புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10 
306 Posts - 42%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10 
6 Posts - 1%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10 
5 Posts - 1%
manikavi
அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 9 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)


   
   

Page 9 of 17 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:00 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:50 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் இருபத்தேழு


படுக்க வைத்த படிக்கு ஒரு கரிக்கட்டை. பின்னால் ரெண்டு கெட்டாக, மூளியாக நின்றபடிக்கு இன்னொன்று.

ஒன்று சுவாசித்துக் கொண்டு இருந்தது இரண்டு நாள் முன்பு வரை. மேன்மையான ஜீவிதத்தில் உடலெல்லாம் தேஜஸாக ஒளிரக் கட்டுக்குடுமியும் பத்தாறு வேஷ்டியுமாகக் கம்பீரமாக வலம் வந்தது. குரல் பிசிறிடாமல், பெளருஷம் கனக்க, பிரம்மத்தைத் தேடி நாலு திசையும் சுழன்று அடர்த்தியாகக் காற்றில் கலந்து நிற்க வேதம் சொன்னது.

எல்லாம் சொப்பனமாக, இடுப்பு வேஷ்டி நிற்காது, விரைத்த குறியை வலது கரத்தால் பற்றி மைதுனம் செய்து கொண்டு உலகத்து இழவை எல்லாம் சங்கீதமாகக் காதில் கேட்டு ஆனந்தித்தபடி, காரை பூசிய தரையிலும் சுவரிலும் விந்து சிதறச் சிரித்தது. அந்தக் கையும் குறியும் விந்தும் ரத்தமும் சதையும் எல்லாமே கரியாக அழுக்குத் துணிக்குள் பொதிந்து கிடக்கிறது.

கிடத்திய கட்டைக்குப் பின்னால் நீட்டி நிமிர்ந்து மொட்டையாகக் கூரையில்லாமல் நிற்கிறதோ அந்த வேத கோஷத்தை உள்ளேயே பொத்திப் பொத்தி வைக்க முயன்று சந்தோஷமாகத் தோற்ற கதவுகளும், விந்துத் துளிகளை மேலே சுமந்து, உடம்பின், புத்தியின், மனதின் கூறழிந்த நக்னத்தை ஜாக்கிரதையாகப் பாதுகாத்துக் கொண்டிருந்துவிட்டுச் சாம்பலான சுவர்களும்.

சுப்பிரமணிய ஐயர் மதுரையை நெருங்கியபோதே சேதி வந்து சேர்ந்து விட்டது. அங்கே தெற்காவணி மூலவீதியில் அவருடைய காரியஸ்தனாக, நானாதேசமும் புகையிலைச் சிப்பம் கொண்டு போக இருந்த ஊழியக்காரர் தாணுப்பிள்ளை ஊர் எல்லையிலேயே ஒரு நாள் முழுக்கக் குரிச்சி போட்டு உட்கார்ந்து இவருக்காகக் காத்திருந்தார். பின்னால் கொழும்புக் குடையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறவன் ஐயரைக் கண்டதும் குடையை விலக்கிக் குனிந்து சொல்ல, பரபரப்பாக எழுந்து நின்றார்.

பிள்ளைவாள், என்னத்துக்கோசரம் இந்தப் பொட்டல்காட்டுலே படைபடைக்கற வெய்யில்லே குடையும் பாதரட்சையும் சேவகனுமா உக்காந்திருக்கீர் ? நான் என்ன புதுசாவா மதுரைக்கு வரேன் ? வழி தெரியாதா எனக்கு ?

ஐயருக்கு உள்ளூரச் சந்தோஷம் இப்படி தனக்காக மரியாதை நிமித்தம் வந்து பழியாகக் காத்துக் கிடக்கிற உத்தியோகஸ்தன் இருப்பது பற்றி. மூக்குத் தூளும் கூடி வியாபாரம் அபிவிருத்தி ஆகும் பட்சத்தில் அந்தப் பொடித்த வஸ்து விற்க இந்தப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யவும் தாணுப் பிள்ளையே பிரதானமாக இருக்கட்டும்.

ஐயர் தன் அங்கீகாரம் முகத்தில் தெளிவாக எழுதியிருக்கச் சங்கரனைப் பார்க்க, அவன் முகத்தில் குழப்பம். பிள்ளையான் என்னத்துக்காக வழிமேல் விழி வைத்துத் தாசி வீட்டுத் திண்ணை மாமன் போல் குந்தியிருக்கிறான் ? வியாபாரத்தில் வந்த பணத்தை லேவாதேவிக்குக் கொடுத்து வைத்திருந்த கருப்பஞ்செட்டி அகாலமாக மரித்துப் போனானா ? அவனிடம் வட்டிக்கு வாங்கிப் போன கும்பினித் துரை கால் காசு பெறுமானமில்லாத துரைத்தன பாஷை அச்சடித்த பத்திரத்தை நீட்டிவிட்டுக் கப்பலேறிப் போய்விட்டானா ?

மாட்டு வண்டியின் ஆசுவாசமான அசைவிலும் நகரும் போது மெல்ல மேலே வந்து மோதிப்போன காற்றிலும் நாலு நாளாக அரசூரிலிருந்து அம்பலப்புழைக்கு அலைந்த களைப்பிலும் போதம் கெட்டு, தூரம் நிற்கப் போகிற வயதானபடியால் பலகீனப்பட்ட உடம்பில் அதீத ரத்தப் போக்கும் தளர்ச்சியுமாக வண்டிக்குள்ளே தலைக்குசரக் கட்டையை வைத்துக் கொண்டு ஒண்டியபடி படுத்திருந்த கல்யாணி அம்மாள் விழித்துக் கொண்டாள். ஐயரையும், சங்கரனையும் ஈன ஸ்வரத்தில் திரும்பத் திரும்ப அழைத்துப் பதில் வராமல் போக, எக்கி எழுந்து பார்த்தபோது வண்டிக் காரன் வேலி காத்தான் புதர் ஓரம் மூத்திரம் போகக் குத்த வைத்திருந்தது தெரிந்தது.

ராத்திரி முழுக்க உடம்பு உபாதையும் அசதியுமாகப் புரண்டு கிடந்து விடிகிற போது கொஞ்சம் கண்ணயர்ந்து எழுந்து உட்கார்ந்தால் இதைப் பார்த்துக் கொண்டா பொழுது விடியணும் ? விடிகிறதா ? பளீர் என்று முகத்தில் அறையும் காலை வெய்யில்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:51 pm

அவள் விழுந்து விடாமல் மெல்ல வண்டியின் குறுக்குப் பட்டையை இறுகப் பற்றிக் கொண்டு மரப்படியில் கிட்டத்தட்டப் புடவையைத் தழைத்துக் கொண்டு உட்கார்ந்து அங்கே இருந்து தரையில் கால் வைப்பதற்குள் நாலு யுகம் கழிந்தது போல் இருந்தது.

அவளுக்கும் மூத்திரம் போக வேண்டும். ஆனால் ஆண்பிள்ளை போல் கண்ட இடத்தில் கால் பரப்பி அதற்காக உட்கார முடியாது. இன்னும் எத்தனை நேரமோ, பல்லை அழுத்தக் கடித்துக் கொண்டு அவஸ்தையைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

வயிறும்,காலும் நீர் பிரியாததால் வீங்கி மினுமினுக்க, அவள் தட்டுத் தடுமாறித் தரையில் நடந்தபோது தாணுப் பிள்ளை நமஸ்காரம் சொன்னது மங்கலாகக் காதில் கேட்டது. இந்த மனுஷ்யனுடைய வீடு பக்கத்தில் இருக்கும் பட்சத்தில் அங்கே போய் கிரஹத்து ஸ்திரிகளை அவசரமாகக் குசலம் விசாரித்து விட்டு கொல்லைப் பக்கம் போய்விட வேண்டும்.

தாணுப் பிள்ளை முன்னால் நின்ற மூன்று பேர் முகத்தையும் ஒரு வினாடி பார்த்தார். எதையோ சொல்ல வாயெடுத்து அப்புறம் சொல்லலாம் என்பது போல் ஒத்திப் போட்டார்.

வீரா, சாமியையும் அம்மாவையும் சின்னச் சாமியையும் நம்ம குருத வண்டியிலே விரசா நம்ம வீட்டுக்கு இட்டுப் போ. நான் அவுஹ வண்டியிலே ஏறிட்டுப் பின்னாடியே வந்துடறேன்.

அவர், ஐயர் பதிலுக்குக் காத்திருக்காமல் விறுவிறுவென்று நடந்தார். பின்னால் குடையைப் பிடித்து நின்றவன் அதை ஐயருக்கும் மற்றவர்களுக்கும் பிடிக்கவா அல்லது மடக்கிக் கக்கத்தில் இடுக்கவா என்று தெரியாமல் நின்றபோது வீரன் என்ற சேவகன் சொன்னான்.

மாயளகு. அந்தக் குடையை முன்னாடி நீட்டிப் பிடிச்சுட்டு என் பக்கமா உக்காருடா. சாமிமாருக்கு மேலே வெய்யில் விழாம இருக்கும். வாடி வதங்கிப் போய் வந்திருக்காஹ பாவம்.

ஒரு பாய்ச்சலில் குதிரை வண்டி புழுதியைக் கிளப்பிக் கொண்டு விரைய, தாணுப் பிள்ளை வீட்டு ஸ்திரிகள் தன் குசல விசாரிப்புக்கு மெளனமாகத் தலையாட்ட, சங்கரனுக்குப் பெண்ணு பார்க்கப் போய் வந்த வைபவ விநோதம் பற்றி எல்லாம் ஏன் யாரும் ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லை என்று நினைத்தபடியே கொல்லையில் சங்கை தீர்த்து வந்தாள் கல்யாணி அம்மாள்.

உடனே கிணற்றில் நீர் மொண்டு குளித்து ஈர வஸ்திரத்தோடு உள்ளே பிரவேசித்த அவள் காதுகளில் ஓவென்று பெருஞ்சத்தமாகக் குரலெடுத்து அசங்கியமாக ஆண்பிள்ளை அழும் குரல் கேட்டது. சுப்பிரமணிய ஐயருடையதாக இருந்தது அது.

எப்போ ? எப்படி ஆச்சு ? ஏன் யாருமே தகவல் சொல்லலே ? தூர்த்தன் போல நான் குஷியும் கும்மாளமுமா அங்கே உட்கார்ந்திருக்க, இங்கே.

சோகம் எல்லாம் தேக்கி அலறும் இன்னொரு குரல் சங்கரனுடையது.

ஈர வஸ்திரம், மாரில் இறுகிக் கட்டியது, கணுக்காலுக்குக் கீழே தாரையாகப் புடவை நனைத்த தண்ணீர் ஓடித் தரையை நனைக்கிறது. தலையில் வேடு கட்டும் முன்னால் பாதி விரித்த காசித் துண்டு கண்ணில் விழுந்து மறைக்கிறது. நடக்க முடியாமல் கிறுகிறுத்துத் தலை சுற்றிக் கொண்டு வர, அன்னிய புருஷர் யாராரோ இருப்பதும் மனதில் உறைக்காமல் கல்யாணி அம்மாள் சாமா சாமிநாதா என்று அலறிக் கொண்டே அந்த முன்கட்டில் நுழைந்தாள். அவளுக்கு யாரும் சொல்லாமலேயே பட்டது சாமிநாதனுக்கு என்னமோ ஆகிவிட்டது என்று.

சாமா போய்ட்டாண்டி. சகலமும் போயாச்சு. குல நாசம்.

நிலை வாசல் படியருகே நின்றிருந்த சுப்பிரமணிய ஐயர் மாரில் அடித்துக் கொண்டு அழுதபடி அவளைப் பார்த்து இரண்டு எட்டு முன்னால் வைக்க, கல்யாணி அம்மாள் மயக்கமாகி அப்படியே கால்பரப்பி விழுந்தாள்.

தாணுப் பிள்ளை வீட்டு ஸ்திரிகள் தாங்களும் விம்மி அழுதபடி அவளைத் தொட்டெடுத்து சிஷ்ருசை செய்யப் புருஷர் எல்லாரும் வாசல் திண்ணைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.

இதற்கிடையே வாசலிலும் அண்டை அயலில் இருந்து பெருங்கூட்டமாகக் கூடிவிட்டார்கள். தாணுப்பிள்ளைக்கு எஜமான ஸ்தானத்தில் இருக்கிற அரசூர்ப் பார்ப்பானைப் பற்றி அவர்களுக்கும் தெரியும். போன வாரம் தான் அந்தப் பிராமணனும் குடும்பமும் மலையாளப் பிரதேசம் போகிற வழியில் ஒரு ராத்திரி மங்கம்மா சத்திரத்தில் தங்கியிருந்தபோது பிள்ளை பழ வர்க்கமும், மானாமதுரை மண் கூஜாக்களில் சுத்த ஜலமுமாக அவர்களை எதிர்கொள்ளப் போனது.

அந்தக் குடும்பம் சுபகாரியம் முடிந்து முந்தாநாள் இரவு திரும்பப் புறப்பட்டபோது அரசூரில் அவர்களின் வீடும் புத்தி ஸ்வாதீனமில்லாத புத்திரனும் தீப்பிடித்து எரிந்து சாம்பலாய்ப் போன சங்கதி எல்லாம் நேற்றுப் பகல் முதலே தெரியவந்து, தாங்கள் யாரும் சம்பந்தப்படாமலேயே விசனமும் துக்கமும் அடைந்திருந்த ஜனங்கள் அவர்கள் எல்லோரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:52 pm

சங்கரன் எல்லோரையும் பார்த்தபடி தூணைப் பிடித்தபடி நின்றிருந்தான்.

வீடு போயாச்சு. அண்ணாவும் போய்ச் சேர்ந்துட்டான். அந்தச் சங்கடத்திலும் சங்கரனுக்குக் கொஞ்சம் ஆசுவாசம். கருப்பஞ் செட்டியாரிடம் வட்டிக்கு மூலதனமாக முடக்கிய, அவர் கும்பினிக்காரனுக்குக் கடன் கொடுத்த பணம் எல்லாம் பத்திரம். வீட்டில் வைத்திருந்த புகையிலைச் சிப்பமும் ஒரு நறுக்கு மிச்சமில்லாமல் வெளியே அனுப்பிவைத்து விட்டதால் தொழில் வகையிலும் பாதகமில்லை.

வீட்டைத் திருப்பக் கட்ட எவ்வளவு பிடிக்குமோ ? அதை ஏன் எரிக்க வேணும் ? யார் எரித்திருப்பார்கள் ? புத்தி குழம்பிய சாமாவைத் தனியாக வைத்துவிட்டு எல்லோரும் வீட்டைத் திறந்து போட்டுவிட்டு வந்திருக்கக் கூடாதோ ?

இந்த ஐயணைக் கடன்காரனை அவன் கூடவே இருடா மூதேவின்னு படிச்சுப் படிச்சுச் சொல்லிட்டு வந்தேனே ? களவாணி கள்ளுக் குடிக்கப் போயிட்டானா இவன் வீட்டைக் கொளுத்த விட்டுட்டு ? என் போதாத காலம் இப்படி நான் போற வயசிலே புத்ர சோகத்துலே புலம்ப வச்சுட்டானே படுபாவி. அவன் விளங்குவானா ?

ஐயர் தன் விசுவாசம் மிக்க ஊழியனான ஐயணையை வைது தீர்த்தபடி தலையில் தலையில் அடித்துக் கொண்டபோது தாணுப் பிள்ளைக்குக் கஷ்டமாக இருந்தது.

சாமி, அந்தக் கிளவன் மேலே குத்தம் ஏதும் இருந்ததாத் தெரியலீங்க. ராத்திரி வீட்டு வாசல் திண்ணையிலே தான் படுத்துக் கிடந்திருக்கான் அவன். வெளியே இருந்து யாரோ பந்தம் கொளுத்தி வீசியிருக்காஹ. கந்தகத்தைக் கலந்து சுழத்தி எறிஞ்சது போல. ஐயணை மெத்தைப் படியேற முடியாம புகை. நெருப்பு. அவன் போய்ப் பார்க்கும்போது பெரிய சாமி உள்ளாற தாப்பாப் போட்டுட்டுச் சிரிச்சுட்டுக் கிடந்த சத்தம் கேட்டுச்சாம்.

ஐயணை தான் நேற்றுக் காலையில் தாணுப்பிள்ளையிடம் தாக்கல் சொல்லிப் போனது. போக வர ஒன்பது நாழிகை பிடிக்கிற தூரம் அரசூருக்கும் மதுரைக்கும். அறுபது கடந்த அந்தக் கிழவன் ஓட்டமும் நடையுமாகக் கால்நடையாகவே வந்து சொல்லி விட்டு ஒரு வாய்த் தண்ணீர் கூடக் கேட்டு வாங்கிக் குடிக்காமல் திரும்ப ஓடியிருக்கிறான்.

தாணுப் பிள்ளை வீட்டு ஸ்திரிகள் கல்யாணி அம்மாளை நாடி பிடித்துப் பார்க்க, மேலமாசி வீதி வைத்தியனைக் கூப்பிட ஆளனுப்பிக் கொண்டிருந்தபோது, சுப்பிரமணிய ஐயரும், சங்கரனும் தாணுப்பிள்ளையும் அண்டை அயல்காரர்களில் நாலைந்து பேரும் உடன் வர இரண்டு பெரிய வண்டிகளில் துரிதமாக அரசூரை நோக்கிக் கிளம்பினார்கள்.

அவளுக்கு மூர்ச்சை தெளிஞ்சதும் அவளை அவளை.

ஐயர் வார்த்தை வராமல் தடுமாற, அவர் கையைப் பிடித்து ஆதரவாக முன்னால் கூட்டிப் போய்க் கொண்டே தாணுப்பிள்ளை சொன்னார் -

சாமி, அம்மாவை நம்ம வீட்டுப் பொண்டுக நல்லாக் கவனிச்சுக்கும். கவலையே வேணாம். அவங்க பிரயாணப்பட செளகரியப்பட்டபோது அவங்களோட என் மாமனாரோ சகலையோ கூடத் துணைக்கு வர நம்ம பின்னாடியே கிளம்பி வந்துடலாம்.

பிள்ளைவாள். அம்மா எழுந்திருந்தாலும் சாமாவுக்கு உடம்பு ஸ்திதி கஷ்டமா இருக்குன்னு மட்டும் சொன்னாப் போதும்.

சங்கரன் வண்டியில் உட்கார்ந்தபடியே தாணுப்பிள்ளையிடம் சொல்ல, அவருக்குத் தெரியும்டா சங்கரா அதெல்லாம் என்றார் சுப்பிரமணிய ஐயர் மேல் வஸ்திரத்தால் கண்ணைத் துடைத்துக் கொண்டே.

கைமுதல் எல்லாம் போன, நிர்க்கதியான, கூலிக்குப் பிணம் தூக்கக் கோவில் மண்டபத்தில் காத்திருக்கும் தரித்திரப் பிராமணனாகத் தன்னைக் கற்பித்தபடியே சுப்பிரமணிய அய்யர் கொஞ்சம் கண் அசர, சங்கரன் மனதில் சந்தர்ப்ப சூழ்நிலை தெரியாமல் பகவதிக் குட்டி சலமேலரா பாடிக் கொண்டிருந்தாள். அந்த அம்பலப்புழை வீட்டு ஏலம், கிராம்பு வாசனையும் ஜமுக்காளத்தில் தெறித்த சந்தன வாடையும், பிச்சிப்பூ வாடையும் தீர்க்கமாகச் சூழ்ந்து நிற்க அரசூருக்குள் நுழைந்தார்கள்.

நீர்க்காவி ஏறின வெள்ளை வஸ்திரம் புதைத்த உடலுக்கு வெளியே கரிப்பிடித்த கால்களின் பக்கம் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த ஐயணை இவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்றான்.

சாமி, மோசம் போய்ட்டோம்.

அவன் அலறலில் அரசூரே அங்கே திரண்டு வந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:54 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் இருபத்தெட்டு


சாமிநாதனைக் கூட்டமாகப் போய் எரித்து விட்டுத் திரும்பி வந்தார்கள்.

இனிமேல் எரிப்பதற்கும் ஒன்றுமில்லை அவன் தேகத்தில். திரும்பி வரவும் இடம் எதுவும் இல்லை எரிக்கப் போனவர்களுக்கு.

வேதபாடசாலையை நிர்வகிக்கும் கனபாடிகள் அரண்மனைக்குப் போய் முறையிட்டு, ராஜா சத்திரத்துக்கு வேத பாடசாலையைத் தற்காலிகமாக இடம் மாற்றினார். முந்திய தலைமுறை ஜமீந்தார்கள் காலத்தில் ராமேசுவரம் போகிற யாத்ரீகர்கள் இடைவழியில் வந்து தங்கிப் போகிற சத்திரமாக இருந்தது அது. அரசூரைத் தொடத் தேவையில்லாமல் முள்ளுக்காட்டை வெட்டிச் சீர்திருத்தித் துரைத்தனத்தார் சாலை போட்ட படியால், சத்திரத்தில் யாத்ரீகர் வரவு குறைந்து போயிருந்த காலம். மானியம் கொடுப்பதிலும் துரைகள் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டதால், வந்த தடியன் போன தடியனுக்கு எல்லாம் வடித்துக் கொட்டிக் காசைக் கரியாக்காமல் ராஜா அதை அடைத்துப் பூட்டி வைத்திருந்தார்.

சகல ஜாதியாரும் ஸ்வாமியைப் பங்குனி உத்திரப் பத்து நாள் மண்டகப்படியில் தூக்கிச் சுமந்த தீட்டுப் போகக் கடைசி நாள் சைத்யோபசார மண்டகப்படியாகப் பிராமணர்கள் தீவட்டி பிடித்து, பல்லக்குச் சுமந்து, வேத கோஷம் முழங்க சுவாமி புறப்பாடு நடத்தும்போது மாத்திரம் அதைத் திறந்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தார் அவர்.

சுத்தப்படுத்தறதெல்லாம் சரிதான். பல்லக்கு முன்னாடி நாகசுரம் வாசிக்க மட்டும் என்னாத்துக்கு நடேசப் பண்டிதன் ? அதையும் அவனுகளே செய்ய வேண்டியதுதானே ?

ராஜா கூட இருக்கப்பட்டவர்களிடம் வேடிக்கை விநோதமாகச் சொன்னாலும் கடைசி நாள் மண்டகப்படிக்கு கனபாடிகளிடம் ராஜா சத்திரத்துச் சாவி வந்து சேர்ந்து விடும். இப்போது கனபாடிகளே அரண்மனைக்கு ஒரு நடை விரசாக நடந்து சாவியோடு வந்து சேர்ந்து தகனத்துக்குப் போனவர்கள் திரும்புவதற்குள் பாடசாலை வித்தியார்த்திகளைச் சத்திரத்துக்கு மாற்றி இருந்தார்.

ராமலட்சுமிப் பாட்டி எரியாத விறகோடும், சத்திரத்துக் கோட்டை அடுப்போடும் போராடி பாதியிருட்டில் சமைக்கத் தெப்பக்குளக் கரையில் அவசரமாகச் சந்தியாவந்தனம் முடித்து வந்த வித்தியார்த்திகள் ஒத்தாசை செய்தார்கள்.

கனபாடிகள் சொன்னபடிக்குக் கொஞ்சம் அதிகமாகவே சமைத்திருந்தாள் ராமலட்சுமிப் பாட்டி. வயோதிகத்தால் தளர்ந்த உடம்பு வழங்காவிட்டாலும், சுப்பிரமணிய ஐயர் குடும்பத் துக்கம் தணிய ஏதோ ஒரு வகையில் தன்னாலான ஒத்தாசை என்று அவள் சிரமம் பார்க்காமல் சமைத்து முடித்தபோது மசானத்துக்குப் போனவர்கள் குளித்துவிட்டு வருவதாக கனபாடிகள் வந்து சொன்னார்.

நாலைந்து பாடசாலை வித்தியார்த்திகள் சாதமும், கொட்டு ரசமும், புடலைக் கறியுமாகப் பெரிய வெங்கலப் பாத்திரங்களில் வாழை இலை வைத்து மூடி எடுத்துக் கொண்டு அவர்கள் காலி செய்திருந்த ஜாகைக்குப் போனார்கள்.

சாப்பாடும் வேணாம். மண்ணும் வேணாம். உசிரு இப்படியே போகப்படாதா ? என்று அரற்றியபடிக்குச் சுப்பிரமணிய ஐயர் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.

சங்கரனுக்கு நல்ல பசி. போனவன் என்னமோ போயாச்சு. நாம பட்டினி கிடந்தா வந்துடுவானா என்ன அந்தக் கிறுக்கன் ?

அவன் சோறும் கறியும் ரசமும் மோருமாகப் பகாசுரன் போல் சாப்பிட்டான். இந்த க்ஷணத்தில் சாப்பிடுவது தவிர வேறு காரியம் லோகத்தில் எதுவும் இல்லை. புகையிலைக் கடை, பகவதிக் குட்டி, மூக்குத் தூள் விற்கிறது, அவன் கல்யாணம், எரிந்து போன வீடு எல்லாமே எல்லாருமே காத்திருக்கட்டும்.

அவன் தரையில் ரசம் ஒழுக, வேஷ்டியில் சோற்றுப் பருக்கை விழுந்து சிதறச் சாப்பிட்டு முடித்தபோது சுப்பிரமணிய அய்யர் பாத்திரம் மூடிய இலையைத் தரையில் பரத்தி வெறுங்கையால் உள்ளே இருந்து அன்னத்தை அள்ளி எடுத்துப் பரத்திக் கொண்டு அப்படியே சாப்பிட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:55 pm

அப்பா, மோர் குத்திக்குங்கோ.

சங்கரன் கனிவோடு சொன்னபடி, புளித்த மோரைச் சாதத்தின் மேல் கவிழ்த்தான்.அது சிராங்காய் அளவு இலையில் விழுவதற்குள் போதும் என்று கையை மறித்து நிறுத்திவிட்டார் சுப்பிரமணிய அய்யர்.

அவர் மனதில் பிணந்தூக்கிப் பிராமணன் பலமாகக் கவிந்து கொண்டிருந்தான். சாப்பிட்டு விட்டுக் கையைத் தலைக்கு அணையாக வாசல் திண்ணையில் படுத்தால் நாளைக்கு எவனாவது எழுப்பி பொணம் தூக்க வாடா பிரம்மஹத்தி என்று கூட்டிப் போவான். அதெல்லாம் கருகிச் சாகாதவர்களின் பிணமாக இருக்கும். உயிர் போகும்போது முகத்தில் சின்னக் கீற்றாகவாவது கையெழுத்துப் போட்டுப் போயிருக்கும்.

தாணுப்பிள்ளையும் கூட வந்த மதுரைக்காரர்களும் இடுகாட்டில் இருந்து திரும்பித் தெப்பக்குளத்தில் குளித்ததுமே வண்டி கட்டிக் கொண்டு ஊருக்குத் திரும்பி விட்டார்கள்.

கல்யாணி அம்மாவைக் கவனித்துக் கொள்ளும்படியும், காலையில் அஸ்தி சேகரிப்பு ஆன பிறகு தான் மதுரை வந்து அவளைக் கூட்டிப் போவதாகவும் சங்கரன் சொல்லி அனுப்பினான்.

அம்மாவைப் பத்திக் கவலையொண்ணும் வேணாம். பிராமண போஜனமா அவுஹளுக்கு ஏற்பாடு பண்ணி உடம்பொறந்தவுஹ மாதிரி நம்ம வீட்டுப் பொம்பளைங்க கவனிச்சுக்கும். நீங்க பையப் பதறாம வந்து சேருங்க.

தாணுப்பிள்ளை சம்பிரதாயத்தை அனுசரித்துச் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிப் போனார்.

மீந்த சாதத்தையும் மற்றதையும் பாடசாலை வித்தியார்த்திகள் திருப்பி எடுத்துப்போன அப்புறம் சங்கரன் சாப்பிட்ட இடத்தை எச்சில் இட்டு மெழுகினான். கொல்லையில் மூத்திர நாற்றமும், கிணற்றுப் பக்கம் கொடியில் கோவணத் துணியும், துவைக்கிற கல்லின் கீழ் எருக்கஞ் செடியும், மாடப்பிறையில் வீபுதிச் சம்படமும் சமையல் கட்டில் பாதி உலர்ந்த பூசணிக்காய்ப் பத்தையுமாக வேத பாடசாலை திரும்பவும் கிரகஸ்தர்கள் வசிக்கிற வீடாக மாறப் பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருந்தது.

அவன் வாசலுக்குப் போகும்போது கூடத்திலேயே எச்சில் இட்ட இடத்துக்கு மேல் ஈரத்தில் கையை நீட்டி வெறுந்தரையில் சுப்பிரமணிய ஐயர் நித்திரை போயிருந்தார்.

புழுக்கமான ராத்திரி. அவன் திண்ணையில் வந்து உட்கார்ந்தபோது ஊர் அடங்கி இருந்தது. எழுந்து வெளிவாசலுக்குப் போனான்.

பேச வேணும். யார் கூடவாவது. ஐயணை வந்தாலும் சரிதான். கொட்டகுடித் தாசியாக, மாட்டைக் குப்புறத்திப் போட்டு லாடம் அடிக்கிறவனாக, மாடியிலிருந்து பார்த்தால் குளித்துக் கொண்டிருக்கிற ராணியாக யாராக இருந்தாலும் சரிதான்.

வயதாகிக் கொண்டிருக்கும் அந்த சுந்தரியை ஏன் இத்தனை நாள் மறந்து போனோம் என்று அவனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. பகவதிக் குட்டியின் வசீகரம் கொட்டகுடித் தாசியை, முலை தொங்க ஆரம்பித்த ராணியை எல்லாம் அடித்துப் போட்டது. தொங்கியே இருக்கட்டும், அவள் அடுத்தவன் பெண்டாட்டி இல்லையோடா கெட்ட பயலே என்று லாடம் அடிக்கிறவன் மாட்டுச் சாணத்தை அள்ளி சங்கரன் முகத்தில் அப்பியபடி சொன்னான். சாமிநாதனின் விந்துத் துளிகள் சங்கரனின் உதட்டில் பட்டன.

தூற ஆரம்பித்திருந்தது.

இன்னும் அதிகமாகிக் கொண்டிருக்கும் புழுக்கம். இப்படியே நடந்து போய் வீட்டைப் பார்த்து விட்டு வந்தால் என்ன என்று யோசித்தான் சங்கரன்.

அங்கே என்ன இருக்கிறது ? எரிந்து போன சுவரும், பாதிக்கு மேலே தகர்ந்து விழுந்த மேற்கூரையும். கூடத்தில் அந்த ஊஞ்சல் என்ன ஆனது ? ஆளோடியில் பாதரட்சை விடும் இடத்துக்கு நேர் மேலே சளைக்காமல் வலை பின்னிக் கொண்டிருக்கும் அழுக்குச் சிவப்புச் சிலந்திக்கு என்ன நேர்ந்தது ? கூடத்துச் சுவரில் வரலட்சுமி நோன்புக்கு வரைந்து வைத்த லட்சுமி முகத்துக்கு ? மாடியில் அந்தக் கைப்பிடிச் சுவருக்கு ?

தூறல் வலுத்தது. அவன் மெல்ல நடந்தான். நாற்சந்திக்கு வந்தபோது அவன் கால்கள் தாமாகவே அவனைக் கடைத் தெருவுக்கு இழுத்துப் போகப் பார்த்தன.

புடுங்கி வியாபாரம். கிடக்கட்டும் இன்னும் இரண்டு நாள். கடை அடைத்தே கிடக்கட்டும்.

அவன் அரண்மனைப் பக்கம் திரும்பினான். இருட்டில் அமிழ்ந்து கிடந்த அரண்மனையில் ஏதோ ஒரு சாளரத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது.

அந்த ராணி தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பாள். வயிறு பருத்த வயோதிக ராஜா கேட்டுக் கொண்டபடி விளக்கைப் போட்டுக் கொண்டே அவனுக்குச் சுகம் கொடுக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருப்பாள். சிரமத்துக்கு இடையே போகம் முடித்து, நாளைக்குக் குளிக்க ஸ்நானப் பொடி, தைலம், சீயக்காய் எல்லாம் சேவகர்கள் எடுத்து வைத்திருப்பார்களா என்று மேற்பார்வை செய்து கொண்டிருப்பாள்.

அவள் நாளைக்கு அரண்மனைக் குளத்தில் குளிக்கும்போது சங்கரன் கைப்பிடிச் சுவரைப் பிடித்து ஏறி எட்டிப் பார்க்க மாட்டான். யாருடைய பார்வையும் படாமல் அவள் சமாதானமாகக் குளித்துச் சிதிலமான குளப்படி ஏறிப் போகட்டும்.

சங்கரன் வீட்டு முன்னால் வந்து நின்றான். மழையின் தாரைகள் வலுத்து அவன் முகத்தில் அறைந்தன. எரிந்து கருத்த பாதிச் சுவர்கள் மேல் படிந்த மழை மின்னலில் அந்தக் கருமையை இன்னும் அழுத்தப் பதித்துக் காட்டியது.

என்னை நிர்க்கதியா விட்டுட்டுப் போய்ட்டேளேடா எல்லாரும் என்று அந்த வீடு இடிக்கு நடுவே குரல் எடுத்து அழுதபோது சங்கரனும் உடைந்து போனான்.

மந்திரத்தால் முடுக்கப்பட்ட பொம்மை போல் அவன் வீட்டுக்குள் நுழைந்தான். வாசல் கதவும் நிலையும் இல்லாமல் வயோதிகத் தாய் நோய் முற்றித் துணி நழுவி விழுந்து புத்ரன் பார்க்க நக்னமாகக் கிடந்தது போல் அந்த வீடு கிடந்தது.

சரி பண்ணுவேன். உடனே. இன்னும் ரெண்டு மாசத்துலே. பங்குனி உத்திரத்துக்குத் தேரோட்டம் வர்றதுக்குள்ளே. வடம் பிடிச்சு இழுக்கறவா வாசல்லே நிக்கறபோது இங்கே திரும்ப மரப் பலகை போட்டு நீர்மோரும் பானகமும் வினியோகம் செய்வேன். இங்கே இங்கேதான் பாதரட்சையை விட்டுட்டு உள்ளே போவேன். அந்தச் சிலந்தி நெருப்பிலே சுருண்டு எரிஞ்சு போனாப் போகட்டும். இன்னொண்ணு அங்கே சித்த மேலே வலை பின்னும். மாடியிலே சாமா பழுக்காத்தட்டைப் போடுவான்.

சாமா. சாமா இனிமே வரமாட்டான். அந்த சங்கீதம் எல்லாம் இனிமே இங்கேயோ வேறே எங்கேயோ உனக்குக் கிடையாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:56 pm

சங்கரன் அப்படி இருக்காது என்று தலையை ஆட்டிக் கொண்டான். இன்னொரு மின்னலில் மாடிப் படிக்கட்டுத் தெரிந்தது. அது எரிந்திருக்கவில்லை.

அவன் இருட்டில் தட்டுத் தடுமாறிப் படியேறும்போது வெளவால் வாடையும், வியர்வை வாடையுமாகச் சூழ்ந்து வந்தது. இது பெண்ணின் வியர்வை வாடை. சம்போகத்தில் வியர்த்து விறுவிறுத்து, உச்சபட்ச சந்தோஷம் அடைந்து, கொடுத்து, அக்குளிலும், மார்க்குவட்டிலும், நெற்றியிலும் வியர்வை ஆறாகப் பெருகக் கொண்டவனைத் தழுவிக் கிடக்கிறவள். மாமிசம் சாப்பிட்ட பெண். வெளவால் மாமிசம் சாப்பிட்டவள். மனுஷர்கள் வெளவாலைத் தின்னுவார்களோ ?

அந்த மாடிப்படி அந்தரத்தில் முடியாமல் நின்றது. மின்னலில் ஆகாசம் மேலே விரிந்து கிடந்ததைக் கொஞ்சம் போல் காட்டி இன்னும் இருக்கு நிறைய என்றது. மழை சுருதி பிசகாமல் பெய்து கொண்டிருந்தது.

சங்கரன் சொட்டச் சொட்ட நனைந்தபடி இறங்கும்போது கூடத்தில் ஈரமான ஜமுக்காளத்தில் உட்கார்ந்தபடி சலமேலரா பாடிக் கொண்டிருந்த பெண் நாணத்தோடு எழுந்து நின்றாள். பகவதிக் குட்டியா ? இல்லை இது வேறே யாரோ.

இப்படிப் பக்கத்துலே வந்து உட்காருடா சங்கரா.

ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்த சாமிநாதன் சொன்னான். அவன் மேல் ஒரு துளி ஜலம் இல்லாது சுக்குப் போல் உலர்ந்து இருந்தான்.

நன்னாப் பாடினேனா ?

அந்தப் பெண் கேட்டபடியே ஊஞ்சல் அருகே வந்தாள். பழைய கிணற்றுப் பாசி வாடை அவள் உடுப்பில் இருந்து சங்கரனின் மூக்கில் குத்தியது.

உக்காருடா சங்கரா. அவ உன் மன்னி, தெரியுமோ ?

சாமிநாதன் ஊஞ்சலை விந்தி விந்தி இன்னும் வேகம் கூட்டியபடி ஆட்டிக் கொண்டு சொன்னான்.

இப்படி ஆட்டினா என் கொழுந்தனார் எப்படி உக்காருவார் ?

அந்தப் பெண் கலகலவென்று சிரித்தாள்.

உன் மன்னி அழகா இல்லே நீ பாத்துட்டு வந்த பகவதிக்குட்டி அழகா ?

சாமிநாதன் அந்தப் பெண்ணை சங்கரன் பார்க்க இழுத்து அணைத்து முத்தம் இட்டு விட்டுக் கேட்டான்.

கொழுந்தனாருக்கு என்னமோ குளிக்கப் போற ராணிதான் அழகு. அவ வீட்டையே கொளுத்திப் போட்டாலும்.

அந்தப் பெண் உதட்டைத் துடைத்துக் கொண்டே சொன்னாள்.

தப்புடா. மகா தப்பு. விவாகம் ஆன ஸ்திரியை ஒளிஞ்சு நின்னு அர்த்த நக்னையாப் பார்க்கறது தப்புன்னு எதோ கிரந்தத்திலே எவனோ மயிராண்டி எழுதி வச்சுருக்காண்டா.

சாமிநாதன் முகத்தை வேண்டுமென்றே கடுமையாக வைத்துக் கொண்டு சொன்னான்.

அப்ப, தெவசச் சோத்துக்குப் பிரேத ரூபமா இறங்கி வந்தவளைப் படுக்க வைக்கறது நியாயமா ?

அவள் சாமிநாதனின் அரையில் கையால் வருட, சங்கரன் சுவரைப் பார்க்கத் திரும்பிக் கொண்டான்.

பாருடா சங்கரா, இவளுக்கு ஊஞ்சல்லேயே அனுபவிக்கணுமாம். அதுவும் ஆடிண்டே. ஊஞ்சல் அதுக்கா இருக்கு ? லண்டி மிண்டை, ஊஞ்சல அத்தனை வேகமா ஆட்டினா கூடச் சுவத்திலே இடிக்கறது பாருடி. வரலட்சுமி நோம்புக்கு வரஞ்சு வச்ச அம்மன் பார்க்கிறா.

பாக்கட்டுமே. கொழுந்தனாரும் தான்.

சங்கரன் வெளியே ஓடினான். பின்னால் ஊஞ்சல் சத்தம் மழை இரைச்சலை மீறிக் கேட்டுக் கொண்டே இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:57 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் இருபத்தொன்பது


விடிகாலையிலேயே வந்துவிடுவான் என்று சொன்னார்கள்.ராஜா காத்துக் கொண்டிருக்கிறார். எழவெடுப்பான் வரும் வழியாகக் காணோம் இன்னும்.

நடுச் சாமத்திலிருந்து தூக்கம் போனது ராஜாவுக்கு. ராணியோடு சீமை தேசங்களிலெதிலோ யாத்திரையாகிறது போல சொப்பனம். தழையத் தழைய உடுத்த துரைகளும் துரைசானிகளும் சாரட்டிலேறிச் சடுதியில் போய்க் கொண்டிருக்கிறார்கள். வீதி முழுக்க உப்பைக் கொட்டி வைத்தது போல் பனி உறைந்து கிடக்கிறது. ஆனாலும் குளிரவில்லை.

நடந்து போகிற மாதிரி யாரையும் இங்கே காணோமே.

ராஜா முணுமுணுக்கும்போது கிழட்டு வெள்ளைக்காரன் ஒருத்தன் கண்ணை மறைக்கும் தொப்பியும் நீளச் சராயும் காலில் தோல் பாதரட்சையுமாக எதிரே வருகிறான்.

சாமி தரும தொரெ.

ராணி உரக்கக் கூவுகிறாள். ராஜா பயபக்தியோடு முன்னால் நீட்டிய மூத்திரச் சட்டியில் வெள்ளைக்காரன் ஒரு தம்பிடி போட்டுவிட்டு நாற்றமடிக்கிறது என்று முகத்தைச் சுளித்தபடி போகிறான்.

தேகம் விதிர்த்து நடுங்கக் கண் விழித்தார் ராஜா. அப்போது கலைந்து போன தூக்கம் போனது தான். அதையும் இதையும் யோசித்துக் கொண்டு வாசலுக்கும் முற்றத்துக்கும் உலாவிக் கொண்டிருந்தார் மீதி ராத்திரி முழுக்க அவர்.

வாரிசு இல்லாமல் போனதைக் காரணம் காட்டிப் பெரிய சமஸ்தானங்களை எல்லாம் துரைத்தனத்தார் பிடுங்கிக் கொண்டு தம்பிடி கொடுக்காமல் அந்தப்புரத்து ஸ்திரிகளைத் தெருவில் துரத்தி விட்டதாக வடக்கு தேசத்திலிருந்து தகவல் வந்த மணியமாயிருக்கிறது.

இன்னும் காபூல் என்று ஒரு பட்டணம். அங்கே இருந்து கற்கண்டாகத் தித்திக்கும் உலர்ந்த திராட்சை வரத்து உண்டு என்பது ராஜாவுக்குத் தெரியும். யாராவது எப்போதாவது காணிக்கை வைக்கிற வழக்கம் உண்டுதான். அந்தப் பட்டணத்திற்குப் மலைப்பாதை வழியாகப் படை நடத்திப் போன துரைத்தனத்தார் பத்தாயிரம் இருபதாயிரம் கணக்கில் உயிர்ச் சேதமாகிக் குற்றுயிரும் குலையுயிருமாகத் திரும்பி வந்திருப்பதாகவும் அங்கே கோட்டை விட்டதை எல்லாம் தெற்குத் தேசத்தில் வாரிச் சுருட்ட முஸ்தீபோடு கிளம்பி இருக்கிறார்கள் என்றும் கூடத் தகவல்.

வரப் போகிற துரை ராஜாவுக்கு சந்ததி விருத்தியாக இன்னும் தேகத்தில் பெலமிருக்கிறதா என்று பரிசோதித்துப் போக வந்திருக்கிறானா இல்லை கஜானாவில் இருந்து எதையாவது அதிகாரமாகப் பிடுங்கி எடுத்துக் கொண்டு போகக் கிளம்பியவனா என்று தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் இவன் வரவு உபத்திரமானதாகவே பட்டது ராஜாவுக்கு. ஆனாலும் என்ன செய்ய முடியும் ? வரேன் என்றால் வராதே என்று ஓலை அனுப முடியுமா ? அதுவும் மானியம் அளக்கிற ராஜதானிப் பிரபுவின் பாத்யைக்குட்பட்ட ஊழியனுக்கு ?

அதுதான் இப்படிக் காத்திருக்க வேண்டிப் போனது.

இதோ வந்தாச்சு என்று கண்ணைச் சுழற்றுகிறது தூக்கம். அடைப்பக்காரன் உருட்டித் தரும் லேகிய உருண்டை இல்லாமலேயே நிதானம் ஒழிந்துபோய் மேலே மிதக்கிறது போல் ஒரு நினைப்பு. காலையில் கழிவு சரியாக வெளிக்கு இறங்காமல் மல பந்தமாகி வயிறு நோகிறது. அது தரைக்குப் பிடித்து இழுக்கிறது உடம்பையும் மனதையும்.

என்ன தேகமடா இது ? ராஜாவுக்குச் சொல்ல முடியாத கோபம் ஏற்பட்டது. ஒரு நாள் காலைக் கிரியை கழிக்க முடியாமல் போனால் குடி முழுகிப் போனது போல் ஒரு தளர்ச்சி. எரிச்சல். எதையும் எதிர் கொள்ள முடியாத நடுக்கம். தீனியில் தீவிரமாக இல்லாமல், வைத்தியன் சொல்வது போல் மூணு வேளையும் கீரையும், மிளகுத் தண்ணீரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் இந்தத் தொல்லை எல்லாம் இருக்காது. மூணு வேளையும் கீரை சாப்பிடுகிற மகாராஜா இந்தப் பூவுலகத்தில் எங்கேயேனும் இருக்கானா என்ன ? இருந்தால் அவனுக்குப் பசுமாடு போல் மூஞ்சியும் குதமும் ஆகிப் போயிருக்கும்.

சமையல்காரனிடம் இன்னொரு கரண்டி வல்லாரை லேகியமும், நாக்கைப் பொத்துப் போக வைக்கும் சூடுமாக வென்னீரும் கொண்டு வரச் சொல்லலாமா என்று யோசித்தார் ராஜா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:58 pm

துரை சட்டமாக வந்து இறங்கும் நாளிலேயா இப்படி திரேகம் ஒத்துழைக்காமல் உசிரெடுக்க வேணும் ?

இந்த ஆடி மாதம் பிறந்ததிலிருந்தே இப்படித்தான் இருக்கிறது. எல்லாம் அந்தப் புகையிலைக்காரப் பார்ப்பான் வீட்டில் தீப்பிடித்து எரிந்து போனதில் தொடங்கியது. அதற்கு அப்புறம் இரண்டு நாளுக்கு ஒருமுறை மலபந்தம், நீர்க்கடுப்பு அப்புறம் மார்ச்சளி என்று உடம்பு தொடர்ந்து படுத்திப் போடுகிறது.

அய்யன் சாபம் கொடுத்திருப்பானோ ? வீட்டோடு வெந்து கருகிய அந்தப் பிராமணப் பிள்ளை ? அவன் ஏன் ராஜாவை சபிக்க வேண்டும் ? அதுவும் கிரமமாக மலம் கழியாது போக வேண்டி.

புகையிலைக் கடைக்காரர்களின் வீடு தீயோடு போனதற்கு ராஜா காரணம் என்று யாரும் நினைக்கவில்லைதான். ஊரிலும் பேச்சு அந்தத் தரத்திலேயே அடிபடுவதாகக் காரியஸ்தன் வந்து சொன்னான். கடைத் தெருவிலும், அய்யன் சாமி கோவில் பிரகாரத்திலும் குடியானவத் தெருவிலும் எல்லாம் பேசிக் கொள்வது இந்த ராஜா மனுஷன் இவ்வளவு பக்கத்தில் இருந்தும் நெருப்பை அணைக்க ஒரு துரும்பையும் நகர்த்தி அப்பால் போடவில்லையே என்ற பிரஸ்தாபமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.

ஆனாலும் புகையிலைப் பார்ப்பான் வீடு பற்றி எரிந்தது குறித்து அக்கிரகாரத்தில் சந்தோஷம் நிலவுவதாகவும் தெரியவந்தது. கண்ட கருமாந்தரத்தையும் வித்துக் காசை அள்ளிக் குவிச்சான். சீமந்த புத்திரனும் சீமை ஓடு போட்ட வீடுமா எல்லாம் நாசமாப் போச்சா. போகட்டும் என்னை விட்டா உண்டோன்னு பிருஷ்டம் பெருத்து நடந்தானே. பகவானே பார்த்து நீ இம்புட்டுத்தாண்டான்னுட்டார்.

இப்படிப் பேச்சு அங்கே அடிபட்டதாக அந்தக் கொச்சையை முடிந்தவரை அபிநயித்துக் காரியஸ்தன் சொன்னபோது ராஜாவுக்கு அவன் மேல் முழு நம்பிக்கை வராவிட்டாலும் இரண்டு வசவைப் பொதுவாக உதிர்த்தர். அவருக்கு என்னமோ புகையிலை அய்யன் மேல் பரிதாபம் ஏற்பட்டது.

ஜீவனோபாயமாக அவனவன் ஏதேதோ செய்து பிழைக்க வேண்டியிருக்கிற காலமில்லையா இது. நம்மைத்தான் ராஜா என்றோ, ஜமீந்தார் என்றோ நாமகரணம் செய்து இங்கே பெருச்சாளி குழி பறிக்கும் பழைய அரண்மனையில் வெறுந்தடியனாக உட்கார வைத்துவிட்டது தலைவிதி. கொட்டகுடித் தாசிக்குக் கூத்தும் பாட்டும், அண்ணாசாமி அய்யங்காருக்குச் சோழி உருட்டி ஜோசியமும், அடைப்பக்காரனுக்கு எச்சில் படிக்கம் ஏந்துவதும், இந்த அய்யனுக்கு நாற்றப் புகையிலை விற்கவுமாக நாலு காசு சம்பாதித்துக் குடும்பம் நடத்தி பந்து மித்திரர்களை சம்ரட்சிக்க வாய்த்திருக்கிறது. ராஜா போல் மூத்திரப் பாத்திரத்தில் போட்ட பிச்சைக் காசாக எத்தனை சல்லி துரைத்தனத்துப் பணம் வருமென்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்க வேண்டிய புடுங்கி உத்தியோகம் இல்லை அதெல்லாம்.

ஊரில் வரியும் கிஸ்தியும் வசூலிக்கிற அதிகாரத்தையும் விடாமல் பிடுங்கிக் கொண்டு போனார்கள் வெள்ளைக்காரத் தாயோளிகள். கண்மாய்க் கரைப் பொட்டல்காட்டில் குத்த வைக்கிறவர்களுக்கு ஒரு சல்லி வரி விதித்தால் கூட ராஜா நிம்மதியாக சாப்பிட முடியும். விட்டால்தானே ?

மூணு நாள் முன்பு காரியஸ்தன் துரைத்தனத்து லிகிதத்தோடு மத்தியானப் போஜன வேளையில் நுழைந்தபோதே சாப்பாட்டில் புத்தி போகவில்லை. இத்தனைக்கும் வெகு ருசியாகக் கருவாட்டுக் குழம்பு வைத்திருந்தான் சமையல்காரன்.

என்ன சமாச்சாரம் எழுதியிருக்கிறான் துரை ? அவனுக்கு விதைக்கொட்டை இறங்கிப்போய் அதை உயர்த்திப் பிடிக்க வரச்சொல்லி இருக்கிறானா ?

ராஜா உரைத்த நாக்கிலே நெய்யை ஏகத்துக்கு அடக்கிக் கொண்டே பார்வையால் விசாரித்தார்.

அதெல்லாம் இல்லையாம். துரைத்தனத்து உத்தியோகஸ்தன் ஒருத்தன் இங்கே மேற்பார்வைக்கு வரப்போகிறானாம்.

மேற்பார்வைக்கும் கீழ்ப்பார்வைக்கும் அரசூர் அரண்மனையில் என்ன இருக்கு ? நானே சிங்கியடித்துக் கொண்டிருக்கிறேன். நேரம் கெட்ட நேரத்தில் புஸ்தி மீசைக் கிழவன் வேறே போய்ச் சேர்ந்து சகலருக்கும் தெண்டம் அழுதாகி விட்டது.

அதிலும் அந்த ஜோசியக்கார அய்யன் வகையில் இரண்டு வராகன் ஒரு பிரயோசனமுமின்றிப் போனது. பட்டுக் கோவணமும், ஜாதிபத்திரியும் கொண்டு போய் மாமனாரைக் கரையேற்று என்று சொன்னதற்கு ஒன்றும், பக்கத்து வீட்டில் இருந்து வந்து நம்முடைய பெரிசுக்களோடு பழகிக் கொண்டிருக்கும் பாப்பாத்தியம்மாளின் பிசாசையோ வேறு எந்த இழவையோ எல்லை தாண்டி வராமல் நிறுத்திப்போட இன்னொன்றுமாக அவன் ஏதோ தந்திர வார்த்தை சொல்லிப் பிடுங்கிப் போய்விட்டான்.

யந்திரம் செய்து அரண்மனைத் தோட்டத்தில் நிறுத்தப் போகிறானாம். என்னத்துக்கு அதெல்லாம் இனிமேல் ? வாங்கின காசுக்கு ஜோசியக் கார அய்யனையே நித்தியப்படிக்கு வந்து ஒற்றைக் காலில் அங்கே நாள் முழுக்க நிற்கச் சொல்லலாம்.

அந்த அய்யன் எக்கேடும் கெட்டுப் போகட்டும். கணக்கு வழக்கெல்லாம் கொண்டா என்று கேட்டுப் பிடுங்கியெடுப்பான் வரப் போகிற கிழங்குத் துரை. அவனை எங்கே நிறுத்த?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:59 pm

துரை தான் வருகிறானோ இல்லை துபாஷி அய்யன் அவனுக்குப் பதிலாக வந்து நிற்பானோ ? அதென்னமோ துரைத்தனமும் அய்யமாரும் நெருங்கிவிட்டார்கள். மற்றக் கருப்பனை எல்லாம் அண்ட விடாமல் விரட்டி அடிக்கிற துரைகள் இவர்களை ஒரு அடி இடைவெளியில் இருந்து தண்டனிட அனுமதித்திருக்கிறார்கள். சிவப்புத் தோல் என்றால் இன்னும் விசேஷம். வெள்ளைக்காரன் காலைத் தொட்டுத் தொட்டுக் கும்பிட்டு சதா அவிடமே விழுந்து கிடக்கச் சம்பளமும் சலுகையும் உண்டாம்.

அடே மூடா பழைய துரைக்குப் பின்னால் துடைத்துவிட்டு ஊழியம் செய்த மயிரான் பட்டணக்கரைக்கு வெகு அருகே, ஜீவநாடி ஒடுங்கி, போகிற நாளை எதிர்பார்த்துக் கொண்டு பெரிய வளைவில் சாய்வு நாற்காலியே கெதியாகச் சுக்கு வென்னீரோடு கிடக்கிறதும் அவனுடைய சந்ததியினர் மூக்குத் தூள்கடை வைத்து ஊரெல்லாம் பிரக்யாதியும், தெருவுக்கு ஒரு கூத்தியுமாயிருக்கிறதும் தெரியாதோ ?

முன்னோர்கள். ராஜாவின் மர நாற்காலிக்கு இரண்டு பக்கமும் வந்து நின்றார்கள். பொழுது போகாமல் இறங்கி வந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருக்க எல்லோருக்கும் ஒருமித்த விருப்பம் இருப்பதாகத் தெரிந்தது.

சரி இப்ப என்ன அதுக்கு ? அவன் இல்லாவிட்டால் உச்சிக் குடுமியும் காதிலே வைரக் கடுக்கனுமாக இன்னொரு துபாஷி.

ராஜா எங்கேயோ பார்த்துக் கொண்டு முணுமுணுத்தார்.

துரை வரும்போது இவர்கள் என்னத்துக்குத் தொந்தரவாக ? அவன் ஏதாவது எக்குத்தப்பாகக் கேட்டு மண்டி போடச் சொன்னால் ராஜா வயிறு நோகக் குனியும்போது இவர்களால் ஒரு உபகாரமும் செய்ய முடியாது. வேடிக்கை பார்ப்பார்கள். அமாவாசைக்கு சாராயம் ஊற்றச் சொல்லுவார்கள்.

அதெல்லாம் ஒரு பிரியத்துலே கேக்கறதப்பா, இப்ப நீ ஏன் இப்படிப் பயந்து பயந்து சாகிறே ? நீ தான் ஒரு தப்பும் பண்ணலியே.

புஸ்தி மீசைக் கிழவன் முன்னால் வந்து கேட்டான். இரண்டு மணிக்கட்டிலும் மல்லிகைப்பூச் சுற்றிக் கொண்டு சதிராட்டம் காணப் புறப்பட்டவன் போல் இருந்தான் அவன். முகத்தில் நிம்மதியும் சந்தோஷமுமாக இருந்த அவனைப் பார்த்தபோது ராஜாவுக்குப் பொறாமையாக இருந்தது. இவன் சுகமாக மலம் கழித்திருப்பானோ ?

அதெல்லாம் உன்னய மாதிரி நாறப் பயபுள்ளைங்களுக்குத்தான். எங்களுக்கு எந்த நோக்காடும் வராது.

புஸ்திமீசையான் கோபப்படாமல் சிரித்தான்.

மருதையனை உக்காத்தி வச்சு எடுத்தானுகளே அந்தக் களவாணிப் பசங்க. வந்துடுச்சா படம் எல்லாம் ?

இன்னொரு பெரிசு கேட்டது.

என்ன கோலாகலமா நாக்காலியிலே கட்டி வச்சபடிக்கு இருந்தே மருதையா. காணக் கண் கோடி போதாதே.

வேறு யாரோ சொல்ல எல்லோரும் கூட்டமாகச் சிரிக்கும் சத்தம். புஸ்திமீசைக் கிழவன் புதுப் பெண் போல் நாணிக் கூட்டத்துக்குப் பின்னால் போய்விட்டான்.

எங்கேயோ இருந்து ஒரு வெளவால் பறந்து வந்து ராஜாவின் மாரில் மோதி அப்புறம் சுவரிலும் மோதியது. அது தரையில் விழுந்து துடித்தபோது முன்னோர்கள் மெளனமாக இருந்தார்கள்.

இதுக்கும் சிரியுங்கோ. எல்லோரும் சிரியுங்கோ. வீட்டோட எரிச்சாச்சு இல்லே.

இந்தப் பெண்ணை ராஜா பார்த்ததில்லை இதற்கு முன். ஒற்றைநாடியாக நெடுநெடுவென்று மாநிறமும் முகத்தில் தீட்சண்யமுமாக யாரவள் ?

பாப்பாத்தியம்மா என்னமோ நடந்தது நடந்து போச்சு. நம்ம குளந்தைக்கும் புத்தி போயிருக்க வேணாம்தான். நாங்க வேணுமானா மன்னாப்புக் கேட்டுக்கறோம்.

முன்னால் பேசிய முப்பாட்டன் அவளைத் தெண்டனிட்டு நமஸ்கரித்துச் சொன்னான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:00 pm

ஐயோ நீங்கள்ளாம் பெரியவா. எனக்கு நமஸ்காரம் பண்றதாவது. நான் பீடை. அசுத்த வஸ்து. எல்லாம் பறிகொடுத்துட்டு நிக்கறவ. சாமாவையும் கூட்டிண்டு போய்ட்டா.

யாரு மாமா இந்தம்மா ?

ராஜா புஸ்தி மீசைக் கிழவனைக் கேட்டார். இது சுவாரசியமான ஏதோ விவகாரம் என்று மனம் சொன்னாலும், துரை வரும் நேரத்தில் இந்தக் கூத்தெல்லாம் என்னத்துக்கு என்று தோன்றியது.

நீ பழுக்காத் தட்டுப் பாட்டுக் கேப்பியே. அந்த அய்யரு சம்சாரம்.

பெரியவா கோபிச்சுக்கப்படாது. நீங்க சொன்னது கோர்வையா இல்லே.

அந்தப் பெண் ராஜா பக்கத்தில் வந்தாள். ராஜா தன்னை அறியாமல் எழுந்து நின்றார்.

உமக்குப் பிடிச்ச சங்கீதம். தினசரி பக்கத்து வீட்டுலேருந்து வருதான்னு காத்துண்டிருப்பேளே ? நூதன வாகனத்திலே ஜோடியா வர மனுஷா கொடுத்துட்டுப் போன பழுக்காத்தட்டுலேருந்து வர்ற சங்கீதம்.

ஆமா. அதெக் கேட்டே எத்தனை காலமாகிப் போனது ?

அமாவாசைக்கு அடுத்த திரிதியை. அது போய்ப் பவுர்ணமி கழிஞ்சு இன்னிக்கு அஷ்டமி. இருபத்துரெண்டு நாள்.

பாப்பாத்தியம்மாள் கணக்குச் சுத்தமாக ஜோசியக்கார அய்யர் மாதிரிச் சொன்னாள்.

சாமா வச்ச சங்கீதம் அது.

அவள் அழ ஆரம்பித்தாள். ராஜாவுக்கு வயிறு இளகிக் கொண்டிருந்தது. இந்த வர்த்தமானம் அப்படியே இருக்கக் கொல்லைக்கு ஒரு நடை போக வேண்டியதுதான்.

உங்க வீட்டு அய்யரு எங்கே ?

புஸ்தி மீசைக் கிழவன் வம்பு விசாரித்தபோது ராஜா சந்தோஷமாக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டார்.

அவாத்துக்காரா மந்திரம் சொல்லிப் பிண்டம் பிடிச்சு வச்சு அவனைப் பெரியவாளோடு கலக்க வச்சுட்டா. நான் மட்டும் இன்னும் அநாதையா அலைஞ்சுண்டு இருக்கேன். அங்கே போனா விரட்டறா. எங்கப்பாவும் அண்ணாவுமே போடி போடின்னு அனுப்பியாறது. இங்கே வந்தா சாமாவும் கிடையாது.

பெரிய கூட்டமாக யாரோ வந்து கொண்டிருந்ததை முதுகுக்குப் பின் உணர்ந்தபடி ராஜா வேட்டியைத் தழைத்துக் கொண்டு கொண்டு நடந்தார்.

சாமா சாமா நில்லு நானும் வரேன்.

இன்னிக்கு இவனுக்கு மாசியம். அதான் கூட்டிண்டு போறோம். நீ அங்கெல்லாம் வரப்படாது. பிரஷ்டை. போயிடு.

ஒரு பெரிய அலையாக மந்திர உச்சாடனம் கேட்க ஆரம்பித்தபோது ராஜா சந்தோஷமாக மலம் கழித்துக் கொண்டிருந்தார்.

காதில் விழுந்து நகர்ந்துபோன சத்தத்தை அவர் கிரகிக்கவில்லை. வெள்ளைக்காரன் என்ன அவனுடைய வைப்பாட்டி மகன் வந்தாலும் அவர் இன்றைக்கு நின்று சமாளிப்பார். உடம்பு சொன்னபடி கேட்கப் போகிறது.

தொரே. தொரே.

காரியஸ்தனின் குரலில் அவசரம் தெரிந்தது.

என்ன ?

ராஜா உள்ளேயிருந்தபடியே கேட்டார்.

ஊருக்கு மூணு காதத்துலே வந்துட்டிருக்காங்களாம்.

அந்த இருப்பு வாளியிலே தண்ணியிருக்கான்னு பார்த்து உள்ளே நகர்த்தி வச்சுட்டுப் போ.

ராஜா கம்பீரமாகச் சொன்னார்.

Sponsored content

PostSponsored content



Page 9 of 17 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக