புதிய பதிவுகள்
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
52 Posts - 44%
T.N.Balasubramanian
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
192 Posts - 38%
mohamed nizamudeen
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Baarushree
அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_m10அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 16 Aug 2015 - 21:08

First topic message reminder :


‘இந்த வார்த்தையை நான் சொல்லியிருக்கக் கூடாது. தெரியாமல் வாய் தவறி பேசிவிட்டேன்..’

– இது, நம்மில் பலர் அடிக்கடி உச்சரிக்கும் வாசகம்.

தேவையற்ற அல்லது பிரச்சினைக்குரிய வார்த்தைகளை பேசிவிட்டு, அதனால் அடுத்தவர்கள் மனது புண்பட்ட பின்பு, நாக்கு மீது பழியை போட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்கிறோம்.

‘எதை பார்க்கக்கூடாது என்று நினைத்தேனோ அதை என் கண்கள் பார்த்துவிட்டன. என் மனதில் பதிந்துவிட்ட அந்த காட்சியை இனி மறப்பது சுலபம் அல்ல..’

– என்று பிரச்சினைக்குரியதை பார்த்துவிட்டு, கண்கள் மீது பழியை போட்டுவிட்டு தப்பிக்க நினைக்கிறோம்.

நாம் தேவையற்றதை பேசிவிடுகிறோம். தேவையற்றதை பார்த்து விடுகிறோம். தேவையே இல்லாதவற்றை கேட்டும் விடுகிறோம். பின்பு அதை நினைத்து வருத்தப்படுகிறோம்.

கண்கள் பார்க்கும். காதுகள் கேட்கும். வாய்கள் பேசும். அந்த உறுப்புகளுக்கு தெரியுமா, எது நல்லது– எது கெட்டது என்று?

தெரியாது!

நாம் தேவையற்றதை பார்க்கக்கூடாது– தேவையற்றதை பேசக்கூடாது– தேவையற்றதை கேட்கக்கூடாது என்றால், நமக்கு புலனடக்கம் தேவை.

புலனடக்கத்தை ஒரு காட்சி மூலம் விளக்குகிறேன். போர்க்களம். நீங்கள் மன்னர். குதிரை ஒன்றில் உட்கார்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஐந்து தளபதிகள். நிறைய போர் வீரர்கள். போர் தொடங்குகிறது. போரை வழிநடத்திச் செல்லும்படி தளபதிகளுக்கு கட்டளையிடுகிறீர்கள். அவர்களோ உங்கள் கட்டளைகளுக்கு பணியவில்லை. அதனால் எதிராளியின் வசப்பட்டுவிட்டீர்கள். அப்போது என்ன நடக்கும்?

நீங்கள் தோற்றுப்போவீர்கள். எதிரிகள் உங்களை அடியமையாக்கிவிடுவார்கள். அதனால் ஏற்படும் அவமானம், வலி எல்லாவற்றையும் நீங்கள்தான் அனுபவித்தாகவேண்டும்.

இந்த சம்பவத்தின்படி பார்த்தால் இது யார் தவறு? தளபதிகளின் தவறா? அல்லது தளபதிகளுக்கு சரியாக பயிற்சி கொடுக்காத உங்கள் தவறா?

இப்படிப்பட்ட கேள்விக்குரிய நிலையில்தான் இன்று நம்மில் பலரும் இருந்துகொண்டிருக்கிறோம். நமக்கு உதவியாக, நாம் சொல்வதை கேட்டு செயல்பட நம்மிடம் ஐந்து புலன்கள் இருக்கின்றன. மன்னரான நாம் இடும் கட்டளைகளின்படி இயங்கவேண்டிய அந்த புலன்கள் இன்று, சூழ்நிலை என்ற எதிராளியின் வசப்பட்டு நமக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால் எதிரில் இருப்பவர்கள் எதை பேசினாலும், எப்படி பேசினாலும் அவைகளை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு நமது மனதை சலனப்படுத்தி வேதனைக்கு உள்ளாக்குகிறது.

நாம் வார்த்தைகளால் ஒருவரை கண்டபடி பேசிவிடுகிறோம் என்றால், பேசிய வாய் ஒரு ஜடப் பொருள். ஆனால் அவரை வேதனைப்படுத்திய சக்தி, அந்த வார்த்தைகளில்தான் இருக்கிறது. நாம் பார்க்கும் காட்சியால் மனது சலனப்படுகிறது என்றால், அதை பார்க்கும் கண்களால் அந்த சலனம் உருவாகவில்லை. அதை பார்த்து நமக்குள் உருவாகும் கண்ணோட்டத்தால்தான் அந்த சலனம் உருவாகிறது. தகவல்களை கேட்கும் காதுகளுக்கும் எந்த சக்தியும் இல்லை. அதன் வழியே உள்வாங்கிக்கொள்ளும் தகவல் களுக்குத்தான் நம் எண்ணங்களிலும், நம்பிக்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இருக்கிறது.

ஐந்து புலன்களும் குதிரைகளாக ஓடிக்கொண்டிருந்தாலும் அவைகளோடு பிணைக்கப்பட்டு கண்களுக்கு தெரியாத கடிவாளங்களாக செயல்படுவது நம் மனமும், புத்தியும்தான். அந்த கடிவாளங்கள்தான் நம் கட்டுப்பாட்டிற்குள்ளும், நம் கை களுக்குள்ளும் இருக்கவேண்டியவை.

சரி! கண் தேவையற்றதை பார்க்கிறது. காது தேவையில்லாதவற்றை கேட்கிறது. வாய் பிரச்சினைக் குரிய விஷயங்களை பேசுகிறது. இதனால் நமக்கு கவலை ஏற்படுகிறது. அப்படியானால் நமக்கு ஏற்படும் அத்தனை கவலைகளுக்கும் இந்த உறுப்புகளின் செயல்பாடுகள்தான் காரணமா?

அது சரி என்றால், வாய் பேச முடியாத– காதுகேட்காத– பார்வையற்ற ஒருவர் கவலையே இல்லாமல் இருக்கவேண்டும் அல்லவா?

ஆனால் அவருக்கும் கவலை இருக்கிறது. கோபம், ஆத்திரம், கொந்தளிப்பு எல்லாம் அவருக்கும் இருக்கிறது. அவருக்கு கோபம், ஆத்திரம் வருகிறதென்றால் அவரும் ஏதோ ஒருவகையில் அதிர்வலைகளை உள்வாங்கிக்கொண்டு, அதன் அடிப்படையில் மனதில் பாதிப்பை ஏற்படுத்திக்கொள்கிறார். அந்த எதிர்மறையான உணர்வுகளால் கோபம், ஆத்திரம், விரக்தியை வெளிப்படுத்துகிறார். அதனால் கண்தெரியாத, காதுகேட்காத, பேச முடியாதவர்களுக்கும் புலன்கள் செயல்படுகின்றன. அவர் களுக்கும் புலனடக்கம் தேவை.

புலனடக்கத்தின் மூலம் நாம் அடக்கவேண்டியது, சூட்சுமமாக செயல்படும் கண்களுக்கு புலப்படாத மனதைதான். நமது மனதிற்கு கண்கள் இல்லாமல் பார்க்கும் சக்தியும், காதுகள் இல்லாமல் கேட்கும் சக்தியும், வாய் இல்லாமல் நினைத்ததை வெளிப்படுத்தும் சக்தியும் இருக்கிறது. அதனால்தான் நம்மை நெறிப்படுத்த கண்கள், காதுகள், வாயை மூடும் மூன்று குரங்கு பொம்மைகளை காட்டுகிறார்கள். ஐந்து புலன்களையும் குறிப்பிடும் விதத்தில் ஐந்து பொம்மைகளை காட்டுவதில்லை!

நாம் இந்த இயந்திரமயமான உலகத்தில் அடிக்கடி நம் சுய கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறோம். ‘தெரியாமல் பேசிவிட்டேன்’ என்பதன் மூலமும், ‘தேவையற்றதை பார்த்துவிட்டேன்’ என்பதன் மூலமும், நம் கட்டுப்பாட்டை மீறி அனைத்தும் நடந்துகொண்டிருப்பதை ஒத்துக்கொள்கிறோம். சிந்தித்து செயல்படுவது என்ற நிலை தலைகீழாக மாறி, செயல்பட்டுவிட்டு சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

நான் இப்படி சொல்லும்போது, ‘ஒரு சம்பவம் திடீரென்று நடந்துவிடும் போது சிந்திக்க நேரம் இருக்காதே! உடனடியாக செயல்படவேண்டிய கட்டாயம் அப்போது ஏற்படுமே?’ என்று உங்களுக்குள்ளே ஒரு கேள்வி எழுவது நியாயம்தான்.

எப்போதும் அமைதி தவழும் குளம் போன்று நிதானத்தோடு இருந்தால் எந்த சம்பவத்தாலும் நம்மை சலனப்படுத்த முடியாது. என்ன நடந்தாலும் நாம் அமைதியாக இருப்போம். அப்போது நாம் சிந்தித்துதான் செயல்படுவோம். சிந்தித்து செயல்படும் பக்குவம் நமக்கு வந்துவிட்டால், அடுத்து சரியாக சிந்திக்கும் தெளிவு வந்துவிடும். எப்போதும் சரியாக சிந்தித்து, எல்லா நேரத்திலும் தெளிவான முடிவு எடுப்பவர்களால் மட்டுமே சரியாக செயல்பட முடியும்.

இப்படி பதற்றப்படாமல் சரியாக சிந்தித்து செயல்பட நமக்கு சுயபயிற்சி தேவை. அந்த பயிற்சியை எப்படி செய்யவேண்டும் தெரியுமா?

‘அடுத்தவர்களை வலிக்கவைக்கும் வார்த்தைகளை எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடாது’

‘எனக்கு எதிராய் யார் எப்படி நடந்துகொண்டாலும் குரலை உயர்த்தி கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது’

‘யார் என்ன செய்தாலும் என் கையே நீ கட்டுப்பாட்டில் இரு. நீ ஓங்கக்கூடாது’

‘எவ்வளவுதான் அவமானம் சூழ்ந்தாலும் அடுத்தவர்களை அவமானப்படுத்தும் காரியத்தில் இறங்கக்கூடாது’

என்று உங்களுக்குள்ளே கூறி, இந்த விஷயங்களை அடி மனதில் ஆழமாக பதித்துவிடவேண்டும்.

நமது மனதும் ஒரு கம்ப்யூட்டர்தான். அதில் மேற்கண்ட நல்ல விஷயங்களை ‘புரோகிராம்’ போன்று பதித்துவிடுங்கள். அப்போது கீபோர்டு போன்ற உங்கள் கண், காது, வாய்க்கு எந்த சக்தியும் இருக்காது. என்ன நடந்தாலும் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் அமைதியான புரோகிராம் தான் வெளிப்படும். அந்த புரோகிராம் பிடிக்கவில்லை என்றால் மாற்றிக்கொள்ளலாம். அதை மாற்றிக்கொள்ளும் சக்தியும் நம்மிடம் இருக்கிறது.

எப்போதும் நம்மை பற்றி நாம் உயர்வாகவே சிந்திக்க வேண்டும். சக்தி வாய்ந்தவர்களாகவே எப்போதும் நம்மை நாம் கருதவேண்டும்.

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்களுக்காக சில நிமிடங்களை ஒதுக்குங்கள். அந்த நிமிடங்களில் ‘இன்று நான் இப்படித்தான் பேசுவேன். இவைகளைத்தான் கேட்பேன். இவ்வாறுதான் செயல்படுவேன்’ என்று புலன்களுக்கு ஒரு புரோகிராம் செய்துவிட்டு, ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள். நிச்சயமாக அந்த நாள் உங்களுக்கு நல்லநாளாகத்தான் அமையும்.

கட்டுரை: சகோதரி ஜெயா,
பிரம்மகுமாரிகள் இயக்கம், சென்னை.




அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon 17 Aug 2015 - 12:44

பேசாத வார்த்தைகளுக்கு நீ எஜமான் !
பேசிய வார்த்தைகளுக்கு நீ அடிமை !
என்றொரு முதுமொழி உண்டு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Mon 17 Aug 2015 - 14:29

அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 3838410834 அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 103459460

அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 18 Aug 2015 - 1:33

M.Jagadeesan wrote:பேசாத வார்த்தைகளுக்கு நீ எஜமான் !
பேசிய வார்த்தைகளுக்கு நீ அடிமை !
என்றொரு முதுமொழி உண்டு .
மேற்கோள் செய்த பதிவு: 1157812

ஆமாம் ஐயா, சரியா சொன்னீங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 19 Aug 2015 - 17:05

பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசிவிட்டு EVKS இனந்கோவன் அவர்கள் படாதபாடு படுகிறார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed 19 Aug 2015 - 17:48

நீங்கள் கூறியது அனைத்தும் சரியான வார்த்தைகள் தல இதனை
பிரிண்ட் எடுத்து நானும் எனது மனைவியும் அதன்படி நடக்க முயற்சி
செய்கிறோம் நன்றி தல

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 19 Aug 2015 - 19:31

M.Jagadeesan wrote:பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசிவிட்டு EVKS இனந்கோவன் அவர்கள் படாதபாடு படுகிறார் .
மேற்கோள் செய்த பதிவு: 1158069

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 20 Aug 2015 - 17:54

அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 103459460 அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா? - Page 2 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக