புதிய பதிவுகள்
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10 
133 Posts - 55%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 2 of 32 Previous  1, 2, 3 ... 17 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Feb 24, 2011 8:59 pm

உண்மையிலேயே நெகிழ வைக்கிறது..
பகிர்வுக்கு நன்றிகள் சிவா அண்ணா..
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 678642 நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 678642

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Feb 25, 2011 3:55 am

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 677196 நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 677196 நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 677196 நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 25, 2011 10:13 am

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே... இந்த பாட்டில் பண்புக்குறைவு என்ன இருக்கிறது என்று பெரிய பண்பு அறிவுரை சொல்ல முன்வந்தார் அந்த வாசகர்..?

திருமணப்பரிசு பற்றிய தகவலும் பட்டுப்புடவை மீண்ட தகவலும் அருமை..

அருமையான பகுதிதொடங்கியமைக்கு நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:24 am

பஸ் பயணத்தில் பாத்ரூம் அவஸ்தை

விழுப்புரம் அரசுப் பேருந்தில் சேலம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன். பேருந்தில் நல்ல கூட்டம். வழியில் கள்ளக்குறிச்சியில் பேருந்தை நிறுத்திய டிரைவர், "கழிவறை செல்பவர்கள், டீ சாப்பிடுபவர்கள் சென்று விட்டு வரலாம். பேருந்து 10 நிமிடங்கள் நிற்கும். இதை விட்டால் இனிமேல் சேலத்தில் தான் நிற்கும்'' என்றார். பின்பு ஓட்டுனரும், நடத்துனரும் டீ சாப்பிடச் சென்றனர். பயணிகளும் இறங்கி, அவரவர் தம் கடமையை முடித்துவிட்டு, பேருந்தில் ஏறினர். பேருந்து 10 நிமிடங்களுக்கு பதிலாக 15 நிமிடங்கள் கழித்தே புறப்பட்டது.

என் அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், இந்த 15 நிமிட இடைவெளியில் கீழே இறங்காமல், பேருந்திலேயே அமர்ந்திருந்தார். மீண்டும் புறப்பட்ட பேருந்து வாழப்பாடியை நெருங்கிக் கொண்டிருந்த போது, அவர் என்னிடம், "சேலம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது? எப்போது சென்றடையும்?'' என்று கேட்டார். நான் அவரிடம் "இன்னும் 30 கிலோமீட்டர் இருக்கிறது. எப்படியும் 30-லிருந்து 45 நிமிடங்களாவது ஆகும்'' என்று அவரிடம் கூறினேன். அவர் என்னிடம்"நான் ஒரு சர்க்கரை நோயாளி. நான் இப்பொழுது அவசரமாக சிறுநீர் கழித்தாக வேண்டும். என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை'' என்று அவஸ்தையாக கூறிவிட்டு, நேராக நடத்துனரிடம் சென்று அவருடைய நிலையை விளக்கிக் கூறினார். பேருந்தை நிறுத்துமாறு கெஞ்சினார்.

நடத்துனர் அவரை கோபத்துடன் பார்த்துவிட்டு, சத்தம் போட்டு திட்டினார். "கள்ளக் குறிச்சியில் பேருந்து 15 நிமிடங்கள் நின்றபோது என்ன செய்தீர்கள்? இப்போது பஸ்சை நிறுத்த முடியாது'' என்றார்! அந்தப் பயணி மீண்டும் கெஞ்சினார். பரிதாபப்பட்ட ஓட்டுனர், பேருந்தை நிறுத்தினார். கீழே இறங்கியவர் 3-4 நிமிடங்கள் ஆகியும் மேலே ஏறவில்லை. பயணிகளில் ஒரு சிலர் "யோவ்! போதும்யா. மேலே ஏறு!'' என்று சத்தம் போட்டனர். மேலே ஏறியவர், அவமானத்தில் யாரையும் பார்க்காமல் கூனி குறுகிப் போனார். இவரைப் போன்று நெடுந்தொலைவு பயணிப்பவர்கள் ரெயில் பயணத்தை தேர்வு செய்யலாம். அல்லது அதற்குரிய இடைவெளியில் இந்த இயற்கை உபாதைகளை முடித்துக் கொள்ள வேண்டும்.

- ரி.குப்புசாமி, மேட்டுப்பாளையம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:25 am

பாசம் வேஷமானபோது..

என் தோழிக்கு இரண்டு தங்கை, ஒரு அண்ணன். சிறு வயதிலே அவளது அப்பா இறந்து போனார். ஓரளவு நிலபுலன்கள் உண்டு. அதில் கிடைத்த வருமானத்தை வைத்து கூழோ, கஞ்சியோ குடித்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.

தோழியின் அம்மாவுக்கு ஒரு தங்கை உண்டு. அவருக்கு தன் அக்கா குடும்பத்தினரின் அனுதின போராட்ட வாழ்க்கை தெரியும். அன்று தோழியின் வீட்டுக்கு வந்த அம்மாவின் தங்கை ரொம்ப அக்கறையோடு பேசியிருக்கிறார். `நான் எப்போதும் உங்களுக்கு உதவி செய்ய ஓடோடி வருவேன். நிலத்தை விற்று எனக்கு 1 லட்சம் ரூபாய் கொடுங்கள். அதில் பழைய வேன் ஒன்றை வாங்கி வாடகைக்கு விடுவேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் பங்கு தருவேன். அசலையும் குறிப்பிட்ட காலத்திற்குள் தந்துவிடுவேன்' என்று கூறியிருக்கிறார். இவர்களும் அதை நம்பி, நிலத்தை கேட்ட விலைக்கு விற்று பணத்தை கொடுத்துவிட்டார்கள். அவரும் வேன் வாங்கிவிட்டார்.

முதல் இரண்டு மாதங்கள் சிறுதொகையை வருமானம் என்ற பெயரில் கொடுத்திருக்கிறார். பின்பு பணமே கொடுக்கவில்லை. தொடர்ந்து நாலைந்து மாதங்கள் பணமே வரவில்லை என்றதும், தோழியின்அம்மா தனது தங்கையின் வீடு தேடி போய் பணத்தைக் கேட்டிருக்கிறார். அவரோ, `வருமானமே இல்லாமல் எங்கிருந்து தருவது?' என்று கோபக்குரல் எழுப்பியிருக்கிறார். உண்மையில் அந்த குடும்பம் வேன் வாடகை மூலம் கிடைக்கிற வருமானத்தில் செழிப்பாக இருக்கிறது. தன் சுயநலத்துக்காக திட்டமிட்டு அக்கா குடும்பத்தை எமாற்றிய அந்த தங்கையின் செயலால் அவர்கள் நிலத்தையும் இழந்து, வருமானத்தையும் இழந்து வாடுகிறார்கள்.

நிஷா, திருவாரூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:26 am

பலூன் பறந்தது... பஸ் நின்றது...

சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சிக்கு நான் எனது அண்ணன், அண்ணி குடும்பத்தினரோடு சென்றிருந்தேன். நாங்கள் மொத்தம் ஐந்து பேர். அதில் குழந்தைகளும் அடக்கம்.

பொருட்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு உயர் நீதிமன்றத்தில் இருந்து தாம்பரம் செல்லும் பஸ்சில் ஏறினோம். ஒரு குழந்தையுடன் அண்ணியும், இன்னொரு குழந்தையுடன் அண்ணனும் இடம் கிடைத்து சீட்டில் அமர்ந்து விட்டார்கள். பொருட்காட்சியில் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒரு பலூன் வாங்கி கொடுத்து இருந்தார்கள். கூட்ட நெரிசலில் பலூன் உடைந்து விடும் என்று எண்ணிய ஓட்டுனர் என் அண்ணனிடம், "பலூனை என்னிடம் கொடுங்கள் இறங்கும் போது வாங்கி கொள்ளுங்கள்'' என்று வாங்கி, இஞ்சின் அருகில் கட்டி விட்டார். வண்டி செல்லும் வேகத்தில் கட்டி இருந்த பலூன் ஒன்று காற்றில் பறந்து வெளியேபோய் விட்டது.

அதை கவனித்த ஓட்டுனர் சரியாக மெரினா பீச் ஓரம் வந்ததும் குறிப்பிட்ட இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு பீச்சை நோக்கி ஓடினார். அங்கிருந்த ஒரு பலூன் கடையில் 1 பலூனை வாங்கிக் கொண்டு ஏறினார். ஒரு பலூனுக்காக இந்தமாதிரி பஸ்சை நிறுத்திவிட்டு நீங்கள் ஓடிப்போக வேண்டியதில்லையே? என்று டிரைவரிடம் நாங்கள்கேட்டோம்.

அதற்கு டிரைவர் சொன்ன பதில்: "நானும் இரண்டு பிள்ளைகள் பெற்றவன் தான். குழந்தைகள் பஸ்சை விட்டு இறங்கும்போது, இருக்கும் ஒரு பலூனுக்கு இருவரும் சண்டை போடுவார்கள். அப்படி ஒரு சண்டை நடக்க நான் காரணமாக இருக்கக்கூடாதில்லையா!'' என்றாரே பார்க்கலாம்!

அவர் ஒரு பொறுப்பான டிரைவர் மட்டுமின்றி, பொறுப்பான அப்பாவாகவும் இருப்பதை நினைத்து மகிழ்ந்தோம்.

தங்கபாண்டி, முடிச்சூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 26, 2011 11:30 am

சிவா wrote:பலூன் பறந்தது... பஸ் நின்றது...

சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சிக்கு நான் எனது அண்ணன், அண்ணி குடும்பத்தினரோடு சென்றிருந்தேன். நாங்கள் மொத்தம் ஐந்து பேர். அதில் குழந்தைகளும் அடக்கம்.

பொருட்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு உயர் நீதிமன்றத்தில் இருந்து தாம்பரம் செல்லும் பஸ்சில் ஏறினோம். ஒரு குழந்தையுடன் அண்ணியும், இன்னொரு குழந்தையுடன் அண்ணனும் இடம் கிடைத்து சீட்டில் அமர்ந்து விட்டார்கள். பொருட்காட்சியில் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒரு பலூன் வாங்கி கொடுத்து இருந்தார்கள். கூட்ட நெரிசலில் பலூன் உடைந்து விடும் என்று எண்ணிய ஓட்டுனர் என் அண்ணனிடம், "பலூனை என்னிடம் கொடுங்கள் இறங்கும் போது வாங்கி கொள்ளுங்கள்'' என்று வாங்கி, இஞ்சின் அருகில் கட்டி விட்டார். வண்டி செல்லும் வேகத்தில் கட்டி இருந்த பலூன் ஒன்று காற்றில் பறந்து வெளியேபோய் விட்டது.

அதை கவனித்த ஓட்டுனர் சரியாக மெரினா பீச் ஓரம் வந்ததும் குறிப்பிட்ட இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு பீச்சை நோக்கி ஓடினார். அங்கிருந்த ஒரு பலூன் கடையில் 1 பலூனை வாங்கிக் கொண்டு ஏறினார். ஒரு பலூனுக்காக இந்தமாதிரி பஸ்சை நிறுத்திவிட்டு நீங்கள் ஓடிப்போக வேண்டியதில்லையே? என்று டிரைவரிடம் நாங்கள்கேட்டோம்.

அதற்கு டிரைவர் சொன்ன பதில்: "நானும் இரண்டு பிள்ளைகள் பெற்றவன் தான். குழந்தைகள் பஸ்சை விட்டு இறங்கும்போது, இருக்கும் ஒரு பலூனுக்கு இருவரும் சண்டை போடுவார்கள். அப்படி ஒரு சண்டை நடக்க நான் காரணமாக இருக்கக்கூடாதில்லையா!'' என்றாரே பார்க்கலாம்!

அவர் ஒரு பொறுப்பான டிரைவர் மட்டுமின்றி, பொறுப்பான அப்பாவாகவும் இருப்பதை நினைத்து மகிழ்ந்தோம்.

தங்கபாண்டி, முடிச்சூர்.
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 677196 நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 677196 நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 677196 நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 4:50 pm

ஹெல்மெட் பின்பக்கம் விபத்து முன்பக்கம்

நாங்கள் குடியிருக்கும் காம்பவுண்டில் ஒரு மளிகைக்கடை வியாபாரி குடும்பமும் வசிக்கிறது. அவர் இருசக்கர வாகனம் வைத்திருக்கிறார். வியாபாரியும், அவரது மனைவியும் வெள்ளிக்கிழமை தோறும் மாரியம்மன் கோவிலுக்கும், பிரதோஷ நாளில் சிவன் கோவிலுக்கும் அந்த இருசக்கர வாகனத்தில் செல்வார்கள்.

வாகனத்தில் போகும்போது ஹெல்மெட்டை அவர் தலையில் அணியமாட்டார். பின்னால் இருந்து பயணம் செய்யும் அவருடைய மனைவி தனது மடியில் வைத்திருப்பார். சாலையில் போக்குவரத்து போலீசார் யாராவது இருப்பதைப் பார்த்தால் உடனே மனைவி கணவர் தலையில் ஹெல்மெட்டை மாட்டிவிடுவார். வழக்கமாக அவர்கள் சேர்ந்து பயணிக்கும்போது இப்படித்தான் நடக்கும்.

அன்றும் வழக்கம்போல் இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றனர். மெயின் ரோட்டில் போலீஸ்காரர் ஒருவர் ஹெல்மெட் அணியாதவரிடம் அபராதம் வசூல் செய்வதை பார்த்ததும் கணவர், தன் மனைவியிடம் `போலீஸ் நிற்கிறார். அவர் பார்த்துவிட்டால்அபராதம் தீட்டிவிடுவார். உடனே ஹெல்மெட்டை மாட்டிவிடு' என்று சொல்லியிருக்கிறார். உடனே பதட்டமான அவர் மனைவி ஹெல்மெட்டை சரியாக பார்த்து மாட்டாமல் திருப்பி மாட்டிவிட்டார். அதனால் அவருடைய முகம் மூடப்பட்டுவிட்டது. உடனே அவர் நிலைதடுமாறி, எதிரே வந்த டூவீலரில் மோதிவிட்டார். தம்பதிகள் இருவரும் கீழே விழுந்து பலத்த காயம். எதிரில் வந்தவருக்கும் காயம். ஆஸ்பத்திரியில் சேர்த்து மருத்துவம் பார்த்ததில் ஏகப்பட்ட செலவு. எப்படியோ உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்தார்கள்.

ஹெல்மெட் அணிவது வாகனத்தில் போகிறவர்கள் தங்கள் உயிரை பாதுகாக்கத் தான். ஆனால் ஹெல்மெட் அணிவதை ஏதோ கவுரவக் குறைச்சலாக எண்ணிக்கொண்டு கையில் எடுத்துச்செல்வது இதுமாதிரியான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

நி.செல்வராணி, விருதுநகர்.




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 4:53 pm

பெற்றோரை திருத்த இதுவல்ல வழி...!

உடல்நிலை பாதிக் கப்பட்டிருந்த உறவினரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தேன். அங்கே பக்கத்து அறையில் பள்ளி மாணவி ஒருத்தி தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்தாள். காரணத்தைக் கேட்டபோது மனம் கனத்துப் போனது.

அந்த மாணவி, பெற்றோருக்கு ஒரே மகள். வீட்டில் எப்போதும் பெற்றோர் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்களாம். `உங்கள் சண்டை என் நிம்மதியை கெடுக்கிறது. என்னால் படிக்க முடியவில்லை' என்று மகள் பலமுறை சொல்லிப்பார்த்தும் பெற்றோர் கேட்காமல் தினமும் விடாப்பிடியாக சண்டையை தொடர்ந்திருக்கிறார்கள்.

`இவர்கள் திருந்தவே மாட்டார்கள்' என்று முடிவெடுத்த மகள், அன்றைய தினம் இருவரும் காரசாரமாக சண்டை போட்டுக் கொண்டு இருந்த போதே தனது துப்பட்டாவில் நெருப்பு வைத்திருக்கிறாள். துணி எரிந்துவிட அவள் அலறல் சத்தம் போட்டிருக்கிறாள். அவளுடைய சத்தம் கேட்டு பெற்றோர் ஓடிவந்து, தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அதை விடக் கொடுமை, அந்த பெற்றோர் தங்கள்அன்பு மகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தநிலையில், ஆஸ்பத்திரியிலும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.

சண்டையிட்ட பெற்றோர் இப்போதும் குத்துக்கல் போலத்தான் இருக்கிறார்கள். இவள்தான் வலியில் துடிக்கிறாள். பெற்றோர்கள் சண்டையிட்டாலும் அவர்களை திருத்த நினைத்து இப்படிப்பட்ட விபரீத வழிகளை பிள்ளைகள் தேர்ந்தெடுத்து, தங்கள் உயிருக்கு உலைவைத்துக்கொள்ளக் கூடாது.

நா.நளினாதேவி, ஈரோடு.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 4:54 pm

`இது' வந்தது... `அது' போனது

என்னுடைய நண்பர் மத்திய அரசுப் பணியில் இருப்பவர். அவரின் மனைவி வங்கிப் பணியாளர். ஓரளவு வசதியான குடும்பம். அவர்களுக்கு மூன்று பெண்கள். அவர்களில் இருவர் திருமண வயதில் இருந்தார்கள். பெற்றோர் அவர்களுக்கு தகுதியான மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களது மூன்றாவது மகள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். நண்பரும், அவரின் மனைவியும் ஆளுக்கொரு செல்போன் வைத்திருப்பதோடு, மூன்று பெண்களுக்கும் ஆளுக்கொன்று வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். `எங்கேயாவது தனியாகப் போனால் செல்போன் மூலம் இருப்பிடத்தைத் தெரியப்படுத்தலாமே!' என்பதற்காக இந்த ஏற்பாடு.

இப்படி செல்போன் வழங்கியதில், இளையமகள் விஷயத்தில்தான் தப்பு நடக்கிறது. ஆரம்பத்தில் படிப்பில் முதல் இடத்தில் இருந்த அவள், செல்போன் வந்தபிறகு சராசரி மாணவியாகி விட்டாள். எந்த நேரமும் செல்போனும் கையுமாக பேசிக்கொண்டே இருக்கிறாள். பெற்றோரும் கண்டுகொள்வதாக இல்லை.

அவர்களின் குடும்பநண்பர் ஒருமுறை அவளிடம், `ஏம்மா! இப்படி செல்போன் கையுமாகவே இருக்கிறாயே? படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டாமா?' என்று கேட்டார். பதிலுக்கு அவள், `நான் ஒண்ணும் மார்க் வாங்காம இல்லையே! எல்லாப் பாடங்களிலும் ஐம்பது மார்க்குக்கு குறையாமல் வாங்கிட்டுத்தானே இருக்கேன்!' என்று சொன்னாள். இப்போதே ஐம்பது மார்க் என்றால் இனி, மேலும் மார்க் குறைந்துகொண்டுதானே இருக்கும்.

ஆர்.தனபால், சென்னை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 32 Previous  1, 2, 3 ... 17 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக