புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அரசியல் செய்திகள்
Page 2 of 13 •
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
First topic message reminder :
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.
அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.
அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வாட்ஸ் அப்-ல் உலா வரும் ‘ஜெ. அமைச்சரவை’...
விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ள ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற உள்ள புதிய அமைச்சர்கள் எனக் கூறி வாட்ஸ் அப்பில் ஒரு பட்டியல் உலா வந்து கொண்டிருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவி மற்றும் முதல்வர் பதவியை இழந்தார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வரானார்.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனால், மீண்டும் முதல்வராவதில் இருந்த சட்டசிக்கல் ஜெயலலிதாவிற்கு விலகியது. எனவே, விரைவில் அவர் மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
அவ்வாறு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் போது, அவரது அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப் படுவார்கள் என்பதைப் போல் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.
அதில் பின்வருமாறு அமைச்சர்கள் பெயர் பட்டியல் உள்ளது.
1. ஜெயபால்
2. வேலுமணி
3. தோப்பு வெங்கடாசலம்
4. வளர்மதி
5. கோகுலஇந்ரா
6. சம்பத்
7. தங்கமணி
8. நத்தம் விஸ்வநாதன்
9. ராஜேந்திர பாலாஜி
10. எடபாடி பழனிசாமி
11. உதயகுமார்
12. செந்தில் பாலாஜி
13. விஜயபாஸ்கர்
14. மோகன்
15. செல்லூர்ராஜு
16. வீரமணி
17. உதயகுமார்
18. வைத்தியலிங்கம்
19. பழனியப்பன
20. காமராஜ்
21. டி.ஜெயகுமார்
22, வி .பி .கலைராஜன்
23, கே . மனோகரன்
24. பி . சரோஜா
25. கே .வி . ராமலிங்கம்
26, கே.ஏ .செங்கோட்டையன்
27. சி.சண்முகவேல்
28, வளர்மதி
29, எம் .பி .எஸ் .சிவசுப்பிரமணியன்
30, நைனார்
இதில் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான விசயம் என்னவென்றால், இந்தப் பட்டியலில் தற்போதைய முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் மிஸ்ஸிங் என்பது தான்.
விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ள ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற உள்ள புதிய அமைச்சர்கள் எனக் கூறி வாட்ஸ் அப்பில் ஒரு பட்டியல் உலா வந்து கொண்டிருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவி மற்றும் முதல்வர் பதவியை இழந்தார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வரானார்.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனால், மீண்டும் முதல்வராவதில் இருந்த சட்டசிக்கல் ஜெயலலிதாவிற்கு விலகியது. எனவே, விரைவில் அவர் மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
அவ்வாறு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் போது, அவரது அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப் படுவார்கள் என்பதைப் போல் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.
அதில் பின்வருமாறு அமைச்சர்கள் பெயர் பட்டியல் உள்ளது.
1. ஜெயபால்
2. வேலுமணி
3. தோப்பு வெங்கடாசலம்
4. வளர்மதி
5. கோகுலஇந்ரா
6. சம்பத்
7. தங்கமணி
8. நத்தம் விஸ்வநாதன்
9. ராஜேந்திர பாலாஜி
10. எடபாடி பழனிசாமி
11. உதயகுமார்
12. செந்தில் பாலாஜி
13. விஜயபாஸ்கர்
14. மோகன்
15. செல்லூர்ராஜு
16. வீரமணி
17. உதயகுமார்
18. வைத்தியலிங்கம்
19. பழனியப்பன
20. காமராஜ்
21. டி.ஜெயகுமார்
22, வி .பி .கலைராஜன்
23, கே . மனோகரன்
24. பி . சரோஜா
25. கே .வி . ராமலிங்கம்
26, கே.ஏ .செங்கோட்டையன்
27. சி.சண்முகவேல்
28, வளர்மதி
29, எம் .பி .எஸ் .சிவசுப்பிரமணியன்
30, நைனார்
இதில் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான விசயம் என்னவென்றால், இந்தப் பட்டியலில் தற்போதைய முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் மிஸ்ஸிங் என்பது தான்.
ஒரு வேளை, மக்களின் முதல்வர் மாநில முதல்வர் ஆனதும், தற்போதைய மாநில முதல்வருக்கு மக்கள் முதல்வர் பதவி அளிக்கப்படுமோ...?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளர் நிறுத்தப்படுவார் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ‘தினத்தந்தி’ நிருபருக்கு நேற்று சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
40 லட்சம் உறுப்பினர் சேர்க்கை
கேள்வி:- பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது?. எவ்வளவு பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்?.
பதில்:- தமிழகத்தில் இதுவரை 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது.
கேள்வி:- மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று, வரும் 26-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதை தமிழக பா.ஜ.க. எந்த வகையில் கொண்டாட உள்ளது?.
பதில்:- தமிழகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாட உள்ளோம். 100 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. முதல் கூட்டம் சென்னையிலோ, அதன் சுற்றுவட்டார பகுதியிலோ வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது. இதில், மத்திய மந்திரி ஒருவர் பங்கேற்று பேசுகிறார். தமிழகத்தில் தென் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதரராவ், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.
முன்னதாக, வரும் 26-ந் தேதி சென்னை கமலாலயத்தில், பா.ஜ.க. அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெற இருக்கிறது. மறுநாள் (27-ந் தேதி) பிரதமர் நரேந்திரமோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்த பிரசார வாகனமும் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. மேலும், பா.ஜ.க. அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி 60 லட்சம் புத்தகங்கள் அச்சடித்து தமிழகம் முழுவதும் விநியோகிக்க உள்ளோம்.
அரசியல் சூழ்நிலை
கேள்வி:- காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.வும் நெருங்கி வருவதாக கூறப்படுகிறதே?.
பதில்:- இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் பதில் அளிக்க வேண்டும். ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு கர்நாடக அரசுக்குக்கு (காங்கிரஸ் அரசு) உள்ளது. எனவே, அவரிடம் இருந்து இதற்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
கேள்வி:- தமிழக மக்களை மத்திய மந்திரிகள் சந்திக்கும் நிகழ்ச்சி 2 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதே?. மீண்டும் எப்போது நடக்கும்?.
பதில்:- தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, பா.ஜ.க. ஆட்சியின் ஒரு ஆண்டு கொண்டாட்டம், பாராளுமன்றம் கூடுதலாக 3 நாட்கள் நடந்தது போன்ற சூழ்நிலைகளால் தான், தமிழகத்திற்கு மத்திய மந்திரிகள் வரவில்லை. விரைவில் அவர்கள் வருவார்கள். தமிழக மக்கள் பிரச்சினை கவனிக்கப்படும். தமிழக மக்கள் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தும்.
முதல்-அமைச்சர் வேட்பாளர்
கேள்வி:- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. எந்த வகையில் எதிர்கொள்ளும்?.
பதில்:- இப்போது கட்சியில் அடிப்படை உறுப்பினர்களை சேர்ப்பதில்தான் கவனத்தை செலுத்தி வருகிறோம். சட்டமன்ற தொகுதி வாரியாக மாநாடு நடத்த உள்ளோம். தமிழகத்தில் பா.ஜ.க. வளர்வதற்கான நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளர் நிறுத்தப்படுவார். தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ‘தினத்தந்தி’ நிருபருக்கு நேற்று சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
40 லட்சம் உறுப்பினர் சேர்க்கை
கேள்வி:- பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது?. எவ்வளவு பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்?.
பதில்:- தமிழகத்தில் இதுவரை 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது.
கேள்வி:- மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று, வரும் 26-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதை தமிழக பா.ஜ.க. எந்த வகையில் கொண்டாட உள்ளது?.
பதில்:- தமிழகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாட உள்ளோம். 100 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. முதல் கூட்டம் சென்னையிலோ, அதன் சுற்றுவட்டார பகுதியிலோ வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது. இதில், மத்திய மந்திரி ஒருவர் பங்கேற்று பேசுகிறார். தமிழகத்தில் தென் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதரராவ், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.
முன்னதாக, வரும் 26-ந் தேதி சென்னை கமலாலயத்தில், பா.ஜ.க. அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெற இருக்கிறது. மறுநாள் (27-ந் தேதி) பிரதமர் நரேந்திரமோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்த பிரசார வாகனமும் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. மேலும், பா.ஜ.க. அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி 60 லட்சம் புத்தகங்கள் அச்சடித்து தமிழகம் முழுவதும் விநியோகிக்க உள்ளோம்.
அரசியல் சூழ்நிலை
கேள்வி:- காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.வும் நெருங்கி வருவதாக கூறப்படுகிறதே?.
பதில்:- இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் பதில் அளிக்க வேண்டும். ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு கர்நாடக அரசுக்குக்கு (காங்கிரஸ் அரசு) உள்ளது. எனவே, அவரிடம் இருந்து இதற்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
கேள்வி:- தமிழக மக்களை மத்திய மந்திரிகள் சந்திக்கும் நிகழ்ச்சி 2 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதே?. மீண்டும் எப்போது நடக்கும்?.
பதில்:- தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, பா.ஜ.க. ஆட்சியின் ஒரு ஆண்டு கொண்டாட்டம், பாராளுமன்றம் கூடுதலாக 3 நாட்கள் நடந்தது போன்ற சூழ்நிலைகளால் தான், தமிழகத்திற்கு மத்திய மந்திரிகள் வரவில்லை. விரைவில் அவர்கள் வருவார்கள். தமிழக மக்கள் பிரச்சினை கவனிக்கப்படும். தமிழக மக்கள் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தும்.
முதல்-அமைச்சர் வேட்பாளர்
கேள்வி:- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. எந்த வகையில் எதிர்கொள்ளும்?.
பதில்:- இப்போது கட்சியில் அடிப்படை உறுப்பினர்களை சேர்ப்பதில்தான் கவனத்தை செலுத்தி வருகிறோம். சட்டமன்ற தொகுதி வாரியாக மாநாடு நடத்த உள்ளோம். தமிழகத்தில் பா.ஜ.க. வளர்வதற்கான நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளர் நிறுத்தப்படுவார். தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முதல்வராக பொறுப்பேற்றார் ஜெ.: அம்மா உணவகம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் தொடக்கம்!
சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா, அம்மா உணவகங்கள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 5வது முறையாக தமிழக முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் போயஸ் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டு தலைமைச் செயலகம் வந்தார். அங்கு சுமார் 3.45 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கான வீட்டு வசதித் திட்டம், 1,274 எதிர்மறை சவ்வூடு பரவுதல் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட நலிவுற்ற குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து, சென்னை, சேலம், திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, நாகர்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 201 அம்மா உணவகங்களை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
மேலும், வெளிச்சந்தையில் உயர்ந்து வரும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்புகளின் விலையினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரை கிலோ துவரம் பருப்பு 53.50 ரூபாய்க்கும், அரை கிலோ உளுந்தம் பருப்பு 'ஏ' ரகம் 56 ரூபாய்க்கும், 'பி' ரகம் 49.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் புதிய திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
அதேபோல், காவல்துறைக்கு புதிய வாகனங்களையும், கடலோர பாதுகாப்பு படையினருக்கான ரோந்து வாகனங்களையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா, அம்மா உணவகங்கள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 5வது முறையாக தமிழக முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் போயஸ் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டு தலைமைச் செயலகம் வந்தார். அங்கு சுமார் 3.45 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கான வீட்டு வசதித் திட்டம், 1,274 எதிர்மறை சவ்வூடு பரவுதல் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட நலிவுற்ற குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து, சென்னை, சேலம், திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, நாகர்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 201 அம்மா உணவகங்களை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
மேலும், வெளிச்சந்தையில் உயர்ந்து வரும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்புகளின் விலையினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரை கிலோ துவரம் பருப்பு 53.50 ரூபாய்க்கும், அரை கிலோ உளுந்தம் பருப்பு 'ஏ' ரகம் 56 ரூபாய்க்கும், 'பி' ரகம் 49.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் புதிய திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
அதேபோல், காவல்துறைக்கு புதிய வாகனங்களையும், கடலோர பாதுகாப்பு படையினருக்கான ரோந்து வாகனங்களையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விதிகளையும், மரபுகளையும் அவமதிக்கும் ஜெயலலிதா தண்டிக்கப்பட வேண்டும்: ராமதாஸ் அறிக்கை
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா ஐந்தாவது முறையாக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாவின் வசதி கருதி பல குழப்பங்களும், அவமதிப்புகளும் அரங்கேற்றப் பட்டிருக்கின்றன. விதிகளையும், மரபுகளையும் கேலிக்கூத்தாக்கும் இச்செயல்கள் கண்டிக்கத்தக்கவை.என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதிய அமைச்சரவை பதவியேற்கும்போது முதலில் முதலமைச்சரும், அதன்பின் மரபுசீர் வரிசைப்படி அமைச்சர்களும் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்றுக் கொள்வது தான் வழக்கம். ஆனால், நேற்றைய பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் பதவியேற்ற பிறகு, மீதமுள்ள 28 அமைச்சர்களும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் 14 அமைச்சர்கள் வீதம் மொத்தமாக பதவியேற்றுக் கொண்டிருக்கின்றனர்.
இந்தக் காட்சியைப் பார்க்கும்போது பள்ளிக் குழந்தைகள் மொத்தமாக நின்று வாய்ப்பாடு ஒப்பிப்பதைப் போன்று இருந்தது. அமைச்சர்கள் பதவியேற்பு உறுதிமொழியை படிப்பதும், ரகசியக் காப்பு உறுதிமொழி ஏற்பதும் மிகவும் முக்கியமான நிகழ்வுகள் ஆகும்.
இதற்கென தனி மரபு தமிழகத்தில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு 10 நிமிடங்களில் அமைச்சர்களின் பதவியேற்பை நிறைவு செய்திருக்கிறார். ஒவ்வொரு அமைச்சரும் என்ன உறுதிமொழி ஏற்றார்கள்? என்பது கூட மற்றவர்களுக்கு தெரியாத வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டிருக்கிறது. பதவியேற்பைக் கூட முறைப்படி செய்ய முடியாத அளவுக்கு என்ன அவசரம்? என்று தெரியவில்லை.
பதவியேற்பு விழா தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். ஆனால், நேற்றைய விழாவில் தேசிய கீதத்தின் முதல் இரு வரிகள் மட்டுமே இசைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் அவசரத்திற்காக தேசியகீதத்தைக் கூட இரு வரிகளுடன் நிறுத்திக்கொள்ள துணிந்திருக்கிறார்கள்.
இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். இது சட்டப்படி சரியா... தவறா? என்பது ஒருபுறமிருக்க ஜெயலலிதா ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பள்ளிக்கூடங்களிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ இனி தேசிய கீதம் இரு வரிகளுடன் நிறுத்தப்பட்டால் அதை கண்டிக்கும் தார்மீக உரிமை தமிழக அரசுக்கு நிச்சயமாக இல்லை. தேசிய கீதத்தை முழுமையாக இசைத்து, அனைத்து அமைச்சர்களும் தனித்தனியாக பதவியேற்றிருந்தால் விழா முடிய கூடுதலாக 30 நிமிடங்கள் தான் ஆகியிருக்கும்.
ஆனால், அந்த அளவுக்குக் கூட பொறுமைகாக்க முடியாத அளவுக்கு ஜெயலலிதாவுக்கு அவசர பணி என்ன இருந்தது? என்பது தெரியவில்லை. இத்தனைக்கும் பதவியேற்பு முடிவடைந்த பிறகு தலைமைச்செயலகத்திற்கு கூட ஜெயலலிதா செல்லவில்லை. ‘‘ மக்களுக்காக உழைப்பதே எனது லட்சியம். ஒருநாளைக்கு மொத்தமுள்ள 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காகவே உழைக்கிறேன்’’ என்று ஜெயலலிதா கூறிக்கொள்வார்.
ஆனால், பதவியேற்பு விழாவில் கூட அரை மணி நேரம் கூடுதலாக அமர்ந்திருக்க முடியாமல் அவசரம் அவசரமாக வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்ததை பார்க்கும்போது தான் தெரிகிறது அவர் மக்களுக்காக எப்படி உழைக்கிறார் என்பது? புதிய முதலமைச்சராக பதவியேற்ற பிறகு இன்று தலைமைச் செயலகம் செல்லும் அவர் அம்மா உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். கடந்த 7 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த 500&க்கும் அதிகமான புதிய பேரூந்துகள், மெட்ரோ ரயில் திட்டம், சென்னை மாநகராட்சிக் கூடுதல் கட்டிடம் ஆகியவற்றின் தொடக்க விழாக்கள் அடுத்தடுத்த நாட்களில் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
காரணமே இல்லாமல் ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைக் கூட்டமும் விரைவில் தொடங்கவிருக்கிறது. இதன்மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. மக்களுக்காக, மக்களின் வரிப்பணத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எப்போதோ திறப்பு விழாவிற்கு தயாராகி விட்டாலும், ஜெயலலிதா என்ற தனி மனிதருக்காக அவை முடக்கி வைக்கப்பட்டிருந்தன என்பது இப்போது அம்பலமாகி விட்டது.
மக்களுக்கு ஜெயலலிதா தரும் மரியாதை இவ்வளவு தான்.தமிழகத்திற்கு சேவை செய்வதற்காகத் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வுடன் செயல்படுவதற்கு பதிலாக தனக்கு சேவை செய்வது தான் தமிழ்நாட்டின் கடமை என்ற மனப்போக்கில் ஜெயலலிதா செயல்படுவது கண்டனத்துக்குரியது.
விதிகளையும், மரபுகளையும், மக்களையும் மதிக்காமல் அவமதிக்கும் ஜெயலலிதா சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும்; இல்லாவிடில் விரைவில் தமிழ்நாட்டு மக்களால் தண்டிக்கப்படுவார். இன்னும் ஓராண்டுக்குள் இது நடப்பது உறுதி.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா ஐந்தாவது முறையாக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாவின் வசதி கருதி பல குழப்பங்களும், அவமதிப்புகளும் அரங்கேற்றப் பட்டிருக்கின்றன. விதிகளையும், மரபுகளையும் கேலிக்கூத்தாக்கும் இச்செயல்கள் கண்டிக்கத்தக்கவை.என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதிய அமைச்சரவை பதவியேற்கும்போது முதலில் முதலமைச்சரும், அதன்பின் மரபுசீர் வரிசைப்படி அமைச்சர்களும் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்றுக் கொள்வது தான் வழக்கம். ஆனால், நேற்றைய பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் பதவியேற்ற பிறகு, மீதமுள்ள 28 அமைச்சர்களும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் 14 அமைச்சர்கள் வீதம் மொத்தமாக பதவியேற்றுக் கொண்டிருக்கின்றனர்.
இந்தக் காட்சியைப் பார்க்கும்போது பள்ளிக் குழந்தைகள் மொத்தமாக நின்று வாய்ப்பாடு ஒப்பிப்பதைப் போன்று இருந்தது. அமைச்சர்கள் பதவியேற்பு உறுதிமொழியை படிப்பதும், ரகசியக் காப்பு உறுதிமொழி ஏற்பதும் மிகவும் முக்கியமான நிகழ்வுகள் ஆகும்.
இதற்கென தனி மரபு தமிழகத்தில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு 10 நிமிடங்களில் அமைச்சர்களின் பதவியேற்பை நிறைவு செய்திருக்கிறார். ஒவ்வொரு அமைச்சரும் என்ன உறுதிமொழி ஏற்றார்கள்? என்பது கூட மற்றவர்களுக்கு தெரியாத வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டிருக்கிறது. பதவியேற்பைக் கூட முறைப்படி செய்ய முடியாத அளவுக்கு என்ன அவசரம்? என்று தெரியவில்லை.
பதவியேற்பு விழா தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். ஆனால், நேற்றைய விழாவில் தேசிய கீதத்தின் முதல் இரு வரிகள் மட்டுமே இசைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் அவசரத்திற்காக தேசியகீதத்தைக் கூட இரு வரிகளுடன் நிறுத்திக்கொள்ள துணிந்திருக்கிறார்கள்.
இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். இது சட்டப்படி சரியா... தவறா? என்பது ஒருபுறமிருக்க ஜெயலலிதா ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பள்ளிக்கூடங்களிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ இனி தேசிய கீதம் இரு வரிகளுடன் நிறுத்தப்பட்டால் அதை கண்டிக்கும் தார்மீக உரிமை தமிழக அரசுக்கு நிச்சயமாக இல்லை. தேசிய கீதத்தை முழுமையாக இசைத்து, அனைத்து அமைச்சர்களும் தனித்தனியாக பதவியேற்றிருந்தால் விழா முடிய கூடுதலாக 30 நிமிடங்கள் தான் ஆகியிருக்கும்.
ஆனால், அந்த அளவுக்குக் கூட பொறுமைகாக்க முடியாத அளவுக்கு ஜெயலலிதாவுக்கு அவசர பணி என்ன இருந்தது? என்பது தெரியவில்லை. இத்தனைக்கும் பதவியேற்பு முடிவடைந்த பிறகு தலைமைச்செயலகத்திற்கு கூட ஜெயலலிதா செல்லவில்லை. ‘‘ மக்களுக்காக உழைப்பதே எனது லட்சியம். ஒருநாளைக்கு மொத்தமுள்ள 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காகவே உழைக்கிறேன்’’ என்று ஜெயலலிதா கூறிக்கொள்வார்.
ஆனால், பதவியேற்பு விழாவில் கூட அரை மணி நேரம் கூடுதலாக அமர்ந்திருக்க முடியாமல் அவசரம் அவசரமாக வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்ததை பார்க்கும்போது தான் தெரிகிறது அவர் மக்களுக்காக எப்படி உழைக்கிறார் என்பது? புதிய முதலமைச்சராக பதவியேற்ற பிறகு இன்று தலைமைச் செயலகம் செல்லும் அவர் அம்மா உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். கடந்த 7 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த 500&க்கும் அதிகமான புதிய பேரூந்துகள், மெட்ரோ ரயில் திட்டம், சென்னை மாநகராட்சிக் கூடுதல் கட்டிடம் ஆகியவற்றின் தொடக்க விழாக்கள் அடுத்தடுத்த நாட்களில் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
காரணமே இல்லாமல் ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைக் கூட்டமும் விரைவில் தொடங்கவிருக்கிறது. இதன்மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. மக்களுக்காக, மக்களின் வரிப்பணத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எப்போதோ திறப்பு விழாவிற்கு தயாராகி விட்டாலும், ஜெயலலிதா என்ற தனி மனிதருக்காக அவை முடக்கி வைக்கப்பட்டிருந்தன என்பது இப்போது அம்பலமாகி விட்டது.
மக்களுக்கு ஜெயலலிதா தரும் மரியாதை இவ்வளவு தான்.தமிழகத்திற்கு சேவை செய்வதற்காகத் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வுடன் செயல்படுவதற்கு பதிலாக தனக்கு சேவை செய்வது தான் தமிழ்நாட்டின் கடமை என்ற மனப்போக்கில் ஜெயலலிதா செயல்படுவது கண்டனத்துக்குரியது.
விதிகளையும், மரபுகளையும், மக்களையும் மதிக்காமல் அவமதிக்கும் ஜெயலலிதா சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும்; இல்லாவிடில் விரைவில் தமிழ்நாட்டு மக்களால் தண்டிக்கப்படுவார். இன்னும் ஓராண்டுக்குள் இது நடப்பது உறுதி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெற்று அறிவிப்பின் மூலம் மக்களை ஏமாற்றுகிறார் ஜெயலலிதா : விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில், மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்கள் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
2011ம் ஆண்டு முதலமைச்சராகப் பதவியேற்ற போது ஒரு கிலோ பருப்பு என்ன விலைக்கு விற்றதோ, அதே விலையில் தற்போது அரைகிலோ பருப்பு விற்க முன்வந்திருப்பது, விலைவாசி கட்டுப்படுத்தும் விஷயத்தில் அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார். தமிழக மக்களை வெற்று அறிவிப்பின் மூலம் ஏமாற்றி, மீண்டும் வெற்றி பெறலாம் என்று ஜெயலலிதா பகல் கனவு காண்பதாகவும் தனது அறிக்கையில் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில், மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்கள் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
2011ம் ஆண்டு முதலமைச்சராகப் பதவியேற்ற போது ஒரு கிலோ பருப்பு என்ன விலைக்கு விற்றதோ, அதே விலையில் தற்போது அரைகிலோ பருப்பு விற்க முன்வந்திருப்பது, விலைவாசி கட்டுப்படுத்தும் விஷயத்தில் அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார். தமிழக மக்களை வெற்று அறிவிப்பின் மூலம் ஏமாற்றி, மீண்டும் வெற்றி பெறலாம் என்று ஜெயலலிதா பகல் கனவு காண்பதாகவும் தனது அறிக்கையில் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று
நீதிபதி குமாரசாமி கணக்கு பற்றி ஸ்டாலின் சொன்ன திருடன் கணக்கு!
திருச்சி: திருடன் கதையை கூறி, நீதிபதி குமாரசாமியின் கணக்கு பற்றி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தொழிலதிபர் வி.கே.என். திருமணவிழாவில் கலந்துகொள்ள தி.மு.க. ஸ்டாலின் நேற்றிரவு திருச்சி வந்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் கேட்க கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இப்போதுவரை மேட்டூர் அணை திறக்கப்படவில்லையே, அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து உங்கள் கருத்து?
"இந்த கேள்வியை பெங்களூரு நீதிமன்றத்தால் விடுதலையாகியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டிய கேள்வி; அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்".
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நிறைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதே, இப்படி நிராகரிப்பிற்கு உள் நோக்கம் இருக்கும் என நினைக்கிறீர்களா?.
'இதுபோன்று நடக்கும் என தெரிந்துதான் தலைவர் கலைஞர் முன்கூட்டியே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார்" என்றார்.
இதைத் தொடர்ந்து திருச்சி தொழிலதிபர் விகேஎன் மற்றும் திமுக மாநகர செயலாளர் அன்பழகன் மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலின், திருச்சி உறையூர் அருகே திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னின்னு மரக்கன்றுகள் நட்டுவைத்தார்.
திருமணவிழாவில் பேசிய ஸ்டாலின், "வாழ்க்கையில் கணக்கு போட்டு பார்க்கணும், கணக்கு தவறானால் எல்லாம் தவறாகிவிடும். இப்போதெல்லாம் நீதிபதியே கணக்கு தவறாக போடுவது நடக்கிறது. நீதிபதி போட்ட தவறான கணக்கில் சிறைக்குள்ளே இருக்கவேண்டியவரெல்லாம் இப்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள கொடுமையை எல்லாம் நாம் பார்த்துகொண்டிருக்கிறோம்.
முன்பெல்லாம் காந்திகணக்கு, நேருக்கணக்கு என சொல்வார்கள். ஆனால் குமாரசாமி கணக்கு ஒன்று வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் ஒரு கதை உலா வருகிறது.
ஒருவீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் போலீஸில் புகார் கொடுக்காமல் இருக்கிறார். அவரிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை என நண்பர்கள் கேட்கும்போது, அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர், "திருடன் ஒருகடிதம் எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறான். அதில் நீ போலீஸில் புகார் கொடுத்தாலும் பரவாயில்லை. 10 சதவீதம் பொருட்களைதான் திருடியுள்ளேன். எனவே இது குற்றமில்லை!" என எழுதியுள்ளான். அதனால்தான் போலீஸிடம் புகார் கொடுக்கவில்லை. இது நான் புதிதாக சொல்லவில்லை. வாட்ஸ் அப்பில் வலம் வரும் தகவல். குமாரசாமி தீர்ப்பு இப்படிதான் உலா வருகிறது.
தமிழகத்தில் பதவியை பதவியாய் நினைக்காமல், பொறுப்பில்லாமல் செயல்படுகிறார்கள். நான் எந்த விசயங்களை செய்தாலும் தலைவர் கலைஞருக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டேன். அந்த வகையில் நான் பதவியில் இருந்தாலும், பொறுப்பாய் பணியாற்றுவதையே தலைவர் விரும்புவார். தமிழைப்போல், வாழ்க!" என வாழ்த்திவிட்டு அமர்ந்தார்.
மேடையில் இருந்து கீழே இறங்கிய ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் மேலும் சில கேள்விகளை கேட்டனர்.
ஆர்கேநகர் இடைத்தேர்தலை திமுக புறக்கணித்துள்ளது. இந்நிலையில் அந்த தொகுதியில் போட்டிபோடும் இடதுசாரி கம்யூனிஸ்ட் வேட்பாளரான மகேந்திரனை, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆதரிப்பீர்களா? என்று கேட்டபோது, இதுபற்றி தலைவர் கருணாநிதிதான் முடிவு செய்வார் என்றார்.
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் கொலை வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்ககூடாது என நீதிபதியே கேட்டுள்ளாரே? என்ற கேள்விக்கு, ராமஜெயம் கொலை செய்யப்பட்டதில் இருந்து நாங்கள் சிபிஐ விசாரணை மட்டுமே கேட்டு வருகிறோம். சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றார்.
இடைத்தேர்தலை புறக்கணித்த திமுக, தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளதா? என்ற கேள்விக்கு, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க திமுக தயாராகவே உள்ளது என்றார் ஸ்டாலின்.
திருச்சி: திருடன் கதையை கூறி, நீதிபதி குமாரசாமியின் கணக்கு பற்றி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தொழிலதிபர் வி.கே.என். திருமணவிழாவில் கலந்துகொள்ள தி.மு.க. ஸ்டாலின் நேற்றிரவு திருச்சி வந்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் கேட்க கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இப்போதுவரை மேட்டூர் அணை திறக்கப்படவில்லையே, அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து உங்கள் கருத்து?
"இந்த கேள்வியை பெங்களூரு நீதிமன்றத்தால் விடுதலையாகியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டிய கேள்வி; அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்".
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நிறைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதே, இப்படி நிராகரிப்பிற்கு உள் நோக்கம் இருக்கும் என நினைக்கிறீர்களா?.
'இதுபோன்று நடக்கும் என தெரிந்துதான் தலைவர் கலைஞர் முன்கூட்டியே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார்" என்றார்.
இதைத் தொடர்ந்து திருச்சி தொழிலதிபர் விகேஎன் மற்றும் திமுக மாநகர செயலாளர் அன்பழகன் மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலின், திருச்சி உறையூர் அருகே திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னின்னு மரக்கன்றுகள் நட்டுவைத்தார்.
திருமணவிழாவில் பேசிய ஸ்டாலின், "வாழ்க்கையில் கணக்கு போட்டு பார்க்கணும், கணக்கு தவறானால் எல்லாம் தவறாகிவிடும். இப்போதெல்லாம் நீதிபதியே கணக்கு தவறாக போடுவது நடக்கிறது. நீதிபதி போட்ட தவறான கணக்கில் சிறைக்குள்ளே இருக்கவேண்டியவரெல்லாம் இப்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள கொடுமையை எல்லாம் நாம் பார்த்துகொண்டிருக்கிறோம்.
முன்பெல்லாம் காந்திகணக்கு, நேருக்கணக்கு என சொல்வார்கள். ஆனால் குமாரசாமி கணக்கு ஒன்று வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் ஒரு கதை உலா வருகிறது.
ஒருவீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் போலீஸில் புகார் கொடுக்காமல் இருக்கிறார். அவரிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை என நண்பர்கள் கேட்கும்போது, அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர், "திருடன் ஒருகடிதம் எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறான். அதில் நீ போலீஸில் புகார் கொடுத்தாலும் பரவாயில்லை. 10 சதவீதம் பொருட்களைதான் திருடியுள்ளேன். எனவே இது குற்றமில்லை!" என எழுதியுள்ளான். அதனால்தான் போலீஸிடம் புகார் கொடுக்கவில்லை. இது நான் புதிதாக சொல்லவில்லை. வாட்ஸ் அப்பில் வலம் வரும் தகவல். குமாரசாமி தீர்ப்பு இப்படிதான் உலா வருகிறது.
தமிழகத்தில் பதவியை பதவியாய் நினைக்காமல், பொறுப்பில்லாமல் செயல்படுகிறார்கள். நான் எந்த விசயங்களை செய்தாலும் தலைவர் கலைஞருக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டேன். அந்த வகையில் நான் பதவியில் இருந்தாலும், பொறுப்பாய் பணியாற்றுவதையே தலைவர் விரும்புவார். தமிழைப்போல், வாழ்க!" என வாழ்த்திவிட்டு அமர்ந்தார்.
மேடையில் இருந்து கீழே இறங்கிய ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் மேலும் சில கேள்விகளை கேட்டனர்.
ஆர்கேநகர் இடைத்தேர்தலை திமுக புறக்கணித்துள்ளது. இந்நிலையில் அந்த தொகுதியில் போட்டிபோடும் இடதுசாரி கம்யூனிஸ்ட் வேட்பாளரான மகேந்திரனை, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆதரிப்பீர்களா? என்று கேட்டபோது, இதுபற்றி தலைவர் கருணாநிதிதான் முடிவு செய்வார் என்றார்.
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் கொலை வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்ககூடாது என நீதிபதியே கேட்டுள்ளாரே? என்ற கேள்விக்கு, ராமஜெயம் கொலை செய்யப்பட்டதில் இருந்து நாங்கள் சிபிஐ விசாரணை மட்டுமே கேட்டு வருகிறோம். சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றார்.
இடைத்தேர்தலை புறக்கணித்த திமுக, தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளதா? என்ற கேள்விக்கு, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க திமுக தயாராகவே உள்ளது என்றார் ஸ்டாலின்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முதல்–அமைச்சர் வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவு குறைவு: டாக்டர் ராமதாஸ் கண்டனம்
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னையை சேர்ந்த மக்கள் ஆய்வு என்ற அமைப்பின் சார்பில் தமிழகம் 2016– ஒரு முன்னோட்டம் என்ற தலைப்பில் தேர்தல் குறித்த முன்னோட்ட கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையை வெளிப்படுத்துவதற்கு மாறாக நகைப்பை வரவழைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. கருத்துக்கணிப்பில் பா.ம.க. முதல்–அமைச்சர் பதவிக்கான வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு ஆதரவு குறைவாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்த கருத்துக்கணிப்பு மொத்தம் 80 தொகுதிகளில் 3 ஆயிரத்து 500 பேரிடம் மட்டுமே, அதாவது, ஒரு தொகுதியில் 43 பேரிடம் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயத்தை, அதில் 10 ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லாதவர்களின் மூலம் தீர்மானிக்க விரும்புவது அபத்தம் மட்டுமின்றி ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் ஆகும்.
எவருக்கேனும் ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் அதை வெளிப்படையாக செய்யலாம். அதைவிடுத்து கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு தரப்பான கருத்தை திணிப்பது அழகல்ல. இது மிக மோசமான அரசியல் கருத்து வணிகமாகவே மக்களால் பார்க்கப்படும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னையை சேர்ந்த மக்கள் ஆய்வு என்ற அமைப்பின் சார்பில் தமிழகம் 2016– ஒரு முன்னோட்டம் என்ற தலைப்பில் தேர்தல் குறித்த முன்னோட்ட கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையை வெளிப்படுத்துவதற்கு மாறாக நகைப்பை வரவழைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. கருத்துக்கணிப்பில் பா.ம.க. முதல்–அமைச்சர் பதவிக்கான வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு ஆதரவு குறைவாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்த கருத்துக்கணிப்பு மொத்தம் 80 தொகுதிகளில் 3 ஆயிரத்து 500 பேரிடம் மட்டுமே, அதாவது, ஒரு தொகுதியில் 43 பேரிடம் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயத்தை, அதில் 10 ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லாதவர்களின் மூலம் தீர்மானிக்க விரும்புவது அபத்தம் மட்டுமின்றி ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் ஆகும்.
எவருக்கேனும் ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் அதை வெளிப்படையாக செய்யலாம். அதைவிடுத்து கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு தரப்பான கருத்தை திணிப்பது அழகல்ல. இது மிக மோசமான அரசியல் கருத்து வணிகமாகவே மக்களால் பார்க்கப்படும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அ.தி.மு.க, தி.மு.க.விற்கு மாற்று கட்சி தமிழ்நாட்டில் கிடையாது புதிய கருத்து கணிப்பில் தகவல்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்கள் ஆய்வக இயக்குனர் தலைமையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தபட்டது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,370 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இந்த கருத்து கணிப்பில் பேராசிரியர்கள் மாணவர்கள் என 400 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க.வுக்கு 34.1% பேர் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு 32.6% பேர் வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.
தே.மு.தி.கவுக்கு 4% பேர் ஆதரவளித்துள்ளனர். பா.ம.கவுக்கு 3% பேர் ஆதரவைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சி 2.9% பேர் ஆதரவு பெற்று உள்ளது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 37 சதவிகிதம் பேர் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். 23 சதவிகிதம் பேர் மறுக்க முடியாது என்றும், 9 சதவிகிதம் பேர் ஏதோ கொஞ்சம் நெருங்கி வருகிறது என்றும் 14 சதவிகிதம் பேர் வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க, தி.மு.க.விற்கு மாற்று கட்சி தமிழ்நாட்டில் கிடையாது என்று 53.4 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.
அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு
ஜெயலலிதாவுக்கு 31.56% பேரும் ஸ்டாலினுக்கு 27.98% பேரும் ஆதரவு அளித்துள்ளனர். கருணாநிதிக்கு ஆதரவு 21.33% பேரும், விஜயகாந்துக்கு 6.24% பேரும், அன்பு மணி ராமதாசுக்கு 2.27 % பேரும்,வைகோவுக்கு 1.85% பேரும், சீமானுக்கு 1.84% பேரும்,திருமாவளவனுக்கு 1.13% பேரும், ஜி.கே வாசனுக்கு 1% பேரும் ஆதரவு அளித்து உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்கள் ஆய்வக இயக்குனர் தலைமையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தபட்டது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,370 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இந்த கருத்து கணிப்பில் பேராசிரியர்கள் மாணவர்கள் என 400 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க.வுக்கு 34.1% பேர் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு 32.6% பேர் வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.
தே.மு.தி.கவுக்கு 4% பேர் ஆதரவளித்துள்ளனர். பா.ம.கவுக்கு 3% பேர் ஆதரவைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சி 2.9% பேர் ஆதரவு பெற்று உள்ளது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 37 சதவிகிதம் பேர் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். 23 சதவிகிதம் பேர் மறுக்க முடியாது என்றும், 9 சதவிகிதம் பேர் ஏதோ கொஞ்சம் நெருங்கி வருகிறது என்றும் 14 சதவிகிதம் பேர் வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க, தி.மு.க.விற்கு மாற்று கட்சி தமிழ்நாட்டில் கிடையாது என்று 53.4 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.
அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு
ஜெயலலிதாவுக்கு 31.56% பேரும் ஸ்டாலினுக்கு 27.98% பேரும் ஆதரவு அளித்துள்ளனர். கருணாநிதிக்கு ஆதரவு 21.33% பேரும், விஜயகாந்துக்கு 6.24% பேரும், அன்பு மணி ராமதாசுக்கு 2.27 % பேரும்,வைகோவுக்கு 1.85% பேரும், சீமானுக்கு 1.84% பேரும்,திருமாவளவனுக்கு 1.13% பேரும், ஜி.கே வாசனுக்கு 1% பேரும் ஆதரவு அளித்து உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஒரு சோகமயமான எதிர்காலம் உள்ளது என்று இந்தக் கருத்துக் கணிப்பு சொல்கிறது .
ம் ம் .............என்ன செய்வது ?
ம் ம் .............என்ன செய்வது ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 13