|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!by யினியவன் Today at 11:13 am
» முகநூலில் ரசித்தவை-2
by MADHUMITHA Today at 11:12 am
» விண்டோஸ் புளு
by யினியவன் Today at 11:12 am
» உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு
by ராஜா Today at 11:11 am
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by யினியவன் Today at 11:08 am
» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by பாலாஜி Today at 11:05 am
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by ராஜா Today at 11:05 am
» மகனாக வந்தவன்!
by MADHUMITHA Today at 10:53 am
» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by ராஜா Today at 10:51 am
» டாக்டர், பஸ்ல ஏறி உட்கார்ந்த உடனேயே தூக்கம் வந்துடுது..!
by முத்துராஜ் Today at 10:48 am
» ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
by MADHUMITHA Today at 10:47 am
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by பாலாஜி Today at 10:44 am
» வேதஆகமங்களின் அடிப்படையில் இலவச வழிபாடு பயிற்சி!
by ஆரூரன் Today at 10:24 am
» சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்!
by ஆரூரன் Today at 10:21 am
» மணிமேகலையில் நிலையாமை
by ஆரூரன் Today at 10:05 am
» தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள்
by சதாசிவம் Today at 10:04 am
» இருதய இரத்த குழாய்களை திறக்கும் பானம்...
by ரிபாஸ் Today at 9:59 am
» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by MADHUMITHA Today at 9:15 am
» பென்ஷனால் மூழ்கிய தேசம் இது...
by SajeevJino Today at 7:50 am
» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by ராஜு சரவணன் Today at 7:36 am
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by சிவா Today at 3:13 am
» நதிக்கரையில் - ஜெயமோகன்
by சிவா Today at 3:09 am
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by சிவா Today at 3:07 am
» துன்பக்கேணி
by சிவா Today at 3:06 am
» ராஜா- ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது?
by aarthy Today at 12:23 am
» ஈகரையில் புதிய விருப்பம் முறைமை!
by யினியவன் Today at 12:18 am
» ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
by aarthy Today at 12:18 am
» மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு
by Muthumohamed Today at 12:03 am
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by Muthumohamed Yesterday at 11:54 pm
» 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி மாணவி சாதனை
by Muthumohamed Yesterday at 11:53 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 11:44 pm
» வில் ஸ்மித்,ஜேடன் ஸ்மித் நடிக்கும் ‘அபாய கிரகம்’
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 11:42 pm
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by ராஜு சரவணன் Yesterday at 11:07 pm
» வன்முறையாகின்ற வரம்
by nandagopal.d Yesterday at 10:34 pm
» நிகழ்காலம்
by தளிர் அலை Yesterday at 10:11 pm
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Yesterday at 10:09 pm
» விக்கிரக வழிபாடு கடவுள் வழிபாடா? – வள்ளலாருக்கும் பிரம்மசமாஜ புலவருக்கும் இடையே நடந்த தர்க்கம்
by சாமி Yesterday at 9:54 pm
» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
by krishnaamma Yesterday at 9:43 pm
» இந்த இரண்டு செய்திகளையும் பாருங்களேன் :)
by Muthumohamed Yesterday at 9:31 pm
» சவூதி அரேபியா அதிகாரியின் நேர்மை - 'நீதிக்குப் பின்தான் பாசம்'
by யினியவன் Yesterday at 9:23 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| சிவா | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| பூவன் | ||||
| krishnaamma | ||||
| பாலாஜி | ||||
| ராஜு சரவணன் |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ராஜ விருந்து - நட்புடன்...
Page 1 of 5 • Share •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5 
ராஜ விருந்து - நட்புடன்...
ராஜ விருந்து - நட்புடன்...
ஒரு மூன்றரை வருடங்களாக நானும் ஏதோ இங்கு ஹோட்டல்களில் கிடைக்கும் வெஜிடேரியன் உணவு வகைகளை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து வயிறு சுருங்கி நல்ல சாப்பாடு எதுவெனும் இனங்கண்டு கொள்ளும் திறனைக் கூட இழந்து விட்ட சூழல்.
என்னதான் அருமையான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவ்வப் பொழுது சாப்பிட்டாலும் , வீட்டு உணவு சாப்பிடுவது போல் இருக்காதென்பது நாமனைவரும் அறிந்ததே.
இன்னிலையில் அழகான அன்பான ஓர் அழைப்பு நண்பரின் வீட்டுக்கு சாப்பிட. அதுவும் வந்தே ஆகவேண்டும் என்ற அன்பான உத்தரவு. நானிருக்கும் இடத்திலிருந்து ஒரு அறுபது கிலோமீட்டர் அகலே. காலை சிற்றுண்டிக்கே வரவேண்டும் என்ற நிர்பந்தம் வேறு.
என்னதான் வயிறு காய்ந்து, நாக்கு செத்துப் போய் இருந்தாலும் நண்பர் அழைத்தார் என்பதற்காக பறந்து கட்டி சென்று ஒரு வெட்டு வெட்டவா முடியும்? சாப்பிடுவதைப் பார்த்து அப்புறம் வேறு யாரையும் அழைப்பதையே நிறுத்தி விட்டால்? மற்ற நண்பர்களின் நலன் கருதியும் அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காத்திட மதிய உணவுக்கு மட்டும் போவதென எனையே சமாதானம் செய்து கொண்டேன்.
சென்ற நொடி தொடங்கி திரும்பி வரும் அந்த நொடி வரை நண்பரும், அவரின் மனைவியும், மனைவியின் அம்மாவும், அப்பாவும் மிக மிக இயல்பாகவும், அன்பாகவும் உபசரிப்போ உபசரிப்பு. அவர்களது அன்பினில் திக்கு முக்காடிப் போய்விட்டேன் என்பது ரொம்ப ரொம்ப சாதாரண வார்த்தையாகவே தெரிகிறது எனக்கு.
அவர்கள் அனைவரும் பழகிய விதம் ஏதோ ஜென்ம ஜென்மாக பழகிய உணர்வைத் தந்தது. மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன் அந்த அன்பில் சிக்கித் தவித்தலில் - அந்த நண்பரை கடந்த இரண்டு மாதங்களாகத் தான் தெரியும். அதோடு ஒரு வாரத்துக்கு முன்னர் தான் தொலைபேசியில் பேச ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு முன் அவரை தெரியாது, பார்த்ததில்லை, பழகியதில்லை.
இதுபோல் புதிதாக பழகுபவரிடம் இத்துனை அன்பைக் காட்ட முடியுமா? வியப்பிலும் வியப்பு எனக்கு. ஆனால் இதுபோலவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதனினும் சாட்சி வேறு இருக்க வாய்ப்பில்லை. என்னால் கூட இத்துனை அன்பை ஒருவருக்கு குடுக்க முடியுமா என்று தெரியவில்லை? தெரியவில்லை என்பதை விட முடியாதென்றே சொல்லிவிடலாம்.
நண்பருக்கு குட்டி வாலாக அழகிய பெண் குழந்தை - இன்னும் சரியாகப் பேச ஆரம்பிக்கவில்லை. அதன் மழலையில் மயங்கியே போய்விட்டேன். கொஞ்ச நஞ்சம் இருந்த தெம்பு சாப்பிட அழைத்தவுடன் போயே போய்விட்டது. தப்பா நினைக்காதீங்க அவசரப்பட்டு நால்லால்லியோன்னு நினைத்து - வாழை இலையில் ஒரு பத்து பதார்த்தங்களுக்கு மேலாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் மிக மிக ருசியாக - ஒரு கல்யாண விருந்து போல் இருந்தது. சாப்பிட்டு முடிக்கும் முன்னரே மயக்கம் வந்து விட்டது.
அன்பான உபசரிப்பில் அசந்து போய்விட்டேன். வீட்டில் திட்டு வாங்கி வாங்கியே பழக்கமா - திடீர்னு செம மரியாதை கிடைத்தவுடன் கொஞ்சம் நம்பவே கஷ்டமாக இருந்தது.
நீண்ட இடைவெளிக்கு பின் நல்ல அன்பினையும் நல்ல விருந்தினையும் அதனினும் மேலாக தமிழர்களின் விருந்தோம்பல் பண்பையும் அனுபவபூர்வமாக உணர கிட்டிய பெரும் வாய்ப்பது. இரவு உணவையும் உண்டுவிட்டே போகவேண்டும் என்று வர்புறித்தினார்கள். பிரிய மனம் இல்லாமல் கிளம்பினேன் ஒரு வழியாக. ஒரு கவரில் நிறைய வடைகளையும் (நம்ம ஜாகீதா பானு வோட காக்காய்க்கோ, எலிக்கோ வைக்கும் வடை அல்ல) கொடுத்தார்கள்.
வீடு வந்தபின்னும், இன்றும் கூட நடந்தது கனவா என்ற தோணல் கூட இருக்கிறது. அப்படி ஒரு அனுபவம் எனக்கு. என்னடா இவன் ஓவரா பில்ட் அப் தரானேன்னு தோணுதா?
அவ்ளோ சந்தேகம் இருந்தா கிளம்புங்கள் அனைவரும் நம் தலைமை நடத்துனர் ராஜாவின் வீட்டுக்கு. நீங்களும் திக்கு முக்காடி மயக்கம் அடைவதை நான் கண்டு ரசித்து மகிழ காத்திருக்கிறேன்.
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே - ராஜாவ பாத்தீங்கன்னா எளிதாக தெரிஞ்சுக்கலாம் - நித்தமும் இவ்ளோ நல்லா சாப்பிட்டா ஒரு மனிதன் எவ்ளோ குண்டாகலாம்ன்னு. சரியா சாப்பிடாதவன பாக்கனூன்னா என்ன பாத்து தெரிஞ்சுக்கலாம்.
ராஜாவை நம் ஈகரை மூலம் இரண்டு மூன்று மாதங்களாகத் தான் தெரியும், போன வாரம் தான் தொலைபேசியில் பேச துவங்கினேன். இவரைப் போல நல்ல நண்பர் கிடைத்தற்கு நம் தளத்திற்கு நன்றிகள் பலப் பல.
ராஜாவுக்கும், அவர் மனைவி அர்ச்சனாவிற்கும், அர்ச்சனாவின் அப்பா அம்மாவுக்கும் என் நன்றிகள். இந்த நன்றிகள் அவர்களின் அன்பிற்கு ஈடாகாது நிச்சயமாக. அவர்களின் செல்ல குட்டி லச்சனாவிற்கு அன்பு முத்தங்கள்.
சரி இவ்ளோ சொன்னியே விருந்தைப் பற்றி - வேற என்னதான் பேசிட்டு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லியேன்னு கேக்கத் தோணுமே?
ஹி ஹி வேற என்ன - நம் தள நண்பர்களின் தலையை நல்லா உருட்டினோம் - மிளகாய்ப் பொடி தடவாத குறையா...
என்ன பேசினோம்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன் - ராஜாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன், அதனால வாயப் பிடுங்கி வம்பு வளக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்...
ஒரு மூன்றரை வருடங்களாக நானும் ஏதோ இங்கு ஹோட்டல்களில் கிடைக்கும் வெஜிடேரியன் உணவு வகைகளை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து வயிறு சுருங்கி நல்ல சாப்பாடு எதுவெனும் இனங்கண்டு கொள்ளும் திறனைக் கூட இழந்து விட்ட சூழல்.
என்னதான் அருமையான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவ்வப் பொழுது சாப்பிட்டாலும் , வீட்டு உணவு சாப்பிடுவது போல் இருக்காதென்பது நாமனைவரும் அறிந்ததே.
இன்னிலையில் அழகான அன்பான ஓர் அழைப்பு நண்பரின் வீட்டுக்கு சாப்பிட. அதுவும் வந்தே ஆகவேண்டும் என்ற அன்பான உத்தரவு. நானிருக்கும் இடத்திலிருந்து ஒரு அறுபது கிலோமீட்டர் அகலே. காலை சிற்றுண்டிக்கே வரவேண்டும் என்ற நிர்பந்தம் வேறு.
என்னதான் வயிறு காய்ந்து, நாக்கு செத்துப் போய் இருந்தாலும் நண்பர் அழைத்தார் என்பதற்காக பறந்து கட்டி சென்று ஒரு வெட்டு வெட்டவா முடியும்? சாப்பிடுவதைப் பார்த்து அப்புறம் வேறு யாரையும் அழைப்பதையே நிறுத்தி விட்டால்? மற்ற நண்பர்களின் நலன் கருதியும் அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காத்திட மதிய உணவுக்கு மட்டும் போவதென எனையே சமாதானம் செய்து கொண்டேன்.
சென்ற நொடி தொடங்கி திரும்பி வரும் அந்த நொடி வரை நண்பரும், அவரின் மனைவியும், மனைவியின் அம்மாவும், அப்பாவும் மிக மிக இயல்பாகவும், அன்பாகவும் உபசரிப்போ உபசரிப்பு. அவர்களது அன்பினில் திக்கு முக்காடிப் போய்விட்டேன் என்பது ரொம்ப ரொம்ப சாதாரண வார்த்தையாகவே தெரிகிறது எனக்கு.
அவர்கள் அனைவரும் பழகிய விதம் ஏதோ ஜென்ம ஜென்மாக பழகிய உணர்வைத் தந்தது. மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துட்டேன் அந்த அன்பில் சிக்கித் தவித்தலில் - அந்த நண்பரை கடந்த இரண்டு மாதங்களாகத் தான் தெரியும். அதோடு ஒரு வாரத்துக்கு முன்னர் தான் தொலைபேசியில் பேச ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு முன் அவரை தெரியாது, பார்த்ததில்லை, பழகியதில்லை.
இதுபோல் புதிதாக பழகுபவரிடம் இத்துனை அன்பைக் காட்ட முடியுமா? வியப்பிலும் வியப்பு எனக்கு. ஆனால் இதுபோலவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதனினும் சாட்சி வேறு இருக்க வாய்ப்பில்லை. என்னால் கூட இத்துனை அன்பை ஒருவருக்கு குடுக்க முடியுமா என்று தெரியவில்லை? தெரியவில்லை என்பதை விட முடியாதென்றே சொல்லிவிடலாம்.
நண்பருக்கு குட்டி வாலாக அழகிய பெண் குழந்தை - இன்னும் சரியாகப் பேச ஆரம்பிக்கவில்லை. அதன் மழலையில் மயங்கியே போய்விட்டேன். கொஞ்ச நஞ்சம் இருந்த தெம்பு சாப்பிட அழைத்தவுடன் போயே போய்விட்டது. தப்பா நினைக்காதீங்க அவசரப்பட்டு நால்லால்லியோன்னு நினைத்து - வாழை இலையில் ஒரு பத்து பதார்த்தங்களுக்கு மேலாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் மிக மிக ருசியாக - ஒரு கல்யாண விருந்து போல் இருந்தது. சாப்பிட்டு முடிக்கும் முன்னரே மயக்கம் வந்து விட்டது.
அன்பான உபசரிப்பில் அசந்து போய்விட்டேன். வீட்டில் திட்டு வாங்கி வாங்கியே பழக்கமா - திடீர்னு செம மரியாதை கிடைத்தவுடன் கொஞ்சம் நம்பவே கஷ்டமாக இருந்தது.
நீண்ட இடைவெளிக்கு பின் நல்ல அன்பினையும் நல்ல விருந்தினையும் அதனினும் மேலாக தமிழர்களின் விருந்தோம்பல் பண்பையும் அனுபவபூர்வமாக உணர கிட்டிய பெரும் வாய்ப்பது. இரவு உணவையும் உண்டுவிட்டே போகவேண்டும் என்று வர்புறித்தினார்கள். பிரிய மனம் இல்லாமல் கிளம்பினேன் ஒரு வழியாக. ஒரு கவரில் நிறைய வடைகளையும் (நம்ம ஜாகீதா பானு வோட காக்காய்க்கோ, எலிக்கோ வைக்கும் வடை அல்ல) கொடுத்தார்கள்.
வீடு வந்தபின்னும், இன்றும் கூட நடந்தது கனவா என்ற தோணல் கூட இருக்கிறது. அப்படி ஒரு அனுபவம் எனக்கு. என்னடா இவன் ஓவரா பில்ட் அப் தரானேன்னு தோணுதா?
அவ்ளோ சந்தேகம் இருந்தா கிளம்புங்கள் அனைவரும் நம் தலைமை நடத்துனர் ராஜாவின் வீட்டுக்கு. நீங்களும் திக்கு முக்காடி மயக்கம் அடைவதை நான் கண்டு ரசித்து மகிழ காத்திருக்கிறேன்.
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே - ராஜாவ பாத்தீங்கன்னா எளிதாக தெரிஞ்சுக்கலாம் - நித்தமும் இவ்ளோ நல்லா சாப்பிட்டா ஒரு மனிதன் எவ்ளோ குண்டாகலாம்ன்னு. சரியா சாப்பிடாதவன பாக்கனூன்னா என்ன பாத்து தெரிஞ்சுக்கலாம்.
ராஜாவை நம் ஈகரை மூலம் இரண்டு மூன்று மாதங்களாகத் தான் தெரியும், போன வாரம் தான் தொலைபேசியில் பேச துவங்கினேன். இவரைப் போல நல்ல நண்பர் கிடைத்தற்கு நம் தளத்திற்கு நன்றிகள் பலப் பல.
ராஜாவுக்கும், அவர் மனைவி அர்ச்சனாவிற்கும், அர்ச்சனாவின் அப்பா அம்மாவுக்கும் என் நன்றிகள். இந்த நன்றிகள் அவர்களின் அன்பிற்கு ஈடாகாது நிச்சயமாக. அவர்களின் செல்ல குட்டி லச்சனாவிற்கு அன்பு முத்தங்கள்.
சரி இவ்ளோ சொன்னியே விருந்தைப் பற்றி - வேற என்னதான் பேசிட்டு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லியேன்னு கேக்கத் தோணுமே?
ஹி ஹி வேற என்ன - நம் தள நண்பர்களின் தலையை நல்லா உருட்டினோம் - மிளகாய்ப் பொடி தடவாத குறையா...
என்ன பேசினோம்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன் - ராஜாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன், அதனால வாயப் பிடுங்கி வம்பு வளக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்...

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 1399
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 154
Re: ராஜ விருந்து - நட்புடன்...
இதையே சாக்கா வச்சிக்கிட்டு வீக்லி ட்ரிப் அடிக்க பிளான் போடாதீங்க நட்ஸ்........
ராஜ விருந்திருக்கு அற்தம் உள்ளே வந்த பிறகு தான் தெரிந்தது........அது நம்ம ராஜா அவர்கள் வைத்த விருந்து என்று..........
அருமை அருமை...................ஒரு போட்டோ கூடவா எடுக்கல அங்க போயி.......எடுத்திருந்தா போடுங்களேன்.............அதையும் பார்த்து சந்தோஷப் பாடுவோம்..........
நன்றி நட்ஸ்......
ராஜ விருந்திருக்கு அற்தம் உள்ளே வந்த பிறகு தான் தெரிந்தது........அது நம்ம ராஜா அவர்கள் வைத்த விருந்து என்று..........
அருமை அருமை...................ஒரு போட்டோ கூடவா எடுக்கல அங்க போயி.......எடுத்திருந்தா போடுங்களேன்.............அதையும் பார்த்து சந்தோஷப் பாடுவோம்..........
நன்றி நட்ஸ்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 5894
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1606
Re: ராஜ விருந்து - நட்புடன்...
பிஜிராமன் wrote:இதையே சாக்கா வச்சிக்கிட்டு வீக்லி ட்ரிப் அடிக்க பிளான் போடாதீங்க நட்ஸ்........
ராஜ விருந்திருக்கு அற்தம் உள்ளே வந்த பிறகு தான் தெரிந்தது........அது நம்ம ராஜா அவர்கள் வைத்த விருந்து என்று..........
அருமை அருமை...................ஒரு போட்டோ கூடவா எடுக்கல அங்க போயி.......எடுத்திருந்தா போடுங்களேன்.............அதையும் பார்த்து சந்தோஷப் பாடுவோம்..........
நன்றி நட்ஸ்......
நன்றி ராம் படித்து ரசித்து ருசித்ததற்கு.
வாரா வாரம் போற ப்ளான் எல்லாம் இல்லை.
அப்புறம் வேற யாரையும் கூப்பிடுவதையே நிறுத்திடுவாங்களே
படங்கள் எதுவும் எடுக்கவில்லை ராம்.

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 1399
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 154
Re: ராஜ விருந்து - நட்புடன்...
நான் ரொம்ப சீரியஸ்சா படிச்சுட்டு வந்தேன் ஏதோ
நகைச்சுவை கட்டுரை எழுதியிருக்கிறார் போலன்னு.
பாதியில தான் தெரிஞ்சுது நம்ம கதைய தான் அண்ணாத்த சொல்லிட்டு இருக்கிறார்ன்னு.
எண்ணன்னா ரொம்ப பில்ட்அப் கொடுக்குரிங்க எனக்கு கூச்சமா இருக்கு ,
எங்கள் அழைப்பை ஏற்று எங்கள் வீட்டுக்கு வந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா.
குழந்தைக்கு வாங்கி வந்த பொம்மைகள் மிக அழகு.
நகைச்சுவை கட்டுரை எழுதியிருக்கிறார் போலன்னு.
பாதியில தான் தெரிஞ்சுது நம்ம கதைய தான் அண்ணாத்த சொல்லிட்டு இருக்கிறார்ன்னு.
எண்ணன்னா ரொம்ப பில்ட்அப் கொடுக்குரிங்க எனக்கு கூச்சமா இருக்கு ,

எங்கள் அழைப்பை ஏற்று எங்கள் வீட்டுக்கு வந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா.
குழந்தைக்கு வாங்கி வந்த பொம்மைகள் மிக அழகு.


ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21490
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2293

Re: ராஜ விருந்து - நட்புடன்...
(ராஜா ) ராஜ விருந்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி ! நட்புடன் !
ராஜா நாங்களும் ரெடி !
இப்படிக்கு
சரவண பவனில் சாதனை படைத்த குருப்ஸ்
ராஜா நாங்களும் ரெடி !
இப்படிக்கு
சரவண பவனில் சாதனை படைத்த குருப்ஸ்

கே. பாலா- மன்ற ஆலோசகர்
- பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

Re: ராஜ விருந்து - நட்புடன்...
அதனால் என்ன , எல்லோரும் கிளம்பி தோஹா வாங்க பாலா. டிக்கெட் செலவு "நட்புடன் வெங்கட்" அவர்கள் ஏற்று கொள்வார்கள்.கே. பாலா wrote:(ராஜா ) ராஜ விருந்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி ! நட்புடன் !
ராஜா நாங்களும் ரெடி !இப்படிக்கு சரவண பவனில் சாதனை படைத்த குருப்ஸ்

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21490
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2293

Re: ராஜ விருந்து - நட்புடன்...
[quote="கே. பாலா"](ராஜா ) ராஜ விருந்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி ! நட்புடன் !
பாலா அண்ணா நாங்க எதுனா ராஜ விருந்து முடிச்சிட்டோம் அண்ணா நீங்களும் வாங்க இங்க
பாலா அண்ணா நாங்க எதுனா ராஜ விருந்து முடிச்சிட்டோம் அண்ணா நீங்களும் வாங்க இங்க

ரிபாஸ்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 12076
சேர்ந்தது: 20/08/2009
மதிப்பீடு: 238

Re: ராஜ விருந்து - நட்புடன்...
ராஜா wrote:நான் ரொம்ப சீரியஸ்சா படிச்சுட்டு வந்தேன் ஏதோ
நகைச்சுவை கட்டுரை எழுதியிருக்கிறார் போலன்னு.
பாதியில தான் தெரிஞ்சுது நம்ம கதைய தான் அண்ணாத்த சொல்லிட்டு இருக்கிறார்ன்னு.
எண்ணன்னா ரொம்ப பில்ட்அப் கொடுக்குரிங்க எனக்கு கூச்சமா இருக்கு ,
எங்கள் அழைப்பை ஏற்று எங்கள் வீட்டுக்கு வந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா.![]()
குழந்தைக்கு வாங்கி வந்த பொம்மைகள் மிக அழகு.
ராஜா - இந்த சாப்பாடு அயிட்டத்தில காமடி பண்றது நம்ம சதுரம் சுதா தான்.
சூப்பர் விருந்து குடுத்திட்டு நீங்க ஏன் கூச்சப் படறீங்க?
வந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி தான்.

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 1399
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 154
Re: ராஜ விருந்து - நட்புடன்...
அன்பான உபசரிப்பில் அசந்து போய்விட்டேன். வீட்டில் திட்டு வாங்கி வாங்கியே பழக்கமா - திடீர்னு செம மரியாதை கிடைத்தவுடன் கொஞ்சம் நம்பவே கஷ்டமாக இருந்தது.
அது ena உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ...
அது ena உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ...

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள்: 13978
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1538
Re: ராஜ விருந்து - நட்புடன்...
கே. பாலா wrote:(ராஜா ) ராஜ விருந்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி ! நட்புடன் !
ராஜா நாங்களும் ரெடி !
இப்படிக்கு
சரவண பவனில் சாதனை படைத்த குருப்ஸ்
பாலா சார் சீக்கிரம் கிளம்பி வாங்க இங்க.
எவ்ளோ நாள் தான் பிரம்பும் கையுமா அலைவீங்க
பெருமாளைத் தேடி - அடிக்கறதுக்கு...

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 1399
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 154
Re: ராஜ விருந்து - நட்புடன்...
தொலைபேசியிலையே தாங்கமுடியலையே..! நேரில் எப்படியெல்லாம் கஷ்டபட்டாரோ ராஜா !

கே. பாலா- மன்ற ஆலோசகர்
- பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

Re: ராஜ விருந்து - நட்புடன்...
ராஜா wrote:அதனால் என்ன , எல்லோரும் கிளம்பி தோஹா வாங்க பாலா. டிக்கெட் செலவு "நட்புடன் வெங்கட்" அவர்கள் ஏற்று கொள்வார்கள்.கே. பாலா wrote:(ராஜா ) ராஜ விருந்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி ! நட்புடன் !
ராஜா நாங்களும் ரெடி !இப்படிக்கு சரவண பவனில் சாதனை படைத்த குருப்ஸ்
டிக்கட் செலவு தான செஞ்சிட்டா போச்சு. எப்ப வரீங்க பாலா சார்?
இலவச இணைப்பா பெருமாள் கூட வரக் கூடாது சரியா?

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 1399
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 154
Re: ராஜ விருந்து - நட்புடன்...
நட்புடன் wrote:[b]வேற என்னதான் பேசிட்டு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லியேன்னு கேக்கத் தோணுமே?
நம் தள நண்பர்களின் தலையை நல்லா உருட்டினோம் - மிளகாய்ப் பொடி தடவாத குறையா...
என்ன பேசினோம்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன் - ராஜாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன், அதனால வாயப் பிடுங்கி வம்பு வளக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்...![]()
1. அப்படி எந்த குழந்தையை உருட்டி உருட்டி குளிக்க வைத்தீர்கள்?
2. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தலை கால் தெரியாமல் மிளகாய் பொடி பூசிக்கொண்டு தோஹா வில் திரிகிறார் என்று வளைகுடா செய்தியில் பார்த்தேன். அது நீங்கள் தானா ?
3. உங்க வாயை பிடிங்கி ,, பின் அதற்கு யார் தீனி போடுவது ?
4.உங்க வாயை வைத்து வம்பு எல்லாம் வளக்க முடியாது.
அடுத்த சித்திரை மாதம் வரும் காளியம்மன் கோவில் திருவிழா விற்கு முளைபாலிகை போட கூடை ஏதும் கிடைக்கவில்லையாம். உங்கள் வாயை பிடுங்கி கம்பு வேண்டுமானால் வளர்த்து பார்க்கலாம்.
நல்லா சாப்பிட்டுவிட்டு சவுடால் பாரு ? நான் வரக்கூடாதாமா ? ( எது எப்படியோ ஈகரை குடும்பம் என்பது தன்னை உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறது. நல்ல தகவலை பதிந்த நட்புடனுக்கும் ,நட்புடன் அவர்களுக்கு இல்லை இல்லை யானையை கட்டி தீனி போட்ட ராஜா அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் )

ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 2697
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 481
Re: ராஜ விருந்து - நட்புடன்...
அட நீங்க ஒண்ணு , நான் கூட தொலைபேசியில் பேச்சை கேட்டு யானை தான்னு நினைச்சு ஏமாந்து போயிட்டேன் , வெங்கட் அண்ணன் என் பெண்ணை விட கம்மியா சாப்பிடுறார்அய்யம் பெருமாள் .நா wrote:( எது எப்படியோ ஈகரை குடும்பம் என்பது தன்னை உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறது. நல்ல தகவலை பதிந்த நட்புடனுக்கும் ,நட்புடன் அவர்களுக்கு இல்லை இல்லை யானையை கட்டி தீனி போட்ட ராஜா அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் )

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21490
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2293

Re: ராஜ விருந்து - நட்புடன்...
ராஜா wrote:அட நீங்க ஒண்ணு , நான் கூட தொலைபேசியில் பேச்சை கேட்டு யானை தான்னு நினைச்சு ஏமாந்து போயிட்டேன் , வெங்கட் அண்ணன் என் பெண்ணை விட கம்மியா சாப்பிடுறார்அய்யம் பெருமாள் .நா wrote:( எது எப்படியோ ஈகரை குடும்பம் என்பது தன்னை உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறது. நல்ல தகவலை பதிந்த நட்புடனுக்கும் ,நட்புடன் அவர்களுக்கு இல்லை இல்லை யானையை கட்டி தீனி போட்ட ராஜா அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் )
ஒரு வேலை நுட்ல்ஸ் மட்டுமே சாப்பிட்டு பழக்க தோசத்துல கொஞ்சமா சாபிட்டாரா இல்லை அடுத்த தடவையும் கூப்பிடுவார்கள் என்று கொஞ்சமா சாப்பிட்டாரா

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள்: 13978
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1538
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5 
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










