Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» முதிர்கண்ணன் ...
by கொலவெறி Today at 1:17 am

» கணவன்-மனைவி-காதல்-கவிதை
by கொலவெறி Today at 1:14 am

» பாஞ்சாலிக்குக் கேள்வி
by ரா.ரா3275 Today at 1:11 am

» கழிவுகளாய்....
by ரா.ரா3275 Today at 1:08 am

» உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
by சிவா Today at 12:59 am

» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
by கொலவெறி Today at 12:54 am

» முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!
by kirikasan Today at 12:52 am

» எனது கையெழுத்தைக் காணோம்..
by அகிலன் Today at 12:43 am

» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
by சிவா Today at 12:34 am

» செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.
by சிவா Today at 12:24 am

» வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
by கபாலி Today at 12:20 am

» இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்
by சிவா Today at 12:05 am

» ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
by Aathira Today at 12:02 am

» என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
by கொலவெறி Yesterday at 11:49 pm

» நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
by சிவா Yesterday at 11:33 pm

» உள்ளம் ...........
by dhilipdsp Yesterday at 11:00 pm

» அம்மா...
by dhilipdsp Yesterday at 10:57 pm

» ( Infrared )கமெரா மூலம் ATMல் திருடப்படும் கோடிக்கணக்கான பணம்.!!!
by இரா.பகவதி Yesterday at 10:56 pm

» மொக்க பீஸு-1
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm

» விளங்காமலே நான் ........
by dhilipdsp Yesterday at 10:53 pm

» காதலர் நாள் நினைவு
by dhilipdsp Yesterday at 10:50 pm

» கதை முடிந்ததது
by dhilipdsp Yesterday at 10:37 pm

» என்னவோ...
by dhilipdsp Yesterday at 10:35 pm

» கரித்துண்டு
by dhilipdsp Yesterday at 10:35 pm

» காதல் ...
by ரா.ரா3275 Yesterday at 10:13 pm

» உதட்டோரம் அமுதூற...
by ரா.ரா3275 Yesterday at 10:07 pm

» பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
by மகா பிரபு Yesterday at 9:27 pm

» நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]
by மகா பிரபு Yesterday at 8:57 pm

» உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்!
by மகா பிரபு Yesterday at 8:54 pm

» நமக்கு ஏன் வயதாகிறது?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:26 pm

» அரசியல்வாதி ஆகிப்பார்..!
by solomon Yesterday at 8:14 pm

» இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது
by இரா.பகவதி Yesterday at 8:01 pm

» ரகசியம் புத்தகம் பி‌டி‌எஃப் வடிவில்...
by என்.எஸ்.Rao Yesterday at 7:28 pm

» நானிருக்கும் மட்டும்தானே..!
by இரா.பகவதி Yesterday at 7:01 pm

» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
by இரா.பகவதி Yesterday at 6:56 pm

» ஆடவர் விற்பனை...
by இரா.பகவதி Yesterday at 6:37 pm

» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
by அருண் Yesterday at 6:20 pm

» பணம் படுத்தும் பாடு
by dhilipdsp Yesterday at 6:03 pm

» வறுமையின் பெருமையை கருவறையில் கண்ட சிசு
by dhilipdsp Yesterday at 6:03 pm

» இது நமது இந்தியா
by கேசவன் Yesterday at 6:02 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
முகநூலில் இணைய:




சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்)

View previous topic View next topic Go down

சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்)

Post by kirikasan on Tue Jan 31, 2012 6:18 pm

வானக் கதிர்சிரிக்கும் வண்ணமலர் புன்னகைக்கும்
வட்ட நிலா மேகமிடை வந்துசிரிக்கும்
சேனைக் கதிர்சிரிக்கும் சிற்றோடை சிலுசிலுக்கும்
சேர்ந்துவளர்: செங்கரும்பும் சாய்ந்து சிரிக்கும்
கானப் பறவைகளும் காற்றொலியில் சலசலக்கும்
காட்டினிலே வண்டு மலர்கண்டு சிலிர்க்கும
போனவனை காட்டினிலே போட்டெரித்து மீண்டவனும்
போதைகொண்டு ’நான்’என்றாடப் பூமிசிரிக்கும்

நீரோடும் நதி குதித்து நெளிந்து மெலச் சிரிசிரித்து
நளினமிட கரைஅலைகள் நர்த்தனமாடும்
பேரோடு பூமியிலே பேரரிய வீரமிட்டோன்
பெண்சுகத்தில் ஈனமிட பூமி சிரிக்கும்
ஊரோடிப் போகையிலே ஒருவன் மட்டும் தனித்திருக்க
உண்மைவழி நின்றிடினும் சிரித்திடும்காலம்
யாரோடிச் சென்றிடினும் வாழ்வோடி முந்த அதைப்
போரட எண்ண விதி சிரித்திடும் நாளும்

தானோடிச் சுழல்வதுடன் தறிகெடவே ஓடும்புவி
தன்னுடைமை சொத்து என்று தத்துவம்பேசி
வீணாகத் தலைஎடுப்போன் விதிமுறைமை கண்டுநலம்
வாழென்று கூறிப் பேய்கள் போடும் எக்காளம்
தானமிடக் கண்டுலோபி தலைதிரும்பிச் சிரித்திடுவான்
தாவணிப்பெண் இருவர்கூடின் சிரித்திடக் கேட்கும்
தனை யுணர்ந்த ஞானிவாழ்வின் விதியறிந்து நகைபுரிய
தவழுகின்ற மழலையிலே தெய்வம் சிரிக்கும்.


2ம்+ 3ம் கவிதைகள் கீழே


Last edited by kirikasan on Wed Feb 01, 2012 9:09 pm; edited 2 times in total

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1856
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 297

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்)

Post by kirikasan on Wed Feb 01, 2012 4:32 pm




காத்திரு ! காற்றில் வருவேன்!

தேனிற் குழைத்த தீங்கனியாய்
தேவி எந்தன் அருகிருந்தாய்
வானிற் குழைத்த ஓவியமாய்
வாழ்வை மறந்து ஏன்சென்றாய்

பச்சைப்பசுமைப் புல்வெளியும்
பனிநீர் தூங்கும் அதனிதழும்
இச்சையுடன் நீ பக்கமதில்
இருந்ததை எழுந்து கூறாதோ

கொத்துமலர்களின் தோட்டமென
கோடிநிலவுகள் கூட்டமென
நித்தம் அருகினில் நீ இருந்தாய்
நினைவுகள் மீண்டும் வாராதோ

வெற்றாய் விரியும் விண்ணில் நீ
விட்டுச் சென்றது எங்கே சொல்
உற்றே நோக்கும் உன்விழிகள்
உயரச் சென்றது உண்மையெனில்

பஞ்சு போன்றோர் வெண்மேகம்
பரந்தநீலப் பிரபஞ்சம்
விஞ்சும் எழில்வான் விரிதிசைகள்
எங்கும்நீயே நீயேதான்

சுட்டுத் தீய்க்கும் சூரியனும்
சுடர்போல் நினது விழிதன்னை
சுட்டி காட்டி எரிகிறதே
சோர்ந்தே தவிக்கு மென்மனதை

கட்டிக் காக்கமுடியவில்லை
காற்றும் தீண்டிச் செல்லுகையில்
பட்டுத் தழுவு முன்கர்ங்கள்
பனிநீர்விழவும் உன் தேகம்

தொட்டுக் காணு மின்பமென
தோன்றச் சிந்தை வாடுகிறேன்
வட்டச் சந்திரன் உன்வதனம்
வடிவம் காட்டி எனைக்கொல்லும்

சிட்டுக் குருவி ஜோடிகளும்
சேர்ந்தே கிளையில் கொஞ்சுவதும்
வெட்டிக் கொல்லும் வகையாக
வேதனை யாகிக் கொல்லுதமா

நின்னை பிரிந்து நானொருவன்
நித்திலம் வாழுதல் நேர்ந்திடுமோ
கண்ணை விழித்துக் காண்பவளே
காதலன் வருவேன் காத்திரடி

(..3ம் கவிதைக்கு கீழே..போகவும்)


Last edited by kirikasan on Wed Feb 01, 2012 9:10 pm; edited 1 time in total

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1856
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 297

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்)

Post by ஜாஹீதாபானு on Wed Feb 01, 2012 5:08 pm

ரொம்ப அனுபவிச்சு எழுதினிங்களா புன்னகை

அருமையோ அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கரங்களா கர்ங்களா ஒன்னும் புரியல

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197

Back to top Go down

Re: சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்)

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 5:16 pm

காலம் எத்தனைக் கடந்தாலும்
காதல் என்றுமே மாறாது - அந்த
காதல் உணர்வும் போகாது.........

உங்கள் கவிதை மிக மிக அருமை ஐயா.........

தேனருவி தென்றல் வான்முகில்
மூன்றனையும் குழைத்து தருதே
உங்கள் கவி அதில் திகைத்தே
நின்றேன் இப்பொழுது

நன்றிகள் ஐயா....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159

Back to top Go down

Re: சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்)

Post by உமா on Wed Feb 01, 2012 6:29 pm

எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு பெரிய கவிதைகளை சரளமாக எழுத இயலுதோ....
அருமை .... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால் உலகுக்குத் தெரிகிறது.
அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால் உலகுக்குத் தெரிவதில்லை.

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 12253
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2260

Back to top Go down

Re: சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்)

Post by kirikasan on Wed Feb 01, 2012 9:08 pm

சிரிப்பதும் அழுவதும் ஏன்??

அன்போடு பாராட்டிய அனைவருக்கும், நன்றி! ஒரே நாளில் மூன்றுகவிதைளும் தருவதால்
ஒரே இழையில் தருகிறேன்


சிரிப்பதும் அழுவதும் ஏன்??

நீலமுகிலோடும் வானிலெழுந்திடும்
நித்திய சூரியனே - நினைப்
போலும் ஒளியுடன் வாழும்மனிதரும்
பாரிலிருக் கையிலே
கால விதியிதோ மாலைமதி கெட்டு
காணும் பிறை யொளியாய்-பலர்
கோல மழிந் துயிர் கொள்ளும் துயருடன்
கூடியிருப்ப தென்ன?

மாலை மலர்ந்திடும் பூக்களு முண்டதை
மேவி இருள் பரவும் - அதி
காலை மலர்களின் வாழ்வு ஒளிர்ந்திடும்
காணும் இரண்டுவிதம்
சாலையோரம் மரம்கீழும் வாழ்ந்துவரும்
சந்ததி யொன்றிருக்கும் - பக்கம்
மேலு யரும்மாடி மெல்லிய பஞ்சணை
மீது துயில் சிலர்க்கும்

கானமிடும் நல்ல வானில் குருவிகள்
ஊர்வலம் செய்யழகும் அங்கு
கூனல் நிமிர்முகில் கூட்டங்கள் பஞ்சென
கோலமிடும் எழிலும்
தேனொளி மின்னிட வானிடை ஆயிரம்
தீபங்கள் வைத்தவளோ - மன
மானது ரம்மிய மாகக் களித்திட
மஞ்சள் நிலவு வைத்தாள்

ஆனதிவைசெய்த தேவியும் ஏனங்கு
அத்தனை கோபங்கொண்டு - பல
மான இடியுடன் பூமிஅதிர்ந்திட
மின்னலை கொண்டுவைத்தாள்
வானம் அழுவது போல மழையுடன்
வாரிப் புயலடித்து - பெரி
தான முரண்படும் பேய்மழை ஊதலும்
ஏனோ நிகழவிட்டாள்

பூவழுதால் இதழ்தேன்வழியும் அதைப்
பூவுலகே யறியும் - அலை
மேவுகடல் மீது மீனழுதால் அலை
யோடு கலந்துவிடும்
தாவும் முயல் என்றும் தாவியோடவேண்டும்
தப்பிப் பிழைப்பதற்கும் - விதி
யாவும் குறையின்றி சாதுவெனப் பிறந்
தாலும் துயர் இருக்கும்

பூவும் உதிர்ந்திடப் பொல்லாப் புயல்வந்து
பற்றிடத் தேவையில்லை - மலர்க்
காவும் மலைதொட்டு வீசும்தென்றல் தொட
வீழும் விதிமுடியும்
நோவும் அழுதிட நூறுதுன்பங்களும்
நெஞ்சில் குடியிருக்கும் -இதை
யாவும் அறிந்திடில் தோன்றும் எண்ணங்களில்
உண்மை நிலைதிகழும்

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1856
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 297

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum