புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
37 Posts - 51%
heezulia
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
17 Posts - 2%
prajai
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
4 Posts - 1%
jairam
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2015 7:38 pm


‘இந்த வார்த்தையை நான் சொல்லியிருக்கக் கூடாது. தெரியாமல் வாய் தவறி பேசிவிட்டேன்..’

– இது, நம்மில் பலர் அடிக்கடி உச்சரிக்கும் வாசகம்.

தேவையற்ற அல்லது பிரச்சினைக்குரிய வார்த்தைகளை பேசிவிட்டு, அதனால் அடுத்தவர்கள் மனது புண்பட்ட பின்பு, நாக்கு மீது பழியை போட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்கிறோம்.

‘எதை பார்க்கக்கூடாது என்று நினைத்தேனோ அதை என் கண்கள் பார்த்துவிட்டன. என் மனதில் பதிந்துவிட்ட அந்த காட்சியை இனி மறப்பது சுலபம் அல்ல..’

– என்று பிரச்சினைக்குரியதை பார்த்துவிட்டு, கண்கள் மீது பழியை போட்டுவிட்டு தப்பிக்க நினைக்கிறோம்.

நாம் தேவையற்றதை பேசிவிடுகிறோம். தேவையற்றதை பார்த்து விடுகிறோம். தேவையே இல்லாதவற்றை கேட்டும் விடுகிறோம். பின்பு அதை நினைத்து வருத்தப்படுகிறோம்.

கண்கள் பார்க்கும். காதுகள் கேட்கும். வாய்கள் பேசும். அந்த உறுப்புகளுக்கு தெரியுமா, எது நல்லது– எது கெட்டது என்று?

தெரியாது!

நாம் தேவையற்றதை பார்க்கக்கூடாது– தேவையற்றதை பேசக்கூடாது– தேவையற்றதை கேட்கக்கூடாது என்றால், நமக்கு புலனடக்கம் தேவை.

புலனடக்கத்தை ஒரு காட்சி மூலம் விளக்குகிறேன். போர்க்களம். நீங்கள் மன்னர். குதிரை ஒன்றில் உட்கார்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஐந்து தளபதிகள். நிறைய போர் வீரர்கள். போர் தொடங்குகிறது. போரை வழிநடத்திச் செல்லும்படி தளபதிகளுக்கு கட்டளையிடுகிறீர்கள். அவர்களோ உங்கள் கட்டளைகளுக்கு பணியவில்லை. அதனால் எதிராளியின் வசப்பட்டுவிட்டீர்கள். அப்போது என்ன நடக்கும்?

நீங்கள் தோற்றுப்போவீர்கள். எதிரிகள் உங்களை அடியமையாக்கிவிடுவார்கள். அதனால் ஏற்படும் அவமானம், வலி எல்லாவற்றையும் நீங்கள்தான் அனுபவித்தாகவேண்டும்.

இந்த சம்பவத்தின்படி பார்த்தால் இது யார் தவறு? தளபதிகளின் தவறா? அல்லது தளபதிகளுக்கு சரியாக பயிற்சி கொடுக்காத உங்கள் தவறா?

இப்படிப்பட்ட கேள்விக்குரிய நிலையில்தான் இன்று நம்மில் பலரும் இருந்துகொண்டிருக்கிறோம். நமக்கு உதவியாக, நாம் சொல்வதை கேட்டு செயல்பட நம்மிடம் ஐந்து புலன்கள் இருக்கின்றன. மன்னரான நாம் இடும் கட்டளைகளின்படி இயங்கவேண்டிய அந்த புலன்கள் இன்று, சூழ்நிலை என்ற எதிராளியின் வசப்பட்டு நமக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால் எதிரில் இருப்பவர்கள் எதை பேசினாலும், எப்படி பேசினாலும் அவைகளை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு நமது மனதை சலனப்படுத்தி வேதனைக்கு உள்ளாக்குகிறது.

நாம் வார்த்தைகளால் ஒருவரை கண்டபடி பேசிவிடுகிறோம் என்றால், பேசிய வாய் ஒரு ஜடப் பொருள். ஆனால் அவரை வேதனைப்படுத்திய சக்தி, அந்த வார்த்தைகளில்தான் இருக்கிறது. நாம் பார்க்கும் காட்சியால் மனது சலனப்படுகிறது என்றால், அதை பார்க்கும் கண்களால் அந்த சலனம் உருவாகவில்லை. அதை பார்த்து நமக்குள் உருவாகும் கண்ணோட்டத்தால்தான் அந்த சலனம் உருவாகிறது. தகவல்களை கேட்கும் காதுகளுக்கும் எந்த சக்தியும் இல்லை. அதன் வழியே உள்வாங்கிக்கொள்ளும் தகவல் களுக்குத்தான் நம் எண்ணங்களிலும், நம்பிக்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இருக்கிறது.

ஐந்து புலன்களும் குதிரைகளாக ஓடிக்கொண்டிருந்தாலும் அவைகளோடு பிணைக்கப்பட்டு கண்களுக்கு தெரியாத கடிவாளங்களாக செயல்படுவது நம் மனமும், புத்தியும்தான். அந்த கடிவாளங்கள்தான் நம் கட்டுப்பாட்டிற்குள்ளும், நம் கை களுக்குள்ளும் இருக்கவேண்டியவை.

சரி! கண் தேவையற்றதை பார்க்கிறது. காது தேவையில்லாதவற்றை கேட்கிறது. வாய் பிரச்சினைக் குரிய விஷயங்களை பேசுகிறது. இதனால் நமக்கு கவலை ஏற்படுகிறது. அப்படியானால் நமக்கு ஏற்படும் அத்தனை கவலைகளுக்கும் இந்த உறுப்புகளின் செயல்பாடுகள்தான் காரணமா?

அது சரி என்றால், வாய் பேச முடியாத– காதுகேட்காத– பார்வையற்ற ஒருவர் கவலையே இல்லாமல் இருக்கவேண்டும் அல்லவா?

ஆனால் அவருக்கும் கவலை இருக்கிறது. கோபம், ஆத்திரம், கொந்தளிப்பு எல்லாம் அவருக்கும் இருக்கிறது. அவருக்கு கோபம், ஆத்திரம் வருகிறதென்றால் அவரும் ஏதோ ஒருவகையில் அதிர்வலைகளை உள்வாங்கிக்கொண்டு, அதன் அடிப்படையில் மனதில் பாதிப்பை ஏற்படுத்திக்கொள்கிறார். அந்த எதிர்மறையான உணர்வுகளால் கோபம், ஆத்திரம், விரக்தியை வெளிப்படுத்துகிறார். அதனால் கண்தெரியாத, காதுகேட்காத, பேச முடியாதவர்களுக்கும் புலன்கள் செயல்படுகின்றன. அவர் களுக்கும் புலனடக்கம் தேவை.

புலனடக்கத்தின் மூலம் நாம் அடக்கவேண்டியது, சூட்சுமமாக செயல்படும் கண்களுக்கு புலப்படாத மனதைதான். நமது மனதிற்கு கண்கள் இல்லாமல் பார்க்கும் சக்தியும், காதுகள் இல்லாமல் கேட்கும் சக்தியும், வாய் இல்லாமல் நினைத்ததை வெளிப்படுத்தும் சக்தியும் இருக்கிறது. அதனால்தான் நம்மை நெறிப்படுத்த கண்கள், காதுகள், வாயை மூடும் மூன்று குரங்கு பொம்மைகளை காட்டுகிறார்கள். ஐந்து புலன்களையும் குறிப்பிடும் விதத்தில் ஐந்து பொம்மைகளை காட்டுவதில்லை!

நாம் இந்த இயந்திரமயமான உலகத்தில் அடிக்கடி நம் சுய கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறோம். ‘தெரியாமல் பேசிவிட்டேன்’ என்பதன் மூலமும், ‘தேவையற்றதை பார்த்துவிட்டேன்’ என்பதன் மூலமும், நம் கட்டுப்பாட்டை மீறி அனைத்தும் நடந்துகொண்டிருப்பதை ஒத்துக்கொள்கிறோம். சிந்தித்து செயல்படுவது என்ற நிலை தலைகீழாக மாறி, செயல்பட்டுவிட்டு சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

நான் இப்படி சொல்லும்போது, ‘ஒரு சம்பவம் திடீரென்று நடந்துவிடும் போது சிந்திக்க நேரம் இருக்காதே! உடனடியாக செயல்படவேண்டிய கட்டாயம் அப்போது ஏற்படுமே?’ என்று உங்களுக்குள்ளே ஒரு கேள்வி எழுவது நியாயம்தான்.

எப்போதும் அமைதி தவழும் குளம் போன்று நிதானத்தோடு இருந்தால் எந்த சம்பவத்தாலும் நம்மை சலனப்படுத்த முடியாது. என்ன நடந்தாலும் நாம் அமைதியாக இருப்போம். அப்போது நாம் சிந்தித்துதான் செயல்படுவோம். சிந்தித்து செயல்படும் பக்குவம் நமக்கு வந்துவிட்டால், அடுத்து சரியாக சிந்திக்கும் தெளிவு வந்துவிடும். எப்போதும் சரியாக சிந்தித்து, எல்லா நேரத்திலும் தெளிவான முடிவு எடுப்பவர்களால் மட்டுமே சரியாக செயல்பட முடியும்.

இப்படி பதற்றப்படாமல் சரியாக சிந்தித்து செயல்பட நமக்கு சுயபயிற்சி தேவை. அந்த பயிற்சியை எப்படி செய்யவேண்டும் தெரியுமா?

‘அடுத்தவர்களை வலிக்கவைக்கும் வார்த்தைகளை எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடாது’

‘எனக்கு எதிராய் யார் எப்படி நடந்துகொண்டாலும் குரலை உயர்த்தி கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது’

‘யார் என்ன செய்தாலும் என் கையே நீ கட்டுப்பாட்டில் இரு. நீ ஓங்கக்கூடாது’

‘எவ்வளவுதான் அவமானம் சூழ்ந்தாலும் அடுத்தவர்களை அவமானப்படுத்தும் காரியத்தில் இறங்கக்கூடாது’

என்று உங்களுக்குள்ளே கூறி, இந்த விஷயங்களை அடி மனதில் ஆழமாக பதித்துவிடவேண்டும்.

நமது மனதும் ஒரு கம்ப்யூட்டர்தான். அதில் மேற்கண்ட நல்ல விஷயங்களை ‘புரோகிராம்’ போன்று பதித்துவிடுங்கள். அப்போது கீபோர்டு போன்ற உங்கள் கண், காது, வாய்க்கு எந்த சக்தியும் இருக்காது. என்ன நடந்தாலும் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் அமைதியான புரோகிராம் தான் வெளிப்படும். அந்த புரோகிராம் பிடிக்கவில்லை என்றால் மாற்றிக்கொள்ளலாம். அதை மாற்றிக்கொள்ளும் சக்தியும் நம்மிடம் இருக்கிறது.

எப்போதும் நம்மை பற்றி நாம் உயர்வாகவே சிந்திக்க வேண்டும். சக்தி வாய்ந்தவர்களாகவே எப்போதும் நம்மை நாம் கருதவேண்டும்.

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்களுக்காக சில நிமிடங்களை ஒதுக்குங்கள். அந்த நிமிடங்களில் ‘இன்று நான் இப்படித்தான் பேசுவேன். இவைகளைத்தான் கேட்பேன். இவ்வாறுதான் செயல்படுவேன்’ என்று புலன்களுக்கு ஒரு புரோகிராம் செய்துவிட்டு, ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள். நிச்சயமாக அந்த நாள் உங்களுக்கு நல்லநாளாகத்தான் அமையும்.

கட்டுரை: சகோதரி ஜெயா,
பிரம்மகுமாரிகள் இயக்கம், சென்னை.




அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 16, 2015 8:02 pm

எல்லாம் சரி. எப்போதும் நம்மைப் புண் படுத்துவது மட்டுமல்லாமல் நம்மை முட்டாள்கள் என்று நினைக்கும் கூட்டத்தை என்ன செய்வது?

சரி முயற்சி செய்யலாம். நல்ல பதிவுக்கு நன்றி பிரம்ம குமாரிகள் சங்கம் மற்றும் சிவா.



அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Aஅடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Aஅடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Tஅடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Hஅடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Iஅடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Rஅடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Aஅடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? Empty
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 16, 2015 8:03 pm

அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 16, 2015 8:36 pm

அன்றே சொன்னார் திருவள்ளுவர் ,
யாகாவார் ஆயினும் நாகாக்க என்று .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Aug 16, 2015 11:54 pm

நல்ல பயனுள்ள பதிவு .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 10:33 am

//இப்படி பதற்றப்படாமல் சரியாக சிந்தித்து செயல்பட நமக்கு சுயபயிற்சி தேவை. அந்த பயிற்சியை எப்படி செய்யவேண்டும் தெரியுமா?

‘அடுத்தவர்களை வலிக்கவைக்கும் வார்த்தைகளை எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடாது’

‘எனக்கு எதிராய் யார் எப்படி நடந்துகொண்டாலும் குரலை உயர்த்தி கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது’

‘யார் என்ன செய்தாலும் என் கையே நீ கட்டுப்பாட்டில் இரு. நீ ஓங்கக்கூடாது’

‘எவ்வளவுதான் அவமானம் சூழ்ந்தாலும் அடுத்தவர்களை அவமானப்படுத்தும் காரியத்தில் இறங்கக்கூடாது’

என்று உங்களுக்குள்ளே கூறி, இந்த விஷயங்களை அடி மனதில் ஆழமாக பதித்துவிடவேண்டும்.//


படிக்க ரொம்ப நல்லாத்தான் இருக்கு................ஆனால் செயல் படுத்தணுமே........அது ரொம்ப கஷ்டமாய் இருக்கும் சிவா......என்றாலும் முயன்று கொண்டே இருக்க வேண்டியதுதான்............ அடையும் வரை புன்னகை........மிக்க நன்றி...............ரொம்ப நல்ல பதிவு !................ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Aug 17, 2015 10:37 am

வீட்ல அடி வாங்கும் போது, அடிக்காதீங்க, வலிக்குது, அடிக்காதீங்க வலிக்குதுன்னு தெரியா சொல்லிடுரேன். எங்க வீட்டுக்கார அம்மாவ நான் வாங்க, போங்ன்னு தான் சொல்லுவேன். அம்புட்டு மறுவாதிங்கோ.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 10:41 am

மாணிக்கம் நடேசன் wrote:வீட்ல அடி வாங்கும் போது, அடிக்காதீங்க, வலிக்குது, அடிக்காதீங்க வலிக்குதுன்னு தெரியா சொல்லிடுரேன். எங்க வீட்டுக்கார அம்மாவ நான் வாங்க, போங்ன்னு தான் சொல்லுவேன். அம்புட்டு மறுவாதிங்கோ.
மேற்கோள் செய்த பதிவு: 1157801

ரொம்ப நல்ல பாலிசி தான் போங்கோ புன்னகை.........நலமா மாமா? .............மாமி நலமா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Aug 17, 2015 10:52 am

திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் நான் யாரையும் ஏசுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். யார் என்ன சொன்னாலும், சிரித்துக்கொண்டு அங்கிருந்து போய் விடுவேன். இது நான் அண்மையில் எடுத்த முடிவு. மற்ற நாள்கள் ஏசுவதை குறைத்துகொண்டு வருகிறேன்.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 10:53 am

மாணிக்கம் நடேசன் wrote:திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் நான் யாரையும் ஏசுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். யார் என்ன சொன்னாலும், சிரித்துக்கொண்டு அங்கிருந்து போய் விடுவேன். இது நான் அண்மையில் எடுத்த முடிவு. மற்ற நாள்கள் ஏசுவதை குறைத்துகொண்டு வருகிறேன்.

மேற்கோள் செய்த பதிவு: 1157808

சூப்பர் அண்ணா புன்னகை.................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ...............அருமையான முயற்சி.....வாழ்த்துகள் !....................... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக