புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடக்கொடி இல்லா மனை . Poll_c10மடக்கொடி இல்லா மனை . Poll_m10மடக்கொடி இல்லா மனை . Poll_c10 
42 Posts - 63%
heezulia
மடக்கொடி இல்லா மனை . Poll_c10மடக்கொடி இல்லா மனை . Poll_m10மடக்கொடி இல்லா மனை . Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
மடக்கொடி இல்லா மனை . Poll_c10மடக்கொடி இல்லா மனை . Poll_m10மடக்கொடி இல்லா மனை . Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மடக்கொடி இல்லா மனை . Poll_c10மடக்கொடி இல்லா மனை . Poll_m10மடக்கொடி இல்லா மனை . Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடக்கொடி இல்லா மனை .


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Oct 19, 2016 7:25 am

நெற்றி நிறைய திருமண் இட்டுக்கொண்டு வரதராஜன் , நடராஜன் வீட்டுக்குள் நுழைந்தார் .

"வாப்பா ! வரது ! ஒரு வாரமா ஆளையே காணோமே ; என்ன விஷயம் ? "

"அதிருக்கட்டும் நட்டு ! உன் பெண்சாதி வீட்டில் இல்லையா ? "

" ஆமாம் வரது ! அவளோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி ஊருக்குப் போயிருக்கா ! போய் ஒரு வாரம் ஆவுது . ஆமாம் என் பொண்டாட்டி வீட்டில் இல்லைன்னு எப்படிக் கண்டுபிடிச்சே ? "

" இதென்ன கேள்வி ! வீடெல்லாம் ஒரே குப்பைக் கூளமா இருக்குது ; வாசல்ல கோலம் போடல ; அதனாலதான் கேட்டேன் . ஆமாம் உன் பொண்டாட்டி இல்லையே ! உனக்குக் கஷ்டமா இல்லையா ? "

" அவ இருந்தாலும் கஷ்டம் ; இல்லாட்டியும் கஷ்டம் ! "

" என்ன சொல்றே நீ ? "

" அவ இருந்தா சதா சர்வகாலம் சீரியல் பாத்துகிட்டு இருப்பா ; நாம ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு நியூஸ் கேட்கணும்னா முடியாது ; பேப்பர் படிச்சி தெரிஞ்சிக்கோங்கன்னு சொல்லுவா ! அவ இல்லாட்டி என்ன கஷ்டம்னா , சாப்பாடு கஷ்டம்தான் ! ஒருவாரமா ஹோட்டல் சாப்பாடுதான் ! "

"என்ன மனுஷனய்யா நீ ! ஒரு ரசம் வச்சி அப்பளம் பொரிக்க தெரியாதா உனக்கு ? கடையிலதான் அரைச்ச மாவு விக்கிறான் ; அத வாங்கி தோசை சுட்டு , மிளகாய்ப்பொடி வச்சிகிட்டு காலையில டிபனை முடிச்சிக்கலாமே ! தண்டத்துக்கு ஹோட்டல்ல போய் செலவு பண்றியே ! உடம்புக்கு ஒத்துக்குமா? "

' சமையல் வேலையெல்லாம் நமக்கு ஒத்து வராதப்பா ! அதெல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம் ! ஒளவையார் சொன்னது சரியாத்தான் இருக்கு !

" அப்பிடி அவங்க என்ன சொன்னாங்க ?  "

நீரில்லா நெற்றிபாழ் , நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப்பு இல்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை .

அப்பிடின்னு பாடியிருக்காங்க ! அதாவது வீட்டுல பொண்டாட்டி இல்லைன்னா , அந்த வீடே நாசம்னு பாடியிருக்காங்க !

" நட்டு ! அவங்க சொன்னது சரிதான் ! ஆம்பிளைங்க வீட்ல இருந்தாலும் ,இல்லாட்டாலும் ஒன்னும் தெரியாது ; ஆனா பொம்பிளைங்க இல்லைன்னா அது பளிச்சுன்னு தெரிஞ்சிடும் . அப்புறம் " நீரில்லா நெற்றி பாழ்ன்னு " சொல்லியிருக்காங்களே அதுவும் வாஸ்தவம்தான் . ஒருநாளைக்கு நெற்றியில  நாமம் இட்டுக்கலைன்னா எனக்கு சோறு தண்ணியே இறங்காது ! "

"  சிலபேருக்கு மத்தவங்களுக்கு நாமம் போடலைன்னா சோறு தண்ணியே இறங்காது ! "

" என்ன நட்டு ! கிண்டல் பண்றியா ? "

' இல்ல வரது ; உலகத்துல நடக்குறதைத்தான் சொன்னேன் ; தப்பா நினைச்சுக்காதே ! ஒளவையார் சைவ சமயி ; சிவனை கும்பிடறவங்க ; அதனாலதான் " நீரில்லா நெற்றி பாழ் " அப்பிடின்னு பாடியிருக்காங்க ! "

" நட்டு ! நெய்யில்லா உண்டி பாழ்ன்னு சொல்றாங்க ; நெய் விக்கிற விலையில தினமும் நெய் ஊத்தி சாப்பிட முடியுமா ? "

" வரது ! விதையிலிருந்து எடுக்குற எல்லாத்துக்கும் நெய்யின்னுதான் பேரு ; நீ ஏன் பசுமாட்டு நெய்ய நினைச்சுக்குறே ; பசுமாட்டு நெய் விலை ஜாஸ்தியாய் இருந்தா நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடு ! "

" நட்டு ! ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்ன்னு பாடியிருக்காங்க ; உண்மைதான் ! காவேரிக் கரையோரமா குடியிருக்குறவங்க எல்லாமே கொடுத்து வச்சவங்க ! தினமும் துணி துவைச்சுட்டு ஆசைதீரக் குளிச்ச்சிட்டு வரலாம் . "

" வரது ! அதெல்லாம் இனிமே முடியாது ; அவன் காவேரியில தண்ணி விட்டாதானே  நீ ஆசை தீரக் குளிப்பே ! '

" ஆமாம்பா ! எல்லாம் கனவா போயிடுச்சி ;  மெட்ராசுல சுமார் நூறு வருஷத்துக்கு முன்னாடி ஜனங்க கூவத்துல குளிப்பாங்களாம் ; அங்கேயே துணியும் துவைப்பாங்களாம் !  இப்பத்தான் கூவம் சாக்கடையா மாறிடுச்சி "

வரது ! இன்னொன்னு சொல்லியிருக்காங்களே பாத்தியா !

" உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் "

இந்தக் காலத்துல ஒன்னே ஒன்னு ; கண்ணே கண்ணுன்னு பெத்துக்கிறாங்களே , அது தப்புன்னு அந்தக் காலத்திலேயே பாட்டி சொல்லியிருக்காங்க ! உடன் பிறப்புன்னு ஒன்னு இல்லைன்னா ,  குழந்தைகளுக்கு பாசம்னா  என்னன்னு தெரியாமலேயே போயிடும் ; என்ன நான் சொல்றது சரிதானே ? '

" சரிதான் நட்டு ! வள்ளுவர் கூட " தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர் " அப்பிடின்னு பன்மையிலதான் பாடியிருக்கார் ! சரி நட்டு ! நான் போயிட்டு வரேன் ! நேரமாயிடுச்சி ! "

" போயிட்டு வாப்பா ! "



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 19, 2016 7:54 am

M.Jagadeesan wrote:

ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்

"
மேற்கோள் செய்த பதிவு: 1224820

வணக்கம் ஐயா !

இங்கு ஆறு என்றால் 'நதி' என்பதற்குப் பதிலாக " வழி" என்ற பொருள் நன்கு பொருந்துவதாக அமையலாம் என்பது அடியனது கருத்து.

ஒரு ஊரில் என்னென்ன அழகும் அற்புதங்களும் இந்துதான் என்ன பயன்!

அவற்றைக் காணவும், கண்டு ரசிக்கவும் , அவற்றால் பயன் பெறவும் அந்த ஊருக்குப் போக்குவரத்துப் பாதை இருந்தால்தானே அவ்வழகுகளால் அந்த ஊருக்கும் பிற இடங்களிலிருந்து அங்கு வருபவருக்கும் பயன் இருக்க முடியும் !

அவ்வாறு நல்ல பாதை இல்லாவிட்டால் , அந்த ஊரும் அதன் அழகும் எவருக்கும் பயன்படாமல் பாழாகிவிடும் அல்லவா.

"ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்" என்றால் நல்ல போக்குவரத்துப் பாதை இல்லாத ஊருக்கு அதன் அழகினால் எப்பயனும் இல்லை என்பது கொஞ்சம் மேம்பட்ட பொருளாகலாம் .






+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Oct 19, 2016 8:30 am

" ஆறு " என்றால் " வழி " என்று ஒரு பொருள் உண்டு என்றாலும் , இந்தப் பாடலைப் பொருத்த அளவில்

" ஆறு " என்றால் நதி என்று கொள்வதே பொருத்தமாகும் .

நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று .

நல்லாறெனினும் = நல்ல + ஆறு + எனினும்

இங்கு வந்துள்ள ஆறு , வழியைக் குறிக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 19, 2016 5:15 pm

M.Jagadeesan wrote:" ஆறு " என்றால் " வழி " என்று ஒரு பொருள் உண்டு என்றாலும் , இந்தப் பாடலைப் பொருத்த அளவில்

" ஆறு " என்றால் நதி என்று கொள்வதே பொருத்தமாகும் .

.
மேற்கோள் செய்த பதிவு: 1224823

அப்படியாகில் , இப்பாவின் தற்போது நிலவும் பொருள் மறுபரிசீலனைக்கு எடுத்தாகவேண்டும்.

எல்லா ஊர்களிலும் ஆறுகள் ஓடுவதில்லை.

ஆறுதான் ஒர் ஊருக்கு அழகு என்றால், ஊரில் பொதுவாக விளங்கும் மற்ற அற்புதங்கள் எல்லாம் பாழ் என்று பொருளாகிவிடும்.







+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Oct 19, 2016 7:02 pm

" ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் " என்பது பழமொழி .

ஆறு எல்லா ஊர்களிலும் ஓடுவதில்லை என்ற காரணத்தினால் இப்பழமொழி பொய்யாகிவிடாது .

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி ; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி " என்பது பழமொழி . இப்பொழுது எல்லோருமே Brush & Paste தான் பயன்படுத்துகிறோம்; அதனால் இப்பழமொழி பொய்யென்று ஆகிவிடுமா ?





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 19, 2016 7:36 pm

மடக்கொடி இல்லா மனை . 103459460

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 19, 2016 7:48 pm

M.Jagadeesan wrote:" ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் " என்பது பழமொழி .

மேற்கோள் செய்த பதிவு: 1224876

மன்னிக்கவேண்டும் ஐயா !

அது பழமொழி அல்லவே -
நம் ஔவையின் பாடல் வரிதானே-
பாடல் வரியைப் பழமொழியாக்கினால் அது நம் பிழை என்பது அடியன் கருத்து.

இக்கருத்து நம் எண்ணத்தின் வெளிப்பாடே தவிற விவாதப் பொருள் அல்ல.

ஆறும் ஒரு ஊருக்கு அழகாகலாம். அதற்காக ஆறு மட்டுமேதான் அழகு என்பது எங்கோ இடிப்பதுபோல் தோற்றமளிக்கிறது என்பது அடியனின் எண்ணம்.

எப்படியாவது இருக்கட்டும். ஆனால் ஆறு என்பதனை வழி என்று பொருள் கொண்டால் ஔவையின் பாடல் மேலும் மலர்ந்து மணக்கும் என்பதில் கருத்து வேறுபாடு கொள்ளுதலில் நியாயம் இருக்க முடியாது.

நவில்தொறும் நூல் நயம் என்றும் இதனைக் கொள்ளலாம்-
வேண்டாம் என்றால் தவிர்த்தும் விடலாம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 20, 2017 5:26 pm

தங்களுடைய வாதம் " விதண்டாவாதம் " என்பது என் கருத்து .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 06, 2017 6:39 pm

மடக்கொடி இல்லா மனை . 3838410834 மடக்கொடி இல்லா மனை . 3838410834

ஆறு = நீரோடும் ஆறுதான் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக