|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!by முரளிராஜா Today at 1:16 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by eelamaran Today at 1:02 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!
First topic message reminder :
தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளாடு முந்தோன்றிய மூத்தக் குடியினர்" எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தகைய மக்கள் பேசிய மொழியே தமிழ்மொழியாகும்.
உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் "தமிழ் மொழியே உலக முதன் மொழி" எனக் கூறுவர். இன்னும் சிலர் ' இலத்தின்', 'கிரிக்' மொழிகளுக்கு முந்திய மொழி எனக் கூறுவர்.
முற்காலத்திய சீன யாத்திரிகர் திரு. யுவாங் சுவாங் முதல் பிற்காலத்தில் ஜி.யு.போப், ரோபட் கால்வெல் முதலான வேற்று நாட்டினர்; வேற்று மதத்தினர்; வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றிப் பாராட்டப்படுகிறது.
1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் மலாயாவை, கெடாவை, சயாமை (தாய்லாந்து) கைப்பற்றி ஆண்ட செய்திகளும், முதலாம் குலோத்துக்க மன்னன் பர்மாவை ( மியன்மார்) ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட செய்தியும் இலக்கியங்கள்-வரலாறுகள் - கல்வெட்டுகள் ஆகியவற்றின் வழி அறியப்படுகின்ற உண்மைகளாகும்.
2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ்ப் பெயர்கள் காணப்படுகின்றன.
2300 ஆண்டுகளுக்கு முந்தைய சில பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன.
2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் "நற்றிணை" என்னும் இலக்கண நூல் தோன்றியிருக்கிறது.
2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்களில் தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ்நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டுசென்று தமிழில் விலைபேசி விற்று வந்திருக்கின்றனர். அப்பொருட்களுக்கு இன்றளவும் தமிழ்ச்சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி -"ரைஸ்", மயில் தோகை - "டோ-கை", சந்தனம் - "சாண்டல்", தேக்கு -"டீக்கு", கட்டுமரம்- "கட்டமாரன்", இஞ்சி - "ஜிஞ்சர்", ஓலை - "ஒல்லா", கயிறு - " காயார்" என வழங்கி வருகின்றன. இத்தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்சு, ஆங்கிலம் அகராதிகளில் இடம்பெற்றுள்ளன.
3000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூலான தொல்காப்பியமும் இன்றும் நம்மிடையே உள்ளது. அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதை தொல்காப்பியமே கூறுகின்றது.
தமிழ் மக்களின் தாயகமான குமரிநாட்டில் மூன்று கடற்கோள்கள்(சுனாமி) 3000ஆம், 5000ஆம், 9000ஆம், ஆண்டுகளில் நடந்துள்ளன. இந்தப் பேரிடரில் கடல்நீர் நாட்டிற்குள் புகுந்து நிலப்பரப்பையும் மக்களயும், தமிழ் செல்வங்களையும் அழித்துவிட்டன.
தமிழியல் ஆய்வுக் கழகம்!
தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளாடு முந்தோன்றிய மூத்தக் குடியினர்" எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தகைய மக்கள் பேசிய மொழியே தமிழ்மொழியாகும்.
உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் "தமிழ் மொழியே உலக முதன் மொழி" எனக் கூறுவர். இன்னும் சிலர் ' இலத்தின்', 'கிரிக்' மொழிகளுக்கு முந்திய மொழி எனக் கூறுவர்.
முற்காலத்திய சீன யாத்திரிகர் திரு. யுவாங் சுவாங் முதல் பிற்காலத்தில் ஜி.யு.போப், ரோபட் கால்வெல் முதலான வேற்று நாட்டினர்; வேற்று மதத்தினர்; வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றிப் பாராட்டப்படுகிறது.
1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் மலாயாவை, கெடாவை, சயாமை (தாய்லாந்து) கைப்பற்றி ஆண்ட செய்திகளும், முதலாம் குலோத்துக்க மன்னன் பர்மாவை ( மியன்மார்) ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட செய்தியும் இலக்கியங்கள்-வரலாறுகள் - கல்வெட்டுகள் ஆகியவற்றின் வழி அறியப்படுகின்ற உண்மைகளாகும்.
2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ்ப் பெயர்கள் காணப்படுகின்றன.
2300 ஆண்டுகளுக்கு முந்தைய சில பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன.
2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் "நற்றிணை" என்னும் இலக்கண நூல் தோன்றியிருக்கிறது.
2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்களில் தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ்நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டுசென்று தமிழில் விலைபேசி விற்று வந்திருக்கின்றனர். அப்பொருட்களுக்கு இன்றளவும் தமிழ்ச்சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி -"ரைஸ்", மயில் தோகை - "டோ-கை", சந்தனம் - "சாண்டல்", தேக்கு -"டீக்கு", கட்டுமரம்- "கட்டமாரன்", இஞ்சி - "ஜிஞ்சர்", ஓலை - "ஒல்லா", கயிறு - " காயார்" என வழங்கி வருகின்றன. இத்தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்சு, ஆங்கிலம் அகராதிகளில் இடம்பெற்றுள்ளன.
3000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூலான தொல்காப்பியமும் இன்றும் நம்மிடையே உள்ளது. அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதை தொல்காப்பியமே கூறுகின்றது.
தமிழ் மக்களின் தாயகமான குமரிநாட்டில் மூன்று கடற்கோள்கள்(சுனாமி) 3000ஆம், 5000ஆம், 9000ஆம், ஆண்டுகளில் நடந்துள்ளன. இந்தப் பேரிடரில் கடல்நீர் நாட்டிற்குள் புகுந்து நிலப்பரப்பையும் மக்களயும், தமிழ் செல்வங்களையும் அழித்துவிட்டன.
தமிழியல் ஆய்வுக் கழகம்!

பதிவுகள்: 790101 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81931 | புதிய உறுப்பினர்: vdevaraj
[You must be registered and logged in to see this link.]
Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!
ஐயா, தேவநேயப் பாவனார் இன் கருத்திற்கு, உங்களின் விமர்சனம் மிக அருமை. நன்றிகள் நிறைய விஷயங்களை அறிந்து கொண்டேன்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5391
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!
சதாசிவம் wrote:தமிழ் - வடமொழி வேறுபாடுகள்
1. பழைமையானது - பிறவற்றிலிருந்து மூலமானது பெறப்பட்டது
அனைத்து மொழிகளுமே பிறவற்றிலிருந்து இருந்து பெறப்படுகிறது வடமொழி தமிழ் இவை இதற்கு விதிவிலக்கல்ல . இரண்டும் பழமையானது. தமிழ் சமஸ்கிரித்தை விட பழமையானது, இதனால் சமஸ்க்ரிதம் புதிய மொழியில்லை. சிலப்பதிகாரத்தில் 11% சமஸ்க்ரித வார்த்தைகள் இருப்பதாக கூறுகின்றனர்.
அப்படியானால் தமிழ் மொழி இயற்கை மொழி எனபது?
"அப்பா" இதன் பின்னால் ஒரு காரணம் உள்ளது.
மனித மட்டுமே சொல்ல முடியும். மனித குரல் மொழி மூலம் ஒலி மற்றும் பல்வேறு இணைந்து கூட்டு இயக்கங்களை உருவாக்குகிறது தொண்டை நுரையீரல் மற்றும் பின் குரனாண் மூலம் காற்று ஏற்றுதல் தேவைப்படுகிறது, உதடுகள் மற்றும் தாடைகள் வெவ்வேறு குரல் உருவாக்க முடியும்.
ஒரு குழந்தை ஒரு குரல் செய்ய குறைந்தது ஆற்றல் தேவைப்படுகிறது வார்த்தை "அம்மா" (காற்று மூக்கு வழியாக தப்பித்து மற்றும் உதடுகள் மட்டும் திறந்து மூடி உள்ளது நுரையீரல் வெளியே வந்து) உள்ளது. அத்தகைய குறைந்த ஆற்றல் வார்த்தை தமிழ் மொழியில் அம்மா குறிக்கிறது.
ஒரு குழந்தை ஒரு குரல் செய்ய குறைந்தது இரண்டாவது ஆற்றல் தேவைப்படுகிறது வார்த்தை "அப்பா" (காற்று வாய் வழியாக தப்பித்து மற்றும் உதடுகள் மட்டும் திறந்து மூடி உள்ளது நுரையீரல் வெளியே வந்து) உள்ளது. போன்ற குறைந்தது இரண்டாவது ஆற்றல் வார்த்தை தமிழ் மொழியில் தந்தை குறிக்கிறது.
2. பேச்சு மொழியாகவும் உயிருள்ளது - செயற்கையான கிளை மொழி, பேச்சு வழக்கற்றது
இந்தியாவில் இன்னும் முழு சமஸ்திரத்தில் பேசும் கிராமம் கர்நாடகாவில் உள்ளது. எண்ணிக்கை குறைவு, ஆனால் இது இன்னும் அழிந்து விட வில்லை
3. லெமூரியாவில் தோன்றியது - இந்தியாவில் தோன்றியது.
இதில் என்ன வித்தியாசம், லெமூரியா இன்றைக்கு இல்லை, தமிழ் வாழ்ந்து கொண்டு இருப்பது இந்தியாவில் தான். சிந்து சமவெளி நாகரீகத்தில் கிடைத்தது போல் அல்லாமல் லெமூரியா குறித்த தொல்பொருள் ஆய்வு உண்மைகள் வெகு குறைவு.
4. அறநூல்கள் யாவர்க்குமானவை - தூய நூல்கள் என்பவை ஒரு சிலருக்கு மட்டுமே
இப்படி இல்லை, உபநிசதங்களும், புராணங்களும் அனைவருக்கும் பொதுவானது. அரிச்சந்த்ரா புராணம், மகாபாரதம், ராமாயணம் இதற்குச் சான்று. அர்த்த சாஸ்திரம், விதுர நீதியும் இப்படித்தான்.
தமிழில் சமணர்களுக்கு என்று சில இலக்கியங்கள் இருந்தது. அது அழிக்கப்பட்டு விட்டது என்று வரலாறு கூறுகிறது. நாம் ஐம்பெரும் காப்பியம் என்று இன்று கொண்டாடுவது சமணத்தை தழுவி எழுதியவை. தமிழிலும் சிலருக்கு என்று சில நூல்கள் இருக்கிறது.
5. உலகளாவிய பரந்த நோக்கை வலியுறுத்தல் - பிறப்பின் அடிப்படையில் சாதிப் பாகுபாடு
வர்ண தர்மம் குறித்து தொல்காப்பியமும் பேசுகிறது. பாட்டுப் பாடும் பாணர் இனத்தவர் அரசை ஆண்ட வரலாறு இங்கு இல்லை. அரச பரம்பரையில் பிறந்தவர் தான் அரசை ஆண்டனர்.
6. உயர்நிலைக்கு யாவர்க்கும் ஏற்பளித்தல் - பார்ப்பனருக்கு மட்டுமே உயர்நிலை எனும் நம்பிக்கை
இது பார்ப்பனர்கள் செய்த சதி. இதற்கு வட மொழி எப்படி பொறுப்பாகும்.
7. உயர்கல்வி எல்லோருக்கும் பொது - உயர்கல்வி பார்ப்பனருக்கு மட்டுமே
இது பார்ப்பனர்கள் செய்த சதி. இதற்கு வட மொழி எப்படி பொறுப்பாகும். தாசியின் மகன்களும் படித்து வளர்ந்த கதை வட மொழியில் உண்டு
8. பரிசில்கள் ஏழைகளுக்கும், தேவையானவர்களுக்கும் அளிக்கப்படல் வேண்டும் - பார்ப்பனருக்கு மட்டுமே பரிசில் அளிக்க வேண்டுமென்று புரவலர்களைக் கட்டாயப்படுத்தல்
இது பார்ப்பனர்கள் செய்த சதி. இதற்கு வட மொழி எப்படி பொறுப்பாகும்.
9. உண்மையேல் பற்று - ஏமாற்றுதல், பிறர் எழுதியவற்றைத்திருடித் தமதென்றல்
இதற்கு என்ன ஆதாரம், கம்பனும் வால்மீகியிடம் கடன் வாங்கி இருக்கிறான்.
10. அன்பே எல்லையற்ற மகிழ்ச்சிக்கு அடிப்படை என வலியுறுத்தல் - அறிவே பிரம்மத்தோடு இணைய அடிப்படை எனக்கூறல்
இது மதக் கருத்து, மொழியின் கருத்து இல்லை. தமிழிலும் பிற மத இலக்கியங்கள் உள்ளது. அவை அந்த மதத்தின் கருத்துகளை கூறுகிறது.
அப்படியானால் தமிழ் மொழி அன்பு பற்றி கூறவில்லையா?
11. ஒரே கடவுளை ஏற்றுக் கொள்ளும் சைவ, வைணவச் சமயங்கள் - சிறு தெய்வங்களுக்குப் பலியிடும் சடங்குகளைக் கொண்ட சமயம்
தமிழிலும் இப்படி சிறு தெய்வங்களுக்கு பலியுடும் வழக்கம் உள்ளது. ஐந்திணை தெய்வங்கள் இதற்கு சான்று
ஐந்திணை ஒழுக்கத்தில் வகைப்படுத்தப்பட்ட தெய்வங்களை வழிபடும் வழக்கத்தில் பலியுடும் வழக்கம் இருத்தா?
தெய்வங்களுக்கு பலியுடுவது மொழி வழக்கமா? சமய வழக்கமா?
ஐந்திணைப்பிரிவில் பெண்தெய்வங்கள் முதன்மை பெற்றிருந்தனரா?
தமிழகத்தில் பெண்கள் இறைப்பணிக்கும் இறைவழிபாட்டுக்கும் ஆண்களுக்கு இணையாகச் சம உரிமை பெற்றிருந்தனரா?
சிற்றம்பலம் என்னும் சிதம்பரத்திலும், மதுரையிலும் பெண் தெய்வங்கள் இருந்த கோவில்களில் ஆண்தெய்வங்கள் ஊடுருவல் மூலம் மேன்மை பெற்றது என்று மேலை நாட்டு வரலாற்றுக்குறிப்பு ஏற்புடையதா?
பெண்கள் ஆண்களுக்கு அட்ங்கி நடக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் ஆந்தெய்வங்கள் முதன்மை பெற்றும் பெண் தெய்வங்கள் இரண்டாம் நிலைப்படுத்தப்பட்டதும் பெண் அடிமைக்கு வழிவகுத்தது என்ற ப்ண்ணியத்தின் முன்வைப்பு ஏற்புடைய வாதமா?
அப்படியானால் கிராம தெய்வங்களின் வழிபாட்டுமுறைகள் மலயா சிங்கப்பூர் போன்று ஆவணப் படுத்தப்பட்டுள்ளதா?
12. இதன் இலக்கிய வர்ணனை இயல்பானது - இதன் இலக்கிய வர்ணனை கற்பனையானது
தமிழில் இல் பொருள் வைப்பு அணி, உயர்வு நவீர்ச்சி அணி உள்ளது. இவை இரண்டும் முழுக் கற்பனை.

பேகன்- இளையநிலா

- பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100
Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!
ஆம் பாலைத் திணையின் தெய்வமாக இருக்கும் துர்க்கை, அல்லது கொற்றவை என்று அழைக்கப்படும் தெய்வத்திற்கு பலியிடும் வழக்கம் இருந்தது. மேலும் மருதத் திணையின் இறைவன் இந்திரனுக்கு எடுக்கும் இந்திரா விழாவிலும் இது போன்ற பலிகள் இருப்பதாக கட்டுரை படித்துள்ளேன். சான்றுகள் என்ன நூலில் உள்ளது என்று தெரியவில்லை. தேடினால் கிடைக்கும்.
மேலும் போருக்குச் செல்வதற்கு முன் கள பலி கொடுக்கும் வழக்கமும் தமிழகத்தில் இருந்தது. மகாபாரத்திலிலும் போருக்கு முன்னர் கள பலி கொடுப்படுகிறது. இதில் தமிழ் அல்லது வட மொழிக்கு வித்தியாசம் இல்லை. இது மரபு சார்ந்த வழக்கம் மொழி சார்ந்தது இல்லை. இப்படி பலி கொடுப்பது பற்றி கலிங்கத்து பரணி, புறப்பாடல்கள் சிலவற்றில் குறிப்பு இருக்கிறது. படித்துள்ளேன். ஆதாரம் வேண்டின் தேடி எடுத்துக் கொடுக்கிறேன்.
இந்து மதம் (நாம் இன்றைக்கு அழைக்கும் பெயர்) ஆறு பிரிவுகளை உள்ளடக்கியது. சூரியன், விநாயகர், சக்தி, சிவன், விஷ்ணு மற்றும் முருகர் ஆகிய ஏதோ ஒரு தெய்வத்தை முதல் தெய்வமாக கருதி வழிபாடு செய்வது. இதில் சக்தி வழிபாடு முதன்மை பெற்றதில்லை. அதுவும் இருந்திருக்கிறது, ஒரு சில பழங்குடியிடம், பாலைநிலத்து மக்கள் பெண்ணை முதல் தெய்வமாக வழிபட்டனர். இது முழு தமிழகத்துக்கும் பொருந்தாது.
ஆமாம், இதில் சந்தேகம் இல்லை. மாதவிடாய் இறைவழிபாடு அல்லது இறைவனை அடைய தடை இல்லை என்பது திரு ஞான சம்பந்தர் வரலாறு மூலம் அறியலாம். அவர் திருமணம் நடக்கும் போது, திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் சிவலோகம் அழைத்து செல்கிறார். அப்போது ஒரு பெண் இந்த காரணம் கொண்டு அழுகிறாள். ஞான சம்பந்தர் அந்தப் பெண்ணையும் அழைத்து செல்கிறார். 51 ஸ்ரீ சக்தி பீடத்தில் பெண் தான் முதன்மைத் தெய்வம். ஒரு சில இடங்களில் அம்பாளின் உதிரமாக கருத்துவது பிரசாதமாக கொடுப்பப்படுகிறது. திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதி தான் அப்பரை திரும்ப சைவத்துக்கு கூட்டி வருகிறார். ஆண்டாள் மற்றொரு உதாரணம். இந்து மதம் ஒரு நாளும் பெண்ணை குறைவாகக் கருதியதில்லை. இறைவனுக்கு பெயர் கூட உமாபதி, அம்மையப்பன், உமையொருபாகன், லக்ஷ்மி நாராயணன் , சீதாராமன் என்று பெண் பெயரை முதன்மையாக வைத்தும் வழக்கத்தில் உள்ளது. இந்து மதம் பெண்ணுக்கு வீட்டுக்குள் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து இருக்கிறது. இதனால் அவர்கள் வெளி வேளையில் ஈடுபட்டதில்லை. இது அவர்களுக்கு போட்ட தடையில்லை.
ஒவ்வொரு ஆராய்ச்சியும் ஒரு கருத்தை கூறுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. திருவள்ளுவர் சைவர், வைணவர், புத்தர், சமணர் என்றும் ஆய்வுக் கட்டுரை உள்ளது. இப்படி ஒரு மாற்றம் நடந்து இருந்தால் மதுரை மீனாக்ஷி கோவில் மாறி இருக்கும். ஆணுக்கு சிதம்பரத்தை உவமை காட்டுவது பெண்ணுக் மதுரையை உவமை காட்டும் வழக்கம் தமிழில் உள்ளது. இன்றைக்கு வேலைக்கு போகும் பெண்கள் தங்களுக்கு வாகனம் வைத்து இருப்பது போல் பெண் தெய்வங்களுக்கு தனியே வாகனம் வழங்கப்பட்டுள்ளது. எங்கு சக்தி எதிரே நந்தி இருக்கிறதோ அங்கு சிவன் முக்கிய தெய்வம். எங்கு சிங்கம் இருக்கிறதோ அங்கு சக்தி பலம் பொருந்தியவள். அடுத்த முறை கோவில் சொல்லும் போது இதை கவனியுங்கள். தமிழகத்தில் பல கோவில்கள் பெண் தெய்வங்கள் மூலமே பிரபலம் அடைந்துள்ளது. இந்து மதம் ஒரு நாளும் பெண்ணுக்கு எதிரானதில்லை. இது ஒரு சிலரின் கருத்து, ஒட்டு மொத்த கருத்து இல்லை.
இங்கு பலதும் ஆவனப்படுத்தபடவில்லை. இங்கு குழம்பும் பல விஷயங்களுக்கு இதுவே காரணம், வெறும் கோடிட்ட வரிகள் வைத்து பார்க்காமல் கோடிட்ட முழுப் புத்தகத்தையும் படிக்க வேண்டும். குறைந்த பட்சம் அந்த புத்தகத்தில் ஆசிரியர் கூறும் முன்னுரையில் என்ன கூறினார் என்றாவது பார்க்க வேண்டும். பல நேரங்களில் வெளிநாடு ஆராச்சியாளர்கள் கருத்து இப்படி தான் கோடிட்டப்படுகிறது. இன்ன இன்ன ஆதாரங்கள் கொண்டு இது இப்படி என்று நான் ஊகிக்கிறேன் என்று தான் வெளிநாட்டுக்காரன் எழுதுகிறான். இதுதான் நடந்தது என்று எழுவதில்லை. வரலாற்றில் பல பகுதிகளும் இப்படி தான்.
ஆவனப்படுத்துதால் அது தான் சரியான வரலாறு என்றும் கருத முடியாது. மலேஷியா சுதந்திரத்துக்கு போராடிய சீனர்கள், இந்தியர்கள் பெயர்கள் மறைக்கப்படுகிறது மலாய் மக்கள் பெயர் மட்டுமே முதன்மை படுதப்படுகிறது என்று இங்கு ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.
மேலும் போருக்குச் செல்வதற்கு முன் கள பலி கொடுக்கும் வழக்கமும் தமிழகத்தில் இருந்தது. மகாபாரத்திலிலும் போருக்கு முன்னர் கள பலி கொடுப்படுகிறது. இதில் தமிழ் அல்லது வட மொழிக்கு வித்தியாசம் இல்லை. இது மரபு சார்ந்த வழக்கம் மொழி சார்ந்தது இல்லை. இப்படி பலி கொடுப்பது பற்றி கலிங்கத்து பரணி, புறப்பாடல்கள் சிலவற்றில் குறிப்பு இருக்கிறது. படித்துள்ளேன். ஆதாரம் வேண்டின் தேடி எடுத்துக் கொடுக்கிறேன்.
இந்து மதம் (நாம் இன்றைக்கு அழைக்கும் பெயர்) ஆறு பிரிவுகளை உள்ளடக்கியது. சூரியன், விநாயகர், சக்தி, சிவன், விஷ்ணு மற்றும் முருகர் ஆகிய ஏதோ ஒரு தெய்வத்தை முதல் தெய்வமாக கருதி வழிபாடு செய்வது. இதில் சக்தி வழிபாடு முதன்மை பெற்றதில்லை. அதுவும் இருந்திருக்கிறது, ஒரு சில பழங்குடியிடம், பாலைநிலத்து மக்கள் பெண்ணை முதல் தெய்வமாக வழிபட்டனர். இது முழு தமிழகத்துக்கும் பொருந்தாது.
ஆமாம், இதில் சந்தேகம் இல்லை. மாதவிடாய் இறைவழிபாடு அல்லது இறைவனை அடைய தடை இல்லை என்பது திரு ஞான சம்பந்தர் வரலாறு மூலம் அறியலாம். அவர் திருமணம் நடக்கும் போது, திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் சிவலோகம் அழைத்து செல்கிறார். அப்போது ஒரு பெண் இந்த காரணம் கொண்டு அழுகிறாள். ஞான சம்பந்தர் அந்தப் பெண்ணையும் அழைத்து செல்கிறார். 51 ஸ்ரீ சக்தி பீடத்தில் பெண் தான் முதன்மைத் தெய்வம். ஒரு சில இடங்களில் அம்பாளின் உதிரமாக கருத்துவது பிரசாதமாக கொடுப்பப்படுகிறது. திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதி தான் அப்பரை திரும்ப சைவத்துக்கு கூட்டி வருகிறார். ஆண்டாள் மற்றொரு உதாரணம். இந்து மதம் ஒரு நாளும் பெண்ணை குறைவாகக் கருதியதில்லை. இறைவனுக்கு பெயர் கூட உமாபதி, அம்மையப்பன், உமையொருபாகன், லக்ஷ்மி நாராயணன் , சீதாராமன் என்று பெண் பெயரை முதன்மையாக வைத்தும் வழக்கத்தில் உள்ளது. இந்து மதம் பெண்ணுக்கு வீட்டுக்குள் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து இருக்கிறது. இதனால் அவர்கள் வெளி வேளையில் ஈடுபட்டதில்லை. இது அவர்களுக்கு போட்ட தடையில்லை.
ஒவ்வொரு ஆராய்ச்சியும் ஒரு கருத்தை கூறுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. திருவள்ளுவர் சைவர், வைணவர், புத்தர், சமணர் என்றும் ஆய்வுக் கட்டுரை உள்ளது. இப்படி ஒரு மாற்றம் நடந்து இருந்தால் மதுரை மீனாக்ஷி கோவில் மாறி இருக்கும். ஆணுக்கு சிதம்பரத்தை உவமை காட்டுவது பெண்ணுக் மதுரையை உவமை காட்டும் வழக்கம் தமிழில் உள்ளது. இன்றைக்கு வேலைக்கு போகும் பெண்கள் தங்களுக்கு வாகனம் வைத்து இருப்பது போல் பெண் தெய்வங்களுக்கு தனியே வாகனம் வழங்கப்பட்டுள்ளது. எங்கு சக்தி எதிரே நந்தி இருக்கிறதோ அங்கு சிவன் முக்கிய தெய்வம். எங்கு சிங்கம் இருக்கிறதோ அங்கு சக்தி பலம் பொருந்தியவள். அடுத்த முறை கோவில் சொல்லும் போது இதை கவனியுங்கள். தமிழகத்தில் பல கோவில்கள் பெண் தெய்வங்கள் மூலமே பிரபலம் அடைந்துள்ளது. இந்து மதம் ஒரு நாளும் பெண்ணுக்கு எதிரானதில்லை. இது ஒரு சிலரின் கருத்து, ஒட்டு மொத்த கருத்து இல்லை.
இங்கு பலதும் ஆவனப்படுத்தபடவில்லை. இங்கு குழம்பும் பல விஷயங்களுக்கு இதுவே காரணம், வெறும் கோடிட்ட வரிகள் வைத்து பார்க்காமல் கோடிட்ட முழுப் புத்தகத்தையும் படிக்க வேண்டும். குறைந்த பட்சம் அந்த புத்தகத்தில் ஆசிரியர் கூறும் முன்னுரையில் என்ன கூறினார் என்றாவது பார்க்க வேண்டும். பல நேரங்களில் வெளிநாடு ஆராச்சியாளர்கள் கருத்து இப்படி தான் கோடிட்டப்படுகிறது. இன்ன இன்ன ஆதாரங்கள் கொண்டு இது இப்படி என்று நான் ஊகிக்கிறேன் என்று தான் வெளிநாட்டுக்காரன் எழுதுகிறான். இதுதான் நடந்தது என்று எழுவதில்லை. வரலாற்றில் பல பகுதிகளும் இப்படி தான்.
ஆவனப்படுத்துதால் அது தான் சரியான வரலாறு என்றும் கருத முடியாது. மலேஷியா சுதந்திரத்துக்கு போராடிய சீனர்கள், இந்தியர்கள் பெயர்கள் மறைக்கப்படுகிறது மலாய் மக்கள் பெயர் மட்டுமே முதன்மை படுதப்படுகிறது என்று இங்கு ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!
தமிழ் மொழி மட்டுமல்ல எந்த ஒரு மொழியும் சில ஓசைகளில் இருந்து வார்த்தைகளாய் வளருகிறது. தமிழ் மட்டுமே இயற்கையான மொழி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அப்படியானால் தமிழ் மொழி அன்பு பற்றி கூறவில்லையா?
இது தமிழ் மொழியின் கருத்து இல்லை. ஏதே ஒரு நூலின் ஆசிரியரின் கருத்து. வடமொழியில் அகம் பிரமாஷ்மி என்ற வாக்கியம் இருக்கிறது. இது வட மொழியின் கருத்தா ? அதை சொன்னவரின் கருத்தா ? மதக் கோட்பாடுகளில் உள்ள ஒரு கருத்து தான் இது. இது மொழியின் கருத்து இல்லை.
திருக்குறளில் 133 அதிகாரமும் சம பங்கு பெறுகிறது, அன்புடன் வாழ் என்று சொல்லும் வள்ளுவர், ஆராய்ந்து நட்பு கொள், யாரையும் நம்பாதே என்றும் கூறுகிறார். அவரின் வாக்கியத்தை வைத்து தமிழ் அன்பு பற்றி கூறுகிறது என்று கூற முடியாது. திருமூலர் அன்பும் சிவனும் ஒன்று என்று சொல்கிறார். இது சைவத்தின் கருத்து, தமிழின் கருத்து இல்லை.
அப்படியானால் தமிழ் மொழி அன்பு பற்றி கூறவில்லையா?
இது தமிழ் மொழியின் கருத்து இல்லை. ஏதே ஒரு நூலின் ஆசிரியரின் கருத்து. வடமொழியில் அகம் பிரமாஷ்மி என்ற வாக்கியம் இருக்கிறது. இது வட மொழியின் கருத்தா ? அதை சொன்னவரின் கருத்தா ? மதக் கோட்பாடுகளில் உள்ள ஒரு கருத்து தான் இது. இது மொழியின் கருத்து இல்லை.
திருக்குறளில் 133 அதிகாரமும் சம பங்கு பெறுகிறது, அன்புடன் வாழ் என்று சொல்லும் வள்ளுவர், ஆராய்ந்து நட்பு கொள், யாரையும் நம்பாதே என்றும் கூறுகிறார். அவரின் வாக்கியத்தை வைத்து தமிழ் அன்பு பற்றி கூறுகிறது என்று கூற முடியாது. திருமூலர் அன்பும் சிவனும் ஒன்று என்று சொல்கிறார். இது சைவத்தின் கருத்து, தமிழின் கருத்து இல்லை.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!
தோழமைகளுக்கு,
மிகவும் ரசித்தேன். நன்றி
மிகவும் ரசித்தேன். நன்றி

செல்ல கணேஷ்- இளையநிலா

- பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75
Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!
சதாசிவம் wrote:தமிழ் - வடமொழி வேறுபாடுகள்
2. பேச்சு மொழியாகவும் உயிருள்ளது - செயற்கையான கிளை மொழி, பேச்சு வழக்கற்றது
இந்தியாவில் இன்னும் முழு சமஸ்திரத்தில் பேசும் கிராமம் கர்நாடகாவில் உள்ளது. எண்ணிக்கை குறைவு, ஆனால் இது இன்னும் அழிந்து விட வில்லை
அன்புள்ள தம்பி சதாசிவம், நீங்கள் கூறிய பல கருத்துக்களை ஆராய்ச்சியின் அடிப்படியில் ஏற்றுக்கொண்டாலும், மேற்சொன்ன செய்தியை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது ஒரு பொய்யான தகவல் ஆகும். நீங்கள் குறிப்பிட்ட இந்த கிராமம் பெயர் 'மருதூர்' என்பதாகும். இது சிமோகா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். மலைசார்ந்த பகுதியாக இருப்பதால் பெரும்பாலும் சிற்றூர்களே அதிகம். இங்கு வேடிக்கை என்னவென்றால், இங்குள்ளவர்கள் அனைவருமே பிராமணர்கள். தாய்மொழி கன்னடம்தான் என்றாலும் எல்லோருக்கும் சமஸ்கிருதம் நன்றாகத் தெரியும். ஆகவே சமஸ்க்ருதத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் அந்த மொழியில் பேச ஆரம்பித்தார்கள். இதை மீடியா, பத்திரிகைகள் பெரிது படுத்தி கர்நாடகத்தில் ஒரு ஊரில் எல்லோரும் சமஸ்கிருதத்தில்தான் பேசுகிறார்கள் என்றும், தாய்மொழி சமஸ்க்ருதம் என்றும் பொய்ப்பிரசாரம் ஆகிவிட்டது. இதே ஊரைச்சேர்ந்த ஸ்ரீநிவாசமுர்த்தி என்பவர் எனது நண்பர். மண்வள ஆய்வில் பேராசிரியராக உள்ளார். அவர் மிக அருமையாகவும், அழகாகவும் கன்னடத்தில் பேசுவார். சில வருடம் முன்பு நான் வேடிக்கையாக அவரிடத்தில் கேட்டேன் '' இங்கு இவ்வளவு அழகாக கன்னடம் பேசுகிறீர்களே, உங்கள் ஊரில் போனால் சமஸ்கிருதமும் இதேபோல் விரைவாகப் பேசுவீர்களா'' என்று. அதற்க்கு அவர் பதில் வேடிக்கையாக இருந்தது. '' நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து ஒருவனைக் கன்னத்தில் அறைந்தால், அவன் வாயில் இருந்து முதலில் வரும் சொற்கள் 'ஐயோ, அம்மா' என்ற சுத்தமான கன்னடம்தான்!" நீங்கள், மத்திய அரசாங்கத்தின் மக்கள்தொகை கணக்கெடுப்பு புத்தகத்தைப் பாருங்களேன். அதில் சமஸ்கிருதத்தை என் தாய்மொழி என்று தெரிவித்திருப்பவர்கள், வெறும் 14000 பேர்கள் தான். இதையும் நன்கு கூர்ந்து கவனித்தால், அவர்களும் இந்த கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டம் மருதூர் கிராமத்தில் உள்ள பிராமணர்களைப் போன்ற பண்டிதர்களாகத்தான் இருப்பார்கள். சமஸ்கிருதத்தின் மேலுள்ள அதி ஆசையால், அன்பால், வெறியால் அப்படிச் சொல்லியிருப்பார்களே அல்லாமல், சமஸ்கிருதம் அவர்களின் உண்மையான தாய்மொழியாய் இருக்க எந்தவொரு சாத்தியக்கூறுகளும் இல்லை என்பதே திண்ணம். சமஸ்கிருதம் பேச்சு வழக்கு அழிந்துவிட்டது என்பது முற்றிலும் உண்மை.
Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!
ஐயா உங்கள் கருத்தை ஏற்கிறேன்.
இந்த கிராமத்தில் இருப்பவருக்கு இது தாய்மொழி இல்லை. ஆனால் சமஸ்கிதம் முற்றிலும் பேச்சு வழக்கு அழிந்த மொழி அல்ல. எப்படி நாம் ஆங்கிலம் அறிந்து தேவையின் போது அதுபோல் சமஸ்கிரதம் பாவிக்கப்படுகிறது. இன்றும் சமஸ்க்ரித பாரதியின் கிளைகளில் நடக்கும் வகுப்புகள், உபன்யாசகங்கள் முழுவதும் சமஸ்கிரத்தில் நடைபெறுகிறது. மக்கள் வருகிறார்கள், கேட்கிறார்கள். சென்னையில் இது போன்ற சொற்பொழிவுகளுக்கு நான் சென்றுள்ளேன். புரிதல் கடினமில்லை. ஒரு லக்ஷத்திருக்கும் அதிகமான மாணவர்கள் சமஸ்க்ரிதத்தில் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ் மொழி உயர்வானது அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்து இல்லை. ஒப்புமை இல்லாதது.
சமஸ்க்ரிதம் என்ற இனிய மொழி ஒரு சில பிரமானர்களால் வளம் குறைந்தது. அதை காலம் கழித்து மீண்டும் மலர பாடுபடுகின்றனர்.
ஒரு மொழியை உயர்த்த இன்னொரு மொழியைத் தாழ்த்தக்கூடாது. இதை செய்தால் நமக்கும் இப்படி செய்த ஒரு சில பிரமணர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும். தமிழன் உயர்ந்தவன், இது போன்ற ஒப்பீடுகள் சரியல்ல என்பது தான் என் கருத்து.
தமிழ் மொழியைப் போல் பிற மொழிகளையும் நாம் வாசிக்க வேண்டும், வாசித்து அங்கு உள்ள விஷயங்களையும் இங்கு கொண்டு வர வேண்டும். அர்த்த சாஸ்திரம், வீதுர நீதி போன்றவைகள் நம் மக்கள் படிக்க வேண்டும். ரகு வம்சம், குமார சம்பவம் போன்றவைகளும் நம் இலக்கியவாதிகள் படிக்க வேண்டும். காளிடாசனையும் படித்து விட்டு கம்பன் சிறந்தவன் என்று சொல்ல வேண்டும். அப்போது தான் அனைவரின் வாயை அடக்க முடியும். பாரதி செய்தானே அதைப்போல்.
இந்த கிராமத்தில் இருப்பவருக்கு இது தாய்மொழி இல்லை. ஆனால் சமஸ்கிதம் முற்றிலும் பேச்சு வழக்கு அழிந்த மொழி அல்ல. எப்படி நாம் ஆங்கிலம் அறிந்து தேவையின் போது அதுபோல் சமஸ்கிரதம் பாவிக்கப்படுகிறது. இன்றும் சமஸ்க்ரித பாரதியின் கிளைகளில் நடக்கும் வகுப்புகள், உபன்யாசகங்கள் முழுவதும் சமஸ்கிரத்தில் நடைபெறுகிறது. மக்கள் வருகிறார்கள், கேட்கிறார்கள். சென்னையில் இது போன்ற சொற்பொழிவுகளுக்கு நான் சென்றுள்ளேன். புரிதல் கடினமில்லை. ஒரு லக்ஷத்திருக்கும் அதிகமான மாணவர்கள் சமஸ்க்ரிதத்தில் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ் மொழி உயர்வானது அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்து இல்லை. ஒப்புமை இல்லாதது.
சமஸ்க்ரிதம் என்ற இனிய மொழி ஒரு சில பிரமானர்களால் வளம் குறைந்தது. அதை காலம் கழித்து மீண்டும் மலர பாடுபடுகின்றனர்.
ஒரு மொழியை உயர்த்த இன்னொரு மொழியைத் தாழ்த்தக்கூடாது. இதை செய்தால் நமக்கும் இப்படி செய்த ஒரு சில பிரமணர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும். தமிழன் உயர்ந்தவன், இது போன்ற ஒப்பீடுகள் சரியல்ல என்பது தான் என் கருத்து.
தமிழ் மொழியைப் போல் பிற மொழிகளையும் நாம் வாசிக்க வேண்டும், வாசித்து அங்கு உள்ள விஷயங்களையும் இங்கு கொண்டு வர வேண்டும். அர்த்த சாஸ்திரம், வீதுர நீதி போன்றவைகள் நம் மக்கள் படிக்க வேண்டும். ரகு வம்சம், குமார சம்பவம் போன்றவைகளும் நம் இலக்கியவாதிகள் படிக்க வேண்டும். காளிடாசனையும் படித்து விட்டு கம்பன் சிறந்தவன் என்று சொல்ல வேண்டும். அப்போது தான் அனைவரின் வாயை அடக்க முடியும். பாரதி செய்தானே அதைப்போல்.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








