புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10 
2 Posts - 4%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10 
2 Posts - 4%
Rutu
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10 
1 Post - 2%
சிவா
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10 
1 Post - 2%
viyasan
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10 
1 Post - 8%
Rutu
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா


   
   

Page 7 of 37 Previous  1 ... 6, 7, 8 ... 22 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 12:58 am

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: 7.2 ரிக்டர் ஆக பதிவு
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 9c30ab16-c342-4e0e-b712-3cfb5de38f6b_S_secvpf

புவியியல் அமைப்பின் படி எரிமலை வெடிப்பும், நிலநடுக்கமும் அடிக்கடி ஏற்படும் 'நெருப்பு வளையம்' பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று இந்தோனேஷியா. இந்தோனேஷியாவின் சவும்லாகி நகரை மையமாக கொண்டு, பூமியின் அடியில் 155 கி.மீட்டர் ஆழத்தில் இன்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தையொட்டி சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்பு ஏற்படவில்லை. சேதம் குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.

-மாலை மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 12:59 am

சுற்றுச்சூழலை பாதிக்கும் மலைப்பாம்புகளை பிடிக்கும் போட்டி: அமெரிக்க புளோரிடா நிர்வாகம் அறிவிப்பு
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 2ca0b287-929b-473a-8118-69f87fc07a12_S_secvpf

அமெரிக்காவில் புளோரிடா மகாண காடுகளில் பர்மீய வகை மலைப்பாம்புகள் அதிகளவில் இருக்கின்றன. இவை அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை வேட்டையாடி சுற்றுச்சூழலை பெரிதளவில் பாதித்து வருகின்றன. இதன் எண்ணிக்கை குறைக்க புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதற்காக பர்மீயவகை மலைப்பாம்புகளை (பைத்தான்) பிடிக்க ஜனவரி மாதத்தில் ஒரு போட்டி ஒன்றை அது அறிவித்துள்ளது. இதில் அதிகம் பாம்புகளை கொல்லுபவர்களுக்கு 1500 டாலர் பரிசும், நீளமான பாம்பை பிடிப்பவருக்கு 1000 டாலர் பரிசும் அளிக்கப்படும் என்று அந்த நிர்வாகம் அறிவித்துள்ளது. மலைப்பாம்புகளை ரோட்டில் கொல்வது அனுமதிக்கப்படமாட்டாது என்று அது அறிவித்துள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் 25 டாலர் பதிவு கட்டணமாக செலுத்தவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
-மாலை மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 1:00 am

2014 பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காங்கிரசின் தலைமையை ஏற்பார்: காங்கிரஸ் கட்சி சூசக அறிவிப்பு

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Ca7149ce-af6b-4bcb-8466-6c5ce6e5a057_S_secvpf

வரும் 2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி சூசகமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறியதாவது:-

2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி அக்கட்சியின் எம்பிக்கள் முடிவு செய்வார்கள். 2014-ம் ஆண்டு தேர்தல் வரை பிரதமர் மன்மோகன் சிங் தலைமை பொறுப்பில் இருப்பார். இந்த ஆட்சி 2014-ம் ஆண்டு தொடர்ந்து நீடிக்கும். அதுவரை மன்மோகன் சிங் பிரதமராக இருப்பார்.

சோனியா காந்தியே கட்சியின் தலைவராக இருப்பார். கட்சியின் மூத்த தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று கட்சியின் முக்கிய பொறுப்புகளை ஏற்க ராகுல் ஒத்துக்கொண்டுள்ளார். அவர் கட்சியின் தலைமையை ஏற்க வேண்டுகோள்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், அவர் அதை விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தகுதியும் பொருத்தமும் உள்ளவர் என்றும், அதையே கட்சியின் மூத்த மற்றும் இளைய தலைவர்கள் வரவேற்கின்றனர் என்று உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-மாலை மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 1:01 am

மோடி ஆட்சியில் ரூ. 1 லட்சம் கோடி ஊழல்: சோனியா குற்றச்சாட்டு

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 97619880-1a1b-4e8a-95e4-d94b413e58ba_S_secvpf

குஜராத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று குஜராத் மாநிலம் சித்தாபூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மோடி அரசு குறித்து பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை பார்க்கிறபோது, அவரது அரசு மக்களை தவறான கொள்கைகளை பின்பற்ற செய்வது தெரிகிறது. குஜராத்தில் 1 லட்சம் கோடிக்குமேல் ஊழல் நடந்துள்ளது என்று, மத்திய கணக்கு தணிக்கை துறையின் அறிக்கையை நாங்கள் பெற்று இருக்கிறோம்.

குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கையில், இங்கு 4.1/2 லட்சம் விவசாயிகள் மின்சார இணைப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பழங்குடியின மக்கள் கல்வியில் பிந்தங்கியே உள்ளனர். மக்கள் இங்கு கடுமையான சட்டதிட்டத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.

சரியான முன்னேற்றத்தை குஜராத்தில் திரும்பவும் கொண்டுவரவேண்டும். இதற்கு நாம் கடுமையாக உழைக்கவேண்டும். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் மோடி அரசுக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலை மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 1:05 am

இந்திய ராணுவத்தில் 66,000 பேர் பற்றாக்குறை: ஏ.கே. அந்தோணி தகவல்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 8833abe4-ec43-481e-9988-6c22122c51fc_S_secvpf

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிக்கு எழுத்து மூலமாக பாதுகாப்பு மந்திரி ஏ.கே. அந்தோணி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தரைப்படையில், 10 ஆயிரத்து 100 அலுவலர்களுக்கான பணியிடங்களும், அலுவலர் பதவிக்கு கீழான நிலையில் 32 ஆயிரத்து 431 பணியிடங்களும் காலியாக உள்ளன. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி கப்பல் படையில் ஆயிரத்து 996 அலுவர்களுக்கான பணியிடங்களும், அலுவலர்களக்கு கீழான நிலையில் 14 ஆயிரத்து 310 பணியிடங்களும் காலியாக உள்ளன.

விமானப்படையில் 962 அலுவலர்களுக்கான பணியிடங்களும், அலுவலர்களுக்கு கீழான நிலையில் 7 ஆயிரம் பணியிடங்களும் காலியாக உள்ளன. இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதை ஊக்குவிப்பதற்காக, ஊடக பிரசாரங்களும், பேரணிகளும் நடத்தப்படுகின்றன.

ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் தேர்வு முறைகளில் உள்ள கண்டிப்பு, பணிச் சூழலில் உள்ள கிரமம், மற்ற பணிகளில் கிடைக்கும் வசதிகள் ஆகியவை இந்த ஆள் பற்றாக்குறைக்கான முக்கிய காரணிகளாக உள்ளன. தரைப்படையில் 10 ஆயிரத்து 81, கப்பல் படையில் 170, விமானப் படையில் 571 பேர் என இந்த ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்து 800 பேர், ஓய்வுகாலத்திற்கு முன்னரே ராணுவப் பணியில் இருந்து விலகியுள்ளனர்.

நாட்டில் உள்ள பல்வேறு ராணுவ பயிற்சி கழகங்களில் இருந்து 2010-ம் ஆண்டில் 9 ஆயிரம் வீரர்கள் பயிற்சிகளை முடித்து பணியில் சேர்த்துள்ளனர். இவ்வாறு பாதுகாப்பு மந்திரியின் பதிலில் கூறப்பட்டுள்ளது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 1:06 am

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 207bc594-1427-47f3-bb93-27c85bd353c7_S_secvpf

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எல்லை கடந்து மீன் பிடித்ததாகக் கூறி கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டடு வருகிறனர்.

கடந்த 3-ந்தேதி நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 40 பேர் 5 படகுகளில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 40 பேரையும் கைது செய்து இலங்கையில் உள்ள திரிகோண மலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அந்த கோர்ட்டு உத்தரவுப்படி அனைவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் 40 மீனவர்களும் இன்று பகல் 12 மணி அளவில் மீண்டும் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் தரப்பில் வாதாடிய வக்கீல், தமிழக மீனவர்கள் தவறுதலாக எல்லையை தாண்டிவிட்டதாகவும், அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் வாதாடினார்.

இதையடுத்து 40 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்படட அனைவரும் நாளை அல்லது நாளை மறுநாள் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 1:08 am

மதுரையில் நம்மை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது: மு.க.அழகிரி ஆவேச பேச்சு
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியனின் மகன் மருது பாண்டியன்-ஆர்த்தி திருமணம் இன்று மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தயா மகாலில் நடந்தது. மத்திய மந்திரியும், தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். விழாவில் அவர் பேசியதாவது:-

இன்று மணவிழா காணும் மருதுபாண்டியனின் தந்தை மிசா பாண்டியன் என்மீதும் கழகத்தின் மீதும் மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவர். அவரது இல்ல விழாவை நடத்தி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மணமகன் மருதுபாண்டியனும், எனது மகன் துரை தயாநிதியும் நெருங்கிய நண்பர்கள்.

துரைதயாநிதிக்கு ஒரு வழக்கில் இன்று முன் ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மணமகனுக்கு தெரிவித்தேன். அப்போது அவர் சந்தோசத்துடன் ஆனந்த கண்ணீர் வடித்தார். 1980-ல் முரசொலி பத்திரிகை பொறுப்பை ஏற்று நான் மதுரைக்கு வந்தேன். அப்போது இருந்தே மிசா பாண்டியன் என்னிடம் நம்பிக்கையுடனும், விசுவாசமாகவும் இருந்து வருகிறார்.

தி.மு.க. ஆட்சியில் இருந்த போது அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும் என்னிடம் பதவிகளை கேட்டு பெற்றார்கள். ஆட்சி மாறியவுடன் கட்சி நிர்வாகிகள் என்னை விட்டு விலகி சென்று விட்டனர். அந்த துரோகத்தை பற்றி கவலைப் படவில்லை. தி.மு.க.வில் இருந்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் விலகியபோது எங்கிருந்தாலும் வாழ்க என்று அறிஞர் அண்ணா கூறினார். அதனையே நானும் கூறுகிறேன்.

என்னை விட்டு விலகி சென்றவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். பணமும், பதவியும் முக்கியமில்லை. பணத்தை கொண்டு நிம்மதியாக வாழ முடியாது. துரோகிகள் எங்கு சென்றாலும் புகழ் கிடைக்காது. நாம் தேர்தலில் கடுமையாக உழைத்து வீடு, வீடாக சென்று ஓட்டுகளை பெற்று இப்படிப்பட்டவர்களை வெற்றி பெறச் செய்திருக்கிறோம். பதவியில் உட்கார வைத்தவுடன் அவர்கள் மாமனார், மச்சான் மூலம் கிடைத்தது என்று சொல்லி திரிகிறார்கள்.

நமக்கு துரோகம் செய்தவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்கள் எங்கும் போகட்டும். நம்மை விட்டு சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நம்மால் பதவியும், பொருளாளதார நிலையில் உயர்ந்தவர்களும் நம்மை விட்டு சென்ற துரோகத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை.

மதுரையில் என்றைக்கும் நாம் தான். நம்மை மீறி யாரும் நடை போட முடியாது. நாம் பெற்று கொடுக்காத பதவியா? பட்டமா? நாம் தேர்தலில் உழைத்து வெற்றி பெற்றவர்கள். இது அனைவருக்கும் தெரியும். அவர்களை இயற்கையே பார்த்து கொள்ளும். நம்மிடம் இருந்த போது ஜெயிக்க முடியாதவர்கள் நம்மை விட்டு சென்று ஜெயிக்க போகிறார்களா? அதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ் பாட்சா, முன்னாள் மேயர் தேன்மொழி, முன்னாள் துணைமேயர் மன்னன், நிர்வாகிகள் உதயகுமார், எம்.எல்ராஜ், தர்மலிங்கம், சின்னம்மாள், கவுன்சிலர்கள் கண்ணன், குடைவீடு அருண் குமார், நன்னா, பகுதி செயலாளர்கள் முபாராக் மந்திரி, கோபிநாதன், ரஜினி மன்ற பொறுப்பாளர் பால தம்புராஜ், வேளாண் வாரிய விற்பனைக்குழு முன்னாள் துணைத்தலைவர் பூக்கடை ராமச்சந்திரன், நிர்வாகிகள் பக்ருதின், செல்லூர் குரும்பன், ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை முடித்து கொண்டு மதுரை செல்லூரில் உள்ள முன்னாள் எம். எல்.ஏ. சவுந்திரபாண்டியன் வீட்டிற்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு சவுந்திர பாண்டியனின் தாயார் நாகம்மாளின் மறைவுக்கு குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். பின்னர் அவர் வெளியே வந்தபோது நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு திருமண விழாவில் பரபரப்பாக பேசி இருக்கிறீர்களே என்று கேட்டனர். அதற்கு இப்போது தான் விதை விதைத்துள்ளேன். பொறுத்து இருந்து பாருங்கள் என்று மு.க.அழகிரி கூறினார்.

மாலைமலர்..



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 1:14 am

அனைத்து செய்திகளும் சூப்பருங்க




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 12:37 pm

மக்களின் எண்ணங்களை கேட்க மோடிக்கு விருப்பமில்லை: ராகுல்

ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் காங்., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல், அரசியலில் மகாத்மா காந்தி தான் எனது குரு. ஒரு சில நேரங்களில் அரசியலில் கடுமையான முடிவுகள் தேவைப்படுகின்றன. உங்களின் எண்ணங்களை கேட்க மோடிக்கு விருப்பமில்லை. குஜராத்தில் ஒரே ஒரு குரல் தான் கேட்கிறது. ஆனால் அது மக்களின் குரல் அல்ல என கூறினார்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 12:38 pm

அமளி; பார்லி., இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடில்லி: கேள்வி நேரத்தை ரத்து செய்யக்கூறி லோக்சபாவில் பா.ஜ., அமளி ஏற்பட்டதை தொடர்ந்து அவையை சபாநாயகர் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். இதேபோல், வால்மார்ட் விவகாரம், இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக எழுந்த அமளி காரணமாக ராஜ்யசபாவும் சுமார் அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவை மீண்டும் கூடிய போது, அமளி தொடர்ந்ததால் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 7 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 7 of 37 Previous  1 ... 6, 7, 8 ... 22 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக