ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by கே. பாலா Today at 10:25 pm

» அறிமுகம் ...
by யினியவன் Today at 10:25 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது. 5 5 10

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Sun Jan 29, 2012 6:51 pm

First topic message reminder :

தமிழ் மொழி நீதி நூல்களுக்கு பெயர் பெற்றது. பதினென்கீழ் கணக்கு நூல்கள் மட்டுமல்லாது நீதி கூறும் நூல்கள் ஏராளம் இங்கு உள்ளது.

மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.

இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.

நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.

இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.

நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.

நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.




Last edited by சதாசிவம் on Tue Feb 28, 2012 6:20 pm; edited 1 time in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down


Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by sshanthi on Wed Feb 08, 2012 4:33 pm

அருமையான தொடர்

sshanthi
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 579
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Fri Feb 10, 2012 6:33 pm

sshanthi wrote:அருமையான தொடர்

நன்றி சாந்தி,

தொடருங்கள்

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Fri Feb 10, 2012 7:20 pm

49. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா.
50. குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்.
51. சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்.
52. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர்
அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர்.
53. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே யழியினும் அழிவர்.
54. எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக்
கழுதை மேய்பா ழாயினு மாகும்.
55. பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி
நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.
56. மணவணி யணிந்த மகளி ராங்கே
பிணவணி யணிந்துதங் கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை கோடி யாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.
57. இல்லோ ரிரப்பதும் இயல்பே இயல்பே.
58. இரந்தோர்க் கீவது முடையோர் கடனே.


பொருள் விளக்கம்

வாழ்க்கையின் நிலையில்லாமையை அழகாக எடுத்துக் கூறும் சிறந்த பாடல்.

49 .
ஒருவன் சம்பாதித்த சம்பாதித்யம், பரம்பரையாக வந்த சொத்து, உடைமைகள் ஒருவரிடம் நிலையாக தங்காது. காலம் மாறினால் இருப்பதை இழக்க வேண்டி வரலாம். உணவுக்கு தவிக்கும் வறுமை நிலை உள்ளவர்களுக்கு வாழ்வு வந்து வசதி வாய்ப்புடன் வாழலாம்.

50 .
நன்கு வசதியுடன் அரச வாழ்க்கை வாழ்ந்த, யானை மேல் சவாரி செய்த வசதியான ஒருவர், வறுமை நிலை எய்து பிழைப்புக்கு வேறு ஊரு சென்று ஒருவரை இரந்து நிற்க நேரலாம்.

51 .
சிறப்புடன் செல்வமும், வசதியுடன், பெருமையுடன் வாழ்ந்தவர் ஒரே நாளில் ஏழ்மை நிலை எய்து அன்னதானம் செய்யும் சத்திரத்தின் வாசலில் உணவுக்காக காத்திருக்கும் நிலைமையும் வரலாம். (சுனாமி, பூகம்பம், சூறாவளி போன்ற பேரிடர்கள் வரும் போது ஒரே நாளில் பல பேருக்கு அன்னமிட்டோர், அன்னம் கிடைக்காதா என்று அண்ணாந்து பார்க்கும் இன்றைய நிலையை ஒப்பிட்டு பார்க்கவும்)

52 .
தெருவில் யாராவது பிச்சை இடுவார்களா என்று ஏங்கி இருப்பவர்களுக்கு வாழ்வு வந்து அரசனோடு இருந்து ஆளவும் செய்யாலாம்.

53 .
மலை அளவுக்கு சங்க நிதி, பதும நிதி என்று கணக்கிடா அளவு பணத்தை வைத்திருப்பவர்கள், காலையில் வைத்திருந்த மலை அளவு பணத்தை அதே நாள் பகல் பொழுதில் இழக்கவும் செய்யலாம்.

54 .
ஏழு அடுக்கு மாளிகைக்கு சொந்தமாக கால் மேல், கால் போட்டு இன்பமாக தூங்கும் ஒருவர் கழுதை மேய்ப்பவன் ஆனாலும் ஆகலாம்.

55 .
எருமையும், கழுதையும் மேய்ந்து கேட்பதற்கு ஆள் இல்லாமல் இருந்த வெட்டைவெளி நிலம், தங்கம் அணிந்த பெண்களும், குழந்தைகளும் பல வகை மக்களும் மகிழ்ச்சியுடன் வாழும் அழகழகான வீடுகள் உடைய பெரிய நகரமாக ஆனாலும் ஆகலாம் (இன்றைய ரியல் எஸ்டேட் வளரும் நகரங்கள் எல்லாம் இப்படி தான்)

56 .
காலையில் திருமண கோலத்தில் இருந்த மணப்பெண், மணமகனை இழந்து மணக்கோலத்தில் இருந்த கூறைப்புடவையில் கூந்தல் விரித்து அழும் நிலைமையும் வரலாம்.

57 . வாழ்க்கையில் எது வேண்டுமானால் எப்பவும் வரலாம், பணம் இருப்பவர் ஒரே நாளில் ஏழையாகலாம், ஏழையாய் இருப்பவர் ஒரே நாளில் பணக்காரர் ஆகலாம். ஆதலால் இல்லாமல் இருப்பவர் ஒருவரை நாடுவது இயல்பே.

58 .
இப்படி வறுமை நிலை வந்து இரந்து கேட்பவருக்கு (நாளை நமக்கும் இப்படி ஒரு நிலை வரலாம் என்று உணர்ந்து) இருப்பவர்கள் இரப்பவருக்கு கொடுத்து உதவுவது அவர்களின் கடமையே.

தொடரும்.....




Last edited by சதாசிவம் on Sat Feb 11, 2012 9:11 am; edited 1 time in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by கபாலி on Sat Feb 11, 2012 12:54 am

மிகவும் அருமையான பழந்தமிழ் அருமையைப் பேணும் வகையிலான பயனுள்ள தொடர்..

ஈகரையின் தலை சிறந்த திரிகளில் இதுவும் ஒன்றென மதிக்கிறேன்.

தொடருங்கள் உங்கள் தமிழ்ச்சேவையை..

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Sat Feb 11, 2012 9:09 am

கபாலி wrote:மிகவும் அருமையான பழந்தமிழ் அருமையைப் பேணும் வகையிலான பயனுள்ள தொடர்..

ஈகரையின் தலை சிறந்த திரிகளில் இதுவும் ஒன்றென மதிக்கிறேன்.

நன்றி கபாலி நன்றி

தொடருங்கள் உங்கள் தமிழ்ச்சேவையை..

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by மகா பிரபு on Sat Feb 11, 2012 9:12 am

இரப்பவருக்கு என்பதன் பொருள் என்ன அண்ணா?


[You must be registered and logged in to see this link.]

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Sat Feb 11, 2012 9:19 am

மகா பிரபு wrote:இரப்பவருக்கு என்பதன் பொருள் என்ன அண்ணா?


இரத்தல் என்றால் பிச்சை எடுத்தல் என்றும் பொருள் படும்.
இரப்பவருக்கு என்றால் ஒருவரை நாடி அவரிடம் "உதவி கேட்பவருக்கு" என்று பொருள் கொள்ள வேண்டும்.


சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by மகா பிரபு on Sat Feb 11, 2012 9:22 am

சதாசிவம் wrote:
மகா பிரபு wrote:இரப்பவருக்கு என்பதன் பொருள் என்ன அண்ணா?


இரத்தல் என்றால் பிச்சை எடுத்தல் என்றும் பொருள் படும்.
இரப்பவருக்கு என்றால் ஒருவரை நாடி அவரிடம் "உதவி கேட்பவருக்கு" என்று பொருள் கொள்ள வேண்டும்.

நன்றி அண்ணா. :வணக்கம்:


[You must be registered and logged in to see this link.]

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Thu Feb 16, 2012 5:23 pm

59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
எல்லாம் இல்லை இல் இல்லோர்க்கே

60. தறுகண் யானை தான் பெரிது ஆயினும்
சிறு கண் மூங்கில் கோற்கு அஞ்சுமே

61. குன்றுடை நெடும் காடு ஊடே வாழினும்
புன் தலைப் புல்வாய் புலிக்கு அஞ்சுமே

62. ஆரையாம் பள்ளத்து ஊடே வாழினும்
தேரை பாம்புக்கு மிக அஞ்சுமே

63. கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்
கடும் புலி வாழும் காடு நன்றே

64. சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்
தேன் தேர் குறவர் தேயம் நன்றே



பொருள் விளக்கம்


59. நல்ல உலகம் பெற்று இருந்தாலும், வானமே கையில் இருந்தாலும் இனிமையான மனைவியை பெறாத ஒருவருக்கு எதுவும் இல்லை.

60. பெரிய உருவத்தை கொண்டு பலம் பொருந்தி இருந்தாலும், யானைப் பாகனின் கையில் இருக்கும் சிறிய கணுக்களை உடைய மூங்கில் குச்சிக்கு யானை பயம்படும்.

61. குன்றுகள் நிறைந்து நீண்டு அடர்ந்து உள்ள காடுகளில் வசித்தாலும் சிறிய தலையை உடைய புல் உண்ணும் விலங்குகள் (மான்) புலிக்கு அஞ்சி வாழும்.

62. ஆரைச்செடி அடர்ந்து வளர்ந்து இருக்கும் பள்ளத்தில் வாழ்ந்தாலும் தேரை (தவளை) பாம்புக்கு அஞ்சி வாழும்.

63. மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை தராத, கொடுமைகள் செய்யும் கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில் வாழ்வதைவிட புலிகள் வசிக்கும் அடர்ந்த காட்டில் வசிக்கலாம்.

64. நன்கு கற்று உணர்ந்து, கற்ற விஷயத்தை பிறருக்கு சொல்லிக்கொட்டும் சிறந்த அறிவுடைய சான்றோர் இல்லாத நாட்டில் வாழ்வதைவிட, தேனை எடுத்து உண்ணும் குறவர்கள் இருக்கும் காட்டில் வசிக்கலாம். (அறிவில்லாத காட்டுவாசியாக)

தொடரும்


Last edited by சதாசிவம் on Thu Feb 16, 2012 5:45 pm; edited 1 time in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by ரட்சகா on Thu Feb 16, 2012 5:36 pm

பகிர்வுக்கு நன்றி....
சூப்பருங்க சூப்பருங்க

61,62 பொருள் விளக்கம் மாற்றப்பட்டு உள்ளது....
திருத்துங்கள் நண்பரே....

ரட்சகா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 139
வசிப்பிடம்: Salem
சேர்ந்தது: 08/02/2012
மதிப்பீடு: 27

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Thu Feb 16, 2012 5:46 pm

ரட்சகா wrote:பகிர்வுக்கு நன்றி....
சூப்பருங்க சூப்பருங்க

61,62 பொருள் விளக்கம் மாற்றப்பட்டு உள்ளது....
திருத்துங்கள் நண்பரே....


நன்றி நண்பரே,
:நல்வரவு:

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Fri Feb 24, 2012 7:13 pm

ஒன்றுக்கும் உதவாதவர்கள்

65. காலையு மாலையும் நான்மறை யோதா
அந்தண ரென்போ ரனைவரும் பதரே.
66. குடியலைத் திரந்துவெங் கோலொடு நின்ற
முடியுடை யிறைவனாம் மூர்க்கனும் பதரே.
67. முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்து
அதன்பய னுண்ணா வணிகரும் பதரே
68. முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்து
அதன்பய னுண்ணா வணிகரும் பதரே
69. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப்
பின்பவட் பாராப் பேதையும் பதரே.
70. தன்மனை யாளைத் தனிமனை யிருத்திப்
பிறர்மனைக் கேகும் பேதையும் பதரே.
71. தன்னா யுதமுந் தன்கையிற் பொருளும்
பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே.


பொருள் விளக்கம்

பதர் என்பது நெல்மணியில் ஊடே வளர்ந்து அரிசி இல்லாமல் இருக்கும் வெற்று நெல்லாகும். வெற்று தானியங்களையும் பதர் என்று கூறுவர்.இது போல் சமுதாயத்தில் நல்ல வெளித் தோற்றமுடன் இருந்தாலும் உள்ளே ஒன்றும் இல்லாத மனிதர்களைப் பற்றி கூறுகிறது மேலுள்ள நறுந்தொகைப் பாடல் வரிகள்.

65. அந்தணுக்கு உரிய கடமையான வேதத்தை காலையிலும் மாலையிலும் ஓதாத அந்தணன் என்பவன் எல்லாம் வெறும் பதரே.

66. குடிமக்களை அலைக்கழித்து கடுமையான குணங்களோடு கொடுங்கோல் செய்யும் முடியுடைய மூர்க்க குணம் உள்ள மன்னன் என்பவன் எல்லாம் வெறும் பதரே.

67.ஒரு வாணிபத்தில் முதல் போட்டு அதில் வரும் லாபத்தை அனுபவிக்காமல் அதையும் மீண்டும் மொத்தமாக முதலீடு செய்யும் வணிகர் என்பவர் எல்லாம் பதரே.

68 . நல்ல விதையும், உழுவதற்கும் ஏர் கலப்பையும் நிலமும் இருந்தாலும் (உழைத்து வாழ ஆயிரம் வசதி வாய்ப்பு இருந்தாலும் ) உழைக்காமல் சோம்பேறியாக இருப்பதால் ஏழையாக இருக்கும் அனைவரும் பதரே.

69. கட்டிய மனைவியிடம் சண்டை ஏற்பட்டு தாய் வீட்டுக்கு அனுப்பி அவளை சமாதானம் செய்யாமல், பாராமல் இருக்கும் கணவன் என்பவன் எல்லாம் பதரே.

70. தன் மனைவியை தனி வீட்டில் இருக்கச் செய்து, பிறர் மனைவியை விரும்பி அயல் வீட்டுக்கு செல்லும் அறிவில்லாதவன் எல்லாம் பதரே.

71. தன் கையில் இருக்கும் ஆயுதத்தையும், தன் கைப் பொருளையும் பிறரை நம்பி கொடுத்து அவர் கையை நம்பி வாழும் மனிதர்கள் எல்லாம் பதரே.

தொடரும்

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் on Tue Feb 28, 2012 6:15 pm

72. வாய் பறையாகவும் நாக்கு அடிப்பாகவும்
சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்

73. பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே

74. மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே

75.இருவர் தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தம்
மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்
முறை யுறந்தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாளாகும் மே

76.பழியா வருவது மொழியாது ஒழிவது

77.சுழியா வரு புனல் இழியாது ஒழிவது

78.துணையோடு அல்லது நெடு வழி போகேல்

79.புணை மீது அல்லது நெடும் புனல் ஏகேல்

80. ஏழிலார் முலைவரி விழியார் தந்திரம்
இயலாதன கொடு முயல்வு ஆகாதே

81.வழியே ஏகுக வழியே மீளுக

82. இவை காண் உலகிற்கு இயலாமாறே


பொருள் விளக்கம்

72. வாயைப் பறையாகவும், நாக்கை பறை அடிக்கும் கோலாகவும் கொண்டு அறிவுடையவர் சொல்லும் சொல்லைக் கேளுங்கள்.

73. பொய் நிறைந்தவர் தான் சொல் வன்மையினால், பொய்யை மெய்ப் போல் பேசி , மொய்யாக ஆக்குவர்.

74. உண்மை நிறைந்தவர் சரியாகப் பேசத் தெரியாததால் உண்மையைக் கூட அடுத்தவர் நம்பும் படி பேசாததால் உண்மையும் பொய் போல் தெரியும்.

75. சாமார்த்தியமாக பேசும் பொய்யர்களின் பேச்சையும், பேசத்தெரியாத உண்மையானவன் பேசும் பேச்சையும் ஒரு முறைக்கு ஏழு முறை கேட்டுத் தெரிந்து
அவர்கள் பொருத்தக் கூறுவதை வைத்து உண்மை உணர வேண்டும். மனுமுறை நீதி தவறாமல் தீர்ப்பு வழங்க வேண்டும். உணராமல் தீர்ப்பை கூறினால் நீதி இழந்தவர் தன் மனமுருகி அழுத கண்ணீர் தீர்ப்பு வழங்கியவரை சும்மா விடாது. மும்மூர்திகளும் காத்து நின்றாலும் கூரான வாள் போல் தலைமுறை தலைமுறைக்கும் சந்ததிக்கு பாவம் சேர்த்து துன்பம் விளைவிக்கும்.

76. நமக்கு பழியை ஏற்படும் வார்த்தையை மொழியாது (பேசாமல்) இருக்க வேண்டும்.

77. சுழித்து வரும் புது வெள்ளத்தில் இறங்குவது கூடாது.

78. தக்க துணையில்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடாது.

79. கப்பல், படகு, ஓடம் போல் ஒரு சரியான கருவி இல்லாமல் நீண்ட நீரில் பயணம் செய்யக்கூடாது.

80. எழில் மிகுந்த மார்பகங்கள், வரி வரைந்த கண்கள், தந்திரம் மிகுந்த சொல் உடைய பெண்களின் உபாயத்தினால் பொருந்தாதவை கொண்டு செய்யும் முயற்சி செய்தல் ஆகாது.

81. நல்ல வழியே செல்க, சென்ற நல்ல வழியில் திரும்புக.

82. இந்த நீதிகள் உயர்ந்தோருக்கு இயலும் ஆறு செயல்களாகும்.


நல்லொழுக்கம் நவிலும் நறுந்தொகை இனிதே முற்றியது.


சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by ஜேன் செல்வகுமார் on Tue Feb 28, 2012 6:54 pm

நீவீர் படைத்த நறுந்தொகையால் இன்பமடைந்தோ யாம்.
செம்மொழியாம் தமிழ் மொழியின் செம்மையை,
செவ்வனே எடுத்துரைத்து,நறுந்தொகையை நறுமணமாய் தந்து
எம் மனதில் நீ படைத்த நல் வழிப்பாதை நாளும் வளர
நீவீர் செய்யும் தமிழ் பணி தொடர.........
இடுகிறேன் கட்டளை இறைவனுக்கு....நானும் அவன் படைப்பு என்னும் உரிமையில்...

நன்றி
ஜேன்


ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 362

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by பிஜிராமன் on Tue Feb 28, 2012 9:07 pm

அருமை ஐயா,

தேர்விற்கு தயார் செய்து கொண்டிருப்பதால், என்னால், நறுந்தொகையை தொடர முடியவில்லை, எப்படியும், இந்த பொக்கிஷம் ஈகரையில் தான் இருக்கப் போகிறது. நான் படித்துக் கொள்கிறேன் ஐயா.....

மிக்க நன்றிகள் ஐயா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum