புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
30 Posts - 55%
heezulia
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
21 Posts - 38%
jairam
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Manimegala
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
12 Posts - 4%
prajai
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
jairam
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_m10மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 1:57 pm

First topic message reminder :

இது தமிழ் ஹிந்து தளத்தில் 2009 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தியை ஒட்டி வெளியான அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை.

மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 Images?q=tbn:ANd9GcRQqMhWV2lCpLq83OXdQgBUWSYmore8lCxE6-L1IBBxzIrkKX0J5g

ஆண்டு 1872. காந்திக்கு வயது மூன்று. ராபர்ட் நைட் எனும் பிரிட்டிஷ் அதிகாரி எழுதினார்:
நம்முடைய அறுதியான நம்பிக்கை என்னவென்றால் இந்தியா தன்னுடைய வீழ்ச்சிக்கு காரணமான தன்னுடய பொய்யான மதத்தை இழந்து கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ளும் வரை அதற்கு நாம் சுயராஜ்ஜியத்தை அளிக்க முடியாது.

ஒரு விதத்தில் காந்தியின் விடுதலைப் போராட்டமும் மதத்தில்தான் தொடங்கியது. இங்கிலாந்தில் காந்தி வாழ்ந்த காலகட்டத்தில் அவர் கிறிஸ்தவராக மதம் மாற பெரும் அழுத்தத்துக்கு உள்ளானார். அவர் அன்னை அவருக்கு அளித்த வைணவ மாலை ஒன்றை அவர் கழற்றிவிட வேண்டும் என்றும் ஒரு பண்பட்ட மனிதனுக்கு அத்தகைய மூடநம்பிக்கை அழகல்ல என்றும் ஒரு மிஷினரி கூறியபோது அவர் பெரும் மனவருத்தம் அடைந்தார். அந்தகால கட்டத்தில் அவருக்கு ஹிந்து தர்மத்தில் வேரூன்றி நிற்க பெரும் வலிமை அளித்தவர் ராஜ்சந்திரா என்கிற இளைஞர். ஜைனரான இவர் காந்தியிடம் சனாதன தர்மத்தின் பெருமையை விளக்கினார். பின்னாட்களின் காந்தியின் வாழ்க்கை ராஜ்சந்திராவின் வாழ்க்கையையே பிரதி எடுத்தது. 1900 இல் தம் இளவயதில் ராஜ்சந்திரா இறந்துவிட்டார்.
உண்மை என்பது ஒற்றைத்தன்மை கொண்டது அல்ல என்பதே மேற்கத்திய பண்பாட்டின் அடிநாதமாக விளங்கிய கிறிஸ்தவத்துக்கும் இந்திய பண்பாட்டின் அடிநாதமாக விளங்கும் ஹிந்து தருமத்துக்குமான அடிப்படை வேறுபாடு என்பதை காந்தி உணர்ந்துகொண்டார். ஆனால் இதனை அவர் வெறும் தத்துவமாக உணராமல் ஒவ்வொரு வாழ்க்கை வெளிப்பாட்டிலும் அது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் ராஜ்சந்திராவிடமே கண்டடைந்தார். பிரிட்டனில் இளைஞனாக கிறிஸ்தவ மிஷினரிகள் “நீ ஏன் இன்னும் ஹிந்துவாக இருக்கிறாய்?” என கேட்டதற்கு பதில் சொல்ல தெரியாமல் பெரும் மன வருத்ததுக்கு உள்ளான காந்தி பின்னாட்களில் எழுதினார்:

ஹிந்து தர்மமே மதங்கள் அனைத்திலும் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதம். சித்தாந்த கட்டுப்பாடுகளிலிருந்து ஹிந்து தர்மம் தரும் சுதந்திரம் சுய வெளிப்பாட்டுக்கான மிகப்பெரிய வெளியை நமக்கு ஏற்படுத்தி தருகிறது. புறந்தள்ளும் தன்மை கொண்டதாக இல்லாத ஒரு தருமம் ஆனதால் ஹிந்து தருமம் பிற மதங்களை மதிப்பது மட்டுமல்லாமல் அவற்றின் நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்ளவும் உட்கொள்ளவும் வழி வகுக்கிறது. அஹிம்சை என்பது எல்லா மதங்களிலும் உள்ளதுதான் ஆனால் ஹிந்து தர்மத்திலேயே அது அதன் மிகச்சிறந்த விதத்தில் வெளிப்படுகிறது. ஹிந்து தர்மம் மானுடம் மட்டுமல்லாது அனைத்து உயிரும் ஒன்று எனும் ஆன்ம ஒற்றுமையை வலியுறுத்துகிறது.

சூழலியல் சிந்தனை வட்டங்களில் இன்றைக்கு காந்திய கருத்துகளுக்கு பெரும் மதிப்பு உண்டு. பல சூழலியல் சிந்தனைகளின் முன்னோடித்தன்மையை காந்தியில் காணலாம். இதற்கு ஒரு முக்கிய காரணம் காந்தியின் உண்மையின் பன்மைத்தன்மை குறித்த அறிதலாகும். இந்த அறிதல் அவருக்கு ஆபிரகாமிய மதங்களின் ஒற்றைத்தன்மைக்கும் ஹிந்து ஞான மரபின் பன்மைத்தன்மைக்குமான போராட்டத்தை குறித்த அடிப்படையான அறிதலிலிருந்தே கிடைத்தது. ஹிந்து சிந்தனையை -ஒற்றைத்தன்மையற்ற பார்வையை- அவர் மானுடத்தின் சமுதாய பிரச்சனைகளுக்கு பயன்படுத்தினார். இதனால் கிடைத்த சாத்தியக்கூறுகளின் விதைகள் இன்னும் காந்திய சிந்தனையில் புதைந்து கிடக்கின்றன. அதனால், பணபலமும் அதிகாரபலமும் இல்லாமல் தர்மத்தை மட்டுமே நம்பி போராடும் எந்த மக்கள் கூட்டத்துக்கும் அவை மிகச்சிறந்த ஆயுதங்களாக உதவக்கூடியவை. இந்த விதத்தில் இன்றைய ஹிந்து சமுதாயத்துக்கு அவை இன்றியமையாதவை ஆகும்.


சூழலியல் சிந்தனைக்கான காந்திய பங்களிப்பைக் குறித்து பேசும் எவரும் அவரது நகர்ப்புற நாகரிகத்துக்கான எதிர்ப்பு மற்றும் இயந்திரங்களுக்கான அவரது எதிர்ப்பு ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிடுவார்கள். மேற்கத்திய சூழலில் தொழில் புரட்சியின் காலகட்டத்தில் ஏற்பட்ட இயந்திர வெறுப்பு, இயற்கை சார்ந்த வாழ்க்கைக்கான உடோ ப்பிய கனவுகள் ஆகியவற்றுடன் காந்தியின் இயந்திர-வெறுப்பும் கிராமிய குடியரசுக்கான கனவும் இணைத்து பேசப்படும். 1904 களில் தென்னாப்பிரிக்காவில் டர்பனின் அருகே காந்தி அமைத்த ஆசிரமம் இதற்கான தொடக்கப்புள்ளியாக கருதப்படும். தென்னாப்பிரிக்காவில் காந்தி டால்ஸ்டாயின் போதனைகளால் பெரிதும் கவரப்பட்டிருந்ததைக் காணமுடியும். ஆனால் காந்தி இந்திய பாரம்பரிய ஆன்மிக மரபை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்ற செய்த முயற்சியின் வெளிப்பாடே அவரது டால்ஸ்டாய் பண்ணை. இந்தியா வந்து அவர் மேற்கொண்ட பெரும் இந்திய பயணத்திலிருந்தே அவரது சமுதாய-சூழலிய கோட்பாடுகளின் பரிணாமத்தை நாம் முழுமையாக காணமுடியும். காந்தி அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் முன்னேற்றத்தையும் மறுக்கவில்லை என்பதையும் ஒரு பழமையான வாழ்க்கைக்கு நம் தேசத்தை அழைத்து செல்லவும் அவர் விரும்பவில்லை என்பதையும் நாம் அவரது சிந்தனையோட்டத்தில் காணமுடியும்.

காந்தி பாரம்பரியத்தின் வலிமைகளைக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். மேற்கத்திய முன்னேற்றமே முன்னேற்றத்துக்கான ஒரே மாதிரி என்பதை அவர் மறுத்தார். பொருளாதார சுகாதார ஆன்மிக மேம்பாட்டை மாற்றுவழிகளில் அடைய முடியும் என்பதை அவர் திட்டவட்டமாக உரைத்தார். உதாரணமாக பசு பாதுகாப்பு குறித்து அவர் பேசும் போது இந்தியாவெங்கும் மத நிறுவனங்களால் பாரம்பரியமாக நிர்வகிக்கப்படும் பசுக்களின் சரணாலயங்கள் (பசு மடங்கள்) கால்நடை ஆராய்ச்சி நிறுவனங்களாகவும் செயல்பட வேண்டும் எனக் கோரினார். இதன் மூலம் இந்தியாவின் பால் உற்பத்தியை அபரிமிதமாக அபிவிருத்தி செய்ய முடியுமென அவர் கருதினார், காந்திய சுதேசியின் ஒரு முக்கிய கோட்பாடாக அவர் தொழில்நுட்பத்தை வலியுறுத்தினார். ராட்டை ஒரு குவித்தன்மையற்ற தொழில்நுட்பத்தின் குறியீடாக அமைந்தது. அந்த ராட்டையின் செயல்திறமையை மேம்படுத்தும் மாதிரிகளுக்கான போட்டிகள் அவரால் நடத்தப்பட்டன. மில் துணிகள் இந்த தேசத்தின் இயற்கை வளம், தொழிலாளர்நலம் ஆகியவற்றின் மீது செலுத்தப்பட்ட காலனிய ஆக்கிரமிப்பு என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால் அவரது ராட்டை எத்தகைய ஒரு தொழில்நுட்ப எதிர்ப்பு சின்னமாக விளங்கியது என்பது புரியும். சாண எரிவாயு, சூரிய ஒளி தொழில்நுட்பம் ஆகியவை காந்தியின் கனவுகளின் தொழில்நுட்ப வெளிப்பாடாகும்.

ஜேம்ஸ் லவ்லாக் இன்று ஒரு முக்கியமான உயிரியலாளராக கருதப்படுபவர். இந்த உலகின் புவியியல் மற்றும் உயிரியியல் செயல்பாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து முழுமையான ஒரு அதி-உயிரித்தன்மையுடன் செயல்படுவதை அவர் ஒரு கருதுகோளாக முன்வைத்தார். இது Gaia என அழைக்கப்படுகிறது. இக்கருதுகோள் பலத்த சர்ச்சைக்குள்ளாயிற்று என்ற போதிலும் உலகளாவிய சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் இது ஒரு நல்ல புரிதல் சட்டகமாக இன்று விளங்குகிறது. இந்த கோட்பாட்டினை விளக்கும் அண்மை நூலில் லவ்லாக் இந்த புவி எனும் அதி-உயிரி இன்று எப்படி நோயடைந்திருக்கிறது என்பதையும் அந்த நோய்க்கு காரணம் மானுடத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகள் என்பதையும் இதனால் பல இயற்கை பேரிடர்கள் மானுடத்துக்கு ஏற்படும் என்பதையும் விளக்குகிறார். இதற்கான தீர்வில் நாம் என்ன பங்களிக்க முடியும் எனும் கேள்விக்கு அவர் கூறுகிறார்:

நமது பங்கு நம் வாழ்க்கையின் மூலம் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துவதே ஆகும். முழுக்க முழுக்க மானுட விஷயங்களில் அவ்வாறு வாழ்வது எப்படி என்பதை காந்தி நமக்குக் காட்டினார். நமது நவீன சூழலுக்கான காந்திய மாதிரிகள் ஆழ்-சூழலியல் இயக்கத்திலிருந்து வரக்கூடும்.

நியூ சயிண்டிஸ்ட் பத்திரிகை ஜேம்ஸ் லவ்லாக்கின் கோட்பாட்டை காந்தியின் தத்துவங்களுடன் ஒப்பிட்டது. அரசியலில் காந்தி கண்டடைந்ததைப் போலவே ஜேம்ஸ் லவ்லாக்கும் சூழலியல் உண்மைகளைக் கண்டடைந்திருப்பதாக அப்பத்திரிகை எழுதியது.

சூழலியல் மட்டுமல்ல வரலாறு மானுடவியல் ஆகியவற்றிலும் காந்தியின் உள்ளுணர்வு சார்ந்த சில கருத்தாக்கங்கள் -அன்றைய காலனிய சூழலில் அறிவியலுக்கு பொருந்தாதவை போல தெரிந்தவை- இன்று மிகப்பெரிய மாற்று உண்மைகளை நமக்கு காட்டும் ஒளிவிளக்குகளாகியுள்ளன. உதாரணமாக இந்தியாவின் கல்வியறிவு வெள்ளையரின் காலனியாதிக்கத்துக்கு முன்னால் எவ்வாறு இருந்தது என்பதனைக் குறித்த தரம்பாலின் விரிவான ஆராய்ச்சி இங்கிலாந்தில் காலனிய ஆட்சியாளர்களுக்கு காந்தி அளித்த பதிலின் குறிப்புகளிலிருந்தே தொடங்குகிறது.

வனவாசிகளுக்கும் ஏனைய ஹிந்து சமுதாயத்துக்குமான மறுக்கவியலாத உறவை காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். காலனிய மக்கட்தொகை அதிகாரிகளால் வேண்டுமென்றே மறுக்கப்பட்டு வந்த தொடர்பு அது. பின்னாட்களில் இந்தியா விடுதலை அடைந்தும் கூட ஆரிய இனவாத கோட்பாட்டு அறிதலின் அடிப்படையில் அந்த பிளவு பெரிதுபடுத்தப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய மரபணுவியல் கோட்பாடுகளும். சமூகவியல் ஆராய்ச்சிகளும் காந்தியின் புரிதலின் சரித்தன்மையை உணர்த்துகின்றன. சமுதாயத்தின் அடிப்படை அலகாகவும் சமுதாயத்தின் ஆகச்சிறந்த மாதிரியாகவும் காந்தி முன்வைத்த மற்றொரு உருவகம் பேராழி வட்டம் (Oceanic Circle) என்பதாகும். மேற்கத்திய மனம் எதையும் ஒரு கீழ் மேலான கூம்பு பிரமிடாகவே வகைப்படுத்துகிறது, சமுதாய உறவுகள் முதல் சூழலியல் மாதிரிகள் உளவியல் கருத்தாக்கங்கள் ஆகிய அனைத்துமே பிரமிடுகளாகவே அமைக்கப்படுகின்றன. அடித்தளத்தில் சக்தியற்ற பெரும்பான்மையும் மேலே சக்தி-அதிகாரம்-அதீத அனுபவித்தல் ஆகியவை கொண்ட சிறுபான்மையுமாக அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் அவை. காந்தி இக்கட்டுமானத்தை அடிப்படை அலகாகவும் ஆதார மாதிரியாகவும் கொள்ள மறுத்தார். பாரதப்பண்பாட்டின் உருவகங்களிலும் குறியீடுகளிலிமிருந்து பெறப்பட்ட அவரது பார்வை பின்வருமாறு:

இந்த அமைப்பில் எண்ணற்ற கிராமங்கள் இருக்கும். அவை விரிந்த படி இருக்கும் வட்டங்களாக இருக்குமேயன்றி ஒன்றின் மேல் ஒன்று ஏறுபவையாக இருக்காது. வாழ்க்கை என்பது அடிப்பகுதியால் தாங்கிப்பிடிக்கப்படும் உச்சிக் கூம்பு கொண்ட பிரமிடாக இருக்காது. ஆனால் அது ஒரு பேராழி வட்டமாக அமையும். அதன் மையமாக என்றென்றும் தனிமனிதன் இருப்பான். அவன் அவனைச் சுற்றி அமையும் கிராமத்துக்காகவும் ஒவ்வொரு கிராமமும் அக்கிராமங்களை சுற்றி அமையும் பிற கிராமங்களுக்காகவும் அமையும். இவ்வாறாக அனைத்தும் ஓருயிராக ஆணவத்தால் ஏற்படும் ஆக்கிரமிப்பு இல்லாததாக தன்னடக்கதுடன் பேராழி வட்டத்தின் மகோன்னத்தத்தின் பங்காளிகளாக, அதன் இணைபிரியாத உறுப்புகளாக அமையும்

அப்துல் கலாமின் புரா (PURA) இந்த பேராழி வட்டத்தின் தொழில் நுட்ப பரிமாணமே. காந்தியின் இந்த பார்வை அவரது அனைத்துயிரையும் ஒன்றாக காணும் சனாதன ஹிந்துவின் பார்வையே. இன்றைக்கும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் வளரும் நாட்டின் சமயமாக விளங்கும் ஹிந்து தருமத்தின் தொடர்ந்த ஜீவிதத்துக்கும், ஆக்கிரமிப்பு ஆங்கார இறையியல்களில் சிக்கித்தவிக்கும் மானுடத்தின் மீட்சிக்கும் காந்தியின் இந்த ஹிந்து தர்ம பார்வையை எல்லா துறைகளிலும் செயல்முறை படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று.


-அரவிந்தன் நீலகண்டன்



ஈகரை தமிழ் களஞ்சியம் மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Apr 27, 2013 10:59 pm

காந்தியை புரிந்து கொள்வது சற்று சிரமமான விசயமே !

அவரது உள்ளார்ந்த ஆன்மீக தேடலில் அவரின் மீது அரசியல் பணி வந்து ஏறிக்கொண்டது !

அவர் அரசியல்வாதியல்ல ! அடிப்படை ஆன்மீகவாதி !

இந்து தர்மத்தின் அடித்தளத்தின் மீது நின்று சரியாகவே பைபிளையும் குரானையும் புரிந்து வைத்திருந்தார் !

மும்மதங்களையும் ஒரே புள்ளியில் இணைப்பதற்கான தெளிவும் முன்மாதிரியும் அவரிடமிருந்தது ! உலகம் முழுவதிலும் அவருக்கு அங்கீகாரமும் இருந்தது ! தங்களை அறிவின் சிகரமாக கருதிக்கொண்டிருந்த ஐரோப்பியர்களும் கூட அவருக்கு இடம் கொடுக்கும் மனநிலையில் இருந்தனர் !

உலகம் தழுவிய ஆன்மீகப்பேரலை என்பது இந்துமதத்தை கொண்டுபோய் மற்றவர்கள் மீது தினிப்பதாலோ அல்லது கிரிஸ்தவத்தை கொண்டுபோய் மற்றவர்கள் மீது தினிப்பதாலோ அல்லது இசுலாத்தை மற்றவர்கள் மீது தினிப்பதாலோ நடக்காது !

முன்று மதத்தையும் வேற்றுமைகளை விட்டு ஒற்றுமைகளில் மட்டும் இனைக்கவேண்டும் !

காந்தியின் இந்த சிந்தனை அவரை ஒவ்வொரு மதவாதிகளுக்கும் அவர் அடுத்த மதத்தை ஆதரிப்பதாக சந்தேகப்பட வைக்கிறது 1 ஆனால் உண்மை அதுவல்ல !

உண்மை உலகத்தின் தாய் மதமான இந்து தர்மத்தை பின்னால் வந்த வேதங்களின் அடிப்படையில் செழுமைப்படுத்த முயற்சி செய்ததே !

உலக ஆன்மீக தலைமையகமாக இந்தியா மாற காந்தியின் மூலமாக ஒரு சந்தர்ப்பம் இருந்ததை இந்தியா இழந்து போனது என்பதே உண்மை !

முழுமையடையாத காந்தியின் பணி மீண்டும் இந்தியாவிலிருந்து அவரது ஆத்துமாவின் மூலமாக -- அதாவது அவரது மறுபிறப்பின் மூலமாக வெற்றிகரமாக கடவுளின் பலத்தோடு தொடங்கும் !

அதற்காகவே உலகமும் காலமும் காத்திருக்கிறது !

ராம் என்றால் குமாரன் அதாவது அவதாரம் -- சற்குரு என்று பொருள் ! அது ராமராகவும் கிரிஸ்ணராகவும் இயேசுவாகவும் அவதரித்த நாராயணன் என்பது காந்திக்கு நன்கு தெரியும் ! அதனையே நான் சொல்லுகிற ராமன் தசரத ராமன் மட்டுமல்ல என்றார் !

avatar
எம். ராஜசிஙம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 06/07/2009

Postஎம். ராஜசிஙம் Sun Apr 28, 2013 10:34 pm

ஹிந்து தர்மமே மதங்கள் அனைத்திலும் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதம். புறந்தள்ளும் தன்மை கொண்டதாக இல்லாத ஒரு தருமம் ஆனதால் ஹிந்து தருமம் பிற மதங்களை மதிப்பது மட்டுமல்லாமல் அவற்றின் நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்ளவும் உட்கொள்ளவும் வழி வகுக்கிறது. அஹிம்சை என்பது எல்லா மதங்களிலும் உள்ளதுதான் ஆனால் ஹிந்து தர்மத்திலேயே அது அதன் மிகச்சிறந்த விதத்தில் வெளிப்படுகிறது. ஹிந்து தர்மம் மானுடம் மட்டுமல்லாது அனைத்து உயிரும் ஒன்று எனும் ஆன்ம ஒற்றுமையை வலியுறுத்துகிறது.
----- இது யாரும் மறுக்க முடியாத உண்மை -----

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 01, 2013 11:29 am

அனைத்து உயிரும் கடவுளின் ஆவியின் ஒரு பின்னம் ! அதேசமயம் அனைத்து சரீரங்களும் நாராயணனிலிருந்து வந்தவை

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat May 04, 2013 11:51 pm


நேற்று எனது குருநாதர்களில் ஒருவரான நாமக்கல் மகானை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது

அவரிடம் உலகில் வெளிப்பட உள்ள சமரச வேத்தைப்பற்றியும் அதனுடைய வழிகாட்டியாக காந்தியின் ஆத்மா மதுரையில் பிறவியெடுக்கும் என்பதான எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை அவரிடம் சமர்பித்தேன்

அதை சிலாகித்து நீ இவ்வளவு தெரிந்ததால் காந்தி முன் பிறவியில் குசேலர் என்பதையும் அறிந்துகொள் என்றார்

கிரிஷ்ணரோடு சாந்தினி முனிவரின் ஆசிரமத்தில் படித்த நண்பன் வேதமே மனிதனாக வந்திருந்தாலும் அவருக்கு வேதம் சொன்னால் ஆர்வமில்லாமல் இருப்பார் அப்போது குசேலர்தான் எல்லா வேலைகளும் செய்து தண்டனையிலிருந்து காப்பாற்றுவர்

போர்பந்தரில் மட்டுமே குசேலருக்கு கோயில் இருக்கிறது அங்கு இரண்டுநாட்கள் தங்கியிருந்தபோது இந்த ரகசியத்தை அறிந்தேன் என்றார்
தேசாந்திரிகளாய் சுற்றித்திரியும் மகான்கள் உணர்ந்தவை ஆதாரமற்றவை அல்ல !

அவரது இந்த சந்திப்பில் வெளிப்பட்ட இன்னொரு ரகசியம் ! ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் உறவிணர்களால் ஆதாமின் இரண்டு மக்களின் சமாதி பாதுகாக்கப்படுகிறது என்பது ! அந்த கைங்கர்யமே கலாமிற்கு பேரையும் புகழையும் பெற்றுத்தந்தது !

அப்துல்கலாம் வீட்டருகில் 60 அடி நீளம் உள்ள இரண்டு அண்ணன் தம்பிகளின் சமாதிகளை முஸ்லீம் குடும்பங்கள் பராமரித்து வருகின்றன ! ஆதி மனிதனான ஆதாமுக்கு இரண்டு ஆண்மக்கள் இருந்ததாக பைபிளும் குரானும் சொல்லுகிறது ! அந்த இருவரின் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது ! நான் இங்கு சென்றதில்லை ! ஆனால் விரைவில் சென்று இன்னும் பல விசயங்களை அறிந்து கொள்ள கடவுள் அருள்புரிவாராக !!

இதிலிருந்து ஆதி மனிதனான ஆதாம் தமிழன் என்ற எனது கருத்தியல் வலுப்பெருகிறது ! இலங்கையிலுள்ள ஸ்ரீபாதமலை அல்லது சிவனொளிபாத மலையே ஆதாம் பூமிக்கு வந்த முதல் இடம் ! அவரே பின்னாளில் சிவனாக உயர்த்தபட்டார் !

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக