புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமண மகரிஷி - Page 3 Poll_c10ரமண மகரிஷி - Page 3 Poll_m10ரமண மகரிஷி - Page 3 Poll_c10 
306 Posts - 42%
heezulia
ரமண மகரிஷி - Page 3 Poll_c10ரமண மகரிஷி - Page 3 Poll_m10ரமண மகரிஷி - Page 3 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ரமண மகரிஷி - Page 3 Poll_c10ரமண மகரிஷி - Page 3 Poll_m10ரமண மகரிஷி - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ரமண மகரிஷி - Page 3 Poll_c10ரமண மகரிஷி - Page 3 Poll_m10ரமண மகரிஷி - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ரமண மகரிஷி - Page 3 Poll_c10ரமண மகரிஷி - Page 3 Poll_m10ரமண மகரிஷி - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரமண மகரிஷி - Page 3 Poll_c10ரமண மகரிஷி - Page 3 Poll_m10ரமண மகரிஷி - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ரமண மகரிஷி - Page 3 Poll_c10ரமண மகரிஷி - Page 3 Poll_m10ரமண மகரிஷி - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
ரமண மகரிஷி - Page 3 Poll_c10ரமண மகரிஷி - Page 3 Poll_m10ரமண மகரிஷி - Page 3 Poll_c10 
5 Posts - 1%
manikavi
ரமண மகரிஷி - Page 3 Poll_c10ரமண மகரிஷி - Page 3 Poll_m10ரமண மகரிஷி - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ரமண மகரிஷி - Page 3 Poll_c10ரமண மகரிஷி - Page 3 Poll_m10ரமண மகரிஷி - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமண மகரிஷி


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 9:57 am

First topic message reminder :

ரமண பகவான்



[அருணாசலம் என்னும் தேஜோலிங்க சுயம்பு விளங்கும் தலமாம் திருவண்ணாமலையில் பால்யத்திலேயே ஆத்ம ஞானம்அடைந்து .கஷ்ட நிஷ்டாபரராக விளங்கிய பகவான், ரமணமகரி"களை அறியாதார் யாரும் இலர். அன்னாரின் திவ்யசரித்திரத்தைச் சுருங்கக் கூறுமுகத்தான் முந்நாளைய சென்னை சண்டே டைம்ஸ் ஆசிரியராக இருந்து, நம் நாட்டில் அரசியல்அறிவும் ஆன்றோர் கலைகளும் பரவமுயற்சி மேற்கொண்டு பின் புகழுடம்பு எய்திய திருவாளர் எம்.எஸ்.காமத் அவர்கள் எழுதிய ஆங்கில முதனூலின் தமிழாக்கம்.]

{எழுதியவர் திரு இ.ஆர்.கோவிந்தன், பதிப்பாளர் சி.டி.என்.வெங்கட்ராமன், நிர்வாகி,-தலைவர் , ரமணாச்ரமம்திருவண்ணாமலை 1963}




பாரத நாட்டின் புண்ணிய தினங்களில் ஆருத்ரா தர்சனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.கௌதமர், பதஞ்சலி போன்ற பக்தசிரேஷ்டர்களுக்கு சிவ பெருமான் காட்சியளித்த இப்புனித நாளன்று, 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தொன்பதாம் தேதி இரவு ஒரு மணிக்கு , ரமண மகரிஷி பிறந்தார்.

ரமண மகரிஷி - Page 3 1


அவர் பிறந்த ஊர் திருச்சுழி. மதுரை அருகே அருப்புக்கோட்டை அருகில் உள்ள சிறிய கிராமம். அவரது தந்தை திரு சுந்தரம்ஐயர். கண்ணியமாக வக்கில் தொழில் நடத்திவந்தார்.அவருக்கு மூன்று புதல்வர்கள். இரண்டாவது குழந்தையாகியரமணனுக்கு வேங்கடராமன் என்று நாமகரணம். குழந்தை வேங்கடராமனை உள்ளூர் பள்ளியில் சேர்த்தார்கள். பின்னர்திண்டுக்கல் சென்று ஒரு ஆண்டு ஐந்தாவது வகுப்பில் படித்தார். இதற்குப் பின்னர் மதுரைக்குப் போய் ஸ்காட்ஸ்இடைநிலைப் பள்ளியிலும், மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும் வாசித்தார்.


ரமண மகரிஷி - Page 3 2


பள்ளிப் பிராயத்திலெல்லாம், வருங்காலத்து மகிமையைக் குறிக்கும் அறிகுறிகள் எதுவும் அச்சிறுவனிடத்தில் காணப்படவில்லை. வகுப்பிலே அபார அறிவுடன் பிரகாசிக்கவில்லை. மகா புத்திசாலி என்றும் பேரும் எடுக்கவில்லை. நல்லவலுவான உடல் உறுதி உண்டு. இதைத் தவிர மற்றச் சிறுவர்களைவிட எவ்விதத்திலும் அவர் சிறந்து விளங்கவில்லை.



ரமண மகரிஷி - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 10:27 am

கள்வருக்கும் கருணை -பாகம் 12



1924-ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 26-ஆம் நாள் நள்ளிரவு; மணி 11-30 இருக்கும். சில கீற்றுக் கொட்டகைகளே
அப்பொழுது இருந்த ரமணாசிரமம். ஆனால், இது பணம் பெருத்த திருமடம் என்றெண்ணிய சில திருடர்கள் அங்கு வந்து புகுந்து ஜன்னல்களை நொறுக்கி அட்டகாசம் செய்தனர். பகவான் ஸ்ரீ ரமணர் படுத்திருந்த அறையில் கூடவே சில அடியார்களும் இருந்தனர். பகவான் திருடர்களை உள்ளே வரச் சொல்லி, அவர்களுக்கு வேண்டியதை இருளில் பார்த்து எடுத்துக் கொள்வதற்காக ஹரிக்கேன் விளக்கு ஒன்றை ஏற்றித்தரச்செய்தார். " உன் பணமெல்லாம் எங்கே வைத்திருக்கிறாய்?" என்று உறுமினர் கள்வர்கள். " நாங்கள் பிட்சை எடுத்து உண்ணும் சாதுக்கள்; எங்களிடம்பணம் இல்லை; இங்கே உள்ள எதை வேண்டுமானாலும் எடுத்துச்செல்லுங்கள்; நாங்கள் வெளியேறி விடுகிறோம்." என்று பகவான் கூறி அடியார்களுடன் வெளியில் வந்து உட்கார்ந்தார். வெளியேறும் போது ஒவ்வொருவரையும் திருடர்கள் அடித்தனர். ஸ்ரீ பகவானுக்கும் இடது தொடையில் ஓர் அடி விழுந்தது! "அப்பா! உனக்கு திருப்தியாகாவிட்டால் மற்றொரு தொடையிலும் அடி" என்று பரிந்து கூறினார் பகவான்!



கள்வர்க்கும் காட்டிய கருணை அம்மட்டோ! எதிர்த்துத் திருடரைத் தாக்கக் கிளம்பிய இளஞ்சீடர் ஒருவரைப் பகவான் தடுத்து," அவர்கள் தர்மத்தை அவர்கள் செய்யட்டும்; நாம் சாதுக்கள்; நம் தர்மத்தை நாம் கைவிடக்கூடாது; எதிர்ப்பதால் சம்பவிக்கும் விளைவுக்கு நாளை உலகம் நம்மையே குறை கூறும். நம் பற்கள் நம்நாக்கைக் கடித்துவிட்டால் பற்களை உடைத்தா எறிந்துவிடுகிறோம்?" என்று சாந்தோபதேசம் செய்தனர்.

"திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து)
அறனல்ல செய்யாமை நன்று"

-குறள் 157.

சில நாட்களில் அத் திருடர்களை காவல் துறையினர் பிடித்துக் கொண்டுவந்து ஸ்ரீ பகவான் முன்னிலையில்
நிறுத்தினர்.. "பகவானே, இவர்களுள் யார் தங்களை அடித்தவன்; காட்டுங்கள்! " என்று அவர்கள் வேண்டினர். " நான் யாரை(முன் ஜன்மத்தில்) அடித்தேனோ அவன் தான் என்னை அடித்தான்! அவனை நீர் கண்டுபிடியும்!! " என்று கூறி நகைத்தனரே தவிர அக்குற்றவாளியைக் காட்டியே கொடுக்கவில்லை.

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தந்
தகுதியான் வென்று விடல்."

குறள் 158

"இன்னாசெய் தாரை யொறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."

குறள் 314



ரமண மகரிஷி - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 10:28 am

உலகங்கவர்ந்த உத்தமர் - பாகம் 13

பைபிளுங் குறளும் பகவத் கீதையும் உபநிஷத்தும் உடல்தாங்கி உலவிய உருவமே பகவான் ரமணர் என்ற உண்மையைக் கொஞ்சங் கொஞ்சமாக உலகின் எல்லா நாட்டு மக்களும் அறிந்து கவர்ந் திழுக்கப்படலாயினர்.



இந்தியர்-வெள்ளையர், என்ற இன வேறுபட்டையும்,இந்து-கிறிஸ்தவர்-முகம்மதியர்-பௌத்தர்-ஜைனர்-சீக்கியர் என்ற மதவேறுபாட்டையும் மறந்து, மக்கள் பலரும் வெகு தொலைவிலிருந்தும் வந்து, இந்த ஞான வள்ளலையடுத்துத் தத்தமது மத குருஇவரே என்று போற்றிப் பணியலாயினர். அவர்களுள்ள்ளும் உத்தமப் பக்குவிகளான எத்தனையோ பேர் ஸ்ரீ ரமண தரிசன மாத்திரத்தாலும், அவரது சந்நிதி விசேடத்தாலும், அருகிலிருந்து தொண்டாற்றியும், உபதேசங்களைக் கடைப்பிடித் தொழுகியும் மெய்யறிவு விளக்கமுற்றனர்.

பாரதத்தின் முன்னாள் ராஷ்ட்ரபதி பாபு ராஜேந்திர பிரசாத் 1938-ஆம் ஆண்டு மகாத்மா காந்திஜியின்
ஆஸ்ரமத்திற்குச் சென்று," பாபுஜி, சாந்தியை நாடித் தங்கள் ஆசிரமத்திற்கு வந்துள்ளேன்" என்றார். சாந்தியின்
நிலைக்களம் காந்திஜி அறிந்ததே. அதனால் மகாத்மாஜி," சாந்தியை நீவிர் விரும்பு வீராயின் ரமணாசிரமம்
போம்; அங்குச்சென்று ஸ்ரீ ரமண மகரிஷிகளின் சந்நிதியிற் கேள்வி, பேச்சுக்களற்றுக் கொஞ்ச நாள் இருந்துவாரும்" என்று கூறி அனுப்பி வைத்தார். அதன்படி ராஜன் பாபு 14-08-1938-ல் ரமணாசிரமத்திற்கு வந்தார். உடன் வந்தவர்கள் பகவானிடம் ஏதேதோ ஆன்மீக விஷயங்களை வினவியும் , பகவான் தவமிருந்த இடங்களைச் சுற்றிப் பார்த்தும் வந்தனரேனும், ராஜன் பாபுமட்டும் ஸ்ரீ ரமண சந்நிதியை விட்டு நகரவே யில்லை! மேலும், காந்திஜியின் அறிவுரைப்படியே யாதொரு பேச்சும் கேள்வியும் எழுப்பாமலேயே ஒரு வாரம் முழுவதுங் கழித்தார்!



அவர் விடை பெறும் போது பகவானை அணுகி, " பகவன், காந்திஜியே என்னை இங்கு அனுப்பி வைத்தார். அவருக்கு நான் தங்களிடமிருந்து கொண்டுசெல்ல ஏதேனும் செய்தி யுளதோ?" என்று வினயமாய் வேண்டி நின்றார்.

"எந்த சக்தி இங்கே நடத்திக் கொண்டிருக்கிறதோ, அதுவேதான் அங்கேயும் நடத்தி வருகின்றது! இதயம்
இதயத்தோடு பேச வாய்ச்சொல் எதற்கு?" என்றனர் பகவான். எங்கு நிறைந்த பரம் பொருளின் ஏகத்துவ இரகசியத்தை விளக்கும் ஞான மொழிகளே இவை யன்றோ? இங்ஙனம், ரமண பகவானது காலத்தில் வாழ்ந்த புவியரசர்கள், கவியரசர்கள், அறிஞர் திலகங்கள், அரசியல் தலைவர்கள், வேதாந்திகள், துறவிகளாகிய பெரியோர் அனைவரும் பகவானின் ஞான மகிமையைப் போற்றி வந்தனர்.



ரமண மகரிஷி - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 10:29 am

உபதேசங்கள்: குறிக்கோளும் வழியும் -பாகம் 14

பரிபூர்ண சுகத்தை யடைவதையே பகவான் ஸ்ரீ ரமணர் மனித சமூகத்தின் குறிக்கோளாகக் காட்டிக் கொடுக்கின்றனர். சுகத்தை விரும்பாத ஜீவர் யாரு மில்லை. சகல ஜீவர்களும் தத்தம் சகலவித முயற்சியாலும் நாடுவது சுகத்தையே அல்லவா? ஆகையால், பகவானது குறிக்கோளை மறுப்பவர் யாருமிலர். இக் காரணத்தாலேயே ரமணோபதேசங்கள் யாதொரு தனிப்பட்ட மதக் கொள்கையு மாகாமல், சகல உயிர்கட்கும் புகலளிக்கும் பொதுப் பெரு நெறியாக விளங்குகிறது. அதனால் தான் உலகின் எந் நாட்டினரும் எம் மதத்தினரும் ஸ்ரீ ரமணோ பதேசங்களை மிக்க விருப்புடன் ஏற்றுப் பின்பற்றுகின்றனர்.

சுகம் என்பது யாது? இதைச் சரியாக அறிந்து கொள்ளாததால் தான் மக்கள் சுகத்திற்காகப் பற்பல துறைகளிலும் தம் முயற்சியைச் செலுத்தி வருகின்றனர். சுகம் என்பது ஆன்மாவே. ஆன்மாவின் இயல்பே சுகம். உண்மையில் நாம் ஆன்மாவே. நம் இயல்பு சுகமே. ஆயினும் தாம் ஆன்மாவே என்றறியாமல் தம்மை உடலாகக்கருதியிருப்பதால்தான் மக்கள் சுகத்தை யிழந்தவர்களாகவும் துன்புறுபவர்களாகவும் அவசியமின்றிக் கவலைப்படுகிறார்கள். இழந்ததாகத் தோன்றும் நம் சுகத்தை மீண்டும் அடைவதற்கு, மறந்ததாகத் தோன்றும் நம் உண்மை யியல்பை- ஆன்மாவை-அறிவதொன்றே போதும்.

"நாம் சுகமடைய முயல்வது சுயநலமல்லவா? " என்று சிலர் கேட்பதுண்டு. 'சுயம்' என்ற பதத்தின் சரியான
பொருளைத் தெரிந்து கொள்ளாததால்தான் இக்கேள்வி பல நன் மக்களிடமும் எழுகின்றது. 'சுயம்' என்பது ஆன்மாவே.


ரமண மகரிஷி - Page 3 15


தன்னை அகண்ட ஆன்மா என்றறியாமல், தன்னைக் குறுக்கி நோக்கி, 'இவ்வுடலே நான்' என்று கருதுவதால் தான் 'சுய நலம்' என்ற சொல் கீழ்மைக் குணத்தைக் குறிக்கும் சொல்லாக நம்மிடையே வழங்கி வருகின்றது. "சகல உயிர்களிலும் ஏகமாய் ஒத்து விளங்கும் ஆன்மாவே நான்" என்றறியும் ஆன்ம ஞானி ஒருவனின் அனுபவத்தில்'சுய நலம்' என்பது சகல உயிர்களின் நலமே ஆகிறதல்லவா? ஆன்ம ஞானம் உண்டானால்தான் சகல உயிர்களின் உண்மையும் தானே என்பது விளங்கும்.

உலகப் பொருளைத் தேடிக் குவித்துப் பஞ்சேந்திரியங்களின் மூலம் அவற்றை அனுபவித்தடையும் சுகம் மிக அற்பமும் அநித்தியமும் மாகின்றது. இவ்வாறு அற்ப சுகானுபவியாக நாம் ஆகாமல், பரிபூரண சுகானுபவியாவதே நமக்கு ஸ்ரீ ரமணபகவான் காட்டித்தரும் குறிக்கோள்.இக்குறிக்கோளை யடைய ஸ்ரீ பகவான் வகுத்தளித்துள்ள வழிகள் இரண்டு.

1. தன்னை 'நான் யார்?' என்று விசாரித்து அறியும் ஆன்ம விசாரம்.

2. (இறைவனிடம் தன்னை முழுவதுமாக ஒப்புவித்திடும் ஆன்ம சமர்ப்பணம். முந்தியது அறிவு நெறி(ஞானமார்க்கம்), பிந்தியது அன்பு நெறி(பக்தி மார்க்கம்.)



ரமண மகரிஷி - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 10:37 am

ஆன்மவிசாரம் - பாகம் 15



நாம் எதை அறிய விரும்புகிறோமோ அதை நாடுகிறோம். அவ்வாறே தன்னையறிய விரும்புவோர் தன்னையே நாடவேண்டும்.

ஆயின் உலகிற் காணப்படும் ஆராய்ச்சிகள் முழுவதும் தன்னை விட்டு முன்னிலை, படர்க்கைப் பொருளாகிய உலகையும் கடவுளையும் ஆராய்வதே யாகு மல்லவா? உலகம், கடவுள் இவைகளை ஆராயும் அறிவாகிய மனிதன் தன்னை யாரென்று சரியாக இன்னும் அறியவில்லை. 'நான் மனிதன்' என்கிறோம். இது அறியாமையே தவிர, தன்மையின் உண்மையான அறிவல்ல. ஏனெனில் நமது உடைமையாகிய உடம்பையே நாம் என்று தவறாக எண்னுவதால்தான் 'நான் மனிதன்' என்கிறோம். உடையவனாகிய நான் யாரென்று உடம்பினின்றும் நம்மைப் பகுத்து அறியும் அறிவே சரியான பகுத்தறிவு. தேகமே நானென் றுணரும் அறிவு (அகங்காரம்) போலித் தன்மையுணர்வே. அகண்ட ஆன்மாவாகத் தன்னை யறிவதே மெய்யான தன்மை யறிவு அல்லது ஆன்ம ஞானம்.

உறக்கத்திலிருந்து உணர்வு எழும்போது, 'நான் இவ்வுடல்' என்ற வடிவில் நம்மை உணர்கிறோம். ஆனால் உறக்கத்தில் உடல், உலக உணர்வுகள் இல்லை. 'நான் இருக்கிறேன்' என்ற சுத்தவுணர்வு உறக்கத்திலுள்ளது.



விழிப்பில் இத் தன்னுணர்வு "நான் உடலாக இருக்கிறேன்; நான் மனிதனாக இருக்கிறேன்; நான் இன்னாராக இருக்கிறேன்" என்றவாறு ஓர் உபாதியைச் சேர்த்துக்கொண்டு எழுகின்றது. இதுவே அகந்தை, ஜீவ போதம்; இதுவே பந்தம். இதுவே முதல் எண்ணம்.



இந்த முதல் எண்ணமாகிய மனிதனுக்கே முன்னிலை படர்க்கைகளின் உணர்வாகிய பிற எண்ணங்கள் உருவாகின்றன. முன்னிலை படர்க்கைகளை நாட நாட மேலும் எண்ணங்கள் விருத்தியாகிக் கொண்டே போகும். தன்மை உணர்வாகிய 'நான் இன்னாராக இருக்கிறேன்' என்ற அகந்தை வடிவத்தை இதன் இருப்பு எத்தகையது என்று நாட வேண்டும்.



ரமண மகரிஷி - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 10:37 am


விதேக கைவல்யம்.


பகவான் ஸ்ரீ ரமணரின் தேக வாழ்வின் இறுதிக்காலம் பிரம்மஞானி ஒருவரின் மகிமை எப்படிப்பட்ட தென்பதைக் கையிற் கனியாய்க் காட்ட வல்லதா யிருந்தது. தாம் அருணாசலத்தில் அடி வைத்த நாள் முதலாய் அரை விநாடி கூட அவர் எங்கும் செல்லாமல் ஐம்பத்து நான்கு ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்திருந்தார். 1949-ஆம் ஆண்டு அவரது இடது புஜத்தின் கீழ்பாகத்தில் 'சர்கோமா' எனப்படும் ஒரு விதப் புற்று நோய்க் கட்டி புறப்பட்டது.



ஆரம்பத்தில் சிறியதாக இருந்த அது இரண்டு முறை அறுவைச் கிச்சை செய்யப்பட்ட பிறகும் மீண்டும் பெரியதாக வளர்ந்து உடம்பின் இரத்த மெல்லாம் உறிஞ்சி ஊற்றாக வெளியிற் பெருக்க ஆரம்பித்தது. ரேடியம் சிகிச்சை போன்ற பல்வேறு வைத்திய முறைகளுங் கையாளப்பட்டன. 19-12-'49 இல் நான்காவது முறையாக ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்துங் கூட நோய் தணியவில்லை. அவ் வறுவைச் சிகிச்சையின் போது மயக்க மருந்து கூடக் கொடுக்க வேண்டாம் என்று பகவான் தடுத்துவிட்டார். "வலி இல்லையா? " என்று பக்தர் ஒருவர் பகவானிடமே கேட்டார். அதற்கு விடையாக "வலியும் நமக்கு அன்னியமல்லவே" என்றார் பகவான். நாக்கைக் கடிக்கும் பற்கள் எப்படி நமக்கு அன்னிய மல்லவோ, ரமணரை அடித்த கள்வர்கள் எப்படி அவருக்கு அன்னியராகத் தோன்றவில்லையோ, அப்படியே உடலை உழற்றும் நோயும் வலியும் கூட 'நானே' என்ற அனன்னிய ஆத்ம பாவமே அவரது அதிசயிக்கத் தக்க ஞான நிலையாக யிருந்தது.

கொடிய வலிதரும் நோயின் இடையிலும் நகைச் சுவை ததும்பும் ஞான மொழிகளால் பகவான் தம்பொருட்டு வருந்தும் பக்தர்களின் வாட்டத்தை அடிக்கடி போக்கி வந்தனர். " இவ்வுடம்பே நமக்கு ஒரு நோய்; அந்நோய்க்கு ஒரு நோய் வந்தால் நல்லது தானே நமக்கு" என்பார். ஒரு பக்தரிடம், "சுவாமி போய்விடப் போகிறாறே என்று வருந்துகிறீர்களா? எங்கே போவது? எப்படிப் போவது? போக்கு வரவு எதற்கு? தேகத்திற்கே! நம்மக்கேது!" என்றார் பகவான். மற்றொரு முறை, "கொம்பிற் சுற்றப்பட்ட மாலையொன்று நழுவியதையோ அன்றி இருப்பதையோ அறியாத பசுவைப் போலவும், தன் உடல் மேலிருந்து ஆடை போயிற்றா, இருக்கிறதா என்றறியாத ஒரு குடிவெறியனைப் போலவும், ஞானியொருவன் தனக்குச் சரீரம் என்று ஒன்று இருக்கிறதா, போயிற்றாஎன்பதை அறிவதே யில்லை!" என்றும் விளக்கி யருளினார்.

இறுதி வரையிலும் மக்கள் தன்னை தரிசிப்பதை யாரும் தடை செய்யக் கூடாது என்று பகவான் திட்டப் படுத்தினார்.



ரமண மகரிஷி - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 10:38 am

ரமண மகரிஷி - Page 3 16

1950-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14 ஆம் நாள், வெள்ளிக்கிழமை, இரவு மணி 8-47க்கு, உடல் பத்மாசனம்
இட்டவாறே அமர்ந்திருக்க, ஒவ்வொரு மூச்சும் சீராகச் சென்று முடிவில் உள்ளே இதயத்தில் ஒடுங்கிற்று. பகவான் ஸ்ரீ ரமணர் தமது நர வேடத்தைக் களைந்து, தமது யதார்த்த சொரூபமான போக்கும் வரவும் இலாப் பொது அருள் வெளியாய், ஏதும் மறைப்பின்றி என்றும் பரிபூரணமாய்ப் பிரகாசித்தார்.

விக்கிருதி சித்திரை மேவுங் கிருட்டிணப்
பக்கத் திரயோ தசிதிதியிற்-சுக்கிர
வாரம்பூ ரட்டாதி மாவிதேக கைவல்யம்
சீரமண னுற்ற தினம்.


அச்சமயம் மாத்ரு பூதேசுர ராலய முன்றிலில் அமர்ந்திருந்த பக்தர்கள் சிலர், பகவான் இருந்த அறையின்
வாயிலில், ஓர் பேரொளி தோன்றி அவ் வறையையும் சுற்றுப் புறத்தையும் வியாபித்துப் பரவியதைக் கண்டனர். இது ஏதேனும் புகைப் படம் எடுக்கும் வெள்ளொளி யாயிருக்கலாமோ வென ஐயுறு முன்பே அதே சமயத்தில், அருகில் வெட்ட வெளியிற் கூடியிருந்த மக்கள் ஆகாயத்தைச் சுட்டிக் காட்டி, "இதோ ஜோதி; ஜோதி போகின்றது!" என்று கூவினர். வான வீதியில் அவ் வெண் ஜோதி தோன்றி மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து சென்று, ஸ்ரீ அருணாசலத்தின் உச்சிக்குப் பின் மறைந்தது! ஸ்ரீ ரமணமா ஜோதி வாழ்க!


பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷிகளின் திரு மேனியை ரமணாசிரமத்தில் அப்பெருமான் வாழ்ந்திருந்த அறைக்கும், அன்னையின் ஆலயத்திற்கும் இடையிற் சமாதி செய்வித்து ஸ்ரீ ரமண லிங்க மூர்த்தியைப் பிரதிஷ்ட்டை செய்வித்தனர்.



அதன்மேல் அழகிய மணி மண்டபாலயம் ஒன்று நிருமாணிக்கப்பெற்று 18-06-'67 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அச் சந்நிதியின் முன் பாகத்தில் உற்சவாதிகள் நடை பெறுவதற்கான ஒரு பெரிய சபா மண்டபமும் அமைக்கப்பட்டது."தான் இவ்வுடலல்ல; உள்ள பரம் பொருளே தான்" என்ற மகானுபவியான பகவான் ஸ்ரீ அருணாசல் ரமணரது அருட் சந்நிதி, ஞான தாகமெடுத்த உலகிற்கு மோனமாக என்றென்றும்அருளமுதம் ஊட்டி வருகின்றது.

வாழிஸ்ரீ ரமண ஜோதி வள்ளலே வாழி வாழி
வாழிநீ கால மூன்றின் வரையறை கடந்தோய் வாழி
வாழிநீ புவனகோடி வடிவெலா நிறைந்தோய் வாழி
வாழிநீ யூழி வெள்ள மதிற்கெடா வங்கம் வாழி!

வாழிஸ்ரீ ரமண ஞான வாரிதி வாழி வாழி
வாழிஸ்ரீ ரமண நாம மந்திரம் வாழி வாழி
வாழிஸ்ரீ ரமண மூர்த்தி வாழியென் பார்நீ டூழி
வாழிநீ எம்மைக் காக்கு மகாகுரு ரமண வாழி!





ஸ்ரீ ரமண சரித சுருக்கம் நிறைவு பெற்றது.




ரமண மகரிஷி - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 10:39 am

மூலம்:

ரமண மகரிஷி - Page 3 Banner3







ரமண மகரிஷி - Page 3 Purple10 ரமண மகரிஷி - Page 3 Purple10 ரமண மகரிஷி - Page 3 Purple10




ரமண மகரிஷி - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
saravanakumarkb
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 07/02/2010

Postsaravanakumarkb Thu Mar 04, 2010 9:09 pm

super sir,
you are done good job.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 14, 2015 3:44 pm

இன்று பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி நினைவு நாள்!



ரமண மகரிஷி - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக