்ற திருப்பெயர்களும் உண்டு. ஒரு காதில் குண்டலமும், ஒரு காதில் தோடும் அணிந்து வித்ய ராஜகோப£லன் என்ற திருப்பெயரோடு ஒரு வஸ்திரத்தில் இடுப்பில் கச்சம், சிரசில் முண்டாசு, வலது கரத்தில் பொன்சாட்டையுடன், மாடு-கன்றுகளுடன் இடையர் உருவத்தில் நின்ற திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார்.

மூலவர் செண்பக லட்சுமியாகவும், உற்சவர் செங்கமலத்தாயாராகவும் காட்சி தருகிறார்.

இத்திருக்கோவிலில் பெருமாள் தாயார் சன்னதி உள்பட 24 சன்னிதிகள் உள்ளன.



நீங்காத செல்வம் தரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 12:14 am

மண்டபம்

நீங்காத செல்வம் தரும் 100B42CF-F708-4744-B1F4-5E736B6310DD_L_styvpf

இக்கோவிலுக்கு வல்லாள மகாராஜன் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கருட வாகன மண்டபம், யானை வாகன மண்டபம், பலகனி மண்டபம், வெண்ணைத்தாழி மண்டபம், புன்னை வாகன மண்டபம் என 7 மண்டபங்கள் உள்ளன. கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள ராஜகோபுரத்தின் உயரம் 154 அடி. மேற்கு கோபுரம் சிற்பம் வேலைப்பாடுகள் நிறைந்தது.

ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதருக்கு ஆண்டு முழுவதும் நடைபெறுவது போல் ராஜகோபாலசுவாமிக்கும் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறுகிறது. ஆனி மாதத்தில் ஹரித்ரா நதி குளத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழா, ஆடிமாதத்தில் செங்கமலத்தாயார் தேர்த்திருவிழா, மார்கழி மாதத்தில் இராப்பத்து, பகல்பத்து உற்சவம், ஏகாதசி திருவிழா போன்ற விழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா 18 நாட்களும், விடையாற்றி திருவிழா 12 நாட்களும் சேர்த்து 30 நாள் திருவிழா நடைபெறும்.

அதில் வெண்ணைத்தாழி, கருடசேவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும்.

மன்னார்குடிக்கு பெருமை சேர்ப்பது ஹரித்ரா நதி திருக்குளம். 23 ஏக்கர் பரப்பளவு தண்ணீர் உள்ள இக்குளத்தில் நடுவில் வேணுகோபாலன் திருக்கோவில் உள்ளது. நான்கு கரைகளிலும் வீதிகள் உள்ளன. குளத்தின் தெற்கே கரை நீண்ட படிக்கட்டுக்களை கொண்டது. நான்கு கரைகளிலும் ஆஞ்சநேயர், ராமர், விநாயகர், சீனிவாசர் ஆகியோருக்கு கோவில்கள் அமைந்துள்ளன.



நீங்காத செல்வம் தரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 12:15 am

தலவரலாறு

நீங்காத செல்வம் தரும் 5785BDA1-B077-4BF6-A0B4-C13BABDFFD6C_L_styvpf

கும்பகோணத்துக்கு தென்கிழக்கில் சம்பக வனம் உள்ளது. இங்கு 1,008 முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களில் வஹ்னிமுகர் சிறப்புடையவர். அவருக்கு கோப்பிரளயர், கோபிலர் என்றும் 2 மகன்கள் இருந்தனர். அவர்கள் தீ நடுவே ஒற்றைக்காலில் நின்று எட்டெழுத்தோதி நாராயணனை குறித்து தவம் மேற்கொண்டனர்.

பெருமான் அவர்கள் முன்தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார்.

உடனே அவர்கள், 'எங்களுக்கு மோட்சம் வேண்டும்' என்றனர்.

அப்படியானால் துவாரகையில் உள்ள கண்ணபிரானை தரிசித்தால் அப்பேறு கிட்டும் என்றார் பரமாத்மா.

இருவரும் மகிழ்ந்து துவாரகையை நோக்கி புறப்பட்டனர். வழியில் அவர்கள் நாரத முனிவரை சந்தித்து, 'கண்ணபிரான் எங்கு இருக்கிறார்?, துவாரகை எங்கு உள்ளது?' என்று கேட்டனர்.

நாரதர், 'கண்ணபிரான் இவ்வுலகில் கம்சன் முதலான தீயவர்களை அழித்து விண்ணுலகம் சென்றுவிட்டார்' என்று கூறினார்.

இதைக்கேட்ட இருவரும் மயங்கி விழுந்துவிட்டனர்.

நாரதர் அவர்கள் பக்தியை கண்டு மகிழ்ந்தார்.

பின்னர் நாரதர் அவர்கள் இருவருக்கும் பன்னிரெண்டழுத்து மந்திரத்தை உபதேசித்து, 'நீங்கள் கும்பகோணத்துக்கு தெற்குபுறம் உள்ள செண்பகாரண்யம் என்னும் தலத்தில் உள்ள ஹரித்ரா நதிகரைக்கு சென்று நீராடி, அங்கு 1 வருடம் தவம் இருந்தால் பகவான் உங்களுக்கு காட்சி தருவார்' என்று கூறினார்.

இருவரும் மகிழ்ந்து ஹரித்ரா நதியை அடைந்து ஆசிரமம் அமைத்து கடும் தவம் இருந்தனர். அவர்கள் தவத்தை கண்டு மகிழ்ந்து பரந்தாமன் அவர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது அவர்கள் இருவரும் 'பெருமானே! அன்று பிருந்தாவனத்தில் செய்த லீலைகளை இன்று நாங்கள் காணும் படி அருள வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

பரந்தாமன் கண்ணனாக அவதாரம் செய்து காட்டிய லீலைகள் அவர்களுக்கு காட்டி அருளாசி புரிந்தார்.

கண்ணனது 30 சேவைகளையும் இரு முனிவர்களும் கண்டு பரவசமுற்றனர்.

பின்னர் அவர்கள் கண்ணீர் மழைபொழிய பரந்தாமனின் திருவடிகளில் விழுந்து வணங்கி, 'தாங்கள் இத்திருக்கோலத்துடன் என்றும் இந்த இடத்திலேயே எழுந்தருளி எல்லோருக்கும் காட்சி தந்தருள வேண்டும்' என்று வேண்டிக்கொண்டனர்.

அவர்கள் வேண்டுதலின் படி ஓங்கி உலகளந்த உத்தமன் செண்பகாரண்யத்தில் ராஜகோபாலனாய் கோவில் கொண்டான்.

இத்தலத்தில் பரந்தாமன் பிரம்மாவின் அகந்தையை அழித்து அவருக்கு உண்மை அறிவை ஊட்டினார். இதனால் மகிழ்ந்த பிரம்மன் இத்தலத்தில் விசுவகர்மாவை கொண்டு ஸ்வாயம்புல விமானத்துடன் கூடிய கோவிலை அமைக்க செய்து பரமாத்மாவை தானே பிரதிஷ்டை செய்து, பங்குனி ரோகிணியில் தேர்த்திருவிழாவையும் சிறப்பாக நடத்தி மகிழ்ந்தார்.

திருமகள் இத்தலத்தின் வடகிழக்கு கோவில் செந்தாமரை பொய்கையில் அவதரித்தாள். பிருகுமுனிவர் அவரை தன் மகளாக வளர்த்து பின்னர் பரந்தாமனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

மகாலட்சுமி அவதரித்த குளம் இன்று 'திருப்பாற்கடல்' என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் அக்னி பகவான் தவமிருந்து, பெருமானின் அருளால் இழந்த தனது ஒளியையும் வெப்பத்தையும் மீண்டும் பெற்றார்.

இந்த ஆண்டு வெண்ணைத்தாழி உற்சவம் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.




நீங்காத செல்வம் தரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 12:15 am


நித்திய பூஜை நாள்தோறும் இத்திருக்கோவிலில் ஏழு கால வழிபாடு நடைபெறுகிறது.

காலை 5 மணி - விசுவரூபம்
காலை 8 மணி - திருவனந்தல்
காலை 9.30 மணி - காலைசந்தி
மதியம் 12மணி - உச்சிக்காலம்
மாலை 6 மணி - திருமாலை
இரவு 8 மணி - திருவாராதனம்
இரவு 9 மணி - அர்த்தசாமம்

ஹரித்ரா நதியின் பெருமை

கோபிலர், கோப்பிரளயர் என்ற இரண்டு முனிவர்களுக்கு பரந்தாமன் கண்ணனாக காட்சி அளித்தார் என்றும், குளத்தில் கண்ணன் கோபிகையருடன் ஜலக்கிரிடை செய்த போது அந்த கன்னிகையரின் உடலில் பூசிய மஞ்சள் (ஹரித்ரா) மற்றும் நறுமணப் பூச்சுப்பொருட்கள் இக்குளத்தின் தீர்த்தத்தில் படிந்தபடியால் இக்குளம் ஹரித்ரா (மஞ்சள்) என்ற காரணப்பெயரில் அழைக்கப்படுகிறது.

இக்குளம் காவிரியின் மகள் என்றும், 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஒன்று சேர்ந்தது என்றும் புராண வரலாறு கூறுகின்றன.

ராஜகோபால சுவாமிக்கு தினமும் திருமஞ்சன தீர்த்தம் இக்குளத்தில் இருந்து தான் எடுத்துச்செல்கிறார்கள்.

இக்குளத்தில் வைகாசி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களிலும் அமாவாசை, பவுர்ணமி, கிரகண காலங்களிலும் ரோகிணி, திருவோண நாட்களிலும் நீராடினால் கண்ணபிரானின் திருவருள் கிடைக்கும் என்றும், மாசி மாதம் முழுவதும் நீராட முடியாமல் போனாலும் கடைசி மூன்று நாட்களாவது நீராடினால் சிறப்பு உண்டு என்றும் கூறுகிறார்கள்.

மற்ற புண்ணிய தலங்களில் 1 கோடி ஆண்டுகள் இருந்து பெறும் பலனை, ஹரித்ராநதி கரையில் ஒரு ஆண்டில் அடையலாம் என்று புராணம் கூறுகிறது. பிருகு முனிவர் வேண்டுகோளுக்கு இணங்கி காவிரியை பெரிய குளமாக தேக்கி அதில் ராஜகோபாலன் ஜலக்கிரிடை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி



நீங்காத செல்வம் தரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக