|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சிலேடை சிரிப்புகள்
Page 7 of 9 • Share •
Page 7 of 9 •
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 
சிலேடை சிரிப்புகள்
First topic message reminder :
எங்கே விழுது?
கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.
இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.
பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.
கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.
கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.
தலைவனை பையனாக...?
கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.
கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.
அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.
அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.
ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?
தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.
உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.
இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.
(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)
நீரில் குவளை
ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.
அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.
நானா தள்ளாதவன்...?
கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.
கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.
ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;
"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.
வாயிலில் போடுவேன்..!
கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.
அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.
அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.
கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
எங்கே விழுது?
கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.
இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.
பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.
கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.
கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.
தலைவனை பையனாக...?
கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.
கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.
அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.
அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.
ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?
தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.
உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.
இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.
(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)
நீரில் குவளை
ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.
அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.
நானா தள்ளாதவன்...?
கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.
கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.
ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;
"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.
வாயிலில் போடுவேன்..!
கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.
அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.
அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.
கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

கார்த்திக் பாலசுப்ரமணியம் |

முரளிராஜா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5444
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 449
Re: சிலேடை சிரிப்புகள்
மூதறிஞரின் சிலேடை
நேருவுடன் கருத்து வேறுபாடு கொண்டு மூதறிஞர் ராஜாஜி ‘சுதந்திரா’ கட்சியை உருவாக்கினார். அக்கட்சியின் முதல் மாநாடு தஞ்சை யாகப்பா திரையரங்குத் திடலில் விமரிசையாக நடந்தது.
மாநாடு முடிந்து 9.15 மணி (இரவு) தஞ்சை ரயிலடிக்கு வந்து விட்டார் ராஜாஜி. பயணிகள் ஓய்வறையில் உட்காராமல் கைத்தடியை ஊன்றியபடி நடைமேடையில் நின்றிருந்தார் தஞ்சை நகர சுதந்திரா கட்சி பிரமுகர் சாமிநாதனும் பக்கத்தில் இருந்தார்.
கட்சித் தொண்டர்களில் சிலர் புகைவண்டி நிலைய கண்காணிப்பாளர் அறைக்குச் சென்று இரும்பு மடக்கு நாற்காலி வேண்டும் எனக்கேட்டனர்.
அவர் யாருக்கு என அவர்களைத் திருப்பிக் கேட்டாராம். தொண்டர்கள் மூதறிஞர் ராஜாஜி அவர்களை உட்கார வைக்கத்தான் என்றனர். அவருக்கென்றால் நான் தரமாட்டேன். ஏனெனில் என் வேலை போய்விடும் என தொண்டர்களிடம் சொன்னாராம்.
பின் தொண்டர்கள் ரயில் நிலையம் அருகிலுள்ள மருந்து கடையின் உரிமையாளர் ஒருவரிடமிருந்து பெற்றனராம். தொண்டர்கள் அங்கும் இங்கும் அலைவதை கவனித்த ராஜாஜி சாமிநாதனைப் பார்த்து என்ன நடக்கிறது இங்கே எனக் கேட்டாராம்.
தங்களை உட்கார வைப்பதற்குத் தான் தொண்டர்கள் நாற்காலியைத் தேடி அலைகிறார்கள். என்றாராம் சாமிநாதன்.
அப்போது ராஜாஜி “சாமிநாதன்... நம் கட்சிப் பிரமுகர்களோ... தொண்டர்களோ எப்போதும் நாற்காலியைத் தேடி அலைய வேண்டாம்’’ என்றாராம்.
நேருவுடன் கருத்து வேறுபாடு கொண்டு மூதறிஞர் ராஜாஜி ‘சுதந்திரா’ கட்சியை உருவாக்கினார். அக்கட்சியின் முதல் மாநாடு தஞ்சை யாகப்பா திரையரங்குத் திடலில் விமரிசையாக நடந்தது.
மாநாடு முடிந்து 9.15 மணி (இரவு) தஞ்சை ரயிலடிக்கு வந்து விட்டார் ராஜாஜி. பயணிகள் ஓய்வறையில் உட்காராமல் கைத்தடியை ஊன்றியபடி நடைமேடையில் நின்றிருந்தார் தஞ்சை நகர சுதந்திரா கட்சி பிரமுகர் சாமிநாதனும் பக்கத்தில் இருந்தார்.
கட்சித் தொண்டர்களில் சிலர் புகைவண்டி நிலைய கண்காணிப்பாளர் அறைக்குச் சென்று இரும்பு மடக்கு நாற்காலி வேண்டும் எனக்கேட்டனர்.
அவர் யாருக்கு என அவர்களைத் திருப்பிக் கேட்டாராம். தொண்டர்கள் மூதறிஞர் ராஜாஜி அவர்களை உட்கார வைக்கத்தான் என்றனர். அவருக்கென்றால் நான் தரமாட்டேன். ஏனெனில் என் வேலை போய்விடும் என தொண்டர்களிடம் சொன்னாராம்.
பின் தொண்டர்கள் ரயில் நிலையம் அருகிலுள்ள மருந்து கடையின் உரிமையாளர் ஒருவரிடமிருந்து பெற்றனராம். தொண்டர்கள் அங்கும் இங்கும் அலைவதை கவனித்த ராஜாஜி சாமிநாதனைப் பார்த்து என்ன நடக்கிறது இங்கே எனக் கேட்டாராம்.
தங்களை உட்கார வைப்பதற்குத் தான் தொண்டர்கள் நாற்காலியைத் தேடி அலைகிறார்கள். என்றாராம் சாமிநாதன்.
அப்போது ராஜாஜி “சாமிநாதன்... நம் கட்சிப் பிரமுகர்களோ... தொண்டர்களோ எப்போதும் நாற்காலியைத் தேடி அலைய வேண்டாம்’’ என்றாராம்.

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிலேடை சிரிப்புகள்
அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத்
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு -வடிவுடைய
மாசுணத்தை பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!! :- காலமேக புலவர்
பூசணிக்காயானது :
அடி நந்தி சேர்தலால் - அடிப்பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதால்
ஆகம் வெளுத்துத் - உடல் வெளுத்து
கொடியும் ஒரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தே கொடியினைக் கொண்டு
வடிவுடைய மாசுணத்தை பூண்டு - அழகான வெண்நிறத்தை மேல் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் - வளைவான் தழும்புகளை மேல் கொண்டதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!! - பூசணிக்காயையும் ஈசனாகக் கருதிப் போற்றுவாயாக !!
சிவபெருமான் :
அடிநந்தி சேர்தலால் - திருவடியிலே நந்திப்பெருமான் சேர்ந்திருத்தலாலும்
ஆகம் வெளுத்துத் - திருநீறணிந்து உடல் வெண்மையையாய் இருப்பதாலும்
வடிவுடைய கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தில் பூங்கொடியாய உமையைக் கொண்டு
மாசுணத்தை பூண்டு - சிறந்த பாம்பு ஆபரணத்தைக் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் -தன் திருமேனியினிடத்தே அம்மை தழுவியதால் ஏற்பட்ட வளையல் தழும்புகளைக் கொண்டவர் சிவபெருமான்.
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு -வடிவுடைய
மாசுணத்தை பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!! :- காலமேக புலவர்
பூசணிக்காயானது :
அடி நந்தி சேர்தலால் - அடிப்பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதால்
ஆகம் வெளுத்துத் - உடல் வெளுத்து
கொடியும் ஒரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தே கொடியினைக் கொண்டு
வடிவுடைய மாசுணத்தை பூண்டு - அழகான வெண்நிறத்தை மேல் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் - வளைவான் தழும்புகளை மேல் கொண்டதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!! - பூசணிக்காயையும் ஈசனாகக் கருதிப் போற்றுவாயாக !!
சிவபெருமான் :
அடிநந்தி சேர்தலால் - திருவடியிலே நந்திப்பெருமான் சேர்ந்திருத்தலாலும்
ஆகம் வெளுத்துத் - திருநீறணிந்து உடல் வெண்மையையாய் இருப்பதாலும்
வடிவுடைய கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தில் பூங்கொடியாய உமையைக் கொண்டு
மாசுணத்தை பூண்டு - சிறந்த பாம்பு ஆபரணத்தைக் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் -தன் திருமேனியினிடத்தே அம்மை தழுவியதால் ஏற்பட்ட வளையல் தழும்புகளைக் கொண்டவர் சிவபெருமான்.

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிலேடை சிரிப்புகள்
Sundararaj Thayalan wrote:மிகவும் அருமையாகவுள்ளது. பகிர்வுக்கு நன்றி.
நன்றி ஐயா

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிலேடை சிரிப்புகள்
balakarthik wrote:முக்கூர் லக்ஷ்மி நரசிமாச்சாரியாரின் “குறைவொன்றும் இல்லை" முதல் பாகம்
படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் பழையதுக்கும்(பழைய சோறு) ஸ்ரீமன்
நாராயணனுக்கும் ஒரு கவிஞர் சிலேடை புனைந்திருப்பதாக எழுதியிருக்கிறார் , அது கீழ்வருமாறு
நீரில் கிடந்தவண்ணம் நிர்மலமாய்க் காட்சிதரும்
தாரணி வாழ்விக்கும் அன்னமாம்-சாரப்
பொருள்தேறும் போற்றும் பழமையால் சோறும்
எருதேழ் அடர்த்த இறை
நாராயணன்:
நீரில் கிடந்த வண்ணம்- நீரில் பள்ளி கொண்டிருப்பான்; அல்லது நாரங்களையே தனது இருப்பிடமாகக் கொண்டவன்; அதாவது நாராயணன்
நிர்மலமாய்க் காட்சிதரும்- குற்றமற்றவனாய் இருப்பவன்
தாரணி வாழ்விக்கும்- காத்தலாகிய தொழிலைச் செய்பவன்
சாரப்பொருள்தேறும் அன்னமாம்-ஹம்ஸாவதாரத்தில் வேதத்தின் சாரப்பொருளாகிய வேதத்தை உபதேசம் செய்தவன்
போற்றும் பழமையால்- வேதங்கள், உபநிடதங்களால் 'புராண புருடோத்தமன்' என்று போற்றப்படுபவன்
எருதேழ் அடர்த்த இறை; ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியின் கைத்தலம் பற்றிய கண்ணனாகிய எம்பெருமான் நாராயணன்.
பழைய சோறு:
நீரில் கிடந்த வண்ணம்- இரவெல்லாம் நீரில் கிடக்கும்
நிர்மலமாய்க் காட்சிதரும்- குற்றமற்றதுபோல் வெண்மையாய்க் காட்சி தரும்
தாரணி வாழ்விக்கும் அன்னமாம்- உலகத்தாரின் பசியைப் போக்கி வாழ்வுக்கு ஆதாரமாய் இருக்கும் உணவாகும்
சாரப்பொருள்தேறும்-மக்கள் உணவில் முக்கிய பங்கு வகிக்கும்
போற்றும் பழமையால்-பழமையான காரணத்தால் உண்பவர்கள் ''ஆஹா" என்று விரும்பி உண்பர்
ரொம்ப நல்லா இருக்கு பாலா, அந்த புத்தகம் PDF கிடைக்குமா ?

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: சிலேடை சிரிப்புகள்
நண்பர் ஒருவர்,“சிலப்பதிகாரத்துக்கு உரை போட்டிருக்கிறேன், பாருங்கள்” என்று புத்தகத்தை நீட்டினார்.
அடேடே, இப்படிப்பட்ட தமிழ்ப் பண்டிதர் அருகிலேயே இருப்பது தெரியாமல் போய் விட்டதே என்று பிரித்துப் படித்தேன். வெறும் செய்யுள்தான் இருந்தது. உரை இல்லை.
“உரை இல்லையே?” என்றதற்கு,
“புத்தகத்துக்கு காக்கி கலரில் உறை போட்டிருக்கிறேனே, அதைச் சொன்னேன்” என்றார்.
நல்ல வேளையாக கி.வா.ஜ. உயிரோடு இல்லை!
அடேடே, இப்படிப்பட்ட தமிழ்ப் பண்டிதர் அருகிலேயே இருப்பது தெரியாமல் போய் விட்டதே என்று பிரித்துப் படித்தேன். வெறும் செய்யுள்தான் இருந்தது. உரை இல்லை.
“உரை இல்லையே?” என்றதற்கு,
“புத்தகத்துக்கு காக்கி கலரில் உறை போட்டிருக்கிறேனே, அதைச் சொன்னேன்” என்றார்.
நல்ல வேளையாக கி.வா.ஜ. உயிரோடு இல்லை!

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிலேடை சிரிப்புகள்
balakarthik wrote:நண்பர் ஒருவர்,“சிலப்பதிகாரத்துக்கு உரை போட்டிருக்கிறேன், பாருங்கள்” என்று புத்தகத்தை நீட்டினார்.
அடேடே, இப்படிப்பட்ட தமிழ்ப் பண்டிதர் அருகிலேயே இருப்பது தெரியாமல் போய் விட்டதே என்று பிரித்துப் படித்தேன். வெறும் செய்யுள்தான் இருந்தது. உரை இல்லை.
“உரை இல்லையே?” என்றதற்கு,
“புத்தகத்துக்கு காக்கி கலரில் உறை போட்டிருக்கிறேனே, அதைச் சொன்னேன்” என்றார்.
நல்ல வேளையாக கி.வா.ஜ. உயிரோடு இல்லை!

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10903
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1600
Re: சிலேடை சிரிப்புகள்
balakarthik wrote:நண்பர் ஒருவர்,“சிலப்பதிகாரத்துக்கு உரை போட்டிருக்கிறேன், பாருங்கள்” என்று புத்தகத்தை நீட்டினார்.
அடேடே, இப்படிப்பட்ட தமிழ்ப் பண்டிதர் அருகிலேயே இருப்பது தெரியாமல் போய் விட்டதே என்று பிரித்துப் படித்தேன். வெறும் செய்யுள்தான் இருந்தது. உரை இல்லை.
“உரை இல்லையே?” என்றதற்கு,
“புத்தகத்துக்கு காக்கி கலரில் உறை போட்டிருக்கிறேனே, அதைச் சொன்னேன்” என்றார்.
நல்ல வேளையாக கி.வா.ஜ. உயிரோடு இல்லை!

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10903
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1600
Re: சிலேடை சிரிப்புகள்
மணிமேகலை என்கிற பெயரில் ஒரு பெரிய தத்துவம் இருக்கிறது.
Money-May-கலை, அதாவது செல்வம் நம்மை விட்டுக் கலைந்து போகலாம்.
இதைப் பார்த்து விட்டு சீத்தலை சாத்தனாரின் ஆவி என்னை தலையில் சாத்தியது என்றால் பார்க்கிறவர்கள்,
see, தலை சாத்தினார் என்பார்கள்.
Money-May-கலை, அதாவது செல்வம் நம்மை விட்டுக் கலைந்து போகலாம்.
இதைப் பார்த்து விட்டு சீத்தலை சாத்தனாரின் ஆவி என்னை தலையில் சாத்தியது என்றால் பார்க்கிறவர்கள்,
see, தலை சாத்தினார் என்பார்கள்.

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிலேடை சிரிப்புகள்
balakarthik wrote:மணிமேகலை என்கிற பெயரில் ஒரு பெரிய தத்துவம் இருக்கிறது.
Money-May-கலை, அதாவது செல்வம் நம்மை விட்டுக் கலைந்து போகலாம்.
இதைப் பார்த்து விட்டு சீத்தலை சாத்தனாரின் ஆவி என்னை தலையில் சாத்தியது என்றால் பார்க்கிறவர்கள்,
see, தலை சாத்தினார் என்பார்கள்.
எப்படி பாலா நீங்க நின்னுட்டே யோசிப்பீங்களா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10903
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1600
Re: சிலேடை சிரிப்புகள்
கலைஞர் முதல் முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றிருந்த நேரம்.
எதிர்க்கட்சித் தலைவர் திரு.பி.ஜி.கருத்திருமன் சட்டசபையில் கேட்டார்.
“நீங்கள் நாடார் சமூகத்தினருக்கு உதவி செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?”
இக்கட்டான இந்தக் கேள்விக்கு கலைஞர் சொன்ன பதில் கருத்திருமன் உள்பட எல்லாரையும் சிரிக்க வைத்தது.
“என்னை நாடியோர்க்கு எல்லா உதவியும் செய்வேன் என்று சொன்னேன். அதற்கு அர்த்தம் நாடார்க்கு செய்ய மாட்டேன் என்பதல்ல”
எதிர்க்கட்சித் தலைவர் திரு.பி.ஜி.கருத்திருமன் சட்டசபையில் கேட்டார்.
“நீங்கள் நாடார் சமூகத்தினருக்கு உதவி செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?”
இக்கட்டான இந்தக் கேள்விக்கு கலைஞர் சொன்ன பதில் கருத்திருமன் உள்பட எல்லாரையும் சிரிக்க வைத்தது.
“என்னை நாடியோர்க்கு எல்லா உதவியும் செய்வேன் என்று சொன்னேன். அதற்கு அர்த்தம் நாடார்க்கு செய்ய மாட்டேன் என்பதல்ல”

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிலேடை சிரிப்புகள்
balakarthik wrote:கலைஞர் முதல் முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றிருந்த நேரம்.
எதிர்க்கட்சித் தலைவர் திரு.பி.ஜி.கருத்திருமன் சட்டசபையில் கேட்டார்.
“நீங்கள் நாடார் சமூகத்தினருக்கு உதவி செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?”
இக்கட்டான இந்தக் கேள்விக்கு கலைஞர் சொன்ன பதில் கருத்திருமன் உள்பட எல்லாரையும் சிரிக்க வைத்தது.
“என்னை நாடியோர்க்கு எல்லா உதவியும் செய்வேன் என்று சொன்னேன். அதற்கு அர்த்தம் நாடார்க்கு செய்ய மாட்டேன் என்பதல்ல”

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Page 7 of 9 •
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 
Page 7 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum






