புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெகிழ வைத்த நிஜங்கள்
Page 3 of 32 •
Page 3 of 32 • 1, 2, 3, 4 ... 17 ... 32
First topic message reminder :
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உடைந்த செல்போன் உணர்த்திய பாடம்
தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவள் தன் மூன்று வயதுக் குழந்தைக்கு சாதம் ஊட்டிக்கொண்டிருந்தாள். குழந்தை சாப்பிடாமல் அடம் பிடித்து இங்கும் அங்கும் ஓடியது. தோழி உடனே அருகில் வைத்திருந்த செல்போனைக் குழந்தை கையில் கொடுத்து `சமர்த்தா சாப்பிடணும். அப்போது தான் அப்பா உன் கூட போனில் பேசுவார்' என்றபடி சாதத்தை ஊட்ட முயற்சித்தாள்.
குழந்தையோ சாப்பிடுவதில் ஆர்வம் காட்டாமல் போன் பட்டனை அழுத்தி விளையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தது. தோழி வற்புறுத்தி அதன் வாயில் சாதத்தைத் திணிக்கவே கோபம் கொண்ட குழந்தை கையிலிருந்த செல்போனை வீசி விட்டு அழுதது. செல்போன் அங்கிருந்த டி.வி.யின் மேல் விழுந்து டி.வி. உடைந்தது. செல்போனும் சேதம் அடைந்தது. உடனே தோழி குழந்தையைத் திட்டியபடி அடித்தாள்.
பாவம் குழந்தை என்ன செய்யும்? விலை உயர்ந்த பொருட்களை குழந்தையிடம் தருவதால் பொருள் நஷ்டமும், பணவிரயமும் ஆகும் என்பதை பெரியவர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி-13.
தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவள் தன் மூன்று வயதுக் குழந்தைக்கு சாதம் ஊட்டிக்கொண்டிருந்தாள். குழந்தை சாப்பிடாமல் அடம் பிடித்து இங்கும் அங்கும் ஓடியது. தோழி உடனே அருகில் வைத்திருந்த செல்போனைக் குழந்தை கையில் கொடுத்து `சமர்த்தா சாப்பிடணும். அப்போது தான் அப்பா உன் கூட போனில் பேசுவார்' என்றபடி சாதத்தை ஊட்ட முயற்சித்தாள்.
குழந்தையோ சாப்பிடுவதில் ஆர்வம் காட்டாமல் போன் பட்டனை அழுத்தி விளையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தது. தோழி வற்புறுத்தி அதன் வாயில் சாதத்தைத் திணிக்கவே கோபம் கொண்ட குழந்தை கையிலிருந்த செல்போனை வீசி விட்டு அழுதது. செல்போன் அங்கிருந்த டி.வி.யின் மேல் விழுந்து டி.வி. உடைந்தது. செல்போனும் சேதம் அடைந்தது. உடனே தோழி குழந்தையைத் திட்டியபடி அடித்தாள்.
பாவம் குழந்தை என்ன செய்யும்? விலை உயர்ந்த பொருட்களை குழந்தையிடம் தருவதால் பொருள் நஷ்டமும், பணவிரயமும் ஆகும் என்பதை பெரியவர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி-13.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முதியோர் சேமிப்பு... முழுதான பாதுகாப்பு
தினமும் அதிகாலை வாக்கிங் செல்லும் வழக்கமுடைய நான், அன்று செல்லும் போது கடைத் திண்ணை ஒன்றில் படுத்திருந்தவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் தூங்கிவிழித்து அப்போதுதான்திண்ணையில் எழுந்து உட்கார்ந்திருந்தார்.
அவர் எங்கள் கிராமத்தில் ஊர்மெச்ச வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரும் செல்வந்தராகவும் விளங்கினார். `இவர் ஏன் இந்த நடுங்கும் குளிரில், அதுவும் பிளாட்பாரத்தில் படுத்துக் கிடந்தார்?' என்ற கேள்வி எனக்குள் அதிர்ச்சியுடன் எழுந்தது.
அவருக்கு ஒரே மகன். உள்ளூரிலேயே குடித்தனம். சொந்த வீடு கடன் சுமை காரணமாக விற்கப்பட, வாடகை வீட்டில் தந்தையுடன் குடியேறியிருக்கிறான் மகன். தாய் இல்லை. வாடகை வீடு சிறியதாக இருக்க, மருமகள், மாமனாரை விரட்ட சதி திட்டம் தீட்டியிருக்கிறாள்.
வீட்டின் உரிமையாளரிடம் போய், தன் மாமனார் பற்றி மோசமாக கூறியிருக்கிறாள். அவரால் அக்கம்பக்கத்து வீட்டினருக்கு பிரச்சினை ஏற்படும். அவர் ரவுடி என்றும் கூறியிருக்கிறாள். வீட்டு உரிமையாளரும் அதை நம்பிவிட்டார். `இந்தப்
பெரியவர் என் வீட்டில் இருக்கக்கூடாது. அப்படி இருப்பாரானால் மொத்தமாக வீட்டை காலி செய்யுங்கள்' என்று கண்டிப்புடன் வீட்டு உரிமையாளர் சொல்லி விட்டார். மகனும் வேறு வீடு பார்க்கும் வரை தந்தையை வேறு எங்காவது தங்கிக் கொள்ளுமாறு கூறியிருக்கிறான். ரோஷம் தாங்காமல் பெரியவரும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார். எங்கு செல்வது எனத் தோன்றாமல் கடை வாசற்படியில் வந்து இரவு தங்கியிருக்கிறார்.
நடந்ததை அவர் மூலம் தெரிந்ததும் அவரது சம்பந்தியிடம் (மருமகளின் தந்தை) இந்த விஷயத்தை கொண்டுசென்றேன். அவர் பதறியடித்து ஓடிவந்து மகளையும், மருமகனையும் திட்டினார். அதன்பிறகு மீண்டும் தன்குடும்பத்துடன் இணைந்து கொண்டார் பெரியவர். வீட்டு உரிமையாளருக்கும் உண்மை புரியவைக்கப்பட்டது. அவரும் அமைதியாகிவிட்டார்.
-ஏ.ஜே.ஜப்பார், சத்தியமங்கலம்.
தினமும் அதிகாலை வாக்கிங் செல்லும் வழக்கமுடைய நான், அன்று செல்லும் போது கடைத் திண்ணை ஒன்றில் படுத்திருந்தவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் தூங்கிவிழித்து அப்போதுதான்திண்ணையில் எழுந்து உட்கார்ந்திருந்தார்.
அவர் எங்கள் கிராமத்தில் ஊர்மெச்ச வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரும் செல்வந்தராகவும் விளங்கினார். `இவர் ஏன் இந்த நடுங்கும் குளிரில், அதுவும் பிளாட்பாரத்தில் படுத்துக் கிடந்தார்?' என்ற கேள்வி எனக்குள் அதிர்ச்சியுடன் எழுந்தது.
அவருக்கு ஒரே மகன். உள்ளூரிலேயே குடித்தனம். சொந்த வீடு கடன் சுமை காரணமாக விற்கப்பட, வாடகை வீட்டில் தந்தையுடன் குடியேறியிருக்கிறான் மகன். தாய் இல்லை. வாடகை வீடு சிறியதாக இருக்க, மருமகள், மாமனாரை விரட்ட சதி திட்டம் தீட்டியிருக்கிறாள்.
வீட்டின் உரிமையாளரிடம் போய், தன் மாமனார் பற்றி மோசமாக கூறியிருக்கிறாள். அவரால் அக்கம்பக்கத்து வீட்டினருக்கு பிரச்சினை ஏற்படும். அவர் ரவுடி என்றும் கூறியிருக்கிறாள். வீட்டு உரிமையாளரும் அதை நம்பிவிட்டார். `இந்தப்
பெரியவர் என் வீட்டில் இருக்கக்கூடாது. அப்படி இருப்பாரானால் மொத்தமாக வீட்டை காலி செய்யுங்கள்' என்று கண்டிப்புடன் வீட்டு உரிமையாளர் சொல்லி விட்டார். மகனும் வேறு வீடு பார்க்கும் வரை தந்தையை வேறு எங்காவது தங்கிக் கொள்ளுமாறு கூறியிருக்கிறான். ரோஷம் தாங்காமல் பெரியவரும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார். எங்கு செல்வது எனத் தோன்றாமல் கடை வாசற்படியில் வந்து இரவு தங்கியிருக்கிறார்.
நடந்ததை அவர் மூலம் தெரிந்ததும் அவரது சம்பந்தியிடம் (மருமகளின் தந்தை) இந்த விஷயத்தை கொண்டுசென்றேன். அவர் பதறியடித்து ஓடிவந்து மகளையும், மருமகனையும் திட்டினார். அதன்பிறகு மீண்டும் தன்குடும்பத்துடன் இணைந்து கொண்டார் பெரியவர். வீட்டு உரிமையாளருக்கும் உண்மை புரியவைக்கப்பட்டது. அவரும் அமைதியாகிவிட்டார்.
-ஏ.ஜே.ஜப்பார், சத்தியமங்கலம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாலி நேரமா? ஜாலி நேரமா?
ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் நண்பரின் இல்லத் திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். மணமக்கள் இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போதே பழகியவர்கள். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடாயிற்று.
பெண்ணும்- மாப்பிள்ளையும் ஆழமான காதலர்கள் என்பதை மணவறையில் அவர்கள் காட்டிய அன்யோன்யமே உணர்த்தியது. அது வாழ்த்த வந்த பலரையும் சில நேரங்களில் முகம் சுளிக்கவும் வைத்தது. மணவறையில் உட்கார்ந்ததில் இருந்து ஒரு மணி நேரம் முழுக்க, திருமணம் நடத்தி வைக்கும் குருக்கள் முறையாக மந்திரம் சொல்லிக்கொண்டு வந்தார். பெண்ணையும், மாப்பிள்ளையையும் தான் சொல்லும் மந்திரங்களை தன்கூடவே சொல்லச் சொன்னார். பெண்ணும் மாப்பிள்ளையும் குருக்கள் சொல்வதையும், செய்யும் சடங்குகளையும் முறையாக செய்யாமல் இருவரும் சிரித்து பேசியபடி ஒப்புக்காக செய்து கொண்டிருந்தனர். குருக்கள் இடைஇடையே "அக்கறையா , பக்திபூர்வமா சொல்லுங்கோ'' என்று சொன்னதையும் அவர்கள் கேட்கவில்லை. ஹோமத்தாலும், கோபத்தாலும் குருக்கள் முகம் சிவந்தது தான் மிச்சம்.
என்ன தான் பழகியிருந்தாலும் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் கூடியிருக்கும் வாழ்க்கையின் முக்கியமான மணவிழாவில், ஏதோ பெண்ணும் மாப்பிள்ளையும் பூங்காவில் தனித்து இருப்பதைப் போல நடந்து கொண்டது, வந்திருந்தோர் அனைவரையும் எரிச்சல் படுத்தியது. தாலி வைபவத்தை, ஜாலி வைபவம் ஆக்கிவிட்டார்கள்.
கே.இராமசாமி, திருச்சி.
ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் நண்பரின் இல்லத் திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். மணமக்கள் இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போதே பழகியவர்கள். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடாயிற்று.
பெண்ணும்- மாப்பிள்ளையும் ஆழமான காதலர்கள் என்பதை மணவறையில் அவர்கள் காட்டிய அன்யோன்யமே உணர்த்தியது. அது வாழ்த்த வந்த பலரையும் சில நேரங்களில் முகம் சுளிக்கவும் வைத்தது. மணவறையில் உட்கார்ந்ததில் இருந்து ஒரு மணி நேரம் முழுக்க, திருமணம் நடத்தி வைக்கும் குருக்கள் முறையாக மந்திரம் சொல்லிக்கொண்டு வந்தார். பெண்ணையும், மாப்பிள்ளையையும் தான் சொல்லும் மந்திரங்களை தன்கூடவே சொல்லச் சொன்னார். பெண்ணும் மாப்பிள்ளையும் குருக்கள் சொல்வதையும், செய்யும் சடங்குகளையும் முறையாக செய்யாமல் இருவரும் சிரித்து பேசியபடி ஒப்புக்காக செய்து கொண்டிருந்தனர். குருக்கள் இடைஇடையே "அக்கறையா , பக்திபூர்வமா சொல்லுங்கோ'' என்று சொன்னதையும் அவர்கள் கேட்கவில்லை. ஹோமத்தாலும், கோபத்தாலும் குருக்கள் முகம் சிவந்தது தான் மிச்சம்.
என்ன தான் பழகியிருந்தாலும் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் கூடியிருக்கும் வாழ்க்கையின் முக்கியமான மணவிழாவில், ஏதோ பெண்ணும் மாப்பிள்ளையும் பூங்காவில் தனித்து இருப்பதைப் போல நடந்து கொண்டது, வந்திருந்தோர் அனைவரையும் எரிச்சல் படுத்தியது. தாலி வைபவத்தை, ஜாலி வைபவம் ஆக்கிவிட்டார்கள்.
கே.இராமசாமி, திருச்சி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மனதை அதிர வைத்த `மரணக் குளியல்'
எனது நண்பர் ஒருவர் குளத்திற்கு குளிக்கச் செல்லும்போதெல்லாம் அவரது குழந்தைகள் இரண்டுபேரையும் கூடவே அழைத்துச் செல்வார். 8 வயது, 5 வயதுள்ள குழந்தைகள் இருவருமே செல்லமாக வளர்ந்தனர். அதனால் அவர் அழைத்துச் செல்லாவிட்டாலும், குழந்தைகள் கூடவே கிளம்பிச் சென்று விடும்.
இதுதான் விபரீதம் ஆயிற்று. அன்று அவனது அப்பா ஊரில் இல்லை. 8 வயது பையன் தினசரி குளிக்கும் குளத்திற்கு தானாகவே சென்று விட்டான். சின்னப்பையன் தூங்கியதால் அவன் செல்லவில்லை.
நண்பரின் மனைவியோ சமையல் வேலையில் ஈடுபட்டிருந்ததால் மகன் குளத்திற்கு சென்றதை அவரும் கவனிக்கவில்லை. குளிக்கச்சென்ற சிறுவனோ படித்துறையில் இறங்கியபோது பாசி வழுக்கி குளத்தின் உள்ளே விழுந்திருக்கிறான். அப்போது அங்கே யாரும் இல்லை. சிறுவன் அப்படியே தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டான்.
வெகுநேரம் கழித்து அந்த குளத்திற்கு குளிக்கச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர் தண்ணீரில் மிதந்த சிறுவனைப் பார்த்து பதறிப்போய் தூக்கியிருக்கிறார். சிறுவன் பிணமாகிவிட்டது தெரிந்ததும் அதிர்ந்தவர், உடலை தூக்கிக்கொண்டு நண்பரின் வீட்டிற்கு வந்தார். அப்போது கூட தனது மூத்தமகன் வீட்டைவிட்டு வெளியேபோனது தெரியாமல் நண்பரின் மனைவி சமையல் வேலையையே செய்துகொண்டிருந்தார். மகனை பிணமாக பார்த்த போது வயிற்றிலும், தலையிலும் அடித்து கொண்டு அவர் அழுததைப் பார்த்து தெருவே திரண்டு நின்று கண்ணீர் விட்டது. நண்பருக்கும் தகவல் கொடுத்து அவரும் வந்துவிட, அவரும் துடித்தார். கதறினார்.
சிறு குழந்தைகளை நீர் நிலைகள் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று பழக்கக் கூடாது.
அ.க.பன்னீர்செல்வம், திருப்பூர்.
எனது நண்பர் ஒருவர் குளத்திற்கு குளிக்கச் செல்லும்போதெல்லாம் அவரது குழந்தைகள் இரண்டுபேரையும் கூடவே அழைத்துச் செல்வார். 8 வயது, 5 வயதுள்ள குழந்தைகள் இருவருமே செல்லமாக வளர்ந்தனர். அதனால் அவர் அழைத்துச் செல்லாவிட்டாலும், குழந்தைகள் கூடவே கிளம்பிச் சென்று விடும்.
இதுதான் விபரீதம் ஆயிற்று. அன்று அவனது அப்பா ஊரில் இல்லை. 8 வயது பையன் தினசரி குளிக்கும் குளத்திற்கு தானாகவே சென்று விட்டான். சின்னப்பையன் தூங்கியதால் அவன் செல்லவில்லை.
நண்பரின் மனைவியோ சமையல் வேலையில் ஈடுபட்டிருந்ததால் மகன் குளத்திற்கு சென்றதை அவரும் கவனிக்கவில்லை. குளிக்கச்சென்ற சிறுவனோ படித்துறையில் இறங்கியபோது பாசி வழுக்கி குளத்தின் உள்ளே விழுந்திருக்கிறான். அப்போது அங்கே யாரும் இல்லை. சிறுவன் அப்படியே தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டான்.
வெகுநேரம் கழித்து அந்த குளத்திற்கு குளிக்கச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர் தண்ணீரில் மிதந்த சிறுவனைப் பார்த்து பதறிப்போய் தூக்கியிருக்கிறார். சிறுவன் பிணமாகிவிட்டது தெரிந்ததும் அதிர்ந்தவர், உடலை தூக்கிக்கொண்டு நண்பரின் வீட்டிற்கு வந்தார். அப்போது கூட தனது மூத்தமகன் வீட்டைவிட்டு வெளியேபோனது தெரியாமல் நண்பரின் மனைவி சமையல் வேலையையே செய்துகொண்டிருந்தார். மகனை பிணமாக பார்த்த போது வயிற்றிலும், தலையிலும் அடித்து கொண்டு அவர் அழுததைப் பார்த்து தெருவே திரண்டு நின்று கண்ணீர் விட்டது. நண்பருக்கும் தகவல் கொடுத்து அவரும் வந்துவிட, அவரும் துடித்தார். கதறினார்.
சிறு குழந்தைகளை நீர் நிலைகள் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று பழக்கக் கூடாது.
அ.க.பன்னீர்செல்வம், திருப்பூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காற்றில் பறந்த கல்யாண வாக்குறுதி
சில வாரங்களுக்கு முன்னால் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பார்ப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் வெளிïரிலிருந்து வந்திருந்தார்கள். பெண்ணைப் பார்த்ததும் அவர்களுக்கு பிடித்துவிட, அதையும் அப்போதே சொல்லி விட்டார்கள். மூன்றே மாதத்திற்குள் திருமணத்தை நடத்தி விடலாம் என்று இரு வீட்டாரும் முடிவு செய்து விட்டார்கள்.
ஒரு மாதம் கடந்திருக்கும். அதே பெண்ணைப் பார்ப்பதற்கு வேறொரு மாப்பிள்ளை வீட்டார் வந்திருப்பதை அறிந்தேன். அதிர்ந்துபோன நான், அந்த மாப்பிள்ளை வீட்டார் புறப்பட்டுப்போனதும், `உங்கள் பெண்ணுக்குத்தான் ஏற்கனவே திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்திருந்தீர்களே... பிறகு எப்படி மறுபடியும் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்கிறார்கள்... குழப்பமாக இருக்கிறதே...?' என்று பெண்ணின் அப்பாவைப் பார்த்து கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. `ஆமாங்க... அதனால் என்ன... ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீட்டாரிடம் வெறுமனே சம்மதம் தானே சொல்லியிருக்கிறோம். முன்பு பார்த்த மாப்பிள்ளையை விட நல்ல மாப்பிள்ளையாக இவர் அமைந்து விட்டால், முன்பு சம்மதம் தெரிவித்த இடத்தில் `வேண்டாம்' என்று சொல்லிவிட வேண்டியதுதானே...' என்று கூலாக சொன்னார்.
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற நினைக்காத இந்த மனிதர்களைப் பற்றி என்னதான் சொல்வது?
பா.பானுமதி, கோவை.
சில வாரங்களுக்கு முன்னால் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பார்ப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் வெளிïரிலிருந்து வந்திருந்தார்கள். பெண்ணைப் பார்த்ததும் அவர்களுக்கு பிடித்துவிட, அதையும் அப்போதே சொல்லி விட்டார்கள். மூன்றே மாதத்திற்குள் திருமணத்தை நடத்தி விடலாம் என்று இரு வீட்டாரும் முடிவு செய்து விட்டார்கள்.
ஒரு மாதம் கடந்திருக்கும். அதே பெண்ணைப் பார்ப்பதற்கு வேறொரு மாப்பிள்ளை வீட்டார் வந்திருப்பதை அறிந்தேன். அதிர்ந்துபோன நான், அந்த மாப்பிள்ளை வீட்டார் புறப்பட்டுப்போனதும், `உங்கள் பெண்ணுக்குத்தான் ஏற்கனவே திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்திருந்தீர்களே... பிறகு எப்படி மறுபடியும் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்கிறார்கள்... குழப்பமாக இருக்கிறதே...?' என்று பெண்ணின் அப்பாவைப் பார்த்து கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. `ஆமாங்க... அதனால் என்ன... ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீட்டாரிடம் வெறுமனே சம்மதம் தானே சொல்லியிருக்கிறோம். முன்பு பார்த்த மாப்பிள்ளையை விட நல்ல மாப்பிள்ளையாக இவர் அமைந்து விட்டால், முன்பு சம்மதம் தெரிவித்த இடத்தில் `வேண்டாம்' என்று சொல்லிவிட வேண்டியதுதானே...' என்று கூலாக சொன்னார்.
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற நினைக்காத இந்த மனிதர்களைப் பற்றி என்னதான் சொல்வது?
பா.பானுமதி, கோவை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
நல்ல தொகுப்பு
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
காலண்டர் புதுசு! வருஷம் பழசு!
எனது நண்பர் ஒருவர் சென்னை பூக்கடை பகுதியில் வேலை செய்து வருகிறார். அவர் கடந்த டிசம்பர் மாதம் கடைசி நாளன்று வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது பாரிமுனை பகுதியில் ரோட்டோரத்தில் காலண்டர்களை குவித்து வைத்து ``மங்கூஸ் காலண்டர் பத்து ரூபாய்! மங்கூஸ் காலண்டர் பத்து ரூபாய்!!'' என்று கூவி விற்பனை செய்து கொண்டிருந்திருக் கின்றார்கள். இவரும் ``பத்து ரூபாய்க்கு காலண்டரா? ஆச்சர்யமாக இருக்கிறதே! என்று நினைத்து கும்பலில் புகுந்து, தனக்கும், தன் தங்கையின் வீட்டுக்கும், பக்கத்து வீட்டிற்கும் சேர்த்து மூன்று காலண்டர்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பி இருக்கிறார்.
மறுநாள், புது வருடம்! பழைய காலண்டரை கழற்றி விட்டு புது காலண்டரை பந்தாவாக மாட்டி வைத்தார். `ஒரு சராசரி காலண்டர் 25 ரூபாய் விற்கும் நேரத்தில் ஒரு சூப்பர் காலண்டர் பத்து ரூபாய்க்கு கிடைத்ததே!' என்று பெருமைப்பட்டார்.
அடுத்த நாள் முதல் தேதியை கிழிக்க, அங்கே தெரிந்ததோ 2.1.2010 என்ற தேதி! அதிர்ச்சியடைந்த அவர் அவசர அவசரமாய் அடுத்தடுத்த தாள்களை திருப்ப எல்லா தாள்களுமே 2010-ம் ஆண்டிற்கு உரியன. டிஜிட்டல் பிரிண்ட்டில், 2011-ம் வருடத்தின் முதல் தாளை மட்டும் பிரிண்ட் செய்து, காலண்டர் `கேக்'கில் மேற்புறம் ஒட்டி இரவோடு இரவாக அட்டகாசமாக வியாபாரம் செய்து விட்டிருந்தனர்.
ஏ.ரகுமான், சென்னை.
எனது நண்பர் ஒருவர் சென்னை பூக்கடை பகுதியில் வேலை செய்து வருகிறார். அவர் கடந்த டிசம்பர் மாதம் கடைசி நாளன்று வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது பாரிமுனை பகுதியில் ரோட்டோரத்தில் காலண்டர்களை குவித்து வைத்து ``மங்கூஸ் காலண்டர் பத்து ரூபாய்! மங்கூஸ் காலண்டர் பத்து ரூபாய்!!'' என்று கூவி விற்பனை செய்து கொண்டிருந்திருக் கின்றார்கள். இவரும் ``பத்து ரூபாய்க்கு காலண்டரா? ஆச்சர்யமாக இருக்கிறதே! என்று நினைத்து கும்பலில் புகுந்து, தனக்கும், தன் தங்கையின் வீட்டுக்கும், பக்கத்து வீட்டிற்கும் சேர்த்து மூன்று காலண்டர்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பி இருக்கிறார்.
மறுநாள், புது வருடம்! பழைய காலண்டரை கழற்றி விட்டு புது காலண்டரை பந்தாவாக மாட்டி வைத்தார். `ஒரு சராசரி காலண்டர் 25 ரூபாய் விற்கும் நேரத்தில் ஒரு சூப்பர் காலண்டர் பத்து ரூபாய்க்கு கிடைத்ததே!' என்று பெருமைப்பட்டார்.
அடுத்த நாள் முதல் தேதியை கிழிக்க, அங்கே தெரிந்ததோ 2.1.2010 என்ற தேதி! அதிர்ச்சியடைந்த அவர் அவசர அவசரமாய் அடுத்தடுத்த தாள்களை திருப்ப எல்லா தாள்களுமே 2010-ம் ஆண்டிற்கு உரியன. டிஜிட்டல் பிரிண்ட்டில், 2011-ம் வருடத்தின் முதல் தாளை மட்டும் பிரிண்ட் செய்து, காலண்டர் `கேக்'கில் மேற்புறம் ஒட்டி இரவோடு இரவாக அட்டகாசமாக வியாபாரம் செய்து விட்டிருந்தனர்.
ஏ.ரகுமான், சென்னை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேடி வந்தாள்... `திருடி' சென்றாள்!
எங்கள் உறவினர் ஒருவர் வீட்டில் நடந்த சம்பவம் இது. காலைநேரம் அவசரமாய் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து கொண்டிருந்த நேரத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி வந்து கதவை தட்டியிருக்கிறாள். கதவைத் திறந்ததும், ``நான் கியாஸ் ஏஜென்சியிலிருந்து வருகிறேன். கியாஸ் பைப் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்'' என்று கூறியிருக்கிறாள்.
அப்போது என் உறவினர் குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பும் அவசரத்தில் இருக்கவே, அதை புரிந்து கொண்டது போல், "ஓ.கே...நானே `செக்` பண்ணிக் கிறேன்'' என்று கூறிவிட்டு, சமையல் அறையை நோக்கி சென்றிருக்கிறாள். அங்கு, கியாஸ் இணைப்பு பைப்பை சரிபார்த்திருக்கிறாள். பின்பு ஏதோ ஒரு சிலிப்பை சிலிண்டரில் ஒட்டியிருக் கிறாள்.
அடுத்து தன் கையில் இருந்த பையை திறந்து ஒரு தகட்டை வெளியே எடுத்திருக்கிறாள். "இதை அடுப்பில் பொருத்தவேண்டும். பொருத்தினால் கியாஸ் மிக குறைவாகத்தான் செலவாகும். இதைக் கடையில் வாங்கினால் ரூ.3,000. நாங்கள் ஏஜென்சியிலிருந்து வந்து ரூ.1,000 க்கு கொடுக் கிறோம்'' என்றும் நம்பும்படி பேசியுள்ளாள். அதை யார் வந்து, எப்படி பொருத்துவார்கள் என்று கேட்டபோது, ஏஜென்சி ஆள் வந்து பொருத்துவார் என்றுகூறிவிட்டு, ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு சென்று விட்டாள்.
இதே போல் மேலும் 4 வீடுகளிலும் அதிரடி விசிட் செய்து பணம் வாங்கிக் கொண்டு போயிருக்கிறாள், அதில் ஒருவருக்கு சந்தேகம் வந்து ஏஜென்சியை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார். `அப்படியெல்லாம் யாரையும் அனுப்பவில்லை. அதுவும் பெண்களை அனுப்பவே மாட்டோம். அவள் என்ன தகடு கொடுத்தாள்?' என்று திருப்பி கேட்டிருக் கிறார்கள்.
இவர்கள் உடனே உஷாராகி, அவளைத் தேட அவள் அக்கம் பக்கத்தில் சில வீடுகளுக்கு `நாமம்' போட்டுவிட்டு போய்விட்டாள்.
-வி.ஸ்ரீவித்யா, ஈரோடு.
எங்கள் உறவினர் ஒருவர் வீட்டில் நடந்த சம்பவம் இது. காலைநேரம் அவசரமாய் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து கொண்டிருந்த நேரத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி வந்து கதவை தட்டியிருக்கிறாள். கதவைத் திறந்ததும், ``நான் கியாஸ் ஏஜென்சியிலிருந்து வருகிறேன். கியாஸ் பைப் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்'' என்று கூறியிருக்கிறாள்.
அப்போது என் உறவினர் குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பும் அவசரத்தில் இருக்கவே, அதை புரிந்து கொண்டது போல், "ஓ.கே...நானே `செக்` பண்ணிக் கிறேன்'' என்று கூறிவிட்டு, சமையல் அறையை நோக்கி சென்றிருக்கிறாள். அங்கு, கியாஸ் இணைப்பு பைப்பை சரிபார்த்திருக்கிறாள். பின்பு ஏதோ ஒரு சிலிப்பை சிலிண்டரில் ஒட்டியிருக் கிறாள்.
அடுத்து தன் கையில் இருந்த பையை திறந்து ஒரு தகட்டை வெளியே எடுத்திருக்கிறாள். "இதை அடுப்பில் பொருத்தவேண்டும். பொருத்தினால் கியாஸ் மிக குறைவாகத்தான் செலவாகும். இதைக் கடையில் வாங்கினால் ரூ.3,000. நாங்கள் ஏஜென்சியிலிருந்து வந்து ரூ.1,000 க்கு கொடுக் கிறோம்'' என்றும் நம்பும்படி பேசியுள்ளாள். அதை யார் வந்து, எப்படி பொருத்துவார்கள் என்று கேட்டபோது, ஏஜென்சி ஆள் வந்து பொருத்துவார் என்றுகூறிவிட்டு, ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு சென்று விட்டாள்.
இதே போல் மேலும் 4 வீடுகளிலும் அதிரடி விசிட் செய்து பணம் வாங்கிக் கொண்டு போயிருக்கிறாள், அதில் ஒருவருக்கு சந்தேகம் வந்து ஏஜென்சியை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார். `அப்படியெல்லாம் யாரையும் அனுப்பவில்லை. அதுவும் பெண்களை அனுப்பவே மாட்டோம். அவள் என்ன தகடு கொடுத்தாள்?' என்று திருப்பி கேட்டிருக் கிறார்கள்.
இவர்கள் உடனே உஷாராகி, அவளைத் தேட அவள் அக்கம் பக்கத்தில் சில வீடுகளுக்கு `நாமம்' போட்டுவிட்டு போய்விட்டாள்.
-வி.ஸ்ரீவித்யா, ஈரோடு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 32 • 1, 2, 3, 4 ... 17 ... 32
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 32
|
|