புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
31 Posts - 55%
heezulia
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
17 Posts - 3%
prajai
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
9 Posts - 1%
jairam
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா?


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 06, 2011 1:56 pm

ஈழ மக்களின் போராட்டமும் அவர்களின் வாழ்வு உரிமையும் பலரால் கேலிபடுத்தப்படுகின்றன. அவர்களுக்கு தேசிய உரிமைகிடையாது. இந்தியாவிலிருந்து வந்தவர்கள். வந்த இடத்தில் சொந்த நாடு கேட்கிறார்கள் என்பதுபோன்ற தவறான கருத்துக்கள் இன்னும் பலபேருக்கு உண்டு.

இலங்கைக்கு சிங்களவர்கள்தான் பின்னால் வந்தவர்கள். தமிழர் அதன் முன்னிருந்தே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் தற்போது சிறையில் வாடும் சரத் பொன்சேகரா ஒருதடவை இலங்கை சிங்களவருக்கே சொந்தமானது. தமிழருக்கு உரிமை இல்லை. அவர்கள் இந்தியாவுக்கே போகட்டும் என்று கூறியகருத்தை ஆமோதிக்கும் பல தவறான கருத்தை கொண்ட தமிழர்களுக்காக சில ஆதாரங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்


ஈழத் தமிழர்கள் யார்?

ஈழத்தின் பூர்வீகக் குடியினர் தமிழர்களே.


இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் தமிழர்களே!கி.மு.5ஆம் நூற்றாண்டில் லாலா (வங்காளத்துக்கும், ஒரிசாவுக்கும் இடைப்பட்ட பகுதி) நாட்டின் மன்னன் சிங்கபாருவால் நாடு கடத்தப்பட்டு மரக்கலங்களில் ஏற்றி அனுப்பப்பட்ட அவனது மகன் விஜயனும் தோழர்களும் இலங்கையைச் சென்றடைந்தனர்.

விஜயன் வழிவந்தவர்களே சிங்கள மக்களாவர்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டளவிலிருந்து இலங்கைக்குப் பவுத்தம் நுழைந்தபின் தான் பேச்சு வழக்கிலான சிங்கள மொழி தோன்றிற்று. ஏனெனில் பவுத்த மதத்தோடு தான் இலங்கைக்குப் பாலி மொழி சென்றடைந்தது. அந்தப் பாலி, சமஸ்கிருதம், தமிழ் என்ற மொழிச் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே சிங்கள மொழியாகும்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து பேச்சு வழக்கிலிருந்தபோதிலும் சிங்கள மொழி வரி வடிவம் பெற்று, சிங்கள எழுத்து கள் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தான் உருவாக் கப்பட்டன.சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் இலங்கைக்கு சென்றதற்கு முன்னிருந்த தமிழர் கள் இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள். அந்தக் காலம் தமிழகத்திலும், ஈழத்திலும் வாழ்ந்த தமிழர்கள் இந்து மதம், கடவுள் என்ற ஆரியர்களின் மாயைகளுக்கு அடிமையாகி சீரழிந்து கொண்டிருந்த காலம். வலிமை மிக்க படைகளை வைத்து சேர சோழ பாண்டிய அரசுகள் பல போர்களை நடத்தி வந்த போதிலும் அவர்களின் ஆட்சிச் சிறப்புக்கான ஆதாரங் களோ கட்வெட்டுக்களோ எதுவும் கிடையாது.

கரிகாலன் கட்டிய கல்லணையைத் தவிர, அவ்வாறு ஈழத்திலும் அன்று தமிழர் வாழ்ந்ததற்குக் கோயில்கள் தான் சான்றாக உள்ளன.விஜயன் இலங்கைக்குச் சென்றடைந்த காலத்தில் தமிழகத்தில் இராமேஸ்வரம் போன்று ஈழத்தில் திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நடுவேஸ்வரம் என்ற ஈஸ்வர தலங்கள் இருந்ததாகச் சிங்கள மக்களின் வரலாற்று நூலான மகாவம்சமும் கூறுகிறது. கி.மு. 2ஆம் நூற்றாண்டில் (கி.மு. 161-- 117) 44 ஆண்டுகள் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கை முழுவதையும் ஆண்டான் என்பதையும் சிங்கள வரலாற்று நூலான மகாவம்சமே எடுத்துக் கூறுகிறது.


2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த கடைச் சங்கப் பாடல்களில் ஈழத்து புலவர் ஈழத்துப் பூதந்தேவனார் பாடல்கள் காணப்படுகின்றன.கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை இலங்கை முழுவதையும் சிங்களவர்களும் தமிழர்களும் மாறி மாறி ஆண்டு வந்தனர். கி.பி. 15ஆம் நூற்றாண்டிலிருந்து அய்ரோப்பிய காலனியா திக்க வாதிகளால் இலங்கைத் தீவு கைப்பற்றப் படும்வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, வட மேற்குப் பகுதிகளைத் தமிழர்கள் நிரந்தரமாக ஆண்டு வந்தனர்.


கி.பி. 1215ஆம் ஆண்டிலிருந்து 1618ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண இராச்சியம் என அழைக்கப்பட்ட தமிழ் இராச்சியத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னர்களின் பெயர்களும் அவர்கள் ஆண்ட காலப் பகுதிகளும் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.


17ஆம் நூற்றாண்டின் பின் போர்த்துக்கீசியரும், டச்சுக்காரரும் இலங்கையை கைப்பற்றிய போதிலும் தமிழர்கள் ஆண்டு வந்த பகுதிகளைத் தனியாகவும், சிங்களவர்கள் ஆண்டுவந்த பகுதிகளைத் தனியாகவும் - தனித்தனியான சட்ட விதிகளின் கீழ் ஆட்சி செலுத்தினர்.


பிரிட்டிசார் இலங்கைத் தீவு முழுவதையும் கைப்பற்றியதன் பின், 1833ஆம் தமது நிருவாக வசதிக்காக அதுவரை கண்டி அரசு, கோட்டை அரசு, யாழ்ப்பாண அரசு, வன்னிக் குறுநில அரசு என இயங்கி வந்த ஆட்சிப் பிரதேசங்களை ஒன்றிணைத்து, ஒரே நாடாக ஆக்கினர்.


தமிழகத்தில் சேர சோழ பாண்டியப் பேரரசுகள் அழிந்ததற்குப் பின்னாலும் பிரிட்டிசாரை எதிர்த்து பாஞ்சாலங்குறிச்சிக் குறுநில மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்களும் போராட்டம் நடத்திய காலத்தில், ஈழத்தில் யாழ்ப்பாணத் தமிழரசு அழிந்ததற்குப் பின்னாலும் வன்னிக்குறுநில மன்னன் பண்டார வன்னியன் பிரிட்டிசாரை எதிர்த்து வீரப் போர் புரிந்தான்.


1803இல் திறை கேட்டு வந்த பிரிட்டிஷ் அமில்தார் எனப்பட்ட அதிகாரியின் தலையைச் சீவி எறிந்ததுடன் பிரிட்டிசாரை எதிர்த்து 9 ஆண்டு காலம் வீரப் போர் புரிந்து 1811இல் வீர மரணமடைந்தான்.


பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றிருந்த சேர சோழ பாண்டிய ஆட்சிகள் எல்லாம் சிதைக்கப்பட்டு ஏக இந்தியா என்ற ஒரே ஆட்சியின் கீழ் எப்படி வந்ததோ அதே போல நீண்ட காலமாகச் சிறப்போடு நீடித்த யாழ்ப் பாணத் தமிழ் அரசும், சிங்கள அரசுகளும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சிதைக்கப்பட்டு இலங்கைத் தீவு முழுவதும் ஒரே ஆட்சியின்கீழ், இணைக் கப்பட்டது.


தமிழகத்தவர்களுக்குத் தமிழகம் எப்படிப் பூர்வீகப் பூமியோ, அப்படி ஈழத் தமிழர்களுக்குத் தமிழீழப்பகுதி பூர்வீகப் பூமியாகும்.

இந்த வரலாற்று உண்மைகளைத் தெரியாதவர்கள்தான் சிங்கள நாட்டுக்குப் போய் அங்கு தனிநாடு கேட்டால் சிங்களவர்கள் சும்மா இருப்பார்களா? என்று கேட்கிறார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேயிலைத் தோட்டங்களை உருவாக்க என அழைத்துச் செல்லப்பட்டவர்களை நினைத்துக் கொண்டு.

எடுத்தது
http://srilankantamilhistory.blogspot.com/


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 06, 2011 2:23 pm

PDF நூல் தரவிறக்கம் கீழே

இலங்கை வாழ் தமிழர் வரலாறு

http://www.noolaham.net/project/02/197/197.pdf


ஈழத்தமிழர் வரலாற்றுச்சுவடுகள்

http://noolaham.net/project/42/4178/4178.pdf

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 3:07 pm

மிக அற்புதமான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 06, 2011 3:35 pm

பள்ளிக்காலங்களில் சமூகக்கல்விப்பாடத்தில் கற்றதை மீண்டும் திரும்ப பார்த்ததுபோல் தகவல்கள் விளங்கச்செய்தமைக்கு மிக்க நன்றி ஐயா
உண்மைதான் ஒருசிலரது கருத்துக்கள் இணையங்களில் உலாவருவதைப்பார்த்திருக்கிறோம்

தமிழர்கள் ஆதிகாலத்தில் வாழ்ந்த வரலாறு படித்திருக்கிறொம்
பௌத்தமதம் இந்தியாவிலிருந்து அரசமரத்துடன் விஜம் செய்த விஜயமன்னனின் பின்னர்தான் உருவானது என்ற வரலாறெல்லாம் தெரிந்தவர்கள் இவ்வாறு சொல்வதில்லைதான்

இஸ்லாமியர்களின் வரலாறு கூட அரபியர்களின் வியாபார நோக்கத்தில் வருகை தந்தவர்களின் தமிழர்களின் விவாகத்தில் உருவானது என்றும் கூற கேட்டிருக்கிறோம் படித்திருக்கிறோம்

இருந்தாலும் காலங்கள் கடந்து சமகாலத்துடன் ஒப்பிடும்பொது எம் மூதாயர்கள் விட்ட தவறுகள் மற்றும் இழைக்கப்பட்ட கெடுதிகளினூடாக தலைக்குமேல் வெள்ளம் போனது போல் சமூகங்களின் நிலை ஆகிவிட்டது

எதிர்கால சமூகத்திற்கு சமகாலத்திலிருந்து எதனைக்கொடுக்கப்போகிறோம் என்பதுதான் தற்கால கேள்வியாக அமைகிறதே...

இவைகளுக்கு சமரசமான எல்லாச்சமூகத்திற்கும் ஏற்ற தீர்வு எப்போது எட்டும் யார் யார் முயற்சிப்பார்கள் என்ற வினவல்களோடு மாத்திரம் எம் வாழ்நாள் கழிகிறது

இவைகளுக்கு போர்புரிந்தும் பயனில்லை பேச்சுவார்த்தைகளும் பயனில்லை என்ற நிலையாகிவிட்டதே....

பிரார்த்திப்போம் நல்ல சுபீட்சமான சந்தோசமான நாடு அல்லது வாழ்க்கை உருவாகட்டும் ..



நேசமுடன் ஹாசிம்
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 06, 2011 3:39 pm

மிக்க நன்றி ஐயா மிகச்சிறந்த வரலாற்றுப்பதிவிது



நேசமுடன் ஹாசிம்
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
Guest
Guest

PostGuest Wed Apr 06, 2011 3:40 pm

:வணக்கம்: நல்லது நடக்கும்

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Wed Apr 06, 2011 3:57 pm

நல்லது நடக்கட்டும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும்.

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Wed Apr 06, 2011 6:17 pm

kirikasan wrote:
பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேயிலைத் தோட்டங்களை உருவாக்க என அழைத்துச் செல்லப்பட்டவர்களை நினைத்துக் கொண்டு.


இதை நான் கண்டிக்கிறேன்..
தேயிலைத் தோட்டங்களை உருவாக்க அழைத்து செல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் தமிழர்களே..

அப்படியெனில், அவர்களை நீங்கள் எப்படி சேர்க்கிறீர்கள்?

தமிழர் என்று ஒன்றாய் கருதுகிறீர்களா அல்லது ஈழத்தமிழர் அல்லாதவர் என்பதால் ஒதுக்குகிறீர்களா?



ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 06, 2011 6:27 pm

ஆளுங்க wrote:
kirikasan wrote:
பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேயிலைத் தோட்டங்களை உருவாக்க என அழைத்துச் செல்லப்பட்டவர்களை நினைத்துக் கொண்டு.


இதை நான் கண்டிக்கிறேன்..
தேயிலைத் தோட்டங்களை உருவாக்க அழைத்து செல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் தமிழர்களே..

அப்படியெனில், அவர்களை நீங்கள் எப்படி சேர்க்கிறீர்கள்?

தமிழர் என்று ஒன்றாய் கருதுகிறீர்களா அல்லது ஈழத்தமிழர் அல்லாதவர் என்பதால் ஒதுக்குகிறீர்களா?

நிச்சயமாக.. தங்கள் கருத்தை முழுதாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இது நான் எழுதியதல்ல. அங்கே குறிப்பிட்ட இணயத்தளத்திலிருந்து எடுத்தேன். அந்த வசனத்தை நீக்குவோமா என்று எண்ணிவிட்டு அதை எடிட் செய்வதற்கு ஆக்கத்தின் உண்மையான வடிவத்தை திருத்தும் உரிமை எனக்கில்லை என்பதால் அப்படியே போட்டுவிட்டேன். உங்கள் கருத்தோடு நான் முழுதாக ஒத்துப்போகிறேன். அந்த ஒரு வசனத்துக்காக மிகுதியை போடாமல் விட மனம் கேட்கவில்லை ஆனாலும் அதில் மோசமாக ஒன்றும் தெரியவில்லை. அந்த தமிழரை நினைத்து தவறாக கூறுகிறார்கள் என கொள்ளலாமே

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Wed Apr 06, 2011 6:49 pm

kirikasan wrote:
ஆளுங்க wrote:
kirikasan wrote:
பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேயிலைத் தோட்டங்களை உருவாக்க என அழைத்துச் செல்லப்பட்டவர்களை நினைத்துக் கொண்டு.


இதை நான் கண்டிக்கிறேன்..
தேயிலைத் தோட்டங்களை உருவாக்க அழைத்து செல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் தமிழர்களே..

அப்படியெனில், அவர்களை நீங்கள் எப்படி சேர்க்கிறீர்கள்?

தமிழர் என்று ஒன்றாய் கருதுகிறீர்களா அல்லது ஈழத்தமிழர் அல்லாதவர் என்பதால் ஒதுக்குகிறீர்களா?

நிச்சயமாக.. தங்கள் கருத்தை முழுதாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இது நான் எழுதியதல்ல. அங்கே குறிப்பிட்ட இணயத்தளத்திலிருந்து எடுத்தேன். அந்த வசனத்தை நீக்குவோமா என்று எண்ணிவிட்டு அதை எடிட் செய்வதற்கு ஆக்கத்தின் உண்மையான வடிவத்தை திருத்தும் உரிமை எனக்கில்லை என்பதால் அப்படியே போட்டுவிட்டேன். உங்கள் கருத்தோடு நான் முழுதாக ஒத்துப்போகிறேன். அந்த ஒரு வசனத்துக்காக மிகுதியை போடாமல் விட மனம் கேட்கவில்லை ஆனாலும் அதில் மோசமாக ஒன்றும் தெரியவில்லை. அந்த தமிழரை நினைத்து தவறாக கூறுகிறார்கள் என கொள்ளலாமே

அதற்கு முன்பே பிரிவினைக்கு அடிக்கோலிடப்பட்டு இருக்கிறது!!

kirikasan wrote:
தமிழகத்தவர்களுக்குத் தமிழகம் எப்படிப் பூர்வீகப் பூமியோ, அப்படி ஈழத் தமிழர்களுக்குத் தமிழீழப்பகுதி பூர்வீகப் பூமியாகும்.

இந்த வரியே கட்டுரையாளர் தமிழர்களை நாடுகள் வாரியாக பிரிக்கிறாரோ என்று ஐயப்பட வைக்கிறது..

தமிழர்கள் மொழியால் தான் இணைந்திருக்கிறார்கள்.. நாட்டால் அல்ல!!
இதற்கு சோழ, பாண்டிய அரசுகளே ஒரு உதாரணம்...

தமிழகத்தவர், ஈழத்தமிழர் என்று பிரித்து எழுதி தனி அடையாளம் பெற இந்த கட்டுரை முயற்சி செய்கிறதோ என்று தோன்றுகிறது!!



ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக