புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
1 Post - 1%
Kavithas
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
1 Post - 1%
bala_t
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
1 Post - 1%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
293 Posts - 42%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
6 Posts - 1%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
4 Posts - 1%
manikavi
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா


   
   

Page 8 of 37 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 22 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 12:39 pm

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. கோர்ட் நிபந்தனையின்படியே ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 12:40 pm

ஸ்டாக்ஹோமில் நடந்த நோபல் பரிசு விழா

ஸ்‌டாக்ஹோம்:சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் இன்று நடந்த விழாவில் 2012ல் நோபல் விருது வென்றவர்களுக்கான பரிசு வழங்கும் விழா நடந்தது.இதில் 2012 ல் மருத்துவம், இலக்கியம் பொருளாதாரம் இயற்பியல் மற்றும் ரசாயனம் ஆகிய துறைகளில் சிறப்பு வாய்ந்தவர்களுக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.அவர்களுக்கு இன்று நடந்த விழாவில் சுவீடன் மன்னர் 16ஆம் கார்ல் குஸ்டப் பரிசுகளை வழங்கினார்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 12:41 pm

எனது முன்னேற்றத்துக்கு காரணம்...: முதல்வர் பேச்சு

சென்னை: எனது முன்னேற்றத்திற்கு கிறிஸ்தவ பள்ளிகளில் நான் பெற்ற கல்வியும் நற்பண்புகளும் தான் எனது முன்னேற்றத்துக்கு காரணம் என முதல்வர் ஜெயலலிதா பேசினார். அ.தி.மு.க., சார்பில் சென்னயில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். பின்னர் அவர் பேசுகையில்,கிறிஸ்துமஸ் என்றவுடன் என் பள்ளிப்பருவம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. எனது முன்னேற்றத்திற்கு கிறிஸ்தவ பள்ளிகளில் நான் பெற்ற கல்வியும் நற்பண்புகளும் தான் எனது முன்னேற்றத்துக்கு காரணம். அப்போது நான் கற்று கொண்டவை தான் எனக்கு இன்றும் துணையாக இருக்கிறது. எந்தப் பொறுப்பையும் எளிதாக நிறைவேற்ற முடிகிறது. அந்தக்காலம் முதல் கிறிஸ்தவர்கள் மீதும், கிறிஸ்தவ மதத்தின் மீதும் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது என்பதை தெரிவித்து கொள்வதில் பெருமைப்படுகிறேன் என கூறினார்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 12:50 pm

ஈராக் குழந்தை வயிற்றில் புற்றுநோய் கட்டி : சென்னை மருத்துவமனையில் அகற்றம்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Tamil_News_large_603294

சென்னை: ஈராக்கை சேர்ந்த, இரண்டு வயது பெண் குழந்தையின் வயிற்றில் இருந்த புற்றுநோய் கட்டியை, சென்னை, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி உள்ளனர்.

மத்திய ஈராக் பகுதியைச் சேர்ந்தவர் பிலால். இவரது இரண்டு வயது மகள் உம்னீர். இக்குழந்தைக்கு, நான்கு மாதங்களுக்கு முன், அடி வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. வயிறும், பலூன் போல் வீக்கம் அடைந்தது. மருத்துவ பரிசோதனையில், குழந்தையின் சிறுகுடலை சுற்றி, புற்றுநோய் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.
மேல்சிகிச்சைக்காக, குழந்தை, நவ., 16ம் தேதி, சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. பல்வேறு பரிசோதனைகளுக்கு பின், குழந்தையின் வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பதை மீண்டும் உறுதி செய்த மருத்துவர்கள், இம்மாதம் 25ம் தேதி, அறுவை சிகிச்சை மூலம், கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.

இதுகுறித்து, இம்மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன் கூறியதாவது: குழந்தையின், புற்றுநோய் கட்டியை அகற்றும்போது, சிறுகுடலுக்கு எந்த சேதமும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். ஐந்து மணி நேர அறுவை சிகிச்சையில், இரண்டு கிலோ அளவு இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. தற்போது குழந்தை நலமாக உள்ளது. "மையோ பைப்ரோ மடோசிஸ்' எனப்படும் அரிய வகை புற்றுநோய், மீண்டும் வராமல் இருக்க, குழந்தைக்கு, ஆறு மாதங்கள் வரை, தொடர் பரிசோதனையுடன், மருந்து, மாத்திரைகள் தர பரிந்துரைந்துள்ளோம். இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 12:51 pm

ஆசிரியர்களை அழைத்து வர ரூ.500 வசூல்; சி.இ.ஓ.,க்கள் மும்முரம்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Tamil_News_large_60333220121210234552

நாளை மறுநாள், சென்னையில் நடக்கும் பணி நியமன உத்தரவு வழங்கல் விழாவில் பங்கேற்க உள்ள ஆசிரியர்களிடம், வாகன செலவிற்காக, தலா, 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பொறுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18 ஆயிரத்து, 382 ஆசிரியர்களுக்கு, சென்னையில், இம்மாதம், 13ம் தேதி நடக்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன.தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும், சென்னைக்கு வர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 13ம் தேதி காலையில், சென்னையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்களை அழைத்து வரும் பொறுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், ஆசிரியர்களை, பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வர, சி.இ.ஓ.,க்கள் திட்டமிட்டுள்ளனர்.இந்த செலவிற்காக, ஒவ்வொரு ஆசிரியரிடமும், தலா, 500 ரூபாய் வசூலித்து வருகின்றனர். ஆசிரியருடன், துணைக்கு யாரும் வரக்கூடாது எனவும், விழா நடக்கும் நாளன்று காலை சிற்றுண்டி, சாப்பாட்டு செலவை, சம்பந்தபட்ட ஆசிரியர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஆசிரியர்கள், தேவையில்லாமல், சென்னைக்கு வந்து அலைய வேண்டாம் என்பதற்காகத் தான், "ஆன்-லைன்' கலந்தாய்வு நடத்துகின்றனர். இது, வரவேற்கதக்கது.ஆனால், 18 ஆயிரம் பேரும், இப்போது, சென்னைக்கு வர வேண்டும் என, கூறுகின்றனர். 18 ஆயிரம் பேருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவுகளை வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை. 10 பேருக்கோ, 15 பேருக்கோ, உத்தரவுகளை வழங்குவார்.அதன்பின், அதிகாரிகள் தான் வழங்கப் போகின்றனர். அதற்கு, எதற்கு இப்படி தேவையில்லாமல், இவ்வளவு பெரிய பிரம்மாண்டம் என, தெரியவில்லை.ஒரு ஆசிரியரிடம், 500 ரூபாய் என்றால், சென்னை நகரில் உள்ள ஆசிரியர்களை தவிர்த்து, கணக்கு பார்த்தாலும், 90 லட்சம் ரூபாய்க்கு வசூல் குறையாது. இவ்வளவு தொகையையும், மாவட்ட அதிகாரிகள், முறையாக செலவு செய்வார்களா என்பதும் கேள்விக்குறிதான்.இவ்வாறு, அந்த நிர்வாகி தெரிவித்தார்.

-நமது நிருபர்-

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 12:53 pm

பீகார் தாதாக்களுக்காக கடை விரிக்கப்பட்டிருக்கும் ஆயுத கடைகள்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Tamil_News_large_603329

பாட்னா: பீகாரில், குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகளும், தாதாக்களும், தங்களுக்கு தேவையான ஆயுதங்களை, வாடகைக்கு பெறும் வசதி உள்ளது. இதை பயன்படுத்தி, தங்களுக்கு தேவைப்படும் ஆயுதங்களை வாங்கி, குற்றச் செயல்களில் பயன்படுத்தி, பின் அவற்றை ஒப்படைக்கும்
வழக்கம், அங்கு உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் வரை, பாரம்பரியம், பண்பாடு நிறைந்ததாக விளங்கிய பீகார் மாநிலம், இப்போது, ரவுடிகள், தாதாக்கள், சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்குவதை, சமீப கால சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஊர் ஊருக்கு ரவுடி கும்பல்களும், தாதாக்களும், சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.பீகார் மாநில ரவுடிகள் மற்றும் தாதாக்களுக்கு, பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கி போன்றவற்றை வாடகைக்கு விடும் சமூக விரோதிகளும், அங்கு பலர் உள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.சாதாரண, கள்ள துப்பாக்கியை, 3 மணி நேரத்திற்கு, 300 ரூபாய் வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம்; நாள் வாடகை என்றால், 500 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால், அந்த ஆயுதத்தின் உண்மை விலையை அவர்கள், டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.கள்ள துப்பாக்கியின் மார்க்கெட் விலை, 15 ஆயிரம் ரூபாய் என்றால், அதை வாடகைக்கு வாங்குபவர்கள், அந்த தொகையை, டெபாசிட்டாக செலுத்த வேண்டும். 9 எம்.எம்., பிஸ்டலை, ஒரு நாள் வாடகைக்கு வாங்க விரும்புபவர்கள், 1,000 முதல், 2,000 ரூபாய் வரை கொடுக்க வேண்டும்; தோட்டாக்களுக்கு விலை தனி.ஆயுதங்களை வாடகைக்கு விடுவதற்கு பல கும்பல்கள் உள்ளன. புதிதாக வன்முறையில் இறங்க விரும்புபவர்களுக்கு, இது மிகவும் எளிதாகப் போய்விடுகிறது. ஆயுதங்களை சேகரிக்க வேண்டும் என்ற கவலையே கிடையாது. பணத்தை மட்டும் கையில் வைத்திருந்தால் போதும்; தேவையான ஆயுதங்களை வாங்கிக் கொள்ளலாம்.பீகார் தலைநகர் பாட்னாவுக்கு அருகில் உள்ள, மனேர் மற்றும் பிகிடா போன்ற பகுதிகளில், ஆயுத வாடகை அமைப்புகள் இயங்கி வருகின்றன. யார் வேண்டுமானாலும், எவ்வளவு ஆயுதங்களை வேண்டுமானாலும் இங்கு வாங்கிக் கொள்ளலாம் என்பது தான் விசேஷம்.சமீபத்தில் இந்த பகுதியில் பொறுப்பேற்ற, போலீஸ் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், ஆயுத வாடகை கும்பல்கள் சிக்கின. மறைவிடங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த, துப்பாக்கி தோட்டாக்கள், கடைகளின், ÷ஷா-கேஸ்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது போல, அடுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை, மூடைமூடையாக அள்ளி வந்த அந்த போலீஸ் அதிகாரி, அடுத்த சில நாட்களிலேயே மாற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 11, 2012 12:57 pm

சிறப்பான தகவல்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 1:00 pm

72 மணி நேரம் விசா இல்லாமல் தங்கும் சலுகை : இந்தியா, பாகிஸ்தானுக்கு வாய்ப்பளிக்காத சீனா
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Tamil_News_large_603360
பீஜிங்: சீனாவில், விசா இல்லாமல், 72 மணி நேரம் தங்குவதற்கு அந்நாட்டு அரசு சலுகை அறிவித்துள்ளது.கம்யூனிஸ்ட் நாடான சீனா, பொருளாதார மேம்பாட்டுக்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, சுற்றுலா பயணிகளை கவரும் பொருட்டு, பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களில், 72 மணி நேரம், விசா இல்லாமல் தங்கலாம், என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பீஜிங் நகரில், 72 மணி நேரம் விசா இல்லாமல் தங்கலாம், என்ற அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தற்போது, ஷாங்காய் நகரிலும் இதே போன்று விசா இல்லாமல் தங்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில், 48 மணி நேரம் தங்குவதற்கு ஏற்கனவே, சலுகை உள்ளது. தற்போது மேலும் ஒரு நாள் கூடுதலாக தங்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட, 45 நாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பட்டியலில், அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் இல்லை.
-தினமலர்




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 5:25 pm

அச்சலா wrote:ஈராக் குழந்தை வயிற்றில் புற்றுநோய் கட்டி : சென்னை மருத்துவமனையில் அகற்றம்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Tamil_News_large_603294

சென்னை: ஈராக்கை சேர்ந்த, இரண்டு வயது பெண் குழந்தையின் வயிற்றில் இருந்த புற்றுநோய் கட்டியை, சென்னை, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி உள்ளனர்.

மத்திய ஈராக் பகுதியைச் சேர்ந்தவர் பிலால். இவரது இரண்டு வயது மகள் உம்னீர். இக்குழந்தைக்கு, நான்கு மாதங்களுக்கு முன், அடி வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. வயிறும், பலூன் போல் வீக்கம் அடைந்தது. மருத்துவ பரிசோதனையில், குழந்தையின் சிறுகுடலை சுற்றி, புற்றுநோய் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.
மேல்சிகிச்சைக்காக, குழந்தை, நவ., 16ம் தேதி, சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. பல்வேறு பரிசோதனைகளுக்கு பின், குழந்தையின் வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பதை மீண்டும் உறுதி செய்த மருத்துவர்கள், இம்மாதம் 25ம் தேதி, அறுவை சிகிச்சை மூலம், கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.

இதுகுறித்து, இம்மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன் கூறியதாவது: குழந்தையின், புற்றுநோய் கட்டியை அகற்றும்போது, சிறுகுடலுக்கு எந்த சேதமும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். ஐந்து மணி நேர அறுவை சிகிச்சையில், இரண்டு கிலோ அளவு இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. தற்போது குழந்தை நலமாக உள்ளது. "மையோ பைப்ரோ மடோசிஸ்' எனப்படும் அரிய வகை புற்றுநோய், மீண்டும் வராமல் இருக்க, குழந்தைக்கு, ஆறு மாதங்கள் வரை, தொடர் பரிசோதனையுடன், மருந்து, மாத்திரைகள் தர பரிந்துரைந்துள்ளோம். இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

-தினமலர்

மனிதாபிமானம்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:19 pm

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் பலி
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் நேற்று கள்ளச்சாராயம் அருந்திய பெரும்பாலானோர் மயக்கமடைந்தனர். இதில் கடந்த 24 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட ராம்பூர் போலீஸ் சராகத்தை சேர்ந்த 9 பேரும், செக்ரி போலீஸ் சராகத்தை சேர்ந்த ஒருவர் என 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், குற்றவாளியை கண்டுபிடித்து விட்டதாகவும், அதிக அளவிலான பாக்கெட் சாராயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதி டிஜிபி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றார். கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் போஜ்பூர் பகுதியில் போலி மதுபானம் அருந்தி 20 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

-மாலை மலர்




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 8 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 8 of 37 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 22 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக