புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
68 Posts - 45%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
5 Posts - 3%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
4 Posts - 3%
Jenila
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
2 Posts - 1%
jairam
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
1 Post - 1%
kargan86
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
9 Posts - 4%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
6 Posts - 3%
Jenila
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
2 Posts - 1%
jairam
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
2 Posts - 1%
viyasan
ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 27 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 27 of 36 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 31 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Dec 08, 2014 8:03 am

வாசுதேவ குடும்பம்
(ஆனந்தக் களிப்பு: ’நந்தவனத்திலோர் ஆண்டி’ மெட்டு)

மாதவ நீரோர்சம் சாரி - உமது
. மாயயையில் சொந்தம ணைத்தீரே வாரி!
வேதனை யேதுண்டோ சொல்வீர் - தேவர்
. மேதகு மூத்தவ ராய்நீரும் செல்வீர்! ... 1

பாற்கடல் செல்வியைக் கொண்டீர் - அவள்-உம்
. பாரியை யாகவே பக்கத்தில் மண்ட!
வேர்க்கடலை யென்றேம றைந்தீர் - நீரும்
. வெண்ணீற்றன் தாள்காண பூமிய கழ்ந்தே! ... 2

தொப்புள் கொடிவளர் பிள்ளை - அவன்
. தோழனாய்ப் போனதில் உண்டோவோர் தொல்லை?
அப்பனும் அம்மையும் காணாதே - அவன்
. ஆக்கிய பெண்ணவன் தாரமாய் யானாளே! ... 3

சிவனுக்குத் தந்தீர்-உம் தங்கை - அந்தச்
. சினமேறும் மூச்சிலோ வூதினீர் சங்கை!
எவனுக்கும் உம்பாடு வேண்டாம் - பிள்ளை
. எய்தும னைத்துமே காத்திட வேண்டும்! ... 4

மாமியா ராச்சேயும் தேவி - அவள்
. வாணியின் வாக்கினைக் கொள்வாளோ மேவி?
தாமொரு நாத்தனா ரென்றே - தங்கை
. தானத்தைக் காத்தாலோ கொள்வீரோ நன்றே? ... 5

சிவனைச்சி னந்தேகிக் கந்தன் - ஒரு
. சின்னம லையினில் ஏறியே நின்றான்!
அவனுக்கா உம்பெண்ணைத் தந்தீர்! - அதுவும்
. ஐயகோ ஒன்றுக்கி ரண்டாக வென்றான்! ... 6

கரிமுகன் உம்-ஆழி கொய்ய - தோப்புக்
. கரணங்கள் போட்டவன் துப்பிடச் செய்தீர்!
பரிமுகம் சிம்மமும் கூர்மமும் - இன்னும்
. பன்றியு மென்றவ தாரம்பன் முகமே! ... 7

ராமனாய் ஓர்தாரம் கொண்டீர் - ஆயின்
. ரம்மியக் கண்ணனோ ஆயிரம் கொண்டான்!
வாமன ரூபமும் கொண்டீர் - உமது
. வாயினில் அண்டச ராச்சரம் கண்டோம்! ... 8

ஹரனோடு மோகினி யாய்க்கூடி - நீரும்
. ஹரிஹர புத்திர லீலையென் றாடி
ஹரிஹரன் வேறில்லை யென்றே - ஒரு
. அழகான தத்துவம் தந்தீரே அன்றே! ... 9

அம்பலத் தானோடு நீரும் - ஆடும்
. ஆட்டத்தில் யாவும டங்கியே சேரும்!
உம்பிள்ளை செய்லோகம் காப்பீர் - முடிவில்
. உம்மைத்து னன்னேழு லோகமும் தேய்ப்பான்! ... 10

சிற்றில்லைக் கட்டிச் சிதைக்கும் - மழலைச்
. சிற்றின்ப லீலையாய் மூவர்வி திக்கும்
பற்றற்ற வாழ்வொன்றே முக்தி - யென்று
. பற்றியெம் வாழ்வினில் செய்வோமே பக்தி! ... 11

(மாதவ நீர்பெரும் சம்..சா..ரீ!)

--ரமணி, 25-30/11/2014

*****



mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 08, 2014 1:44 pm

ரமணியின் கவிதைகள் - Page 27 3838410834

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Dec 08, 2014 6:04 pm

கும்மிப் பாடலின் இலக்கணத்தை சந்தவசந்தம் கூகிள் இணையக் குழுமக் கவிஞர் சிவசூரி இங்ஙனம் தருகிறார்:

1. முதல் அரையடியில் ஒற்று நீங்கி 12 எழுத்துகள், இரண்டாம் அரையடியில் 10 எழுத்துகள் தாம் வரவேண்டும். அடிக்குள் வெண்டளை பயிலவேண்டும். அதாவது, ஏழு சீர் நிரம்பிய கண்ணியில் வெண்டளை பயில வேண்டும்.

2. நேரசையில் தொடங்குவதே எளிது. நிரையில் தொடங்கவேண்டாம்.

3. ஒவ்வோர் அடியின் இறுதிச் சீரும் விளங்காய்ச் சீர்தான் வரவேண்டும். (அதாவது ஏழாவது சீர்)

4. முதலில் எழுசீர் ஈரடிக் கும்மி எழுதிப் பழகுதல் நலம்.

மேற்சொன்னவாறு வெண்டளைகள் மட்டுமே பயிலுமாறு எழுதினால் எழுத்துக் கணக்கு தானே சரிவரும்.

ஆர்வலர்கள் முயன்று பார்க்கலாமே!

ரமணி

T.N.Balasubramanian wrote:கார்த்திகை தீப கும்மி பாட்டு ,
மனதினுள்ளே hum பண்ணி ரசித்தேன் .
ரொம்பவே நன்றாக இருக்கிறது .
நன்றி
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1107997




ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Dec 16, 2014 8:38 am

மலர்-மணம்: ஏகபாதம்

மலரில் மணமாய் உறுமே கவிதை
மலரில் மணமாய் உறுமே கவிதை
மலரில் மணமாய் உறுமே கவிதை
மலரில் மணமாய் உறுமே கவிதை

பொருள்
மலரினுள் தங்கும் மணமாகச் (சொல்லும் பொருளும்) சேர்ந்திருக்குமே கவிதை!
மலர் (கண்முன்னே) இல்லாது போனாலும் அதன் மணமாக (மனதில்) இருக்குமே கவிதை!
மலர் (அணிந்த) இல்லாளின் மணமாக (மரபின் மதிப்பாக) இருக்குமே கவிதை!
மலர் இல்லாத (மண்) வாசனையாக நிகழுமே மேக-விதை (மேகத்தின் மழைத்துளிகள்)!

--ரமணி, 14/12/2014

*****


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 16, 2014 8:41 am

ரமணியின் கவிதைகள் - Page 27 3838410834
-
ரமணியின் கவிதைகள் - Page 27 ZrKA8NpgQmu805HARBLx+clouds-

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Dec 16, 2014 8:43 am

'எடிட்' செய்த புகைப்படம் மிக அருமை!
ரமணி


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Dec 20, 2014 7:00 am

பிரதோஷ நாயகன் கும்மி - 3
(கும்மிப் பாடல்)

நைந்துளை நாகந்தன் மேனிய தைத்திட
. நஞ்சினைக் கக்கந டுக்கமுற்றே
மைந்தழி வானவர் உள்ளம்ப தைத்தோடி
. மாதொரு பாகனை நாடினரே!
ஐந்தொழில் செய்தேழு லோகமும் ஆள்பவன்
. அன்னையுடன் சேர்ந்தே காத்தனனே
பைந்தமிழ்ப் பாவையுன் பாதச்ச லங்கையென்
. பாட்டிலொ லிக்கவே கும்மியடி!

செந்தமிழ்க் கந்தனின் தந்தையும் லிங்கமாய்
. சீரபி ஷேகங்கள் கொண்டிடவே
வந்தனை செய்வோர்தம் வல்வினை தீரவே
. மாதொரு பாகனை நாடுவரே
எந்தையி றைவனின் அஞ்செழுத் தோதுவோர்
. எல்லாந லன்களும் பெற்றிடவே
சிந்துவின் தாளமும் சந்தமும் சேர்ந்திட
. செந்தமிழ்ச் செல்வியே கும்மியடி!

இந்திர வில்வண்ணப் பூவலங் காரத்தில்
. இன்னிசை வேதப்பண் ணொசைவர
சந்திர சேகரன் நந்தியில் ஏறியே
. சங்கரி யோடுவ லம்வருவான்
சிந்தைய டங்கிடும் அந்திய மைதியில்
. செம்பொருள் வண்ணமே உள்ளமுற
சந்தவ சந்தத்தில் செங்கரம் தட்டியே
. சங்கத் தமிழ்பெண்ணே கும்மியடி!

--ரமணி, 19/12/2014, கலி.04/09/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 21, 2014 9:56 am

கிரிக்கெட் பைத்தியம்!
(ஆனந்தக் களிப்பு: ’நந்தவனத்திலோர் ஆண்டி’ மெட்டு)

பதினொன்மர் ஆடிடும் ஆட்டம் - அதைப்
. பார்த்தேக ளிக்கும ரங்கத்தின் கூட்டம்
அதுவாகா தென்றோரும் வீட்டில் - ஓர்
. ஆதுரத் தோடேதான் தொக்காமுன் ஸீட்டில்! ... 1

[ஆதுரம் = பரபரப்பு, அவா, நோய்; தொக்கா = தொ(லை)க்கா(ட்சி)]

காசினைச் சுண்டிடும் நேரம் - இவர்
. காத்தேவீ ணாக்கிடும் காலமாய்ச் சேரும்
நேசமும் கோபமு மாக - இவர்
நியாயங்கள் வாயேறும் சொற்களா யாகும்! ... 2

விடலையாய் மூத்தவர் சேர்ந்தே - இதை
. விட்டேனா பாரென்றே கைதட்டி ஆர்ந்தே
கடலைகொ ரித்தேதான் காணும் - அந்தக்
. காட்சியைக் கண்டாலோ கர்த்தவம் நாணும்! ... 3

[கர்த்தவம் = கழுதை]

சாப்பாட்டுத் தட்டைக்கை யேந்தி - இந்த
. சாகசம் காண்போரின் கண்களில் ஆந்தை!
கூப்பாடு போட்டாலோ ஆறு - அன்றிக்
. கோவென்ற ரற்றிடில் காதையோ வேறு! ... 4

மாதரும் இன்னாளில் சேர்ந்தார் - இந்த
. மட்டைய டிக்காட்சி நேரத்தில் ஊர்ந்தார்
ஏதோச மையல்லொப் பேற்றி - வீட்டில்
. எல்லோரும் போதினைப் போக்குவர் போற்றி! ... 5

நாள்தோறும் ஈதொன்றே பேச்சு - அந்த
. நாட்களில் ஈதொன்றே இல்லத்தின் மூச்சு!
கோள்வினை ஈதென்றே பன்னாள் - நாட்டின்
. கொள்கையென் றாகியே தங்கிடும் இன்னாள்! ... 6

பதினொன்மர் முட்டாளாய் ஆடும் - ஆட்டம்
. பார்ப்பவர் யாவரும் முட்டாளாய் ஆகும்
கதியன்றே சொன்னார்பெர் னாட்ஷா - அந்தக்
. காட்சிதான் உண்மையாய் ஆகும்த மாஷா! ... 7

--ரமணி, 20/12/2014, கலி.05/09/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Dec 23, 2014 8:05 am

விழலே மழலை விறல்?!
(எழுசீர் விருத்தம்: வாய்பாடு: தேமா மா மா மா மா மா காய்)

சொல்லில் காமம் தொனியில் காமம்
. தோய்வ தெதுவும் அறியாதே
வில்லின் குறியா யிலக்கை யெட்டி
. வெல்லும் பயிற்சி கொண்டேதான்
கல்வி வாசல் நுழையும் குழந்தை
. கள்ளம் இன்றிப் பாடுவதை
வெல்லச் சுவையாய் வாயைப் பிளந்தே
. வீணர் கூட்டம் ரசித்திடுமே! ... 1

அர்த்தம் இரண்டாய் ஒலிக்கும் கயமை
. ஆரத் தழுவும் திரைப்பாடல்
நர்த்த னத்தில் காமச் சேட்டை
. நரநா ரியரின் குழுவினிலே!
வர்த்த கத்தில் வயிற்றை அடித்தே
. வாழும் கயவர் சாதனையைச்
சர்த்தி யெடுக்கக் குழந்தை பழகச் ... ... [சர்த்தி = கக்கல், வாந்தி
. சாதனை யென்றே போற்றுவரே! ... 2

தோலைக் காட்டும் தொழிலே பெரிதாய்த்
. தொலைநோக் கில்லாத் தொலைக்காட்சி
ஆலைக் கரும்பாய் இளையோர் மனதை
. ஆக்கும் சக்கை போதாதென்
றால கால விடமாய்ச் சூழ்ந்தே
. ஆலம் விழுதுக் குடும்பத்தின்
கூலம் மீறிக் கொள்ளும் முதலில் ... ... [கூலம் = வரம்பு, முறை]
. குப்பை யாவர் குழந்தைகளே! ... 3

வெட்கம் இல்லாப் பெற்றோர் தாமும்
. மேலை நெறிகள் பேணுவதில்
தொட்டிற் காலம் தொட்டே தாமும்
. தொலைவில் வாழ்ந்தே குழந்தைகளும்
கட்டில் லாமல் காட்டில் மேயும்
. கன்றாய் வளரும் பெருமை-தம்
பட்டம் அடித்தே தாமும் அரங்கின்
. பகட்டில் அமர்ந்தே காணுவரே! ... 4

தொலையும் தூரக் காட்சி விளைக்கும்
. சோப்புக் குமிழிக் கனவுகளில்
அலையும் மனமாய் மழலை மனதை
. ஆக்கும் தொழிலைச் செய்வதிலே
நிலையில் பெற்றோர் சுற்றம் நட்பும்
. நீளும் தொக்கா காட்சிகளின்
வலையில் விழுந்தே மக்கள் கல்வி
. மலையே றுவதைக் காணாரே. ... 5

சின்னக் குழந்தை மேனி தன்னைச்
. சிதைப்போர் சிட்சை பெறுவதுபோல்
சின்னக் குழந்தை உள்ளம் தன்னைச்
. சிதைப்போர் சிட்சை பெறும்நாளே
சின்னத் திரையும் வெள்ளித் திரையும்
. செய்யும் அவலம் தொலைந்தேகிப்
பொன்னின் மணியாய்ப் பயிர்கள் விளையும்
. பூமி காணும் நாள்வருமே! ... 6

--ரமணி, 22/12/2014, கலி.07/09/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Dec 27, 2014 8:02 am

வேலை எனவோ?
(ஆங்கிலப் பாவடிவம் pantoum-இன் தமிழ் வடிவாகப் ’பாண்டி’ எனப் பெயரிட்டு,
சந்தவசந்தம் இணையக் குழும ஸ்தாபகர் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் செய்த வடிவம்)


காலை நேரம் கதிர்வரும் போதில்
மேலைக் காற்றில் மேனியும் குளிர
சாலை வாகனம் சற்றே குறைய
காலை வீசிக் கடற்கரை சென்றாள். ... 1

மேலைக் காற்றில் மேனியும் குளிர
சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
காலை வீசிக் கடற்கரை சென்றாள்
வாலைக் குமரி வயதில் இளையாள். ... 2

சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
வாலைக் குமரி வயதில் இளையாள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள். ... 3

சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள்
வேலை எனவோ? வியந்தேன் நானே! ... 4

மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை வாகனம் சற்றே குறைய
வேலை எனவோ வியந்தேன் நானே
காலை நேரம் கதிர்வரும் போதில்! ... 5

--ரமணி, 26-27/12/2014

குறிப்பு:
இந்த pantoum (தமிழில் ’பாண்டி’) வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள்
கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்:

Stanza 1 A B C D
Stanza 2 B E D F
Stanza 3 E G F H
Stanza 4 G I (or A or C) H J (or A or C)

This pattern continues for any number of stanzas, except for the final stanza,
which differs in the repeating pattern. The first and third lines of the last stanza
are the second and fourth of the penultimate; the first line of the poem
is the last line of the final stanza, and the third line of the first stanza
is the second of the final. Ideally, the meaning of lines shifts when they
are repeated although the words remain exactly the same: this can be done
by shifting punctuation, punning, or simply recontextualizing.

Ref: http://en.wikipedia.org/wiki/Pantoum

அதாவது, ஒவ்வொரு செய்யுளின் இரண்டாம், நான்காம் அடிகள்
அதற்கடுத்த செய்யுளின் முதலாம், மூன்றாம் அடியாக வரவேண்டும்.
இதுபோல் எத்தனை செய்யுட்களும் வரலாம். ஆனால் இறுதிச் செய்யுள் அமைப்பில்
அதன் முந்தைய செய்யுளில் அடிகள் இரண்டும் நான்கும் இதன் முதல், மூன்றாம்
அடிகளாக அமைவதுடன், முதற்செய்யுளின் மூன்றாம் அடி இதன் இரண்டாம் அடியாகவும்,
முதற்செய்யுளின் முதலடி இதன் இறுதி அடியாகவும் அமைதல் வேண்டும்.

pantoum உதாரணங்கள்:
http://www.poetrysoup.com/poems/pantoum

*****


Sponsored content

PostSponsored content



Page 27 of 36 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 31 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக